புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
91 Posts - 61%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
283 Posts - 45%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 4 of 20 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 26, 2015 10:45 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 7:41 am

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!

நூல்: மணிமேகலை

பாடியவர்: சீத்தலைச் சாத்தனார்

சூழல்: பாத்திரம் பெற்ற காதை : வற்றாமல் உணவை அள்ளித் தருகிற அமுதசுரபி என்கிற பாத்திரத்தை மணிமேகலை பெறுகின்ற அத்தியாயம் இது. அப்போது அவளிடம் தீவதிலகை என்ற பெண் சொன்ன வார்த்தைகள் இவை


மணிமேகலையே,
பசியைப் பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப் போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு உரிய உண்மையான நெறி.
அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் நீ உணவு கொடுத்தால், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம்.
ஆகவே, உன்னுடைய அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும் உயிரைத் தானமாகக் கொடு!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 2:32 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக
========================
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 9:52 am

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் பாடப்பட்ட சிலம்பில் இளங்கோ கூறுவதைப் பார்ப்போம்.
இறைவன் நமக்கு நாக்கைக் கொடுத்ததே நாராயணன் புகழ் பாடத்தான் என்று இளங்கோ அடிகள் பாடுகிறார்.

மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!

சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்

பொருள்: மூன்று உலகங்களையும் இரண்டே அடிகளில் முடித்தான் (வாமன அவதாரம்). அந்த அடிகள் சிவக்குமாறு தம்பியுடன் காட்டுக்குப் போனான் ‘சோ’ என்னும் அரணை அழித்ததைவிட பழமைமிகு இலங்கையின் காவலை அழித்தான். இந்த சேவகன் புகழைக் கேட்காத காதுகளும் காதுகள் என்று சொல்லத் தகுதி உண்டா?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 2:54 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
--------------------------------------------------------------

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2015 5:53 pm

[You must be registered and logged in to see this image.]


மத பூசல்கள் அதிகமாக இருந்த காலகட்டத்தில்
சிவபக்தரான மருள் நீக்கி, என்பவர் சமண மதத்தில் சேர்ந்தார்.
தன் பெயரை தேவசேனன் எனவும் மாற்றிக் கொண்டார்
-
அவரை வளர்த்தவரான சிவபக்தை திலகவதியார்
ஈசனிடம் முறையிட, அவரது அருளால் அவர் மீண்டும்
சிவபக்தரானார்.
-
அதனைப் பொறுக்காத பல்லவ மன்னன் அவருக்கு பல
இன்னல்களைக் கொடுத்தான்...
-
அப்போது அவர் பாடிய பாடல் இதுவாகும்...
-

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

-
மருள் நீக்கியார்தான் பின்னர் திருநாவுக்கரசர்
மற்றும் அப்பர் என அழைக்கப்பட்டவர் ஆவார்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 8:01 pm

சரியான விடையளித்த அய்யாசாமி அவர்களுக்கு நன்றி .


நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.



எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருக்கும் போது நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.
நரகத்தில் இடர்ப்படோம். அதாவது நரகத்திற்கு போக மாட்டோம் என்றில்லை. ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம்.அதாவது, பிணியுற மாட்டோம் என்றில்லை, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது.என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே. ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 29, 2015 12:24 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக .
-----------------------------------------
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 30, 2015 12:42 pm

மிகவும் பழைய காலமல்ல, இது நடந்து 150 ஆண்டுகள் கூட ஆகவில்லை

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறிய மாணவன், பத்து வயது கூட நிறம்பவில்லை. அது எப்படியோ தெரியவில்லை, பிறவியிலேயே அவருக்கு ஞாணம் மிகுதியாக இருந்தது

ஆசிரியர் ஆத்திச்சூடி சொல்லிக்கொடுக்கிறார் "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்", இந்த மாணவன் மட்டும் சொல்ல வில்லை. கோபம் வந்து விட்டது ஆசிரியருக்கு.

"ஏண்டா வாயை திறக்க மாட்டேங்குர"

"வேண்டாம், வேண்டாம் என்று சொல்லபிடிக்கவில்லை அய்யா, வேண்டும் வேண்டும் என இதை மாற்றிப்பாடலாம் அல்லவா"

ஆசிரியர் திகைத்தார், அவரின் திகைப்பு அடங்கும் முன்னரே, இந்த சின்னஞ்சிறு பிள்ளை பாடுகிறான்


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

"இனி நீதான் எனக்கு ஆசிரியர் அய்யா"... நாக்கு தழுதழுக்கிரது ஆசிரியருக்கு

அவர் வேறு யாரும் அல்ல

சுத்த சன்மார்க நெறியை பரப்பிய திருவருட்பிரகாச வள்ளளார்தான். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" எனக்கூறிய கருணாமூர்த்தி அவர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 03, 2015 10:03 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டி பொருள் விளக்குக .
-------------------------------------------

போட்டாளே வேலையற்றுப் போய்.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 4 of 20 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக