புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தவறு நேர்ந்து விட்டது - Page 3 Poll_c10ஒரு தவறு நேர்ந்து விட்டது - Page 3 Poll_m10ஒரு தவறு நேர்ந்து விட்டது - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஒரு தவறு நேர்ந்து விட்டது - Page 3 Poll_c10ஒரு தவறு நேர்ந்து விட்டது - Page 3 Poll_m10ஒரு தவறு நேர்ந்து விட்டது - Page 3 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தவறு நேர்ந்து விட்டது - Page 3 Poll_c10ஒரு தவறு நேர்ந்து விட்டது - Page 3 Poll_m10ஒரு தவறு நேர்ந்து விட்டது - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஒரு தவறு நேர்ந்து விட்டது - Page 3 Poll_c10ஒரு தவறு நேர்ந்து விட்டது - Page 3 Poll_m10ஒரு தவறு நேர்ந்து விட்டது - Page 3 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தவறு நேர்ந்து விட்டது


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Sep 07, 2009 11:42 am

First topic message reminder :

வணக்கம்
மீண்டும் ஒரு தவறு
முன் நான் எழுதியதில் கலிங்கத்துப் பரணி களம் பாடியது என்ற தலைப்பில் உள்ள வரிகள் அவை. தவறு நேர்ந்து விட்டது
மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 07, 2009 9:32 pm

தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ் - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர்.

சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 9:44 pm

நந்திதா அவர்களுக்கு.. நீங்க கேட்ட கேள்விக்கு எனக்கு தெரிந்ததை மட்டும் சொல்கிறேன்..கண்டிப்பா விடை தப்பாய் தான் இருக்கும்.. என்றாலும் ஒரு சிறு முயற்சி ..

தமிழர்கள் பேசுவதால் தமிழ் என்று பேர் உண்டாகியது (தப்பு தானே )

தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு

தமிழ் பிரித்தால் தம்-மிழ் .... "தனது மொழி" என்று பொருள்படும்..."தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" இதுவும் ஒரு கருத்து (தமிழன் சார் இனது சுருக்கம் எனது பதில் )

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 08, 2009 1:02 am

வணக்கம்


நல்ல விளக்கம். இருப்பினும் திரவிட என்ற சொல்லிருந்து தமிழ் வந்தது என்பது எலி பெண்டிலிருந்து ( பெண் எலியிடமிருந்து) ELEPHANT ஆராய்வதைஒக்கும் என்பது தான் என் கொள்கை. கால்டுவெல் அவர்களின் கொள்கையை நான் ஏற்பதில்லை. மலையாளம் என்பது ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன் தோன்றியது. தனது ஒப்பிலக்கணத்தில் மலையாளத்தையும்
சேர்த்தது எவ்வாறு? என்னுடைய ஒரு சிறு கணக்கின் படி இற்றைக்குச் சுமார் 5000 (இது என்னுடைய முடிவு)* வருடங்களாக வளமார்ந்த ஆட்சி செலுத்தி வந்துள்ள மொழி தமிழ். எந்த ஒரு சொல்லுக்கும் வேர்ச் சொல் அளிக்க வல்லதமிழை த்ரமிள என்ற சொல்லிருந்து பிறந்தது என்பது பேரனுக்குத் தாத்தா பிறந்தார் என்பதை ஒக்கும். தமிழின் தொன்மையை நோக்குவார்க்கு த்ரமிள என்ற சொல் மிகப் பிற்பட்ட காலத்தியது என்பது புலனாகும். அதுவரை தமிழுக்கு என்ன பெயர் இருந்தது என்ற ஓர் வினா எழும். த்ரமிளாச்சார் என்ற சொல்லும் ஆதி சங்கரர் திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று கூறியமையும் த்ராவிட
என்ற சொல்லாராய்ச்சிக்கு வேண்டுமானால் உதவலாம். என்னுடைய கருத்தின் படி அரவம் என்பது திருந்தாத் தமிழுக்கு இருந்த பெயராக இருக்க வேண்டும் அரவம் என்றால் பாம்பு என்று ஒலி என்றும் பெயர். அகத்தியருடன் வந்தவர் அருவாளர்கள் என்று ஒர் வரலாறு கூறுகிறது, அது ஏடெழுதியவரின் பிழையாக இருக்கலாம். அரவு என்பது உண்ணின்றெழும் நாதத்தையும் மூண்டெழும் குண்டலினி சக்தியையும் குறிக்கும். குண்டலி சக்தியை அடக்கியாள வல்லார்க்கு அரவு + ஆளர்கள்
(அரவாளர்கள்) என்றும், நாட்டுப்புற வழக்கில் பாம்பாட்டிகள் என்றும் பெயர் வந்திருக்க வேண்டும். மருத மலையில் பாம்பாட்டிச் சித்தரின் சமாதி இருக்கிறது. தமிழ் நாட்டிற்கே உரிய சித்தர்கள் குண்டலி சக்தியை ஆட்டிப் படைக்க வல்லவர்கள் என்பது தேற்றம். மனதை அடக்கி ஆளவல்லவகள் தாம் குண்டலி சக்தியை வயப் படுத்த முடியும். ஆன்மீகமே தன்னை அறிவதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. தமக்குள் இழிந்தவர்களான (இழிதல்- தம்மை இழந்த நிலையிலுள்ள சமாதி நிலை) சித்தர்கள் பெசிய மொழி என்ற பொருளில் தமிழ் என்ற பெயர் வந்திருக்கும் என்பது என் துணிபு. ஸ்ரீஆண்டாளும் எங்கள் மேல் சாபம் இழந்தேல் ஓர் எம்பாவாய் எனக் கூறியது நாங்கள் பாவத்தைப் பற்றிக் கொண்டிருந்தாலும் கூட இறைவா திங்களையும் ஆதித்யனையும் ஒத்த நின் திருக் கண்களால் எங்களை நோக்கினால் அது எங்களை அறியாமல் விலகி விடும் என்ற பொருளில் தான் பாடி இருக்க வேண்டும். திங்கள் மன வளர்ச்சிக்கும் உயிர் வளர்ச்சிக்கும் ஆதித்யன் அறிவு வளர்ச்சிக்கும் உரிய தத்துவங்கள். ப்ராணாமம் செய்வதால் அறிவு விசாலம் அடையும். ப்ராணாயாமத்தில் முக்கிய பங்கு வகிப்பவை உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றும் வெளி விடும் மூச்சுக் காற்றும் அது செல்லும் மற்றும் வெளியேறும் வழிக்கு சந்திர நாடி என்றும் சூரிய நாடி என்றும் பெயர் இடைப்பட்டது சுழுமுனை. சுழுமுனைத் தியானம் செய்தால் தன்னறிவு பெருகும் (ஆத்ம
ஞானம்) விரிவாக எழுத ஆசை தான். படிப்பவர் சலிப்புறா வண்ணம் முடிக்கிறேன்



*இடைச் சங்ககாலப் புலவர்களுள் துவரைக்கோமாலன் என்ற ஒருபுலவர் இருந்திருக்கிறார். அவர் பெயர் துவரைக் கோ மாலன் என்று பிரித்து கண்ணனாக இருக்கலாம் என்பது என் துணிபு (இன்னும் ஆய்ந்து கொண்டிருக்கிறேன்) ஏனெனில் மதுரையை அடுத்துள்ள ஊர்கள் எல்லாம் கண்ணனுடன் தொடர்பு உள்ளதாகவே இருக்கின்றன. (உ-ம்) கோபால சாமி மலை, கிருஷ்ணன்
கோயில். திருவில்லி புத்தூர் அருகில் உள்ள வத்திரா இருப்பு என்ற பெயர் சுபத்ரா இருப்பு என்று இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காரணம் அங்குள்ள ஏரிக்குப் பெயர் அர்ஜுனா நதி. கண்ணனும் தன்னை முனிகளுக்குள் நான் கபிலர் என்கிறார், கபிலர் என்ற பெயர்தமிழ் நாட்டைத்தவிர வேறெங்கும் காண முடியாத பெயராகும். விரிவஞ்சி நிறுத்திக் கொள்கிறேன்.(இதை என்னால் நிறுவ முடிந்தால் இடைச் சங்க காலம் கி மு 3010 முற்பட்டதாக இருக்க வேண்டும்.
என் ஆய்வு முடிவு பெறவில்லை. அதற்குள் தமிழ் என்ற பெயர் குறித்து ஐயம் ஏற்பட்டது. அதனை
உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.


முடிவுரையாக

கம்பன் கூறியவற்றையே எடுத்தாள்கிறேன்.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்கு புக்கென
ஆசை பற்றி அரையலுற்றேன்

முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய

உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் படுபவோ?

கம்பனே தன்னைப் பற்றி இவ்வாறு கூறிக் கொள்ளும்போது
நான் எதைச் சொல்வது. ஆகையால் கம்பன் பின் ஒளிந்து கொள்கிறேன்.


தவறு கண்டார் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டுகிறேன்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 08, 2009 1:07 am

பின் குறிப்பு
திரவிட என்ற
சொல்லிருந்து தமிழ் வந்தது என்பது எலி பெண்டிலிருந்து ( பெண்எலியிடமிருந்து) ELEPHANT ஆராய்வதைஒக்கும் என்பது தான் என் கொள்கை.
என்பதை பெண் எலியிடமிருந்து நல்ல விளக்கம். இருப்பினும் திரவிட என்ற சொல்லிருந்து தமிழ் வந்தது என்பது எலி பெண்டிலிருந்து ( பெண் எலியிடமிருந்து) ELEPHANT ஆராய்வதைஒக்கும் என்பது தான் என் கொள்கை. ELEPHANT பிறந்தது என்று ஆராய்வதை ஒக்கும் என்று படிக்கவும்



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 08, 2009 1:11 am

பின் குறிப்பு
திரவிட என்ற
சொல்லிருந்து தமிழ் வந்தது என்பது எலி பெண்டிலிருந்து ( பெண்எலியிடமிருந்து) ELEPHANT ஆராய்வதைஒக்கும் என்பது தான் என் கொள்கை.
என்பதை திரவிட என்ற சொல்லிருந்து தமிழ் வந்தது என்பது எலி பெண்டிலிருந்து ( பெண் எலியிடமிருந்து) ELEPHANT பிறந்தது என்று ஆராய்வதை ஒக்கும் என்று படிக்கவும்


Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக