புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_m10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_m10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10 
13 Posts - 25%
Baarushree
இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_m10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_m10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10 
2 Posts - 4%
prajai
இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_m10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10 
2 Posts - 4%
Rutu
இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_m10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10 
1 Post - 2%
சிவா
இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_m10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10 
1 Post - 2%
viyasan
இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_m10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_m10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10 
10 Posts - 83%
Rutu
இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_m10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_m10இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு அமெரிக்கா காட்டும் வழி


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon May 09, 2011 9:45 am



அருண் நேரு

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவும் பிற உலக நாடுகளும் ஒசாமா பின்லேடனை வலைவீசித் தேடி வந்தன. மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட அந்தச் சம்பவம் அமெரிக்காவுக்கு ஆறாத ரணமாகவே இருந்துவந்தது. இப்போது இஸ்லாமாபாத் அருகிலேயே பின்லேடனைக் கொன்றிருப்பதன் மூலம் இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பழி வாங்கிவிட்டது.

ஒசாமாவுக்கு எதிரான அமெரிக்கா கமாண்டோக்களின் தாக்குதல் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்திருக்கிறது. அமெரிக்காவுக்கும் அதன் உளவுத்துறைக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே இதைக் கூறலாம்.

மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற பிராந்தியங்களில் நடந்த பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பின்லேடனே காரணம் என்று கூறப்பட்டாலும், பல ஆண்டுகளாகவே பயங்கரவாத இயக்கங்களின் தலைவராக அவர் இல்லை. அவரது சொற்படி தாக்குதல்கள் நடந்தன என்றும் கூற முடியாது.

ஒசாமா கொல்லப்பட்ட வீட்டில் தொலைபேசி, தொலைக்காட்சி உள்ளிட்ட எந்தவிதமான தகவல் தொடர்பு இணைப்பும் இல்லை. தகவல் கூறுவதற்கான ஒரு சில ஆள்கள் மட்டுமே வந்துபோய் இருந்திருக்கின்றனர். அவர்களை மட்டுமே கொண்டு மிகப்பெரிய பயங்கரவாத இயக்கத்தை வழிநடத்துவதோ, தாக்குதல்களைத் திட்டமிடுவதோ சாத்தியமில்லை.

அவர் வசித்த வீடு 2005-ம் ஆண்டிலேயே பிரத்யேகமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்கிற தகவல் தெரியவந்திருக்கிறது. ஏதோ ஓர் ஆதாயத்துக்காக பாகிஸ்தான் அரசே, அவருக்குப் புகலிடம் வழங்கியிருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

எத்தனையோ அப்பாவிகளை ஈவிரக்கமே இல்லாமல் கொன்று குவித்தவர் ஒசாமா. அவர் பயங்கரவாதத்தின் சின்னமாக இருந்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனாலும் ஒசாமா மீது தாக்குதல் நடத்தும்போது, அவரது மனைவியும் குழந்தைகளும் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இதற்காகவே அமெரிக்காவும், அமெரிக்கக் கமாண்டோ படைகளும் பாராட்டப்பட வேண்டும்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை ஒரு போருடன் ஒப்பிடலாம். போருக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகள் இதற்கும் பொருந்தும். பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் துணை போக மாட்டோம்; எங்கள் மண்ணைப் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம்; பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தரமாட்டோம் என்றெல்லாம் பாகிஸ்தான் கூறிவந்தது. இது பின்லேடன் கொல்லப்படுவதற்கு முந்தைய நிலை. பாகிஸ்தானின் ராணுவ மையத்துக்கு அருகிலேயே பின்லேடன் சகல பாதுகாப்புடன் வசித்து வந்திருக்கிறார் என்று தெரியவந்திருக்கும் நிலையில், இனிமேலும் பாகிஸ்தானின் பேச்சை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை.

பாகிஸ்தான் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த இந்தக் காலத்தில் எவ்வளவு பரம ரகசியமாக இருந்தாலும், ஒருநாள் அம்பலமாகியே தீரும். இது தெரிந்திருந்தும், பயங்கரவாதிகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து மறுத்துக் கொண்டிருப்பதோ அல்லது யாருக்கேனும் பயந்து கொண்டிருப்பதோ பாகிஸ்தானுக்கு நல்லதல்ல.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 30 முதல் 40 ஆயிரம் அப்பாவிகள் வரை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பலியாகியிருக்கிறார்கள். அரசு நிர்வாகத்திலேயே பயங்கரவாத ஆதரவு சக்திகள் இருப்பதால்தான் இப்படி நாளுக்கொரு தாக்குதல்களை நடத்த முடிகிறது. இதெல்லாம் தெரியவந்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் இருந்த தூதரகத்தை அமெரிக்கா மூடிவிட்டது. விசா வழங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்துவிட்டது. குட்டு வெளிப்பட்டுவிட்ட நிலையில், பாகிஸ்தான் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பயங்கரவாத நாடு என்று பாகிஸ்தான் மீது முத்திரை குத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அந்த நாட்டுக்கு ஆதரவாக யாரும் நிற்கவும் மாட்டார்கள்.

ஒவ்வொரு மதத்திலும் தீவிரவாத எண்ணம் கொண்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பொதுநலமும் கிடையாது. அவர்கள் யாருடைய பிரதிநிதிகளும் அல்லர். சுயலாபம் மட்டுமே அவர்களது குறிக்கோளாக இருக்கும். இத்தகையவர்கள்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அவர்களையும் அவர்களது கருத்துகளையும் புறக்கணித்து விடுவதே நமக்கு நல்லது.

