புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்


   
   

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:29 am

First topic message reminder :

மொழி பெயர்ப்பாளரின் நன்றியுரை

திரு. கர்மயோகி அவர்களின் SPIRITUALITY & PROSPERITY PART – I என்ற ஆங்கில படைப்பை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கு எனக்கு அனுமதி அளித்ததிற்கு என்னுடைய நன்றியறிதலை முதலில் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இம்மொழிப்பெயர்ப்பை புத்தகமாக வெளியிடுவதற்கு வெளியிட முன்வந்த கடலூர் தியான மையத்திற்கும், இம்மொழி பெயர்ப்பை ஆங்கில மூலத்திற்கு ஏற்றபடி திருத்தம் செய்து கொடுத்த திரு. N.அசோகன் அவர்களுக்கும், தமிழாக்கத்தின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் தன்னுடைய தமிழாக்கப் பிரதிகளை படிப்பதற்கு எனக்கு வழங்கிய ராணிப்பேட்டை தியான மைய பொறுப்பாளர் திரு. S. லஷ்மிநாராயணன் அவர்களுக்கும் மற்றும் பல வகையில் உதவிய சக அன்னை அன்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னால் முடிந்தளவிற்கு இம்மொழி பெயர்ப்பினை எனக்குத் தெரிந்தளவிற்கு செய்துள்ளேன். அதையும் மீறி மூலத்தின் கருத்துச் சிறப்பு சில இடங்களில் சரியாக வெளிப்படவில்லை என்று வாசகர்களுக்கு மனதில் பட்டால் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை அவர்களுக்கு இப்படி எழுத்து மூலமாக, இச்சிறு சேவையை செய்ய முடிந்ததிற்கு என் நன்றியறிதலை அவர்கள் பொற்பாதங்களில் சமர்ப்பணம் செய்கின்றேன்.

M. மணிவேல்




ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:52 am


50. கவனம் ஆன்மீகமானது


ஒருவர் மீது, பற்றுதலாக இருப்பது உடலுக்குரிய பாங்காகும். கவனம் உணர்வைச் சார்ந்தது. பாசம் மனத்திற்குரியது. தெய்வீக அன்பு ஆன்மீகம். பாசம் மிகுந்த குடும்பங்கள், பாசப்பிணைப்பு இல்லாத குடும்பங்களைவிட உயர்கின்றன என்பதை நாம் பொதுவாக உணர்ந்துள்ளோம். மழைக்காகப் பிரார்த்தனை செய்வதால் அது அபரிமிதமான மழையைக் கொண்டு வரும். ஆனால் தண்ணீருக்கு கவனம் செலுத்துவது மழைக்காகப் பிரார்த்தனை செய்வதைவிட அதிக அளவில் தண்ணீரைக் கொண்டு வரும். இவ்வகையில் கவனம் பிரார்த்தனையைவிட சக்தி வாய்ந்தது. ஒரு அழகிய புதிய கம்பளம், தன் மீது நடப்பவர்கள் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்து, அவர்கள் சற்று நின்று அதை உற்றுப்பார்த்து அதன் அழகைப் புகழ்ந்துவிட்டு போகுமாறு அழைக்கிறது. தெய்வீக அன்னை ஒரு புதிய தரை விரிப்பின் மீது நடந்து சென்ற போது அதைப்பார்த்து அவ்வாறு புகழ்ந்துவிட்டுப் போனார். ஜடப்பொருள்களுக்கு ஜீவன் உண்டு. அவைகளுக்கு கவனம் செலுத்தினால் அவைகளின் ஜீவன் மேலே வந்து அபரிமிதமான செல்வ வளத்தைத் தருகின்றன. ஒருவர் தண்ணீருக்கு அப்படிப்பட்ட கவனம் செலுத்தும் பொழுது, கடுமையான வறட்சி காலத்திலும் தண்ணீருக்குத் தட்டுப்பாடு இருக்காது. ஜடப்பொருளான தண்ணீர் தனக்கு கவனம் செலுத்தப்பட்டதை, எப்பொழுதும் மறவாமல் பிரதிபலனாக அது நமக்கு பலனைக் கொடுக்கிறது. அது நம் நிலைக்கு ஏற்றவாறு செயல்படுகிறது.

தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பதும் வீணாக்காமல் இருப்பதும் தண்ணீருக்கு அளிக்கப்படும் கவனமாகும். தண்ணீரை சேமிப்பதும், மழைநீரை ஏரி, குளம், குட்டை, போன்ற நீர்நிலைகளில் நிரப்பிக் கொள்வதும், தண்ணீரை கவனத்துடன் உபயோகிப்பதும் தண்ணீருக்கு நாம் வழங்கும் கவனமாகும். மகாராஷ்ட்ராவில் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர், நிலத்தடி நீரின் மட்டத்தை உயர்த்தி ஒரு கிராமத்தையே சுபிட்சமுள்ள கிராமமாக மாற்றினார். அப்படி செய்வதற்கு அவர் அந்த கிராமத்தின் மறுபுற எல்லையில், ஏரியை உண்டாக்கினார். மண் தடுப்புக்கரைகளை உயரமாக்கி, மண்சரிவை தடுப்பது பழங்காலத்து விவசாய பழக்கம். நகரத்தின் மேற்குப்புற எல்லையில் பத்து மைல் தொலைவிற்கு மண் தடுப்புக்கள் உயர்த்தி, நிலத்தடி நீரின் ஆதாரத்தைப் பெருக்க சட்டம் கொண்டு வந்தால், நகரின் எல்லா இடத்திலும் நிலத்தடி நீர் உயர்ந்து, சென்னை நகருக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. அப்படி செய்வதால் வருடா வருடம் நல்ல மழை பெய்யும்.

நாம் வீடுகளில் தண்ணீரை முக்கியமான தேவைகளுக்கு பயன்படுத்திய பின்பு, மற்ற பல வகையான தேவைகளுக்கு எப்படி பயனுள்ள வகையில் உபயோகிக்க முடியுமென்று சிந்தித்து பார்க்க வேண்டும். அதுவும் தண்ணீருக்கு செலுத்தும் ஒருவகை கவனமாகும். நாம் தண்ணீரை ஒரு நாளில் அநேக தடவைகளில் உபயோகிக்கிறோம். தண்ணீரும் ஜீவனுள்ளது என்று, அதற்கு நாம் உரிய கவனம் செலுத்தும் பொழுது, நாம் தண்ணீருக்குள் இருக்கும் வருண பகவானை அழைப்பதாகும். மாநகராட்சி, ஒவ்வொரு வீட்டிலும் காம்பவுண்டு சுவற்றிற்கும், வீட்டிற்கும் இடையிலுள்ள தரைமட்டத்தை சிமெண்ட்டினால் பூசக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் மழை நீர் வெளியே போகாமல், பூமிக்குள் கசிந்து உள்ளே போகும். அதனால் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும். தண்ணீருக்கு கவனம் செலுத்துவதில் தனிப்பட்ட அமைப்புகளைவிட, அரசாங்கத்தின் கவனிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஏனென்றால் அரசாங்கம் ஒரு முறையான கூட்டமைப்பாகும்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:52 am

51. கவனம் செலுத்துவதைவிட வழிபாடு மேலானது

வழிபடுதல் என்பது பக்தி. ஒரு ஆன்மாவின் வழிபாடென்பது எல்லா ஆன்மாக்களையும் உள்ளடக்கிய இறைவனுக்கு போகிறது. கடவுள், அழைப்பவரின் குரலுக்கு விதி விலக்கில்லாமல் செவி சாய்க்கிறார். இறைவனை அழைப்பதின் மூலம் மனம் ஒரு வசீகரிப்பில் கவரப்பட்டு தன்னை இழக்கிறது. ஒரு வாலிபன் ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படும்பொழுது அவள் நடந்து போகும் பாதையை உணர்ச்சி மேலிட்டால் வணங்குகிறான். அவள் அவன் மேல் காதல் கொண்டோ அல்லது லட்சியரீதியாகவோ அவனுக்கு விசுவாசமாக இருக்கிறாளோ இல்லையோ, அவனுடைய போற்றுதலால் அவள் கவரப்படுகிறாள் என்பது நிச்சயம். தண்ணீரை வழிபட முடியுமா? ஆம், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது, மனத்தின் உள்ளேயிருந்து எழும் உணர்ச்சிகளால் தண்ணீரை வழிபடுவது அவசியம். ஒரு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி குறுகிய கால கவர்னர் பதவி வகித்த பின், ஒரு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அங்கு மாணவர்கள் அடங்காத மூர்கத்தன்மை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு பேராசிரியரை வேலை நீக்கம் செய்யும்படி கோரிக்கை எழுப்பினார்கள். தவறினால் அங்கு போடப்பட்டிருந்த ஒரு பெரிய பந்தலுக்கு தீ வைத்து விடுவதாக மிரட்டினார்கள். அவருடைய சமாதானத்தை மாணவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர் சென்னைக்குச் சென்று பார்க்க வேண்டிய அதிகாரிகளைப் பார்த்து, பெறவேண்டிய ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பும் பொழுது, ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்த பல்கலைகழக ஊழியர்களிடம் கடிதத்தை அவர் பத்திரமாக பாதுகாத்து கொண்டு வந்ததைப் பற்றிப் பேசும்பொழுது, அவர் வாழ் நாளிலே அப்படி வேறெதையும் பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை என்று கூறினார். அக்கரையுடன் தண்ணீரைப் பாதுகாத்து தண்ணீரைப் போற்றலாம். அதை வணங்கவும் செய்யலாம்.

சுயநலமின்றி, தண்ணீருக்கும் ஜீவன் உண்டு என்கிற மனோபாவத்துடன் தண்ணீரை உணர்வால் போற்றுவது நன்று. அப்படி தண்ணீரை உயிருள்ளதாகவும் அன்புக்குரியதாகவும் எண்ணி வழிப்பட்டால், நிச்சயமாக தண்ணீரின் பதில் கிடைக்கும். அந்த நிமிடத்திலிருந்து வீட்டில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது கேள்விப்படாததாக இருக்கும். தண்ணீர் உணர்ச்சிக்குரியது என்பது ஆன்மீக தத்துவம். மிகுந்த உணர்ச்சிக்குட்பட்டவர்கள் கனவில், அலைபுரளும் கடலைக் காண்பார்கள். அந்த அலைகளின் மீது மிதப்பது போன்றும் காண்பார்கள்.

போற்றுதல் என்பது கவனிப்பை உள்ளடக்கியதாகும்.

தண்ணீரை ஒருவர் வழிபடும் பொழுது வழிபடுகின்ற அந்த ஸ்தாபனத்திலும் வீட்டிலும் தண்ணீர் கஷ்டம் குறைவாகவே இருக்கும். தண்ணீருக்கு கவனம் செலுத்துவதால் தண்ணீர் பற்றாக்குறை தற்காலிகமாகத்தான் தீரும். ஆனால் அதைவிட தண்ணீரை வழிபடுவதால் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். நாம் தண்ணீரை வழிபடுவதால், இப்பொழுது நாம் உபயோகிக்கும் தண்ணீரின் தரத்தைவிட உயர்ந்ததான, சுத்தமான தண்ணீர் கிடைக்கும். கவனிப்பு எப்பொழுதும் பொய்ப்பதில்லை. தண்ணீருக்கு பக்தி செலுத்துவதால், அது அதிகப் பலன் தருவது எப்பொழுதும் பொய்ப்பதில்லை.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:53 am


52. நகரத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுதல்


மழை, அருள் என்பது ஆன்மீகம். தண்ணீர் உணர்ச்சிக்குரியது. மனம் உணர்ச்சிப் பெருக்கால் நிறைந்திருக்கும் பொழுது, தேவைக்கு மிஞ்சிய அளவில் தண்ணீர் அபரிமிதமாகக் கிடைக்கும். நீர்வளம் உள்ள இடங்களில் இருப்பவர்கள் குடும்பப் பாசத்துடன் இருப்பதைக் காணலாம். தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான இரகசியம் இதிலுள்ளது. உணர்ச்சிகளை நாம் கட்டளையிட்டு வரவழைக்க முடியாது. அப்படி எனில் இவ்வுண்மையை நாமெப்படி நடைமுறையில் பயன்படுத்திக் கொள்வது?

உணர்வு என்பது உயர்வானது என்பது உண்மை. இதுவுமன்றி வேறு ஒரு உண்மையும் உள்ளது. நமக்கு முக்கியமானதொன்று தேவைப்படும் பொழுது, அதை அடைய தீவிரமாக முயற்சிக்கும் பொழுது, நமக்கு உணர்ச்சி பெருகுகிறது. மேலும் குடும்பத்திலுள்ளவர்கள் மீதும், மற்றவர்கள் மீதும் காட்டும் பாசம், தேசபக்தி, நேர்த்தியான வேலை செய்வதில் காட்டுமார்வம் மற்றும் எதன் மீதும் காட்டும் உணர்ச்சியாலும் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும். அந்த உணர்ச்சியை தண்ணீருக்காக செலுத்துவது மிகவும் சிறந்தது. நன்றியுடைமை என்பது, இறைவன் வாழ்வில் செயல்படுவதை உணர்ச்சிப் பூர்வமாக அறிந்து கொள்வதாகும். அப்படி இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொழுது, உடலில் அதிர்வுகள் ஏற்பட்டு சிலிர்க்கின்றது.

பல நூற்றாண்டுகளுக்கு முன், நூறு வருஷத்திற்கு ஒரு முறைதான் நாட்டில் வறட்சி ஏற்பட்டது. ஆனால் 20ம் நூற்றாண்டில்தான் அதிகபட்சமாக 60 முறைகள் வறட்சிகள் ஏற்பட்டன. வறட்சி அதிகரிப்பது என்பது ஆன்மீக நோக்கில் மனிதன், இறைவனிடமிருந்து விலகிப் போய்க் கொண்டிருக்கிறான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. வெளியில் ஏற்படும் வறட்சி, மனிதனின் இதயத்தில் அன்பின் ஊற்று வறண்டு விட்டதின் பிரதிபலிப்பாகும்.

வறட்சிக்குப் பின்னால் உள்ள ஆன்மீகக் காரணத்தை உணர்ந்து, மக்கள் சிருஷ்டி கர்த்தாவான இறைவனின் கருணை மீது உள்ளம் நிறைந்த நினைவுடன் மனதை செலுத்தினால், பருவ காலம் இல்லாத போதும், தூய்மையான மனத்தோடு மக்கள் யாவரும் இடைவிடாது வருண ஜபம் செய்வது போன்று, அதிக மழை பெய்யும். ஐரோப்பாவில் பிரம்மத்தை அப்சல்யூட் (ABSOLUTE) என்றும் இந்தியர்கள் பரப்பிரம்மம் என்றும் கூறுகிறார்கள். சத்தியத்திற்கு நம் வாழ்க்கையை அர்ப்பணித்தால் மழை இப்படி பருவம் தவறியும் பெய்யும். அரிதானது தண்ணீரில்லை, மனிதனுடைய உணர்வுகள்தான்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:53 am

53. தமிழ் நாட்டில் வறட்சி

உலகில் எந்தப் பகுதியிலும் வறட்சி ஏற்படலாம். ஆனால் ஆன்மீகம் நிறைந்த இந்தியாவில் வறட்சி ஏற்படாது. இருந்தபோதிலும், இந்தியாவில் வெள்ளச் சேதமும் வறட்சியும் ஏற்படுகிறது. இக்கூற்றை விரிவுபடுத்தி வறட்சி எந்தப் பகுதியில் நேர்ந்தாலும், தமிழ் நாட்டுக்கு வரக்கூடாது என்று கூற விரும்புகிறேன். ஆன்மீகம் மிகுந்த இந்தியா ரிஷிகளும், தபஸ்விகளும், முனிவர்களும், யோகிகளும் வாழ்ந்த நாடு. தமிழ் நாட்டில் அவதரித்த 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும் பகவான் ஸ்ரீ அரவிந்தர் வளரும் ஆன்மா என்று வர்ணிக்கும் சைத்திய புருஷனுக்குரிய யோகத்தை செய்தவர்களாவார்கள்.

ஸ்ரீ அரவிந்தரின் பூரணயோகம், வாழ்வனைத்தும் யோகம் என்று கூறுகிறது. மற்ற யோகம் யாவும் வாழ்வை புறக்கணிக்கிறது. இங்கு ஆன்மா என்று குறிப்பிடுவது ஜீவனின் சாட்சி புருஷன் அல்ல. அது சைத்திய புருஷன் என்பதாகும். வாழ்வில் பங்கு கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருவது, சைத்திய புருஷனாகும். ஸ்ரீ அரவிந்தர், தமிழ்நாட்டில் சைத்திய புருஷனின் வெளிப்பாடு மிகுந்து காணப்படுவதால் இங்கே வந்தாரோ என்று கருத வேண்டியுள்ளது. எந்த விதமான இடர் வந்துள்ள போதும் வறட்சி என்பது தமிழ் நாட்டுக்கு வராது, வரவும் கூடாது. அதற்கு நாம் செய்ய வேண்டியது யாதெனில் நாம், நம்மை ஆன்மீகப் பாரம்பரியத்தில் ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

மேற்கூறிய 75 மகான்களைத்தவிர, பெரிய ஆன்மாக்களான ரமணமகரிஷி, திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள், பட்டினத்தார், ராமலிங்க சுவாமி, போளூர் விட்டோபா, ராகவேந்திரர் மற்றும் பல மகான்கள் அவதரித்த நாடு, தமிழ் நாடாகும். இவர்களில் பலர் சூட்சும உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றும் சிலர் பரப்பிரம்மத்துடன் ஐக்கியமாகி விட்டிருப்பார்கள்.

இந்த மகான்களுடன் லட்சக்கணக்கான மக்கள் பக்தியுடன் ஈடுபாடு கொண்டுள்ளார்கள். இதைத்தவிர இஸ்லாமிய கிருஸ்துவ மகான்களும் உள்ளனர். மக்கள், தாங்கள் வழிபடும் மகான்களின் மேலுள்ள பக்தியை தீவிரப்படுத்தி அவ்வகையில் பழைய தொடர்பை புதுப்பித்துக் கொண்டால் நாட்டிற்கு ஒரு புதிய முறையான வாழ்வு ஏற்பட்டு, இனி எந்த வருஷத்திலும் வறட்சி என்பதே வராத நிலைமை ஏற்படும். வறட்சி வராமல் தடுக்க மத சம்மந்தமான சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன. சடங்குகளை விலக்கி மழைக்காக தெய்வீக அன்னையை அழைக்கலாம். அப்படி ஒருமுறை அன்னையை அழைத்தபோது, மழை அதிகமாகப் பெய்தது. மழை, அளவு கடந்து பெய்த பொழுது அதை நிறுத்துவதற்காக வேறொரு பிரார்த்தனை செய்ய வேண்டியிருந்தது.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:54 am

54. பணத்தை அதிகம் செலவழித்தால் பண வரவு பெருகும்

பணத்தை அதிகம் செலவழித்தால் பணவரவு அதிகரிக்கும் என்ற தலைப்பின் இந்தத் தத்துவம், பணத்தை சிக்கனமாக குறைந்த அளவில் செலவு செய்தால் பணம் அதிகரிக்கும் என்ற பரவலான நம்பிக்கைக்கு முரண்பாடானது. ஆனால் பணத்தை அதிகமாக செலவழிக்கும் முறையை கையாண்டவர்கள் பணத்தை அதிகமாக சேர்த்தார்கள் என்பது அனுபவபூர்வமான உண்மை. அதுவே நியாயமான ஆன்மீக உண்மையுமாகும்.

இதை நான் ஒரு மெக்கானிக்கல் விதிமுறை என்று கூட கூற விரும்புகிறேன். ஒரு குழாய் மூலமாகவோ, வாய்க்கால் மூலமாகவோ தண்ணீர் பாயும்போது, தண்ணீரின் வரத்து அதிகரிக்க தண்ணீரின் வெளியேற்றத்தை அதிகரிக்கிறோம். இது இயற்பியல் விஞ்ஞானம் என்று அறிகிறோம். அன்னை இப்படி ஒருமுறை பேசியதைக் கேட்டவர்கள் ஆச்சரியத்தால் திகைப்புற்றனர். இந்தப் புதிய கருத்தை ஒவ்வொருவரும் ஏற்றுக் கடைப்பிடித்து, அதன் உண்மையை அறிந்து கொண்ட பின் சிறிது காலத்திற்குள் பழைய முறைக்கே திரும்பினார்கள். பழங்காலத்து தொன்மையான தமிழ் இலக்கண நன்னூலில், நாம் நமது அறிவையும் புலமையையும் பலருக்கு போதிப்பதால், போதிப்பவர் மேலும் அதிக அறிவு பெறுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.

இசை, கலை, மொழி போன்றவற்றில் ஒருவரின் திறமை அதிகரிக்க அதை அவர் பயிற்சியை மேற்கொள்வதின் மூலம் அடையலாம் என்பது இதில் மறைந்துள்ள உண்மை.

எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் இந்த தத்துவத்தைப் பற்றி விளக்கிய போது, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு செயல்பட்டதின் விளைவாக, அவர்களது பணவரவு ஆச்சரியம் தரும் வகையில் தொடர்ந்து அதிகரித்தது. பணத்தை தாராளமாகச் செலவு செய்வது என்பது பணவிஷயத்தில் பிஸிக்கலான அம்சமாகும். பணத்தை செலவு செய்வதில் நாம் காட்டும் ஆர்வம் மற்றும் இந்த உண்மையை நாம் ஆழமாக புரிந்து கொள்வது ஆகியவை பணவரவின் அதிகரிப்பை நிர்ணயிக்கும். செலவழிக்க வேண்டுமென்று சொல்வது, ஊதாரித்தனமாக வீண் செலவு செய்வதல்ல. நியாயமான செலவைத்தான் இங்கு செலவு என்று குறிக்கப்படுகிறது. வீட்டிலோ அல்லது உன்னுடைய வியாபாரத்திலோ நிர்பந்தம் இல்லாத இடத்தில் அவற்றிற்கு செலுத்த வேண்டிய பணத்தை உடனே செலுத்தாமல் தள்ளிப் போடுவதும், நிர்பந்தம் அதிகமாக இருக்குமிடத்தில் உடனடியாக செலுத்தி விடுவதும், சாதாரணமாக பழக்கத்தில் இருந்து வரும் நடைமுறைப் பழக்கமாகும். பணத்தை இவ்வாறு செலவிடுவது சரியான முறையன்று.

பண செலவிற்கு ஒரு முறையான வரிசை உள்ளது. இந்த வரிசையை மூன்று மாதங்கள் சரியாக பின்பற்றுங்கள். அது சம்பளம் கொடுப்பதிலாகட்டும் அல்லது வியாபாரத்தில் சரக்குகளை வழங்குபவர்களுக்கு பணம் கொடுப்பதிலாகட்டும், முன்னுரிமை கொடுத்து இந்த முறையைப் பின்பற்றுங்கள். இதை பின்பற்ற முடிவு செய்தால் இந்த வரிசை கிரமம் ஏன் முக்கியம் என்று உணர்ந்து செயல்படுங்கள்.

நம் செயல்பாடு சரியான விளக்கத்தின்படி இருக்க வேண்டும். அறிவு விளக்கத்தைத் தாண்டி ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படும் கட்டமும் உள்ளது. நாம் மேலும் ஒரு கட்டத்திற்குச் சென்று ஆன்மீக நம்பிக்கையை தெளிந்த ஆன்மீக அறிவாகவும் மாற்றிக் கொள்ளலாம்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:54 am


55. எப்பொழுதும் பெருகிக் கொண்டு வரும் வருமானம்


பொருள் ஈட்டுவது தங்கள் கொள்கைப்படி நேர்மையற்றது என்ற நம்பிக்கைக் கொண்ட உயர்ந்த ஆத்மாக்கள் உள்ளார்கள். நான் அவர்களுக்கு என் நிலையைப் பற்றியோ அல்லது அவர்கள் தொன்று தொட்டு கடைப்பிடித்து வந்த ஒழுக்க நெறி முறை தத்துவத்தின்படி வாழ்க்கைக்கு மிகக் குறைந்த பணமே போதுமென்ற நம்பிக்கையைப் பற்றியோ விளக்க முயற்சிக்கவில்லை. என்னுடைய முக்கியமான இரண்டு நம்பிக்கைகள்:

நவீன நாகரீக வாழ்க்கை செலவுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது.
வருடக்கணக்கில் தவத்தில் உட்கார்ந்து இருப்பதை விட நேர்மையாக பணம் சம்பாதிப்பது மிகவும் கடினமானது. தவம் என்பது தூய்மையான உயர்ந்த நிலையில் செய்வதாகும். ஆனால் பணம் சம்பாதிப்பது என்பது சிரமம் நிறைந்த நிஜ உலகில் செய்ய வேண்டியதாகும்.

எவரொருவர் தன் சூழ்நிலை அனுமதிக்கும் அளவிற்கு தன்னுடைய செலவுகளை முறையான வரிசைக்கு ஆட்படுத்துகின்றாரோ அவருடைய வருமானம் அந்த அளவிற்கு பெருகுவதைக் காணலாம். தவிர்க்க முடியாத செலவு என்று தற்பெருமைக்காக செலவிடுவதை தாராள செலவாகக் கருத முடியாது. கொடுக்க வேண்டிய சில கடினமான பாக்கிகளை தாமதப்படுத்துவதும், தனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்காமல் இருக்கும் தயாள குணம் உடையவருக்கு கொடுக்காமல், தனக்கு அவசரமாகத் தெரியும் செலவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செலவிடுவதும், ஏமாற்றும் மனப்போக்கை காட்டுகிறது. முறையான வழியில் தாராளமாக செலவழிப்பது, நம்மிடத்திலுள்ள ஏமாற்றுகிற குணத்தின் களங்கத்தைப் போக்குவதாகும். நம்முடைய தேவைதான் முக்கியமென்ற மனப்பான்மையை தவிர்ப்பது, நம்முள் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவரும். இந்த இரண்டு ஆன்மீகக் கோட்பாடுகளும் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாகும். உடலாலும், மனத்தாலும் பொருள் ஈட்டுவதைவிட ஆன்மா மூலம் அதிகமான பொருள் சம்பாதிக்கலாம்.

நியாயமாக கொடுக்க வேண்டிய பணத்தை நீ தாராளமாக மனமுவந்து கொடுக்கும் பொழுது, அதைப் பெறுபவர் பேரானந்தம் அடைவார். அதனால் அவருடைய ஆன்மாவின் சக்தி வெளிப்படுகிறது. பயனற்ற வகையில் ஆடம்பரமாக செலவழிக்கும் பொழுது அதைப் பெறுபவர், நம்மை ஒரு முட்டாளாக எண்ணுவார். சில சமயங்களில் நாம் கொடுப்பது நம் அகந்தையின் வெளிப்பாடாக கருதப்பட்டு அடுத்தவர் அப்பணத்தை வாங்க மறுக்கவும் செய்யலாம்.

வெற்றிகரமாக நடக்கும் வியாபாரத்தில் செலவிற்கு உரிய இடங்களில் நிறைய செலவாவதையும் காணலாம். அங்கு வியாபாரம் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கு அது ஒரு முக்கிய காரணம். தெய்வீக அன்னை இதை வாழ்வின் அடிப்படையான கொள்கை என்று அறிவித்துள்ளார். பணத்தைப்பற்றிய இந்நியதிக்கு ஆன்மீக நிருபணம் தேவை என்று நினைப்பவர்கள் அன்னையின் கூற்றை நிருபணமாக எடுத்துக் கொள்ளலாம்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:54 am

56. பணம் உழைத்து சம்பாதிப்பதற்கு பண்புகள் சக்தி முக்கியம்

பணம் உழைத்து சம்பாதிப்பது, என்பது தேர்தலில் வெற்றி பெறுவது, பரீட்சையில் பாஸ் செய்வது போன்ற நடவடிக்கையைப் போன்றது. ஒரு செயலில் எனர்ஜி, நோக்கம், ஆர்கனைஷேஷன் மற்றும் திறமை என்று நான்கு அம்சங்கள் உள்ளன. எனர்ஜி ஆர்வத்திலிருந்து வருகிறது. நோக்கம் எனர்ஜிக்கு செயல்படும் திசையைக் காட்டுகிறது. ஆர்கனைஷேஷன் எனர்ஜியை சக்தியாக மாற்றுகிறது. திறமை சக்தியை பலனாக மாற்றுகிறது.

பணம் ஈட்டப்படுவது ஒவ்வொரு அம்சத்தின் திறனைப் பொருத்தது. மேலே குறிப்பிட்ட திறன்களின் அம்சம் ஒருங்கிணைந்து செயல்படும் பொழுதுதான், ஈட்டப்படும் பணத்தின் அளவு தெரியும். இதில் ஏதோ ஒரு அம்சம் இல்லாவிட்டாலோ அல்லது அரைகுறையாக செயல்பட்டாலோ, பணம் ஈட்டுவதில், எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. எனவே பணத்தை நல்லமுறையில் ஈட்டுவதற்கு காரணமாக இருக்கும் எந்த அம்சத்தையும், தவறவிடக்கூடாது. ஈட்டப்படும் பணத்தின் அளவு, இந்த அம்சங்களின் பண்புகளால் நிர்ணயிக்கப்படுகிறது. இது ஏன் என்றால் பண்புகள் என்பது ஆன்மீகம் என்பதாகும்.

ஒருவர் மாதம் ரூ.10,000 அல்லது ஒரு லட்சம் சம்பாதிப்பவர் அந்த வருமானத்தை 5 மடங்காக உயர்த்திக் கொள்ள முடியும். அதற்கு அவர் செய்ய வேண்டியது என்னவென்றால் பண்புகளின் நிலையை கொஞ்சங் கொஞ்சமாக உயர்த்தி அதிகபட்ச நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்த முறையைப் பின்பற்றினால் ஒரு கம்பெனி மிகக் குறைந்த நஷ்டத்தில் இயங்கி வரும் பொழுது, குறைந்த அளவு இலாபம் ஈட்டும் அளவிற்கு உயர்த்திக் கொள்ள முடியும். இலாபத்தை மேலும் உயர்த்திக் கொள்ள வேண்டுமானால், பண்புகளை உயர்த்திக்கொள்ள வேண்டும். அல்லது செயலை மேலும் சிறப்பாக முறைப்படுத்துவதாலும் கம்பெனியின் முக்கியக் குறிப்பிட்ட தேவைகளுக்கு தேவையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், அதிக லாபத்தை எட்டமுடியும்.

பண்புகள் சம்பந்தப்படாத வேலையே இல்லை. கவனம், செயலை முறைப்படுத்துதல், புரிந்து கொள்ளும் திறன், நேர்மை, உண்மையாக இருத்தல் போன்ற பண்புகள் நாம் அறிந்தவைகளாகும். இதைப்பற்றி அதிகமாக பட்டியலிடலாம்.

ஒரு குடும்பத்தின் தலைவரான தகப்பனாரோ அல்லது தாயாரோ தன்னுடைய சொந்தத் தேவைகளை நாடுவது சுயநலமாகும். அவர் தன் சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பதில் குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்தால் சுயநலமற்றவராக இருப்பார். தனது கடமையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர்களின் தேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதில் முயற்சிப்பார். அப்படி மற்றவர்களுக்கு கவனிப்பு செலுத்துவதால் குடும்பத்தில் வருமானம் திடீரென்று பெருகும். கம்பெனி முதலாளிகள் அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடும் பொழுது, இது வரையில் வைக்கோற்போரில் ஊசி தேடுவது போன்று, ஆர்டர்களைத் தேடிக் கொண்டு இருக்கும் நிலை மாறி ஆர்டர்கள் தானாகவே வந்து குவியும்.

பண்புகள் ஆன்மீகச் சிறப்புடையது. அவை அபரிமிதமான செல்வத்தைக் கொண்டு வரும் திறன் உடையவை.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:55 am

57. பண்புகள் 100 மடங்கு சக்தி உடையவை

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் உடல் அளவில்தான் வாழ்ந்தான். அப்பொழுது அவன் வாழ்வு ஆரம்ப நிலையாக எளிமையாக இருந்தது. அந்த நிலையில்தான் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். இப்பொழுது மனிதன் தன் வாழ்வில் வசதிகளைப் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டான். ஆனந்தம், சௌகரியங்கள், திறமை, வேண்டுபவற்றை அடைதல், போன்றவைகளில் 100 மடங்கு வளர்ச்சியை அடைந்து விட்டான். இந்த முன்னேற்றங்கள் ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட வியக்கத்தகு நிகழ்ச்சிகளாகும். இதற்குக் காரணம் மனிதன் உடல் அளவிலிருந்து மனத்தின் நிலைக்கு உயர்ந்துவிட்டான் என்பதாகும். எனினும் அவன் தன் வாழ்வை முழுமையான மனத்தளவிலான வாழ்க்கையாக, முற்றிலுமாக அமைத்துக் கொள்ளவில்லை. பகுத்தறிவு வாழ்வாகவோ, மனதளவில் உயர்ந்த வாழ்வாகவோ, அமைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், அவன் உடலளவு நிலையிலிருந்து உணர்வு நிலைக்கு உயர்ந்துள்ளான், என்பது உண்மை. உடலை விட்டு விலகி மனிதன் உணர்வு நிலைக்கு வந்துள்ளான் என்பது உண்மை. அவனுடைய உடலும், உணர்வும் பிஸிக்கல் லெவலில் அறிவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அறிவின் தலையீட்டை ஏற்பதில்லை. இருந்தாலும் மனிதன் அறிவால் செயல்படுகின்றவன் என்று சொல்வதில் தவறில்லை.

இத்தகைய வியத்தகு பெருக்கம் மனிதன் பிஸிக்கல் லெவலிலிருந்து அறிவு நிலைக்கு உயர்ந்ததால் வந்துள்ளது என்றால், இதே மாதிரியான மற்றொரு பெருக்கம் அறிவு நிலையிலிருந்து ஆன்மநிலைக்கு உயரும் பொழுதும் வரும். அப்படி உயரும் பொழுது வாழ்வு வளமான நிலைக்கு உயர்வதிலும், உள்ளுரை அமைதி ஏற்படுவதிலும், வெளிப்புற பாதுகாப்புப் பெறுவதிலும், பேதமற்ற பூசல் இல்லாத நிலையிலும், மனிதனின் நிலை ஆயிரம் மடங்கு உயரும். குறிப்பாக செல்வ வளம் அதிகமாக பெருகும் என்று ஒருவர் உறுதியாகக் கூறமுடியும்.

ஒளிபொருந்திய ஆன்மாவை அடைவது நமது குறிக்கோளானால், நமக்குத் தெரிந்துள்ள பண்புகளான நேர்மை, விஸ்வாசம், உண்மையைக் கடைப்பிடித்தல், சுத்தம், மௌனம் இவற்றைப் பின்பற்ற வேண்டும். இந்த பண்புகளை ஒருவர் அதிக அளவில் உபயோகப்படுத்தினால், ஆன்மாவின் சக்தியை வாழ்வில் செயல்பட வைக்கமுடியும். இந்தப் பண்புகள் ஆன்மாவின் திறமையானதால், நம் வேலையின் பலன்கள் ஆயிரம் மடங்காக இல்லாவிடினும் நூறு மடங்காக உயர்த்தும்.

நாம், பணத்தை உபயோகப்படுத்தும் பொருளாகக் கருதுகிறோம். ஆன்மீகத்தின் படி, பணம் என்பது இறைவனின் சக்தியாகும். நாம் ஆன்மீகப் பண்புகளை முழு அளவில் உபயோகிக்கும் பொழுது, பண வரத்து இடையறாமல், தடையின்றி வரும். ஆன்மீகப்பண்புகளை உபயோகிப்பதில், சிறப்பாகவும், பூரணமாகவும், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆன்மீகப் பண்புகளை பற்றிய நீண்டதொரு பட்டியலை கொடுக்க முடியும். நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கும் ஒரு கம்பெனி ஆன்மீகப் பண்புகளின் தன்மையை தெரிந்து கொண்டு, தன் சொந்த தேவைகளைக் கருதாமல் மற்றவர்களின் தேவைக்கு முன்னுரிமைக் கொடுத்து பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தினால், அடுத்த மாதமே கம்பெனி இலாபம் ஈட்டத் தொடங்கும். உள்உணர்வில் உண்மையிருந்தால் ஆன்மீகச்சக்தி வெளிப்பட்டு பலன்கள் அக்கணமே வெளிப்படும்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:55 am

58. மேதை என்பது ஆன்மாவின் சக்தி

பண்புகள் என்பது ஆன்மீகமானவை. ஆனால் அவை நமக்கு வியக்கத்தக்க அளவில் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பலன்களை உயர்த்துமா? நாம் ஏன் அவைகளை ஆன்மீகம் என்று அழைக்கிறோம்?

மேதைகள் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் உருவாக்கப்படுவதில்லை. மேதைகள் நூறு வருஷத்தில் சில நேரங்களில் தோன்றுகிறார்கள். மேதைகள் சிலர் இளம் பிராயத்திலேயே அறிந்து கொள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் வாழ்நாளில் பிற்காலத்தில் தம்முள் உள்ள, மேதைத் தன்மை வெளிப்படுவதை உணர்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள திறமை, வெளிப்புற சூழல் உகந்ததாக அமையும் பொழுதுதான், அவர்களது மேதாவிலாசம் வெளிப்படுகிறது. மேலும், சாதகமான சூழ்நிலை உருவாகும் பொழுது மேதைத் தன்மை, தற்செயலாக, மனிதன், பொருள்கள், காலம், பிரபஞ்சம் இவைகளில் வெளிப்படுகிறது. ஆன்மீகப் பண்புகள் அத்தகைய சாதகமான சூழ்நிலையை எல்லோருக்கும் அளிக்கவல்லது.

ஒரு காலத்தில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஒரு நிலைமை இருந்து வந்தது. அது எல்லோருக்கும் கல்வி இல்லாத நிலை, ஒவ்வொருவரும் போர் வீரராக ஆக முடியாத நிலை, நிர்வாகம் ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்த நிலை, நாட்டை ஆளும் உரிமை அரச குடும்பத்தினருக்கு மட்டும் உரியது என்ற நிலைமையாக இருந்து வந்தது. இப்பொழுது இவை அனைத்தும் அடியோடு மாறிவிட்டன. எனவே மேதாவிலாசம் பிறப்பால் வருவது என்ற கருத்தை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஒரு மேதை தன்னுடைய மேதா விலாசத்தை உணராத நிலையில், திடீரென்று ஒரு நாள் அவருள் இருக்கும் சக்தி முழுமையாக மலர்ச்சியடைந்து வெளிப்படுகிறது. திறமையின் பண்புகள், நோக்கத்தின் பண்புகள், மனத்தின் பண்புகள், யாவும் வேலையிலுள்ள ஆன்மாவை வெளிப்படுத்தக் கூடியன. ஆன்மா அப்படி வெளிப்படும் பொழுது அளவற்ற பலன்களை சுபிட்சமாக அளிக்கிறது.

உடல் உழைப்பு, திறமையை வழங்குகிறது. உணர்வால் செய்யும் வேலை, அதாவது வாழ்க்கை அனுபவங்கள் இதமான, மனோபாவங்களைக் கொடுக்கிறது. மனத்தால் புரிந்து கொள்வது, நன்றாக புரிந்து கொள்ளும் ஆற்றலைத் தருகிறது. ஒருவர் தன்னை ஆன்மாவின் நிலைக்கு உயர்த்திக் கொண்டு வேலையை செய்யும் பொழுது அவர், அமைதி, மௌனம், சாந்தி, உண்மை, நேர்மை, விஸ்வாசம், கடமை உணர்வு ஆகிய பண்புகளை உணர்கிறார். இந்தப் பண்புகளை தெரிந்தே உடல், உணர்வு, மனம் சம்பந்தப்பட்ட வேலைகளில் செலுத்தி செய்யும் பொழுது, அது ஆன்மாவை வெளிப்படுத்த உதவுகிறது. ஆன்மாவின் சக்தி அபரிமிதமானது. எனவே எப்பொழுதும் சுபிட்சம் அதிகரித்த வண்ணமாகவே இருக்கும்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:55 am

59. பக்தியுள்ளவர்கள், வைதீகமானவர்கள், நல்லவர்கள் ஏன் ஏழ்மையில் இருக்கிறார்கள்?

பக்திமான்கள், வைதீகமானவர்கள், நல்லவர்கள், பெரும்பாலும் அடிக்கடி ஏழ்மையில் உள்ளார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமான மூன்று காரணங்களைக் கூறலாம். (1) பக்தி என்ற சொல்லுக்கேற்ப அவர்கள் உண்மையான பக்தி உடையவர்கள் அல்ல. (2) தானியத்தை உமி, பதர் இவற்றிலிருந்து சல்லடையிட்டு பிரிப்பதுபோல், அவர்கள் நல்லது, கெட்டது என்பதை வேறுபடுத்தி அறியக் கூடியவர்கள் அல்ல. (3) அவர்கள் பூஜிக்கத் தக்க சிவன், விஷ்ணு போன்ற கடவுளர்களின் பெயரில் உணர்வைத் தூண்டக்கூடிய கெடுதலான ஆவிகளை வணங்குகிறார்கள். ஆசாரமென்பது சடங்குகளை கடைபிடிப்பதில்லை. வைதீகத்தன்மை என்பது பரிசுத்தமான மனத்துடன் பேருண்மை மீது நம்பிக்கை வைப்பதும், தூய்மையான தன்னடக்கமுள்ள நிலையாகும். மரபு, கோயில்களில் உள்ள விக்கிரகங்களை வணங்கச் சொல்லவில்லை. இருதயக் குகையில் கட்டை விரல் அளவில் உறைந்துள்ள பிரம்மத்தை வழிபட வேண்டும். ஒரு ரிஷி கோபத்தை வெளிப்படுத்தும் பொழுதும், சிற்றின்ப உணர்ச்சியில் தூண்டப்படும் பொழுதும், அவர் பல வருடங்களில் தவம் செய்து பெற்ற தவவலிமையை இழக்கிறார். அவர் ஒரு சிறிய பொய் சொன்னாலும் இவர் ஒரு வைதீகர் என்ற நிலையை இழக்கிறார். அவர்கள் ஜாதகத்தைப் பார்க்க வேண்டியதில்லை அல்லது சுபகரமான நல்ல நேரத்தையும் அனுசரிக்க வேண்டியதில்லை. இவையெல்லாம் பாமரமக்களுக்கு உரியது.

இறைவனின் ஆன்மா எல்லா நிலைகளிலும் உண்மையில்லாதவைகளிலும் கூட கலந்துள்ளது. ஒருவர் நல்லது, கெட்டது என்பதை சீர்தூக்கிப் பார்த்து நல்லதை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பாரம்பரியம் கூறுகிறது. அனேக பக்திமான்கள் அத்தகைய உயர்ந்த வேறுபாட்டை பகுத்தறிபவர்களாக இல்லை. அவர்கள் தங்களது சௌகரியத்திற்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ அதுவே வைதீகம் என்று எண்ணி அதைப் பின்பற்றி தீயசக்திகளுக்கு பலியாகிறார்கள்.

ஒரு சமயம் ஒரு காங்கிரஸ் தொண்டர் மகாத்மாகாந்தியின் சிறிய ஒள்பிரபையால் சூழப்பட்டவராகத் தோன்றினார். இப்பொழுது மகாத்மாகாந்தி இல்லை. அவரது ஆத்மாவின் தூண்டுதலும் இல்லை. இன்றைய அரசியல்வாதிகளை மகாத்மாகாந்தியைப் போன்ற புண்ணிய ஆன்மாவாக நினைப்பது அவர்கள் நம்மை ஏய்க்க உதவும். புகழ்பெற்ற பெரிய கோயில்கள், புண்ணிய புருஷர்களால் கட்டப்பட்டவைகளாகும். வழிபாடு தூய்மையாக இருக்கும் வரை கோயில்களில் இறைவனின் சாந்நித்யம் நிலைத்து இருக்கும். தூய்மை கெடும் பொழுது அந்த சூழல் கோயிலிலிருந்து விலகிவிடுகிறது. வழிபடுபவர்களும், நிர்வாகிகளும் அங்குள்ள சூழ்நிலையை தம் வசம் ஆக்கிக் கொண்டு, தங்களுடைய மனநிலைக்கு ஏற்ப செயல்படுவதால் கோயிலின் சூட்சும சூழல் மாறிவிடுகிறது. இரண்டு குறிப்புகளால் தூய்மையான இடத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். (1) மனத்தின் உள்ளே அமைதியும் சாந்தியும் நிலவுவது, ஆன்மீகத்தில் உயர்வடைந்ததைக் குறிக்கும். (2) நம்பூதிரிகள் குருவாயூரப்பன் கோயிலில் பரிசுத்தமான சுத்தத்தை பராமரிப்பது போன்ற சுத்தம் காணப்படுவது. ஆன்மா எப்பொழுதும் சுபிட்சம் அளிப்பதில் பொய்ப்பதில்லை. சுபிட்சம் கிடைக்கவில்லை என்றால் மனிதன் தவறான தெய்வத்தை வணங்குகிறான் என்று கருதலாம்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக