புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலையின் - தேர்தல்களம்-2011- கொள்ளையர் கூட்டமொன்று..
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
அன்பு ஈகரை உட்ன்பிறப்புகளே. என் ரத்தத்தின் ரத்தமான ஈகரை உறவுகளே..
இன்று முதல் தமிழகத்தேர்தல களத்தின் சூடான சுவையான பிரச்சாரத்தை தொடங்கிவைப்பதில் பெருமைப் படுகிறேன்.தமிழத்தின் மேல் அக்க்றை கொண்ட ஒரு பொதுச்சேவகன் என்ற முறையில் தேர்தல்களத்தில் யார் யார் எப்படி என்பதை ஊருக்கு வெளிச்சம் காட்டி ஒரு நல்ல எதிர்காலத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் இந்த திரியைத் தொடங்கி வைக்கிறேன்.
இந்த திரியில் என்னால் இடப்படும் படங்கள் வீடியோக்கள் எனது பிரச்சாரக்கருத்துக்கள் முழுகக் முழுக்க எனது சொந்தப்பொறுப்பே அன்றி ஈகரையின் தலைமை நடத்துனர் என்ற விதத்தில் என் கருத்தைத் திணிப்பதாக யாரும் எண்ண வேண்டாம்.
எனக்கு சரியென்று பட்டவைகளை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் நியாயம் என்று படுவதை உங்கள் மனசாட்சி சொல்லுவதை கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
முழுக்க முழுக்க தமிழகத்தின் மேல் எனக்குள்ள அக்கறையைக் காட்டுவதே அன்றி எந்த காழ்ப்புணர்ச்சியும் கட்சி வேறுபாடும் மனதில் கொண்டு இக்கருத்துக்களை நான் பதியவில்லை என்பதை அறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனி எனது அதிரடி பிரச்சாரம் தொடங்கும். இந்த திரி குறைந்த பட்சம் ஓர் ஆயிரம் பேர்களையாவது சிந்திக்கவைத்தால் அது எனக்கு மிகப்பெரிய வெற்றி எனக்கருதுவேன்.
அன்புடன்
கலை
அன்பு ஈகரை உட்ன்பிறப்புகளே. என் ரத்தத்தின் ரத்தமான ஈகரை உறவுகளே..
இன்று முதல் தமிழகத்தேர்தல களத்தின் சூடான சுவையான பிரச்சாரத்தை தொடங்கிவைப்பதில் பெருமைப் படுகிறேன்.தமிழத்தின் மேல் அக்க்றை கொண்ட ஒரு பொதுச்சேவகன் என்ற முறையில் தேர்தல்களத்தில் யார் யார் எப்படி என்பதை ஊருக்கு வெளிச்சம் காட்டி ஒரு நல்ல எதிர்காலத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் இந்த திரியைத் தொடங்கி வைக்கிறேன்.
இந்த திரியில் என்னால் இடப்படும் படங்கள் வீடியோக்கள் எனது பிரச்சாரக்கருத்துக்கள் முழுகக் முழுக்க எனது சொந்தப்பொறுப்பே அன்றி ஈகரையின் தலைமை நடத்துனர் என்ற விதத்தில் என் கருத்தைத் திணிப்பதாக யாரும் எண்ண வேண்டாம்.
எனக்கு சரியென்று பட்டவைகளை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் நியாயம் என்று படுவதை உங்கள் மனசாட்சி சொல்லுவதை கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
முழுக்க முழுக்க தமிழகத்தின் மேல் எனக்குள்ள அக்கறையைக் காட்டுவதே அன்றி எந்த காழ்ப்புணர்ச்சியும் கட்சி வேறுபாடும் மனதில் கொண்டு இக்கருத்துக்களை நான் பதியவில்லை என்பதை அறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனி எனது அதிரடி பிரச்சாரம் தொடங்கும். இந்த திரி குறைந்த பட்சம் ஓர் ஆயிரம் பேர்களையாவது சிந்திக்கவைத்தால் அது எனக்கு மிகப்பெரிய வெற்றி எனக்கருதுவேன்.
அன்புடன்
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பார்ந்த ஈகரை நண்பர்களே...
அறிந்தோ அறியாமலோ நானும் ஈகரைக்கு அமைதி பஙக்ம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டுவிட்டேன்.
இனி இந்த பிரச்சினைகளைத் துவக்கியது யார் என்றெல்லாம் ஆராய்ந்து நியாயம் கேட்டு உஙக்ளிடம் நான் நிற்கவும் விரும்பவில்லை.
ஒரு தலைமை நடத்துனராக இந்த அமைதிபங்கத்துக்கு காரணமானவருக்கு எச்சரிக்கைப்புள்ளிகளை வழங்கியும் அதே அளவுக்கு சமமான காரணமான எனக்கு அதிகபட்ச தண்டனையாக எனது தலைமை நடத்துனர் பதவியை விட்டு விலகியும் என் மனதுக்குப் பட்ட வகையில் நியாயம் செய்துவிட்டேன்.
இதனால் ஈகரையில் இருந்து நான் முற்றிலும் விலகிவிட்டதாகப் பொருள் வேண்டாம். ஒரு அடிப்படை உறுப்பினனாக உங்களுடன் ஒருவனாக இருந்து ஈகரையின் மேல் எனக்கு இருக்கும் மாறாப் பற்றின் காரணமாய் என்னாலான பதிவுகளையும் படைப்புகளையும் வழங்கி என்றும் இணைந்திருப்பேன் என்பதை உறுதி கூறிக்கொள்கிறேன்.
இதுகாறும் என் நியாயமான செய்கைகள் எவரையேனும் வருத்தி இருப்பின் மனப்பூர்வமாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டு உங்களில் ஒருவனாக என்னை இணைத்துக் கொள்ளும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
அறிந்தோ அறியாமலோ நானும் ஈகரைக்கு அமைதி பஙக்ம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டுவிட்டேன்.
இனி இந்த பிரச்சினைகளைத் துவக்கியது யார் என்றெல்லாம் ஆராய்ந்து நியாயம் கேட்டு உஙக்ளிடம் நான் நிற்கவும் விரும்பவில்லை.
ஒரு தலைமை நடத்துனராக இந்த அமைதிபங்கத்துக்கு காரணமானவருக்கு எச்சரிக்கைப்புள்ளிகளை வழங்கியும் அதே அளவுக்கு சமமான காரணமான எனக்கு அதிகபட்ச தண்டனையாக எனது தலைமை நடத்துனர் பதவியை விட்டு விலகியும் என் மனதுக்குப் பட்ட வகையில் நியாயம் செய்துவிட்டேன்.
இதனால் ஈகரையில் இருந்து நான் முற்றிலும் விலகிவிட்டதாகப் பொருள் வேண்டாம். ஒரு அடிப்படை உறுப்பினனாக உங்களுடன் ஒருவனாக இருந்து ஈகரையின் மேல் எனக்கு இருக்கும் மாறாப் பற்றின் காரணமாய் என்னாலான பதிவுகளையும் படைப்புகளையும் வழங்கி என்றும் இணைந்திருப்பேன் என்பதை உறுதி கூறிக்கொள்கிறேன்.
இதுகாறும் என் நியாயமான செய்கைகள் எவரையேனும் வருத்தி இருப்பின் மனப்பூர்வமாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டு உங்களில் ஒருவனாக என்னை இணைத்துக் கொள்ளும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- anbulakshmi.vijayakumarபண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
2011 உலகக் கோப்பையை வெல்வதே கனவு: சச்சின்
by ரபீக் on Wed Jun 16, 2010 10:17 am
+
2011-ம் ஆண்டு ஆசிய கண்டத்தில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்வதே எனது கனவு என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.
÷இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு இந்தியா முன்னேறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
÷தற்போது உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக எங்களை தயார் செய்து வருகிறோம். உலகக் கோப்பையை வெல்வது என்பது எனது கனவு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கனவும் அதுதான். மும்பை இறுதிப்போட்டியில் விளையாடும் கனவு நனவாக எல்லாம் சேர்ந்து வரவேண்டும்.
÷தற்போதுள்ள இந்திய அணி திறமைவாய்ந்ந்த அணியாக திகழ்வதால் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு நல்லவாய்ப்பு உள்ளது. எனவே நீண்டகாலத்திற்கு பிறகு இந்த உலகக் கோப்பையில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
÷தற்போது இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாகத் திகழ்கிறது. முதலிடம் பெறுவது என்பது கடினமானது. தொடர்ந்து அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
÷நாங்கள் கடந்த 20 மாதங்களாக சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறோம். எல்லா அணிகளும் முதலிடத்திற்கு வர விரும்புகின்றன. அதனால் நாங்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடி வருகிறோம் என்றார் டெண்டுல்கர். எதிர்காலம் பற்றி டெண்டுலல்கரிடம் கேட்டபோது, எப்போது கிரிக்கெட்டில் விளையாட்டின் மீதுள்ள உற்சாகம் குறைகிறதோ, அப்போது ஓய்வுபெறுவேன். நீண்டகாலம் கிரிக்கெட் விளையாட முடியும் என்று கருதுகிறேன். கிரிக்கெட் வேட்கை குறையும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்தார்.
by ரபீக் on Wed Jun 16, 2010 10:17 am
+
2011-ம் ஆண்டு ஆசிய கண்டத்தில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்வதே எனது கனவு என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.
÷இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு இந்தியா முன்னேறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
÷தற்போது உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக எங்களை தயார் செய்து வருகிறோம். உலகக் கோப்பையை வெல்வது என்பது எனது கனவு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கனவும் அதுதான். மும்பை இறுதிப்போட்டியில் விளையாடும் கனவு நனவாக எல்லாம் சேர்ந்து வரவேண்டும்.
÷தற்போதுள்ள இந்திய அணி திறமைவாய்ந்ந்த அணியாக திகழ்வதால் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு நல்லவாய்ப்பு உள்ளது. எனவே நீண்டகாலத்திற்கு பிறகு இந்த உலகக் கோப்பையில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
÷தற்போது இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாகத் திகழ்கிறது. முதலிடம் பெறுவது என்பது கடினமானது. தொடர்ந்து அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
÷நாங்கள் கடந்த 20 மாதங்களாக சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறோம். எல்லா அணிகளும் முதலிடத்திற்கு வர விரும்புகின்றன. அதனால் நாங்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடி வருகிறோம் என்றார் டெண்டுல்கர். எதிர்காலம் பற்றி டெண்டுலல்கரிடம் கேட்டபோது, எப்போது கிரிக்கெட்டில் விளையாட்டின் மீதுள்ள உற்சாகம் குறைகிறதோ, அப்போது ஓய்வுபெறுவேன். நீண்டகாலம் கிரிக்கெட் விளையாட முடியும் என்று கருதுகிறேன். கிரிக்கெட் வேட்கை குறையும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்தார்.
கருணாநிதி மீண்டும் என்னை ஆறாவது முறையாக முதலமைச்சராக ஆக்குங்கள் என்று உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்காக கருணாநிதி தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கின் படி, (பிள்ளைகள், மகள், மகன்கள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள் சொத்து நீங்கலாக) பல கோடிக்கு அதிபதி.
சரி, தனது அரசியல் வாழ்வை தொடங்கி, அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஆரம்ப காலத்தில் கருணாநிதியின் சொத்துக் கணக்கை பார்ப்போமா ?
இந்த விபரங்கள் சவுக்கு சொல்வது இல்லை. கருணாநிதியின் ஊழல்களை விசாரித்த நீதிபதி சர்க்காரியா சொன்னது.
கோபாலபுரம் நான்காவது தெருவிலுள்ள இரண்டாவது எண்ணுள்ள வீட்டை ரூ.50,000க்கு வாங்கியது. அதற்காக நிதி ஆதாரம்.
MSR 1335 என்ற எண்ணுள்ள காரை 5,000
விற்றதிலிருந்து கிடைத்த தொகை
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து 45,000
கடனாக பொற்ற தொகை
இந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனமே ஒரு டுபாக்கூர் நிறுவனம். இந்த நிறுவனத்தில், யார் பங்குதாரர்கள் என்பது தெரிந்தால் உங்களுக்கே புரியும்.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் 1951ல் தொடங்கப் பட்டது. இந்த நிறுவனத்தில், கருணாநிதி, காசிலிங்கம் மற்றும், கேடி சகோதரர்களை பெற்றெடுத்த புண்ணியவான் மாறன் ஆகியோர் பங்குதாரர்கள்.
காசிலிங்கம் என்பவர், 1965ல் அந்நிறுவனத்திலிருந்து விலகிக் கொண்டார். பிறகு, மாமனும் மருமகனும் மட்டுமே பங்குதாரர்கள். இந்த நிறுவனம், கருணாநிதி முதலமைச்சராக இருந்து சம்பாதித்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக பயன்படுத்தப் பட்டது.
கருணாநிதி முதலமைச்சரானதும், இந்நிறுவனத்தின் பங்குதாரராக இருப்பதிலிருந்து விலகுகிறார். விலகியபின், தயாளு அந்நிறுவனத்தின் பங்குதாரராகிறார். இந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்து கருணாநிதி பெற்ற கடன் விபரங்கள்.
31.03.1967 2,55,112
31.03.1968 2,87,112
31.03.1969 2,77,112
31.03.1971 2,88,002
இந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனம், கருப்பை வெள்ளையாக்குவதற்கு பயன் பட்டது என்று கூறப்பட்டது அல்லவா ? எப்படி வெள்ளையாக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களில் பல்வேறு நபர்கள் பல்வேறு தொகைகளை கடனாக கொடுத்ததாக எழுதப் பட்டிருந்தது. அவர்கள், விசாலாட்சி ஆச்சி, காசிநாதன் செட்டியார், ராமநாதன் செட்டியார், சௌந்தரவல்லி ஆச்சி, சொக்கலிங்கம் செட்டியார், சுந்தரம் செட்டியார், சோமசுந்தரம், ராம.வெள்ளையன், லட்சுமி, மாணிக்கச் செட்டியார், உண்ணாமலை ஆச்சி, இந்திரா ஆச்சி, லட்சுமணன் செட்டியார், திருநாவுக்கரசு செட்டியார், திண்ணப்ப செட்டியார், கருப்பன் செட்டியார், லட்சுமணன் செட்டியார் ஆகியோர்.
இவர்களிடம் கடன் பெறப்பட்டதாக கணக்கு எழுதப் பட்டிருந்தது. இந்தப் பெயர்களில் ராம.வெள்ளையன் என்பவர்தான், திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுக்கும் தரகராக செயல்படுபவர்.
இந்த ராம.வெள்ளையன் சர்க்காரியா கமிஷன் முன்பாக அளித்த சாட்சியம் என்னவென்று பார்ப்போமா ?
“இவர் 1976ம் ஆண்டு ஜுலை திங்கள் 5ம் நாளிட்ட தனது உறுதி மொழிப் பத்திரத்தில் தாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் என்றும், திரு.மு.கருணாநிதியை இருபது ஆண்டுகளாக்கு மேலாகத் தெரியும் என்று கூறியிருந்தா. 1970ல் எப்போதோ ஒரு தடவை மேகலா பிக்சர்ஸ்சாரின் கணக்குகளில் சிலரது பெயரில் ரொக்கக் கடன் வசதி பெறுவதற்காக குறிப்பாக, தேவக்கோட்டையில் பணம் தருபவராக பெயர் மட்டும் கொடுக்கின்ற செட்டியார்கள் சிலரின் பெயர்களை சேகரித்துத் தருமாறு திரு.கருணாநிதி இவரது உதவியை நாடினார். திரு.கருணாநிதி விரும்பியவாறே வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் சிலரின் பெயரைச் சேகரித்துத தர சாட்சி ஒப்புக் கொண்டார். மேலும், தனது பெயரிலும், தனது மனைவி திருமதி.வி.லட்சுமி பெயரிலும், ரொக்க வரவு வைத்துக் கொள்ளவும் அவர் ஒப்புக் கொண்டார். இவ்வாறு மேகலா படத்தயாரிப்பு நிறுவனத்தின் கணக்குகளில் மேற்குறிப்பிட்ட 18 பேர்களில் மொத்தம் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை கருணாநிதி கணக்கில் கொண்டு வந்தார். ராம.வெள்ளையன் மேலும் தெரிவித்ததாவது, 1973ம் ஆண்டு இறுதியிலோ, 1974ம் ஆண்டு தொடக்கத்திலோ திரு.கருணாநிதி அவரைக் கூப்பிட்டனுப்பி வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரித்து வருவதால், ரொக்க வரவுக்காக அவர் சேகரித்துத் தந்த பெயர்களில் அவர்கள் பணம் கொடுத்ததாக உறுதி செய்யும் கடிதங்களை தயாரித்து அவற்றில் அவர்களது கையொப்பங்களை பெற்றுத்தருமாறு அவரிடம் கேட்டார். ரொக்க வரவுக்கு ஆதரவாக போலி புரோநோட்டுக்களை தயாரிக்குமாறு திரு.கருணாநிதி ராம.வெள்ளையனிடம் கூறினார். அப்போது சில கடிதங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்காளர் அழகுமாணிக்கம் என்பவரால் தயாரிக்கப் பட்டு தட்டச்சு செய்யப் பட்டன. காசோலைகள் கடன் கொடுத்தவர்கள் பெயருக்கு வழங்கப் படும் என்றும், அந்தக் காரோலைகளை மாற்றி பணத்தை மேகலா பிக்சர்ஸார் பயன் படுத்திக் கொள்வதற்காக காசோலைகளின் பின்புறத்தில் கடன் கொடுத்தவர்களின் கையொப்பத்தை அவர் பெற வேண்டும் என்றும் ராம.வெள்ளையனிடம் கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கீழ்கண்ட விபரங்கள் தெரிய வந்தன.
கொடுத்துள்ளதாகக் கூறப்பட்ட கடன்களுக்கு ஆதரவாக இருக்கும் புரோநோட்டுக்களையும், கடனைத் திருப்பிக் கொடுத்தவகையில் வழங்கப்பட்டதாகத் தோன்றும், ரொக்கமாற்று காசோலைகளையும், சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள இந்தியன் வங்கி கிளையிடமிருந்து வருமான வரித் துறை கைப்பற்றியது. கொடுத்துத் தீர்க்கப் பட்ட புரோ நோட்டுக்களின் மீது கடன் கொடுத்ததாக கூறப்படுபவர்களின் கையொப்பத்திற்கும் கடன்கள் பெற்றுக் கொண்டதை உறுதிப் செய்து அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுபவைகளையும் 05.02.1974 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு தாக்கல் செய்துள்ள கடிதங்களில் உள்ள அவர்களது கையொப்பங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. பல இடங்களில் கையொப்பங்கள் வேறுபட்டன. கடன்களை திருப்பிக் கொடுத்தவகையில் அவர்களுக்கு வழங்கப் பட்ட ரொக்க மாற்றுக் காசோலைகளின் பின்புறத்தில் அவர்கள் இட்டுள்ளதாக தெரியவந்த கையொப்பங்களும் வேறுபட்டிருந்தன.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களை ஆய்வு செய்ததில், அந்நிறுவனத்தின் நிதிகளை கருணாநிதியும் அவரது நெருங்கிய உறவினர்களும் எடுத்துள்ள தொகை பின் வருமாறு:
1967-68
மு.கருணாநிதி 45,000.00
மாறன் 69,115.70
அமிர்தம் 3,179.73
1968-69
தயாளு 2,582.00
அமிர்தம் 1,320.00
1969-70
அமிர்தம் 1,320.00
1970-71
மாறன் 96,675.00
தயாளு 9,000.00
அமிர்தம் 600.00
1971-72
தயாளு 15,922.00
மாறன் 4,600.00
செல்வம் 15,000.00
1972-73
மாறன் 10,500.00
எப்படி கருணாநிதி குடும்பம் லஞ்சப் பணத்தை வெள்ளையாக்குவதில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா ?
சரி… இவர்கள் கணக்குப் படியே வைத்துக் கொண்டாலும் கருணாநிதி மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து 45,000 ரூபாய் கடன் வாங்கித் தான் கோபாலபுரம் வீட்டை வாங்கினார். ஆக, 1971ம் ஆண்டு, கருணாநிதியிடம் 45,000 ரூபாய் கூட இல்லை.
2011ல் கருணாநிதியின் சொத்துக்களைப் பாருங்களேன்…..
கருணாநிதி கையில் உள்ள ரொக்கம் 15,000
இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளையில் நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) 3 கோடி, 1 கோடி, 33,920 ரூபாய், 13,15,232 ரூபாய்.
அடையாறு கரூர் வைஸ்யா வங்கி 13,74,664 ரூபாய்.
கர்நாடகா வங்கி வைப்பு நிதி 39,62,995 ரூபாய்.
இந்தியன் வங்கி ராயப்பேட்டை கையிருப்பு ரூபாய் 10,956
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மஹாலிங்கபுரம் ரூபாய். 11,135
இந்தியன் வங்கி கோடம்பாக்கம் ரூபாய் 11,39,441
ராசாத்தி அம்மாளுடன் ஜாயின்ட் அக்கவுன்ட்.
இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலை ரூபாய் புரம் ரூபாய். 13,15,180
முதலில் மனைவி தயாளு அம்மாள்.
ரொக்க கையிருப்பு ரூபாய் 30,000
நிரந்தர வைப்பு நிதி இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளை
1 கோடியே 20 லட்சம்.
3 கோடியே 50 லட்சம்
ரூபாய் 3,90,373
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,98,247
ரூபாய் 32,50,255
இந்தியன் வங்கி கொத்தவால் பாசார்
ரூபாய் 6,98,250
ரூபாய் 6,93,579
ரூபாய் 13,92,503
ரூபாய் 1,40,723
கர்நாடகா வங்கி. கோடம்பாக்கம்
ரூபாய் 13,74,664
கரூர் வைஸ்யா வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய் 30 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய்.2,66,226
சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய்.1,65,380
அடுத்து துணைவி ராசாத்தி அம்மாள்.
இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலை புரம்
நிரந்தர வைப்பு நிதி.
ரூபாய் 15,00,000
ரூபாய் 33,04,087
ரூபாய் 1,14,93,325
ரூபாய் 10,55,641
ரூபாய் 6 கோடியே 67 லட்சத்து 53 ஆயிரத்து 14
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ராயப்பேட்டை
ரூபாய் 6 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 753
ரூபாய் 46,78,221
சேமிப்புக் கணக்கு, இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலைபுரம்.
கையிருப்பு ரூ.11,378
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, ராயப்பேட்டை
ரூபாய்.4,84,027
தயாளு அம்மாள் வணிக முதலீடுகள்.
கலைஞர் டிவி பங்குகள் ரூபாய் 6 கோடியே 60 லட்சம்
ராசாத்தி அம்மாள் வணிக முதலீடுகள்
வெஸ்ட்கேட் லாஜிஸ்ட்டிக்ஸ் பங்கு 2 கோடியே 50 லட்சம்
சொந்தத் தொழில் முதலீடு
ரூபாய் 2 கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 878
வாகனங்கள்.
தயாளு அம்மாள்.
ஹோண்டா அக்கார்டு கார்
ரூபாய்.16,02,321
இது வரை சொன்ன படி, கருணாநிதியின் மொத்த சொத்து மதிப்பு
ரூபாய் 4 கோடியே 96 லட்சத்து 56 ஆயிரத்து 855
மனைவி மற்றும் துணைவிகளின் சொத்து மதிப்பு
ரூபாய் 36 கோடியே, 2 லட்சத்து 47 ஆயிரத்து 287
இது போக தயாளு மற்றும் ராசாத்தியின் பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு
தயாளு ரூ.5,51,1000
ராசாத்தி ரூபாய் 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628
கருணாநிதி, மனைவி, துணைவி ஆகியோரின் பெயரில் இருக்கும், சொத்துக்களின் மதிப்பு மட்டும் 44 கோடியே 18 லட்சத்து 93 ஆயிரத்து 770.
இந்தக் குடும்பத்திடம் மீண்டும் ஒரு முறை தமிழகத்தை ஒப்படைத்தால் என்ன ஆகும் ?
நன்றி : சவுக்கு இணைய தளம்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பூச்சு மருந்து ஊழல் - சர்க்காரியா கமிஷன் அறிக்கை
கிராமங்களில் வயல்களில் உள்ள பயிர்களைப் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு பூச்சி மருந்து தெளிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.. அதுபோல, ஒரு பூச்சி மருந்து தொடர்பான விவகாரத்தைத்தான் நீதிபதி சர்க்காரியா விசாரித்தார். இந்தப் பூச்சி மருந்து தெளித்ததில், பூச்சிகள் செத்ததோ இல்லையோ.. நேர்மையும், நியாயமும் செத்துப் போனதென்னவோ உறுதி..!
1970-ம் ஆண்டு மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் தி்ட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதிகமாக பூச்சித் தாக்கும் பகுதிகளில் விமானம் மூலமாக பூச்சி மருந்தை தெளித்து, அதன் மூலம் விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது..
இதற்காக ஒரு ஏக்கருக்கு 7 ரூபாயை மத்திய அரசு செலவிடும் என்றும், அதற்கு மேலாகும் செலவுகளை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் திட்டமிடப்படுகிறது. திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டில் அந்தத் திட்டம் பட்டபாடு இருக்கிறதே..!
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே களத்தில் இறங்குகிறார் தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளரும், தி.மு.க.வின் மூத்தத் தலைவருமான அன்பில் தர்மலிங்கம். பொதுப்பணித் துறை காண்ட்ராக்டர் ராஜகோபால் என்பவர் அன்பிலுக்கு நெருக்கமாகிறார். உடனே ராஜகோபாலுக்கு தொழில் அபவிருத்தி ஆகிறது. தன்னுடைய தொழிலை அபிவிருத்தி செய்வது மட்டுமில்லாமல், அன்பில் தர்மலிங்கம் தன்னை அபிவிருத்தி செய்து கொள்ளவும் உதவிகள் செய்கிறார் ராஜகோபால்.
மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து என்ற திட்டத்தை அறிவித்த உடனேயே அன்பிலை சந்திக்கிறார் ராஜகோபால். “அண்ணே.. இந்த விமானக் கம்பெனிக்காரங்க பூச்சி மருந்து தெளிக்கிறதுல நிறைய சம்பாதிக்கிறாங்க.. நாம இதுல தலையிட்டா கமிஷன் வாங்கலாம்..” என்று யோசனை தெரிவிக்கிறார். கரும்பு தின்ன யாருக்குத்தான் கசக்கும்? அன்பில் உடனடியாக ஆமோதிக்கிறார்.
மருந்துத் தெளிப்பு விமான கம்பெனிகளோடு பேச்சுவார்த்தையைத் தொடங்க உத்தரவிடுகிறார் அன்பில். கம்பெனி பிரதிநிதிகளை அழைத்து ஒரு ஏக்கருக்கு எத்தனை ரூபாய்க்கு மருந்து தெளிக்க இயலும் என்று கேட்கிறார்கள்.. ஒரு ஏக்கருக்கு 7 ரூபாய்க்கே தெளிக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசு நிர்ணயித்த விலையிலேயே மருந்து தெளித்தால், அப்புறம் அன்பில் எப்படி சம்பாதிப்பது?
அதனால் பூச்சி மருந்துத் தெளிப்புக் கம்பெனிகள் ஏக்கருக்கு 9 ரூபாய்க்கு மருந்து தெளிப்பதாக கொட்டேஷன் கொடுக்க வேண்டும் என்றும், அதில் ஒரு ஏக்கருக்கு 40 பைசா கமிஷனாகக் கொடுக்க வேண்டும். ஒப்பந்தம் அவர்களுக்குத்தான் என்பதற்கு தாங்கள் கியாரண்டி என்றும் பேசப்படுகிறது. அது மட்டுமல்ல.. கமிஷன் முன் பணமாக உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பேசப்படுகிறது. கம்பெனிகளுக்கும் இதில் லாபம்தானே? உடனடியாக ஒப்புக் கொள்கிறார்கள்.
சரி.. கமிஷன் வாங்குவதென்று முடிவாகிவிட்டது. எப்படி வாங்குவது..? அந்தக் கம்பெனிகளும் கொடுக்கும் பணத்துக்கு ரசீது வேண்டுமென்று கேட்கிறார்கள். நூதனமான யோசனை ஒன்று தோன்றுகிறது அன்பிலுக்கு. அதன்படி, பொன்னி ஏஜென்சீஸ் என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார். மருந்து தெளிக்க ஆர்டர் பெறும் விமானக் கம்பெனிகள் அந்த பொன்னி ஏஜென்ஸியோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
அதாவது பொன்னி ஏஜென்ஸீஸ் அரசிடமிருந்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக விமானக் கம்பெனிகளிடமிருந்து ஒரு ஏக்கருக்கு 40 பைசா வீதம் கமிஷன் பெறுவதென்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஏற்பாட்டின்படி 75 ஆயிரம் ரூபாய் முன் பணமாக அன்பில் தர்மலிங்கத்திற்குக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணம் கொடுக்கப்படுகையில் அன்பில் தர்மலிங்கம், தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளர். அவ்வளவுதான்..
எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது. இவர்களே பங்கு பிரித்துக் கொண்டால், விவசாயத் துறைக்கென்று ஒரு அமைச்சர் இருப்பாரே..? அவரைக் கவனிக்காமல் கோட்டைவிட்டு விட்டார்கள். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது..
இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட அப்போதைய விவசாயத் துறை அமைச்சர் திருமதி சத்தியவாணி முத்து உடனடியாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் 1970 ஜூன் 4-ம் தேதியன்று தன்னைச் சந்திக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார்..
அவ்வளவுதான்.. அன்பில் தர்மலிங்கத்துக்கும், ராஜகோபாலுக்கும் கிலி ஏற்படுகிறது. இந்த அம்மையார் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டால் என்ன செய்வது என்று பதறுகிறார்கள். உடனடியாக விமானக் கம்பெனி நபர்களை அழைத்து சத்தியவாணி முத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்துகையில் ஏக்கருக்கு 9 ரூபாய்க்குக் குறைவாக மருந்து தெளிக்க இயலாது என்று உறுதியாகக் கூறிவிடுமாறு சொல்கிறார்கள்.
சத்தியவாணி முத்துவோடு மீட்டிங் நடக்கிறது. சத்தியவாணிமுத்து ஒரு ஏக்கருக்கு 8.25 ரூபாய்க்கு மேல் முடியாது என்று உறுதியாக நிற்கிறார். விமானக் கம்பெனிகள் 9 ரூபாய் என்பதில் உறுதியாக நிற்கின்றன. கம்பெனி பிரதிநிதிகளின் பிடிவாதத்தைப் பார்த்து எரிச்சலடைந்த சத்தியவாணிமுத்து, “8.25 ரூபாய்க்கு மருந்து தெளிக்க முன் வருபவர்கள், விவசாயத் துறை இயக்குநரை சந்திக்கலாம். மற்றவர்கள் செல்லலாம்” என்று கூட்டத்தை முடித்துக் கொள்கிறார். இந்த விஷயத்தை கோப்பிலும் பதிவு செய்கிறார்.
“வேலையை முடித்துக் கொடுக்கிறேன்..” என்று அட்வான்ஸ் லஞ்சத்தை பெற்றுக் கொண்ட அன்பிலுக்கு திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல இருந்தது. உடனடியாக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கிறார். “என்ன தலைவரே..! இந்த அம்மா இப்படித் தொந்திரவு பண்ணுது..” என்று வத்தி வைக்கிறார். கருணாநிதிக்கு வந்ததே கோபம்..!
நான் முதலமைச்சராக இருக்கும்போது இந்த அம்மையாருக்கு என்ன இப்படியொரு துணிச்சல்.. என்று நினைத்து தலைமைச் செயலாளராக இருந்த ஈ.பி.ராயப்பாவை அழைக்கிறார். உடனடியாக ஒரு ஏக்கர் 9 ரூபாய்க்கு பூச்சி மருந்து தெளிக்க ஆணை வெளியிடுமாறு உத்தரவிடுகிறார்.
ராயப்பாவும் அப்படியே அவர் உத்தரவை நிறைவேற்றுகிறார். ராயப்பாவைவிட பணியில் மூத்தவர்கள் எட்டு பேர் காத்திருக்கும்போது ராயப்பாவை தலைமைச் செயலாளர் ஆக்கியவர் கருணாநிதி. இதுபோல சீனியாரிட்டியை மதிக்காமல் தலைமைச் செயலாளரை நியமிப்பதை இன்றுவரை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.
அதற்கடுத்து இது தொடர்பாக நடந்த கூட்டத்தில், அந்தக் கோப்பை பார்வையிட்ட சத்தியவாணி முத்து, 9 ரூபாய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் எழுதிய குறிப்பு, கோப்பில் இருந்து காணாமல் போனது கண்டு அதிர்கிறார். அதன் பிறகு அவர் மீதும் கப்பல் கட்டுமானத்தில் ஊழல் புகார் எழுந்தது தனிக் கதை.
ஒரு பாகம் முடிந்த நிலையில் ஊழலின் அடுத்த பாகம் அடுத்த நிதியாண்டில் தொடங்குகிறது. 1971-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான அன்பில் தர்மலிங்கம் இப்போது விவசாயத் துறை அமைச்சராகிறார். இந்த முறை நேரடியாக தானே விமானக் கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறார்.
“போனவாட்டி ஒரு ஏக்கருக்கு 40 காசு கொடுத்தீங்க.. இப்போ விலைவாசி ஏறிப் போச்சு.. அதனால ஒரு ஏக்கருக்கு 1 ரூபா கமிஷனா கொடுத்திருங்க.. உங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 11 ரூபாய் தர்றோம்..” என்று பேரம் பேசுகிறார் அன்பில். விமானக் கம்பெனிக்காரர்கள், “அவ்வளவு தர முடியாது.. ஒரு ஏக்கருக்கு 80 காசுகள் கமிஷனாகத் தருகிறோம்.. அதற்கு ரசீது தாருங்கள்..” என்று கூறுகிறார்கள்.
இதற்கு ஒப்புக் கொண்ட அன்பில், ராஜகோபால் இந்த விவகாரத்தில் நிறைய உள்குத்து செய்வதாக சந்தேகிக்கிறார்.. இதனால் ராஜகோபாலைக் கழற்றிவிட முடிவு செய்து விவசாயத் துறை செயலாளராக இருந்த வேதநாராயணனை அழைக்கிறார். “நீங்கள் நேரடியாக கம்பெனிகளிடம் பேசுங்கள். முதலமைச்சர் ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய் கமிஷன் வேண்டும் என்று விரும்புகிறார். 90 காசுக்குக் குறைய மாட்டார். மேலும் 25 சதவிகித கமிஷன் முன்னதாகவே கொடுக்கப்பட வேண்டும்..” என்றும் கூறுகிறார்.
இதன்படி விஷயம் விமானக் கம்பெனிகளுக்குச் சொல்லப்படுகிறது. எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்து ஆகாமலேயே பணியைத் தொடங்க அவர்கள் பணிக்கப்படுகிறார்கள். அதன்படியே பணியைத் தொடங்குகிறார்கள்.
இப்போது புதிய சிக்கலாக கடந்தாண்டு செய்த வேலைக்கு உரிய தொகை வந்து சேரவில்லை என்றும், அதை முதலில் பைசல் செய்ய வேண்டும் என்றும் கம்பெனிகள் போர்க்கொடி தூக்குகின்றன. மேலும் முன் பணத்தைத் தவிர கமிஷன் தொகையும் கருணாநிதியின் கைக்கு வரவில்லை. விடுவாரா அவர்..? கடும் கோபமடைந்த கருணாநிதி, 12.09.1971 அன்று அன்பில் தர்மலிங்கத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ப.உ.சண்முகத்தை வேளாண் அமைச்சராக்குகிறார்.
அடுத்ததாக கருணாநிதி பிறப்பித்த உத்தரவு. கம்பெனிகள் ஏக்கருக்கு 90 பைசா என்று ஒப்புக் கொண்டபடி கொடுக்கவில்லை. அதனால், அவர்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் அனைத்தையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்தி வைக்கவும் உத்தரவிடுகிறார். இந்த உத்தரவை கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கம் நிறைவேற்றுகிறார். கம்பெனிகள் அரண்டுபோய், வேளாண் துறை அமைச்சர் ப.உ.சண்முகத்தைச் சந்தித்தபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாதென்று முதலமைச்சரைக் கை காட்டுகிறார்.
கம்பெனிக்காரர்களுக்கு இக்கட்டில் சென்று மாட்டிக் கொண்டோம் என்பது புரிகிறது. வேறு வழியின்றி 1,17,273 ரூபாயை வசூல் செய்து கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கத்திடம் கொடுக்கிறார்கள். அவர் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விவசாயத் துறை செயலாளருக்கு கம்பெனிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டார்.
சர்க்காரியா கமிஷனில் நடந்த வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்த கருணாநிதியின் அப்போதைய செயலாளர் வைத்தியலிங்கம், தனது சாட்சியத்தில், “என்னைப் பொறுத்தவரையில் குற்ற நோக்கிலோ, உள் நோக்கம் கொண்டோ, தெரிந்தோ எனது சொந்த ஆதாயத்துக்காகவோ இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.. நான் செய்ததெல்லாம் அந்தப் பணத்தை முதலமைச்சரிடம் சேர்ப்பிக்கும் தீங்கில்லாத ஒரு கருவியாக இருந்ததுதான்..” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஊழலைப் பற்றி குறிப்பிட்ட நீதிபதி சர்க்காரியா, “முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோரின் வாய் மொழி உத்தரவுகளால்தான் இது நடந்துள்ளது. மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையற்ற தந்திரங்களினால் விமான கம்பெனிக்காரர்கள் முதலில் கவரப்பட்டு மீள முடியாத சிக்கலில் மாட்டிவிடப்பட்டு வழிக்குக் கொண்டு வரப்பட்டனர். முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோர் லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களது கோரிக்கைகளுக்கு இவர்கள் பணிய வேண்டியதாயிற்று..” என்று குறிப்பிடுகிறார்..
சமீபத்தில் அன்பில் தர்மலிங்கம் சிலை திறக்கப்பட்டதையொட்டி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “என்னையும், உன்னையும் சிலை வடிவில் நின்று சிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார்..! எதையும் உரிமையுடன் உணர்வு கலந்த உணர்வு நட்புடன் கணமும் பிரியாமல் கண்ணின் கருவிழி போல என்னையும், என் நட்பையும், எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பூச்சி மருந்து தெளிப்புத் திட்டத்தில் இறந்தது பூச்சிகளா? நேர்மையும், உண்மையுமா..?
நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்
கிராமங்களில் வயல்களில் உள்ள பயிர்களைப் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு பூச்சி மருந்து தெளிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.. அதுபோல, ஒரு பூச்சி மருந்து தொடர்பான விவகாரத்தைத்தான் நீதிபதி சர்க்காரியா விசாரித்தார். இந்தப் பூச்சி மருந்து தெளித்ததில், பூச்சிகள் செத்ததோ இல்லையோ.. நேர்மையும், நியாயமும் செத்துப் போனதென்னவோ உறுதி..!
1970-ம் ஆண்டு மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் தி்ட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதிகமாக பூச்சித் தாக்கும் பகுதிகளில் விமானம் மூலமாக பூச்சி மருந்தை தெளித்து, அதன் மூலம் விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது..
இதற்காக ஒரு ஏக்கருக்கு 7 ரூபாயை மத்திய அரசு செலவிடும் என்றும், அதற்கு மேலாகும் செலவுகளை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் திட்டமிடப்படுகிறது. திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டில் அந்தத் திட்டம் பட்டபாடு இருக்கிறதே..!
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே களத்தில் இறங்குகிறார் தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளரும், தி.மு.க.வின் மூத்தத் தலைவருமான அன்பில் தர்மலிங்கம். பொதுப்பணித் துறை காண்ட்ராக்டர் ராஜகோபால் என்பவர் அன்பிலுக்கு நெருக்கமாகிறார். உடனே ராஜகோபாலுக்கு தொழில் அபவிருத்தி ஆகிறது. தன்னுடைய தொழிலை அபிவிருத்தி செய்வது மட்டுமில்லாமல், அன்பில் தர்மலிங்கம் தன்னை அபிவிருத்தி செய்து கொள்ளவும் உதவிகள் செய்கிறார் ராஜகோபால்.
மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து என்ற திட்டத்தை அறிவித்த உடனேயே அன்பிலை சந்திக்கிறார் ராஜகோபால். “அண்ணே.. இந்த விமானக் கம்பெனிக்காரங்க பூச்சி மருந்து தெளிக்கிறதுல நிறைய சம்பாதிக்கிறாங்க.. நாம இதுல தலையிட்டா கமிஷன் வாங்கலாம்..” என்று யோசனை தெரிவிக்கிறார். கரும்பு தின்ன யாருக்குத்தான் கசக்கும்? அன்பில் உடனடியாக ஆமோதிக்கிறார்.
மருந்துத் தெளிப்பு விமான கம்பெனிகளோடு பேச்சுவார்த்தையைத் தொடங்க உத்தரவிடுகிறார் அன்பில். கம்பெனி பிரதிநிதிகளை அழைத்து ஒரு ஏக்கருக்கு எத்தனை ரூபாய்க்கு மருந்து தெளிக்க இயலும் என்று கேட்கிறார்கள்.. ஒரு ஏக்கருக்கு 7 ரூபாய்க்கே தெளிக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசு நிர்ணயித்த விலையிலேயே மருந்து தெளித்தால், அப்புறம் அன்பில் எப்படி சம்பாதிப்பது?
அதனால் பூச்சி மருந்துத் தெளிப்புக் கம்பெனிகள் ஏக்கருக்கு 9 ரூபாய்க்கு மருந்து தெளிப்பதாக கொட்டேஷன் கொடுக்க வேண்டும் என்றும், அதில் ஒரு ஏக்கருக்கு 40 பைசா கமிஷனாகக் கொடுக்க வேண்டும். ஒப்பந்தம் அவர்களுக்குத்தான் என்பதற்கு தாங்கள் கியாரண்டி என்றும் பேசப்படுகிறது. அது மட்டுமல்ல.. கமிஷன் முன் பணமாக உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பேசப்படுகிறது. கம்பெனிகளுக்கும் இதில் லாபம்தானே? உடனடியாக ஒப்புக் கொள்கிறார்கள்.
சரி.. கமிஷன் வாங்குவதென்று முடிவாகிவிட்டது. எப்படி வாங்குவது..? அந்தக் கம்பெனிகளும் கொடுக்கும் பணத்துக்கு ரசீது வேண்டுமென்று கேட்கிறார்கள். நூதனமான யோசனை ஒன்று தோன்றுகிறது அன்பிலுக்கு. அதன்படி, பொன்னி ஏஜென்சீஸ் என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார். மருந்து தெளிக்க ஆர்டர் பெறும் விமானக் கம்பெனிகள் அந்த பொன்னி ஏஜென்ஸியோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
அதாவது பொன்னி ஏஜென்ஸீஸ் அரசிடமிருந்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக விமானக் கம்பெனிகளிடமிருந்து ஒரு ஏக்கருக்கு 40 பைசா வீதம் கமிஷன் பெறுவதென்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஏற்பாட்டின்படி 75 ஆயிரம் ரூபாய் முன் பணமாக அன்பில் தர்மலிங்கத்திற்குக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணம் கொடுக்கப்படுகையில் அன்பில் தர்மலிங்கம், தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளர். அவ்வளவுதான்..
எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது. இவர்களே பங்கு பிரித்துக் கொண்டால், விவசாயத் துறைக்கென்று ஒரு அமைச்சர் இருப்பாரே..? அவரைக் கவனிக்காமல் கோட்டைவிட்டு விட்டார்கள். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது..
இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட அப்போதைய விவசாயத் துறை அமைச்சர் திருமதி சத்தியவாணி முத்து உடனடியாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் 1970 ஜூன் 4-ம் தேதியன்று தன்னைச் சந்திக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார்..
அவ்வளவுதான்.. அன்பில் தர்மலிங்கத்துக்கும், ராஜகோபாலுக்கும் கிலி ஏற்படுகிறது. இந்த அம்மையார் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டால் என்ன செய்வது என்று பதறுகிறார்கள். உடனடியாக விமானக் கம்பெனி நபர்களை அழைத்து சத்தியவாணி முத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்துகையில் ஏக்கருக்கு 9 ரூபாய்க்குக் குறைவாக மருந்து தெளிக்க இயலாது என்று உறுதியாகக் கூறிவிடுமாறு சொல்கிறார்கள்.
சத்தியவாணி முத்துவோடு மீட்டிங் நடக்கிறது. சத்தியவாணிமுத்து ஒரு ஏக்கருக்கு 8.25 ரூபாய்க்கு மேல் முடியாது என்று உறுதியாக நிற்கிறார். விமானக் கம்பெனிகள் 9 ரூபாய் என்பதில் உறுதியாக நிற்கின்றன. கம்பெனி பிரதிநிதிகளின் பிடிவாதத்தைப் பார்த்து எரிச்சலடைந்த சத்தியவாணிமுத்து, “8.25 ரூபாய்க்கு மருந்து தெளிக்க முன் வருபவர்கள், விவசாயத் துறை இயக்குநரை சந்திக்கலாம். மற்றவர்கள் செல்லலாம்” என்று கூட்டத்தை முடித்துக் கொள்கிறார். இந்த விஷயத்தை கோப்பிலும் பதிவு செய்கிறார்.
“வேலையை முடித்துக் கொடுக்கிறேன்..” என்று அட்வான்ஸ் லஞ்சத்தை பெற்றுக் கொண்ட அன்பிலுக்கு திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல இருந்தது. உடனடியாக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கிறார். “என்ன தலைவரே..! இந்த அம்மா இப்படித் தொந்திரவு பண்ணுது..” என்று வத்தி வைக்கிறார். கருணாநிதிக்கு வந்ததே கோபம்..!
நான் முதலமைச்சராக இருக்கும்போது இந்த அம்மையாருக்கு என்ன இப்படியொரு துணிச்சல்.. என்று நினைத்து தலைமைச் செயலாளராக இருந்த ஈ.பி.ராயப்பாவை அழைக்கிறார். உடனடியாக ஒரு ஏக்கர் 9 ரூபாய்க்கு பூச்சி மருந்து தெளிக்க ஆணை வெளியிடுமாறு உத்தரவிடுகிறார்.
ராயப்பாவும் அப்படியே அவர் உத்தரவை நிறைவேற்றுகிறார். ராயப்பாவைவிட பணியில் மூத்தவர்கள் எட்டு பேர் காத்திருக்கும்போது ராயப்பாவை தலைமைச் செயலாளர் ஆக்கியவர் கருணாநிதி. இதுபோல சீனியாரிட்டியை மதிக்காமல் தலைமைச் செயலாளரை நியமிப்பதை இன்றுவரை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.
அதற்கடுத்து இது தொடர்பாக நடந்த கூட்டத்தில், அந்தக் கோப்பை பார்வையிட்ட சத்தியவாணி முத்து, 9 ரூபாய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் எழுதிய குறிப்பு, கோப்பில் இருந்து காணாமல் போனது கண்டு அதிர்கிறார். அதன் பிறகு அவர் மீதும் கப்பல் கட்டுமானத்தில் ஊழல் புகார் எழுந்தது தனிக் கதை.
ஒரு பாகம் முடிந்த நிலையில் ஊழலின் அடுத்த பாகம் அடுத்த நிதியாண்டில் தொடங்குகிறது. 1971-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான அன்பில் தர்மலிங்கம் இப்போது விவசாயத் துறை அமைச்சராகிறார். இந்த முறை நேரடியாக தானே விமானக் கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறார்.
“போனவாட்டி ஒரு ஏக்கருக்கு 40 காசு கொடுத்தீங்க.. இப்போ விலைவாசி ஏறிப் போச்சு.. அதனால ஒரு ஏக்கருக்கு 1 ரூபா கமிஷனா கொடுத்திருங்க.. உங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 11 ரூபாய் தர்றோம்..” என்று பேரம் பேசுகிறார் அன்பில். விமானக் கம்பெனிக்காரர்கள், “அவ்வளவு தர முடியாது.. ஒரு ஏக்கருக்கு 80 காசுகள் கமிஷனாகத் தருகிறோம்.. அதற்கு ரசீது தாருங்கள்..” என்று கூறுகிறார்கள்.
இதற்கு ஒப்புக் கொண்ட அன்பில், ராஜகோபால் இந்த விவகாரத்தில் நிறைய உள்குத்து செய்வதாக சந்தேகிக்கிறார்.. இதனால் ராஜகோபாலைக் கழற்றிவிட முடிவு செய்து விவசாயத் துறை செயலாளராக இருந்த வேதநாராயணனை அழைக்கிறார். “நீங்கள் நேரடியாக கம்பெனிகளிடம் பேசுங்கள். முதலமைச்சர் ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய் கமிஷன் வேண்டும் என்று விரும்புகிறார். 90 காசுக்குக் குறைய மாட்டார். மேலும் 25 சதவிகித கமிஷன் முன்னதாகவே கொடுக்கப்பட வேண்டும்..” என்றும் கூறுகிறார்.
இதன்படி விஷயம் விமானக் கம்பெனிகளுக்குச் சொல்லப்படுகிறது. எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்து ஆகாமலேயே பணியைத் தொடங்க அவர்கள் பணிக்கப்படுகிறார்கள். அதன்படியே பணியைத் தொடங்குகிறார்கள்.
இப்போது புதிய சிக்கலாக கடந்தாண்டு செய்த வேலைக்கு உரிய தொகை வந்து சேரவில்லை என்றும், அதை முதலில் பைசல் செய்ய வேண்டும் என்றும் கம்பெனிகள் போர்க்கொடி தூக்குகின்றன. மேலும் முன் பணத்தைத் தவிர கமிஷன் தொகையும் கருணாநிதியின் கைக்கு வரவில்லை. விடுவாரா அவர்..? கடும் கோபமடைந்த கருணாநிதி, 12.09.1971 அன்று அன்பில் தர்மலிங்கத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ப.உ.சண்முகத்தை வேளாண் அமைச்சராக்குகிறார்.
அடுத்ததாக கருணாநிதி பிறப்பித்த உத்தரவு. கம்பெனிகள் ஏக்கருக்கு 90 பைசா என்று ஒப்புக் கொண்டபடி கொடுக்கவில்லை. அதனால், அவர்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் அனைத்தையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்தி வைக்கவும் உத்தரவிடுகிறார். இந்த உத்தரவை கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கம் நிறைவேற்றுகிறார். கம்பெனிகள் அரண்டுபோய், வேளாண் துறை அமைச்சர் ப.உ.சண்முகத்தைச் சந்தித்தபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாதென்று முதலமைச்சரைக் கை காட்டுகிறார்.
கம்பெனிக்காரர்களுக்கு இக்கட்டில் சென்று மாட்டிக் கொண்டோம் என்பது புரிகிறது. வேறு வழியின்றி 1,17,273 ரூபாயை வசூல் செய்து கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கத்திடம் கொடுக்கிறார்கள். அவர் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விவசாயத் துறை செயலாளருக்கு கம்பெனிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டார்.
சர்க்காரியா கமிஷனில் நடந்த வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்த கருணாநிதியின் அப்போதைய செயலாளர் வைத்தியலிங்கம், தனது சாட்சியத்தில், “என்னைப் பொறுத்தவரையில் குற்ற நோக்கிலோ, உள் நோக்கம் கொண்டோ, தெரிந்தோ எனது சொந்த ஆதாயத்துக்காகவோ இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.. நான் செய்ததெல்லாம் அந்தப் பணத்தை முதலமைச்சரிடம் சேர்ப்பிக்கும் தீங்கில்லாத ஒரு கருவியாக இருந்ததுதான்..” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஊழலைப் பற்றி குறிப்பிட்ட நீதிபதி சர்க்காரியா, “முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோரின் வாய் மொழி உத்தரவுகளால்தான் இது நடந்துள்ளது. மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையற்ற தந்திரங்களினால் விமான கம்பெனிக்காரர்கள் முதலில் கவரப்பட்டு மீள முடியாத சிக்கலில் மாட்டிவிடப்பட்டு வழிக்குக் கொண்டு வரப்பட்டனர். முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோர் லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களது கோரிக்கைகளுக்கு இவர்கள் பணிய வேண்டியதாயிற்று..” என்று குறிப்பிடுகிறார்..
சமீபத்தில் அன்பில் தர்மலிங்கம் சிலை திறக்கப்பட்டதையொட்டி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “என்னையும், உன்னையும் சிலை வடிவில் நின்று சிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார்..! எதையும் உரிமையுடன் உணர்வு கலந்த உணர்வு நட்புடன் கணமும் பிரியாமல் கண்ணின் கருவிழி போல என்னையும், என் நட்பையும், எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பூச்சி மருந்து தெளிப்புத் திட்டத்தில் இறந்தது பூச்சிகளா? நேர்மையும், உண்மையுமா..?
நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8
|
|