புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10 
20 Posts - 3%
prajai
எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_m10எயிட்ஸ் - Aids - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எயிட்ஸ் - Aids


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:39 pm

First topic message reminder :

எயிட்ஸ் என்றால் என்ன?


எயிட்ஸ் என்பது ஒரு தொற்றுநோய். இது ஒரு வகை வைரஸ் (Virus) கிருமியால் உண்டாகிறது. இதை ஒரு தனி நோய் என்பதை விட பல நோய்க் குணங்குறிகளின் தொகுப்பு (syndrome) என்று சொல்லலாம்.
எயிட்ஸ் என்பது AIDS என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி ஒலிபெயர்ப்பு ஆகும். AIDS என்பது Acquired Immune Deficiency என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள நான்கு சொற்களின் முதல் எழுத்துக்களை இணைத்து ஏற்படுத்திய சொல்லாகும். இதனை ‘தேடிப்பெற்ற நிர்பீடனக் குறைபாட்டு நோய்த்தொகுதி’ என்று விஞ்ஞானத் தமிழில் கூறலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:04 pm

எவரை எயிட்ஸ் நோய் தாக்கும்?

எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும்.
ஆனால் கீழ்க் கண்டவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.


* கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும்,

* பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும்.

* பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கு,

* விபசாரிகளுக்கு (ஆண்/பெண்)

* கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசிகள் ஏற்றப்பெறும் நோயாளிகளுக்கு,

* போதை மருந்துகளை ஊசிமூலம் ஏற்றுபவர்களுக்கு,

* அறியாதவரிடம் இருந்து பெற்ற இரத்தத்தைப் பெறும் நோயாளிக்கு.

எனவே இத்தகையவர்களில் ஒருவர் ஆகாமல் இருக்க நீங்கள் திடசங்கற்பம் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

எயிட்ஸ் கிருமி தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால்?

ஒருவர் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸ் தொற்றுவதற்கான ஏதாவது ஒரு செய்கையில் ஈடுபட்டிருக்கலாம்; அல்லது தனக்கோ, அல்லது அறிந்தவருக்கோ எயிட்ஸ் நோய் கிருமி தொற்றியதால் ஏற்படும் அறிகுறிகளை அவதானித்திருக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:06 pm

இந்தச் சூழ்நிலையில் உடனடியாகச் செய்ய வேண்டியவை எவை?


* உடனடியாக உங்கள் குடும்ப வைத்தியரிடமோ, சுகாதார வைத்திய அதிகாரியிடமோ (M..H.) ஏனைய அரசாங்க வைத்தியரிடமோ சென்று ஆலோசனை பெறுங்கள். சொல்ல வேண்டியவற்றை மறைக்காது விபரமாகச் சொல்லுங்கள்.

* தனக்கு வெளியிடப்பட்ட ஒருவரது இரகசியங்களை, மற்றவர்களுக்குப் பரப்பாது இரகசியம் காப்பது வைத்தியர்களின் தொழில் தார்மீகமாகும். எனவே எதையுமே மறைக்காமல் சொல்லலாம். வெட்கப்பட வேண்டியதும் இல்லை.

* மீண்டும் கிருமி தொற்றுவதற்கு ஏதுவான செய்கைகளில் ஈடுபடாதீர்கள்,

* உங்களிலிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்,

* உடலுறவில் ஈடுபடாதீர்கள்

* உடலுறவு வைத்தால், கருத்தடை உறைகளை (Cndms) கட்டாயம் உபயோகியுங்கள்,

* உங்கள் உடற் திரவங்களால் அழுக்கடைந்த உங்கள் ஆடைகளை நீங்களே துவையுங்கள்

* இரத்ததானம் செய்ய முற்படாதீர்கள்

* வேறு எந்த நோய்கள் உங்களுக்கு உண்டானாலும் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுங்கள். அப்பொழுது உங்களுக்கு நோய் தொற்றியிருக்கும் விஷயத்தை மறக்காமல் சொல்லுங்கள்.

* சமுதாயப் பொறுப்புள்ள ஒருவனாக நடந்து கொள்ளுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:06 pm

எயிட்ஸ் நோயாளியைப் பராமரிப்பது எப்படி?

மனிதன் ஒரு சமுதாய மிருகம். அவனால் தனித்து இயங்க முடியாது. அவனுக்கு மற்றவர்களின் உதவி எப்பொழுதுமே தேவைப்படுகிறது. உதவி என்பது சரீர உதவியோ, பொருளாதார உதவியோ மாத்திரமல்ல.

மனித உறவுகளும், புரிந்துணர்வுகளும், ஆதரவும், நட்பும், சினேகம் புன்னகையும், ஆதரவான வார்த்தைகளும், அன்பான ஸ்பரிசமுமே மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.

எயிட்ஸ் அவர்களுக்கு நோய் என்ன என்பது தெரிந்தபின், மரணத்தை எதிர் நோக்கிய அதி பயங்கர நிலையில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் பயம். மனப்பதற்றம், கோபம் போன்றவற்றிற்கு ஆளாகலாம்.

உறவினர்களும், சுகாதார உதவியாளர்களும் இவற்றை எதிர்பார்த்து. அவற்றை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும்.

எயிட்ஸ் கிருமி நோயாளியின் தோலினாலோ சுவாசத்தினாலோ மற்றவர்களுக்குத் தொற்றாது என்பது தெரிந்ததுதானே. எனவே அவர்கள் நாடும் உடல், உள நெருக்கத்தை அவர்களுக்கு அளிக்கத் தயங்காதீர்கள்.

அத்துடன் அவர்கள் தமது எண்ணங்களையும் உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். மற்றவர்களுடன் அளவளாவவும் விரும்பக்கூடும். எனவே அவரைத் தனிமையில் வாடவிடாது, அவருடைய கருத்துக்களைக் கேட்கவும், அவருடன் உரையாடவும் போதிய நேரத்தை ஒதுக்குங்கள்.

அவர் வீட்டில் தனித்திருக்கவோ, சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கவோ தேவையில்லை என்பதை உணர்த்துங்கள், வீட்டின் நாளாந்த வாழ்க்கையிலும், நடவடிக்கைகளிலும் மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றவும், இயங்கவும், ஊக்கம் அளியுங்கள். அவரது சமூகத் தொடர்புகளையும் வேலைகளையும் இடைநிறுத்தாது, தொடர வழி செய்யுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:07 pm

சிலவேளை நோயாளி ஒரு மதகுருவுடன் உரையாட விரும்பக்கூடும். அப்படியாயின் அதற்கும் வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.
கடுமையான காய்ச்சல், வயிற்றோட்டம், மார்புச்சளி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் எயிட்ஸ் நோயாளிகளை வைத்தியசாலையில் வைத்தே பராமரிக்க வேண்டியிருக்கும்.

நோயின் கடுமை குறைந்த பின்னும், ஏனைய நேரங்களிலும் அவரை வீட்டில் வைத்தே பராமரிக்கலாம். பொதுவாக வீட்டில் இருப்பதே நல்லது. ஏனெனில் குடும்ப அங்கத்தவர்களால்தான் அவரது தேவைகளையும். எண்ணங்களையும் இலகுவில் புரிந்து கொண்டு வேண்டிய உதவிகளை உடனுக்குடன் செய்யக் கூடியதாக இருக்கும்.

வைத்தியசாலையில் அவரை வைத்திருக்கும்போது அவரைத் தனிமையான இடத்தில் வைத்துச் சிகிச்சை செய்யவேண்டியதில்லை. அவரிலிருந்து நோய் மற்றவர்களுக்குத் தொற்றலாம் என்ற காரணத்திற்காக அவரை ஒரு போதும் தனிமைப்படுத்த வேண்டியதில்லை.
ஆனால் சில தருணங்களில் மற்றவர்களின் நோய்கள் அவருக்குத் தொற்றுவதைத் தடுப்பதற்காக, அவரைத் தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியம் நேரலாம்.

நோயாளியின் இரத்தம், மலசலம், இந்திரியம், பெண்பாலுறுப்பு நீர் போன்றவற்றால் அழுக்கடைந்த உடைகளில் எயிட்ஸ் வைரஸ் கிருமி இருக்கக்கூடுமாதலால், அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். அவற்றைக் குளோரின் கலந்த நீரில் (Chlorine Solution) கழவலாம் அல்லது கொதி நீரில் அவிக்கவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:08 pm

சுகாதார சேவையாளர்கள் கவனிக்க வேண்டியவை

நோயுற்றவரின் இரத்தத்திலும், இந்திரியம், பெண் பாலுறுப்பு சுரப்பு நீர் போன்ற எல்லா உடற் திரவங்களிலும் (Body Fluids) சீழ் போன்றவற்றிலும் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமி இருக்கக்கூடும். நோயாளியின் இரத்தம் ஆரோக்கியமான தோலில் பட்டால் தொற்றாது. ஆனால் காயமுற்ற, தோல், வாய், மூக்கு, கண், பாலுறுப்பு, மலவாசல் ஆகியவற்றில் தெறித்துப்பட்டால் தொற்றலாம்.

ஒருவகை செங்கண்மாரியை (Hepatitis B) பரப்பும் வைரசும் இம்மாதிரியாக இரத்தத்தின் மூலம் பரவும் தன்மையுடையது.
எனவே அத்தகைய உடற்திரவங்களைக் கையாளவேண்டிய நிலையில் இருக்கும் சுகாதார சேவையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். ஆனால் சுகாதார சேவையாளர்களுக்கு, தமது தொழில் காரணமாக எயிட்ஸ் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும்.

எப்படியிருப்பினும் அவர்கள், தமக்கு இந்நோய் தொற்றாதிருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம். எயிட்ஸ் நோயாளிகளைக் கையாளும்போது மாத்திரமின்றி. வேறெந்த நோயாளியையும் கையாளும் போதும் இவற்றை அவதானிக்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:09 pm

* கை கழுவுதல்: நோயாளியின் இரத்தத்தினாலோ அல்லது ஏனைய உடற் திரவங்களாலோ கை அல்லது வேறு எந்தப்பாகமோ அசுத்தமடைந்தால், அவற்றைச் சோப்பும் நீரும் கொண்டு சுத்தமாகக் கழுவுங்கள். கையுறைகள் (gloves) அணிந்திருந்தாலும், அவற்றைக் கழற்றிய பின்னரும் கைகளைச் சோப்பும், நீரும் கொண்டு கழுவுவது அவசியம்.

* ஊசி ஏற்றுதல்: ஊசி மூலம் மருந்தை ஏற்றுவதற்குப் பதிலாக வாயினூடாக மருந்தைக் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் ஊசி ஏற்றுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஊசி ஏற்றுவது மிக அவசியமாயின், ஒவ்வொரு நோயாளிக்கும் ஊசி ஏற்று முன்னரும், ஏற்றிய பின்னரும் ஊசியையும், கண்ணாடிக் குழல்களையும் கிருமி நீக்கம் செய்வது அவசியம்.

* கையுறை அணிதல்: இரத்தம் அல்லது ஏனைய உடற் திரவங்களைத் தொட்டு வேலைசெய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் கையுறைகளை அணிவது அவசியம். அடுத்த நோயாளியிடம் செல்லும் போது முன்பு பாவித்த கையுறையைக் கழற்றிவிட்டுப் புதிய கையுறையை அணியவேண்டம். அல்லது அதே உறையைக் கழுவிக் கிருமிநீக்கம் செய்தபின் உபயோகிக்கவும். கையுறை கிடைக்காவிட்டால், கைகளை இரத்தம் படாதிருக்க தடித்த துவாய் அல்லது தடித்த கோஸ் சல்லடைத் துணி- (Gaze) துண்டை உபயோகிக்கலாம்.

* காயம்படுவதைத் தடுத்தல்: காயங்களைத் தைக்க ஊசிகளை (Needle) உபயோகிக்கும் போது, சத்திர சிகிச்சைக் கத்திகளை (Blades) உபயோகிக்கும் போதும் அவற்றால் உங்கள் கையோ, விரலோ காயமடைவதைத் தவிர்க்க மேலதிக கவனம் எடுக்க வேண்டும். இல்லையேல் அக்காயத்தின் ஊடாக நோயாளியின் இரத்தத்தில் இருக்கும் கிருமி உங்களுக்குத் தொற்றக்கூடும்.

* கையில் காயம்: கையில் காயம் உள்ள சுகாதார சேவையாளர்கள், நோயாளியின் இரத்தம், சீழ் அல்லது ஏனைய உடற் திரவங்களைத் தொட வேண்டிய சந்தர்ப்பங்களில் கையுறை அணிவது மிகவும் அவசியம். இதனால் தனக்கு நோய் தொற்றுவதைத் தவிர்க்கலாம். கிருமித் தொற்றுள்ள பண்புகளையும் (Infected Wounds) சீழ்வடியும் புண்களையும் உடைய சுகாதார சேவையாளர்கள், அவை குணமடையும் வரை நோயாளிகளைப் பராமரிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் உங்கள் உடலில் உள்ள கிருமிகள், நோயாளிக்குத் தொற்றி, அவரது நிலையை மேலும் மோசமாக்கலாம்.

மேற்கூறிய அடிப்படைச் சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தால், சுகாதார சேவையாளர்கள் தமக்கு மாத்திரமன்றி, நோயாளிக்கும் நல்லது பாதுகாப்பை அளிக்கமுடியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:10 pm

எயிட்ஸ் நோய்க்கு மருந்து:

எயிட்ஸ் நோய் வைரஸ் கிருமியால் உண்டாகிறது என்றும் அதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதையும் ஏற்கனவே கண்டோம்.
HIV வைரஸ் உடலில் பெருகுவதற்கு ரிவேர்ஸ் ரான்ஸ் கிரிப்டேஸ் (Reverse Transcriptase) ) என்ற நொதியம் (Enzyme) தேவை. இதன் செயலைத் தடுப்பதன் மூலம் இந்நோய் பெருகுவதைத் தற்காலிகமாகத் தடுக்கலாம். சிடோவிடின் (Zidovudine) என்ற மருந்து இதற்காகப் பரிசோதனை நிலையில் உபயோகிக்கப்படுகிறது.

HIV வைரஸ் மனித உடலில் உள்ள கலங்களைச் சேர்வதற்கு, சிலவகை மனிதக் கலங்களில் உள்ள CD4 என்ற வகைப் புரதம் தேவை. இப்பொழுது இந்த CD4 என்ற புரதத்தைச் செயற்கை முறையில் உற்பத்தி செய்வதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளார்கள். எனவே CD4 புரதத்தை மருந்தாக உபயோகிப்பதன் மூலம் இவ் வைரஸ் கிருமிகள் மனிதக்கலங்களில் சேர்வதைத் தடுக்கமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

வேறு பல மருந்துகளும் பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றன. ஆனால் எதுவும் எயிட்ஸ் நோயைக் குணப்படுத்தக் கூடியதாக இல்லை.
மருந்து ஆராய்ச்சிகளில் நம்பிக்கை கொண்டு காத்திருக்க வேண்டியதுதான் இன்றைய நிலை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 9:13 pm

இப்புத்தகத்தை எழுத உதவியவை

1. AIDS Action 0 November, 1987 - Ahrtag

1. March, 1988 London

2. June, 1988

2. WHO Reports.

3. What is AIDS - Christian Medical Commission, Switzerland.

4. UPDAIE - 15 July, 1987

5.JAMA June, 1988

6. News Report From The Island Uthayan & Murasoli.


ஆசிரியர் எம்.கே. முருகானந்தன் M.B.B.S (CEY)

நன்றி நூலகம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 26, 2010 10:17 am

எயிட்ஸ் பற்றி மிகவும் அருமையான முறையில் விரிவாகவும் விளக்கபட்டுள்ள இக்கட்டுரை அனைவரும் அறிந்திருக்கவேண்டிய
ஒன்றே.பகிர்வுக்கு மிக்க நன்றிங்ணா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 26, 2010 10:27 am

தகவலுக்கு நன்றி தல



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக