புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Mar 02, 2011 2:21 pm

இந்தக் கவிதையும் சிவனைப்பற்றியது. ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலி யொன்றின் (ILC Radio)இவ்வாரத்துக்கான கவியோடை என்னும் நிகழ்ச்சிக்கு சிவராத்திரியை யொட்டி கவி எழுதும் தலைப்பு ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?
இதற்குத்தான் முன்னரும் ஒரு கவி எழுதினேன். ஈகரையில் போட்டுவிட்டேன். திரும்பவும் இன்னொரு கவிதை எழுதினேன். நாளைதான் நிகழ்ச்சி. ஆனால் மனம் கேட்கவில்லை இதோ ஈகரைக்கு..

ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?

சிவ சிவ என்றிடச் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றிட நாசமிழைத்தே
இறைஇறை என்றிட இறைத்தனர் குண்டு

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் விலக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றுமே கொலைகள்புரிந்தார்

தொழுதோம் ஆயினும் துண்டென தலைகள்
அழுதோம் ஆயினும் அழிந்தன ஊரே
தழுவும் தமிழின் தந்தையென் இறைவா
எழுதும் விதியில் எதைநீ வைத்தாய்

அரசன் என்றொரு அசுரனை வைத்தாய்
சரமென வீழ்ந்திடும் சடபுட இடியாய்
உரமொடு வானில் எதிரிகள் வந்து
கருக ரசாயனக் குண்டுகள் போட்டே

உருவம் அழித்தே அருவமுமாக்கி
பெருவெளி வானிற் திரியென செய்தோர்
குருபரனே இக் கொடியவர் களையா
இருஎனக் கூறி எமையழித் தாயே

கலகல என்றும் களிப்புறு பெண்கள்
மலையெனதோளில் மதமெடுஆண்கள்
தளதளவென்று தவழ்ந்திடும் குழந்தை
அழஅழக் கொன்று அழித்தனர் கண்டீர்

கூடியே சுற்றிக் கொலைப்படை சூழ
ஓடியேசென்று உயிர்தனைக் காக்கும்
குழிகளிலோடிக் குழுமியமாந்தர்
புழுவாய் துடித்தும் பேச்சுமழிந்து

இறையுனைதொழுதும் இருவிழி காண
உறைந்திட நெஞ்சும் உணர்வும் மயக்க
கெஞ்சிய முகமும் கூப்பிய கையும்
வஞ்சகர் கண்டும் நெஞ்சமிரங்கா

மண்ணதைமூடி மானிடம்கொல்ல
விண்ணுறைதேவா வெள்ளிடைமலையில்
எண்ணியதென்ன ஏதும்செய்யாப்
புண்ணியபூமி பெருந்தீ எரிக்க

வீல்வீல் என்றுமே கத்திடும் மழலை
வாழ்வே எண்ணி வருந்தியஅன்னை
தோள்உரம்கொண்ட துடியிளம்வீரர்
நாள்பார்தேங்கும் நங்கையர்பலரும்

வா வா சிவனென் றுனையேவணங்கி
நீயே கதியென நின்றவர் தம்மை
காப்பாயென்றுமே கைதனைக் கூப்ப
சா! போ! என்றுமே சற்றும்மிரங்கா

பூவாய் உடல்களை புதைகுழிநிரப்ப
நீயோ தமிழென நெஞ்சம்மிரங்கி
ஏய் நில் என்றவன் இழி செயல்நிறுத்தி
ஈழத்தமிழரைக் காத்திடமறந்தாய்

ஆதிசிவாஉன்அருந்தமிழ் என்றால்
அழிந்திடு மொழியைக் காப்பதுவிட்டு
போதி மரத்தடி புத்தனைப்பார்த்து
புதிதாய் ஞானமும் பெற்றனைதானோ

வானம் ஏறும் வெய்யோ னன்ன
மானம் தமிழன் மாண்பும்காத்து
ஈன மனத்து இழியவர் கொட்டம்
தானுமடக்கி தனியொரு பெண்ணே

வீதியில் சென்று விடிவது வரையும்
போதிய நகைகள் பொன்னு மணிந்து
ஊரினைச் சுற்றி உறைவிடம் மீளும்
பேரரும்வாழ்வைப் பெற்றுத் தருவான்!

நீதியைநெஞ்சும் நேர்மையைசெயலும்
நினைவில்தமிழும் கொண்டொரு தலைவன்
பாதியில் விட்டுப் பகலவன்போல
போனதை மீண்டும் புலர்ந்திட செய்வாய்

அவனே சக்தி அவனே சூரியன்
அவனே வானம் அவனேமண்ணும்
அவனே கடலும் ஆளுமை கொண்டோன்
அவனேவந்தால் ஆகும் (தமி)ழீழம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 5:14 pm

தமிழ் உங்கள் நாவில் செழிக்கிறது ஐயா... கலைமகள் நர்த்தனம் புரிகின்றாள்.. தமிழ்ச்சொற்களின் வீரியம் உங்கள் கவிதைகளால் விளக்கப்பெறுகிறது..!

மனமாரப்பாராட்டி மகிழ்கிறேன்...

அனைத்து வரிகளுமே அற்புதம் எனினும் கீழ்க்கண்ட வரிகள் என்னை வசப்பத்தின..!

சிவ சிவ என்றிடச் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றிட நாசமிழைத்தே
இறைஇறை என்றிட இறைத்தனர் குண்டு

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் விலக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றுமே கொலைகள்புரிந்தார்





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக