புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
56 Posts - 46%
heezulia
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
3 Posts - 2%
Shivanya
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%
prajai
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
12 Posts - 2%
prajai
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
4 Posts - 1%
Baarushree
அன்பு Poll_c10அன்பு Poll_m10அன்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 9:55 pm

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.



அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒரு உணர்வும் அநுபவமும் ஆகும். அன்பு என்ற சொல்லை ஆங்கிலத்தின் "love" என்ற சொல்லுக்கு இணையாகக் கருதினாலும், "love" என்னும் சொல் குறிக்கும் எல்லாப் பொருளையும் "அன்பு" என்னும் சொல் குறிப்பதில்லை. "love" என்பதற்கு ஆங்கிலத்தில் பல பொருள்கள் உள்ளன. பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள "விருப்பம்" (நான் பாயாசம் "விரும்பி" உண்பேன்), இருவருடையே காணப்படும் பொதுவான அன்பு, மிக நெருக்கமான "காதல்" உணர்வு வரை பல பொருள்களில் அச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. அன்பு என்ற சொல்லுக்குரிய உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்குத் தனித்துவமானது எனலாம். இவ்வாறு மொழிகளிடையே "அன்பு" என்னும் பொருள் தரக்கூடிய சொற்கள் குறிக்கும் உணர்வுகள் பலவாறான வேறுபாடுகளைக் கொண்டவையாக இருப்பதால், அன்புக்கு உலகம் தழுவிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுப்பது கடினமானது.
தமிழிலும் அன்பு என்னும் உணர்வு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுவதைக் காணலாம். தாய் மீதான அன்புக்குச் சிறப்பான இடம் உண்டு. அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.

பொருள்


மதராஸ் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிக்கன், அன்பு என்னும் சொல்லுக்கு "தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று" எனப் பொருள் தருகிறது. இதிலிருந்து அன்பு என்பது பெற்றோர், மனைவி, பிள்ளைகள், பிற உறவினர், நண்பர்கள் என்று பலவகைப்பட்டோர் மீதும் கொள்ளும் பற்று அன்பு என்னும் சொல்லால் குறிக்கப்படுவதை அறியலாம். அது மட்டுமன்றி உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் நீதி நூல்கள் கூறுவதிலிருந்து அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமன்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ளக்கூடிய பற்று என்றாகிறது. திருக்குறள் அன்பைப் பற்றிப் பேசும்போது, அதனை "அகத்துறுப்பு" என்கிறது. இதன் மூலம் பண்டைத் தமிழர் அன்பை உடலின் ஒரு உறுப்பாகவே கருதினர் போல் தெரிகிறது.


ஐரோப்பிய சின்னமானது காதலை குறிக்கின்றது.



ஆழ்ந்த பாசம் பற்று மிகுந்த உணர்ச்சிகளும் அனுபவங்களும் நமக்கு அன்பை உணர்த்துகிறது. நாம் கொண்டுள்ள அன்பு நமக்கு பிடித்த உணவின் மீது உள்ள பிரியமாகவும் இருக்கலாம் அல்லது நமக்கு பிடித்த ஒரு மனிதனின் மீதுள்ள காதலாகவும் இருக்கலாம். அன்பை பலதரப்பட்ட மன நிலைகளில், மனகிளர்சசிகளில் நம்மால் உணர முடிகிறது.அன்பின் பலவிதமான அர்த்தமும் உபயோகமும் பலதரப்பட்ட உணர்ச்சிகளோடு வெளிப்படும்பொழுது, அது மற்ற உணர்வுகளைவிட சிக்கலானது என்று நம்மால் உணர முடிகிறது.

அன்பு என்பது மிகவும் வலுமையான உணர்வு; தவிர்க்கமுடியாதது. அன்பைக் கொள்ளாதவர்களை அன்பு கொள்ளும் என்ற நம்பிக்கை காலம் காலமாக நிலவி வருகிறது. காதலை மையமாகக்கொண்டு பல இலக்கியங்களும், கவிதைகளும், காவியங்களும்,'உண்மை அன்பை தேடும்' படங்களும் வெளிவந்துள்ளன. இன்னும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.மனிதனை ஏழு விதப் பாவங்களையும் செய்யத்தூண்டக்கூடிய வல்லமையைக்கொண்டது காதல்.

ஒருவர் மீது ஆழமான வெளிப்படுத்தக் கூடிய மெல்லிய உணர்வே காதல் . காதல் உருவம் அற்றது. .இந்தக் காதலே, பலவித உணர்வுகளாய், கட்டுப்படுத்த முடியாத ஆசையாய்,அன்யோன்யமான நேசமாய், குடும்ப பாசமாய், எதிர்பார்ப்பில்லாத காதலாய்,நாம் இருவரும் ஒன்றே என்ற நினைப்பாய், இறையன்பாய் உருவகம் கொள்கிறது. தனது பல்வேறான அவதாரங்களின் மூலம் மனிதருக்கிடையே ஏற்படும் உறவிற்கும் வழி வகுக்கிறது.உளவியலை பெரிதும் தழுவி வருகின்ற இந்த காதலைக் கொண்டு பல கலைஞரின் படைப்பு உருவாகின்றது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 9:58 pm

விளக்கம்


வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கேற்ப ஆங்கில சொல்லான "லவ்" ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஆனால் தெளிவானப் பலப் பொருள்களைக்கொள்ளும்.லவ் என்ற ஒரே சொல்லைவைத்து ஆங்கிலம் புலப்படுத்தும் விஷயத்தை மோதர மொழிகள் பல வார்த்தைகளைக்கொண்டு செய்கின்றன; எடுத்துக்காட்டுக்கு கிரேக்க மொழியில் லுவுக்கு பல சொற்கள் உள்ளன. பண்பாட்டிலுள்ள வித்தியாசங்கள் அன்புக்கு ஒரே விளக்கத்தை தருவதில் இடையூறுகள் ஏற்படுத்துகின்றன.[4]

அன்பின் இயற்கையையும் அதன் சாராம்சத்தையும் பற்றி நிறைய பிவாதங்கள் இருந்தாலும், அந்த சொல்லின் வெவ்வேறு கோணங்களை எது அன்பு இல்லை எனதை கண்டுபிடிப்பதன் மூலம் நாம் அறியலாம்.எளிமையான பிரியமாக இருக்கும் காதலை வேறுப்பைக்கொண்டும், பொது அக்கறையைக்கொண்டும் வேறுபடுத்திக்காட்டலாம். அதே போன்று தீவிரமாக இருக்கும் விருப்பத்தை காமத்தைக்கொண்டும் ஒருவருக்கொருவர் இடையே மலரும் கற்பனையுடன் கூடிய காதல் கதையும் நட்பையும் கொண்டு வேறுபடுத்திக்காட்டலாம். அன்பை குறிப்பிடுகின்ற பல வார்த்தைகள் நட்புடன் சம்பந்தப்படுத்தியும் பேசலாம்.

உருவமற்று இருக்கும் அன்பு இருவருக்கிடையே தோன்றுகிறது. இது ஒருவர் மீது மற்றோவர் கொள்ளும் நேசத்தை அனுபவமாக்குகிறது.அன்பு என்பது பரிவுடன் கவனித்துக்கொள்ளுதல், அல்லது ஒரு மனிதன், பொருள் அல்லது தன் (நார்சிசிசம்) மேலே உண்டாகும் பிரியமாகும். (cf.).

ஒவ்வொரு நாட்டுப் பண்பாட்டிலும் அன்பைப் புரிந்துகொள்வதில் வித்தியாசங்கள் இருந்தாலும், அன்பைப் பற்றிய கருத்துகள் காலப்போக்கில் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளன.வரலாற்று நிபுணர்கள் கற்பனையுடன் கூடிய காதல் கதைகளை மத்திய காலத்திற்கு குறியிட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்னாலேயே இந்த பிணைப்புகள் இருந்தன என்பதை நமக்கு தொன்மையான காதல் கவிதைகள் உணர்த்துகின்றன.[5]

அன்பு உருவமில்லாமல் இருப்பதாலும் அது சிக்கலான ஒன்றாகக் கருதப் படுவதாலும் அதனது விரிவுரை சிந்தனையை நிறுத்தும் ஒரு எண்ணமாகக் கருதப்படுகிறது.இதனை விளக்குவதற்கு, வெர்ஜிலின், "அன்பு அனைத்தையும் ஆட்கொள்ளும்" மற்றும் தி பீட்டில்ஸின், "உனக்கு தேவையானது எல்லாம் அன்பே" போன்ற பல பழமொழிகள் இருக்கின்றன. பேர்ட்ராண்ட் ரஸ்ஸல் மற்றொன்றுடன் தொடர்புகொண்டு மதிப்பு பெறுவது காதல் அல்ல அது முழுமையான மதிப்பைக்கொண்டது என்று விவரிக்கிறார்.சமய சித்தாந்தவியலாளரான தாமஸ் ஜே ஊர்த், "மற்றவரை மனதில் கொண்டு அவரது நலத்திற்காக செயல்படுங்கள்" என்று கூறுகையில்,[மேற்கோள் தேவை]தத்துவஞானி கோட்ட்பிரிஎது லேயப்நீஸ், "மற்றவர் கொள்ளும் இன்பத்தின் மூலம் இன்பம் பெறுதல் என்று கூறுகிறார்."[6]




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 9:58 pm

தன்னலமற்ற அன்பு


ஒரு மனிதன் தனது நாடு, கொள்கை அல்லது தான் கொண்டிருக்கும் இலட்சியம் மீது அன்பு கொள்ளலாம்.அதே போல் , இறக்கத்துடன் செயல் வரம்பை மீறி செயல் படுபவர்களும், தன்னிச்சையாக ஊழியம் செய்பவர்களும் அடுத்தவர் மீது கொண்டுள்ள அன்பினால் செயல் படுவதை விட, அவர்கள் பொது நலக் கொள்கைகளுடனும் திடமான அரசியல் நம்பிக்கைகளுடனும் செயல் படுகிறார்கள்.ஒரு பொருளின் மீது, விலங்குகள் மீது, தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஒரு செயலின் மீது அன்பு கொண்டு மனிதன் தன்னை இணைத்துக்கொள்ளலாம்.இதனை, பாரபீலிய என்று அழைக்கலாம்.[7]



[தொகு] இருவருக்கிடையே ஏற்படும் காதல்


மனிதருக்கிடையே ஏற்படும் காதலை 'இன்டெர்பெர்சனல் லவ்' என்று அழைக்கலாம்.ஒரு சாதரண பிரியத்தை விட இது மிகுந்த வீரியமுள்ள மனோபாவத்தை கொண்டது.நம்மிடம் திரும்பக் காட்டப்படாத உணர்வுகளை திரும்பப் பெறாத அன்பு என்று கருதலாம்.மனிதருக்கிடையே இருக்கின்ற அன்பு இருவருக்கிடையே இருக்கும் உறவுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது.அப்படிப்பட்ட அன்பு குடும்பத்தினர் மத்தியில், நண்பர்களிடையே அல்லது ஜோடிகள் இடையே நிலவுகின்றது.அன்பால் ஏற்படும் உளவியலை சார்ந்து வரும் கோளாறுகளில் ஒன்றை எரோடாமேனியா என்று அழைப்பர்.

காலம் காலமாக வரலாறு, தத்துவ சாஸ்திரம், மதக்கோட்பாடுகள் காதல் எனும் அதிசயத்தை ஊகித்துக் கொண்டே இருக்கின்றன.சென்ற நூற்றாண்டில், உளவியல் அறிஞர்கள் இதனைப்பற்றி நிறைய எழுதி உள்ளார்கள்.கடந்த சில ஆண்டுகளில் வளர்ந்து வருகின்ற உளவியல், வளர்ந்து வருகின்ற உயிரியல், ஆதிமனிதனைப்பற்றிய படிப்பு, நியூரோ சயின்ஸ், உயிரியல் போன்ற அறிவியல்கள் காதலின் குணத்தையும் அதன் செயல்பாட்டையும் கண்டறிய முனைப்புடன் இருக்கின்றன.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 9:59 pm

உடல் இரசாயன அடிப்படையில்அன்பு 230px-Chemical_basis_of_love அன்பு Magnify-clip
இரசாயன அடிப்படையில் அமைந்திருக்கும் காதலைப்பற்றிய எளிமையான கருத்து.




முதன்மைக் கட்டுரை: =Love_(scientific_views)&actionLove (scientific views)

உயிரியல் சார்ந்த இன உதாரணகள், காதலை பசி, தாகம் போன்று பாலூட்டியின் தூண்டுதள்ளகவே கருதிகின்றன.[8] காதல் சங்கதி நிபுணர்,காதல் அனுபவங்களை ஒன்றன் மேல் ஒன்று அமைகின்ற நிலைகளாக பிரித்துப் பார்க்கிறார்.அவை சிற்றின்ப ஆசை, இனக்க்கவர்ச்சி,இணைப்பு ஆகும்.ஒரு மனிதனை மற்றவனுக்கு அடையாளம் காட்டுவது சிற்றின்ப ஆசை.கற்பனையுடனான இனக்கவர்ச்சி மனிதன் இணைய தூண்டுதலாக உள்ளது.இணைப்பானது, கணவன், மனைவி மீது சகிப்புத்தன்மையை அதிகப்படுத்தி ஒரு குழந்தையையும் பெற கருவியாக அமைகிறது.

இணையுதலை மேம்படுத்தி, எதிரினம் மேல் விருப்பம் கொள்ள உறுதுணையாய் இருப்பது சிற்றின்ப ஆசை. டெஸ்டோஸ்டொரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் இரசாயனங்கள் சுரக்க காரணமாக உள்ளது.இந்த தாக்கம் பொதுவாக சில வாரங்கள் அல்லது மாதங்கள் வரைக்கும் நீடிக்கும்.இனக்கவர்ச்சி இணைவதற்காக, இன்னொருவர் மீது ஏற்படும் தனிப்பட்ட கற்பனையுடன் கூடிய விருப்பம்.இது முதலில் சிற்றின்ப ஆசையாகவே தலை தூக்குகிறது.தற்கால நியூரோ சயின்ஸ் படிப்புகள், காதல் வயப்படும் போது நமது மூளை பெரோமொநெஸ், டோபமின், நோர்பீன்பிரின், சேறோடோனின் போன்ற ஏறசாயங்களை சுரக்கிறது. இவை அம்படமிங்களை போன்று செயல் பட்டு மூளையின் மகிழ்ச்சி மையத்தை தூண்டுவிட்டது, இதயத்துடிப்பு அதிகரித்து, பசியின்மை, தூகமினமாய் மற்றும் அதிகமான மனக்கிலர்ச்சிக்கு காரணமாக உள்ளன. இந்த நிலை ஒன்றிலிருந்து மூன்றரை வருடங்கள் வரை நீடிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.[9]

சிற்றின்ப ஆசையும், இனக்கவர்ச்சியும் தற்காலிகமானவை, ஆதலால் நீண்ட நாள் நிரந்தர உறவுகளுக்கு மூன்றாவதாக ஒரு நிலை தேவை.இணைப்பு ஒரு வித பிணைப்பை ஏற்படுத்தி பலகாலங்களுக்கு நீடிக்கும் உறவுகளை ஆதரிக்கிறது.இணைப்பு, கல்யாணம் மற்றும் குழந்தைகள், நட்பில் உள்ள பகிர்ந்த அக்கறைகள் போன்ற வாக்குறுதிகளாகும் .இந்த நிலை சிறிய கால உறவுகளை தூண்டுகின்ற மற்ற நிலைகளை விட அதிக அளவில் ஆக்சிடோசின், வாசோபிரசின் ஆகிய இரசாயனங்களுடன் சம்பந்தம் கொண்டுள்ளது. [9]

நரம்பு வளர்ச்சிக்காரணி 'நர்வ் கிராட் சென்டர் (NGC)' எனும் பிரோடீன் மாலிகியூல் முதலில் காதல் வயப்படும்போது அதிகமாக தென்பட்டாலும், ஒரு வருடம் கழித்து அது இருந்த நிலைக்கே திரும்பிவிடும்.[10]

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 10:00 pm

[தொகு] உளவியல் அடிப்படையில்

அன்பு 180px-Sri_Lankan_woman_and_child அன்பு Magnify-clip
பாட்டியும் பெரக்குழந்தையும், இலங்கை




Further information: Human bonding

அன்பை எல்லாம் உணர்ந்த ஒன்றாகவும், அளவுலாவுதலில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகவும் உளவியல் சித்தரிக்கின்றது.உளவியல் நிபுணர் ராபர்ட் ஸ்டேர்ன்பெர்க் அவர் விதிபடுத்தியுள்ள காதல் முக்கோண கோட்பாட்டில், காதலுக்கு மூன்று பாகங்கள் உள்ளது என்று குறுப்பிடுகிறார்.அவை அன்யோன்யம், நம்பிக்கை கொடுத்தல் மற்றும் தீவிர உணர்ச்சி ஆகும்.அவரவர் வாழ்க்கையிலுள்ள இரகசியங்களைப் பல விவரங்களை இருவர் பகிர்ந்து கொள்கையில் அதனை அன்யோன்யம் எனலாம். இதனை நட்பிலும், கற்பனை மிகுந்து இருக்கும் காதலிலும் காணலாம்.நிரந்தரமான் உறவை எதிர்ப்பார்க்கும் போது ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொடுத்தல் வேண்டும்.தீவிர விருப்பத்துடனும் எனக்கவர்ச்சியுடனும் இருக்கும் அன்பே இப்போது பெரிய அளவில் காணப்படுகிறது.ஒருவர் மேல் ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பிலும், கற்பனை மிகிந்த காதலிலும் தீவிர விருப்பம் காட்டப்படுகின்றது.எல்லா வகையான காதலிலும் இந்த மூன்று பாகங்களும் வெவ்வேறு அளவு கோள்களில் இருக்கின்றன.அமெரிக்க உளவியல் நிபுணர் சிக் ரூபின் சயிகோமெட்ரிக்ஸ் மூலம் காதலை விளக்குகிறார். அவரது ஆராய்ச்சி காதல் இணையுதல், பரிவு காட்டுதல், அன்னியூனத்துடன் பழகுதல் என்ற மூன்று காரணிகளைக் கொண்டுள்ளது என்று காட்டுகிறது.[11] [12]

அன்பு 180px-Columpio_Veracruz_059 அன்பு Magnify-clip
சகோதர பாசம் (ஹோஆஸ்தெக் துவக்கத்தைக்கொண்ட ஹிஸ்பேனிய நாட்களுக்கு முன் செதுக்கிய சிற்பம், 250–900 கி.பி.)ஆதிமனிதனின் பொருட்களைக்கொண்டுள்ள அருங்காட்சியகம், சலப்பா , வேரகிரூஸ், மெக்சிகோ




மின்சார கோட்பாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு பின்னர், அதாவது கூலோம்ப் விதி "பாசிடிவ் மற்றும் நெகடிவ் சார்ஜுகள் ஒன்றன் பால் ஒன்றை இழுக்கும்" என்று உறுதி செய்த பிறகு, மனித வாழ்வை பாவித்து வந்த கோட்பாடுகளிலும் மாற்றங்கள். அதிலிருந்து, " எதிர்துருவம் ஒன்றை ஒன்று கவரும்" என்பது தெளிவாகிறது.கடந்த நூற்றாண்டில் நடந்த ஆராய்ச்சிகள், இந்த கருத்தில் அவ்வளவு உண்மை இல்லை என்று கண்டுபிடித்ததுடன், ஒருவர் மாதிரி குணங்களும், பண்புகளும் கொண்ட இருவர் ஒருவர் மேல் ஒருவர் தங்களை அறியாமலேயே ஈர்க்கப்படுகின்றனர்.அனால் இதற்கும் சில விதி விலக்குகள் உண்டு. மக்கள் தங்களை மாதிரி இலாதவரியும் விரும்புகிறார்கள். எடுத்துக்காட்டிற்கு, ஒர்தொகோனால் இமியூன் சிஸ்டம் கொண்டவர்கள் மணக்கும் போது அவர்கள் பால் உள்ள அனைத்து நற்குணங்களும் அவர்களது குழந்தையை சென்றடைகிறது.[13] கடந்த சில ஆண்டுகளில் பிணைப்புகள், சேர்க்கைகள், பற்றுகள் உறவுகள் சார்ந்ஷா மனித இணைப்புக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பொதுநலக் கொள்கையுடனும் தன மேல் கொண்ட அன்புடனும் காதல் வெளிப்படும் என்று வாடா நாட்டைச்சேர்ந்த சிலர் குறிப்பிட்டுள்ளனர்.இந்த கருத்து ஸ்காட் பெகின் ஆராய்ச்சிகளில் வெளிப்படுகின்றது. அவர் அபபிளயிட் சயிகாலஜியில் செய்திருக்கும் ஆராய்ச்சிகளின் மூலம் காதலின் விளக்கங்களையும் அதன் அபாயங்களையும் உணர்த்துகிறார்.மற்றொருவரது ஆன்மாவின் வளர்ச்சியின் மீதுகொண்டுள்ள அக்கறை மற்றும் தன மேல் கொண்டுள்ள எளிமையான அன்பின் கலவை தான் காதல் என்று பெக் கூறுகிறார்.[14] ஒரு கலவையாக பார்க்கும் போது காதல் ஒரு உணர்ச்சி என்பதைவிட அது ஒரு செயல்பாடு என்று சொன்னால் அது தகும்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 10:05 pm

அறிவியல் மாதிரிகளின் ஒப்பீட

பசி, தாகம் போல பாலூட்டியின் உணர்வு காதலுக்கு உந்துதலாக இருக்கிறது என்று அறிவியல் மாதிரிகள் குறிப்பிடுகின்றன.[8] உளவியல் காதலி சமுகம் மற்றும் பண்பாட்டுக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றது.இந்த இரு கருத்துகளிலும் உண்மை இருக்கலாம்.காதல் ஆக்சிடோசின் , நியூரோடிரோபின்ஸ் (NGF) மற்றும் பெரோமொனேபோன்ற ஹார்மோன்களால் ஆட்சி செய்யப்படுகிறது.இவற்றின் உருவகமே காதலில் இருப்பவரின் சிந்தனையையும் பழக்க வழக்கங்களையும் ஆட்டிவைக்கிறது.மரபு உயிரியல் கருத்து காதலில் இனக்கவர்ச்சி, பிணைப்பு என்று இரு உந்து சக்திகள் உள்ளதாக காட்டுகிறது.வயதடைந்த இருவர் இடையே ஏற்படும் சேர்க்கை பிறந்த குழந்தையும் அதனது தாயும் சேர்வதைப்போலாகும்.மரபு உளவியல் கருத்துகள் காதலை தோழமை அன்பு மற்றும் தீவிர விருப்பத்தின் கலவையாக பார்க்கின்றன.தீவிர விருப்பமானது மிகுந்த ஏக்கத்துடன் உடல் ரீதியான் எழுச்சியுடன் (விரைவான சுவாசம், அதிகரித்த இதயத் துடிப்பு) தோன்றும்.தோழமை அன்பு ஒருவித அன்னியூநியத்துடன் கூடிய பாசத்தினால் ஏற்படுவது.இதில் உடல் ரீதியான எழுச்சி இராது.

காதல் வயப்படுபவரின் மூளையை ஸ்கான் செய்யும்போது அது மூளை குழப்பத்தில் இருப்பவரின் மூளையை போல் இருக்கும் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.மூளையில் பசி, தாகம், போதை பொருட்களின் தாக்கம் ஏற்படுத்தும் அதே இடத்தில் தான் காதலும் தனது தாகத்தைக் காட்டும்.ஆதலால் புதிதாக தோன்றிய காதலில் மனக்கிளர்ச்சியை விட உடல் கிளர்ச்சி மிகுந்து இருக்கும்.காலப்போக்கில், இந்த உணர்ச்சிகள் மலிவடைந்து நிரந்தரமான உறவுகளை ஏற்படுத்தும் மூளைப்பகுது செயல் படத்துவங்குகிறது.Dr. ஆண்டிரூ நியூபெர்க் என்கின்ற நியூரோ சயின்டிஸ்ட் காதல் மருந்தைப் போன்றது என்கிறார்.ஏனென்றால், காதல் இல்லாமல் இந்த மனித சமுதாயம் அழிந்து போகும

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 10:11 pm



பண்பாட்டைச் சார்ந்த கருத்துகள

இவ்வளவு காலத்திற்கு பிறகும் கூட
"நீ எனக்கு கடன் பட்டிருக்கிறாய்" என்று சூரியன் பூமியிடம் சொல்வதில்லை

இப்படிப்பட்ட அன்பு என்ன செய்கிறது என்று பாருங்கள்

!'
அது வானத்தைப் பிரகாசிக்கக் செய்கிறது . (ஹபீஸ்)
பெர்சிய பண்பாடும் மொழியும் நமக்கு தீவிரமான அன்பைப்பற்றியும், காதலைப்பற்றியும் கூற நமக்கு அளித்திருக்கும் அழியா சிகரங்கள் ரூமி, ஹபீஸ் மற்றும் ]சாடிஆவர்.காதலைக் குறிக்கும் ishq என்கின்ற அராபிய சொல்லிலிருந்து eshgh என்கின்ற பெர்சிய சொல் மூலம் கொண்டுள்ளது.பெர்சிய பண்பாட்டில் காதல் அணித்தையும் சூழ்ந்துள்ளது என்றும் எல்லாம் காதலே என்கின்ற பரவிய கருத்தும் நிலவுகிறது.அது நண்பர்களை நேசிப்பதிலிருந்து, குடும்பத்தினர் மீது கொண்டிருக்கும் அன்பை கடந்து, நமது வாழ்கை ஏலட்சியத்தை அடைவதற்கு தேவையான இறை அன்பு வரை இருக்கிறது.ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னர், சாட


ஆதாமின் குழந்தைகள் ஒரே தசையைக் கொண்டவர்

ஒரே உயிரிலிருந்து ஜனனம் கொண்டனர்

காலத்தின் சீற்றத்தை ஒருவனைத் தாக்கினாலும்

மற்றவனால் நிம்மதி கொள்ள முடியாது.

துன்பப்படுபவனைக் கண்டு நீ பாவப்படாவிட்டால்

நீ "மனிதன்" என்று அழைக்கப்பட தகுதியானவன் அல்ல.

,என்கிறார

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 10:11 pm

சீன மற்றும் சைனிக் பண்பாட

காதலைக் குறிக்கும் சீன மரபு எழுத்து () அழகிய உணர்ச்சிகளாகிய , "ஒற்று கொள்ளுதல்" , "உணர்ந்து கொள்ளுதல்","புரிந்து கொள்ளுதல்" ஆகிய மூன்றுக்கும் நடுவே இதயமாய் வருகிறது
சீன மொழியிலும் பண்பாட்டிலும் அன்பைகுறிக்க வெவ்வேறு மூல வார்த்தைகள் உள்ளன.
Qing சக்கிரவர்த்தியின் முதல் பெயர்.


Ai
() வினைச்சொல்லாக (e.g., வோ ஐ நி , "நான் உன்னை காதலிக்கிறேன்") பெயர்ச்சொல்லாகaiqing (), "காதல்" அல்லது "கற்பனை மிகுந்த காதலில்" உபயோக்கிக்கப் படுகிறது.1949 லிருந்து முக்கிய சீனப் பகுதியில்,airen (, "காதலர்," இன்னும் சொல்லப்போனால், "காதல் மனிதன்") கணவன் அல்லது மனைவியைக் குறிப்பிட உபயோகிக்கப்படுகிறது; ஒருகாலத்தில் தப்பான கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்ட இந்த சொல் இப்போதும் தைவானில் அதே தப்பான நோக்குடன் பார்க்கப்படுகிறது.
Lian
() தனிப்பட்டு நிற்பதில்லை, அது சொற்றொடருடன் சேர்ந்து வரக்கூடியது. "காதலில் உள்ளேன்" (, tan lian'ai ai )-யை கொண்டுள்ளது , "காதலர் " (, lianren ) அல்லது "ஹோமோ செக்சுவாலிட்டி" (, tongxinglian ).
பொதுவாக உணர்ச்சி என்ற பொருளைத்தரும் Qing (), காதல் என்ற பொருளையும் தரும்.இது aiqing என்ற சொல்லில் அடங்கியுள்ளது(); qingren () "காதலரை" சுட்ட உதவுகிறது.
கன்பியூசனிசத்தில்,lian என்றால் இரக்கமுள்ள பரிசுத்தமான காதல்.லியான் அனைவராலும் பின் தொடரப்பட வேண்டும்.இது அறவாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது.சீன தத்துவ ஞானி Mozi,ai ()என்ற தத்துவத்தை கன்பியூசியனில் உள்ள lian க்கு நிகரானதாக இருக்க படைத்தார்.மொகிசமிலுள்ள Ai , குடும்பம், நண்பர்கள் என்று இல்லாமல் எந்தவித எதிர்பார்ப்புமின்றி எல்லோர் மீதும் காடும் காதலைப் பற்றி குறிப்பிடுகிறது.ஊதாரித்தனமும் அருவருத்தக்க தாக்குதல்களும் காதலுக்கு (ai ) பகையானவை. Mozi யின் சிந்தனை மேலோங்கி இருந்தாலும் சீனர்கள் கன்பியூசியன் lian இன் பார்வையிலேயே இன்னும் காதலிப் பார்க்கின்றனர்.
ஒரு உறவில் தன்னை அந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் அந்த உணர்ச்சியை 0}Gănqíng () என்பர்.ஒருவன் தனது காதலை நல்லgănqíng இன் மூலம் வெளிப்படுத்தலாம், இதனை மற்றவருக்கு உதவுவதன் மூலமோ அல்லது அவருக்கு தேவியான வற்றை செய்துத் தருவதன் மூலமோ வெளிக்காட்டலாம்.
கட்டாயம் நடக்கும் என்கின்ற விதியின் தொடர்பு Yuanfen ().அர்த்தமுள்ள உறவு பலமாக yuanfen னை சார்ந்து வருகிறது.இது அதிர்ஷ்டத்துடன் ஒப்பிடப் படுகிறது. "ஒருவருக்காக ஒருவர் பிறந்தார்", "தலைவிதி", "தலைஎழுத்து" என்று ஆங்கிலத்திலும் இதே தத்துவம் கொண்டாடப்படுகிறது.
Zaolian
(Simplified: , Traditional: , pinyin: zǎoliàn ), சிறுவர் மத்தியில் உள்ள "முதல் காதலைப்" பற்றி விளக்குகிறது.வயதுவந்த சிறுமி சிறுவன் இடையே இருக்கும் அன்பு பரிமாற்றத்தையும், குழந்தைப்பருவத்தில் மலரும் அன்பையும் Zaolian விவரிக்கிறது.இந்த தத்துவம் இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் காதலில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தக் கொண்டுவரப்பட்டது.குழந்தைகள் எதிர் கொள்ள வேண்டிய அபாயங்கள், பெற்றோரின் மன சஞ்சலங்கள் ஆகியவற்றை தெளிவாக நாளிதழ்களின் மூலமும் மற்ற சாதனைகள் மூலமும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 10:13 pm

ஜப்பானிய மொழி
அடிப்படையான விருப்பத்தையும் ஆழ்ந்த அக்கறையைக்காட்டும் அன்பும் ஜப்பானிய புத்த மதத்தில், ai (愛) என்று அழைக்கப்படுகிறது.இது தனிச்சையுடன் செயல்படுவது மற்றும் ஞானம் பெற்று தன்னலமற்று செயல்படுவது என்று இரு வழியிலும் செல்லக்கூடியது.
"இடம்கொடுத்து சார்ந்திருத்தல்" என்ற பொருளைக்கொன்ட ஜப்பானிய சொல் Amae (甘え), குழந்தை வளர்ப்பு பண்பாட்டைக் சார்ந்து வருகிறது.ஜப்பானிய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அரவணைத்து கட்டியணைத்து வளர்க்கும் போது அவரது குழந்தைகள் அந்த தாய்மார்களை கெட்டியமாகப் பிடித்துக்கொண்டு சேவகம் செய்ய வேண்டும் என்பதை இது தெரிவிக்கிறது.வாழ்க்கையின் பின் பகுதியில் சமுக உறவுகளில் எடுபடும் மனிதனின் உறவு amae என்கிற தாய்-குழந்தை உறவை சார்ந்தே வருகிறது, என்று சமுகவியலாளிகள் கூறுகின்றனர்.



[தொகு] பண்டைய கிரேக்கம்


கிரேக்கம் அன்பு என்கின்ற சொல்லை வெவ்வேறு கோணத்தில் வித்தியாசமாக உபயோகிக்கின்றது.எடுத்துக்காட்டிற்கு கிரேக்கம் பீலியா , இரோஸ் , அகபே , ஸ்டோர்ஜ் ,மற்றும் சீனியா என்கின்ற சொற்களைக் கொண்டுள்ளது.ஆயினும் காலம் கழிந்த போதிலும் மற்ற மொழிகளில் வேறு படுத்த முடிந்ததைப்போல கிரேக்க மொழியில் பொருள்களை முற்றிலுமாகப் பிரிக்க முடியவில்லை.அதே சமையத்தில், வினைச்சொர்க்களாகிய பீலியோ மற்றும் அகபோ கிரேக்க விவிலியத்தில் ஒரே போருளைக்கொண்டுள்ளன என்பது அறியப்பட்டுள்ளது.
இன்றைய கிரேக்கத்தில் அகபே (ἀγάπη agápē ) என்றால் காதல் என்று பொருள்.ஸ'அகபோ என்ற சொற்றொடர் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்கிற பொருளைத்தருகிறது.அகபோ என்கின்ற வினைக்கு நான் நேசிக்கிறேன் என்று பொருள். இது இரோஸ் விவரிக்கும் உடல்ரீதியான கவர்ச்சியை விட்டு விட்டு தூய்மையான் பரிசுத்தமான அன்பைக்காட்டுகிறது.அனால் இரோஸ் கொண்டுள்ள அதே பொருளுடன் அகபேவும் வரும் என்பதற்கு எடுத்துக்காட்டுகளும் உண்டு.இது "ஆன்மாவின் காதல்" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
புலனுணர்வைச் சார்ந்த விருப்பம் ஏக்கத்துடன் தீவிரப்ப்படும்போது அதனை இரோஸ்(ἔρως érōs ) எனலாம்.எரோடா எனும் கிரேக்க வார்த்தைக்கு காதலுள் என்ற பொருள் உண்டு.பிளேடோ அவரது விளக்கத்தை மீண்டும் விவரிக்கலானார்.இரோசை ஒரு மனிதனிப் பார்த்தவுடன் ஏற்படுவது என்ன்று விளக்குவதைக் காட்டிலும் அது ஒரு மனிதனின் உள்ளழைப்பாராட்டுவது அல்லது அழகையேப் பாராட்டுவது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.அழகைப்பற்றிய ஞானத்தை ஆன்ம திரும்பிப்பெற இரோஸ் உதவுகிறது.இது மனநிலையைப்பற்றிய உண்மையை அறியவும் உதவுகிறது.இரோஸ் மூலம் உண்மையை அறியக் காதலர்களும் தத்துவ ஞானிகளும் ஆர்வமாக உள்ளனர்.சில மொழிப்பெயர்ப்புகள் இதனை "உடலின் மேல் கொண்ட காதல்" என்று சொல்கின்றன.
அரிஸ்டோட்டில், தீவிர விருப்பமில்லாமல் நல்லொழுக்கத்துடன் கூடிய காதலை பீலியா (φιλία பீலியா )என்று அழைத்தார்.நண்பர்கள், குடும்பம், சமுதாயமிடம் உண்மையாக இருப்பதுடன் நல்லொழுக்கம், சமத்துவம் மற்றும் பரீட்சயத்தைக் கொண்டிருக்கவேண்டும்.நடைமுறைக் காரணங்களால் பீலியா சிறப்புடன் விளங்குகிறது;உறவில் இருக்கும் ஒருவர் அல்லது இருவருமே இதன் மூலம் பயனடைகிறார்கள்.இது "மனதின் காதல்" என்றும் பொருள் தரும்.

பெற்றோர் தங்களது குழந்தைகளின் மீது கொண்டுள்ள அன்பிற்கு ஸ்டோர்ஜ் (στοργή storgē ) எனப்பெயர்.
பண்டைய கிரேக்கத்தில், பழக்கத்தில் இருந்த விருந்தோம்பலை சீனியா(ξενία xenía ) என்று அழைத்தனர். இதில் முன்பின் அறியாதவர்களையும், விருந்தாளிகளாகக் கொண்டு விருந்தளிப்பவர் உபசரித்தனர். இந்த உபசரிப்பு ஒரு நட்புடன் கூடிய சடங்காகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது.நன்றியைக்கூட எதிர்பாராமல் உன்ன உணவும், இருக்க இடமும் அளித்து விருந்தை சிறப்பு செய்தனர்.கிரேக்க புராணங்களான ஹோமேரின் இலியாட் மற்றும் ஓடைசி விருந்தோமபலின் மகத்துவத்தை காட்டுகின்றன.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 10:14 pm

துருக்கியம் (ஷாமன் & இஸ்லாமியம்)


துருக்கிய மொழியில் அன்பு பலப் பொருள்களுடன் வருகின்றது. ஒரு மனிதன் கடவுள் மீது, மற்றொருவன் மீது, தனது பெற்றோர் மீது அல்லது குடும்பத்தின் மீது அன்பு கொள்ளலாம்.ஆனால் அதே மனிதன் எதிர் இனத்தைச சார்ந்த ஒரே ஒரு மனிதன் மீதுதான் அன்பு கொள்ள முடியும்.இதனை "ask" என்று அழைப்பர்.காதலிப்பதற்கு Aşk என்ற சொல்லை துருக்கியில் இன்னும் உபயோகிக்கின்றனர்.கற்பனியுடன் கூடிய காதலைப்பற்றி பேசும் பொது அல்லது இனக்கவர்ச்சியில் ஏற்படும் காதலைப்பற்றி பேசும் போது ask என்ற சொல்லைக் கொண்டே பேசுகின்றனர் துருக்கியர்.ஒரு துருக்கியன் நான் காதலில் உள்ளேன் என்று ask அய் வைத்துக் கூறினால் அது அவன் பெற்றோர் மீது கொண்டுள்ள அன்பாக இருக்கவே முடியாது, அது எதிர் இனத்தவரைச் சார்ந்த அன்பாகத்தான் இருக்க முடியும்.இந்த சொல் துருக்கிய மொழிகளான அசர்பைஜான மொழியிலும் (eşq), கசக்க மொழியிலும் (ғашық) இதே பொருளைக்கொண்டுதான் வருகின்றது.



[தொகு] பண்டைய ருமானியம் (இலத்தீன்)


ஆங்கில சொல்லான் லேவ்விறகு இலத்தீனில் நிறைய வினைச்சொற்கள் உள்ளன.
Amāre என்ற சொல் நேசிப்பது என்ற போருளைத்தருகிறது. இது இன்றும் இத்தாலியில் வழக்கில் உள்ளது.ருமானியர்கள் இதனை பாசத்தை விளக்கவும் தீவிரமான விருப்பத்தைக் காட்டவும் உபயோகித்தனர்.இந்த வினைச்சொல்லிலிருந்து வருகின்ற amans காதலனையும் , amator, "தொழில் ரீதியான காதலரையும்," amica , "பெண் தோழியையும் " குறிக்கின்றன.இதனை விலை மாதருடன் அடிக்கடி ஒப்பிட்டு பேசுவர்.amor என்கிற பெயர்ச்சொல் காதல் சங்கதிகளைப் பற்றி விவரிக்க உதவுகிறது.இந்த மூல வார்த்தையே amicus —"நண்பன்"—மற்றும் amicitia , "நட்பு" தோன்றக் காரணமாக இருக்கிறது.சிசெரோ எழுதிய ஆன் பிரெண்ட்ஷிப் (de Amicitia )நட்பின் ஆழத்தை பெரிய அளவில் உணர்த்துகிறது.அடுத்த இனத்தை கவர ஒவிட் எழுதிய Ars Amatoria (காதல் கலை )என்ற நூல் பெரிதும் உதவியாக உள்ளது. திருமணத்திற்கு வெளியே உள்ள உறவுகளிலிருந்து அதிக கண்டிப்பைக் காட்டும் பெற்றோர் வரைக்கும் இந்து நூலில் அலசி ஆராயப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் எளிமையாக பிடித்திருக்கு என்று சொல்லக்கூடிய இடங்களில் இலத்தீன் amāre என்ற சொல்லை உபயோகிக்கிறது.அனால் இதையே இலத்தீனில் placere அல்லது delectāre கொண்டு நாம் கூற முடியும். delectāre என்பது பெரிதும் Catullus எனும் காதல் கவிதைகளில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.
Diligere பாசம் காட்டுதல், உயர்வில் வைப்பது போன்ற இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறதே தவிர கற்பனைக்கூடிய காதலை விளக்க அல்ல.இந்த சொல் இரு ஆண் நண்பர்களுக்கிடையே உள்ள நட்பை விவரிக்க சரியானது.diligentia ,என்ற பெயர்ச்சொல் "ஊக்கத்துடன்" அல்லது "எச்ச்சரிக்கைத்தன்மை," காட்டுகிறது.
Observare உம்diligere உம் ஒரே பொருளைத்தருகின்றன.observantia என்ற பெயர்ச்சொல் "மதிப்பு" அல்லது "பாசம் " என்கின்ற பொருளைத்தருகின்றது.
கிருஸ்த்தவ விவிலியத்தில், இலத்தீன் மொழிபெயர்ப்பில் Caritasஎன்ற சொல் வருகிறது. அது "தயையான அன்பைக்" குறிக்கிறது.அனால் இதற்கான பொருள் மரபு ருமானிய இலக்கியங்களில் காணப்பட வில்லை.இது கிரேக்க வார்த்தையில் இருந்து எழுந்துள்ளதால் இதற்கு உரி வினைச்சொல் வழக்கில் கிடையாது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக