புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிவின் மூலம் Poll_c10அறிவின் மூலம் Poll_m10அறிவின் மூலம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
அறிவின் மூலம் Poll_c10அறிவின் மூலம் Poll_m10அறிவின் மூலம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அறிவின் மூலம் Poll_c10அறிவின் மூலம் Poll_m10அறிவின் மூலம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
அறிவின் மூலம் Poll_c10அறிவின் மூலம் Poll_m10அறிவின் மூலம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவின் மூலம் Poll_c10அறிவின் மூலம் Poll_m10அறிவின் மூலம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
அறிவின் மூலம் Poll_c10அறிவின் மூலம் Poll_m10அறிவின் மூலம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அறிவின் மூலம் Poll_c10அறிவின் மூலம் Poll_m10அறிவின் மூலம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
அறிவின் மூலம் Poll_c10அறிவின் மூலம் Poll_m10அறிவின் மூலம் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவின் மூலம்


   
   
cortext
cortext
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 03/02/2011

Postcortext Mon 6 Jun 2011 - 21:46

எந்த ஒன்றையும் வடிவமைப்பதற்கான அல்லது தீர்வு காண்பதற்கான எளிய அடிப்படை
வழிமுறை, சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறை (Random Process). அதாவது
எதேச்சையாக நிகழும் வடிவமைப்பு. இது குலுக்குச் சீட்டில் வெற்றி பெருவது
போன்றது. இது சில செங்கற்களை தரையில் தூக்கி எறிந்து ஒன்றன்-மேல்-ஒன்றாக
அமைந்த கோபுரத்தை உருவாக்குவது போன்றது. இவற்றை பலமுறை தொடர்ந்து திரும்ப,
திரும்ப செய்தால் ஒருமுறை அது நிகழலாம். இது பல்வேறு வடிவங்கள்
மேகக்கூட்டத்தில் உருவாகுவது போன்றது. பல்வேறு காரணிகளை...கட்டுபாடுகளை
பொருத்து, அதன் வாய்ப்பு விகிதம் (நிகழ்தகவு) மிகக் குறைவான அளவிலிருந்து
மிக அதிகமாக அளவுவரை இருக்கலாம் – அதாவது முற்றிலும் சீரற்றோ (Random)
அல்லது வெகுவாக தீர்மானிக்கக் கூடுமாறோ (Determined) இருக்கலாம்.

கார்பன்
அணுக்கள் இணைந்து வைரமாக உருவாக மிகவும் ஏற்ற தட்பவெப்பநிலை, அழுத்தம் என
பல்வேறு காரணிகள் வேண்டும். இப்படிப் பட்ட சூழ்நிலை அமைவது எவ்வளவு அரிது
என்றாலும், இந்த பரந்த அண்டவெளியில், இந்த நீண்ட அண்ட காலவெளியில், எங்கோ
எப்பொழுதுதோ இந்த சூழ்நிலை ஏற்படலாம். அப்படியே, நாம் வைரத்தை இந்த
உலகத்தில் காண்கின்றோம். அப்படியே, உலகத்தில் உள்ள அனைத்தும் உருவாகி
இருக்க வேண்டும். அப்படியே, முதல் மரபணு (DNA) மூலக்கூறும் உருவாகி இருக்க
வேண்டும் (அது இன்றுள்ள மரபணுவை விட பலமடங்கு எளிமையாக இருந்திருக்க
வேண்டும்). ஆனால், இந்த உலகத்தில் உள்ள அனைத்து வடிவமைப்புகளும்,
சாத்தியமாகக் கூடிய கணக்கற்றவைகளில் ஒரு சிறு பகுதியே!

மரபணு-மூலக்கூறின்
முக்கியத்துவம், அது உயிர்களின் வடிவமைப்பு மாதிரிகளை குறியீடுகளாக
வைத்திருப்பதில் இருக்கின்றது. அது நகல்கள் (இனப்பெருக்கம்) எடுக்கப்படும்
போது, அதன் மரபணு-குறியீடுகள் பெரும்பாலும் அடுத்த தலைமுறைக்கு சென்றாலும்,
ஒரு சில முறையற்ற, சீரற்ற பிழைகள் (மரபு-பிழைகள்) நிகழலாம். பெரும்பாலான
பிழைகள் ஏற்றவையாக இல்லாது மடிந்து போனாலும், அரிதாக ஒரு சில பிழைகள்
சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கலாம். அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு
செல்லும். இவ்வாறு பல கோடி வருடங்களாக, சுற்றுச்சூழலுக்கு தகுந்த
வடிவமைப்புகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து உருவானவையே பாக்டீரியா, மீன்கள்,
தாவரங்கள் முதல் மனிதன் உட்பட அனைத்து விலங்குகள் வரை. இதை பரிணாமம்
(Evolution) என்கின்றோம்.

பரிணாமத்திலும்
சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறையே அடிப்படையில் புதிய வடிவமைப்பு
வெளிப்படும் முறை. ஆனால் வெளிப்பட்ட, தேர்ந்த வடிவமைப்புகள் மரபணு
குறியீடுகளாக சேமித்து வைக்கப்படுகின்றன. மேலும் தேர்ந்த வடிவமைப்பு
தகவல்கள் மற்றவைகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. பகிர்தல் பொதுவாக
பாலினப் பெருக்கத்தில் ஏற்படுகின்றது. இது நல்ல மரபணுக்கள் மக்கள்தொகையில்
பரவவும், கெட்ட மரபணுக்களை களை எடுக்கவும் உதவுகின்றது. இது விலங்குகள்
போன்ற சிக்கலான மேம்பட்ட உயிரினங்கள் மற்றும் அவற்றின் மூளை போன்ற
நுட்பமிக்க உருப்புகள் பரிணாம வளர்ச்சி அடைய முக்கிய காரணமாகின்றது.

தகல்களை
சேமித்தல் மற்றும் பகிர்தல் என்பது கற்றலின் அடிப்படை பண்புகள்.
உயிர்களின் பரிணாமத்தை கூர்ந்து நோக்கினால் கற்றலின் அடிப்படை செயல்முறையை
அறிந்து கொள்ள முடியும். அதிலுள்ள முக்கிய அடிப்படை படிகள்:

  • உருவாக்குதல்:
    தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற வடிவமைப்புகள் தொடர்ந்து உருவாகுதல்.
    இது இனப்பெருக்கம் மற்றும் அதன் மரபு-பிழைகளால் ஏற்படுகின்றது.
  • தேர்ந்தெடுத்தல்: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வடிவமைப்புகள் மட்டுமே பிழைக்கின்றன. இதை இயற்கை-தேர்வு-முறை (Natural Selection Process) என்கின்றோம்.
  • சேமித்தல்: தேர்ந்தெடுத்த வடிவமைப்புகள் மரபணு-மூலக்கூறில் மரபணு குறியீடுகளாக (Genes) சேமிக்கப்படுகின்றது.
  • பகிர்தல்:
    தேர்ந்த வடிவமைப்புகளை மற்றவற்றுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. இது
    பொதுவாக பாலினப் பெருக்கத்தில் ஏற்படுகின்றது (மற்ற சில வழிகளும் உண்டு)
அடிப்படையில்
இந்த படிகளை உருவகப்படுத்தியே மூளையும் கற்று கொள்கின்றது. ஆனால்,
பரிணாமத்தை ஒப்பிடும் போது, மூளைக்கு பல மேன்பாடுகள் உண்டு. இனப்பெருக்கம்,
அதனால் ஏற்படும் மரபுபிழைகளை கொண்டு தேர்ந்த வடிவமைப்புகள் வெளிப்பட
ஆயிரமாயிர தலைமுறைகள் தேவை. அதனால் பரிணாம வளர்ச்சிக்கு நீண்ட நெடிய காலம்
தேவைப்படுகின்றது. இதை ஒப்பிடும் போது, தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற
வடிவமைப்புகளை மூளை பல மடங்கு அதிவேகமாக உருவாக்க முடியும். மேலும்
மரபணு-மூலக்கூறை ஒப்பிடும் போது, மூளையின் சேமிக்கும் திறன் பலமடங்கு
அதிகமானது, நுட்பமானது.

வேதி-அயனிகளை (மின்னூட்டணுக்கள்)
செய்திகளாக/குறிப்பலைகளாக கடத்தி, நரம்பணு-வலைச்சுற்றுக்களை பொருத்து
பகுத்தாய்ந்து மூளை வேலை செய்கின்றது. பரிணாம வளர்ச்சியில் வடிவமைக்கப்பட்ட
சில நரம்பணு-வலைச்சுற்றுக்கள் பிறக்கும் போதே மரபணுக்களை கொண்டு
வடிவமைக்கப்படுகின்றது. மற்றவற்றை அனுபவத்தின்/கற்றலின் மூலம் மூளை
வடிவமைக்கின்றது. மூளை கற்கும் வழிமுறையை, குழந்தைகள் எப்படி நடக்க
கற்றுக்கொள்கின்றனர் என்பதை பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

  • உருவாக்குதல்:
    இது குழந்தை பல்வேறு விதமாக நடக்க முயலும் பயிற்சியால் ஏற்படுகின்றது.
    ஒவ்வொரு விதமும் வெவ்வேறு தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற
    நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகளை குறிக்கின்றது.
  • தேர்ந்தெடுத்தல்:
    எந்த விதம், அதாவது எந்த நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகள் தகுந்த விளைவுகளை
    தருகின்றதோ அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இது புலன்கள் மூலம் பெறப்படும்
    செய்திகளை (உணர்வுகள்) ஒப்பிட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இங்கு
    சமன்நிலை-உணர்வான, காதினுள்ளே உள்ள திரவத்தின் நிலையை கொண்டு அறியும்
    உணர்வு முக்கியமானது; பார்வை உணர்வும் முக்கியமானது. ஆனால், புலன்
    செய்திகளையும் உணர்ந்து கொள்வதும், எந்த புலன் செய்திகள் ஒரு விசயத்திற்கு
    பொருத்தமானவை என்பதை உணர்ந்து கொள்வதும் கற்றலின் பகுதிகளே.
  • சேமித்தல்:
    தேர்ந்தெடுக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகள் மூளையில் நினைவகமாக
    சேமிக்கப்பட்டு தொடர்ந்து மேலும், மேலும் சரி செய்யப்படுகின்றது மற்றும்
    விரிவு படுத்தப்படுகின்றது.
  • பகிர்தல்:
    பெற்றோர்கள்/பெரியவர்கள் குழந்தைக்கு நடக்க கற்று கொடுப்பது; உதவி
    செய்வது. குழந்தை அடுத்தவர்களை பார்த்து முயற்சிப்பது; கற்றுக் கொள்வது;
    இவ்வாறு ஏற்கனவே கற்றவை, கற்ற முறை, குழந்தையுடன் பகிர்ந்து
    கொள்ளப்படுகின்றது.
பிறக்கும் போதே குழந்தையின் மூளை தேர்ச்சி
அடையாத சில நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகளோடு இருக்கும். இதைக்
கொண்டு, குழந்தை பல்வேறு விதமாக நடக்க முயலும் போது நிகழும் சில எதேச்சையான
சமன்நிலை பெற உதவிய நரம்பணு-வலைச்சுற்று தொடர்புகள் மேலும்
வலிமைப்படுத்தப்படும்; மற்ற தொடர்புகளின் வலிமை மேலும் குறைக்கப்படும்.
இவ்வாறு நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகள் மேலும் சரிசெய்யப்பட்டு
விரிவுபடுத்தப்படும். இதை உடனடியான/நேரடியான கற்றல் (Online Learning)
எனலாம். இதைத் தவிர, குழந்தை முயன்ற ஒவ்வொரு நிலைகளையும் (கால்கள், கைகள்,
உடல் போன்றவற்றின் தசைகளை கட்டுப்படுத்தும் செய்திகள்), அதற்கான புலன்
செய்திகளையும், மூளை ஒரு தற்காலிக இடத்தில் “சோதனைச்-செய்திகளாக” சேமித்து
வைத்துக் கொள்ளலாம். உடல் ஓய்வெடுக்கும் போது, அதாவது தூங்கும் போது, இந்த
சோதனைச்-செய்திகளை கொண்டு நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகளை பல்வேறு
விதமாக பலமுறை மாற்றி அமைத்து எப்படிப்பட்ட வலைச்சுற்றுகள் தகுந்த
விளைவுகளை கொடுக்கின்றது என சோதித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு முறையிலும்,
படிப்படியாக நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகள் மேலும் சரிசெய்யப்பட்டு
விரிவுபடுத்தப்படும். இதை பிற்பாடு/மறைமுக கற்றல் (Offline Learning)
எனலாம். இது தூக்கத்தின்
ஒரு முக்கிய செயல்பாடாக இருக்க வேண்டும். குழந்தை நன்றாக, சகஜமாக நடக்க,
இந்த செயல்முறை ஒவ்வொரு நாளும் வருடக்கணக்கில் தொடர வேண்டும். மேலும்,
இதில் பெற்றோர்கள்/பெரியவர்கள் குழந்தைக்கு தரும் தூண்டுதல்,
உற்சாகமூட்டல், மேற்பார்வை, உதவி போன்றவை மற்றொரு முக்கிய பகுதி. இவையின்றி
குழந்தையின் வளர்ச்சி என்றென்றைக்கும் முடமாகி போகலாம்.

வடிவமைக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகளை நினைவகமாக (Memory)
கருதலாம். மூளையின் நினைவகத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்:
செயல்முறை-நினைவகம் (Procedural memory) மற்றும் அறிவிப்பு-நினைவகம்
(Declarative memory). செயல்முறை-நினைவகம் பல்வேறு செயல்முறைகளை
கட்டுப்படுத்துகின்றன. நிற்க, நடக்க, ஓட, ஆட, நீந்த, ஓட்ட, எழுத என ஒவ்வொரு
செயலுக்கும் செயல்முறை-நினைவகம் வேண்டும். நாம் ஒரு செயலை “செய்ய” கற்கும்
போது செயல்முறை-நினைவகம் உருவாக்கப்படுகின்றது. புலன் செய்திகளிலிருந்து,
நாம் ஒன்றை “அறிந்து”/”உணர்ந்து” கொள்ள கற்கும் போது அறிவிப்பு-நினைவகம்
உருவாக்கப்படுகின்றது. பார்க்க, கேட்க, சுவைக்க, நுகர என ஒவ்வொரு
உணர்வுகளுக்கும் அறிவிப்பு-நினைவகம் வேண்டும். புலன் செய்திகளில் உள்ள
பாங்கை கண்டறிய (Pattern recognition) கற்பதே அறிவிப்பு-நினைவகம்
உருவாக்கத்தின் அடிப்படை.

  • உருவாக்குதல்: பல்வேறு விதமாக பாங்கை கண்டறிய முற்படுதல்.
  • தேர்ந்தெடுத்தல்: எந்த விதம், அதாவது எந்த நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகள் தகுந்த விளைவுகளை தருகின்றதோ அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
  • சேமித்தல்:
    தேர்ந்தெடுக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகள் மூளையில் நினைவகமாக
    சேமிக்கப்பட்டு தொடர்ந்து மேலும், மேலும் சரி செய்யப்படுகின்றது மற்றும்
    விரிவு படுத்தப்படுகின்றது.
  • பகிர்தல்: பெற்றோர்கள்/பெரியவர்கள்/ஆசிரியர்கள் கற்று கொடுப்பது; அடுத்தவர்கள் மற்றும் புத்தங்கள் போன்றவற்றிலிருந்து கற்றுக் கொள்வது.

அறிவின் மூலம் Childview(ஒரு
குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மனித உருவத்தை மேல்கண்டவாறு
உடல் இல்லாமல் வரைவதை காணலாம். குழந்தைகள் முகம், கைகள், கால்கள் என
முக்கியமான பாங்குகளை முதலில் கண்டறிய கற்று கொள்ளலாம். பிறகு மெதுவாக மற்ற
பாங்குகளை மேலும் துள்ளியமாக கண்டறிய கற்று கொள்ளலாம்)

இவ்வாறு
கற்றல், படிப்படியாக உலக மாதிரியை நினைவகமாக உருவாக்குகின்றது (ஒலியை
இசைத்தட்டுகளில் சேமிப்பது போல்). இதில் உலகில் காணப்படும் அனைத்து
படிநிலைகளும், தொடர்புகளும், கூட்டுகளும், பிரிவுகளும், அவற்றிலிருந்து
பெறப்படும் பொதுவாக்கலும் (Generalization or Abstraction), அவற்றின்
காரண-விளைவுகளும் அடங்கும். இதைக் கொண்டு உலகை உணர்ந்து/அறிந்து/புரிந்து
கொள்கின்றோம். இது மேலும் திறம்பட கற்கும் செயல்முறைகளை கற்க
வழிவகுக்கின்றது. இது தெரிந்த, ஒத்த, தொடர்புடைய சிக்கல்களுக்கு வழி
காணவும், திட்டமிடவும் உதவுகின்றது.

முற்றிலும் புதிய சிக்கலுக்கான
தீர்வை மூளை எப்படி கண்டுகொள்கின்றது? மூளையில் உலக மாதிரி உள்ளது. இதைக்
கொண்டு சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறையை (மற்றும் பரிணாம வழிமுறையை)
மூளையால் உருவகப்படுத்த முடியும். அது பல்வேறு
தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற (கிறுக்குத்தனமான!) யோசனைகளை உருவாக்கி
அவற்றை உலக மாதிரியை கொண்டு சோதனை செய்து சரிபார்க்கலாம் (இது மூளையின்
பின்னணில் தொடர்ந்து நடக்கலாம்). அதில் ஒரு யோசனை அல்லது தீர்வு எதேச்சையாக
சிக்கலை தீர்க்கும் போது, அது வெற்றியின் தருணமாக உணரப்படுகின்றது! (ஒரு
மேதையின் இரகசியம், முற்றிலும் புதிய சிக்கலை தீர்க அதிக வாய்ப்பு
கிடைக்குமாறு, எப்படி அவரது மூளை திறம்பட மேம்பட்ட உலக மாதிரியை
உருவாக்குகின்றது என்பதில் உள்ளது)

இப்படி கற்றவை மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ளப்படும் போது, அது மேலும் விரிவடைந்து வளர்ச்சியடைந்து பல
புதிய பரிமாணங்களை தொடுகின்றது. கற்றல், உணர்தல், யோசித்தல், புரிந்து
கொள்ளுதல், காரண-காரியங்களை அறிந்து கொள்ளுதல், சிக்கல்களுக்கு தீர்வு
காணுதல், திட்டமிடுதல் போன்ற மூளையின் பல திறமைகளை ஒருமித்தமாக அறிவு
அல்லது அறிவாற்றல் என்கின்றோம். இந்த அறிவை கொண்டு, கட்டுப்பாட்டுடன்
திட்டமிட்டு மனிதன் பலவற்றை வடிவமைக்கின்றான். அது அறிவுமுறை வடிவமைப்பு
(Intelligent design)!



இது
நரம்பு-இயங்கியல் (Neuroscience), Cognitive science, செயற்கை அறிவு (AI)
முதலிய ஆராய்ச்சிகளிலின் அறிதல்களை கொண்டு இயற்கை-வடிவமைப்பு, பரிணாமம்,
கற்றல், அறிவு ஆகியவற்றை இணைத்த ஒரு தகவல்-கோட்பாடு (Information theory)
பார்வை.



June 4, 2011

ஆறாம் அறிவு?

மற்ற
விலங்குகளுக்கும் ஐந்து புலன் உணர்வுகள் உண்டு என்றும் (அதை ஐந்து அறிவாக
கொண்டு) மனிதனுக்கு மட்டும் ஆறாவது அறிவான, பகுத்தறிவு உண்டு என்றும்
சொல்லப்படுகின்றது. இது உண்மையென்றால், ஏன் இவ்வளவு மடத்தனங்களும்,
மூடநம்பிக்கைகளும் மனிதனிடத்தில் கொட்டி கிடக்கின்றது?

மனிதனுக்கு
மட்டுமே சொந்தமான ஆறாவது அறிவு, எந்த விதத்திலும் அறிவியல் உண்மை அல்ல.
மனிதன் மற்ற விலங்குகளிலிருந்தே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளான். அவனுக்கென
திடீரென புதிதாக அறிவெல்லாம் வளரவில்லை. ஏற்கனவே மற்ற விலங்குகளில்
உள்ளவற்றின் திறம்/தரம் சிலவற்றில் சற்றே மனிதனுக்கு அதிகரித்துள்ளது (Not
quantity; just some quality). குரங்கினங்களை, டால்ஃபீன்களை, ஏன் காக்கைகளை
கூட கூர்ந்து நோக்கினால் அது எளிதாக விளங்கும். உண்மை என்வென்றால்,
ஆராய்ச்சியாளர்கள் மற்ற விலங்குகளுக்கும் மனிதனுக்கும் உள்ள அடிப்படை
வித்தியாசம் என்னவென்று சல்லடை போட்டே தேட வேண்டி உள்ளது. ஏனெனில் அப்படி
எதுவும் பெரிதா இருக்கக் காணோம்.

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு
முக்கியமான காரணம்: பகிர்தல். அதற்கு தேர்ந்த மொழி தேவை. மனிதன் மட்டுமே
குழந்தைகளுக்கு முனைப்போடு கற்று தருகின்றான் (Active Teaching). முறையான
கல்வி மட்டுமே மனிதனின் அறியாமையை போக்குகின்றது.

பகுத்தறிவு பற்றி: நம்பிக்கைகளின் மூலம்

உணர்வுகள் பற்றி: அர்த்தங்களை தேடி

http://icortext.blogspot.com/2011/06/blog-post.html

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 7 Jun 2011 - 9:44

பயனுள்ள கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே மகிழ்ச்சி
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

cortext
cortext
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 03/02/2011

Postcortext Wed 8 Jun 2011 - 3:43

"எத்தனை முறை விழுந்தாய் என்பது முக்கியமல்ல; விழுந்த பின் எத்தனை முறை எழுந்தாய் என்பதே முக்கியம்."
"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்."

இது போன்ற பொது-அறிவின் நிதர்சனம், கற்கும் முறையின் அடிப்படையே அப்படி தான் என்பதில் உள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக