புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
5 Posts - 63%
heezulia
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வைத்தியருக்கு மருந்து Poll_c10வைத்தியருக்கு மருந்து Poll_m10வைத்தியருக்கு மருந்து Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைத்தியருக்கு மருந்து


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 7:27 pm

சிரிப்பைப் போன்ற பெரிய மருந்து கிடையாதென்று சொல்லுவார்கள். அதுவும் டாக்டர்களைப் பற்றிச் சிரித்துவிட்டால், கண்டிப்பாய் அந்தப் பழமொழி பலித்துவிடுமல்லவா?

டாக்டர்கள் என்று சொன்னவுடன், “பில்” என்ற ஞாபகம் வருமென்று எதிர்பார்க்கலாம். சாதாரணமாய் உலகத்தில் நமக்கு எந்தப் பதார்த்தம் மிகவும் அருமையானதோ அதற்காக எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் செலவு செய்யச் சித்தமாயிருப்போம். நமது ஆரோக்யம் எல்லாவற்றையும் விட நமக்கு அருமையாக இருந்தும், அதற்காகக் கொடுப்பதென்றால் கசப்பாக இருப்பானேன்?
ஒரு வேடிக்கைக் கதை : ஒரு நண்பர் ஒரு டாக்டரை, “ஏன் வர நோயாளிகளின் ஆகாரத்தைப் பற்றி எதற்காக விசாரிக்கிறீர்கள்? நல்ல மருந்து கொடுக்கலாம் என்றா?” என்று கேட்டாராம்.

“அதெல்லாம் இல்லை. ஆகாரத்தைப் பொறுத்து ‘பில்’ போடலாம் என்றுதான்” என்று டாக்டர் பதில் கொடுத்தாராம்.
ஒரு பிரபல டாக்டரை முதல் முறை பார்ப்பதென்றால் ஐந்து ரூபாய் பீஸ் வாங்குவார்; அடுத்த முறை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரூபாய் பீஸ் கேட்டார். இதை அறிந்த ஒரு ஆசாமி, டாக்டரை ஏமாற்ற எண்ணி;

முதல் முறை பார்க்கும்போதே, ஏற்கனவே பழக்கப்பட்டவர் போல் நடிக்க உத்தேசம் கொண்டார். ஆகவே நுழையும் போதே, ‘நமஸ்காரம்!’ டாக்டர்வாள்! உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு!’ என்று சொல்லிக் கொண்டே மேஜை மீது ஒரு ரூபாயை வைத்தார். டாக்டர் ஆசாமியை ஒருமுறை பார்த்ததும் அவர் வேலைத்தத்தை ஊகித்துக் கொண்டு, பணத்தை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு, “முன் கொடுத்த மருந்தையே இன்னும் ஒரு மாதம் சாப்பிட்டு வாருங்கள். ஒரு மாதம் கழித்து வந்து பாருங்கள்!” என்றார்.
டாக்டர்களைக் காலனின் அவதாரமென்று நினைக்கும் பிரகிருதிகள் பலர் இன்றும் இருக்கின்றனர். ஒரு பெயர் பெற்ற ஆசிரியர் டாக்டர் என்னும் பதத்தை, “தனக்குக் கொஞ்சங்கூடத் தெரியாத மருந்தை, வியாதி இன்னதென்றே தெரியாத தேகத்துக்குள் புகுத்துபவர்” என்று வியாக்யானம் செய்தார்.

டாக்டர்கள் சிலர் நோயாளிகளிடம் ‘இடக்’காகப் பேசுகிறதுண்டு. ஆனால் ஒரொரு சமயங்களில் எதிர்பாராத இடங்களிலிருந்து மறுமொழி வருவதுமுண்டு. இதோ சில உதாரணங்கள் :

ஒரு டாக்டர் ஒரு சின்னப் பையன் நாக்கை நீட்டும்படி சொன்னார். பையன் நாக்கை நீட்டினான். “இன்னும், இன்னும் நீட்டு. முழுக்க நீட்டு!” என்றார் டாக்டர்.

“இன்னமே முடியாது. டாக்டர்! நாக்கு அந்தண்டைப் பக்கத்திலே ஒட்டி வைச்சிருக்கு” என்றான் அவன்.

ஒரு வைத்தியருக்குக் காரணமில்லாமலே ஒரு பதில் கிடைத்தது. வியாதியஸ்தர் ஒருவரை உற்சாகப்படுத்த எண்ணி, “நீர் பயப்படாதேயும். வியாதி கண்டிப்பாய் சொஸ்தமாகும். முன் ஒரு சமயம் இதே வியாதி எனக்கு வந்தது. இப்போது, பாரும்” என்றார்.
வியாதியஸ்தர் கவலை சிறிதும் குறையாமல், “அதே வியாதியாயிருக்கலாம். ஆனால் அதே டாக்டர் எனக்குப் பார்க்கவில்லையே இப்போது!” என்று வருந்தினார்.

ஒரு சமயம் ஒரு கிராமவாசியின் மனைவி சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டாள். டாக்டர் அவள் வாயில் தெர்மாமீடரை வைத்துப் பத்து நிமிஷத்துக்குப் பின்னர் எடுத்தார். அவள் புருஷன், இதுவரை சேர்ந்தாப் போல் இவ்வளவு காலம் தன் மனைவி பேசாமல் இருந்ததைப் பார்த்ததில்லையாதலால், டாக்டரிடம் சென்று காதோடு, “ஸார்! இப்போது ஒரு ஆயுதத்தை என் மனைவியின் வாயில் வைத்தீர்களே? அது என்ன விலை? எங்கே கிடைக்கும்?” என்று கேட்டானாம்.

isaishiva
isaishiva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 23/09/2009
http://www.inisai.in

Postisaishiva Fri Sep 25, 2009 7:31 pm

வைத்தியருக்கு மருந்து 56667

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 25, 2009 7:33 pm

வைத்தியருக்கு மருந்து 705463



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 7:34 pm

வணக்கம் சிவா , வணக்கம் பிரகாசு...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 11:16 pm

ஒரு சமயம் ஒரு கிராமவாசியின் மனைவி சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டாள். டாக்டர் அவள் வாயில் தெர்மாமீடரை வைத்துப் பத்து நிமிஷத்துக்குப் பின்னர் எடுத்தார். அவள் புருஷன், இதுவரை சேர்ந்தாப் போல் இவ்வளவு காலம் தன் மனைவி பேசாமல் இருந்ததைப் பார்த்ததில்லையாதலால், டாக்டரிடம் சென்று காதோடு, “ஸார்! இப்போது ஒரு ஆயுதத்தை என் மனைவியின் வாயில் வைத்தீர்களே? அது என்ன விலை? எங்கே கிடைக்கும்?” என்று கேட்டானாம்.


அருமை அருமை..நல்ல சிரிப்பு கட்டுரை..இப்படிதான் பெண்கள் வாயை அடைப்பதா..
பெண்கள் அமைதியின் மறு உருவம்..இப்படி கிழிக்க கூடாது அவங்களை.. வைத்தியருக்கு மருந்து 440806



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Sep 26, 2009 3:49 am

வைத்தியருக்கு மருந்து 812496
isaishiva wrote:வைத்தியருக்கு மருந்து 56667


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 26, 2009 5:57 am

வைத்தியருக்கு மருந்து Icon_lol

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sat Sep 26, 2009 8:33 am

கோவை சிவாவுக்கு கொங்கு மண்டல குசும்பு நன்றாக வருகிறது.



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 9:48 am

வைத்தியருக்கு மருந்து 440806

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 10:00 am

மருத்துவ சிரிப்பு அருமை!



வைத்தியருக்கு மருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக