புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_m10மதங்களைக் கடந்த மனிதர்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதங்களைக் கடந்த மனிதர்கள்


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Sun Apr 10, 2011 6:56 pm

ஒரு சஹஸ்ர சண்டிகா யாகம் நடக்கும் வேள்விக் குண்டத்தில் இரண்டு கறுப்பு பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் நெய் ஊற்றும் காட்சியைக் கண்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் வீட்டில் ஒரு சண்டிகா யாகத்தின் நிகழ்ச்சியின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த முஸ்லீம் பெண்கள் யாகத்தில் நெய் வார்ப்பதைக் கண்ட காட்சி அந்த வீடியோவில் வரக் கண்ட எனக்கும் அப்படியே அதிர்ச்சியாக இருந்தது.

அவரிடம் விசாரித்த போது கிடைத்த செய்திகள் சுவாரசியமாக இருந்தன. கேரளாவில் காஞ்சன்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் என் நண்பர். காஞ்சன்காட்டில் சில தலைமுறைகளுக்கு முன்னால் ஓரிடத்தில் ஒரு நம்பூதிரிக் குடும்பத்தினரால் வனதுர்க்கை பூஜிக்கப்பட்டு வந்ததிருக்கின்றது. பின் அந்த நம்பூதிரி குடும்பத்தில் ஒரு ஆண் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதால் இரு சமூகத்தினர் எதிர்ப்பால் அங்கிருந்து அந்த தம்பதிகள் அங்கிருந்து போய் விட பின்னர் அந்த நம்பூதிரிக் குடும்பத்தினரும் அங்கிருந்து போய் விட்டிருந்திருக்கிறார்கள். வனதுர்க்கை பூஜையும் நின்று போயிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் அந்தப்பகுதியில் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்க இந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக உள்ள அந்த ஊர் மக்கள் ஆழமாக ஆராயப்போக இந்தப் பழைய கதை தெரிய வந்திருக்கிறது. இந்துக்கள் அந்த இடத்தில் ஒரு பெரிய வனதுர்க்கை ஆலயத்தை நிர்மாணித்து பண்டிதர்களின் கருத்துக்கிணங்க அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காகவும், சுபிட்சத்திற்காகவும் சஹஸ்ரசண்டிகா யாகம் ஒன்று நடத்தவும் தீர்மானித்தனர். அதற்கு முஸ்லீம் மக்களும் பெரும் தொகையைத் தந்து உதவியிருக்கிறார்கள். அந்த வனதுர்கா கோயிலின் டிரஸ்டியில் ஒருவர் முஸ்லீம். அது மட்டுமல்லாமல் பல முஸ்லீம் சகோதர சகோதரியர் அந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள் என்பதை என் நண்பர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். 2006ஆம் வருடம் ஏப்ரல் 30ல் இருந்து மே 4ஆம் தேதி வரை நடந்த அந்த யாக நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்ததைத் தான் பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

மதம் என்ற பெயரில் துவேஷத்தை வளர்த்துப் பிரபலமாகும் இந்தக் காலத்தில் மதங்களைக் கடந்து பரஸ்பரம் அன்புடன் சேர்ந்து கொள்வதும், அடுத்த மதத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு தாராள மனத்துடன் உதவுவதும் இந்தக் காலத்தில் சத்தமில்லாமல் நடந்து கொண்டு தானிருக்கிறது என்பது ஒரு நிறைவான விஷயமல்லவா? இரு மதத்தினர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டால் அது பெரிய செய்தியாகிறது. அறிக்கைகள், கருத்துக்கள், விவாதங்கள், சண்டைகள், கலவரங்கள் என்று நீண்டு பல நாட்கள் செய்திகள் தொடர்கின்றன. இது போல் நல்லது நடக்கும் போது அரசியல்வாதிகளும், மதவாதிகளும் அதை அறிந்ததாகக் காட்டிக் கொள்வது கூட இல்லை.

கர்னாடகாவில் மங்களூர்-உடுப்பி நெடுஞ்சாலையில் பப்பநாடு என்ற இடத்தில் ஒரு துர்காபரமேஸ்வரி ஆலயம் உள்ளது. சுமார் நூறாண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒரு முஸ்லீம் மீனவருக்குக் கிடைக்க, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அவர் அந்தப்பகுதி இந்துக்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்த இடத்தில் ஆலயத்தைக் கட்டினார்கள். இன்றும் கோயில் திருவிழாவின் ஆரம்பத்தில் முதல் பிரசாதமும், முதல் மரியாதையும் அந்த விக்கிரகத்தைக் கொடுத்த முஸ்லீம் குடும்பத்தினரின் மூத்தவருக்குக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.

இன்றும் குழந்தைகளுக்கு மந்திரிக்கப் பள்ளிவாசலுக்குச் செல்லும் இந்துக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நாகூர் தர்காவிற்கும், வேளாங்கன்னி கோயிலுக்கும் சென்று வழிபடும் இந்துக்கள் எண்ணிக்கை மிக அதிகம். நாக தோஷத்திற்குப் பரிகாரம் செய்ய என்று கர்னாடகாவில் சுப்பிரமணியா என்ற கோயிலில் வழிபாடு செய்ய அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல மதத்தவரும் அதிகம் வருகின்றனர். தன் மகளுக்கு சனி தோஷம் உள்ளதாக அறிந்த ஒரு கிறிஸ்துவப் பெண்மணி மகளுக்காக ஒரு சிவன் கோயிலில் சனிக்கிழமை தோறும் சென்று நவக்கிரகத்தை வலம் வருவதை நானே பார்த்துள்ளேன். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி மதங்களைக் கடந்து தங்கள் தன்மைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப வழிபடும் மனிதர்கள் நம் தேசத்தில் நிறைய இருக்கிறார்கள். அப்படி வழிபடாவிட்டாலும் மற்ற மதங்களை மதிக்கும் பண்பு ஒருசில விதிவிலக்குகளைத் தவிர இந்த தேசத்து மற்றெல்லா மக்களுக்கும் அதிகம் உண்டு. உண்மையில் இந்த தேசத்துப் பொதுமக்களில் 99% பேருக்கு மதம் ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்குக் கவலைப்பட வேறு எத்தனையோ கஷ்டங்களும், பிரச்சினைகளும் என்றுமே இருக்கின்றன. அதோடு மதத்தையும் சேர்த்து பிரச்சினையாக்கிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. எத்தனை மதத்தினருடனும் மதத்தைக் கடந்த மனிதர்களால் சேர்ந்து நிம்மதியாக வாழ முடியும். அவரவர் வழி அவரவருக்கு. வழிகளை வைத்து சண்டை போட அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை, மனமும் இருப்பதில்லை.

அரசியல்வாதிகளும், மதவாதிகள் எனப்படும் மதவியாதிகளும் ஒவ்வொரு சிறு சண்டை சச்சரவையும் ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முனைந்தாலும் இந்த தேசத்தில் திரும்பத் திரும்ப அமைதி திரும்புவது இந்த பரந்த மனமுள்ள மதத்தைக் கடந்த மனிதர்களாலேயே. செய்தித்தாள்களில் தினமும் இவர்கள் செய்தியாக வராவிட்டாலும் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு இவர்கள் ஆற்றிவரும் பங்கு மகத்தானது.

-என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Apr 10, 2011 9:45 pm

மத ஒற்றுமைக்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. நான் ஒரு செய்தியைப்படித்தேன். அதன்படி காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளுக்கு வைகாசிமாதத்தில் தேரோட்டம் நடைபெறும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தேர் வடக்கு ராஜவீதியில் (செங்கழுநீரோடை வீதி) மசுதிக்கு அருகில் மேற்கொண்ட செல்லாமல் நின்று விட்டதாம். அப்போது அங்கிருந்த இஸ்லாமியப் பெரியவர் முயற்சியினால் தேர் அங்கிருந்து நகர்ந்ததாம். அவருக்கு நன்றி தெரிவிக்க கோயிலைச்சேர்ந்தவர்கள் சென்றபோது அப்பெரியவர் அடுத்த ஆண்டிலிருந்து தேரோடும் நாளன்று வரதராஜப் பெருமாள் கோயில் பிரசாதம் அம்மசுதியில் உள்ளவர்களுக்குத் தரவேண்டும் என்று கூறியதாகவும், கோயில் நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனராம். இந்நிகழ்வு இப்போதும் தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் நம் மக்கள் மதவெறியர்கள் அல்ல.

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 10, 2011 9:56 pm

மதத்தின் பெயரால் பணமும் புகழும் பெற நினைக்கும் மதத்தலைவர்களும், அரசியல் வியாதிகளும் மட்டுமே மதத்தின் பேரால் துவேஷம் பரப்புகிறனர்...

பொது மக்கள் பலருக்கு சமூக விழாக்களில் "எம்மதமும் சம்மதம் தான்"



மதங்களைக் கடந்த மனிதர்கள் Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 11, 2011 12:22 am

ஆளுங்க wrote:மதத்தின் பெயரால் பணமும் புகழும் பெற நினைக்கும் மதத்தலைவர்களும், அரசியல் வியாதிகளும் மட்டுமே மதத்தின் பேரால் துவேஷம் பரப்புகிறனர்...

பொது மக்கள் பலருக்கு சமூக விழாக்களில் "எம்மதமும் சம்மதம் தான்"

பிடித்தவன் பிடித்த மதத்திற்கு மாறிக்கொள்ள முடியும் என்பதால் மதம் ஒரு பொருட்டே அல்ல. ஜாதிதான் கொடூரமானது.
உடைபட வேண்டியது முதலில் ஜாதியே

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 11, 2011 12:25 am

இந்த செய்திகளை கண்டும் காணாமல் இருக்கும் அரசியல் வாதிகளை நானும் தேர்தலில் கண்டுக்கப்பிடாது புன்னகை

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Apr 11, 2011 12:28 am

enganeshan wrote:ஒரு சஹஸ்ர சண்டிகா யாகம் நடக்கும் வேள்விக் குண்டத்தில் இரண்டு கறுப்பு பர்தா அணிந்த முஸ்லீம் பெண்கள் நெய் ஊற்றும் காட்சியைக் கண்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் வீட்டில் ஒரு சண்டிகா யாகத்தின் நிகழ்ச்சியின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த முஸ்லீம் பெண்கள் யாகத்தில் நெய் வார்ப்பதைக் கண்ட காட்சி அந்த வீடியோவில் வரக் கண்ட எனக்கும் அப்படியே அதிர்ச்சியாக இருந்தது.

அவரிடம் விசாரித்த போது கிடைத்த செய்திகள் சுவாரசியமாக இருந்தன. கேரளாவில் காஞ்சன்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் என் நண்பர். காஞ்சன்காட்டில் சில தலைமுறைகளுக்கு முன்னால் ஓரிடத்தில் ஒரு நம்பூதிரிக் குடும்பத்தினரால் வனதுர்க்கை பூஜிக்கப்பட்டு வந்ததிருக்கின்றது. பின் அந்த நம்பூதிரி குடும்பத்தில் ஒரு ஆண் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதால் இரு சமூகத்தினர் எதிர்ப்பால் அங்கிருந்து அந்த தம்பதிகள் அங்கிருந்து போய் விட பின்னர் அந்த நம்பூதிரிக் குடும்பத்தினரும் அங்கிருந்து போய் விட்டிருந்திருக்கிறார்கள். வனதுர்க்கை பூஜையும் நின்று போயிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் அந்தப்பகுதியில் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்க இந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக உள்ள அந்த ஊர் மக்கள் ஆழமாக ஆராயப்போக இந்தப் பழைய கதை தெரிய வந்திருக்கிறது. இந்துக்கள் அந்த இடத்தில் ஒரு பெரிய வனதுர்க்கை ஆலயத்தை நிர்மாணித்து பண்டிதர்களின் கருத்துக்கிணங்க அந்தப் பகுதியின் வளர்ச்சிக்காகவும், சுபிட்சத்திற்காகவும் சஹஸ்ரசண்டிகா யாகம் ஒன்று நடத்தவும் தீர்மானித்தனர். அதற்கு முஸ்லீம் மக்களும் பெரும் தொகையைத் தந்து உதவியிருக்கிறார்கள். அந்த வனதுர்கா கோயிலின் டிரஸ்டியில் ஒருவர் முஸ்லீம். அது மட்டுமல்லாமல் பல முஸ்லீம் சகோதர சகோதரியர் அந்த நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார்கள் என்பதை என் நண்பர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். 2006ஆம் வருடம் ஏப்ரல் 30ல் இருந்து மே 4ஆம் தேதி வரை நடந்த அந்த யாக நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்ததைத் தான் பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

மதம் என்ற பெயரில் துவேஷத்தை வளர்த்துப் பிரபலமாகும் இந்தக் காலத்தில் மதங்களைக் கடந்து பரஸ்பரம் அன்புடன் சேர்ந்து கொள்வதும், அடுத்த மதத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு தாராள மனத்துடன் உதவுவதும் இந்தக் காலத்தில் சத்தமில்லாமல் நடந்து கொண்டு தானிருக்கிறது என்பது ஒரு நிறைவான விஷயமல்லவா? இரு மதத்தினர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டால் அது பெரிய செய்தியாகிறது. அறிக்கைகள், கருத்துக்கள், விவாதங்கள், சண்டைகள், கலவரங்கள் என்று நீண்டு பல நாட்கள் செய்திகள் தொடர்கின்றன. இது போல் நல்லது நடக்கும் போது அரசியல்வாதிகளும், மதவாதிகளும் அதை அறிந்ததாகக் காட்டிக் கொள்வது கூட இல்லை.

கர்னாடகாவில் மங்களூர்-உடுப்பி நெடுஞ்சாலையில் பப்பநாடு என்ற இடத்தில் ஒரு துர்காபரமேஸ்வரி ஆலயம் உள்ளது. சுமார் நூறாண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒரு முஸ்லீம் மீனவருக்குக் கிடைக்க, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று அவர் அந்தப்பகுதி இந்துக்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்த இடத்தில் ஆலயத்தைக் கட்டினார்கள். இன்றும் கோயில் திருவிழாவின் ஆரம்பத்தில் முதல் பிரசாதமும், முதல் மரியாதையும் அந்த விக்கிரகத்தைக் கொடுத்த முஸ்லீம் குடும்பத்தினரின் மூத்தவருக்குக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.

இன்றும் குழந்தைகளுக்கு மந்திரிக்கப் பள்ளிவாசலுக்குச் செல்லும் இந்துக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நாகூர் தர்காவிற்கும், வேளாங்கன்னி கோயிலுக்கும் சென்று வழிபடும் இந்துக்கள் எண்ணிக்கை மிக அதிகம். நாக தோஷத்திற்குப் பரிகாரம் செய்ய என்று கர்னாடகாவில் சுப்பிரமணியா என்ற கோயிலில் வழிபாடு செய்ய அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல மதத்தவரும் அதிகம் வருகின்றனர். தன் மகளுக்கு சனி தோஷம் உள்ளதாக அறிந்த ஒரு கிறிஸ்துவப் பெண்மணி மகளுக்காக ஒரு சிவன் கோயிலில் சனிக்கிழமை தோறும் சென்று நவக்கிரகத்தை வலம் வருவதை நானே பார்த்துள்ளேன். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி மதங்களைக் கடந்து தங்கள் தன்மைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப வழிபடும் மனிதர்கள் நம் தேசத்தில் நிறைய இருக்கிறார்கள். அப்படி வழிபடாவிட்டாலும் மற்ற மதங்களை மதிக்கும் பண்பு ஒருசில விதிவிலக்குகளைத் தவிர இந்த தேசத்து மற்றெல்லா மக்களுக்கும் அதிகம் உண்டு. உண்மையில் இந்த தேசத்துப் பொதுமக்களில் 99% பேருக்கு மதம் ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்குக் கவலைப்பட வேறு எத்தனையோ கஷ்டங்களும், பிரச்சினைகளும் என்றுமே இருக்கின்றன. அதோடு மதத்தையும் சேர்த்து பிரச்சினையாக்கிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. எத்தனை மதத்தினருடனும் மதத்தைக் கடந்த மனிதர்களால் சேர்ந்து நிம்மதியாக வாழ முடியும். அவரவர் வழி அவரவருக்கு. வழிகளை வைத்து சண்டை போட அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை, மனமும் இருப்பதில்லை.

அரசியல்வாதிகளும், மதவாதிகள் எனப்படும் மதவியாதிகளும் ஒவ்வொரு சிறு சண்டை சச்சரவையும் ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முனைந்தாலும் இந்த தேசத்தில் திரும்பத் திரும்ப அமைதி திரும்புவது இந்த பரந்த மனமுள்ள மதத்தைக் கடந்த மனிதர்களாலேயே. செய்தித்தாள்களில் தினமும் இவர்கள் செய்தியாக வராவிட்டாலும் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு இவர்கள் ஆற்றிவரும் பங்கு மகத்தானது.

-என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/

வணக்கம்
மிக நல்லப் பதிவு. ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்னால் வந்த எனது பதிவு “ பாசம் பேருந்தில், பகை ராகெட்டில்” இதோடு மிகவும் ஒத்துப் போய் ஒன்றொடு ஒன்று பொருந்தி இணைவதால் அதை மீண்டும் எடுத்து வைக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக