புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_m10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_m10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_m10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_m10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_m10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_m10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
jairam
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_m10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_m10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_m10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_m10இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
karthi_hn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 06/07/2009

Postkarthi_hn Mon Oct 31, 2011 1:12 pm

First topic message reminder :

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு (எவரேனும் ஒரு வரை பற்றி தெரிவிக்கவும்)

ஃபிரண்ட்ஸ்


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Oct 31, 2011 5:01 pm

ராஜா wrote:அவசரத்தில் ஈகரை விடுதலை போராட்டம் என்று படித்து , பயந்து விட்டேன். சிரி ஐயோ உதயசுதா தலைமையில் , போராட்டம் எதுவும் ஆரம்பித்து விட்டார்களோ என்று. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 705463 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 705463 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 230655 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 230655

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 5:21 pm

மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 31, 2011 8:06 pm

அஞ்சலையம்மாள், அம்புஜத்தம்மாள் எல்லாம் இருக்காங்க.. கொஞ்சம் கால அவகாசம் கொடுங்க. நான் பதிவிடுகிறேன். இப்போது தட்டச்சு செய்ய நேரமில்லை.



இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Tஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Hஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Iஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Rஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 31, 2011 8:08 pm

இதோ கிடைத்து விட்டது.

சரித்திரம் மறக்கலாமா ? - அஞ்சலை அம்மாளின் வரலாறு
சந்தனமுல்லை

”விடுதலைக்கு மகளிரெல்லாம்
வேட்கை கொண்டனம்” - என்று பாரதி, பெண் விடுதலைக்கு அறைகூவல் விட்ட காலகட்டத்தில் பெண் விடுதலையை விட தாய்நாட்டின் விடுதலை முக்கியம் என்று களத்தில் குதித்தவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் தெய்வத்தாய் என்றும் வேலு நாச்சியார் என்றும் போற்றப்படும் திருமதி.அஞ்சலை அம்மாள் அவர்கள். 1921ல் இந்திய சுதந்திரப் போர் அரங்கில் இறங்குகிறார். சாதாரண நெசவு குடும்பத்தில் பிறந்தவர். குறைந்த படிப்பறிவு இருந்தாலும் அறிவும் துணிவும் அனுபவமும் எப்படி வந்திருக்கும்? இவை இந்த சமூகம் பாய்ச்சிய வீர ரத்தத்தின் வெளிப்பாடு அல்லவா!

”விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்” - என்று பாரதி முழங்கிய கனவை நனவாக்கியவர் அல்லவா இவர். சமகால பெண்ணிய எழுத்தாளர் அம்பை மிகவும் ஆதங்கத்துடன் ஒரு கதையில் சொல்வார் -இந்தப் பெண்கள் அறிவையும், திறமையையும், சமையலறையிலே முடக்கி வைத்துக் கொள்கிறார்களே - தோராயமாக ஒரு பெண்ணின் ஆயுள் காலத்தில் 2,92,000 தோசை சுடுபவளாக இருக்கிறாளே! ஆனால், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மரபு என்னும் விலங்கை உடைத்தெறிந்துவிட்டு வாழ்வு என்பது குடும்ப வாழ்வு மட்டுமல்ல, சமுதாய வாழ்வும்தான் என்று முழங்கி குடும்பத்தினருடான் வீதியில் இறங்கியவர் அஞ்சலை அம்மாள்.

ஆம், இவர் நேருவின் குடும்பம் போல என்று சிலர் சிலாகித்து எழுதுகின்றனர். பேசுகின்றனர். ஆனால், இவர்கள் இன்னும் ஒருபடி மேல் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியும். நேருவுக்கு பொருளாதார பலம் இருந்தது. குடும்பமும் சிறிய குடும்பம்தான். ஆனால், இவர் குடும்பமோ பெரிய குடும்பம். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பம். அன்றைய உழைப்புதான் அன்றைய சாப்பாடு என்றிருக்கும் போது எந்த துணிவில் அவர் சுதந்திர போரில் இறங்கியிருப்பார்? அதுவும் அந்த காலத்தைச் சேர்ந்த பெண்! பெண்களை நான்கு சுவர்களுக்குள்ளேயே வைத்து வெட்டி வீரம் பேசும் சமூகம்! ஆய்வுக்குரிய சிந்தனையாக எடுத்துக் கொள்ளவும். அமெரிக்க பெண்கள் விடுதலை போராட்ட வீராங்கனை பெட்டி ஃப்ரைடன் நீண்ட நாள் போராட்ட அனுபவத்திலிருந்து சொல்வது - “ஆண்கள் ஒரு தனி வர்க்கமல்ல. பெண்கள் ஒரு தனிவர்க்கமல்ல. பெண்கள் மட்டும் தனியாக முன்னேறலாம் என்று நினைப்பது தவறு”. தான் மட்டுமல்லாமல், கணவருடன், குழந்தைகளுடன் போராட்டத்தில் இறங்குகிறார்.

கணவர் - முருகப் படையாச்சி
பெண் - லீலாவதி
மகன்கள் - காந்தி,ஜெயில்வீரன்(தற்போது ஜெயவீரன்)

கர்ப்பிணியாக சிறைபுகுந்து பேறுகாலத்தில் அனுமதியுடன் வெளியே வந்து ஆண் மகவுடன் மறுபடியும் சிறை புகுகிறார், சிறை அதிகாரிகள், ஜெயில் வீரன் என்று குழந்தைக்கு பெயரிட்டு இப்போது ஜெயவீரனாக கடலூரில் வசிக்கிறார்.

எப்படி ஒரு பெண்ணால் இது சாத்தியமாயிற்று?

“நாங்கள் இந்தியப் பெண்மணிகள்
நாங்கள் மலரினும் மென்மையானவர்
நாங்கள் சுட்டெரிக்கும் தீச்சுடர்கள்” - என்ற ஒரு பெண் கவிஞரின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இந்திய விடுதலைக்காக தீவிரவாதியாக மாறிய மாடம் காமா, நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்து போராடிய அருணா ஆசிப் அலிக்கும் சற்றும் குறைந்தவரல்லர் அஞ்சலை அம்மாள்.


1921 - சுதந்திர போராட்டத்தில் இறங்குகிறார்.
1927 - நீலன் சிலை அகற்றும் போரில் ஒரு வருடம் சிறை தண்டனை - சென்னையில்
1931 - உப்புக்காய்ச்சல் போராட்டத்தில் ஆறுமாத சிறை தண்டனை - கடலூரில்
1933 - மறியல் போரில் மூன்று மாத சிறை - கடலூரில்
1940 - தனி நபர் சத்தியாகிரகத்தில் முதலில் 6 மாதம்
1940 - 18 மாதங்கள் - வேலூர்
1943 - 8 மாதம் 2 வாரம் - பெல்லாரி

ஆக, நான்கு வருடம் ஐந்தரை மாதம் சிறைவாசம். தமிழ்நாட்டில் முதன் முதலில் சத்தியாகிரகத்தில் சிறை புகுந்த பெண்கள் என்ற பெருமைக்குரியவர்கள் :

1. அஞ்சலை அம்மாள்
2. மதுரை பத்மாசனி அம்மாள்

கள்ளுக்கடை இருக்குமிடமெல்லாம் அச்சிட்ட (குடியை கைவிடத் தூண்டும்) நோட்டீஸ்களை வழங்கிக் கொண்டே அஞ்சலை அம்மாள் மறியல் செய்வார். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மகாநாட்டுக்கு தலைமை தாங்கி ஒரு பெண்கள் படையுடன் அஞ்சலையம்மாள் கைதானார். பிறகு ஜில்லாபோர்டு உறுப்பினராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து 20-06-1961 இல் அமரரானார்.

இவருடைய மகள் அம்மாப்பொண்ணு என்கிற லீலாவதி (காந்தி இட்ட பெயர்)
தன்னுடைய 9வது வயதில் நீலன் என்ற கொடுங்கோலன் சிலையை அகற்றுவதற்காக தாயுடன் சென்னை வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவர்களுடன் தந்தையும் போராடும் போது அனைவரும் கைது செய்யப்பட்டு லீலாவதி செனனி சிறுமியர் இல்லத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிடுகிறார். 1931ல் விடுதலையான பிறகு காந்தியின் வார்தா ஆசிரமத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து சேவையில் ஈடுபட்டார்.

இவருடைய கண்வர் திரு.ஜமதக்னி வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்தில் உள்ள கடப்பேரி என்ற சிற்றூரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். காந்தியடிகளில் முதல் இயக்கம் முதல் இறுதி இயக்கம் வரையில் எல்லாவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்தவர். தமிழ்,ஆங்கிலம்,இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றில் புலமை பெற்று பல விருதுகளை குவித்தவர். ஜமதக்னி அவர்களின்நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைப் பற்றி ஆர்வியின் தளத்தில் காணலாம்.
இவர்களுடைய புதல்வி திருமதி.சாந்தி பெரியார் சிந்தனையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று சென்னையில் வசிக்கிறார்.

ஆக, இவ்வளவு தியாகங்கள் செய்த குடும்பம் வரலாற்று ஏடுகளில் எங்கே உள்ளது? இந்த சரித்திர சுவடுகள் பெண்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில்/ தென்மாவட்டத்தில் சுதந்திரபோராட்டத்திற்கு பங்களித்த எத்தனை பெண்கள் உடனே நம் நினைவுக்கு வருகின்றனர்? பெண்களின் போராட்டங்களை இந்த சமூகம் மறைக்கிறது அல்லது மறக்கிறது!

சிறையில் அடைபட்டிருக்கும்போது கடலூரில் அஞ்சலை அம்மாளின் வீடு ஏலத்திற்கு வந்தபோது, ஒரு முஸ்லீம் குடும்ப நண்பர் சமயத்தில் உதவி செய்கிறார். அஞ்சலை அம்மாளின் குழந்தைகளை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. பொருளாதார பிரச்சினை ஒரு புறம், பாதுகாப்பின்மை ஒரு புறம் - அதன் தாக்கம் அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.

அரசர்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்குமே சரித்திரம் சொந்தமானது என்றால் சாதாரண அஞ்சலை அம்மாக்களின் தியாகத்தை யார் சொல்வது? யார் இதை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்பது? யார் யாருக்கோ சிலை நிறுவும் அரசாங்கம் அவர்களை எப்படி மறக்கலாம்?இவர்கள் சாதி, மதங்கள் தாண்டி வெளியில் வந்து போராடியவர்கள் ஆயிற்றே! History என்பது his-story மட்டுமல்ல her-storyயையும் உள்ளடக்கியது தானே! அரசு செய்ய மறந்தால் அல்லது மறுத்தால் இந்த சமுதாயமாவது அன்னாருக்கு சிலையெடுத்து சரித்திரத்தை திரும்பி பார்க்க வைக்கட்டும்!


”போற்றித்தாய்” என்று தாளங்கள் கொட்டடா!
”போற்றித்தாய்” என்று பொற்குழலூதடா!!


நன்றி: சந்தனமுல்லை



இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Tஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Hஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Iஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Rஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Empty
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Oct 31, 2011 9:26 pm

அரசர்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்குமே சரித்திரம் சொந்தமானது என்றால் சாதாரண அஞ்சலை அம்மாக்களின் தியாகத்தை யார் சொல்வது?
அறுமையான ஆதங்கம்! சூப்பருங்க

இந்தப் பெண்கள் அறிவையும், திறமையையும், சமையலறையிலே முடக்கி வைத்துக் கொள்கிறார்களே - தோராயமாக ஒரு பெண்ணின் ஆயுள் காலத்தில் 2,92,000 தோசை சுடுபவளாக இருக்கிறாளே!

இப்ப எல்லாம் நாங்க தானே!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 31, 2011 10:22 pm

ஜேன் செல்வகுமார் wrote:அரசர்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்குமே சரித்திரம் சொந்தமானது என்றால் சாதாரண அஞ்சலை அம்மாக்களின் தியாகத்தை யார் சொல்வது?
அறுமையான ஆதங்கம்! சூப்பருங்க

இந்தப் பெண்கள் அறிவையும், திறமையையும், சமையலறையிலே முடக்கி வைத்துக் கொள்கிறார்களே - தோராயமாக ஒரு பெண்ணின் ஆயுள் காலத்தில் 2,92,000 தோசை சுடுபவளாக இருக்கிறாளே!

இப்ப எல்லாம் நாங்க தானே!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கணக்குப்புள்ள. நீங்க சுட்டுட்டாலும்... சுட்டுத்தள்ளூ! சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 10:25 pm

முதல் முறை அஞ்சலை அம்மாள் பற்றி படிக்கிறேன் பகிர்வுக்கு நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Ila
பிரியா இராசேந்திரம்
பிரியா இராசேந்திரம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/08/2013

Postபிரியா இராசேந்திரம் Mon Aug 19, 2013 8:24 pm

நன்றி உங்கள் பயனுள்ள தகவலுக்கு... என்னுடைய இந்திய வரலாற்றில் பெண்களின் பங்கு என்ற தேடலிற்கு இப்பதிவு மிகவும் பிரயோசனமாக அமைந்துள்ளது. தகவலை வழங்கிய அனைவரிற்கும் நன்றிகள்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 19, 2013 8:35 pm

பிரியா இராசேந்திரம் wrote:நன்றி உங்கள் பயனுள்ள தகவலுக்கு... என்னுடைய இந்திய வரலாற்றில் பெண்களின் பங்கு என்ற தேடலிற்கு இப்பதிவு மிகவும் பிரயோசனமாக அமைந்துள்ளது. தகவலை வழங்கிய அனைவரிற்கும் நன்றிகள்
நேதாஜி - மதுமிதா
விடுதலை தியாகிகள் - *மதுமிதா*

வீர மங்கை வேலு நாச்சியார்

இதில் பாருங்கள் ப்ரியா உங்களுக்கு பயன்படுமா என்று ..... புன்னகை



இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Mஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Aஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Dஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 Hஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 U



இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பிரியா இராசேந்திரம்
பிரியா இராசேந்திரம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/08/2013

Postபிரியா இராசேந்திரம் Mon Aug 19, 2013 10:38 pm

நன்றி மது....
மிகவும் பயனுள்ள கருத்துக்கள்
உங்களது இந்திய வரலாற்றில் ஈடுபட்ட பெண்கள் பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி...

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக