புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Poll_c10அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Poll_m10அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Poll_c10அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Poll_m10அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Poll_c10அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Poll_m10அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்நியன் ரிடர்ன்ஸ்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Thu Feb 24, 2011 2:07 pm

First topic message reminder :

"halloo யாரு அம்பியா?"



"யோவ், நான் அம்பி இல்லை; அந்நியன்!"



"வணக்கம் அந்நியன் சார்! நல்லாயிருக்கீங்களா? சதா சௌக்கியமா இருக்காங்களா?"



"ஹலோ, நீங்க யாரு பேசறீங்க? உங்களுக்கு என்ன வேணும்?"



"என் பேரு கொப்பம்பட்டி கோவாலு! நமக்குத் தெரிஞ்ச ஒருத்தரு லஞ்சம் வாங்கிட்டாரு! அதான் தகவல் தெரிவிக்கலாமுன்னு கூப்புட்டேன்."



"என்னது, லஞ்சம் வாங்கிட்டாரா? என்னய்யா, என்னவோ புதுவருச காலண்டர் வாங்கிட்டாருங்கிற மாதிரி சாதாரணமா சொல்றே?"



"இப்போ லஞ்சம் வாங்குறதெல்லாம் சர்வசாதாரணம் தானுங்களே! அது போகட்டும், அஞ்சு பைசா திருடினா குத்தமா அந்நியன் சார்?"



"திஸ் இஸ் டூ மச்! என்னோட "பிட்"டை என்கிட்டேயே போடறீங்களா? அஞ்சு பைசா திருடினாலும் தப்புத்தான். அஞ்சு கோடி பேரு அஞ்சு பைசாவை...."



"ஸ்தூ! ஸ்தூ!! ரொம்ப நீளமான டயலாக்கெல்லாம் கேட்க முடியாது. செல்போனை டாப்-அப் பண்ண மறந்திட்டேன். தப்பா இல்லையா?"



"பெரிய தப்பு! கருட புராணப்படி அந்தாளுக்கு தண்டனை கொடுக்க வேண்டியது தான். அவரு அட்ரஸைச் சொல்லுங்க!"



"எழுதிக்கோங்க! கொப்பம்பட்டி கோவாலு, கேர் ஆஃப் கோவிந்தா, டுபாக்கூர் பை-பாஸ் ரோடு, கொப்பம்பட்டி! பஸ் நம்பர் 420-ஐப் புடிச்சா எங்க வீட்டுலே தான் வந்து முட்டும்!"



"என்ன கோவாலு? உங்க அட்ரஸையே சொல்லுறீங்க?"



"லஞ்சம் வாங்கினதே நான் தான்! என் அட்ரஸைக் கொடுக்காம வேறே ஏதோ டில்லி அட்ரஸையா கொடுக்க முடியும்?"



"நீங்களே லஞ்சம் வாங்கிட்டு நீங்களே என்கிட்டே புகார் கொடுக்கறீங்க? மனசாட்சி உறுத்திடுச்சா?"



"யோவ் அந்நியன்! என்னை என்ன மத்திய ஊழல் கண்காணிப்பு தடுப்பு ஆணையர்னு நினைச்சுக்கிட்டியா? பண்ணின தப்புக்கு சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு மனசாட்சி தெளிவாயிருக்குன்னு புளுகுறதுக்கு?? நான் சோறு திங்கிறேன் சாமி! இப்போ கருடபுராணத்துலே சொல்லியிருக்கிறா மாதிரி தண்டனை கொடுப்பியா மாட்டியா?"



"என்னய்யா இது? நீ லஞ்சம் வாங்கிட்டு என்னை மிரட்டறே?"



"இப்பல்லாம் லஞ்சம் வாங்குறவன் மிரட்டறதுதானய்யா லேட்டஸ்ட் ஃபேஷன்! சொல்லு, நான் சொன்ன அட்ரஸுக்கு வந்து தண்டனை கொடுப்பியா? வரதுக்கு முன்னாடி ஒரு மிஸ்டு கால் கொடு! நான் வாசல்லே வந்து நிக்கிறேன்!"



"என்னய்யா குழப்பறே? இது லஞ்சக்கேசுலே மாட்டுனவங்களை ஒரு பதவியிலேருந்து தூக்கி இன்னொரு பதவியிலே உட்கார வைக்கிற சீசனாச்சே? எதுக்கு வலிய வந்து மாட்டிக்கிறே?"



"என்னய்யா நீ? நம்ம நாட்டு சி.பி.ஐ.மாதிரி சும்மா கேள்வி மேலே கேள்வி கேக்குறியே தவிர ஒண்ணும் பண்ண மாட்டேங்குறியே? எனக்கென்னவோ உன் மேலேயே டவுட்டாயிருக்குது! சொல்லுய்யா, நீயும் மாமன் மச்சான் பேருலே கம்பனி தொடங்கி கருப்புப்பணத்தை வெள்ளோட்டம் விட்டிருக்கியா?"



"மிஸ்டர் கோவாலு! மரியாதையா பேசு! இல்லாட்டி உனக்கு என்ன தண்டனை தெரியுமா? பரிபாதனம்!"



"பரிபாதனமா? அப்படீன்னா?"



"எரிமலைக்குழம்பைக் குடிக்கிற தண்டனை!"



"அடப்போய்யா, நான் என் பொஞ்சாதி பண்ணுற வெந்தயக்கொழம்பையே சாப்பிட்டவன். ஏதோ பெரிய தண்டனை கொடுப்பேன்னு பார்த்தா, காமெடி பண்ணிக்கிட்டு...!"



"கோவாலு! நான் கொடுக்கிற தண்டனையைக் கிண்டல் பண்ணாதீங்க! ’அந்நியன்’ படம் பார்த்தீங்களா இல்லியா?"



"பார்த்தேன்! பார்த்தேன்! எதுக்கும் ஒரு வாட்டி திருப்பிச் சொல்லேன். மொத்தம் எவ்வளவு தண்டனை? எத்தனை அயிட்டம் இருக்கு?"



"அயிட்டமா? யோவ், இதென்ன செட்டிநாடு ரெஸ்டாரண்டா? விட்டா இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷல் உண்டான்னு கேட்பே போலிருக்கே?"



"கோவிச்சுக்காம சொல்லுய்யா!"



"அந்தகூபம்-அதாவது இருட்டுக்குகையிலே தள்ளி எருமை மாடுங்களை விட்டு மிதிக்கிறது!"



"சரிதான், லாக்-அப்புலே போலீஸ்காரங்க மிதிக்கிறா மாதிரி...!"



"அடுத்தது கிருமிபோஜனம்! இரத்தம் உறிஞ்சுற அட்டைகளால உடம்பு முழுக்கக் கடிக்க விடறது...!"



"ஓஹோ! நாங்க வாங்குற லஞ்சத்துலே கீழேயிருந்து மேலே வரைக்கும் பர்சன்டேஜுன்னு எல்லாரும் உறிஞ்சி எடுக்கிறா மாதிரி...!"



"கும்பீபாகம்! எண்ணையிலே போட்டு வறுத்தெடுக்கிறது!"



"இது ஞாபகமிருக்கு! பாருங்க அந்நியன்! என்னையும் இதே மாதிரி வறுக்கிறதா இருந்தா, அதிகம் மிளகாய் சேர்க்காதீங்க. ஏன்னா எனக்கு அல்சர். காரம் ஒத்துக்காது!"



"யோவ், உன்னைத்தான் வறுக்கவே போறேன்!"



"இப்போ மட்டும் என்ன வாழுதாம்? வாங்கினா ஜனங்க வறுத்தெடுக்கிறாங்க; வாங்கலேன்னா மேலதிகாரிங்க வறுத்தெடுக்கிறாங்க! மொத்தத்துலே வறுபடுறது என்னவோ நிச்சயம்!"



"அடுத்தது தாமிஸ்ரம்! மண்டையிலே குண்டாந்தடியாலே அடிக்கிறது!"



"ஊஹும்! புதுசா ஏதாவது சொல்லு! இதுதான் வீட்டுலே தினப்படி நடக்குதே!"



"என்னய்யா இது? கொஞ்சம் கூட பயப்படவே மாட்டேங்குறியே!"



"அந்நியன்! உன்னோட தண்டனையெல்லாம் படத்துலே பார்க்க சவுண்டு எஃபெக்டோட நல்லாயிருந்திச்சு! கேட்கும்போது பயமே வரமாட்டேங்குது! இருக்கிறதுலேயே நல்ல தண்டனையாப் பார்த்து செலக்ட் பண்ணி சாயங்காலத்துக்குள்ளே ஒரு எஸ்.எம்.எஸ்.அனுப்பு! ஓ.கேவா?"



"எஸ்.எம்.எஸ்.அனுப்பவா? கோவாலு சார்! என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?"



"அட இல்லைய்யா, நம்பு!"



"பேசாம நீங்க போலீஸ்லே போய் சரண்டர் ஆயிருக்கலாமே? அவங்க பார்த்து உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருப்பாங்களே? எதுக்கு என் உசிரை எடுக்கறீங்க?"



"போலீஸா? என்ன விளையாடுறியா? நான் வாங்கியிருக்கிற நூறு ரூபாய் லஞ்சத்துக்கெல்லாம் போலீஸுக்குப் போறதா? லஞ்சமுன்னா ஒரு மரியாதை வேண்டாம்? ஏதோ லட்சக்கணக்குலே, கோடிக்கணக்குலே இருந்தா, கோர்ட், கேஸு, விசாரணைக்கமிசன்னு போறதிலே ஒரு நியாயமிருக்கு!"



"அடப்பாவிகளா!"



"அப்படியே கேஸ் போட்டா மட்டும் என்னாயிரும்? உதாரணத்துக்கு தமிழ்நாட்டுலே கூத்தபெருமாளுன்னு ஒருத்தரு அம்பது ரூபாய் லஞ்சம் வாங்கினாரு! பதினேழு வருசம் கேஸ் நடந்து இப்போத்தான் சுப்ரீம் கோர்ட்டுலே ஒரு வருஷம் ஜெயிலுன்னு தீர்ப்பாயிருக்கு! பதினோரு வருசமா சம்பளமும் கிடையாது; கிம்பளமும் கிடையாது! சோத்துக்கு என்னய்யா பண்ணுவான் ஒரு மனிசன்? அம்பது ரூபாய்க்கு பதினேழு வருசமுன்னா, நான் நூறு ரூபாய் வாங்கியிருக்கேன். எனக்கு முப்பத்தி நாலு வருசமா?"



"கோவாலு????"



"அதுனாலே தான், இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு உனக்கு போன் பண்ணினேன். மரியாதையா சட்டுப்புட்டுன்னு வந்து தண்டனை கொடுத்துரு! இல்லாட்டி, சாகுறதுக்கு வேறே வழியா இல்லே எனக்கு? ஏதோ ’காவலன்’ படம் பொங்கலுக்குத்தான் வருதுன்னு சொன்னாங்களென்னுதான் உன்னைக் கூப்பிட்டேன். நீ வந்தா வா; வராட்டிப்போ!"



கோவாலு போனைத் துண்டித்தார்.

---கிசாலி வலைப்பூ




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 11:14 pm

கலை wrote:இப்படி கிண்டல் பண்ணின உங்களுக்கு என்ன தண்டனை தெரியுமா...?
வஸ்திராபகாரம். அப்படின்னா என்னான்னு சிவா கிட்ட தெரிஞ்சுக்கோங்க..

எனக்கு எப்படித் தெரியுமெனக் கேட்கிறீர்களா? எனக்கு இந்தத் தண்டனை விதிக்கக் கோரி மனுக் கொடுத்ததே கலைதான்! அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 440806



அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 27, 2011 11:28 pm

அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 168300 அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 168300 அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 168300



அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Aஅந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Aஅந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Tஅந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Hஅந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Iஅந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Rஅந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Aஅந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 27, 2011 11:34 pm

ஏனுங் ...? இப்படி உயுந்து சிரிக்கிறீங்...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Mon Feb 28, 2011 9:58 am

அப்படி என்ன தண்டனை ?சிவா,கலை சாப் அழுகை

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Mon Feb 28, 2011 10:06 am

நல்லவேளை நான் தப்பித்தேன் . நான் வங்க்க்குனது யாருக்கும் தெரியாது அந்நியன் ரிடர்ன்ஸ் - Page 2 755837 பயம்



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக