புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் கொட்டும் டாஸ்மாக்...
Page 1 of 1 •
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஆயிரக்கணக்கான கோடிகளை சர்வசாதாரணமாக அரசு கஜானாவுக்கு அள்ளித் தர... ‘சரக்கின்‘ நிஜ மதிப்பு அரசுக்கு மட்டுமல்ல, சாதாரண வெகுஜனங்களுக்கும் கூட அப்போது புரிய ஆரம்பித்தது. கடந்த ஆண்டு மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா...? அதிகமில்லை ஜென்டில்மேன், ஜஸ்ட் 12 ஆயிரம் கோடி; அவ்வளவே!
இன்றைய தேதிக்கு தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மதுபானக் கடைகள் இருக்கின்றன. அதிகப்பட்சமாக சென்னையில் மட்டும் 485 கடைகள்! இதை பல மடங்கு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாக பேச்சு அடிபடுகிறது. ‘ஹை கிளாஸ்‘ குடிமகன்களுக்கு என்றே, ‘ஏ கிரேடு‘ பார்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. சாதாரணப்பட்ட ஆட்கள் உள்ளே கால் வைத்து விடமுடியாது. எல்லாமே ‘கையைக் கடிக்கிற‘ காஸ்ட்லி ரகங்கள் மட்டுமே இருக்கும். வியர்வை கசகசப்பில் வெந்து போய், திரும்புகிற சாதாரண குடிமகன்களுக்காக வழக்கமான பார்கள்.
இப்படி இரு ‘டைப்‘ பார்களைத் திறப்பதன் மூலம் வருவாயை மேலும் பெருக்கமுடியும் என்று ஐடியா அரசுக்கு போயிருக்கிறது. இதுதவிர, சரக்குகளின் விலையை சற்று உயர்த்தவும் ஒரு திட்டம் இருக்கிறது. இந்த 2011ம் ஆண்டில் டாஸ்மாக் வருவாயை 15 ஆயிரம் கோடியாக உயர்த்தியே தீருவது என்பதை ஒரு சபதமாகவே தற்போதைய தமிழக அரசு எடுத்திருக்கிறதாம். உண்மையில், வருவாயைப் பெருக்க கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டிய அவசியமே இல்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
டாஸ்மாக் நிர்வாகம் சற்று புத்திசாலித்தனமாக செயல்பட்டாலே, நாளொன்றுக்கு பல லட்சம் அரசுக்கு வருவாய் வரும். உதாரணத்துக்கு, போலிகளை தடுத்து நிறுத்தலாம். கிராமப்புற, ஒதுக்குப்புற டாஸ்மாக் மதுக்கடைகளில் புழங்கும் சரக்குகளில் பாதிக்குப்பாதி போலிகள் என்பது குடிவாசனையே அறியாதவரும் அறிந்த உண்மை. டாஸ்மாக் சூபர்வைசர்களை அணுகும் இந்த போலி சரக்கு பிரதிநிதிகள், ‘பாட்டிலுக்கு வெறும் 30 ரூபாய் கொடுத்தால் போதும். ஒரிஜினல் விலைக்கே நீங்க வித்துக்கலாம். ஒரு நாளைக்கு பல ஆயிரம் பணம் சம்பாதிக்கலாம். கொடுக்கிறது எல்லாமே குவார்ட்டர் பாட்டில்தான். விறுவிறுன்னு வித்துத் தீர்ந்திருடும் என்று மடங்குகிற ஆளிடம் போலியை ‘கேஸ்‘களை தள்ளி விடுகிறார்கள்.
இதனால் என்ன ஆகிறது? ஒரிஜினல் சரக்கு விற்பனை கிடுகிடு வீழ்ச்சி. போலிகளை விற்றும் கூட, 12 ஆயிரம் கோடி கிடைக்கிறது என்றால், போலி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தால் என்ன நடக்கும்... யோசித்துப் பாருங்கள்! தவிர, டாஸ்மாக் கடைகளில் எந்தச் சரக்கு வாங்கினாலும் தற்போது 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை, ரகத்துக்கு தக்கவாறு கூடுதல் விலை வைத்தே விற்பனை நடக்கிறது. இப்படி வீணாகிற பணம் மட்டும், ஒரு நாளைக்கு 7 கோடி ரூபாய் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விடுகிறார்கள். பத்து மணிக்கு ஷிப்ட் முடிந்து ‘தாக சாந்தி‘ செய்ய வருபவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கும் இருக்கிறது வழி. கடையை மூடுவதற்கு முன் சூபர்வைசர்கள், ஒரு பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் அதிகம் வைத்து, பார் விற்பனையாளர்களிடம் சில ‘கேஸ்‘களை தள்ளிவிடுகிறார்கள். அவர்கள், பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதல் வைத்து விற்பனை செய்து கொள்கிறார்கள். இந்த வகையில் மட்டும் தினமும் பல லட்சம் பணம் தனியார் பாக்கெட்டுக்கு போகிறது.
காந்தி ஜெயந்தி போன்ற கடை விடுமுறை நாட்கள் வருகிறது என்றால், டபுள் கொண்டாட்டம்தான். நூறு ரூபாய் சரக்குக்கு 200 ரூபாய் வெட்டவேண்டும். உள்ளே இறங்கினால்தான் ஆச்சு என்ற ‘கிரிட்டிகல்‘ நிலையில் இருக்கிற குடிமகன்கள், இந்த நூறு, இருநூறுக்கெல்லாமா கணக்குப் பார்க்கப் போகிறார்கள்? மக்கள் அதிகம் புழங்குகிற இடத்தில் பார் நடத்துபவர், இதுமாதிரி ‘டபுள்‘ ரேட் விற்பனை மூலம் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார் என டாஸ்மாக் ஊழியர்கள் சிலரே கூறும் போது நம்மால் நம்பாமல் இருக்க முடியவில்லை.
இதுபோன்ற ஓட்டைகளை அடைத்தாலே போதும். வெளியே வீணாகிக் கொண்டிருக்கிற வருவாய், நேராக அரசின் கஜானாவுக்கு வந்து சேரும். மற்றபடி, வருவாயை கூட்டுகிறேன் என்ற பெயரில் கோயில்கள், பள்ளிக்கூடங்களுக்கு முன் கடை திறப்பதெல்லாம், இருக்கிற நிம்மதியையும் பிடுங்கிற செயலல்லாமல் வேறென்ன...?
சரக்கு ஓரிடம்... பில் வேறிடம்
டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கும் என்ற நிலையில், 9 மணிக்கே 'குடிமகன்கள்' கடை முன் ஆஜராகிவிடுகின்றனர். குடிமகன்கள் ரூ. 100 எடுத்துவருவதால் 'சில்லரை இல்லை' என்று கூறி கடை ஊழியர்கள் ரூ. 1 முதல் 2 வரை கமிஷன் அடிக்க தொடங்குகின்றனர். மாலை வேலைகளில் திருவிழா போல் கூட்டம் கூடுவதால் கமிஷன் தொகை எகிறுகிறது.
கடைகளில் 'எலக்ட்ரானிக் பில் சிஸ்டம்' இருந்தும் கடை ஊழியர்கள் அதை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இதனாலும், அரசுக்கு பல லட்சம் வீணாகிறது. இதை சரிசெய்ய தலைநகர் டெல்லியில் இருப்பது போல், முதலில் ஒரு இடத்தில் ரசீதை (பில்) பெற்றுக் கொண்டு இன்னொரு இடத்தில் 'சரக்கை' பெற்றுக் கொள்ளலாம்.
லட்சம் முதலீடு... வசூல் கோடி...
டாஸ்மாக் பார்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சிறிய கடைக்கு ரூ. 25 ஆயிரம், பெரிய கடைக்கு ரூ. 3 லட்சம் என்று ஏலத் தொகை வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்கள், உணவு வகைகள், மதுபானங்களுக்கு கூடுதல் கட்டணம், வெளியில் நிறுத்தும் வாகனங்களுக்கு ரசீது இல்லாமல் கட்டணம் வசூலிப்பது, ஏ.சி. அறைக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ. 30, இரவு ஒருமணி நேரம் கூடுதலாக கடையை திறந்து வைப்பது உட்பட பலவகையில் பணம் கொட்டுகிறது. குறிப்பாக, உணவு வகையில் 'பகல் கொள்ளை' நடப்பதை அட்டவணையில் பார்க்கலாம்.
பாரில் இருந்து... பள்ளிக்கு
தமிழக டாஸ்மாக் பார்களில் பணிபுரியும் ஊழியர்களில் ஆயிரத்து 115 பேர் பி.எட்., பட்டதாரிகள் என்பது, மது குடிக்காமலே கிறங்கடிக்கச் செய்கிற ஒரு செய்தி.
கிராமப்புறங்களில் உள்ள 90 சதவீதம் பள்ளிகள் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. படிப்பை முடித்து விட்டு, குடிமகன்களை கும்மாளப்படுத்துகிற பணியில் ஈடுபட்டிருக்கிற இளைஞர்கள் மீது தமிழக அரசு உடனடி கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
கேவலப்படும் ‘குடிமகன்கள்’
ஓட்டலில் 10 ரூபாய்க்கு இட்லி சாப்பிடச் சென்றால் கூட தேங்காய் சட்னி, மிளகாய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என்று எக்கச்சக்க கவனிப்புகள். நூறு நூறாய் அள்ளி வீசும் டாஸ்மாக் பார்களில் கவனிப்பு எந்தளவுக்கு இருக்கவேண்டும்? ஆனால், துரதிர்ஷ்டவசமாக படு கேவலமான உபசரிப்பே அங்கு வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. டேபிள்கள் துடைக்கப்படாமல் அலங்கோலமாக இருக்கும். ஜன்னலிலோ, சுவற்றிலோ கையை வைத்து விடமுடியாது. குடிமகன்கள் இருமி, துப்பி நாசக்கேடு செய்திருப்பார்கள்.
உலகின் மிக மோசமான நச்சுக்கிருமி பரப்புகிற இடம் போல கழிவறைகள் காட்சியளிக்கும். அங்கிருந்து கிளம்புகிற ‘கப்பு‘ வாசனையை ‘அனுபவித்தவாறு‘தான் சரக்கு குடிக்கவேண்டும். சைட்&டிஷ் என்ற பெயரில் வழங்கப்படுகிற தண்ணீர் பாக்கெட் துவங்கி, ஆம்லேட், பொறியல் வரை அத்தனையும் காலாவதி தேதியை கடந்தவையாக இருக்கும். டாஸ்மாக் பார்களுக்கு தொடர்ச்சியாக சென்றும் கூட மாபெரும் தொற்று வியாதிகளுக்கு ஒருவர் ஆட்படாமல் இருக்கிறார் என்றால்... அவர், மிகப்பெரிய புண்ணியம் செய்தவராகத்தான் இருக்கவேண்டும்!
பலியாகும் பள்ளிச் சிறுவர்கள்...
18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே 'குடிமகன்களாக' மாற அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சீருடை அணிந்த பள்ளிச் சிறுவர்கள் எவ்வித தயக்கமின்றி மதுபானங்களை வாங்கிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. செயின் பறிப்பவர்களில் சிலர் பள்ளி, கல்லூரி மாணவர்களே என்று போலீஸ் விசாரனையில் தெரிய வந்துள்ளது.
டாஸ்மாக் கடையில் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், ஒயின், பீர் ஆகிய வகைகள் உள்ளன. பீர் அதிக அளவில் விள்பனையாகிறது. மற்ற எல்லா ரகத்திலும் 'குவாட்டர்' மட்டுமே அசுர விற்பனையாகிறது. எனவேதான் குவாட்டரில் அதிக கலப்படம் செய்யப்படுகிறது. அதோடு, போலி சரக்குகளும் குவாட்டரில் மட்டுமே கிடைக்கும். போலி மதுபானங்களில் மட்டுமே கட்டிங் (60, 30) வழங்கப்படுகிறது.
மதுபானங்களின் விலைப் பட்டியல் வருமாறு:
மதுபானம் // குவாட்டர் // ஆப் // புல்
விஸ்கி ரூ. 60-140 // 120-180 // 220-1112
பிராந்தி ரூ.60-140 // 120-180 // 220-1112
ரம் ரூ. 60-140 120-180 220-1112
ஓட்கா ரூ.70-90 140-180 280-360
ஜின் ரூ. 55-90 110-180 220-360
ஒயின் ரூ. 55 110 220
பீர் ரூ. 60-80
விலைப் பட்டியல்
வகைகள் வெளியே டாஸ்மாக்
தண்ணி பாக்கெட் ரூ. 1 ரூ 3.50
வாட்டர் பாட்டில் ரூ. 15 ரூ. 25
சிகரெட் ரூ. 35 ரூ. 50
பிளாஸ்டிக் டம்ளர் ரூ. 1 ரூ. 3.50
கூல் டிரிங்ஸ் ரூ. 10 ரூ. 20
சுண்டல் ரூ. 5 ரூ. 12
சிப்ஸ் ரூ. 2 ரூ. 10
முட்டை பொடிமாஸ் ரூ. 5 ரூ. 15
ஆம்லேட் ரூ. 8 ரூ. 16
உருளை பிங்கர் சிப்ஸ் ரூ. 10 ரூ. 25
மீன் 1 ரூ. 10 ரூ. 25
சிக்கன் ஒரு பிளேட் ரூ. 25 ரூ. 50
பீப் (மாட்டிறைச்சி) ரூ. 15 ரூ. 40
-- தினகரன்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஜாஹீதாபானு wrote:உங்களைப்போல உள்ளவங்க இருந்தா பணம் குவியத்தானே செய்யும்
எப்படியாயினும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவறோமா இல்லையா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
டாஸ்மாக் மதுபான கடைகளில் திடீர் விலையேற்றத்தை மதியம் அமல்படுத்தியதால் விற்பனையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் முதல் சரக்குகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குவாட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு 10 ரூபாயும், முழு பாட்டிலுக்கு 20 ரூபாய் வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக விலையேற்றத்தை இரவு 10 மணிக்கு அறிவித்து மறுநாள் காலையில் இருந்து புதிய விலை அமல்படுத்தப்படும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் புதிய விலை பிற்பகல் 4 மணிக்கு பேக்ஸ் மூலம் தெரியப்படுத்தப்பட்டது.
காலையில் ஏற்கனவே விற்ற சரக்குகளுக்கும் புதிய விலையிலேயே கணக்கு தரும்படி மாவட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 500 பாட்டில் விற்பனை செய்து, புதிய விலையில் கணக்கு கொடுத்தால் 2 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றார்கள்.
இதனால் இரவில் விலையேற்றத்தை விடவும் அதிக விலைக்கு சரக்கு விற்கப்பட்டது. இதனால் குடிமக்கள் அவதியுற்றனர்.
நன்றி நக்கீரன்
ராம்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் முதல் சரக்குகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குவாட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு 10 ரூபாயும், முழு பாட்டிலுக்கு 20 ரூபாய் வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக விலையேற்றத்தை இரவு 10 மணிக்கு அறிவித்து மறுநாள் காலையில் இருந்து புதிய விலை அமல்படுத்தப்படும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் புதிய விலை பிற்பகல் 4 மணிக்கு பேக்ஸ் மூலம் தெரியப்படுத்தப்பட்டது.
காலையில் ஏற்கனவே விற்ற சரக்குகளுக்கும் புதிய விலையிலேயே கணக்கு தரும்படி மாவட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 500 பாட்டில் விற்பனை செய்து, புதிய விலையில் கணக்கு கொடுத்தால் 2 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றார்கள்.
இதனால் இரவில் விலையேற்றத்தை விடவும் அதிக விலைக்கு சரக்கு விற்கப்பட்டது. இதனால் குடிமக்கள் அவதியுற்றனர்.
நன்றி நக்கீரன்
ராம்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ரொம்ப முட்டிக்காதீங்க.... நான் "குடிமகன்" அல்ல .. O K வா
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
» பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை
» பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்
» பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது
» டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்!
» பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் : அமைச்சரின் சர்ச்சை கருத்து!!
» பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்
» பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது
» டாஸ்மாக் வசூல் பணம் 80 லட்சம் அபேஸ்: கொள்ளையர்களின் தந்திரத்தை பாருங்கள்!
» பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் : அமைச்சரின் சர்ச்சை கருத்து!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|