புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
68 Posts - 53%
heezulia
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
1 Post - 1%
Shivanya
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
15 Posts - 3%
prajai
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
9 Posts - 2%
Jenila
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
4 Posts - 1%
jairam
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
எது பெண்ணுரிமை?  Poll_c10எது பெண்ணுரிமை?  Poll_m10எது பெண்ணுரிமை?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது பெண்ணுரிமை?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 12, 2011 5:52 pm

எது பெண்ணுரிமை?

நமது இந்தியக் குடியுரிமைச் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் அடுத்தவரின் உரிமையைப் பாதிக்காமலும் பறிக்காமலும் தான் விரும்பியதைச் செய்ய முழு உரிமை பெற்றவராவார்.

போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு, இஸ்லாமியச் சட்டபுத்தகமான திருக்குர்ஆனையும், ரஸூல்(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரமான ஹதீஸ்களையும் சற்றே நடுநிலையான, நியாயமான பார்வையுடன் பார்த்தார்கள் என்றால் 1428 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்ணுரிமையை நிறைவாக வழங்கியுள்ளது என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டு அதனைப் பின்பற்றவும் செய்வார்கள்.

இஸ்லாத்தினைக் குறை கூற முற்படுமுன் தங்களது வழிபாட்டிற்குரிய மதங்கள் என்ன போதிக்கின்றன என்பதை இவர்கள் ஒரு முறை நினைவு படுத்திக்கொண்டு இஸ்லாத்தில் பெண்களுக்குரிய உரிமைகள் யாவை? என்று கணக்கெடுத்துப் பார்த்தாரேயானால் தாங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து விடுவர்.

பிறப்பதில் உள்ள உரிமை!

பெண்குழந்தை என்றால் சிசுவிலேயே அழித்துவிடுவதையோ அல்லது பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்வதையோ இஸ்லாம் மிக வன்மையாக எதிர்க்கிறது. பெண்குழந்தை பிறந்தால் உண்மையான முஸ்லிம் அதனை ரஹ்மத் (அல்லாஹ்வின் அருட்கொடை) என்று சந்தோஷப்படுவர். பெண்ணுக்கு வயது வந்தவுடன் பொருத்தமான மணமகனைத் தேடித் திருமணம் செய்யும்போது பெண்களுக்குரிய மஹரைக் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள் என்பது இறைக்கட்டளையாகும் (காண்க அல்குர்ஆன் 4:4)

அறிவைப் பெருக்குவதில் உரிமை!

ஆண்குழந்தைக்கு வழங்குவது போன்றே சற்றும் பாரபட்சமில்லாமல் பெண்ணுக்கும் கல்வியறிவை வழங்கவேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் வழக்கறிஞர்களுக்கு ஈடான அறிவுஞானம் பெற்றிருந்தது இதற்கு ஒரு சான்று.

பெண்கள் கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது, திறம்பட நிர்வாகிப்பது, பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக, மருத்துவர்களாக, பொறியியல் வல்லுனர்களாக இப்படி அனைத்துத் துறையிலும் பிரகாசிப்பதையும் அறிவைப்பெருக்கிக் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களுடன் போர்க்களத்தில் பல பெண்மணிகள் உதவி செய்து பணியாற்றி உள்ளார்கள் என்பதே இதற்குச் சான்று.

அதேவேளை, தான் ஒரு பெண் என்பதை மறந்து எல்லையைத் தாண்டிவிடுவதைத்தான் இஸ்லாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இறைவன் ஆணையும் பெண்ணையும் மனித இனமாகவே படைத்திருந்தாலும் பெண்ணின் இயல்பான உடலமைப்பு, ஆண்களைக் கவரக்கூடியதாகவே அமைந்துள்ளது. சட்டென சபலத்திற்குள்ளாகும் ஆண்களது மனதைப் போல் அல்லாஹ் பெண்ணுக்குப் படைக்கவில்லை என்பதே யதார்த்தம். அதே போல் பெண்ணுக்கு உரிய உடல், மன பலவீனங்களை ஆணுக்கு இறைவன் கொடுக்கவில்லை.

அதனாலேயே ஆண்களும் பெண்களும் இரண்டறக் கலந்து பணியாற்றும் சூழலை இஸ்லாம் தடுக்கிறது. இங்கே தான் இஸ்லாம் நிலைநிறுத்தியுள்ள ஹிஜாப் (மறைத்தல்/தடுப்பு) எனும் விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.

கண்ணியம் கொடுக்கும் ஹிஜாப்!

பெண்ணுரிமையைப் பற்றி வாய்கிழியப்பேசுவோர், "பர்தாவின் மூலம் இஸ்லாம் பெண்ணை அடிமைப்படுத்துகிறது" என்று கூக்குரலிடுகின்றார்கள். இஸ்லாமிய உடைச்சட்டம் என்னவெனில் பெண்கள் தங்களது உடல் பரிமாணங்களைப் பிற ஆடவர் முன் வெளிப்படுத்தாதவாறு, முகத்தையும் முன் கைகளையும் தவிர்த்து ஏனைய பகுதிகளை மறைக்கச் சொல்லி அறிவுறுத்துகிறது.

ஆணின் குணத்தை அறிவதில் அவனைப்படைத்த இறைவனை விட வல்லமை மிக்கவன் யார்? ஆணின் கழுகுப் பார்வையிலிருந்து காத்துக் கொள்வதற்காக இறைவன், பெண்களுக்கு ஹிஜாப் எனும் பாதுகாப்பை ஏற்படுத்தி, அதைப் பின்பற்றச் சொல்கிறான்.

பெண்ணை போகப்பொருளாக மட்டும் பார்க்க நினக்கின்ற வக்கிர எண்ணம் கொண்ட போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டத்தினர் போடும் கூப்பாடுகளில் ஒன்று 'ஹிஜாப் என்பது பிற்போக்குத் தனத்தின் அடையாளம்' என்பது. ஹிஜாப் என்பது முகத்தை மறைப்பதல்ல என்பதைப் புரிந்து கொள்ளாத பாரதியாரும் துருக்கி நாட்டையும் இந்தியத் தலைநகரையும் முடிச்சுப் போட்டு, "டில்லித் துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்" என்று பாடி வைத்தார்.

இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனமுள்ளது என்று முனகுவோர் ஏனோ கிறித்துவப் பெண்பாதிரிகளைக் கண்டு கொள்வதில்லை. இஸ்லாம் ஏற்படுத்தித் தந்திருக்கும் அதே கண்ணியமிக்க உடையினைப் பிற மதப் பெண்கள் அணிந்திருந்தாலும் அவர்களது பார்வை இஸ்லாமிய உடைகளின் மீது மட்டும் திரும்புவது, இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

திருணத்தில் உரிமை!

"ஆயிரம் காலத்துப் பயிர்" என்றும் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது" என்றும் பேசும் பிற மதத் திருமணக் கோட்பாடுகளை முற்றிலும் உடைத்துத் தகர்க்கும் இஸ்லாம், திருமணத்தை "ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்" என்ற எளிய சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியது! திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணின் சம்மதம் என்பதை, திருமணத்திற்குரிய முக்கிய சாராம்சமாக நபி(ஸல்) அவர்கள் ஆக்கியுள்ளார்கள். மணம் பேசப்படும் பெண் நாணமுற்று பதிலளிக்காமல் போகும் நேரங்களில் மட்டும் அவளது சம்மதம் கிட்டியதாக எடுத்துக்கொள்ளச் சொல்லியுள்ளார்களே தவிர மணப்பெண்ணின் சம்மதமின்றி ஒரு திருமணம் இஸ்லாத்தில் ஆகுமானதாகவே ஆக்கப்படவில்லை.

அத்துடன் பெண்ணுரிமை பேசும் பிற மதங்களில் நிலவும் வரதட்சணை என்ற கைக்கூலியைப் பெறுவது இஸ்லாத்தில் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மனைவி மீதான கணவனின் முக்கியக் கடமையாக உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் வழங்க வேண்டுமென்று இஸ்லாம் கட்டளை இடுகிறது. அதே போல் பெண்ணின் கடமை கணவனின் உடமைகளையும் குழந்தைகளையும் தனது கற்பையும் பாதுகாத்து குடும்பத்தைச் சிறப்பாக நடத்திச் செல்வது. இந்த அற்புதமான ஏற்பாடுகளைப் பற்றி அறிவிலிகள் சிலர், "பெண்களை இஸ்லாம் வீட்டினுள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறது" என்று கூக்குரலிடுகின்றனர்.

திருமண விலக்கிலும் இஸ்லாம் வழங்கியுள்ள உரிமை:

பல்வேறு காரணங்களால் மணவாழ்வில் கசந்து போய் கணவனோடு சேர்ந்து வாழ்வதில் ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லையெனில் கட்டாயமாக அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அடிபணிந்து, "கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருசன்" என்று இறுதிவரை அவனோடு வாழ்ந்து(?) ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை இஸ்லாம் போதிக்கவில்லை.

ஒரு பெண் எளிமையான முறையில் ஊர்த்தலைவர்/பகுதித்தலைவர் (ஜமாத்தாரிடம்) சொல்லிவிட்டுத் தன் கணவனிடமிருந்து மணவிலக்குப் பெறுவது போன்று ஓர் ஆண்கூடப் பெற்றுவிட முடியாது. இதிலும் பிற சமுதாயத்தவர் தவறாக விளங்கியுள்ளது போன்று, "தலாக் தலாக் தலாக்" என்று கூறி எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் ஒரு கணவன் தன் மனைவியை விவாகரத்துச் செய்துவிட முடியாது. ஆணின் அவசரக்குணத்தை அறிந்து வைத்திருக்கும் இறைவன், தன் அவசரக் குணத்தால் ஓர் ஆண், தனக்கே தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது என்றும் நன்கு சிந்தித்து, பிரிவை அனுபவித்து இறுதி முடிவெடுப்பதற்காகவும் மாதக் கணக்கில் காலக் கெடு வழங்கியுள்ளான்.

பெண்கள் பணியிடங்களுக்குச் சென்று சம்பாதிப்பதைவிட வீட்டில் இருந்து தம் குடும்பத்தினரை பராமரிக்கும் பாரிய பொறுப்பை இஸ்லாம் பெண்களுக்கே தருகிறது. கணவன் சம்பாத்தியத்துடன் குடும்பத்துக்குக் கூடுதல் பொருளாதார மேம்பாடு என்ற ஆசையில் பொருளீட்டப் பணியிடங்களுக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்கள் படும் அவதிகள், அமைதியிழப்புகள் கணக்கிலடங்காது. அதே சமயம் கணவனை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் ஒரு பெண், தகுந்த பாதுகாப்போடு பொருளாதாரத்தை ஈட்டுவதையும் இஸ்லாம் குறைகூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒரு பெண் தன் கணவனை இழந்துவிட்டால் 'இத்தா' என்று குறிப்பிடும் ஒரு சிறு காலகட்டத்திற்குப் பிறகு அப்பெண் விரும்பினால் எவரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மறுமண அனுமதியை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது இஸ்லாம்.

வாரிசு உரிமை:

பிற மதங்களில் தராத வாரிசு உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் நிலை நிறுத்துகிறது. பெண் என்பவள் புகுந்த வீட்டிற்குப் போகப்போகிறவள்தானே என்ற ரீதியில் பிறமதங்களில் புறம் தள்ளப்படும் பெண்மை இஸ்லாத்தில் கவுரவிக்கப்படுகிறது. தன்னைப் பெற்றெடுத்த தாய்-தகப்பன், தன்னை மணங் கொண்ட கணவன், தான் பெற்றெடுத்தப் பிள்ளைகள் ஆகிய அனைவரது சொத்துகளிலும் ஒரு பெண்ணுக்குப் பங்குண்டு என்ற பன்முக உரிமையை இஸ்லாம் பெற்றுத் தருகிறது.

உயர்ந்த கண்ணியம்:

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "மனிதர்களிலேயே நான் அதிகம் கண்ணியப்படுத்துவதற்குரிய நபர் யார்?" என்று மூன்று முறை திரும்பத்திரும்ப கேட்டும் நபியவர்கள் ஒவ்வொரு முறையும் "உனது தாய்தான்!" என்றும் நான்காவது முறையாகத்தான் தந்தையைக் குறிப்பிட்டார்கள் எனும் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது. ஒரு மனிதன் இவ்வுலகில் கண்ணியம் கொடுக்க வேண்டிய மனிதர் மூன்று உயர்ந்த நிலைகளிலும் பெண்ணான ஒரு தாய்தான் என்ற இச்சிறப்பை இஸ்லாம் வழங்கியுள்ளது.

முடிவுரை:

ஆணுக்கும் பெண்ணுக்குமான உரிமைகளை அவர்களைப் படைத்த இறைவன் அவரவர்களின் தேவைகளைக் கணக்கிட்டே வழங்கியுள்ளான் என்பதனை, இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை அறியாமல் பேசுவோர் உணரவேண்டும். பெண்ணுக்கு உரிமை அல்லது பெண்ணுரிமை என்பது அந்தப் பெண்ணுக்கு கண்ணியம் தரக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டுமே தவிர கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அரைகுறை ஆடைகளுடன் அலைவதில் பெண்ணுரிமை இல்லை என்பதை இவர்கள் உணரவேண்டும்.

இன்று சட்டங்களிலும், ஏட்டிலும் அழித்து அழித்துத் திருத்தம் செய்து கொண்டு இஸ்லாமியச் சட்டங்களுடன் நெருங்கி வந்து கொண்டிருக்கும் சர்வதேசச் சட்டங்களை இஸ்லாம் 1428 வருடங்களுக்கு முன்னமே நிறைவு செய்து விட்டது.

ஆகவே, பெண்ணுரிமை பேசுபவர்களும் இஸ்லாமிய ஆர்வலர்களும் இஸ்லாத்தின் முழு பரிமாணத்தையும் விளங்காத முஸ்லிம்களும் உண்மையான பெண்ணுரிமை இஸ்லாத்தில் ஏற்கனவே தெளிவாக்கப் பட்டிருப்பதை உணர்ந்து தெளிந்திட வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்கு அருள் புரிவானாக!

ஆக்கம்: சகோதரி. ஜஸீலா
http://www.satyamargam.com/index.php?option=content&task=view&id=738
THANKS TO: SISTER JAZEELA AND SATYAMARGAM.COM




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 12, 2011 6:07 pm

ஈகரை தமிழ்க்களஞ்சிய விதிமுறைகள்
7.
தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!


நண்பர் முஹைதீன் அவர்களுக்கு , மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உங்களின் படைப்புகளை பதியவும்.-நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக