புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
Page 3 of 9 •
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
![ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 3 14-rajinikanth300-1](https://2img.net/h/thatstamil.oneindia.in/img/2011/05/14-rajinikanth300-1.jpg)
சென்னை: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வைரஸ் காய்ச்சல், நீர்ச் சத்து குறைவால் மே 4-ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
நேற்று அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உடலில் இன்னும் சீரான முன்னேற்றம் ஏற்படாததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இதனை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மறுத்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.
இதனால், லதா ரஜினிகாந்த், நேற்று செய்தியாளர்களிடம், ரஜினி நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவர் முழு உடல் பரிசோதனைக்காக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து, அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெறுவாரா அல்லது உடனடியாக வீடு திரும்புவாரா என்பது தெரியவரும்.
இதுகுறித்து அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் விசாரித்த போது, ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக ராமச்சந்திரா மருத்துவமனை சென்றுள்ளார், என்றனர்.
தட்ஸ்தமிழ்
![ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 3 14-rajinikanth300-1](https://2img.net/h/thatstamil.oneindia.in/img/2011/05/14-rajinikanth300-1.jpg)
சென்னை: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வைரஸ் காய்ச்சல், நீர்ச் சத்து குறைவால் மே 4-ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
நேற்று அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உடலில் இன்னும் சீரான முன்னேற்றம் ஏற்படாததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இதனை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மறுத்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.
இதனால், லதா ரஜினிகாந்த், நேற்று செய்தியாளர்களிடம், ரஜினி நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவர் முழு உடல் பரிசோதனைக்காக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து, அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெறுவாரா அல்லது உடனடியாக வீடு திரும்புவாரா என்பது தெரியவரும்.
இதுகுறித்து அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் விசாரித்த போது, ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக ராமச்சந்திரா மருத்துவமனை சென்றுள்ளார், என்றனர்.
தட்ஸ்தமிழ்
சென்னை: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினியை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து அவரது உடல் நிலை குறித்து அதிர்ச்சி தரும் வதந்திகள் பரவி வருகின்றன.
ரஜினிகாந்தை திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மத்திய அமைச்சர் ஜிகே வாசனும் ரஜினியை மருத்துவமனையில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்திருந்த மோடியும் நாயுடுவும் விழா முடிந்ததும் மருத்துவமனைக்குச் சென்று ரஜினியை சந்தித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதால் 4 அல்லது 5 நாளில் வீடு திரும்புவார். வெளிநாடு சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை என்றார்.
தட்ஸ் தமிழ்
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து அவரது உடல் நிலை குறித்து அதிர்ச்சி தரும் வதந்திகள் பரவி வருகின்றன.
ரஜினிகாந்தை திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மத்திய அமைச்சர் ஜிகே வாசனும் ரஜினியை மருத்துவமனையில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்திருந்த மோடியும் நாயுடுவும் விழா முடிந்ததும் மருத்துவமனைக்குச் சென்று ரஜினியை சந்தித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதால் 4 அல்லது 5 நாளில் வீடு திரும்புவார். வெளிநாடு சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை என்றார்.
தட்ஸ் தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 3 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
ஆண்டவன் அருளாள் ரஜினி நலமுடன் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம். பரப்பவும் வேண்டாம். ரஜினி உங்களை விரைவில் சந்திப்பார். ரசிகர்களிடமும் பேசுவார்," என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கடந்த மூன்று தினங்களாக ரஜினி உடல்நிலை குறித்த வதந்திகள் ரசிகர்களை நிலைகொள்ளாமல் செய்துள்ளன. திருச்சி அருகே ஒரு ரசிகர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் பலர் மிகுந்த வேதனையுடன் தங்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் போன் செய்து ரஜினி உடல்நிலை குறித்து பதட்டத்துடன் விசாரித்து வருகின்றனர்.
ரஜினி மனைவி லதா ரஜினி அவர்களிடம் இதுபற்றி பேசியபோது, ரசிகர்களுக்கு அவர் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோள்:
ரஜினி மிக நலமாக உள்ளார். நல்ல ஓய்வில் இருக்கிறார். அவருக்காக பிரார்த்திக்கும் ரசிகர்களின் அன்பு உள்ளங்களுக்கு நன்றி. வதந்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம். அதை பரப்ப துணை போகவேண்டாம்.
விரைவில் ரஜினி உங்களிடம் பேசுவார். பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். அதுவரை பதட்டம் கொள்ளாதீர்கள். ரஜினியின் உடல்நிலை குறித்து நாங்கள் கவனம் செலுத்தும் வேளையில், வெளியில் பரவும் இதுபோன்ற வதந்திகள் எங்களை மிகவும் வருத்ததுக்குள்ளாக்கியுள்ளது.
இதுபோன்ற வதந்திகள் ரஜினிக்கும் மிக்க வேதனையைத் தந்துள்ளது. ரசிகர்கள் யாரும் தவறான முடிவுக்குப் போகாதீர்கள். ரஜினி உங்களைச் சந்திப்பார்!"
தட்ஸ் தமிழ்
கடந்த மூன்று தினங்களாக ரஜினி உடல்நிலை குறித்த வதந்திகள் ரசிகர்களை நிலைகொள்ளாமல் செய்துள்ளன. திருச்சி அருகே ஒரு ரசிகர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் பலர் மிகுந்த வேதனையுடன் தங்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் போன் செய்து ரஜினி உடல்நிலை குறித்து பதட்டத்துடன் விசாரித்து வருகின்றனர்.
ரஜினி மனைவி லதா ரஜினி அவர்களிடம் இதுபற்றி பேசியபோது, ரசிகர்களுக்கு அவர் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோள்:
ரஜினி மிக நலமாக உள்ளார். நல்ல ஓய்வில் இருக்கிறார். அவருக்காக பிரார்த்திக்கும் ரசிகர்களின் அன்பு உள்ளங்களுக்கு நன்றி. வதந்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம். அதை பரப்ப துணை போகவேண்டாம்.
விரைவில் ரஜினி உங்களிடம் பேசுவார். பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். அதுவரை பதட்டம் கொள்ளாதீர்கள். ரஜினியின் உடல்நிலை குறித்து நாங்கள் கவனம் செலுத்தும் வேளையில், வெளியில் பரவும் இதுபோன்ற வதந்திகள் எங்களை மிகவும் வருத்ததுக்குள்ளாக்கியுள்ளது.
இதுபோன்ற வதந்திகள் ரஜினிக்கும் மிக்க வேதனையைத் தந்துள்ளது. ரசிகர்கள் யாரும் தவறான முடிவுக்குப் போகாதீர்கள். ரஜினி உங்களைச் சந்திப்பார்!"
தட்ஸ் தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 3 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ம் சரி! காத்திருக்கிறோம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சென்னை: ரஜினிக்கு ஒன்றுமில்லை. அவர் வழக்கம்போல சுறுசுறுப்பாக இருக்கிறார். என்னைப்போன்ற நண்பர்களின் தொந்தரவை தவிர்க்கவே அவர் இங்கே உள்ளார், என்றார்.
ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியை நேற்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். ரஜினியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றனர்.
அவர்களுடன் ரஜினியின் நெருங்கிய நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான சோவும் சென்றிருந்தார்.
ரஜினியை சந்தித்துவிட்டு வெளியில் வந்த அவர் கூறுகையில், "என்னைப் போன்ற நண்பர்கள் தொந்தரவை தவிர்ப்பதற்காகவே ரஜினிகாந்த் இங்கே வந்திருக்கிறார். மற்றபடி அவருக்கு ஒன்றுமில்லை. ரசிகர்கள் கவலைப்பட்டு மருத்துவமனையை சூழ வேண்டாம். அவர் நலமாக இருக்கிறார். விரைவில் உங்கள் முன் பேசுவார்,'' என்றார்.
ரஜினிக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை செய்யப்படும் என்றும், இப்போதைக்கு அவரது பிரச்சினைகள் இங்கேயே சரி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் ரஜினியின் மருமகன் தனுஷ் தெரிவித்தார்.
தட்ஸ் தமிழ்
ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியை நேற்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். ரஜினியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றனர்.
அவர்களுடன் ரஜினியின் நெருங்கிய நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான சோவும் சென்றிருந்தார்.
ரஜினியை சந்தித்துவிட்டு வெளியில் வந்த அவர் கூறுகையில், "என்னைப் போன்ற நண்பர்கள் தொந்தரவை தவிர்ப்பதற்காகவே ரஜினிகாந்த் இங்கே வந்திருக்கிறார். மற்றபடி அவருக்கு ஒன்றுமில்லை. ரசிகர்கள் கவலைப்பட்டு மருத்துவமனையை சூழ வேண்டாம். அவர் நலமாக இருக்கிறார். விரைவில் உங்கள் முன் பேசுவார்,'' என்றார்.
ரஜினிக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை செய்யப்படும் என்றும், இப்போதைக்கு அவரது பிரச்சினைகள் இங்கேயே சரி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் ரஜினியின் மருமகன் தனுஷ் தெரிவித்தார்.
தட்ஸ் தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 3 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
![ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 3 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
ரோஜாகார்த்தி wrote:சென்னை: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினியை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து அவரது உடல் நிலை குறித்து அதிர்ச்சி தரும் வதந்திகள் பரவி வருகின்றன.
ரஜினிகாந்தை திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மத்திய அமைச்சர் ஜிகே வாசனும் ரஜினியை மருத்துவமனையில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்திருந்த மோடியும் நாயுடுவும் விழா முடிந்ததும் மருத்துவமனைக்குச் சென்று ரஜினியை சந்தித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ரஜினி சுறுசுறுப்பாக உள்ளதால் 4 அல்லது 5 நாளில் வீடு திரும்புவார். வெளிநாடு சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை என்றார்.
தட்ஸ் தமிழ்
இதை நான் ஏற்க்கனவே பதிந்து உள்ளேன் நண்பா. பதியும் பதிவுகள் உண்பே இருக்கா என்று பார்த்து பதியுங்க்கள்.....
நீங்கள் புதியவர் என்பதால் சொல்லுகிறேன். தவறாக என்ன வேண்டாம்....
![ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 3 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த புதிய தகவல் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை திருப்திகரமாக இருக்கிறது. அவரது உடலின் அனைத்து பாகங்களும் சீராக இயங்கி வருகிறது. மருத்துவமனையில் தனது குடும்பத்துடன் அவர் பொழுதை கழித்து வருகிறார், என்று அவர் சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த 13ம்தேதி இரவு போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையின் ஏழாவது மாடியில் வி.ஐ.பி.,க்களுக்கான தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுக்குழாய் நோய் தொற்று காரணமாக அவருக்கு காய்ச்சல் இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தொற்று ஏற்படாமல் இருக்க அவர் பார்வையாளர் சந்திப்பை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு முதல் ரஜினிகாந்தை பார்வையாளர்கள் சந்திப்பது தவிர்க்கப்பட்டது. நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ரஜினிகாந்திற்கு இரைப்பையில் அலர்ஜி இருப்பது கண்டறியப்பட்டது. அதற்குரிய மருந்துகள் கொடுக்கப்பட்டன. காய்ச்சல், சளி குறையவும் மருத்து கொடுக்கப்பட்டது. நுரையீரலில் நீர் கோர்ப்பு இருந்ததால் ரஜினி மூச்சுவிட சிரமப்பட்டார். இதையடுத்து, நுரையீரலில் இருந்த நீர் சிகிச்சை மூலம் வெளியேற்றப்பட்டது. இதன்பின், சுவாசிப்பது அவருக்கு எளிதாகியுள்ளது. அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் மூலம் உடல் பாக இயக்கம் குறித்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய செய்திக்குறிப்பில், "ரஜினிகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக உள்ளது. மருத்துவமனையில் தனது குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் உடல் நிலை திருப்திகரமாக உள்ளதாகவும், தேறி வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ts
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த 13ம்தேதி இரவு போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையின் ஏழாவது மாடியில் வி.ஐ.பி.,க்களுக்கான தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுக்குழாய் நோய் தொற்று காரணமாக அவருக்கு காய்ச்சல் இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தொற்று ஏற்படாமல் இருக்க அவர் பார்வையாளர் சந்திப்பை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு முதல் ரஜினிகாந்தை பார்வையாளர்கள் சந்திப்பது தவிர்க்கப்பட்டது. நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ரஜினிகாந்திற்கு இரைப்பையில் அலர்ஜி இருப்பது கண்டறியப்பட்டது. அதற்குரிய மருந்துகள் கொடுக்கப்பட்டன. காய்ச்சல், சளி குறையவும் மருத்து கொடுக்கப்பட்டது. நுரையீரலில் நீர் கோர்ப்பு இருந்ததால் ரஜினி மூச்சுவிட சிரமப்பட்டார். இதையடுத்து, நுரையீரலில் இருந்த நீர் சிகிச்சை மூலம் வெளியேற்றப்பட்டது. இதன்பின், சுவாசிப்பது அவருக்கு எளிதாகியுள்ளது. அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் மூலம் உடல் பாக இயக்கம் குறித்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய செய்திக்குறிப்பில், "ரஜினிகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக உள்ளது. மருத்துவமனையில் தனது குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் உடல் நிலை திருப்திகரமாக உள்ளதாகவும், தேறி வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ts
ரஜினிக்கு உடல் நலக்குறைவு: “ராணா” படத்தை கைவிடவில்லை; டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி
ரஜினி “ராணா” படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான பட பூஜையும் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. ரஜினியும் தீபிகா படுகோனேயும் நடித்த சீன்கள் படமாக்கப்பட்டன.
அப்போது ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் “ராணா” படப் பிடிப்பு தொடர்ந்து நடக்குமா? என்று கேள்விக்குறி எழுந்தது.
படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் பரவின. ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு இப்படத்தை எடுக்க இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணா படம் கைவிடப் பட்டதா? என்று அப்படத்தை டைரக்டு செய்யும் கே.எஸ். ரவிக்குமாரிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:-
ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளிப் போடவும் இல்லை. படத்தை கைவிட்டு விட்டதாக வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம். ஜூலையில்தான் இதன் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். தற்போது அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.
தாய்லாந்து சென்று லொக்கேஷன் பார்த்து வந்துள்ளேன். அடுத்து லண்டன் செல்ல இருக்கிறேன். படத்தை கைவிட்டு விட்டதாக வெளியான செய்திகள் தவறானவை. அதை நம்ப வேண்டாம். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு துவங்கும்.
இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.
மாலை மலர்
ரஜினி “ராணா” படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான பட பூஜையும் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. ரஜினியும் தீபிகா படுகோனேயும் நடித்த சீன்கள் படமாக்கப்பட்டன.
அப்போது ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் “ராணா” படப் பிடிப்பு தொடர்ந்து நடக்குமா? என்று கேள்விக்குறி எழுந்தது.
படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் பரவின. ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு இப்படத்தை எடுக்க இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணா படம் கைவிடப் பட்டதா? என்று அப்படத்தை டைரக்டு செய்யும் கே.எஸ். ரவிக்குமாரிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:-
ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளிப் போடவும் இல்லை. படத்தை கைவிட்டு விட்டதாக வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம். ஜூலையில்தான் இதன் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். தற்போது அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.
தாய்லாந்து சென்று லொக்கேஷன் பார்த்து வந்துள்ளேன். அடுத்து லண்டன் செல்ல இருக்கிறேன். படத்தை கைவிட்டு விட்டதாக வெளியான செய்திகள் தவறானவை. அதை நம்ப வேண்டாம். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு துவங்கும்.
இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.
மாலை மலர்
ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா போவாரா?; நடிகர் தனுஷ் பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் சுவாச குழாய் தொற்று நோய் கிருமி தாக்குதல் (ரெஸ்பிரேட்டரி இன்பக்ஷன்), வயிற்றில் குடல் பிரச்சினைகள் ஆகிய கோளாறுகளால் கடந்த சில வாரங்களாக அவதிப்படுகிறார். இதற்காக, அவர் முதலில் சென்னை இசபெல்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
கடந்த 13-ந் தேதி அவர், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆஸ்பத்திரியின் 7-வது மாடியில் உள்ள ஒரு விசேஷ வார்டில், ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் தங்கியிருக்கிறார்கள். வார்டு அருகே ஒரு சமையல் அறை உள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய நோயாளிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிற வார்டு அது என்று கூறப்படுகிறது.
அனுமதி இல்லாமல் டாக்டர் கூட அங்கு செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு காரமில்லாத உணவு கொடுக்கப்படுகிறது. ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி ஆஸ்பத்திரி சார்பில் நேற்று ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:-
``நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13-ந் தேதி மாலை சுவாசக்குழாய் தொற்றுநோய் கிருமிகள் மற்றும் காய்ச்சல் காரணமாக, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் முழுமையாக குணம் அடைந்து பழைய நிலையை அடையும்வரை ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெறும்படி ஆலோசனை கூறியிருக்கிறோம்.
விசேஷ மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அவர் உடல் நிலை முழுமையாக ஆராயப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் ஒரு தனி வார்டில், மகிழ்ச்சிகரமாக இருக்கிறார். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு ஆகியவை அவருக்கு சீராக உள்ளது. அவருக்கு தொற்றுநோய் பாதிப்பு இருப்பதால் பார்வையாளர்களை தவிர்க்கும்படியும், முழுமையான ஓய்வு எடுத்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.'' இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை நேற்று மாலை 3-30 மணிக்கு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பார்த்தார். 10 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த அவர், நிருபர்கள் மத்தியில் ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி பேசினார். அவர் கூறியதாவது:- ``ரஜினிகாந்த் என் நீண்டகால நண்பர்.
அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து இங்கு வந்து பார்த்தேன். ரஜினிக்கு சுவாச குழாயில் பிரச்சினை இருக்கிறது. இப்போது அவர் குணம் அடைந்து வருகிறார். அவருடன் நான் பேசினேன். என்னிடம் அவர் பேசினார். அவருக்கு முழுமையான ஓய்வு தேவைப்படுகிறது. சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்வது பற்றி என்னிடம் பேசவில்லை. அதற்கு அவசியம் இருக்காது என்று கருதுகிறேன்.''
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து குஜராத் முதல்- மந்திரி நரேந்திர மோடி, நேற்று மாலை 3-50 மணிக்கு போரூர் ஆஸ்பத்திரிக்கு வந்து ரஜினிகாந்தை பார்த்தார். அவருடன் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் இல.கணேசன், பத்திரிகையாளர் சோ ஆகிய இருவரும் வந்தார்கள். ரஜினிகாந்தை பார்த்துவிட்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த நரேந்திர மோடி, நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
``ரஜினிகாந்தை நான் பார்த்து பேசினேன். அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். கோடை விடுமுறைக்காக வந்திருப்பது போல் உற்சாகமாக காணப்பட்டார். என்னிடம், ஜாலியாக `ஜோக்' அடித்து பேசினார். அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். ரஜினிகாந்த் உடல்நலத்துடன் சீக்கிரமே வீடு திரும்ப வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
'' மேற்கண்டவாறு நரேந்திர மோடி கூறினார். சோ கூறும்போது, ``என்னைப்போன்ற நண்பர்கள் தொந்தரவை தவிர்ப்பதற்காகவே ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு வந்து இருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார்'' என்றார். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி அவருடைய மருமகன் நடிகர் தனுஷ், பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
``சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவருக்கு நுரையீரலில் மட்டுமே பிரச்சினை உள்ளது. அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. இப்போது அவர் குணம் அடைந்து வருகிறார். ரசிகர்கள் பதற்றப்பட தேவையில்லை. ரஜினிகாந்த் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள். அவருக்கு தனிமையும், ஓய்வும் தேவைப்படுகிறது.
அதற்காகவே ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சிகிச்சைக்காக, அவர் அமெரிக்கா போவதாக வந்த வதந்தியை நம்ப வேண்டாம். ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார். வீடு திரும்பியதும் அவரே அறிக்கை வெளியிடுவார். அவர் உடல்நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.'' இவ்வாறு தனுஷ் கூறினார். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி நேற்று காலை முதலே மோசமான வதந்தி பரவியது.
சில இணையதளங்களில் தவறான தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், ரஜினிகாந்தின் ரசிகர்கள் திரண்டனர். வெளிïர்களில் இருந்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்தார்கள். அவர்களை கலைந்து செல்லும்படி ஆஸ்பத்திரி ஊழியர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், ரசிகர்கள் கலைந்து செல்ல மறுத்ததுடன், ``எங்கள் தலைவரை பார்த்துவிட்டுத்தான் செல்வோம்.
அவரை ஜன்னல் வழியாக கைகாட்ட சொல்லுங்கள். போய்விடுகிறோம்'' என்று கூறினார்கள். சில ரசிகர்கள் வாய்விட்டு கதறி அழுதார்கள். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் சுவாச குழாய் தொற்று நோய் கிருமி தாக்குதல் (ரெஸ்பிரேட்டரி இன்பக்ஷன்), வயிற்றில் குடல் பிரச்சினைகள் ஆகிய கோளாறுகளால் கடந்த சில வாரங்களாக அவதிப்படுகிறார். இதற்காக, அவர் முதலில் சென்னை இசபெல்லா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
கடந்த 13-ந் தேதி அவர், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆஸ்பத்திரியின் 7-வது மாடியில் உள்ள ஒரு விசேஷ வார்டில், ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் தங்கியிருக்கிறார்கள். வார்டு அருகே ஒரு சமையல் அறை உள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய நோயாளிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிற வார்டு அது என்று கூறப்படுகிறது.
அனுமதி இல்லாமல் டாக்டர் கூட அங்கு செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு காரமில்லாத உணவு கொடுக்கப்படுகிறது. ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி ஆஸ்பத்திரி சார்பில் நேற்று ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:-
``நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13-ந் தேதி மாலை சுவாசக்குழாய் தொற்றுநோய் கிருமிகள் மற்றும் காய்ச்சல் காரணமாக, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் முழுமையாக குணம் அடைந்து பழைய நிலையை அடையும்வரை ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெறும்படி ஆலோசனை கூறியிருக்கிறோம்.
விசேஷ மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அவர் உடல் நிலை முழுமையாக ஆராயப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் ஒரு தனி வார்டில், மகிழ்ச்சிகரமாக இருக்கிறார். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு ஆகியவை அவருக்கு சீராக உள்ளது. அவருக்கு தொற்றுநோய் பாதிப்பு இருப்பதால் பார்வையாளர்களை தவிர்க்கும்படியும், முழுமையான ஓய்வு எடுத்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.'' இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை நேற்று மாலை 3-30 மணிக்கு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பார்த்தார். 10 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த அவர், நிருபர்கள் மத்தியில் ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி பேசினார். அவர் கூறியதாவது:- ``ரஜினிகாந்த் என் நீண்டகால நண்பர்.
அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து இங்கு வந்து பார்த்தேன். ரஜினிக்கு சுவாச குழாயில் பிரச்சினை இருக்கிறது. இப்போது அவர் குணம் அடைந்து வருகிறார். அவருடன் நான் பேசினேன். என்னிடம் அவர் பேசினார். அவருக்கு முழுமையான ஓய்வு தேவைப்படுகிறது. சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்வது பற்றி என்னிடம் பேசவில்லை. அதற்கு அவசியம் இருக்காது என்று கருதுகிறேன்.''
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து குஜராத் முதல்- மந்திரி நரேந்திர மோடி, நேற்று மாலை 3-50 மணிக்கு போரூர் ஆஸ்பத்திரிக்கு வந்து ரஜினிகாந்தை பார்த்தார். அவருடன் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் இல.கணேசன், பத்திரிகையாளர் சோ ஆகிய இருவரும் வந்தார்கள். ரஜினிகாந்தை பார்த்துவிட்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த நரேந்திர மோடி, நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
``ரஜினிகாந்தை நான் பார்த்து பேசினேன். அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். கோடை விடுமுறைக்காக வந்திருப்பது போல் உற்சாகமாக காணப்பட்டார். என்னிடம், ஜாலியாக `ஜோக்' அடித்து பேசினார். அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். ரஜினிகாந்த் உடல்நலத்துடன் சீக்கிரமே வீடு திரும்ப வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
'' மேற்கண்டவாறு நரேந்திர மோடி கூறினார். சோ கூறும்போது, ``என்னைப்போன்ற நண்பர்கள் தொந்தரவை தவிர்ப்பதற்காகவே ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு வந்து இருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார்'' என்றார். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி அவருடைய மருமகன் நடிகர் தனுஷ், பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
``சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவருக்கு நுரையீரலில் மட்டுமே பிரச்சினை உள்ளது. அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. இப்போது அவர் குணம் அடைந்து வருகிறார். ரசிகர்கள் பதற்றப்பட தேவையில்லை. ரஜினிகாந்த் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள். அவருக்கு தனிமையும், ஓய்வும் தேவைப்படுகிறது.
அதற்காகவே ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சிகிச்சைக்காக, அவர் அமெரிக்கா போவதாக வந்த வதந்தியை நம்ப வேண்டாம். ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார். வீடு திரும்பியதும் அவரே அறிக்கை வெளியிடுவார். அவர் உடல்நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.'' இவ்வாறு தனுஷ் கூறினார். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி நேற்று காலை முதலே மோசமான வதந்தி பரவியது.
சில இணையதளங்களில் தவறான தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், ரஜினிகாந்தின் ரசிகர்கள் திரண்டனர். வெளிïர்களில் இருந்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்தார்கள். அவர்களை கலைந்து செல்லும்படி ஆஸ்பத்திரி ஊழியர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், ரசிகர்கள் கலைந்து செல்ல மறுத்ததுடன், ``எங்கள் தலைவரை பார்த்துவிட்டுத்தான் செல்வோம்.
அவரை ஜன்னல் வழியாக கைகாட்ட சொல்லுங்கள். போய்விடுகிறோம்'' என்று கூறினார்கள். சில ரசிகர்கள் வாய்விட்டு கதறி அழுதார்கள். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.
சிறு ஆபரேஷன் மூலம் ரஜினிக்கு நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றம்: குணம் அடைவதாக டாக்டர்கள் பேட்டி
ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
சி.டி. ஸ்கேன் உள்பட பல் வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரைப்பையில் அலர்ஜி இருந்ததால் அதற்கான மருந்துகள் அளிக்கப்பட்டது. காய்ச்சல், சளிக்கும் மருந்து கொடுத்தனர்.
நுரையீரலில் நீர் கோர்ப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சிறு ஆபரேஷன் மூலம் அதை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
நேற்று ரஜினிக்கு நெஞ்சில் லேசான ஆபரேஷன் நடந்தது. இதன் மூலம் நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு ரஜினி குணம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ரஜினிக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்த்து முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி இருப்பதாகவும் மருத்துவ செய்தி குறிப்பில் தெரி உள்ளது.
விசேஷ மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு தற்போது சீராக இருப்பதாக கூறப்பட்டது.
ரஜினியுடன் வார்டில் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் தங்கியுள்ளனர். குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோர் ரஜினியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
சிகிச்சைக்காக ரஜினியை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் திட்டம் இல்லை என்று நடிகர் தனுஷ் கூறினார். ரஜினி உடல்நிலை பற்றி நேற்றும், இன்றும் மோசமான வதந்திகள் பரவின. இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தனுஷ் கேட்டுக் கொண்டு உள்ளார்.
ரஜினி உடல் நிலைபற்றி அறிய ஏராளமான ரசிகர்கள் ஆஸ்பத்திரி முன் திரண்டு இருந்தனர். சில ரசிகர்கள் ரஜினியை பார்த்து விட்டுத்தான் போவோம் என்று பிடிவாதமாக கூறிக் கொண்டு வாசலிலேயே காத்து கிடக்கின்றார்கள். ரஜினி வெளியே வந்து தோன்ற வேண்டும் அல்லது வீடியோ மூலம் அவரைக் காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர
மாலை மலர்
ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
சி.டி. ஸ்கேன் உள்பட பல் வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரைப்பையில் அலர்ஜி இருந்ததால் அதற்கான மருந்துகள் அளிக்கப்பட்டது. காய்ச்சல், சளிக்கும் மருந்து கொடுத்தனர்.
நுரையீரலில் நீர் கோர்ப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சிறு ஆபரேஷன் மூலம் அதை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
நேற்று ரஜினிக்கு நெஞ்சில் லேசான ஆபரேஷன் நடந்தது. இதன் மூலம் நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு ரஜினி குணம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ரஜினிக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்த்து முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி இருப்பதாகவும் மருத்துவ செய்தி குறிப்பில் தெரி உள்ளது.
விசேஷ மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு தற்போது சீராக இருப்பதாக கூறப்பட்டது.
ரஜினியுடன் வார்டில் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் தங்கியுள்ளனர். குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோர் ரஜினியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
சிகிச்சைக்காக ரஜினியை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் திட்டம் இல்லை என்று நடிகர் தனுஷ் கூறினார். ரஜினி உடல்நிலை பற்றி நேற்றும், இன்றும் மோசமான வதந்திகள் பரவின. இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தனுஷ் கேட்டுக் கொண்டு உள்ளார்.
ரஜினி உடல் நிலைபற்றி அறிய ஏராளமான ரசிகர்கள் ஆஸ்பத்திரி முன் திரண்டு இருந்தனர். சில ரசிகர்கள் ரஜினியை பார்த்து விட்டுத்தான் போவோம் என்று பிடிவாதமாக கூறிக் கொண்டு வாசலிலேயே காத்து கிடக்கின்றார்கள். ரஜினி வெளியே வந்து தோன்ற வேண்டும் அல்லது வீடியோ மூலம் அவரைக் காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர
மாலை மலர்
- Sponsored content
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
» ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» ரஜினி நலம் பெற திருச்சூர்(கேரளா) கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» ரஜினி நலம் பெற திருச்சூர்(கேரளா) கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 9
|
|