புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாலியின் நினைவு நாடாக்கள் -
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிறையும் வில்லும்!
1931 - அக்டோபர் மாதம் 29 - ஆம் தேதி - வியாழக் கிழமை, இரவு எட்டு மணியளவில்-
ரோகிணி நட்சத்திரத்தில், ரிஷப ராசியில் -
திருச்சி மாவட்டத்தில் உள்ள, 'திருப்பராய்த் துறை’ என்னும் - பாடல் பெற்ற ஒரு
சிவஸ்தலத்தில் -
பிரஜோற்பத்தி வருடத்தில், பிறந்தவன் நான்.
தந்தையார் பெயர் வாங்கல் திரு. ஸ்ரீனிவாச அய்யங்கார். தாயார் பெயர் திருமதி.பொன்னம்மாள்.
வடகலை; அஹோபில மடத்தைச் சார்ந்த சிஷ்ய பரம்பரை; அருள்மிகு அழகிய சிங்கர் அவர்கள்தான், எங்கள் ஆசாரியர்.
எங்கள் குல தெய்வம் - கரூருக்கு அருகே உள்ள -
தான்தோன்றிமலை - அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி.
என் தந்தையார் - வெள்ளைக்காரன் காலத்தில் -
CUSTOMS AND EXCISE - இலாகாவில் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அந்த உத்தியோகத்தை SALT INSPECTOR என்றும் சொல்வதுண்டு.
கள்ளிறக்கும் மரங்களுக்கு SEAL வைப்பதும்; கடல் மீன்களுக்கு உப்படைப்பதும் - ஒழுங்காக நடக்கிறதா என்பதைக் கண்டறிந்து -
தவறிய ஒப்பந்தக்காரர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவதுதான் என் தந்தையார் வேலை.
பஞ்சக்கச்சம்; பன்னிரு திருமண்; முப்புரி நூல்; முடித்த குடுமி;
- இப்படிப் பரம ஆசார சீலராக வைதிகம் வழுவா வேதியராக வாழ்ந்த என் தந்தை -
காக்கி UNIFORM அணிந்து - CAMP PEON சகிதம் CASE பிடிக்கப் போவார்.
அப்படி - அற்றை நாளில் என் அப்பாவிடம் பணிபுரிந்த ஒரு CAMP PEON பற்றிச் சொல்லத்தான் -
என் - BIO DATAவை விரித்துரைக்கும்படி ஆகிவிட்டது.
ஒரு பிராமணருக்கு - மிக மிகப் பிடித்தமான ஊழியராகவும்; ஓர் உற்றுழியில் உடுக்கை இழந்தவன் கைபோல் உதவிய உத்தம புருஷனாகவும் விளங்கிய -
அந்த CAMP PEON-ன் பெயர் திரு. இப்ராஹிம்!
என்னை ஈன்றெடுத்த ஓரிரு வாரங்களிலேயே -
என் அன்னைக்கு 'ஜன்னி’ கண்டுவிட்டது; உடல் சீதளத்தின் உச்சத்தை எட்டி, உறுப்புகள் விறைத்துப்போய் - நினைவழிக்கும் கொடிய நோய் அது!
அந்தக் காலத்தில் அதற்கான வைத்தியமே - விறகுகளை அடுக்கித் தணல் மூட்டி, அதன் மீது சிறிது நேரம் நிற்கவைப்பார்கள் -
உடல் சீதளம் குறைந்து உஷ்ணம் பெற!
இந்த அசுர வைத்தியமெல்லாம், என் அம்மாவுக்கும் நடந்தது. இந்த நிலையில் பச்சை மண்ணாகக்கிடந்த எனக்குப் பாலூட்டுதல் எங்ஙனம்?
அந்தக் காலத்தில் புட்டிப் பாலெல்லாம், புழக்கத்திற்கு வரவில்லை. ஆவின் பாலால் மட்டும் - சின்ன சிசுவைக் காப்பாற்றிவிட முடியாது; அது சீவிக்க - தாய்ப்பால் MUST!
CAMP PEON இப்ராஹிமின் இல்லத்தரசி அதே நேரத்தில் ஓர் அழகிய குழந்தையை ஈன்றெடுத்துஇருந்தார்.
அந்த இஸ்லாமிய மாது தான் - ஓரிரு மாதங்கள் எனக்குத் தாய்ப்பால் ஊட்டி -
இன்றளவும் நான் பிழைத்திருக்கக் காரணமானவர்கள்.
இது - இந்துவென்றும்; இது - இஸ்லாமென்றும் -
முலைப் பாலைக்கொண்டு மூதலிப்பாருண்டோ? இன்று நான் - முத்தமிழ்ப் பாலருந்த, மூலக்காரணம் முஸ்லீம் பால்தான்!
இளமைப் பருவம் வந்தது. நான் திருச்சி வானொலியில் தற்காலிகப் பணியில் சேர்ந்தேன்.
'உனக்குக் கதை எழுத வருகிறது; எழுதய்யா!’
- என்று, ஊக்கமும் உள்வலியும் தந்து என்னை உற்சாகப்படுத்திய பெருமகனார் -
திரு.A.A.ஹகீம் அவர்கள். உடன் பிறந்த இளவலாய் என்னை வளர்த்தெடுத்தார். பின்னாளில் -
திரு.ஹகீம் அவர்கள் சென்னை வானொலியில் பெரிய அதிகாரியாகப் பணிபுரிந்தார்கள். திரு.ஜெய காந்தனுக்கும் நெருங்கிய நண்பராயிருந்தவர்.
வாயில் PIPE வைத்துப் புகைப்பார்; வெற்றிலைக் காவி வீற்றிருக்கும் பல் வரிசை தெரிய நகைப்பார். இன்னொரு சீதக்காதி அளவு சிந்தை விசாலமானவர்.
அதே - திருச்சி வானொலியில் இன்னொரு இஸ்லாமியப் பெருமகனார் இருந்து -
'ஓய்! நீர் பெரிய கவிஞனாக வருவீரய்யா!’ என்று, என் ஆரம்ப காலக் கவிதைகளைக் கண்டு, என்னை ஆசீர்வதித்தவர்.
அவரே பெரும் கவிஞர்; அவர்தான் 'செந்தாமரை’ எனும் புனைபெயரில் யாப்பொடியாப் பனுவல்களை யாத்த -
திரு.ஹமீது அவர்கள். சதாவதானி திரு.செய்குதம்பிப் பாவலரின் திருமகனார் இந்த ஹமீது!
சென்னைக்கு வந்தேன், சினிமா வாய்ப்புகள் தேடி.
அவ்வப்போது - கடனுக்கு சார்மினார் சிகரெட்டும், வெற்றிலை பாக்குப் புகையிலையும் தந்து -
'வாலி! நீ பெரிய ஆளானப்புறம் - இதுக்கான காசை, உங்கிட்ட வசூல் பண்ணிக்கிறேன்!’ என்று -
சளைக்காமல் கடன் தந்து, என்னை ஆதரித்தது - 'வெற்றிலை பாக்குக் கடை’
திரு.சுல்தான் அவர்கள்!
நாங்கள் - பின்னாளில் பிரபலமான பெரிய ஆளாக வருவோம் என்று கணித்துக் கடன் தந்தார் திரு.சுல்தான்.
அப்படியே வந்தோம், நானும் நாகேஷ§ம்!
படத்திற்குப் பாட்டெழுதும் வாய்ப்பு, இந்தப் பிறவியில் கிட்டாது என்று -
இதயம் ஒடிந்திருந்த வேளையில் - 'வாடா! கண்ணா! - உனக்கொரு வாய்ப்புத் தர்றேன்; கே.வி.மகாதேவன் மியூசிக்ல என் படத்துல எழுது!’ என்று -
பரிவோடு அழைத்து - நைந்து, நசிக்க இருந்த என் நம்பிகை வேரில் -
நாலு சொட்டு நீர் வார்த்து, அதற்கு உயிரூட்டியவர்.
மாடர்ன் தியேட்டர்ஸ் திரு.சுலைமான் அவர்கள்!
திரு.சுலைமான்தான், மாடர்ன் தியேட்டர்ஸில் 'பாசவலை’ படத்தில் பாட்டெழுத -
'பட்டுக்கோட்டை’க்கு வாய்ப்பு வாங்கித் தந்தவர். அவர்தான், சென்னைக்கு வந்து இரு பாகஸ்தர் களுடன், 'பத்மா ஃபிலிம்ஸ்’ என்று ஆரம்பித்து -
சிவாஜி; எம்.ஜி.ஆர்; மற்றும் ஷி.ஷி.ஸி. போன்றவர்களை வைத்துப் படம் எடுத்தவர்.
திரு. S.S.R; விஜயகுமாரி நடித்து, திரு. தாதாமிராசி இயக்கத்தில் தான் தயாரித்த 'நீங்காத நினைவு’ என்னும் படத்தில் -
எழுத்தாளர் திரு. ம.ரா-வின் சிபாரிசை ஏற்று உடனே எனக்கு வாய்ப்பளித்து, புகழேணியின் முதல் படியில் ஏற்றிவிட்டார்!
பிறகு -
திரு.டி.எம்.இப்ராஹிம் எனும் இசையமைப்பாளர், எனக்கு ஓரிரு படங்களில் பாட்டு வாங்கிக் கொடுத்து -
'கவலைப்படாதே! உன் ROOM வாசல்லேயும் ஏகப்பட்ட கார் நிற்கும் காலம் ஒண்ணு வரும்!’ என்று -
தாயினும் சாலப் பரிந்து பேசிய தயாபரன் அந்த இப்ராஹிம் பெருமகன்!
பன்னிரண்டு ஆண்டு காலம் - நான் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் குடியிருந்தேன் - மனைவி, மகனோடு.
சினிமா வருமானம்தானே! முன்பின் வரும்; இருப்பினும், வாடகையை நான் கொடுக்கும்போது வாங்கிக்கொண்டு உதவியவர் -
அந்த வீட்டின் உரிமையாளர் திருமதி.ஸுனைதா பேகம் அவர்கள்.
இப்படி - என் வாழ்வு வடிவு பெற -
உளியாயிருந்து செதுக்கிய உள்ளங்கள் எல்லாம் -
முகமதியர் குலத்தில் முளைத்தவைதான் -
திரைப்படத்தைத் தாண்டி - இலக்கிய உலகிலும் எனக் கோர் இடத்தைத் தந்து அங்கீகரித்த பெருமகனார் -
அமரராகிவிட்ட நீதியரசர் திரு.இஸ்மாயில் அவர்கள். அவர், தலைமை ஏற்றிருந்த சென்னைக் கம்பன் கழகத்தில்-
பலமுறை என்னைப் பாட்டரங்கின் தலைவராக்கி அழகு பார்த்தவர்.
என்னுடைய 'அவதார புருஷ’னை ஆய்வு செய்து, ஐநூறு பக்கத்தில் ஒரு நூலை வெளியிட்டார்கள், அமரர். திரு. டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள். அதற்கு நீண்ட அணிந்துரை அருளி - என்னைப் பெருமைப்படுத்தியவர் திரு.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்!
இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரு நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.
அதுதான் - கவிஞர் பெருந்தகை - என் இனிய இளவல் - திரு.மு.மேத்தா அவர்கள் வசன கவிதையாகப் புனைந்திருந்த நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு!
அதை - ஒரே இரவில் வாசித்து முடித்தேன். அற்புதமோ அற்புதம்! அதைப் படித்த பாதிப்பில்தான் - நான் 'அவதார புருஷ’னை - எழுதப் புகுந்தேன். திரு.மேத்தா, ஓர் இஸ்லாமியப் பெருமகன்.
ஆக - ஓர் இஸ்லாமிய விளக்குதான், இன்னோர் இந்து விளக்கை ஏற்றிவைத்தது எனலாம்!
என் மனைவி இறந்தபோது
மின் மயானம் வரை வந்து எனக்கு ஆறுதலைச் சொன்னவர்கள், இரு இஸ்லாமியப் பெருமக்கள்.
ஒருவர் - புகழ்சால் எலும்பு சிகிச்சை நிபுணர் (ORTHOPAEDIC SURGEON) திரு. டாக்டர் ஜாஹீர் ஹுசைன் அவர்கள்; மற்றொருவர் திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர் திரு. ஆயிரம்விளக்கு உசேன் அவர்கள்.
திரு.உசேன் அவர்கள் உடல் நலம் சரி இல்லாத நிலையிலும் - 'WALKER’ வைத்துக்கொண்டு வந்து என் வருத்தத்தில் பங்குகொண்டவர்.
வளர்ந்து வரும் திரைப்பட இளைய இயக்குநர் திரு.இப்ராஹிம் அவர்கள் -
இரவு முழுக்க என் வீட்டு வாசலில் விழித்தபடி அமர்ந்து - என் மனைவி மறைவுக்குத் துக்கம் காத்தவர்!
'பத்மஸ்ரீ’ விருதை என் சட்டையில் மாட்டும்போது - மேதகு திரு. அப்துல் கலாம் அவர்கள் சொன்னார்கள்.
'இது - உங்ககிட்ட இருக்கிறதுதான், பொருத்தம்!’
நான் -
கூன் பிறைகளால் உருவாக்கப் பெற்ற கோதண்டம்!
விகடன்
1931 - அக்டோபர் மாதம் 29 - ஆம் தேதி - வியாழக் கிழமை, இரவு எட்டு மணியளவில்-
ரோகிணி நட்சத்திரத்தில், ரிஷப ராசியில் -
திருச்சி மாவட்டத்தில் உள்ள, 'திருப்பராய்த் துறை’ என்னும் - பாடல் பெற்ற ஒரு
சிவஸ்தலத்தில் -
பிரஜோற்பத்தி வருடத்தில், பிறந்தவன் நான்.
தந்தையார் பெயர் வாங்கல் திரு. ஸ்ரீனிவாச அய்யங்கார். தாயார் பெயர் திருமதி.பொன்னம்மாள்.
வடகலை; அஹோபில மடத்தைச் சார்ந்த சிஷ்ய பரம்பரை; அருள்மிகு அழகிய சிங்கர் அவர்கள்தான், எங்கள் ஆசாரியர்.
எங்கள் குல தெய்வம் - கரூருக்கு அருகே உள்ள -
தான்தோன்றிமலை - அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி.
என் தந்தையார் - வெள்ளைக்காரன் காலத்தில் -
CUSTOMS AND EXCISE - இலாகாவில் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அந்த உத்தியோகத்தை SALT INSPECTOR என்றும் சொல்வதுண்டு.
கள்ளிறக்கும் மரங்களுக்கு SEAL வைப்பதும்; கடல் மீன்களுக்கு உப்படைப்பதும் - ஒழுங்காக நடக்கிறதா என்பதைக் கண்டறிந்து -
தவறிய ஒப்பந்தக்காரர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவதுதான் என் தந்தையார் வேலை.
பஞ்சக்கச்சம்; பன்னிரு திருமண்; முப்புரி நூல்; முடித்த குடுமி;
- இப்படிப் பரம ஆசார சீலராக வைதிகம் வழுவா வேதியராக வாழ்ந்த என் தந்தை -
காக்கி UNIFORM அணிந்து - CAMP PEON சகிதம் CASE பிடிக்கப் போவார்.
அப்படி - அற்றை நாளில் என் அப்பாவிடம் பணிபுரிந்த ஒரு CAMP PEON பற்றிச் சொல்லத்தான் -
என் - BIO DATAவை விரித்துரைக்கும்படி ஆகிவிட்டது.
ஒரு பிராமணருக்கு - மிக மிகப் பிடித்தமான ஊழியராகவும்; ஓர் உற்றுழியில் உடுக்கை இழந்தவன் கைபோல் உதவிய உத்தம புருஷனாகவும் விளங்கிய -
அந்த CAMP PEON-ன் பெயர் திரு. இப்ராஹிம்!
என்னை ஈன்றெடுத்த ஓரிரு வாரங்களிலேயே -
என் அன்னைக்கு 'ஜன்னி’ கண்டுவிட்டது; உடல் சீதளத்தின் உச்சத்தை எட்டி, உறுப்புகள் விறைத்துப்போய் - நினைவழிக்கும் கொடிய நோய் அது!
அந்தக் காலத்தில் அதற்கான வைத்தியமே - விறகுகளை அடுக்கித் தணல் மூட்டி, அதன் மீது சிறிது நேரம் நிற்கவைப்பார்கள் -
உடல் சீதளம் குறைந்து உஷ்ணம் பெற!
இந்த அசுர வைத்தியமெல்லாம், என் அம்மாவுக்கும் நடந்தது. இந்த நிலையில் பச்சை மண்ணாகக்கிடந்த எனக்குப் பாலூட்டுதல் எங்ஙனம்?
அந்தக் காலத்தில் புட்டிப் பாலெல்லாம், புழக்கத்திற்கு வரவில்லை. ஆவின் பாலால் மட்டும் - சின்ன சிசுவைக் காப்பாற்றிவிட முடியாது; அது சீவிக்க - தாய்ப்பால் MUST!
CAMP PEON இப்ராஹிமின் இல்லத்தரசி அதே நேரத்தில் ஓர் அழகிய குழந்தையை ஈன்றெடுத்துஇருந்தார்.
அந்த இஸ்லாமிய மாது தான் - ஓரிரு மாதங்கள் எனக்குத் தாய்ப்பால் ஊட்டி -
இன்றளவும் நான் பிழைத்திருக்கக் காரணமானவர்கள்.
இது - இந்துவென்றும்; இது - இஸ்லாமென்றும் -
முலைப் பாலைக்கொண்டு மூதலிப்பாருண்டோ? இன்று நான் - முத்தமிழ்ப் பாலருந்த, மூலக்காரணம் முஸ்லீம் பால்தான்!
இளமைப் பருவம் வந்தது. நான் திருச்சி வானொலியில் தற்காலிகப் பணியில் சேர்ந்தேன்.
'உனக்குக் கதை எழுத வருகிறது; எழுதய்யா!’
- என்று, ஊக்கமும் உள்வலியும் தந்து என்னை உற்சாகப்படுத்திய பெருமகனார் -
திரு.A.A.ஹகீம் அவர்கள். உடன் பிறந்த இளவலாய் என்னை வளர்த்தெடுத்தார். பின்னாளில் -
திரு.ஹகீம் அவர்கள் சென்னை வானொலியில் பெரிய அதிகாரியாகப் பணிபுரிந்தார்கள். திரு.ஜெய காந்தனுக்கும் நெருங்கிய நண்பராயிருந்தவர்.
வாயில் PIPE வைத்துப் புகைப்பார்; வெற்றிலைக் காவி வீற்றிருக்கும் பல் வரிசை தெரிய நகைப்பார். இன்னொரு சீதக்காதி அளவு சிந்தை விசாலமானவர்.
அதே - திருச்சி வானொலியில் இன்னொரு இஸ்லாமியப் பெருமகனார் இருந்து -
'ஓய்! நீர் பெரிய கவிஞனாக வருவீரய்யா!’ என்று, என் ஆரம்ப காலக் கவிதைகளைக் கண்டு, என்னை ஆசீர்வதித்தவர்.
அவரே பெரும் கவிஞர்; அவர்தான் 'செந்தாமரை’ எனும் புனைபெயரில் யாப்பொடியாப் பனுவல்களை யாத்த -
திரு.ஹமீது அவர்கள். சதாவதானி திரு.செய்குதம்பிப் பாவலரின் திருமகனார் இந்த ஹமீது!
சென்னைக்கு வந்தேன், சினிமா வாய்ப்புகள் தேடி.
அவ்வப்போது - கடனுக்கு சார்மினார் சிகரெட்டும், வெற்றிலை பாக்குப் புகையிலையும் தந்து -
'வாலி! நீ பெரிய ஆளானப்புறம் - இதுக்கான காசை, உங்கிட்ட வசூல் பண்ணிக்கிறேன்!’ என்று -
சளைக்காமல் கடன் தந்து, என்னை ஆதரித்தது - 'வெற்றிலை பாக்குக் கடை’
திரு.சுல்தான் அவர்கள்!
நாங்கள் - பின்னாளில் பிரபலமான பெரிய ஆளாக வருவோம் என்று கணித்துக் கடன் தந்தார் திரு.சுல்தான்.
அப்படியே வந்தோம், நானும் நாகேஷ§ம்!
படத்திற்குப் பாட்டெழுதும் வாய்ப்பு, இந்தப் பிறவியில் கிட்டாது என்று -
இதயம் ஒடிந்திருந்த வேளையில் - 'வாடா! கண்ணா! - உனக்கொரு வாய்ப்புத் தர்றேன்; கே.வி.மகாதேவன் மியூசிக்ல என் படத்துல எழுது!’ என்று -
பரிவோடு அழைத்து - நைந்து, நசிக்க இருந்த என் நம்பிகை வேரில் -
நாலு சொட்டு நீர் வார்த்து, அதற்கு உயிரூட்டியவர்.
மாடர்ன் தியேட்டர்ஸ் திரு.சுலைமான் அவர்கள்!
திரு.சுலைமான்தான், மாடர்ன் தியேட்டர்ஸில் 'பாசவலை’ படத்தில் பாட்டெழுத -
'பட்டுக்கோட்டை’க்கு வாய்ப்பு வாங்கித் தந்தவர். அவர்தான், சென்னைக்கு வந்து இரு பாகஸ்தர் களுடன், 'பத்மா ஃபிலிம்ஸ்’ என்று ஆரம்பித்து -
சிவாஜி; எம்.ஜி.ஆர்; மற்றும் ஷி.ஷி.ஸி. போன்றவர்களை வைத்துப் படம் எடுத்தவர்.
திரு. S.S.R; விஜயகுமாரி நடித்து, திரு. தாதாமிராசி இயக்கத்தில் தான் தயாரித்த 'நீங்காத நினைவு’ என்னும் படத்தில் -
எழுத்தாளர் திரு. ம.ரா-வின் சிபாரிசை ஏற்று உடனே எனக்கு வாய்ப்பளித்து, புகழேணியின் முதல் படியில் ஏற்றிவிட்டார்!
பிறகு -
திரு.டி.எம்.இப்ராஹிம் எனும் இசையமைப்பாளர், எனக்கு ஓரிரு படங்களில் பாட்டு வாங்கிக் கொடுத்து -
'கவலைப்படாதே! உன் ROOM வாசல்லேயும் ஏகப்பட்ட கார் நிற்கும் காலம் ஒண்ணு வரும்!’ என்று -
தாயினும் சாலப் பரிந்து பேசிய தயாபரன் அந்த இப்ராஹிம் பெருமகன்!
பன்னிரண்டு ஆண்டு காலம் - நான் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் குடியிருந்தேன் - மனைவி, மகனோடு.
சினிமா வருமானம்தானே! முன்பின் வரும்; இருப்பினும், வாடகையை நான் கொடுக்கும்போது வாங்கிக்கொண்டு உதவியவர் -
அந்த வீட்டின் உரிமையாளர் திருமதி.ஸுனைதா பேகம் அவர்கள்.
இப்படி - என் வாழ்வு வடிவு பெற -
உளியாயிருந்து செதுக்கிய உள்ளங்கள் எல்லாம் -
முகமதியர் குலத்தில் முளைத்தவைதான் -
திரைப்படத்தைத் தாண்டி - இலக்கிய உலகிலும் எனக் கோர் இடத்தைத் தந்து அங்கீகரித்த பெருமகனார் -
அமரராகிவிட்ட நீதியரசர் திரு.இஸ்மாயில் அவர்கள். அவர், தலைமை ஏற்றிருந்த சென்னைக் கம்பன் கழகத்தில்-
பலமுறை என்னைப் பாட்டரங்கின் தலைவராக்கி அழகு பார்த்தவர்.
என்னுடைய 'அவதார புருஷ’னை ஆய்வு செய்து, ஐநூறு பக்கத்தில் ஒரு நூலை வெளியிட்டார்கள், அமரர். திரு. டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள். அதற்கு நீண்ட அணிந்துரை அருளி - என்னைப் பெருமைப்படுத்தியவர் திரு.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்!
இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரு நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.
அதுதான் - கவிஞர் பெருந்தகை - என் இனிய இளவல் - திரு.மு.மேத்தா அவர்கள் வசன கவிதையாகப் புனைந்திருந்த நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு!
அதை - ஒரே இரவில் வாசித்து முடித்தேன். அற்புதமோ அற்புதம்! அதைப் படித்த பாதிப்பில்தான் - நான் 'அவதார புருஷ’னை - எழுதப் புகுந்தேன். திரு.மேத்தா, ஓர் இஸ்லாமியப் பெருமகன்.
ஆக - ஓர் இஸ்லாமிய விளக்குதான், இன்னோர் இந்து விளக்கை ஏற்றிவைத்தது எனலாம்!
என் மனைவி இறந்தபோது
மின் மயானம் வரை வந்து எனக்கு ஆறுதலைச் சொன்னவர்கள், இரு இஸ்லாமியப் பெருமக்கள்.
ஒருவர் - புகழ்சால் எலும்பு சிகிச்சை நிபுணர் (ORTHOPAEDIC SURGEON) திரு. டாக்டர் ஜாஹீர் ஹுசைன் அவர்கள்; மற்றொருவர் திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர் திரு. ஆயிரம்விளக்கு உசேன் அவர்கள்.
திரு.உசேன் அவர்கள் உடல் நலம் சரி இல்லாத நிலையிலும் - 'WALKER’ வைத்துக்கொண்டு வந்து என் வருத்தத்தில் பங்குகொண்டவர்.
வளர்ந்து வரும் திரைப்பட இளைய இயக்குநர் திரு.இப்ராஹிம் அவர்கள் -
இரவு முழுக்க என் வீட்டு வாசலில் விழித்தபடி அமர்ந்து - என் மனைவி மறைவுக்குத் துக்கம் காத்தவர்!
'பத்மஸ்ரீ’ விருதை என் சட்டையில் மாட்டும்போது - மேதகு திரு. அப்துல் கலாம் அவர்கள் சொன்னார்கள்.
'இது - உங்ககிட்ட இருக்கிறதுதான், பொருத்தம்!’
நான் -
கூன் பிறைகளால் உருவாக்கப் பெற்ற கோதண்டம்!
விகடன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அண்ணா நினைவு நாடாக்கள் அல்ல....வரலாறு...அவ்வளவு நேரம் ஆகீற்று படிக்க...பகிர்வுக்கு நன்றி....
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|