பின்லேடன் கொல்லப்பட்டதால் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும். சரிந்து கிடந்த செல்வாக்கைத் தூக்கி நிறுத்துவதற்கு அவருக்கு இது ஒரு வாய்ப்பு. ஒருவகையில் இது அவரது அதிருஷ்டம்தான். எப்படியோ, பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருக்கிறது என்று ஆண்டாண்டு காலமாக நாம் கூறிவந்தது இன்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகியிருக்கிறது.

ஜனநாயகத்தில் வாக்குவங்கி அரசியல் தவிர்க்க முடியாதது. அது இந்தியாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி. ஒபாமாவின் பதவிக்காலத்தில் அவர் மீது எத்தனையோ எதிர்மறையான விமர்சனங்கள் வீசப்பட்டன. உங்களது பிறந்தநாள் சான்றிதழை வெளியிடுங்கள் என்றுகூட சில நாள்களுக்கு முன்பு அவரை நிர்பந்தித்தார்கள். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

ஒசாமா பின்லேடன் மீதான கமாண்டோ நடவடிக்கை மூலம் எதிரிகளை வாயடைக்கச் செய்திருக்கிறார் ஒபாமா. அவரது அரசியல் பிரசாரத்துக்கு இது பயன்படும். எதிர்காலத்தை இப்போதே கணிக்க முடியாது என்றாலும், மீண்டும் ஒருமுறை ஒபாமா அதிபராவதற்கு ஒசாமா வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்று பலர் கூறுவதையும் நாம் மறுக்க முடியாது.

உலக நாடுகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. நமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் அம்சம் இதுதான். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு வெகு சிறப்பாக எப்போதும் இருந்ததில்லை.

நமது நாட்டின் மக்களாட்சிக்கு ஏற்பவும் சட்டத்துக்கு உட்பட்டும்தான் நாம் நடக்க வேண்டியிருக்கிறது. அதனால் பெரிய நாடுகள் கூறுவதை அப்படியே ஏற்று நடக்கும் போக்கு நம்மிடம் இல்லை. இருந்தாலும் பனிப்போர் காலத்துக் கொள்கைகளையே இன்னமும் நாம் பின்பற்றி வருவதில் அர்த்தமில்லை. மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் இந்தக் கொள்கைகள் நிராகரிக்கப்படுவதை நாம் விரைவில் காணப்போகிறோம். பின்னர் திரிபுராவிலும் இதைக் காணமுடியும்.

கடந்த இருபது ஆண்டுகளாகவே நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எத்தனை பிரச்னைகள் நமக்கு முட்டுக்கட்டைகளாக வந்தாலும் 2011-ம் ஆண்டிலும் நமது வளர்ச்சி சிறப்பாகவே இருந்து வருகிறது. உள்நாட்டுப் பாதுகாப்பும், எல்லைப் பாதுகாப்பும்தான் நமது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத் தடைகளாகும். மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு நாம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பின்லேடன் மறைவாலும், மத்தியகிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் முழு அளவிலான போராலும் உலக நாடுகள் அனைத்தும் உஷாராக இருக்கின்றன. நாம் எந்த அளவுக்குப் பயங்கரவாதத்தை முறியடிக்கத் தயாராக இருக்கிறோம் என்பது சோதனைக்கு உள்ளாக்கப்படும் காலம் இது.

துனீஷியாவிலும் எகிப்திலும் உள்ள நிலைமைக்கும் ஏமன், அல்ஜீரியா, மொராக்கோ, சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உள்ள நிலைமைக்கும் அடிப்படையிலேயே பல வேறுபாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கும் தனித்தன்மைகள் இருக்கின்றன.

பஹ்ரைனிலும் சவூதி அரேபியாவிலும்கூட ஆட்சியாளர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் நமது நாட்டின் வர்த்தகத் தொடர்புகள் ஏராளம். பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய வேண்டும் என்றும், வல்லரசாக வேண்டும் என்றும் ஆசைப்படும் நாம், இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பொறுப்பானவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஒசாமா கொல்லப்பட்டதன் மூலம் செப்டம்பர் 11 அத்தியாயம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் நவம்பர் 26 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் இன்னும் கணக்குத் தீர்க்கப்படவில்லை. பாகிஸ்தானே இதற்குப் பதில் சொல்லக் கடைமைப்பட்டுள்ளது. நாம் அமெரிக்கா அல்ல. நாம் 15 ஆயிரம் கோடி ரூபாய் உதவி கொடுக்கவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறி ஆயுத சப்ளை செய்யவில்லை.

அதனால்தானோ என்னவோ நமது நாட்டில் நடந்த பயங்கரவாதச் செயலுடன் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்துத் தருவதற்கு பாகிஸ்தான் முயற்சி எடுக்கவில்லை. ஹபீஸ் சயீத் முதற்கொண்ட நீண்ட பட்டியல் நம்மிடம் இருக்கிறது. அமெரிக்காபோல நம்மாலும் நடவடிக்கை எடுக்க முடியும்.

பாகிஸ்தான் பயங்கரவாத நாடு என்பதை அமெரிக்கா ஒப்புக்கொள்ளுமானால், பயங்கரவாதிகளைப் பிடிப்பதில் அவர்களுக்கு ஒரு நீதி, நமக்கு ஒரு நீதி கிடையாது என்பதையும் ஏற்க வேண்டும்.

- தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக