புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
1 Post - 4%
Guna.D
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
1 Post - 4%
mruthun
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_m10சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Mon Aug 31, 2009 7:28 pm

மதமாற்றமே குறிக்கோள்

சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Conversionagenda2உலகெங்கும்
தங்கள் மதத்தைப் பரப்பி தங்கள் ஆட்சியை நிறுவவேண்டும் என்பதே
கிறுஸ்துவர்களின் தலையாய குறிக்கோள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இரண்டாயிரம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தியா வந்த போப் ஜான் பால் நம் மண்ணில்
நின்றுகொண்டே நம் பூமியை கிறுஸ்துவ பூமியாக மாற்றவேண்டும் என்று குரல்
கொடுத்ததையும் நாம் பார்த்தோம். பின்னர் அமெரிக்காவில் வலதுசாரிக்
குடியரசுக் கட்சியின் ஆட்சியில் அதிபர் ஜார்ஜ் புஷ் “ஜோஷுவா ப்ராஜக்ட்” மூலம் இந்தியாவில் மதமாற்றத்திற்கு
பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்தார். மேலும் வாத்திகனின் அபிமான புத்ரியான
திருமதி சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு
நம் நாட்டில் மதமாற்றங்கள் பெருமளவில் நடைபெறத் துவங்கியதாகத் தெரிகிறது.
குறிப்பாக ஆந்திரத்திலும் தமிழகத்திலும் கிறுஸ்துவ மிஷனரிகளின் மதமாற்ற
நடவடிக்கைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
பெரும்பாலும் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழை எளிய மக்களைக்
குறிவைத்து மதமாற்றம் செய்வதோடு மட்டுமில்லாமல், மிஷனரிகள் உயர்
மட்டத்தில் உள்ளவர்களையும் விட்டு வைப்பதில்லை. பத்திரிகைத் துறையில்
பணிபுரிபவர்கள், வெள்ளித் திரை / சின்னத் திரை உலகத்தில் இருப்பவர்கள்,
தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என்று எவரையும் விட்டுவைக்காமல்
மதமாற்றும் நோக்கத்துடன் அணுகுகிறார்கள். இது தொடர்பான ஒரு சமீபத்திய
சம்பவத்தைப் பற்றி இந்தப் பதிவு.

பிராம்மணர்களை மதமாற்றும் முயற்சி

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில், திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து
அலுவலகம் எதிரே அட்வெண்ட் சர்ச் ஒன்று இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு
முன் சிறிய பிரார்த்தனை கூடமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டிடம் இன்று
பிரம்மாண்ட தேவாலயமாக எழுப்பப் பட்டிருக்கிறது. ஆகஸ்டு மாதம் ஐந்தாம்
தேதியன்று இதன் மதில்சுவர் மேல் கண்ணைக் கவரும் விதத்தில் ஒரு விளம்பரத்
தட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில், “கிறுஸ்துவ பிராம்ம்ண சேவா சமிதி, முதலாம் ஆண்டு விழா” என்று தலைப்பிட்டு, “பூஜ்ய
ஸ்ரீ பாகவதர் வேதநாயகம் சாஸ்த்ரிகள் அவர்களின் கதாகால‌ஷேபம் சனிக்கிழமை
8-ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறும், அனுமதி இலவசம்”
என்று விளம்பரம் செய்யப் பட்டிருந்தது. இவ்விளம்பரத்தைப் பார்த்த திருவான்மியூர் வாழும் இந்துக்களில் சிலர் அதிர்ந்து போயினர்.
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Conversionagenda1தங்கள்
மதத்தில் ஜாதிப் பாகுபாடுகள் கிடையாது என்று கிறுஸ்துவர்கள்
பீற்றிக்கொண்டாலும், நடைமுறையில், தேவாலயத்தில் இருக்கை முறை முதல்
கல்லறையில் புதைக்கும் முறை வரை, ஜாதி வேற்றுமை கையாளப் படுகிறது. மேலும்
அப்பாவி இந்துக்களை மதமாற்றம் செய்யும்போது “இயேசுவின் பார்வையில் அனைவரும் சமம்”
என்று சொல்லும் மதப்பிரசாரகர்களும் பாதிரிகளும் காரியம் முடிந்தவுடன்
தங்கள் கண்களையும் மூடிக்கொண்டு விடுவார்கள். மாற்றப்பட்ட நம் மக்கள்
தாங்கள் கும்பிடும் சாமியையும், கும்பிடும் முறையையும் தவிர்த்து வேறு
எந்த மாற்றமும் காணார்கள்!
ஆனாலும் பிராம்மணர்கள் என்ற சமூகத்தினரின் பெயரை வெளிப்படையாகக்
குறிப்பிட்டு விளம்பரம் செய்த ”கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி” என்ற
அமைப்பின் பெயர் அதிர்ச்சியைத் தந்தது உண்மை. அமைப்பு புதியதாக
இருந்தாலும், அதனை ஆரம்பித்து செயல்படுத்தும் “சாது செல்லப்பா” என்னும் மதப்பிரசாரகர் “அறுவடை” செய்வதில் பெயர் போனவர்தான். திருவான்மியூர் நிகழ்வுகளைப் பார்ப்ப்தற்கு முன்னால் இவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது முக்கியம்.

சூது செய்யும் சாது

தென்தமிழகத்தில் இந்துக் குடும்பத்தில் பிறந்து, கோயில் சூழ்நிலையில்
வளந்த இவர் சிறு வயதிலேயே இதிஹாச புராணங்களை நன்கு கற்றவராம்! தினமும்
கோயில் வழிபாடுகளில் கலந்துகொள்ளும் இவரின் சந்தேகங்களுக்கும்,
கேள்விகளுக்கும் கோயில் குருக்களும் அங்கிருந்த மற்ற ”பண்டிதர்களும்”
சரியாக விளக்கங்கள் கொடுக்க இயலாத நிலையில், மனம் வெறுத்து, ஓடும் ரயிலில்
இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள எத்தனித்த போது, எங்கோ ஒரு
தேவாலயத்திலிருந்து காற்றில் மிதந்து வந்த விவிலிய உரை ஒன்று
வெதும்பியிருந்த இவர் மனத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாம்! அடுத்த
ரயில் நிலையத்திலேயே இறங்கி அந்தத் தேவாலயத்தை அடைந்து அங்கே இயேசுவைக்
கண்டு தெளிவுபெற்று மனம்மாறி கிறுஸ்துவராக மாறி விட்டாராம்! அன்றைய
தினம் ’மே’ மாதம் 14-ம் தேதி, 1967-ம் வருடமாம்! (இந்த விவரங்களைத்
தருவதும் கிறிஸ்தவ பிரசார இலக்கியமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்).

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Mon Aug 31, 2009 7:40 pm

இனி சில உண்மையான தகவல்கள். இயேசுவின் ஆணைப்படி கிறுஸ்துவ மதத்தைப்சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Sadhu-chellappa-225x300
பரப்புவதையே தொழிலாகக் கொண்ட இவர், குறுகிய காலத்திலேயே தமிழகம் முழுதும்
சுற்றுப் பயணம் செய்து கணிசமான அளவில் இந்துக்களை மதம்மாற்றி
சர்ச்சுகளில் இணைத்துள்ளார்ர். 1974-ல் முழு நேர எவாங்கலிக்க ஊழியரான இவர்
”அக்னி ஊழியங்கள்” (Agni Ministries) என்ற நிறுவனத்தைத் தொடங்கி, நடத்தி வருகிறார். 1982-ல் “அக்னி”
என்ற மாதாந்திரத் தமிழ் பத்திரிகையை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காக(!?)
ஆரம்பித்து, நடத்தி வருகிறார். (Agni (fire) monthly magazine in Tamil).
1995-ல் இயேசு இவருக்கு, புதிய சர்ச்சுகள் நடவு செய்யச்சொல்லி உத்தரவு
இட, அன்றிலிருந்து இன்றுவரை 27 சர்ச்சுகள் நடவு செய்து, அவற்றுக்கு 27
பங்குத் தந்தைகளும் நியமனம் செய்து, அறுவடைக்கு வழிசெய்துள்ளார். 28 தமிழ்
புத்தகங்களையும் 2 ஆங்கிலப் புத்தகங்களையும் எழுதியுள்ளாராம். பல
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள மதப் பிரசாரகர்களைச்
சந்தித்திருக்கிறார். அந்த மாதிரியான வெளிநாட்டுப் பயணங்களில்
ஆங்காங்கேயுள்ள இலங்கைத் தமிழ் இந்துக்களில் சிலரையும் கிறுஸ்துவர்களாக
மதம்மாற்றி மாபெரும் ஊழியம் புரிந்துள்ளார் என்கிற விஷயத்தை நாம்
முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும். (இவரைப் பற்றிய விபரங்கள்: http://www.agniministries.org/ மற்றும்
http://www.agniministries.org/Testimony.aspx ஆகிய தளங்களில் கிடைக்கும்).
இவருடைய அக்னி ஊழிய மையம், “இந்தியாவின் எவாங்கலிக்க நடவடிக்கைக் குழு” (”Evangelical Action Team of India”)
என்ற இயக்கத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் சர்ச்சுகள்
நடவு செய்து அறுவடைகள் செய்வதோடல்லாமல், எவாங்கலிக்க வகுப்புகளும் நடத்தி,
பங்குத்தந்தைகளுக்கு எவாங்கலிக்கப் பயிற்சிகளும் கொடுத்து வருகிறது.
இந்திய மதங்களை (இந்து, பௌத்த, ஜைன, சீக்கிய மதங்கள்) பற்றிய
விவரங்களையும், அவற்றின் மத நூல்களையும், கோட்பாடுகளையும் எப்படி
திரித்துக் கூறி மதமாற்றம் செய்ய உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும்
என்பதையும் விவிலிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த மையம் கற்றுத்
தருகிறது. ஆங்காங்கே சிறு பிரார்த்தனைக் குழுக்கள் (Prayer Cells) அமைத்து
அவற்றின் உதவியுடன் சர்ச்சுகள் நடுவது, இந்துமதக் கோட்பாடுகளை கிறுஸ்துவ
மதக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு, அதற்கேற்றார் போல் அவற்றைத் திரித்து
எழுதுவது, திரித்து எழுதப்பட்டவற்றைச் சொல்லி இந்துக்களை மதம்மாற்றுவது,
இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகளைச் சொல்லி (நிதி திரட்டுவதற்காக) வெளி
நாட்டு இயக்கங்களுடன் கூட்டணி அமைப்பது போன்ற செயல்களில் தீவிரமாக
ஈடுபடுகிறது (http://www.agniministries.org/AboutUs.aspx ).
சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள் Saadhu-chellappa-vcd“இந்தியாவின் எவாங்கலிக்க நடவடிக்கைக் குழு”,
1980-ல் கோயமுத்தூரில், சாது செல்லப்பாவால் தொடங்கப்பட்டது. இவரே 20
இயக்குனர்கள் கொண்ட நிர்வாகக் குழுவின் தலைமை இயக்குனராகவும் இருக்கிறார்.
கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் சேவை என்கிற பெயரில் மதப் பிரசாரம்
செய்வதும், மதமாற்றம் செய்வதும் இந்த இயக்கத்தின் பிரதான வேலை (http://www.agniministries.org/EATI.aspx).
தீபாவளித் திருநாள் கிறுஸ்துவப் பண்டிகை என்றும், கடவுளர்க்கு பலி
கொடுக்கும் வழக்கம் கிறுஸ்துவப் பழக்கம் என்றும்,
காயத்ரி மந்திரம்
உண்மையில் இயேசுவைப் பற்றியதே என்றும் திரித்துக் கூறும் இந்த ”சாது”,
‘சனாதன தர்மத்தை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறும் வேதங்கள், இயேசுவின்
வருகையை எதிர்நோக்கியிருந்தன. எனவேதான் வேதத்தில் ’புருஷ பிரஜாபதி’
மனிதனாக இவ்வுலகில் அவதரித்து தன்னையே தியாகம் செய்வார் என்று
சொல்லியுள்ளது. இந்திய மக்களின் (இந்துக்களின்) வேதத் தேடுதலை முழுமையாக
நிறைவேற்றவே இயேசு அவதரித்தார், ஏனென்றால், இறைதூதரின் வருகையால் எப்படி
’பழைய ஏற்பாடு’ முழுமையடைந்ததோ, அதே போல் இயேசு இல்லாமல் வேதங்கள்
முழுமையடையாது’ என்று பகிரங்கமாக வெட்கமில்லாமல் முழங்குகிறார்.
மேலும், “இந்துமதம் விவிலியத்திலிருந்து தோன்றியதே” என்று பத்து பாகங்களில் இந்த ”யூ டியூப்” சானலில் இந்துமதக் கோட்பாடுகளை பலவாறாகத் திரித்துக் கூறி மிக வெளிப்படையாக அப்பட்டமான மோசடியைச் செய்து வருகிறார்.

திருவான்மியூர் நிகழ்வுகள்

சூது செய்யும் “சாது”வைப் பற்றியும் அவர் செய்யும் சூழ்ச்சிகளைப்
பற்றியும் புரிந்துகொண்டீர்கள் அல்லவா! இனி திருவான்மியூரில் என்ன நடந்தது
என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
விஜில் இணைய தளத்தின் (www.vigilonline.com)
ஆசிரியர் ராதா ராஜன், கட்டுரையாளர் பி.ஆர்.ஹரன் ஆகியோர் திருவான்மியூர்
காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர், வேறு சில காவல் துறை உயர் அதிகாரிகள்,
தலைமை மற்றும் உள்துறைச் செயலகங்கள் மற்றும் மாநகரக் காவல் துறை கமிஷனர்
ஆகியோரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு “கிறுஸ்துவ பிராம்மண சேவா
சமிதி” என்கிற மதமாற்ற மோசடி பற்றிப் புகார் அளித்துள்ளனர்.
அதோடு, வியாழக் கிழமை ஆறாம் தேதி மாலை முன்னாள் இஆப (IAS) அதிகாரி
வி.சுந்தரம், ஹரன், மற்றும் ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்த சமூகத்
தொண்டர்கள் சிலர் திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று
புகார் செய்ததன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சில காவலர்கள்
சர்ச்சிற்குச் சென்று அங்கிருந்த இரண்டு விளம்பர பானர்களையும் அகற்றி
பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயக சாஸ்த்ரிகளின் கதாகால‌ஷேபம் என்று
சொல்லப்படுகிற அந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்றும் எச்சரிக்கை
விடுத்தனர். காவல் துறையினர் முன்னிலையில் அந்த சர்ச்சைக்குரிய பேனர்
அகற்றப் படுவதை காணலாம்.
https://www.youtube.com/watch?v=eYCCbU1kyB4&eurl=http%3A%2F%2Fwww.tamilhindu.com%2F2009%2F08%2Fsaadhu-chellappa%2F&feature=player_embedded

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Mon Aug 31, 2009 7:41 pm

அதோடு, வியாழக் கிழமை ஆறாம் தேதி மாலை முன்னாள் இஆப (IAS) அதிகாரி வி.சுந்தரம், ஹரன், மற்றும் ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்த சமூகத் தொண்டர்கள் சிலர் திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் செய்ததன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சில காவலர்கள் சர்ச்சிற்குச் சென்று அங்கிருந்த இரண்டு விளம்பர பானர்களையும் அகற்றி பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயக சாஸ்த்ரிகளின் கதாகால‌ஷேபம் என்று சொல்லப்படுகிற அந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். காவல் துறையினர் முன்னிலையில் அந்த சர்ச்சைக்குரிய பேனர் அகற்றப் படுவதை கீழ்க் கண்ட வீடியோவில் காணலாம்.
Vedanayagam Sastriar with son Clement Vedanayagam Sastriar

வேதநாயக சாஸ்திரி, மகனுடன்

ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை வெறுமனே இருந்த சர்ச்சில், எட்டாம் தேதி காலை இரண்டு பானர்களும் மீண்டும் தலை தூக்கியுள்ளன. ஆனால் பானர்களின் தலைப்பில் இருந்த “கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி” என்ற வார்த்தைகள் மட்டும் ஒரு துணியால் மறைக்கப் பட்டிருந்தன. பூஜ்ய ஸ்ரீ, பாகவதர், சாஸ்த்ரிகள் போன்ற வார்த்தைகளோ, கதாகால‌ஷேபம் என்ற வார்த்தையோ நீக்கப் படவில்லை. மேலும் சர்ச் வாயிலில் பந்தல் போடப்பட்டு பெரிய வாழை மரங்களும் இளநீர் கொத்துகளும் பந்தலின் இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு சர்ச்சுக்கே ஒரு ஹிந்து மண்டபத்தின் சாயல் அளிக்கப் பட்டிருந்தது. ஒரு இந்துப் பண்டிகை கொண்டாடும் இடம் எப்படியிருக்குமோ அப்படி இருந்திருக்கிறது சர்ச்.

அந்த மற்ற வார்த்தைகளை பானர்களிலிருந்து நீக்கச்சொல்லி செய்யப் பட்ட தொலைபேசி மற்றும் நேரடிப் புகார்களுக்கு திருவான்மியூர் காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக அவர்களின் பாதுகாப்புடன் ”பூஜ்ய ஸ்ரீ பாகவதர் ”வேதநாயகம்
“சாஸ்த்ரி”களின் ”கதாகால‌ஷேபம்” நடைபெற்று முடிந்திருக்கிறது. பானரில் ஒரு பகுதியை மட்டும் நீக்கியதன் மூலமும், நிகழ்ச்சியை பாதுகாப்பாக நடத்தியதன் மூலமும், காவல் துறை ஏதோ நடுநிலையாக நடந்து கொண்டுவிட்டதாக நினைக்கலாம். ஆனால் அது முற்றிலும் தவறு.

கடுமையான தண்டனை தேவை

சர்ச்சில் நடந்து முடிந்த நிகழ்ச்சி சட்டத்திற்கு புறம்பானது. கிறுஸ்துவ மதத்திற்கும் கதாகால‌ஷேபத்திற்கும் என்ன சம்பந்தம்? கிறுஸ்துவ மதப் பிரசாரகர்கள் தங்களை சாது, பாகவதர், சாஸ்த்ரிகள், என்றெல்லாம் எவ்வாறு அழைத்துக் கொள்ளலாம்? ’பூஜ்ய ஸ்ரீ’ என்ற பட்டங்களை எவ்வாறு போட்டுக் கொள்ளலாம்? இவை வெட்கங்கெட்ட செயல் மட்டுமல்லாமல் சட்டத்திற்குப் புறம்பானவை அல்லவா? தங்களிடையே ஜாதிகளே இல்லையென்றும், ஜாதி வேற்றுமைகள் நாங்கள் கடைப்பிடிப்பதில்லை என்றும் பீற்றிக்கொள்ளும் ஒரு மதத்தினர், பிராம்மணப் பிரிவு ஒன்றை எவ்வாறு துவக்கலாம்?

கிறுஸ்துவத்திற்கும் பிராம்மணத்திற்கும் என்ன சம்பந்தம்? வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிஹாசங்கள், ஆகியவை இந்து மதத்தின் ஆன்மிகப் பொக்கிஷங்கள். சனாதன தர்மத்தை இந்துக்களுக்கு விளக்கும் புனித நூல்கள். இவற்றை உபயோகித்து தங்கள் கடவுளையும், மதத்தையும், கிறுஸ்துவ மதப்பிரசாரகர்கள் வியாபாரம் செய்வது மானங்கெட்டத்தனம் மட்டுமல்லாமல் சட்டத்தின் கீழ் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டியதாகும். இந்து மதக் கோட்பாடுகளை உபயோகித்து கிறுஸ்துவத்தை வியாபாரம் செய்தால் என்ன அர்த்தம்? கிறுஸ்துவத்திலோ, இயேசுவிடமோ, சொல்லிக்கொள்வதற்கு உருப்படியான விஷயங்கள் ஏதும் இல்லை என்று தானே அர்த்தம்? செல்லப்பா, வேதநாயகம், மற்றும் அவர்களைப் போன்றவர்கள் அனைவரும் இ.பி.கோ. 153எ, 295எ, 298 மற்றும் பல பிரிவுகளின் கீழ் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டியவர்கள்.

எவாங்கலிக்கர்கள் விற்பனைப் பிரதிநிதிகள் போல. விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் சரக்கை விற்பதற்கு எப்படி அடுத்த நிறுவனத்தின் சரக்குகளின் குணநலன்களை உபயோகப்படுத்த முடியாதோ, அதே போல் எவாங்கலிக்கர்கள் இந்து மத கோட்பாடுகளை உபயோகித்து கிறுஸ்துவத்தை வியாபாரம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அவ்வாறு செய்வது ஒருவிதத்தில் இயேசுவுக்குச் செய்யப்படும் அவமதிப்பும் துரோகமுமே ஆகும் அல்லவா? இந்தப் பாவத்திற்கு மன்னிப்பு உண்டா என்பது பற்றி கிறிஸ்துவ விசுவாசிகள் தான் சொல்லவேண்டும்!

இயேசு மீது விசுவாசம் கொண்ட, கிறுஸ்துவத்தின் மீதுஅந்த மதத்தின் அடிப்படையிலேயே நியாயமான ஈடுபாடு கொண்ட, உண்மையான கிறுஸ்துவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் விரைவில் விழிப்படைந்து செல்லப்பாக்களையும், வேதநாயகர்களையும் கட்டுப்படுத்தாவிட்டால் சமூகத்தில் மத நல்லிணக்கம் பாதிக்கப் படும்; சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும்; அமைதி கெடும். இது பல மதத்தவர்களும் கூடி வாழும் நம் தேசத்திற்கு சிறிதும் நன்மை பயக்காது.

மொத்தத்தில் கிறுஸ்துவர்கள் மதப் பிரச்சாரத்தையும், மத மாற்றச் சூழ்ச்சிகளையும், கீழ்த்தரமான ஆள்சேர்ப்பு யுக்திகளையும் முற்றிலுமாக நிறுத்துவதே அமைதிக்கு வழி.

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Mon Aug 31, 2009 7:45 pm

மதமாற்றம் செய்வது என்பது கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. அதுவும் முதிர்ச்சியான கிறிஸ்தவர்கள் அதனை மனமாற்றம் என்றே அழைப்பர். அனால் அதனை சில பேர் வியாபார நோக்கில், பணம் சம்பாதிக்கும் நோக்கில் பயன்படுத்துவதுதான் இன்று அவர்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கிறது. சிலர் எண்ணிக்கை காட்ட வேண்டி அப்பாவி ஏழைகளை கட்டாயமாகவோ அல்லது அவர்கள் அறியாமலோ மாற்றுகின்றனர். அது பெரும் தவறு. மற்றபடி பிராமனர்களோ, இஸ்லாமியரோ யாராக இருந்தாலும் அவர்களே விரும்பி மதம் மாறியிருந்தால் நாம் குறை சொல்ல முடியாதே!?

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Mon Aug 31, 2009 8:45 pm

மரகதமணி1980 wrote:மற்றபடி பிராமனர்களோ, இஸ்லாமியரோ யாராக இருந்தாலும் அவர்களே விரும்பி மதம் மாறியிருந்தால் நாம் குறை சொல்ல முடியாதே!?
நீங்கள் கூறியது சரியான விடயம் தான்.பிராமணர் என்பது ஒரு சாதி. சாதிகளுக்கு எதிரானது தமது மதம் என்பவர்கள் சாதி பெயரில் எப்படி சங்கம் அமைக்கலாம் ??
(உண்மையில் சாதி இல்லாத மதமே உலகில் இல்லை
இந்து மதத்தில் தொழிலின் அடிப்படையில் சாதி உள்ளது
இன்றைய நிலையில் பிராமணர்கள் வேதம் கற்ற ஆலய குருக்கள்
சத்திரியர்கள் இல்லை வைசிகர்கள் வியாபாரிகள் ,விவசாயம் செய்வோர்
ஏனைய டாக்டர்கள் ,எஞ்சினியர்கள் என எல்லோருமே சூத்திரர்கள்தான் (இயக்குபவர்கள் )
)

ஆனால் இன்று மதமாற்றங்கள் சலுகைகளுக்காகவும் (பள்ளி அனுமதி,வேலை வாய்ப்பு ,சில இலவசங்கள் வழங்கல் )
வியாபாரத்துக்காக்கவுமே (தமது உறவினர்கள் ,நண்பர்களை ஒருவர் சேர்த்து கொடுத்தால் அவரும் ஒரு ஏஜென்ட். அவருக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப கமிஷன் கிடைக்கும் .) நடக்கிறது . இன்றைக்கு நடக்கும் 98% கிறிஸ்தவ மதப்பிரசார வேலைகள் சட்ட விரோதமானவை, அப்பட்டமான மோசடிகள், இந்துமதத்திலிருந்து திருட்டுகள், இந்துமத தூஷணம், கடைந்தெடுத்த வெறுப்பியல் பிரசாரங்கள் ஊடகங்களில் இருக்கும் கிறிஸ்தவ ஆதிக்கம்

'மதமாற்றம் அது நடக்கும் இடங்களில் ஒரு ஆன்மிகத்தன்மையுடன் நடைபெறவில்லை. அவை வசதிகளுக்காக நடைபெறுகின்றன ' - காந்தியடிகள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 01, 2009 9:57 am

பேரன்பு மிக்கீர்
வணக்கம்

தயை கூர்ந்து இந்தச் சுட்டியை அழுத்திப் பாக்கவும்
அன்புடன்
நந்திதா
http://www.dajoseph.com/PDFs/Hindu%20Religion.pdf

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 01, 2009 10:36 am

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
நான்காம் வருணத்தவராகிய சூத்திரருக்கு (இயக்குபவர்கள்) என்ற பொருள் தந்திருக்கிறீர்கள். ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் மகரிஷி ரைக்வர் பற்றிய ஒரு கதை வருகிறது. மிதிலை தேசத்து மன்னனான ஜானஸ்ருதியின் பேரன தனக்கு அத்யாத்ம சாஸ்திரம் உபதேசிக்க வேண்டும் என்று கேட்ட மன்னனைப் பார்த்து சூத்திரா என்று அழைக்கிறார். சத்திரியனான மன்னனை இவ்வாறு அழைத்ததற்கு அவரே விளக்கம் கூறுகிறார். சுசா த்ராவதி இதி சூத்ரா; ( வாழ்வின் பொருளும் பயனும் அறியாது துன்பத்தில் உழல்கின்றவர்கள்). தவறு காணின் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
அன்புடன்
நந்திதா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 01, 2009 12:23 pm

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்

தயை கூர்ந்து இந்தச் சுட்டியை அழுத்திப் பாக்கவும்
அன்புடன்
நந்திதா
http://www.dajoseph.com/PDFs/Hindu%20Religion.pdf


வணக்கம் நந்திதா அம்மா , D.A.Joseph பற்றி தெரிந்தால் கூறவும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 01, 2009 12:27 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
திரு D.A. ஜோஸப் பற்றி அறிய இந்த சுட்டியை அழுத்தவும்.அவரைப் பற்றிய முழு விவரமும் கிடைக்கும்
அன்புடன்
நந்திதா
www.dajoseph.com

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Wed Sep 02, 2009 5:21 am

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்

தயை கூர்ந்து இந்தச் சுட்டியை அழுத்திப் பாக்கவும்
அன்புடன்
நந்திதா
http://www.dajoseph.com/PDFs/Hindu%20Religion.pdf

அருமையான தகவல் மிக்க நன்றி ,

சூத்திரன் பொருள் என்பது இயக்குபவன் , இயங்குபவன் இதிலிருந்தே சூத்திரதாரி எனும் சொல் வந்தது .(இவை சமஸ்கிருத சொற்கள் )
வெள்ளையர்கள் ஆட்சியின் போது தங்கள் ஆட்சியை எதிர்ப்பில்லாமல்
நிலைநாட்டுவதற்கு இந்தியர்களுள்லேயே கலகங்களை தோற்றிவிக்க (தற்போதய ஷியா
,சன்னி ,.. ஈராக் போல் ) விரும்பினார்கள் இதற்காக துவேசத்தை பரப்ப
மனுதர்மம் உள்பட பல நூல்கள் திரிவுபடுத்தப்பட்டு துவேச கருத்துக்களும்
கட்டுகதைகளும் சேர்க்கப்பட்டன இதற்கு கல்வி ,பொருளாதாரதில் உயர்ந்த
நிலையில் இருந்த சில உயர்சாதியினரும் சலுகைகளுக்காக துணை போயினர்

இதனால் பிற்காலதிலேயே சூத்திரன் என்பது கடைசாதி ,தீண்டதகாதவன் ,தலித் என பல பெயர்கள் சூட்டப்பட்டது
உண்மையில் பல கடவுள் அவதாரம்,மாணிக்க வாசகர் ,சண்டேஸ்வரர் என பலரும் சூத்திரர்களே

ஆரிய ,திராவிட பிரிவினை உள்பட பல கருத்துக்களின் ஆதி மூலம் வெள்ளையர்களின்
நூல்களே பின்னையர் அவற்றையே பின்னையர் அவற்றையே மேற்கோள் காட்டி உண்மைதான்
என நம்ப வைக்கப்பட்டார்கள்.

வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் இந்தியப்
பழங்குடியரிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள்; பழங்குடியனரை
அழித்துவிட்டு ஆரியர் இங்கே குடியேறினார்கள் என்று ஐரோப்பிய அறிஞர்கள்
சொல்வது முட்டாள்தனமானது, எந்த அடிப்படையும் அற்றது.

-சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய உரை.


"சாதி அமைப்புப் பற்றிய ஒற்றைப் பரிணாம பார்வையை காலனியாதிக்க ஆய்வாளர்கள்
வெளிப்படுத்தி, சாதி அமைப்பின் தீண்டாமை என்ற ஒன்றை மட்டுமே மையப்படுத்தி,
இந்திய சமூகத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றதில் சாதி அமைப்பு ஆற்றிய
பணிகளை மறைத்து, எதிர்மறை நோக்கை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சாதி ஒழிப்பு
என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சாதி மீது துவேஷம் ஏற்படுத்தவும் முயன்று
அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். காலனியாதிக்க
ஆதரவாளர்களுக்கு இது ஒன்றும் புதிய உத்தியல்ல. அமெரிக்க பூர்வகுடி
மக்களைப் பிணந்தின்னிகளாகவும், பெருமையுடன் விளங்கிய பலதெய்வ
வழிபாட்டாளர்களை நாகரிகமற்றவர்களாகவும் சித்தரித்து, உருவ வழிபாட்டை
இழித்துப் பேசி, காலனியாதிக்கத்தைப் பரப்ப மதத்தைக் கைக்கொண்ட வரலாற்றின்
ஒரு கண்ணிதான் இந்தியா மீது ஆதிக்கம் செலுத்திய காலனிய அதிகார
வர்க்கத்தின் சாதி ஒழிப்பு நாடகம். ஒரு சமூகத்தின் உபக்குழுக்
கலாசாரத்தின் வெளிப்பாடாக சாதியைக் காணும் முயற்சியை இந்த மறுவெளியீடு
தொடங்கி வைக்கும் என்று நம்புகிறோம். இந்திய சமூகத்தில் மட்டுமல்லாமல்
ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சாதி அமைப்பைப் பற்றியும்,
கீழைநாடுகளின் சமூக அமைப்புப் பற்றியும் மேலும் ஆய்வுகள் வளர இந்த நூல்
ஒரு புதிய தொடக்கமாய் அமையும் என்று நம்புகிறோம்"

கோபால் ராஜாராம் குறிப்பிடுகிறார்."கள்ளர் சரித்திரம்"


(கள்ளர் என்பது ஒரு சாதி இது படைவீரர்கள்,தளபதிகளை கொண்டது .இந்த
சாதியால் வெள்ளையர்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து வரலாம் என இது கடுமையான
இன அழிப்புக்கு உள்பட்டது இதனால் ஏனையோர் மற்ற சாதிகளுள் உள்வாங்க
பட்டார்கள் )


தமிழ் இலக்கியங்களில் எந்த இடத்திலும் தமிழனை திராவிடன்
என்று சொன்னதில்லை, தமிழன் தன்னை ‘திராவிடன்’ என்று சொல்லிக் கொண்டால்
அவன் கூசாமல் தன்னை ‘ஆரியன்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

- நாமக்கல் கவிஞர் / பக். 43 / தமிழ்மொழியும், தமிழரசும்.

ஆரிய இனத்தைப் பற்றிய குறிப்பு வேதங்களில் இல்லை.
‘தாஸ்யுக்கள் இந்தப் பழங்குடியினர், இவர்களை வெளிநாட்டிலிருந்து வந்த
ஆரியர்கள் அடக்கினார்கள்’ என்பதற்கும் வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை.

- பி. ஆர். அம்பேத்கர் / Dr. Ambedkar: A True Aryan


இல்லாத திராவிட இனத்தை இருப்பதாகச் சொல்லி இயக்கம் நடத்தியதால்தான் பல கோளாறுகள் ஏற்பட்டன.

- ச. செந்தில்நாதன் / பக். 33 / தமிழ்–தி.மு.க–கம்யூனிஸ்ட் / சிகரம் வெளியீடு.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக