புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
56 Posts - 43%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
3 Posts - 2%
jairam
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
2 Posts - 2%
Poomagi
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
1 Post - 1%
சிவா
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
1 Post - 1%
Manimegala
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
16 Posts - 4%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
7 Posts - 2%
jairam
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 19 of 32 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 9:10 am


பயணம் ஒன்று... ஆச்சரியம் இரண்டு!


நான் அரசு பணியில் இருக்கிறேன். அலுவலக வேலையாக ஊழியர்களுடன் சென்னைக்கு பயணம் செய்தோம். நாங்கள் தங்கியிருந்த லாட்ஜில் இருந்து அதிகாரிகள் அலுவலகம் செல்வதற்காக ஒரு ஆட்டோக்காரரை அழைத்தோம். எவ்வளவு கட்டணம்? என்று கேட்டோம். `உங்கள் விருப்பம்போல் கொடுங்கள்' என்றார். நாங்கள் இறங்கிய பிறகு 50 ரூபாயைக் கொடுத்தோம், அவர் மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டார். நாங்கள் அவரை ஆச்சரியமாகப் பார்த்தோம்.

அன்று லாட்ஜ் திரும்பிய பிறகு ஊழியர் ஒருவரின் செல்போன் காணாமல் போயிருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. திடீரென ஊரில் உள்ள அவரது மனைவியிடம் இருந்து எங்களது நண்பர் ஒருவருக்கு போன் வந்தது. ஆட்டோவில் போனை தவற விட்டுவிட்டதாகவும், ஆட்டோக்காரர் நம்பரில் தொடர்பு கொண்டு போனை பெற்றுக் கொள்ளும்படியும் கூறிவிட்டு ஆட்டோக்காரர் எண்ணைத் தந்தார். நாங்கள் ஆட்டோக்காரரை தொடர்பு கொண்டு செல்போனை பெற்றுக் கொண்டோம்.

அவரது நல்ல குணத்தைப் பாராட்டி பணத்தை பரிசாக கொடுக்க முன்வந்தோம். ஆனால் அவரோ பணத்தை வாங்க மறுத்து சென்றுவிட்டார். நாங்கள் மீண்டும் ஒருமுறை அவரை வியந்து பார்த்தபடி நின்றோம்.

ஆ.முனியப்பன் சேகர், தூத்துக்குடி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 14, 2012 11:19 am

முதல் கதை ஏற்கனவே இங்க யாரோ போட்டுட்டாங்க சிவா.

இரண்டாவது - சூப்பர் - இவர்தான் ரியல் "ஆட்டோகாரன்" அத விட சிறந்த "மனிதன்".




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 14, 2012 11:26 am

ஆட்டோக்காரர்களில் அற்புத மனிதர்களும் உண்டு...
நல்ல நெகிழ்ச்சியான நிஜம்...
பகிர்விற்கு நன்றி சிவா...



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 224747944

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Rநெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Emptyநெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Rநெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 11:43 am

நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 10:18 am

படிப்பைத் தடுத்த தந்தை... ஜெயித்துக் காட்டிய மகள்!

என் பக்கத்து வீட்டினர் நடுத்தர குடும்பம். அந்த தம்பதிக்கு ஒரு மகள். நன்றாக
படிப்பாள். அவர்கள் வீட்டில் மின்சாரஇணைப்பு கிடையாது. சிம்னிவிளக்கு வைத்துதான் படிப்பாள்.

அவளுடைய தந்தை மது அருந்தும் பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு அவருடைய வீட்டு கஷ்டத்தையும், அடுத்தவர்கள் செய்த கெடுதலையும் சொல்லி சத்தம் போடுவார். இதனால் அவரது மகள் படிப்பில் முழுகவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டாள்.

`மகள் படிக்கிறாள், கொஞ்சம் அமைதியாக இருங்கள்'' என்று அவரது மனைவி சொல்லிப் பார்ப்பாள். ஆனால் அவரோ, "அவள் அதிகம் படித்தால் என்னை மதிக்க மாட்டாள்'' என்பார்.

இதை தினம் தினம் காதில் கேட்கும் அவரது மகளோ தன் தந்தை தன்னைப்பற்றி இப்படி எதிர்மறையாக சொன்னதை உடைத்துக் காட்ட வேண்டும் என்று வைராக்கியம் கொண்டாள். அதன்பிறகு தன் குடிகாரத் தந்தை என்னதான் கத்தினாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் படிப்பு ஒன்றே குறியாக இருந்திருக்கிறாள். அந்த முயற்சி கைகொடுத்ததில் நன்றாகப் படித்து முடித்து இப்போது பெரிய கம்பெனியில் நல்ல வேலை கிடைத்து மாதம் 15 ஆயிரம் சம்பாதிக்கிறாள். அவள் மாதம் தோறும் சம்பளம் வாங்கியதும் முதலில் அப்பாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குகிறாள்.

"உன்னைப் படிக்க விடாமல் தடுத்தவரிடம் போய் சம்பளத்தைக் கொடுக்கிறாயே?'' என்று கேட்டால், "அவர் திட்டியதால் தான் நான் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்து வைராக்கியத்துடன் படித்தேன். படித்தால் மதிக்க மாட்டேன் என்று சொன்னதை பொய்யாக்க, அவரிடமே சம்பளத்தைக் கொடுத்து அவர்மீது வைத்திருக்கும் மரியாதையை உறுதிப்படுத்திக் கொள்கிறேன். அதோடு அப்பாவும் இப்போது மாறி விட்டார். அந்த மாற்றத்துக்கும் மரியாதை கொடுத்துத்தானே ஆக வேண்டும்'' என்றாள்.

அந்தப் பெண்ணின் `அப்பா பாசம்' என்னை' நெகிழ வைத்துவிட்டது.

-எஸ்.கவுரி, பெரியகுப்பம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 10:19 am

மணவிழாவில் மகிழ்ச்சி தந்த இசைவிழா... !

எனது உறவினரின் மகளுக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. வரவேற்பு விழாவுக்கு மெல்லிசைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அக்குழுவினரைப் பார்த்த எனக்கு வியப்பு. அவர்கள் அனைவருமே மாற்றுத் திறனாளிகள்.

ரிஷப்ஷனுக்கு வந்தவர்கள் அனைவருமே அவர் களுடைய இன்னிசை மழையில் நனைந்து சிலிர்த்துப் போனார்கள். இதுபற்றி உறவினரிடம் கேட்டபோது, "மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப் பளிக்கும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையும், வருமானமும் கிடைக்கிறது. மேலும் மாற்றுத் திறனாளிகள் என்றாலே கேலியாகப் பார்ப்பவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் சவுக்கடியாக அமையும்'' என்றார்.

மாற்றுத் திறனாளிகளை மதிக்கவும், அவர்களுக்கு நல்ல வாய்ப்பளிக்கவும் நாமும் முன்வருவோமே!

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 10:19 am


கீழே விழுந்த வரும் மனதில் நின்றவரும்...


மெயின்ரோட்டில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது வாகன நெரிசல் மிகுந்த அந்த சாலையின் குறுக்காக கடக்க முயன்றார் ஒரு பெரியவர். சாலையின் நடுவில் வரும்போது திடீரென எதிர்பாராமல் கீழே விழுந்து விட்டார்.

அதேநேரம் வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் `சடன் பிரேக்' போட்டு வண்டியை நிறுத்தி வேகமாக இறங்கினார். அதே வேகத்தில் விழுந்து கிடந்த பெரியவரை நெருங்கிப்போய் அவரை தூக்கி விட்டார். தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்து தண்ணீரை பருகச் செய்தார். கொஞ்சம் தன்னை ஆசுவாசம் செய்துகொண்டு பெரியவர் இயல்பானதை உணர்ந்து கொண்டதும், வாகன இளைஞர் பெரியவரிடம், "அய்யா...என்னாயிற்று உங்களுக்கு? நன்றாகத்தானே சாலையை கடந்து கொண்டிருந்தீர்கள்...எதிர்பாராமல் விழுந்து விட்டீர்களே'' என்று கனிவாக கேட்டார்.

பெரியவரோ தனக்கு ரத்தக்கொதிப்பு நோய் உண்டென்றும், மதியம் சாப்பிடாமல் வந்ததால் இப்படி ஆகி விட்டது என்றும் கூறினார்.

உடனே இரு சக்கரவாகனத்தில் வந்தவர், பக்கத்தில் இருந்த ஓட்டலில் பெரியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். `சாப்பிட்டு முடித்ததும் நிதானமாய் செல்லுங்கள்' என்று செல்லிவிட்டு தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு பயணித்தார்.

பத்து நிமிட நேரம் நடந்த இந்த பாசப்பரிவு காட்சியை பார்த்த எனக்கு வாகனத்தில் வந்த அந்த இளைஞர் மேல் மரியாதை கூடியது. வழக்கமாக இப்படி மற்றவர்கள் வாகனத்தில் வரும் நேரத்தில் யாராவது இப்படி குறுக்கே வந்து விட்டால், ஆத்திரத்தில் வள்ளென்று விழுவார்கள். அதை மட்டுமே இதுவரை பார்த்த என் கண்களுக்கு இந்தக்காட்சி ஆச்சரியமாகவே இருந்தது.

-கு.நவரோஜி, மேற்கு தாம்பரம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 18, 2012 10:19 am


டிக்கெட் பணத்தை `லபக்'கிய திருடி!

காலை நேர பரபரப்பில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் ஒரு பெண்ணிடம் பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்கச் சொன்னேன். இரண்டு நிறுத்தம் சென்றும் பயணச்சீட்டு வரவில்லை. அந்தப் பெண்ணிடம் கேட்டால், "கொடுத்திருக்கிறேன் வரும், பொறுங்கள்''
என்றாள்.

நான் இறங்குமிடம் நெருங்கிக் கொண்டிருந்ததால் மீண்டும் பயணச்சீட்டை நினைவுபடுத்தினேன். "நான் கொடுத்த பணத்தை எடுத் துக்கொண்டு அந்தப் பெண்மணி அப்போதே இறங்கிவிட்டாள்'' என்று பக்கத்தில் நின்ற பெண் கூறினார்.

என் கையில் வேறு பணமும் இல்லை.ளஅடுத்த நிறுத்தத்திலோ பயணச்சீட்டு பரிசோதகர்கள் நின்றனர். எனக்கு அழுகையே வந்துவிட்டது. "அம்மா பதற்றப்படாம அமைதியா இருங்க. பரிசோதகர் உள்ளே வந்து கேட்டால் நாங்கள் விவரம் சொல்கிறோம், அழாதீங்க" என்று மற்ற பயணிகள் கூறினர். அது ஒரு கல்லூரி நிறுத்தமாக இருந்ததால் கீழே நின்றபடியே டிக்கெட்டை பரிசோதித்து விட்டு சென்று விட்டனர். பஸ் நகர்ந்து நான் இறங்கும் நிறுத்தம் வரும்வரை எனக்கு மனம் திக்திக்கென்று பதற்றமாகவே இருந்தது. எப்படியோ டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கி அவமானப்படாமல் தப்பித்தேன்.''

முடிந்தவரை பயணச்சீட்டை நாமே வாங்குவது நல்லது என்பதை அந்த அனுபவம் எனக்குக் கற்றுத் தந்தது.

-த.காமாட்சி, கடம்பநல்லூர்.




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 18, 2012 2:51 pm

மிகவும் சிறப்பாக உள்ளது sivaa மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 8:43 am

மாமியாருக்கு மரியாதை

சமீபத்தில் என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். உறவினர் வீட்டில் அவர் மாமியாரும் இருந்தார். அவருக்கு அதிக வயது காரணமாக கண்பார்வை மங்கி விட்டது. காதும் சரிவர கேட்காமல் இருந்தது.

நான் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தபோது நான் சென்றதோ, உறவினரிடம் பேசிக் கொண் டிருந்ததோ அந்த பாட்டிக்கு தெரியாது. இருப்பி னும் என் உறவுக்கார பெண் தன்மாமியாரிடம் என்னை அழைத்துச்சென்றார்.காதருகில் சத்த மாக என்அம்மா பெயரையும் உறவுமுறையையும் சொல்லி அறிமுகப்படுத்தினார். அந்த பாட்டியும் என் கரங்களைப் பற்றிக்கொண்ட என் அம்மா, எங்கள் குடும்பம் பற்றியெல்லாம் சில மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண் டார். அவர்களிடம் விடைபெறும்போது கைளை தலையில் வைத்து ஆசியும் வழங்கினார். மகிழ்ச்சியுடன் விடை பெற்றேன்.

இன்றைக்கு பெரும்பாலான முதியவர்கள் பிள்ளைகளின் அரவணைப்பின்றி முதியோர் இல்லங்களுக்கு பார்சல் பண்ணப்பட்டு விடுகிறார்கள். ஆனால் என் உறவினர்பெண் தன் மாமியாரை எந்தக்குறையும் இன்றி பராமரிப்பதோடு, வீட்டுக்கு வருகிற என் போன்ற உறவினர்களையும் அறிமுகப்படுத்தி வைத்து அவர்களின் மகிழ்ச்சிக்கு வகை செய்கிறார். நிஜமாகவே இப்படி ஒரு அன்பான மருமகள் கிடைக்க அந்த மாமியார் கொடுத்து வைத்தவர் தான்.

-பி.மரகதவள்ளி, வள்ளியூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 19 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 19 of 32 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக