புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?  Poll_c10ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?  Poll_m10ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?  Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?  Poll_c10ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?  Poll_m10ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?  Poll_c10ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?  Poll_m10ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?


   
   

Page 1 of 2 1, 2  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 08, 2011 1:35 pm

ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?  Pmoffice


புது டெல்லியில் பிரதமர் அலுவலகம்


பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், கிரிக்கெட் துறை, மன்னிக்கவும்... உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் மற்றும் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் எம். எஸ். அலுவாலியா ஆகியோர் ஐ.பி.எல். லில் விலை போகாத கிரிக்கெட் வீரர்கள் போல சோகமாக உட்கார்ந்திருக்கின்றனர்.

பிரதமர்: எல்லாரும் வந்திட்டீங்களா? மீட்டிங் ஆரம்பிக்கலாமா?

சரத் பவார்: சார், டாஸ் போட வேண்டாமா?

பிரதமர்: ஹலோ, இது கேபினெட் மீட்டிங்! மறந்திட்டீங்களா? எல்லாரும் அவங்கவங்க செல்போனை சுவிட்ச் ஆஃப் பண்ணுங்க!

ப. சிதம்பரம்: சார் சார், தெலுங்கானா கலவரம் ரன்னிங் கமெண்டரி வரும். நான் மட்டும் செல்போனை சைலென்ட் மோட்லே வச்சுக்கட்டுமா?

பிரணாப் முகர்ஜி: சார் சார், கொல்கத்தாவுலே புத்ததேவ் பட்டாச்சாரியாவோ, மமதாவோ ஏதாவது ஸ்டேட்மெண்ட் விடுவாங்கண்ணு தோணுது.. நானும் சைலென்ட் மோட்லே வச்சுக்கட்டுமா?

சரத் பவார்: சார், இன்னிக்கு அடுத்த உலகக்கோப்பை விசயமா சில தீர்மானங்களை ஐ.சி.சி. முடிவு பண்ணப் போறாங்க...! நானும் சைலென்ட் மோட்லே வச்சுக்கட்டுமா?

பிரதமர்: சரியாப் போச்சு! அப்படீன்னா என்னோட போனையும் சைலென்ட் மோட்லே வச்சுக்கட்டுமா?

எம். எஸ். அலுவாலியா : நீங்களே பல வருசமா சைலென்ட் மோட்லேதானே இருக்கீங்க! மீட்டிங்கை ஆரம்பிங்க சார்!

பிரதமர்: சரி, மிஸ்டர் பவார்! என்னது விலைவாசியெல்லாம் இப்படி சகட்டு மேனிக்கு ஏறியிருக்குது!

சரத் பவார்: ஆமா சார்! கௌதம் கம்பீருக்கே 2.4 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்துத்தான் வாங்கினோம். இந்த நியூசீலாந்துலே நேதன் மெக்கல்லமுன்னு ஒரு கிளிமூக்கன், அந்தாளுக்கே ஒரு லட்சம் அமெரிக்கன் டாலர் கொடுக்க வேண்டியதாப்போச்சு!

பிரதமர்: ஐயா சாமி! பவார்! இந்த எளவெடுத்த கிரிக்கெட்டைப் பத்தி எவன்யா கேட்டான்? நீங்க உணவு அமைச்சர் தானே? விலைவாசியெல்லாம் இப்படி ஏறியிருக்குதே? இதுக்கு என்ன பண்ணினீங்க?

சரத் பவார்:
என்ன சார் நீங்க? சோனியா காந்தி மேடமே விலைவாசியைக் குறைக்கிறதெல்லாம் மாநில அரசோட வேலைன்னு சொல்லிட்டாங்க. நீங்க புதுசாக் கேக்கறீங்களே?

பிரதமர்: மேடமே அப்படிச் சொல்லிட்டாங்களா? இதை முதல்லேயே சொல்லியிருந்தா இப்படியொரு மீட்டிங்கே போட்டிருக்க வேண்டாமில்லே? எத்தனை பிளேட் சமோசா வேஸ்டு? எல்லாம் மக்களோட வரிப்பணமில்லையா?

ப. சிதம்பரம்: பேசாம விலைவாசியைக் கட்டுப்படுத்தியே தீரணும்னு எல்லா முதலமைச்சர்களுக்கும் ஒரு லெட்டர் போட்டிரலாம். அவங்களுக்கு அனுப்புறதுக்கு முன்னாலே அதை எல்லா டி.வி. சேனலுக்கும் கொடுத்திருவோம். அப்பத்தான் நம்மளை விரைந்து செயல்படுற அரசுன்னு சொல்லுவாங்க!

பிரதமர்: யாருய்யா குறட்டை விடுறது? மிஸ்டர் அலுவாலியா! எழுந்திருங்க!

எம். எஸ். அலுவாலியா: இன்ஃப்ளேஷன்... க்ராஸ் டொமஸ்டிக் ப்ராடக்ட்... மைக்ரோ எகணாமிக்ஸ்... மேக்ரோ எகணாமிக்ஸ்... ஹிஸ்டரி... ஜ்யாகிரபி... நாண்டீட்டைல்ட்...!

பிரணாப் முகர்ஜி: ஹலோ, நாங்கெல்லாம் இருக்கும்போது நீங்கல்லாம் ஓவர்-ஆக்டிங் பண்ணப்படாது.

பிரதமர்: மிஸ்டர் பவார், உங்க டிப்பார்ட்மென்டு தான் பெரிய தலைவலியா இருக்குது! போன வருசம் என்னான்னா, கோதுமையை வைக்க இடமில்லாம ரோட்டுலே கொட்டி மக்கிப்போச்சு! இந்த வருசமாவது இடத்தையெல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா?

சரத் பவார்: ஆமா சார், பூனேயிலே பாதியை எங்க கட்சி ஆளுங்க வளைச்சுப்போட்டுட்டாங்க!

பிரதமர்: அதை யாரு கேட்டாங்க? நான் சொல்லுறது கோடவுன் பத்தி!

சரத் பவார்: உங்களுக்கு விஷயமே தெரியாதா சார்? எங்க ஊருலே மொத்த வெங்காயத்தையும் பதுக்கி வைக்கிற அளவுக்கு அத்தனை கோடவுன் இருக்குது சார்!

பிரணாப் முகர்ஜி: ஆமா சார், நாங்க கூட வருமானவரிக்காரங்களை அனுப்பி வெங்காய மண்டியிலே ரெய்டெல்லாம் பண்ணினோம். இனி தக்காளி ரெய்டு, அதுக்கடுத்து வெண்டைக்காய் ரெய்டு, அப்புறம் முள்ளங்கி ரெய்டு... இப்படி ரெய்டு மேலே ரெய்டு பண்ணினா விலைவாசி குறைஞ்சிடும் சார்!

ப. சிதம்பரம்:
உங்களுக்கு ஆளு பத்தலேன்னா சொல்லுங்க! எங்க சி.பி.ஐ. கூட ரெண்டு நாளா சும்மாத்தானிருக்காங்க! பேச்சுத்துணைக்கு அனுப்பி வைக்கிறேன்.

சரத் பவார்: அதெல்லாம் விடுங்க சார்! ஜனங்களோட கவனத்தைத் திசைதிருப்ப நான் ஒரு சூப்பர் ஐடியா வச்சிருக்கேன். ஐ.பி.எல் மாதிரியே வி.பி.எல், அதாவது வெஜிடபிள் ப்ரீமியர் லீக்-னு ஒண்ணு ஆரம்பிக்கப்போறோம். அதுலே சென்னை கேபேஜ், டெல்லி டிரம்ஸ்டிக்ஸ், கொல்கத்தா கோரியாண்டர் லீவ்ஸ், பெங்களூர் பிரிஞ்சால்ஸ், கொச்சி கோக்கனட்ஸ்-னு நிறைய டீம் உருவாக்கி, இன்னும் நிறைய கிரிக்கெட் ப்ளேயருங்களை ஏலத்துலே எடுத்து அட்டகாசமா ஒரு டூர்ணமெண்ட் நடத்தினாப்போதும். ஜனங்க எல்லாத்தையும் மறந்திருவாங்க!

பிரதமர்: இப்படியே பேசிட்டிருங்க! பால் தாக்கரே கூட ஒண்ணும் சொல்லலியே? என்ன பிரச்சினை? மக்களுக்கு என்ன சொல்லப்போறீங்க?

ப. சிதம்பரம்: நான் வேண்ணா, விலைவாசிக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-ன் சதித்திட்டம்தான் காரணம்-ன்னு ஒரு அறிக்கை விடட்டுமா?

எம். எஸ். அலுவாலியா: சார், எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!

பிரதமர்: தூங்குவீங்கய்யா தூங்குவீங்க! அடுத்தவாட்டி உங்களை பிரதமராக்க சொல்றேன். அப்புறம் எப்படிப் பொருளாதாரம் பேசுறீங்கன்னு பார்க்கிறேன்.

ப. சிதம்பரம்: சார், ஜெயலலிதா என்னைப் பதவி விலக சொல்லி அறிக்கையெல்லாம் விடராங்க... நான் உடனே போயி அவங்களுக்கு எதாவது ஆப்பு வைக்க முடியுமான்னு யோசிக்கணும். (எழுந்து செல்கிறார்)

பிரதமர்: மிஸ்டர் பவார்! ஏதாவது நல்ல செய்தியா சொல்லுங்க! எப்படி விலைவாசியைக் கட்டுப்படுத்தப் போறீங்க? எதிர்க்கட்சிக்காரங்க ரொம்ப கூச்சல் போடுறாங்களே?

சரத் பவார்: ஏன் கூச்சல் போடுறாங்க? விலைவாசியெல்லாம் அப்படியொண்ணும் ஏறலே தெரியுமா? சொல்றேன் கேளுங்க...! ஒரு டீயோட விலை ஒரு ரூபாய்!

பிரதமர்: நெஜமாவா?

பிரணாப் முகர்ஜி: ஆமா சார், ஒரு சூப் ரூபாய் 5.50, ஒரு சைவச் சாப்பாடு ரூபாய். 12.50, அசைவச் சாப்பாடு ரூபாய். 22.00!

பிரதமர்: என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே? உண்மையாவா?

சரத் பவார்: அட ஆமா சார், தயிர் சாதம் ரூ. 11.00, கலந்த சாதம் ரூ. 8.00, சிக்கன் பிரியாணி ரூ. 34.00, மீன்கறி சோறு ரூ. 13.00!

பிரதமர்: அலுவாலியா! இவங்க சொல்றது உண்மையா?

எம். எஸ். அலுவாலியா: ஆமா சார்!

சரத் பவார்: தக்காளி சாதம் ரூ. 7.00.

பிரணாப் முகர்ஜி: மீன் வறுவல் ரூ. 17.00

சரத் பவார்: கோழி வறுவல் ரூ. 20.50

பிரணாப் முகர்ஜி: கோழி மசாலா ரூ. 24.50

சரத் பவார்: சப்பாத்தி ஒரு ரூபாய்!

பிரணாப் முகர்ஜி: அரிசிச்சோறு ரெண்டு ரூபாய்!

பிரதமர்: யோவ், என்னய்யா ஆச்சு உங்களுக்கு? நல்லாத்தானே இருந்தீங்க??

எம். எஸ். அலுவாலியா: தோசை நாலு ரூபாய், பாயாசம் ரூ. 5.50!

பிரதமர்: நீங்களுமா சர்தார்ஜீ........?

எம். எஸ். அலுவாலியா: சார், அவங்க சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மை. உண்மையிலே இதுக்கெல்லாம் இவ்வளவு தான் விலை!

சரத் பவார்: சொன்னா நம்ப மாட்டேன்னீங்களே? இப்போ திருப்தியா? அப்படீன்னா நான் லண்டனுக்குக் கிளம்பறேன். கிரிக்கெட் வேர்ல்டு கப்பு குறித்த மீட்டிங் இருக்கு... தலைக்கு மேலே வேலையிருக்கு! (கிளம்புகிறார்!)

பிரணாப் முகர்ஜி: நானும் கிளம்பறேன் சார், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட்1-ந்தேதி தொடங்குது. நிறைய டூப்பு விடணும். வரட்டுமா? (கிளம்புகிறார்)

பிரதமர்: சே, சப்பாத்தி ஒரு ரூபாயா? இவ்வளவு மலிவா கிடைக்கும்போது ஏன்யா எதிர்க்கட்சிக்காரங்க இப்படிக் குதிக்கிறாங்க?

எம். எஸ். அலுவாலியா: கிடைக்குறது என்னவோ உண்மைதான். எங்கேன்னு கேக்கலியே நீங்க?

பிரதமர்: எங்கே?

எம். எஸ். அலுவாலியா: பாராளுமன்ற கேன்டீன்-லே, மாசம் ஒரு இலட்சம் ரூபாய் வரை சம்பளமும், அலவன்சும் வாங்குற நம்ம எம்.பிக்களுக்குத் தான் இதெல்லாம் இந்த விலையிலே கிடைக்குது.

பிரதமர்: ஐயையோ! போனவங்களையெல்லாம் திருப்பிக் கூப்பிடுங்கய்யா! மீட்டிங் இன்னும் முடியலே...

ஹலோ, அப்ப... நாளைக்கு லஞ்ச் பாராளுமன்றத்திலே வச்சுக்கலாமா?

ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?  Steakhousemenupricepage





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 08, 2011 1:51 pm

நல்ல நகைச்சுவை.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 08, 2011 1:58 pm

மகா பிரபு wrote:நல்ல நகைச்சுவை.

இது ஒரு வெட்கப்படவேண்டிய விஷயம் நண்பரே ...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 2:07 pm

மக்களிடத்தில் அக்கறை இல்லாமல் இருப்பவர்களை செருப்பால் அடித்து திரும்பி பார்க்க வைக்கும் பதிவு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Fri Jul 08, 2011 4:17 pm

பிரதமர்: மிஸ்டர் பவார், உங்க டிப்பார்ட்மென்டு தான் பெரிய தலைவலியா இருக்குது! போன வருசம் என்னான்னா, கோதுமையை வைக்க இடமில்லாம ரோட்டுலே கொட்டி மக்கிப்போச்சு! இந்த வருசமாவது இடத்தையெல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா?

-----யோசிக்க வேண்டிய விஷயம்.


ப. சிதம்பரம்: உங்களுக்கு ஆளு பத்தலேன்னா சொல்லுங்க! எங்க சி.பி.ஐ. கூட ரெண்டு நாளா சும்மாத்தானிருக்காங்க! பேச்சுத்துணைக்கு அனுப்பி வைக்கிறேன்.

-------உண்மை


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 09, 2011 1:13 pm

கோபி சதீஷ் wrote:பிரதமர்: மிஸ்டர் பவார், உங்க டிப்பார்ட்மென்டு தான் பெரிய தலைவலியா இருக்குது! போன வருசம் என்னான்னா, கோதுமையை வைக்க இடமில்லாம ரோட்டுலே கொட்டி மக்கிப்போச்சு! இந்த வருசமாவது இடத்தையெல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா?

-----யோசிக்க வேண்டிய விஷயம்.


ப. சிதம்பரம்: உங்களுக்கு ஆளு பத்தலேன்னா சொல்லுங்க! எங்க சி.பி.ஐ. கூட ரெண்டு நாளா சும்மாத்தானிருக்காங்க! பேச்சுத்துணைக்கு அனுப்பி வைக்கிறேன்.

-------உண்மை

நன்றி கோபி... ஒரு மாற்றம் வரும் என எண்ணுவோம்!!!!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 26, 2011 12:04 pm

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 26, 2011 12:47 pm

நகைச்சுவையாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய விடயம்.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 26, 2011 12:58 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 26, 2011 1:16 pm

நன்றி ப்ளடி பெக்கர், தாமு, ஸ்ரீஜா !!!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக