புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_lcapகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_voting_barகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_lcapகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_voting_barகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_lcapகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_voting_barகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_lcapகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_voting_barகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_lcapகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_voting_barகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_lcapகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_voting_barகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_lcapகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_voting_barகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_lcapகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_voting_barகண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 01, 2011 3:15 pm

ஆராரோ ஆரிவரோ ஆசைமகன் கண்ணுறங்காய்
ஆரமுதே முத்தேயென் அன்பே நீ கண்வளராய்
நீருறும் சின்னவிழி நித்திரைக்கு வாடுதடா
நெஞ்சோடும் சோகமுந்தன் நீள்விழியில் தோன்றுதடா

சீரேறும் சின்னமுதே சித்திரமே வாடுவதேன்
தேரேறிப் போனதந்தை தேடிவர வில்லையென்றோ
ஊரைக்கெடுத்தவர்கள் ஊரைவிட்டு ஓடும்வரை
உத்தமர்கள்போனவரோ ஊர்திரும்ப போவதில்லை

ஆறோடு சென்ற மரம் அலையேறி வந்தில்லை
நீரோடு சென்ற இலை நேரெதிர்த்து வந்ததில்லை
வாரியடித்த புயல் வாழும் பூவை விட்டதில்லை
ஊரில் புகுந்தபகை உயிரைவிட்டுசென்றதில்லை

வேரைப் பறித்தமரம் வீழ்ந்தபின் னெழுவதில்லை
ஊரைப் பகைத்த இனம் ஒன்றும் விடப்போவதில்லை
நீரை இறைத்ததென நெஞ்சை வெட்டி செங்குருதி
கோரக் கொலையும்செய்யக் கொப்புளித்துஓடுதடா

ஆராரோஆரிவரோ ஆரடித்து நீயழுதாய்
பேராழிமுத்தேஎன் பேசும்கிளிபொற்குடமே
தேசமழியுதென்றா தேன்மலரே நீயழுதாய்
திக்குப் பரந்ததமிழ் தேயுதென்றோ நீயழுதாய்

ஊரும் அழிக்கையிலே உற்ற தமிழ்ச் சொந்தமெலாம்
பாரில் பரந்திருந்தும் பாசமில்லை என்ற ழுதாய்
வீராதி வீரனென வித்தகனே நீவளராய்
நீயாளுங் காலம்வரும் நெஞ்சிலுரம் கொண்டுவிடு

ஒன்றாக ஊரைவெட்டி உன்மத்தம் கொண்டுபகை
தென்நாட் டசுரரெல்லாம் தீந்தமிழைக் கொல்லுகிறார்
தேன்நாடு பொற்தமிழம் தென்றல்பிண வாடைகண்டும்
ஊனுருகித் தான்கொதித்து ஓடிவரவில்லையடா

மேல்நாட்டில் தானிருந்து மெட்டியொலிபார்த்தமாமன்
மானாட்டம் பார்த்தபின்பு மண்ணை மறந்த தென்ன
தேனோடும் நாட்டினிலே தெருவோடிப் பிச்சைகொள்ள
வானோடும் கப்பலிலே வந்தெவரும் காக்கவில்லை

கண்ணே கனியமுதே கட்டழகே கண்ணுறங்காய்
மண்ணே தொலையுதென மன்னவனே எண்ணினையோ
நீரோடும் கண்ணிரண்டில் நித்திரையும் விட்டதேனோ
நெஞ்சோடு கொண்டதுயர் நிம்மதியைச் சுட்டதுவோ

நீயழுது என்னபயன் நித்திரையை கொள்ளுகண்ணே
நீயெழுந்து கேட்கும்வரை நேருவது ஏதுமில்லை
ஆரமுதே அன்பேஎன் ஆசை மணிரத்தினமே
தீரமுடன் நீவளர்ந்து தேசம்காக்க வேணுமடா

பாராளும் பாவிகளோ பந்தடிக்க எம்தலையா?
ஊரோடு உள்ளதெல்லாம் கொள்ளியிட்டு கொன்றிடவா?
நேரோடும் வாழ்விலெம்மை நீசமனம் ஏய்த்ததடா
நீவளர்ந்துகேளுகண்ணே நெஞ்சிலிதை வைத்துவிடு

ஊரு முறங்கையிலே உத்தமனே கண்ணுறங்காய்
பேரழிவு காத்திருக்கு பின்னரெழ வேணுமடா
நித்திரையில் நீவளர்ந்து நெஞ்சினுரம்கொண்டிடடா
இத்தரையில் உன்னையெண்ணி ஈழம்காத்து நிற்குதடா

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 01, 2011 6:50 pm

வீரத்தை குழந்தைக்குத் தாலாட்டாகப் பாடி நெஞ்சை உருக்க எழுதிய கவிதை அருமை.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 01, 2011 10:16 pm

தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மிக மிக அருமையான தாலாட்டுப்பாடல்... இப்படி எல்லாம் என்னால் எழுத முடியலையேன்னு என்னை ஏங்கவைக்கும் அழகான கவிதை...

பாராட்டுகக்ள் கிரிகாசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 01, 2011 10:32 pm

நன்றிகள் சகோதரி அமுதவர்ஷிணி! மிக்க நன்றிகள்!

கலையண்ணா!
தங்களிடமிருந்து வாழ்த்துகள் வருவது மிகப்பெரிய மகிழ்வைத் தருகிறது. என்னை ஏற்றிப்புகழும் தங்கள் குணம் இன்னும் மகிழ்வைத்தருகிறது நன்றிகள் மீண்டும்
அன்புடன் கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக