புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_m10குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 09, 2011 9:19 pm

குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Tamil-DailyNews_Paper_64252436162

‘எனக்கும் ஐந்து தலைகள். ஈசனுக்கும் ஐந்து தலைகள். இனி நான் ஏன் ஈசனை பணிய வேண்டும்?’ பிரம்மனின் மனதில் கர்வம் எட்டிப் பார்த்தது. ஈசனுக்குச் சமமாய் தன்னை பாவித்த அகம்பாவத்தில், அந்த ஈசன் எப்படி இருக்கிறார், பார்த்து வரலாம் என்று புறப்பட்டார் பிரம்மன். பனிமலையில் பாதம் பதித்த பிரம்மனின் நடையில் கயிலையே தன் காலடியில்தான் என்ற ஆணவம் இருந்தது. அவன் நடந்து வந்த தோரணை அம்பிகையையே ஏமாற்றியது. ஐந்து தலையுடன் வருவது ஈசன்தானோ என்றெண்ணிய தேவி, பிரம்மனைப் பணிய, ‘உலகாளும் நாயகியே பணிகிறாள், நாம் சிவனுக்கு சமம்’ என்ற வக்கிரம் மனதுக்குள் கொக்கரிக்க, கை தூக்கி ஆசிர்வதித்தான் பிரம்மன். இந்த ஐந்துத் தலையன் அரனல்ல; அகம்பாவம் பிடித்த அயன் என்பதை சட்டென உணர்ந்த அன்னை சினம் கொண்டாள்.

‘‘பிரம்மனே, ஐந்து தலைகள் உள்ளதாலேயே நீ ஈசனாக முடியாது. இந்த பிரபஞ்சத்தில் ஆதியும்
அந்தமும் அரன்தான். கர்வம் தொலைத்து முறையாக செயல்படு” என்றாள் அன்னை.

‘‘ஹூம்! எனக்கு அறிவுரை சொல்லும் தகுதி இங்கு யாருக்குமில்லை”. பிரம்மனின் பேச்சில் செருக்கு தாண்டவமாடியது.

‘தகுதி இல்லாத நபர் தலைக்கனத்தோடு ஆடலாமா? தட்டி வைப்பதுதானே முறை’ என்பதாய், அப்போது அங்கே வந்த தன் நாயகனைப் பார்த்தாள், பார்வதி.

உடனே பரமன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த பிரம்மனின் கர்வத் தலையை நகத்தால் கிள்ளி எறிந்தார். இந்த விவரம் அறிந்த பிரம்மனின் மனைவி கலைமகளின் கண்கள் துடித்தன.

கோபம் கொண்ட வாணி, ‘‘என் கணவனின் தலையை கொய்த உம்மை பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கட்டும். சுடலை காடனாய் அன்னம் கிடைக்காமல் சுடுகாட்டு சாம்பலையும் பிணத்தையும் தின்று வாழுங்கள். உறைந்த ரத்தம் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளுங்கள்” என சாபமிட்டாள்.

வாணியின் சாபம் ஈசனை சூழ, பிரம்ம கபாலத்தை திருவோடாய் ஏந்திக் கொண்டார். நா வறண்டு தாகம் அதிகரிக்க பித்து பிடித்தவர் போன்று கத்திக் கொண்டே கயிலையை விட்டு வெளியேறினார்.

சரஸ்வதி சட்டென பார்வதியைப் பார்த்தாள். ‘‘என் கணவனின் சிரம் கிள்ள காரணமான உனக்கு, இனி கொக்கின் சிறகும், மயிலின் இறகும்தான் உடை. உன் தாதிப் பெண்கள் பூத கணங்களாகட்டும். பிணங்களும், மாமிசமும்தான் உனக்கும் உணவு” என கோபத்துடன் சாபமிட்டாள்.

உமையன்னை உருக்குலைந்தாள். கோர உருவம் தாங்கி கயிலையை விட்டு வெளியேறினாள். மகா விஷ்ணுவை மனதில் நிறுத்தி சாபம் நீங்கும் வழி கேட்டாள். அவரும் திருவண்ணாமலை அருகே ஒரு ஏரியை காட்டி அங்கு தவமிருக்க சொன்னார். அன்னை அமைதியாய் அங்கொரு புற்றில் அமர்ந்து தவமியற்ற தொடங்கினாள்.

சரஸ்வதியையும் பிரம்மனையும் சாந்தப்படுத்தி அவரவர் பணியை தொடர ஆணையிட்டார் விஷ்ணு.

பிரம்மஹத்தி தோஷமாய் பரமனின் கையோடு ஒட்டிக் கொண்ட பிரம்ம கபாலம் ஈசனுக்கு கிடைக்கும் சாம்பலையும் பிணத்தையும் கூட தட்டிப்பறித்து தின்றது. மயானத்தில் ஈசன் படும் வேதனை பொறுக்காது இளகிய திருமகள் புற்றுக்கு கீழே தவம் செய்யும் பார்வதி முன் தோன்றி ஒரு உபாயம் சொன்னாள். அதன்படி உணவை உருட்டி சிவன் முன்பு வீச, பிரம்ம கபாலம் தட்டிப் பறித்து தின்றது. லட்சுமி முன்னால் செல்ல ஓரிரு உருண்டைகளை தள்ளித் தள்ளி வீச பிரம்ம கபாலம் சிவனின் கரத்திலிருந்து இறங்கி முன்னால் நகர்ந்து உணவு தின்ன சென்றது. இனியும் பொறுப்பதற்கில்லை என பேருரு கொண்ட பார்வதி அங்காளியானாள். ஓங்கி பிரம்ம கபாலத்தை மிதித்தாள். கபாலம் சிதைந்தது. பிச்சாடனனாய் அலைந்து கொண்டிருந்த ஈசன் சாபம் நீங்கி தன்னுரு பெற்றார். கங்கை ஈசனை நீராட்டி புனிதம் சேர்த்துக் கொண்டாள். அங்காளியான அன்னையோ அப்படியே புற்றில் அமர்ந்தாள். அங்கு என்றால் புற்று. காளம் என்றால் பாம்பு. அதனாலேயே புற்றுருவாய், பாம்பை குடையாய் கொண்டு அமர்ந்த அன்னையை அங்காளம்மன் என அன்பாய் அழைத்து, மக்கள் வழிபடத் தொடங்கினார்கள்.

மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரியான இவள் காசியில் அன்னபூரணியாய் அருள்கிறாள். இவள் காலப்போக்கில் நாடு நெடுகிலும் சுடலை காட்டிலெல்லாம் கோயில் கொள்ளத் தொடங்கினாள்.

அப்படித்தான் சென்னை & மயிலாப்பூரிலும் வந்தமர்ந்தாள்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூர், கடற்கரையோரத்தின் ஒரு சாதாரண கிராமம். விவசாய நிலங்கள் சூழ்ந்த இந்த பகுதியில் பர்வதராஜகுல உள்நாட்டு மீனவர்கள் வாழ்ந்து வந்தார்கள். மீன்பிடித்து வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்வில் திடீரென சூறாவளி வீசியது. குழந்தைகளும் பெரியவர்களும் அடிக்கடி காலரா, அம்மை போன்ற கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டார்கள். வைத்தியமெல்லாம் செயலிழந்து போக, மக்கள் திக்கு தெரியாமல் நின்றார்கள் அப்போது ஒரு முதியவருக்கு அருள் வந்து ‘‘நான் அங்காளபரமேஸ்வரி. உன் குலச்சாமி. எனக்கு கோயில் கட்டு. குடியை நான் காக்கிறேன்” என உறுதி சொல்ல, அப்படியே உருவானது கோயில். நோய் நொடி இல்லாமல் தங்களைக் காக்கும் அன்னையை வழிவழியாய் வணங்கி வருகிறார்கள் இப்பகுதி மக்கள்.

அன்னையின் கருணை முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ‘‘ஆத்தா குழந்தை ரெண்டு நாளா பால் குடிக்க மாட்டேங்குது. பச்சையா வாந்தி எடுக்குது. பாத்துக்கோ தாயி..” என வேண்டி விபூதி பூச உடனே குணமாகிறது.

கோயில் பெரியதாக இல்லைதான். ஆனால், அன்னையின் கருணை, பூமி பரந்து, வானளாவி மழையாகப் பொழிகிறது. இரண்டு புறமும் அரசமரம். அதன் கீழ் விநாயகரும் நாகரும் அருள்கிறார்கள். உள்ளே கருவறையில் அன்னை பிரதானமாய் வீற்றிருக்கிறாள். நாகர், நாகசுப்ரமணியர், முருகன், உற்சவ அம்மன் எல்லோரும் வரிசையாய் அருள்கிறார்கள். இன்றும் உற்சவர் அன்னையை அமாவாசைதோறும் மயானத்திற்கு எடுத்துச் சென்று படையல் போட்டு, அழைத்து வந்து, ஊஞ்சல் உற்சவம் நடத்துகிறார்கள். மிகப்பெரிய சக்தியாக விளங்கும் அன்னை குழந்தைகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறாள். தன்னை நம்பி வந்தவர்களின் துயரங்களை தனதாக்கிக் கொண்டு, ஆனந்தம் அருள்கிறாள்.

தினகரன்



குழந்தைகளைக் காத்தருளும் காவல் தெய்வம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 09, 2011 9:24 pm

நல்ல தகவல் சிவாபுன்னகை கோவில் பெயர் என்ன?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக