புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
9 Posts - 82%
heezulia
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
1 Post - 9%
mruthun
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
2 Posts - 1%
mruthun
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_m10மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ராஸ் டே ஊரும் பேரும்...


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 20, 2011 11:45 am

மயிலாப்பூர்
பழமையும் சிறப்பும் வாய்ந்த ஊராக மயிலாப்பூர் விளங்குகிறது. தொண்டை
நாட்டுப்பகுதியாகவும், பல்லவர்கள், சோழர்களால் ஆளப்பட்ட பகுதியாகவும்
விளங்கியிருக்கிறது. தேவாரப்பாடல்களில் இவ்வூரின் சிறப்புக்
கூறப்பட்டுள்ளது.
வேல் செய்யும் வல்லவர்கள் வாழ்ந்தபகுதி என
அறியலாகிறது. திருவல்லிக்கேணி, சாந்தோம் பகுதிகள் இதனில் இருந்து
பிரிந்தவை. தாலமி "மலியர்பா' எனக்குறிப்பிடுவது மயிலாப்பூரைத்தான் என்பது
வரலாற்றாசிரியர்கள் கருத்து.
மாமயிலை, தொன்மயிலை, மயிலாபுரி,
மயிலாப்பில், திருமயிலை, தென்மயிலாபுரி, திருமயிலாப்பூர் என பாடல்களும்,
கல்வெட்டுகளும் பல பெயரில் குறிக்கின்றன. மார்க்கோபோலோ மயில்கள் நிறைந்த
பகுதி எனக்குறிப்பிடுகிறார். ஜான்டி மரிசு நோலி "மைரா போலிஸ்' எனவும்,
டூரேட் பார் போஸா "மைலாபூரா' எனவும் குறித்துள்ளனர்.

போர்ச்சுக்கீசியர்கள் மெலியபூர் என்றும், கி.பி., 17ம் நூற்றாண்டில்
மயிலாப்பூர் எனவும், பிரம்மாண்டபுராணத்தில் மயூரபுரி, மயூரநகரி எனவும்,
ஆங்கிலேயர்களால் மைலாப்பூர் எனவும் பல்வேறு திரிபுகளாக வழங்கி
வந்திருக்கிறது.
மயில்கள் கூட்டமாக திரிந்து அகவிய இடம் என்று பொருள்
கொள்ளலாம். இப்பகுதியை ஆண்ட பழைய குலத்தவரின் மரபுரைச் சின்னமாக மயில்
இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை.
மயிலையின்
பிற பெயர்களாக, புன்னைவனம், வேதநகர், சுக்கிரபுரி, பிரமபுரம், கந்தபுரி,
கபாலீச்சுரம், கபாலி மாநகர் என்பன போன்றவை சுட்டப்படுகின்றன. புன்னை
மரங்கள் நிறைந்த பகுதியாதலால் புன்னை வனம் எனப் பெயர் பெற்றிருக்க
வேண்டும். ஐயடிகள் காடவர் கோன், "மயிலைத் திருப்புன்னையங்கானல்'
எனக்குறிப்பிடுகிறார். மயிலையின் ஒரு பகுதி புன்னை வனமாகவும்
இருந்திருக்கக் கூடும்.
கபாலீச்சுரம், சைவத்தின் ஒரு பகுதியான
கபாலிகர்கள் வணங்கிய சிவன் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பிற பெயர்கள்
வடமொழித் தொடர்பைச் சுட்டுகின்றன.
பழமை மிக்க இவ்வூர் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், மயிலாப்பூர் என்பதே செல்வாக்கு மிக்கதாக விளங்குகிறது.


அமிஞ்சிக்கரை
அம்+இஞ்சி+கரை எனப்பிரித்தால் அழகிய கோட்டைக் கரை எனப் பொருள்படுகிறது.
ஆனால், இங்கு கோட்டை இருந்ததற்கான சுவடுகள் எதுவும் இல்லை. அமைந்தகரை
என்பதே மருவி அமிஞ்சிக்கரை ஆகி இருக்கலாம் என்ற கருத்து உண்டு.
ஏரிக்கரையில்
உருவாகிய குடியிருப்பு என்ற நோக்கில் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு
பெயர்தான். "கூவம் ஆறு இவ்வழியாக ஓடி வருகிறது. அதன் வடகிழக்குப்பகுதியில்
ஒரு பெரிய குளம் இருக்கிறது. கூவம் ஆற்றுக்கும், பெரிய குளத்துக்கும்
நடுவில் இயல்பாக அமைந்த கரை என்பதால் அமைந்தகரை என்று பெயர்
பெற்றிருக்கிறது' என்று சென்னை மாவட்டக் கோயில் வரலாறு நூல் தெரிவிக்கிறது.
நீர்நிலை, கரை தொடர்பாக இப்பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால்,
ஒருவகையில் பொருத்தமாகவே இருக்கிறது.


திருமங்கலம்
நான்கு வேதங்கள் தெரிந்த பிராமணர்கள் குடியிருக்கும் பகுதி, அக்காலத்தில்
சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. சதுர்வேதி மங்கலத்தின் சுருக்கம்
மங்கலம். பக்தி இலக்கிய காலகட்டத்தில் "திரு' எனும் அடைமொழி பரவலாக
வழங்கப்பட்டது. எனவே, இடைக்காலத்தில் திருமங்கலம் எனப் பெயர்
பெற்றிருக்கலாம்.
முகப்பேரி
முகப்பு ஏரி- முகப்பேரி எனப்பிரித்துப் பொருள் கொள்ளலாம். ஏரியின்
முகப்புப் பகுதியில் உள்ள ஊர் என்பது பொருள். இதன் அருகே ஏரி இன்றும்
காணப்படுகிறது. அம்பத்தூரைப் பற்றிய கல்வெட்டு ஒன்றில் "ஏரி கீழ் நாட்டு
அம்பத்தூர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பெயர்க்காரணம்
பொருத்தமானதாகவே இருக்கிறது. சாதாரண ஊரான இப்பகுதி அண்ணா நகர்
விரிவாக்கத்தால், பெருவளர்ச்சி பெற்று வருகிறது.


புரசைவாக்கம்
இங்குள்ள கங்காதரேசுவரர் கோவில் கிடைக்கும் கல்வெட்டுகள் 13ம் நூற்றாண்டு,
16ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாயினும், இவ்வூர் பற்றிய தெளிவான குறிப்புகளை
அவை தரவில்லை. சுந்தரர் பாடிய பாடலில் "புரிசை' எனக்குறிப்பிடுவது
இவ்வூரைப் பற்றியது என்பது குறித்து மாற்றுக்கருத்துகள் உள்ளன.
கடற்கரைப்பகுதியான
இங்கு புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால், புரசவாக்கம் எனப்பெயர் பெற்றுப்
பின் புரசைவாக்கம் என மருவியிருக்கக்கூடும் என்ற கருத்தும் உள்ளது.


தங்கசாலை

வடசென்னையில் நீண்ட தெருவின் வட கோடியில் நாணயங்கள் அச்சடிப்பதற்காக
கட்டப்பட்ட கட்டடம் காரணமாக இப்பெயர் உருவானது. ஏற்கனவே அங்கிருந்த
தொழிற்சாலை ஒன்றினை அகற்றி விட்டு, தங்கநாணயத் தொழிற்சாலை அமைக்கும் பணிகள்
துவங்கின. கி.பி., 1807ல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது; இயந்திரங்கள்
1841ல் தான் பொருத்தப்பட்டன. ஆனாலும், இங்கு நாணயங்கள் அச்சடிக்கப்படவே
இல்லை. இருந்தபோதிலும், இம்முயற்சிகளே தங்கசாலை எனப் பெயர் பெறக் காரணமாக
அமைந்து விட்டன.


கோடம்பாக்கம்
தென்னிந்தியாவின் ஹாலிவுட் எனப் புகழப்படும் கோடம்பாக்கம் பற்றிய
வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. முன்பு கோடம்பாக்கம் இருக்கும் பகுதி
புலியூர் என வழங்கி வந்திருக்கிறது. தொண்டை மண்டலத்தின் பலபிரிவுகளில்
ஒன்று புலியூர் நாடு. அதனுள் குன்றத்தூர், போரூர், மாங்காடு, அமரூர்,
கோட்டூர் போன்ற ஊர்கள் இருந்தன. இன்றும் கோடம்பாக்கத்தின் சில பகுதிகளுக்கு
புலியூர் என்ற பெயர் உள்ளது.
புலிகள் அதிகம் இருந்த காட்டுப்பகுதி என்ற
பொருளில் இது அழைக்கப்பட்டிருக்கக்கூடும். வியாக்கிரபுரீசுவரர் கோவில்
பற்றிய தகவல்களும் இதற்கு வலுச் சேர்க்கின்றன. வியாக்கிரம்-புலி, வேங்கை
எனப்பொருள்படுவது போல்,வியாக்கிரம் பூசித்திருந்த ஊர் வியாக்கிரபுரி. புலி
பசித்திருந்த இடம் புலியூர். வேங்கை பூசித்த ஈசர் வேங்கீசர் என்பது போன்ற
தகவல்களின் அடிப்படையில் புலியூருக்கு காரணப் பெயர் கற்பிக்கப்படுகிறது.
ஆற்காட்டு நவாப்பின் குதிரை லாயங்கள் இங்கிருந்துள்ளன. இந்தியில் கோட்பாக் என்பது மருவி, கோடம்பாக்கம் ஆனது என்ற கருத்தும் உள்ளது.

ஆழ்வார்பேட்டை

மயிலாப்பூரின் மேற்குப் பகுதிக்குடியிருப்பு ஆழ்வார்பேட்டை. மயிலையின் ஒரு
பகுதியாக இருந்து பின்னர் தனிக்குடியிருப்பாக வளர்ந்துள்ளது. முதலாழ்வார்
மூவருள் ஒருவரான பேயாழ்வார் பிறந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றதாகக்
கூறப்படுகிறது.
பேயாழ்வார் கோவிலுக்கு உரிய நிலங்கள் இருந்ததாலும்
இப்பெயர் பெற்றது. பேயாழ்வார் பிறந்த இடம் மயிலாப்பூர். அவரின் பாடல்களில்,
திருவல்லிக்கேணி பற்றிய குறிப்பு இருக்கிறதே தவிர, இப்பெயர் குறித்து
எதுவும் இல்லை. அவர் காலத்துக்குப் பின், மக்கள் இப்பெயர்
சூட்டியிருக்கலாம் எனக் கருதலாம். பேட்டை என்பது இடைக்காலத்தைச் சேர்ந்தது
என்பதால், இக்கருத்துக்கு மேலும் வலுசேர்க்கிறது.


ஆயிரம் விளக்கு
நவாப் வாலாஜாவின் குடும்பத்தினர் இப்பகுதியில்தான் வசித்துள்ளனர்.
இன்றும் முகம்மதியர்கள் அதிகளவில் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதி பற்றிய
தெளிவான வரலாற்றுக் குறிப்பு இல்லை. ஹென்றி டேவிசன் லவ்,
'Thuosand Lights Poodupauk' எனக்குறிப்பிடுவதால், புதுப்பாக்கத்தின் ஒரு பகுதியாக இருந்திருப்பது தெரியவருகிறது.
தமிழில்
ஆயிரம் விளக்கு எனவும், ஆங்கிலத்தில் Thuosand Light எனவும்,
இந்துஸ்தானியில் Nakshah என்றும் சொல்லப்படுகிறது. ஆயிரம் விளக்குகள்
கொண்ட பிரார்த்தனை அறை, நவாப் உம்தாத் உம் உமராவால் இங்கு கட்டப்பட்டதால்
இப்பெயர் பெற்றது என்ற கருத்து சொல்லப்படுகிறது. ஆனால், ஆதாரமற்ற
கருத்தாகவே இது உள்ளது. நவாப் கட்டியதாக தகவல் இல்லை. இக்கட்டடத்தின் பெயர்
Majeed Dawalash என்பது, இடுகாட்டின் பெயர் ஆயிரம் விளக்கு என்ற
கருத்துகள் நம்பக்கூடியதாக இல்லை. தமிழில் விளக்கு என்பது ஆங்கிலத்தில் அதே
பொருளில் அமைய, இந்துஸ்தானியில் மட்டும் Picture என எப்படி ஆயிற்று
என்பதும் ஆய்வுக்குரியது.
மொகரம் பண்டிகை கொண்டாடப்படும் போது,
இப்பகுதியில் இருந்த தொழுகை நடத்தும் இடத்தில் ஆயிரம் விளக்குகள் ஏற்றி
வைப்பர்; இதனால் இப்பெயர் பெற்றது என்ற கருத்தும் உள்ளது.

வேளச்சேரி
இவ்வூரின் பழைய பெயர் வெளிச்சேரி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
மண்டபத்தரையில் காணப்படும் 15ம் நூõற்றாண்டுக் கல்வெட்டு, வெளிச்சேரி என்ற
பெயரை மட்டும் குறிப்பிடுகிறது. உட்சுவரில் உள்ள ஒரு கல்வெட்டில்
"வேளச்சேரியான சின சிந்தாமணிச்ச.... மங்கலத்திலே ஒருபது வேலி நிலம்
முட்பத்து...' என்றவரிகள் காணப்படுகின்றன.
இருப்பினும் வேளச்சேரி,
வெளிச்சேரி என இருபெயர்கள் இருந்திருக்கின்றன; சின சிந்தாமணிச் சதுர்வேதி
மங்கலம் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது. முதலாம் ராஜேந்திரன்
காலத்தில்(கி.பி.,1014-1044) இவ்வூர் செயங்கொண்ட சோழமண்டலத்தில்
புலியூர்க்கோட்டத்தில் கோட்டூர் நாட்டைச் சேர்ந்தது; பிராமணர்களுக்காக
அளிக்கப்பட்ட பிரமதேயம்' எனத்தெரிய வருகிறது. மூன்றாம் குலோத்துங்கன்
காலத்தில் வெளிச்சேரி என்றும் ஜினசிந்தாமணிச் சதுர்வேதி மங்கலம் எனவும்
அழைக்கப்பட்டிருக்கிறது.
கோட்டூர் நாட்டுக்கு உட்பட்டது என்ற
குறிப்பால், கோட்டூருக்கு வெளியே அமைந்த சேரி, "வெளிச்சேரி' என
அழைக்கப்பட்டிருக்கலாம் என்பதே ஆய்வாளர்களின் கருத்து.

நன்றி தினமலர்



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Aug 20, 2011 11:49 am

தகவலுக்கு நன்றி......ரேவதி........... மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... 678642



மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Dove_branch
மெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Dமெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Iமெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Vமெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Yமெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Aமெட்ராஸ் டே  ஊரும் பேரும்... Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக