புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
43 Posts - 36%
ayyasamy ram
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
2 Posts - 2%
mruthun
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
3 Posts - 1%
manikavi
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
2 Posts - 1%
mruthun
மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10மனநிலையா... சூழ்நிலையா... Poll_m10மனநிலையா... சூழ்நிலையா... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநிலையா... சூழ்நிலையா...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 05, 2011 7:24 pm

மனநிலையா... சூழ்நிலையா...

தவறு செய்பவர்களை பற்றி பேசும்போது, சிலர் சொல்வார்கள். "சந்தர்ப்பங்கள் வாயக்காத காரணத்தால் தான் எல்லோரும் தப்பு பண்ணாம்ம இருக்காங்க" என்று. அதாவது யோக்கியனாக இருப்பதற்கு காரணம் சூழ்நிலை தானே ஒழிய மனநிலை அல்ல என்பது போல்... இன்று இப்படி சொல்லிக் கொள்ளுவதும் ஒரு வாடிக்கையான விஷயமாகி விட்டது. "யாரு தான் தப்பு பண்ணல. எல்லோரும் தான் தப்பு பண்றாங்க. மாட்டாத வரைக்கும் எல்லோரும் நல்லவர்கள்"...

தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கும் வார்த்தைகள். சரி. "யாரு தான் தண்ணியடிக்கல"... "யாரு தான் லஞ்சம் வாங்கல"... "யாரு தான் _________ போகல"... அதாவது யாருமிங்கே யோக்கியர்கள் இல்லை என்கிற தொணியில் வரும் வாசகங்கள்... இது எந்தளவுக்கு உண்மை... எந்தளவுக்கு பொய்.

பல வருஷங்களுக்கு முன் நான் படித்த ஒரு கதையில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும். காதலனும் காதலியும் தனித்திருக்கும் வாய்ப்பு கிட்டும். அப்போது காதலன் காதலியிடம் அத்து மீறத்துடிப்பான்- தவறான நோக்கத்தோடு வரும் அவனை உதறி விடுவாள். அப்போது அவன் சொல்வான். "தவறு செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்காததால் தான்
எல்லோரும் யோக்கியர்களாக இருக்கிறார்கள்" என்று சொல்லி தொடர்ந்து தொந்தரவு செய்வான். அப்போது அவள் கோபத்தில் கேட்பாள், இப்படி "உங்க அம்மாவுக்கும் தப்பு பண்ண ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கலயா" என்று. சுள்ளென்று விழுந்த வார்த்தை அடிகளால், அவன் விலகி போவான்.

இது, அவளது மனநிலை மாத்திரம் அல்ல... தவறு செய்ய தூண்டு பவர்களை பார்த்து, தவறு செய்ய விருப்பமில்லாதவர்கள் கேட்கும் கேள்வி தான்அது. மைனாரிட்டியாய் இருக்கும் தவறிழைப்போர், தாங்கள் மெஜாரிட்டியாக சொல்லும் வார்த்தை ஜாலங்கள் தான் இவை என்று வைத்து கொள்ளலாமோ. ஆட்டோவில், பஸ்ஸில் எத்தனையோ பேர் பணத்தை தவறவிடுகிறார்கள். பணத்தை கண்டெடுக்கும் எல்லோருமே,
தாங்கள் தப்பு செய்ய ஒரு சாதகமான சூழ்நிலை கிடைத்து விட்டது என்று பணத்தை அபகரிக்க நினைக்கிறார்களா... இல்லையே. சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடுகிறார்களே.

பாமர மக்கள் ஒரு அற்புதமான வாக்கியம் சொல்வார்கள், " ஒழுங்கா சம்பாதிச்ச காசே ஒட்ட மாட்டேங்குது. இது எதுக்கு" என்று. ஆனால்
மேதாவிகள் இதைவிட அழகாக பேசுவார்கள். தங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க- "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு".... "தேனை எடுத்தவன் நக்காமலா இருப்பான"... என்றெல்லாம் பேசி திரிவார்கள்.

ஏழ்மையில் பட்டினி கிடப்பது சூழ்நிலை... செழுமையில் விரதம் இருப்பது
மனநிலை... மருத்துவர் சொல்லி உணவு கட்டுபாடு கொள்வது சூழ்நிலை...
இயல்பாகவே அளவாக உண்டு வாழ்வது மனநிலை... மனநிலையையும், சூழ்நிலையையும் ஒன்றாக்க முடியுமா? என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். "தனது எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் நண்பர்கள் தான் காரணம்" என்று. முதலாம் ரகத்தவர்கள், தங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள் என்றால, இவர்கள் தங்கள் தவறுகளுக்கு பிறர் மீது பழி போடுகிறார்கள். நான் கேட்பேன், "உங்க ரெண்டு கை, ரெண்டு காலை கட்டிப் போட்டுட்டு, யாராவது உங்க வாயில பிராந்திய ஊத்துனாங்களா".

நண்பர் மது அருந்த கூப்பிடுவது சூழ்நிலை... அவர்களோடு போவதா, வேண்டாம்மா என்று தீர்மானிப்பது மனநிலை... காதலனின் இழுப்புக்கு போக விரும்பாததால் தான், அவள் அவ்வளவு பெரிய வார்த்தைகளை சொல்லி தப்பினாள். இங்கே நண்பனால் தப்பித்து இருக்க முடியாதா... முடிந்து இருக்கும். ஆனால் தப்பும் மனநிலை இல்லையே... ஒரு விலைமாது தெருவில் நின்று வலை வீசுகிறாள். பத்து பேர் தப்பி
விடுகின்றனர். பதினோராவது நபர் தான் அவள் பின்னே போகிறான். பத்து பேர் நினைக்கவில்லையே, "இந்த காலத்துல யாரு தான் தப்பு பண்ணல" என்று.

லஞ்சம் வாங்கும் ஊழியர்களுக்கு மத்தியில் லஞ்சம் வாங்காதவர்களும்
இருக்கிறார்களே. அவர்கள் வாங்குவதால் பெறும் மகிழ்ச்சியை, இவர்கள்
வாங்காததால் பெறுகிறார்கள். இவர்களிடம் வந்து அவர்கள், "யார் தான் தப்பு பண்ணல. எதுக்கு பயப்படுறிங்க. மாட்டும் போது பார்த்துக்கலாம். " என்று சொன்னால், இவர்களுக்கு கோபம் வரும். வரவேண்டும. வருவது இயல்பு தானே. தப்பு செய்ய வைக்கும்- நிறைய சந்தர்ப்பங்கள். தப்பி வருவதே நம் சாமர்த்தியம்.

டிவி மனிதனை கெடுக்கிறது என்பது குற்றச்சாட்டு. அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் டிவியை இயக்கக் கூடிய சுவிட்ச் நம் கையில் தானே உள்ளது. எந்த டிவியும் தானாக சுவிட்ச் ஆன் செய்வதில்லையே.

உலகில் எல்லாமே இரண்டு இரண்டாக உள்ளது. அவை எப்போதும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டே இருப்பவை. அவன் தன் வழிக்கு இவனை இழுப்பான். இவன் தன் வழியை பார்த்து கொண்டு தப்பி ஓடுவான். அவனும் விடாமல் துரத்துவான். சரி... எது சரி. மனநிலையா... சூழ்நிலையா... தப்பு செய்ய நினைக்கும் மனநிலை கொண்டவர்கள் அல்லது தப்பை தப்பாக பார்க்காதவர்கள், சூழ்நிலை கிடைக்கும் போது தவறுகிறார்கள். உறுதியான மனம் கொண்டவர்கள், சரியாக வாழ்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியை ருசித்தவர்களை சூழ்நிலை ஒன்றுமே பண்ணாது. மனநிலையே ஜெயிக்கும்.

"சந்தர்ப்பம் கிடைக்காததால் தான் யோக்கியர்களாக இருக்கிறார்கள் " என்று சொல்லப் படுபவர்கள், வாழ்க்கையை ருசிக்க(கெட்டுப்போக) சந்தர்ப்பங்களை எதிர் நோக்குகிறார்கள். அவர்களோடு சூழ்நிலையை வென்றவர்களை ஒப்பிடவே கூடாது.

வாச மலர்களோடு காகிதப்பூவை ஒப்பிடலாமா. ஒப்பிடத்தான் முடியுமா...

http://tamiluthayam.blogspot.com/2010/01/blog-post_12.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 7:42 pm

இந்த கட்டுரையை நான் விரும்பி படித்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்னையே நான் இதில் பிரதிபலிப்பாக கண்டேன். நன்றி நண்பரே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக