புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_c10டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_m10டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_c10டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_m10டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_c10 
2 Posts - 6%
heezulia
டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_c10டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_m10டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_c10டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_m10டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_c10டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_m10டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 22, 2011 3:36 pm

"டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது

டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது 21mullai

புது தில்லி, நவ. 21: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக, கேரளம் மக்களிடம் உணர்வுபூர்வமான பிரச்னையாக மாறிவருகிறது.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து முடிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிபுணர் குழுக்களை நியமித்தது.
இந்நிலையில், அணை உடைவது போலவும் அதில் வெளியாகும் வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கி உயிரிழப்பது போலவும் மையமான காட்சிகளில் காட்டுகிறது "டேம் 999' எனும் ஆங்கிலத் திரைப்படம். ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை வெளியாகும் இப்படம், இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இங்கு ஆங்கிலம் தவிர, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
"100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை முன்னெச்சரிக்கையாக இடிக்காவிட்டால் பேரிடர் ஏற்படும்' என்பது போல் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்கள் தவிர, ஊட்டியிலும், ஆந்திரம் மாநிலம் ராமோஜி பிலிம் சிட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் நடிகர்களும், கலைஞர்களும் நடித்துள்ளனர்.
கேரளத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமியாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய சோஹன் ராய் இப்படத்தை இயக்கியுள்ளார்.
"இந்தப் படத்தை பார்த்த பின்னர், முல்லைப் பெரியாறு பழைய அணையை உடைக்க தமிழக அரசே சம்மதம் தெரிவிக்கும்' என்கிறார் இயக்குநர் சோஹன் ராய்.
ஏற்கனவே இவர் முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து எடுத்துள்ள "டாம்ஸ்' டாகுமெண்டரிக்கு ஹாலிவுட்டில் விருது கிடைத்துள்ளது. தற்போது பழங்கால அணை உடைவதை மையமாக வைத்து ராய் படம் எடுத்துள்ளார்.
"டேம் 999' படத்தில் ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயத்துக்காக வலுவற்ற அணையைக் கட்டுகிறார். அதனால் ஏற்படும் அணையின் உடைப்பால் ஏராளமான பேர் உயிர் இழப்பதையும், பழைய அணைகள் குறித்து விழிப்புணர்வையும் மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து "தினமணி' நிருபருக்கு தொலைபேசி மூலம் சோஹன் ராய் அளித்த பேட்டி:
நூறு ஆண்டு கால பழமைவாய்ந்த முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு மேற்கொண்டேன். அப்போது சீனாவில் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற பான்கியோ டாம் பேரிடரில் சிக்கி இரண்டரை லட்சம் பேர் உயிர் இழந்த சம்பவத்தைக் கண்டேன். அது உலகில் ஏற்பட்ட ஒன்பதாவது பெரிய பேரிடர் சம்பவம் ஆகும். அதே அபாயம் முல்லைப் பெரியாறு அணையிலும் உள்ளது.
அரசியல் சிக்கல் காரணமாக இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைப் பிரதிபலிக்கும்.
படத்தின் கிளைமாக்ஸில், அணை உடையும் காட்சி தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. அணை உடைந்தால் மக்களை அப்புறப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காட்டப்படுகின்றன.
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும் என்று கூறினார்.
தமிழகம், கேரளம் இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரச்னையாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மாறிவிட்ட நிலையில், "டேம் 999' படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி பகிர்வு.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 22, 2011 3:56 pm

முல்லைபெரியாறு விவகாரத்தில் கேரளா மக்களிடம் இருக்கும் ஒற்றுமை தமிழர்களிடம் வராத வரை , இவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு தான் இருக்கவேண்டும்.

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Nov 22, 2011 4:10 pm

தமிழக மக்களின் உணர்வோடு விளையாட வரும் ‘வம்பு படம்’!

முல்லைப் பெரியாறு அணையை கிராபிக்ஸில் உடைத்து பூச்சாண்டி காட்டும் மலையாளிகள்!

தமிழக மக்களின் உணர்வுப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி ஒரு படம் ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டேம்999 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை எடுத்திருப்பவர் ஒரு மலையாளி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகப் போகிறது. இந்தப் படத்தில் அணை உடைந்தால் என்னவாகும் என்பதை கிராபிக்ஸில் காட்டி மக்களைப் பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.

சொத்தை விற்று அணை கட்டிய பென்னி குக்

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர்தான் என்றாலும் பென்னிகுக் என்ற மக்கள் நல விரும்பியால் கட்டப்பட்ட இந்த அணை தமிழகத்தின் ஜீவாதாரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த அணை கட்டும் பணியின்போது நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால் இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு அணை கட்டினாராம் பென்னி குக்.

நமது நாட்டுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத பென்னி குக் இப்படி ஒரு மகா சேவையைச் செய்தார். ஆனால் இந்த அணையை இடித்துத் தள்ளி விட்டு, தான் ஒரு அணையை கட்டி தன்னிடம் தமிழகத்தை கெஞ்ச வைக்க வேண்டும் என்ற நோக்கில் கேரள அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த அணையை கேரளா உடைக்க தீவிரம் காட்டுவதன் நோக்கமே, அவர்களின் மிகப்பெரிய இடுக்கி அணைக்கு தண்ணீரை திருப்பிவிடத்தான். நீர்வரத்தே இல்லாத பகுதி என்று தெரிந்தும் 555 அடி உயரத்துக்கு பெரிய இடுக்கி அணையை அவர்கள் கட்டினார்கள். அதைக் கட்டி முடித்த பிறகுதான், 1979-ல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 135 அடியாகக் குறைத்துவிட்டார்கள். அந்த 16 அடி நீரை இடுக்கி அணைக்கு திட்டமிட்டு திருப்பினார்கள்.

தங்கள் திருட்டுத் தனத்தை நியாயப்படுத்த, முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில் இருக்கிறது என பூச்சாண்டி காட்ட ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக இதே பொய்யைச் சொல்லி வருகிறார்கள்.

இந்த அணை ஸ்திரத்தன்மை இல்லாதது என்றும், இந்த அணை உடையும் அபாயம் உள்ளதாகவும், கற்பனையாகக் கூறிக் கொண்டு, பல ஆண்டுகளாக பிரச்சினை செய்துவரும் கேரளா, இதை இடித்துவிட்டு புதிய அணை கட்டப்போவதாக கூறி வருகிறது. இதற்காக டேம் உடைவது போல ஒரு கிராபிக்ஸ் சிடியையும் வெளியிட்டு பரபரப்பு செய்தது.

ஆனால் தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வைகோ போன்ற தலைவர்கள் முழு வீச்சில் இப்பிரச்சினைக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

வம்பை வளர்க்கும் ஆங்கிலப் படம்

இந்நிலையில், அணை உடைவது போலவும் அதில் வெளியாகும் வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கி உயிரிழப்பது போலவும் காட்சிகளைக் கொண்ட ஒரு படம் வெளியாக இருக்கிறது.

அதுதான் ‘டேம் 999′ எனும் ஆங்கிலத் திரைப்படம். இந்தியாவில் வரும் வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியாகிறது. ஆங்கிலம் தவிர, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்தப் படத்துக்கு பைனான்ஸ் செய்திருப்பது கேரள அரசும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் என்பது குறிப்பிடத்தக்கது.

’100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை முன்னெச்சரிக்கையாக இடிக்காவிட்டால் பேரிடர் ஏற்படும்’ என்பது போல் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கேரளாவைச் சேர்ந்த மாலுமி

கேரளத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமியாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய சோஹன் ராய் தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

‘இந்தப் படத்தை பார்த்த பின்னர், முல்லைப் பெரியாறு பழைய அணையை உடைக்க தமிழக அரசே சம்மதம் தெரிவிக்கும்’ என்றும் திருவாய் மலர்ந்துள்ளார் சோஹன் ராய்.

‘தமிழர்கள்தானே சாகப் போகிறார்கள்’

இந்த அணை உடைவதால் தமிழர்கள்தான் சாவார்கள் என்றும் கூறுகிறார் சோஹன் ராய்.

ஏற்கனவே இவர் முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து எடுத்துள்ள ‘டாம்ஸ்’ டாகுமெண்டரிக்கு ஹாலிவுட்டில் விருது கிடைத்துள்ளது. தற்போது பழங்கால அணை உடைவதை மையமாக வைத்து இவர் படம் எடுத்துள்ளார்.

‘டேம் 999′ படத்தில் ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயத்துக்காக வலுவற்ற அணையைக் கட்டுகிறார் (இது சில ஆண்டுகளுக்கு முன் வந்த நோவாஸ் ஆர்க் ஆங்கிலப் படத்தின் மையக் கருத்து). அதனால் ஏற்படும் அணையின் உடைப்பால் ஏராளமான பேர் உயிர் இழப்பதையும், பழைய அணைகள் குறித்து விழிப்புணர்வையும் மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான நேரடித் தாக்குதலா என்ற கேள்விக்கு சோஹன் ராய் அளித்துள்ள பதில் இது:

“நூறு ஆண்டு கால பழமைவாய்ந்த முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு மேற்கொண்டேன். சீனாவில் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற பான்கியோ டாம் பேரிடரில் சிக்கி இரண்டரை லட்சம் பேர் உயிர் இழந்தார்கள். அதே அபாயம் முல்லைப் பெரியாறு அணையிலும் உள்ளது.

அரசியல் சிக்கல் காரணமாக இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைப் பிரதிபலிக்கும்.

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும்,” என்றார்.

ஆக, முல்லைப் பெரியாறுக்கு எதிரான பரப்புரையை சினிமா மூலமும் தொடங்கியிருக்கிறார்கள் கேரளத்துக்காரர்கள்.

தமிழக அரசும் கோடம்பாக்கமும் அதை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன?

பாடகன் .envazhi.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக