புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெகிழ வைத்த நிஜங்கள்
Page 2 of 32 •
Page 2 of 32 • 1, 2, 3 ... 17 ... 32
First topic message reminder :
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பலூன் பறந்தது... பஸ் நின்றது...
சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சிக்கு நான் எனது அண்ணன், அண்ணி குடும்பத்தினரோடு சென்றிருந்தேன். நாங்கள் மொத்தம் ஐந்து பேர். அதில் குழந்தைகளும் அடக்கம்.
பொருட்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு உயர் நீதிமன்றத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பஸ்சில் ஏறினோம். ஒரு குழந்தையுடன் அண்ணியும், இன்னொரு குழந்தையுடன் அண்ணனும் இடம் கிடைத்து சீட்டில் அமர்ந்து விட்டார்கள். பொருட்காட்சியில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒரு பலூன் வாங்கி கொடுத்து இருந்தார்கள். கூட்ட நெரிசலில் பலூன் உடைந்து விடும் என்று எண்ணிய ஓட்டுனர் என் அண்ணனிடம், "பலூனை என்னிடம் கொடுங்கள் இறங்கும் போது வாங்கி கொள்ளுங்கள்'' என்று வாங்கி, இஞ்சின் அருகில் கட்டி விட்டார். வண்டி செல்லும் வேகத்தில் கட்டி இருந்த பலூன் ஒன்று காற்றில் பறந்து வெளியேபோய் விட்டது.
அதை கவனித்த ஓட்டுனர் சரியாக மெரினா பீச் ஓரம் வந்ததும் குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு பீச்சை நோக்கி ஓடினார். அங்கிருந்த ஒரு பலூன் கடையில் 1 பலூனை வாங்கிக் கொண்டு ஏறினார். ஒரு பலூனுக்காக இந்தமாதிரி பஸ்சை நிறுத்திவிட்டு நீங்கள் ஓடிப்போக வேண்டியதில்லையே? என்று டிரைவரிடம் நாங்கள்கேட்டோம்.
அதற்கு டிரைவர் சொன்ன பதில்: "நானும் இரண்டு பிள்ளைகள் பெற்றவன் தான். குழந்தைகள் பஸ்சை விட்டு இறங்கும்போது, இருக்கும் ஒரு பலூனுக்கு இருவரும் சண்டை போடுவார்கள். அப்படி ஒரு சண்டை நடக்க நான் காரணமாக இருக்கக்கூடாதில்லையா!'' என்றாரே பார்க்கலாம்!
அவர் ஒரு பொறுப்பான டிரைவர் மட்டுமின்றி, பொறுப்பான அப்பாவாகவும் இருப்பதை நினைத்து மகிழ்ந்தோம்.
தங்கபாண்டி, முடிச்சூர்.
சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சிக்கு நான் எனது அண்ணன், அண்ணி குடும்பத்தினரோடு சென்றிருந்தேன். நாங்கள் மொத்தம் ஐந்து பேர். அதில் குழந்தைகளும் அடக்கம்.
பொருட்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு உயர் நீதிமன்றத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பஸ்சில் ஏறினோம். ஒரு குழந்தையுடன் அண்ணியும், இன்னொரு குழந்தையுடன் அண்ணனும் இடம் கிடைத்து சீட்டில் அமர்ந்து விட்டார்கள். பொருட்காட்சியில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒரு பலூன் வாங்கி கொடுத்து இருந்தார்கள். கூட்ட நெரிசலில் பலூன் உடைந்து விடும் என்று எண்ணிய ஓட்டுனர் என் அண்ணனிடம், "பலூனை என்னிடம் கொடுங்கள் இறங்கும் போது வாங்கி கொள்ளுங்கள்'' என்று வாங்கி, இஞ்சின் அருகில் கட்டி விட்டார். வண்டி செல்லும் வேகத்தில் கட்டி இருந்த பலூன் ஒன்று காற்றில் பறந்து வெளியேபோய் விட்டது.
அதை கவனித்த ஓட்டுனர் சரியாக மெரினா பீச் ஓரம் வந்ததும் குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு பீச்சை நோக்கி ஓடினார். அங்கிருந்த ஒரு பலூன் கடையில் 1 பலூனை வாங்கிக் கொண்டு ஏறினார். ஒரு பலூனுக்காக இந்தமாதிரி பஸ்சை நிறுத்திவிட்டு நீங்கள் ஓடிப்போக வேண்டியதில்லையே? என்று டிரைவரிடம் நாங்கள்கேட்டோம்.
அதற்கு டிரைவர் சொன்ன பதில்: "நானும் இரண்டு பிள்ளைகள் பெற்றவன் தான். குழந்தைகள் பஸ்சை விட்டு இறங்கும்போது, இருக்கும் ஒரு பலூனுக்கு இருவரும் சண்டை போடுவார்கள். அப்படி ஒரு சண்டை நடக்க நான் காரணமாக இருக்கக்கூடாதில்லையா!'' என்றாரே பார்க்கலாம்!
அவர் ஒரு பொறுப்பான டிரைவர் மட்டுமின்றி, பொறுப்பான அப்பாவாகவும் இருப்பதை நினைத்து மகிழ்ந்தோம்.
தங்கபாண்டி, முடிச்சூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
சிவா wrote:பலூன் பறந்தது... பஸ் நின்றது...
சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சிக்கு நான் எனது அண்ணன், அண்ணி குடும்பத்தினரோடு சென்றிருந்தேன். நாங்கள் மொத்தம் ஐந்து பேர். அதில் குழந்தைகளும் அடக்கம்.
பொருட்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு உயர் நீதிமன்றத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பஸ்சில் ஏறினோம். ஒரு குழந்தையுடன் அண்ணியும், இன்னொரு குழந்தையுடன் அண்ணனும் இடம் கிடைத்து சீட்டில் அமர்ந்து விட்டார்கள். பொருட்காட்சியில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒரு பலூன் வாங்கி கொடுத்து இருந்தார்கள். கூட்ட நெரிசலில் பலூன் உடைந்து விடும் என்று எண்ணிய ஓட்டுனர் என் அண்ணனிடம், "பலூனை என்னிடம் கொடுங்கள் இறங்கும் போது வாங்கி கொள்ளுங்கள்'' என்று வாங்கி, இஞ்சின் அருகில் கட்டி விட்டார். வண்டி செல்லும் வேகத்தில் கட்டி இருந்த பலூன் ஒன்று காற்றில் பறந்து வெளியேபோய் விட்டது.
அதை கவனித்த ஓட்டுனர் சரியாக மெரினா பீச் ஓரம் வந்ததும் குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு பீச்சை நோக்கி ஓடினார். அங்கிருந்த ஒரு பலூன் கடையில் 1 பலூனை வாங்கிக் கொண்டு ஏறினார். ஒரு பலூனுக்காக இந்தமாதிரி பஸ்சை நிறுத்திவிட்டு நீங்கள் ஓடிப்போக வேண்டியதில்லையே? என்று டிரைவரிடம் நாங்கள்கேட்டோம்.
அதற்கு டிரைவர் சொன்ன பதில்: "நானும் இரண்டு பிள்ளைகள் பெற்றவன் தான். குழந்தைகள் பஸ்சை விட்டு இறங்கும்போது, இருக்கும் ஒரு பலூனுக்கு இருவரும் சண்டை போடுவார்கள். அப்படி ஒரு சண்டை நடக்க நான் காரணமாக இருக்கக்கூடாதில்லையா!'' என்றாரே பார்க்கலாம்!
அவர் ஒரு பொறுப்பான டிரைவர் மட்டுமின்றி, பொறுப்பான அப்பாவாகவும் இருப்பதை நினைத்து மகிழ்ந்தோம்.
தங்கபாண்டி, முடிச்சூர்.
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஹெல்மெட் பின்பக்கம் விபத்து முன்பக்கம்
நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்டில் ஒரு மளிகைக்கடை வியாபாரி குடும்பமும் வசிக்கிறது. அவர் இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார். வியாபாரியும், அவரது மனைவியும் வெள்ளிக்கிழமை தோறும் மாரியம்மன் கோவிலுக்கும், பிரதோஷ நாளில் சிவன் கோவிலுக்கும் அந்த இருசக்கர வாகனத்தில் செல்வார்கள்.
வாகனத்தில் போகும்போது ஹெல்மெட்டை அவர் தலையில் அணியமாட்டார். பின்னால் இருந்து பயணம் செய்யும் அவருடைய மனைவி தனது மடியில் வைத்திருப்பார். சாலையில் போக்குவரத்து போலீசார் யாராவது இருப்பதைப் பார்த்தால் உடனே மனைவி கணவர் தலையில் ஹெல்மெட்டை மாட்டிவிடுவார். வழக்கமாக அவர்கள் சேர்ந்து பயணிக்கும்போது இப்படித்தான் நடக்கும்.
அன்றும் வழக்கம்போல் இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றனர். மெயின் ரோட்டில் போலீஸ்காரர் ஒருவர் ஹெல்மெட் அணியாதவரிடம் அபராதம் வசூல் செய்வதை பார்த்ததும் கணவர், தன் மனைவியிடம் `போலீஸ் நிற்கிறார். அவர் பார்த்துவிட்டால்அபராதம் தீட்டிவிடுவார். உடனே ஹெல்மெட்டை மாட்டிவிடு' என்று சொல்லியிருக்கிறார். உடனே பதட்டமான அவர் மனைவி ஹெல்மெட்டை சரியாக பார்த்து மாட்டாமல் திருப்பி மாட்டிவிட்டார். அதனால் அவருடைய முகம் மூடப்பட்டுவிட்டது. உடனே அவர் நிலைதடுமாறி, எதிரே வந்த டூவீலரில் மோதிவிட்டார். தம்பதிகள் இருவரும் கீழே விழுந்து பலத்த காயம். எதிரில் வந்தவருக்கும் காயம். ஆஸ்பத்திரியில் சேர்த்து மருத்துவம் பார்த்ததில் ஏகப்பட்ட செலவு. எப்படியோ உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்தார்கள்.
ஹெல்மெட் அணிவது வாகனத்தில் போகிறவர்கள் தங்கள் உயிரை பாதுகாக்கத் தான். ஆனால் ஹெல்மெட் அணிவதை ஏதோ கவுரவக் குறைச்சலாக எண்ணிக்கொண்டு கையில் எடுத்துச்செல்வது இதுமாதிரியான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
நி.செல்வராணி, விருதுநகர்.
நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்டில் ஒரு மளிகைக்கடை வியாபாரி குடும்பமும் வசிக்கிறது. அவர் இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார். வியாபாரியும், அவரது மனைவியும் வெள்ளிக்கிழமை தோறும் மாரியம்மன் கோவிலுக்கும், பிரதோஷ நாளில் சிவன் கோவிலுக்கும் அந்த இருசக்கர வாகனத்தில் செல்வார்கள்.
வாகனத்தில் போகும்போது ஹெல்மெட்டை அவர் தலையில் அணியமாட்டார். பின்னால் இருந்து பயணம் செய்யும் அவருடைய மனைவி தனது மடியில் வைத்திருப்பார். சாலையில் போக்குவரத்து போலீசார் யாராவது இருப்பதைப் பார்த்தால் உடனே மனைவி கணவர் தலையில் ஹெல்மெட்டை மாட்டிவிடுவார். வழக்கமாக அவர்கள் சேர்ந்து பயணிக்கும்போது இப்படித்தான் நடக்கும்.
அன்றும் வழக்கம்போல் இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றனர். மெயின் ரோட்டில் போலீஸ்காரர் ஒருவர் ஹெல்மெட் அணியாதவரிடம் அபராதம் வசூல் செய்வதை பார்த்ததும் கணவர், தன் மனைவியிடம் `போலீஸ் நிற்கிறார். அவர் பார்த்துவிட்டால்அபராதம் தீட்டிவிடுவார். உடனே ஹெல்மெட்டை மாட்டிவிடு' என்று சொல்லியிருக்கிறார். உடனே பதட்டமான அவர் மனைவி ஹெல்மெட்டை சரியாக பார்த்து மாட்டாமல் திருப்பி மாட்டிவிட்டார். அதனால் அவருடைய முகம் மூடப்பட்டுவிட்டது. உடனே அவர் நிலைதடுமாறி, எதிரே வந்த டூவீலரில் மோதிவிட்டார். தம்பதிகள் இருவரும் கீழே விழுந்து பலத்த காயம். எதிரில் வந்தவருக்கும் காயம். ஆஸ்பத்திரியில் சேர்த்து மருத்துவம் பார்த்ததில் ஏகப்பட்ட செலவு. எப்படியோ உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்தார்கள்.
ஹெல்மெட் அணிவது வாகனத்தில் போகிறவர்கள் தங்கள் உயிரை பாதுகாக்கத் தான். ஆனால் ஹெல்மெட் அணிவதை ஏதோ கவுரவக் குறைச்சலாக எண்ணிக்கொண்டு கையில் எடுத்துச்செல்வது இதுமாதிரியான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
நி.செல்வராணி, விருதுநகர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெற்றோரை திருத்த இதுவல்ல வழி...!
உடல்நிலை பாதிக் கப்பட்டிருந்த உறவினரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தேன். அங்கே பக்கத்து அறையில் பள்ளி மாணவி ஒருத்தி தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்தாள். காரணத்தைக் கேட்டபோது மனம் கனத்துப் போனது.
அந்த மாணவி, பெற்றோருக்கு ஒரே மகள். வீட்டில் எப்போதும் பெற்றோர் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். `உங்கள் சண்டை என் நிம்மதியை கெடுக்கிறது. என்னால் படிக்க முடியவில்லை' என்று மகள் பலமுறை சொல்லிப்பார்த்தும் பெற்றோர் கேட்காமல் தினமும் விடாப்பிடியாக சண்டையை தொடர்ந்திருக்கிறார்கள்.
`இவர்கள் திருந்தவே மாட்டார்கள்' என்று முடிவெடுத்த மகள், அன்றைய தினம் இருவரும் காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டு இருந்த போதே தனது துப்பட்டாவில் நெருப்பு வைத்திருக்கிறாள். துணி எரிந்துவிட அவள் அலறல் சத்தம் போட்டிருக்கிறாள். அவளுடைய சத்தம் கேட்டு பெற்றோர் ஓடிவந்து, தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அதை விடக் கொடுமை, அந்த பெற்றோர் தங்கள்அன்பு மகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தநிலையில், ஆஸ்பத்திரியிலும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.
சண்டையிட்ட பெற்றோர் இப்போதும் குத்துக்கல் போலத்தான் இருக்கிறார்கள். இவள்தான் வலியில் துடிக்கிறாள். பெற்றோர்கள் சண்டையிட்டாலும் அவர்களை திருத்த நினைத்து இப்படிப்பட்ட விபரீத வழிகளை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து, தங்கள் உயிருக்கு உலைவைத்துக்கொள்ளக் கூடாது.
நா.நளினாதேவி, ஈரோடு.
உடல்நிலை பாதிக் கப்பட்டிருந்த உறவினரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தேன். அங்கே பக்கத்து அறையில் பள்ளி மாணவி ஒருத்தி தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்தாள். காரணத்தைக் கேட்டபோது மனம் கனத்துப் போனது.
அந்த மாணவி, பெற்றோருக்கு ஒரே மகள். வீட்டில் எப்போதும் பெற்றோர் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். `உங்கள் சண்டை என் நிம்மதியை கெடுக்கிறது. என்னால் படிக்க முடியவில்லை' என்று மகள் பலமுறை சொல்லிப்பார்த்தும் பெற்றோர் கேட்காமல் தினமும் விடாப்பிடியாக சண்டையை தொடர்ந்திருக்கிறார்கள்.
`இவர்கள் திருந்தவே மாட்டார்கள்' என்று முடிவெடுத்த மகள், அன்றைய தினம் இருவரும் காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டு இருந்த போதே தனது துப்பட்டாவில் நெருப்பு வைத்திருக்கிறாள். துணி எரிந்துவிட அவள் அலறல் சத்தம் போட்டிருக்கிறாள். அவளுடைய சத்தம் கேட்டு பெற்றோர் ஓடிவந்து, தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அதை விடக் கொடுமை, அந்த பெற்றோர் தங்கள்அன்பு மகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தநிலையில், ஆஸ்பத்திரியிலும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.
சண்டையிட்ட பெற்றோர் இப்போதும் குத்துக்கல் போலத்தான் இருக்கிறார்கள். இவள்தான் வலியில் துடிக்கிறாள். பெற்றோர்கள் சண்டையிட்டாலும் அவர்களை திருத்த நினைத்து இப்படிப்பட்ட விபரீத வழிகளை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து, தங்கள் உயிருக்கு உலைவைத்துக்கொள்ளக் கூடாது.
நா.நளினாதேவி, ஈரோடு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
`இது' வந்தது... `அது' போனது
என்னுடைய நண்பர் மத்திய அரசுப் பணியில் இருப்பவர். அவரின் மனைவி வங்கிப் பணியாளர். ஓரளவு வசதியான குடும்பம். அவர்களுக்கு மூன்று பெண்கள். அவர்களில் இருவர் திருமண வயதில் இருந்தார்கள். பெற்றோர் அவர்களுக்கு தகுதியான மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களது மூன்றாவது மகள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். நண்பரும், அவரின் மனைவியும் ஆளுக்கொரு செல்போன் வைத்திருப்பதோடு, மூன்று பெண்களுக்கும் ஆளுக்கொன்று வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். `எங்கேயாவது தனியாகப் போனால் செல்போன் மூலம் இருப்பிடத்தைத் தெரியப்படுத்தலாமே!' என்பதற்காக இந்த ஏற்பாடு.
இப்படி செல்போன் வழங்கியதில், இளையமகள் விஷயத்தில்தான் தப்பு நடக்கிறது. ஆரம்பத்தில் படிப்பில் முதல் இடத்தில் இருந்த அவள், செல்போன் வந்தபிறகு சராசரி மாணவியாகி விட்டாள். எந்த நேரமும் செல்போனும் கையுமாக பேசிக்கொண்டே இருக்கிறாள். பெற்றோரும் கண்டுகொள்வதாக இல்லை.
அவர்களின் குடும்பநண்பர் ஒருமுறை அவளிடம், `ஏம்மா! இப்படி செல்போன் கையுமாகவே இருக்கிறாயே? படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டாமா?' என்று கேட்டார். பதிலுக்கு அவள், `நான் ஒண்ணும் மார்க் வாங்காம இல்லையே! எல்லாப் பாடங்களிலும் ஐம்பது மார்க்குக்கு குறையாமல் வாங்கிட்டுத்தானே இருக்கேன்!' என்று சொன்னாள். இப்போதே ஐம்பது மார்க் என்றால் இனி, மேலும் மார்க் குறைந்துகொண்டுதானே இருக்கும்.
ஆர்.தனபால், சென்னை.
என்னுடைய நண்பர் மத்திய அரசுப் பணியில் இருப்பவர். அவரின் மனைவி வங்கிப் பணியாளர். ஓரளவு வசதியான குடும்பம். அவர்களுக்கு மூன்று பெண்கள். அவர்களில் இருவர் திருமண வயதில் இருந்தார்கள். பெற்றோர் அவர்களுக்கு தகுதியான மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களது மூன்றாவது மகள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். நண்பரும், அவரின் மனைவியும் ஆளுக்கொரு செல்போன் வைத்திருப்பதோடு, மூன்று பெண்களுக்கும் ஆளுக்கொன்று வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். `எங்கேயாவது தனியாகப் போனால் செல்போன் மூலம் இருப்பிடத்தைத் தெரியப்படுத்தலாமே!' என்பதற்காக இந்த ஏற்பாடு.
இப்படி செல்போன் வழங்கியதில், இளையமகள் விஷயத்தில்தான் தப்பு நடக்கிறது. ஆரம்பத்தில் படிப்பில் முதல் இடத்தில் இருந்த அவள், செல்போன் வந்தபிறகு சராசரி மாணவியாகி விட்டாள். எந்த நேரமும் செல்போனும் கையுமாக பேசிக்கொண்டே இருக்கிறாள். பெற்றோரும் கண்டுகொள்வதாக இல்லை.
அவர்களின் குடும்பநண்பர் ஒருமுறை அவளிடம், `ஏம்மா! இப்படி செல்போன் கையுமாகவே இருக்கிறாயே? படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டாமா?' என்று கேட்டார். பதிலுக்கு அவள், `நான் ஒண்ணும் மார்க் வாங்காம இல்லையே! எல்லாப் பாடங்களிலும் ஐம்பது மார்க்குக்கு குறையாமல் வாங்கிட்டுத்தானே இருக்கேன்!' என்று சொன்னாள். இப்போதே ஐம்பது மார்க் என்றால் இனி, மேலும் மார்க் குறைந்துகொண்டுதானே இருக்கும்.
ஆர்.தனபால், சென்னை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உடைந்த செல்போன் உணர்த்திய பாடம்
தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவள் தன் மூன்று வயதுக் குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தாள். குழந்தை சாப்பிடாமல் அடம் பிடித்து இங்கும் அங்கும் ஓடியது. தோழி உடனே அருகில் வைத்திருந்த செல்போனைக் குழந்தை கையில் கொடுத்து `சமர்த்தா சாப்பிடணும். அப்போது தான் அப்பா உன் கூட போனில் பேசுவார்' என்றபடி சாதத்தை ஊட்ட முயற்சித்தாள்.
குழந்தையோ சாப்பிடுவதில் ஆர்வம் காட்டாமல் போன் பட்டனை அழுத்தி விளையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தது. தோழி வற்புறுத்தி அதன் வாயில் சாதத்தைத் திணிக்கவே கோபம் கொண்ட குழந்தை கையிலிருந்த செல்போனை வீசி விட்டு அழுதது. செல்போன் அங்கிருந்த டி.வி.யின் மேல் விழுந்து டி.வி. உடைந்தது. செல்போனும் சேதம் அடைந்தது. உடனே தோழி குழந்தையைத் திட்டியபடி அடித்தாள்.
பாவம் குழந்தை என்ன செய்யும்? விலை உயர்ந்த பொருட்களை குழந்தையிடம் தருவதால் பொருள் நஷ்டமும், பணவிரயமும் ஆகும் என்பதை பெரியவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-13.
தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவள் தன் மூன்று வயதுக் குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தாள். குழந்தை சாப்பிடாமல் அடம் பிடித்து இங்கும் அங்கும் ஓடியது. தோழி உடனே அருகில் வைத்திருந்த செல்போனைக் குழந்தை கையில் கொடுத்து `சமர்த்தா சாப்பிடணும். அப்போது தான் அப்பா உன் கூட போனில் பேசுவார்' என்றபடி சாதத்தை ஊட்ட முயற்சித்தாள்.
குழந்தையோ சாப்பிடுவதில் ஆர்வம் காட்டாமல் போன் பட்டனை அழுத்தி விளையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தது. தோழி வற்புறுத்தி அதன் வாயில் சாதத்தைத் திணிக்கவே கோபம் கொண்ட குழந்தை கையிலிருந்த செல்போனை வீசி விட்டு அழுதது. செல்போன் அங்கிருந்த டி.வி.யின் மேல் விழுந்து டி.வி. உடைந்தது. செல்போனும் சேதம் அடைந்தது. உடனே தோழி குழந்தையைத் திட்டியபடி அடித்தாள்.
பாவம் குழந்தை என்ன செய்யும்? விலை உயர்ந்த பொருட்களை குழந்தையிடம் தருவதால் பொருள் நஷ்டமும், பணவிரயமும் ஆகும் என்பதை பெரியவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-13.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முதியோர் சேமிப்பு... முழுதான பாதுகாப்பு
தினமும் அதிகாலை வாக்கிங் செல்லும் வழக்கமுடைய நான், அன்று செல்லும் போது கடைத் திண்ணை ஒன்றில் படுத்திருந்தவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் தூங்கிவிழித்து அப்போதுதான்திண்ணையில் எழுந்து உட்கார்ந்திருந்தார்.
அவர் எங்கள் கிராமத்தில் ஊர்மெச்ச வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரும் செல்வந்தராகவும் விளங்கினார். `இவர் ஏன் இந்த நடுங்கும் குளிரில், அதுவும் பிளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தார்?' என்ற கேள்வி எனக்குள் அதிர்ச்சியுடன் எழுந்தது.
அவருக்கு ஒரே மகன். உள்ளூரிலேயே குடித்தனம். சொந்த வீடு கடன் சுமை காரணமாக விற்கப்பட, வாடகை வீட்டில் தந்தையுடன் குடியேறியிருக்கிறான் மகன். தாய் இல்லை. வாடகை வீடு சிறியதாக இருக்க, மருமகள், மாமனாரை விரட்ட சதி திட்டம் தீட்டியிருக்கிறாள்.
வீட்டின் உரிமையாளரிடம் போய், தன் மாமனார் பற்றி மோசமாக கூறியிருக்கிறாள். அவரால் அக்கம்பக்கத்து வீட்டினருக்கு பிரச்சினை ஏற்படும். அவர் ரவுடி என்றும் கூறியிருக்கிறாள். வீட்டு உரிமையாளரும் அதை நம்பிவிட்டார். `இந்தப்
பெரியவர் என் வீட்டில் இருக்கக்கூடாது. அப்படி இருப்பாரானால் மொத்தமாக வீட்டை காலி செய்யுங்கள்' என்று கண்டிப்புடன் வீட்டு உரிமையாளர் சொல்லி விட்டார். மகனும் வேறு வீடு பார்க்கும் வரை தந்தையை வேறு எங்காவது தங்கிக் கொள்ளுமாறு கூறியிருக்கிறான். ரோஷம் தாங்காமல் பெரியவரும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். எங்கு செல்வது எனத் தோன்றாமல் கடை வாசற்படியில் வந்து இரவு தங்கியிருக்கிறார்.
நடந்ததை அவர் மூலம் தெரிந்ததும் அவரது சம்பந்தியிடம் (மருமகளின் தந்தை) இந்த விஷயத்தை கொண்டுசென்றேன். அவர் பதறியடித்து ஓடிவந்து மகளையும், மருமகனையும் திட்டினார். அதன்பிறகு மீண்டும் தன்குடும்பத்துடன் இணைந்து கொண்டார் பெரியவர். வீட்டு உரிமையாளருக்கும் உண்மை புரியவைக்கப்பட்டது. அவரும் அமைதியாகிவிட்டார்.
-ஏ.ஜே.ஜப்பார், சத்தியமங்கலம்.
தினமும் அதிகாலை வாக்கிங் செல்லும் வழக்கமுடைய நான், அன்று செல்லும் போது கடைத் திண்ணை ஒன்றில் படுத்திருந்தவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் தூங்கிவிழித்து அப்போதுதான்திண்ணையில் எழுந்து உட்கார்ந்திருந்தார்.
அவர் எங்கள் கிராமத்தில் ஊர்மெச்ச வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரும் செல்வந்தராகவும் விளங்கினார். `இவர் ஏன் இந்த நடுங்கும் குளிரில், அதுவும் பிளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தார்?' என்ற கேள்வி எனக்குள் அதிர்ச்சியுடன் எழுந்தது.
அவருக்கு ஒரே மகன். உள்ளூரிலேயே குடித்தனம். சொந்த வீடு கடன் சுமை காரணமாக விற்கப்பட, வாடகை வீட்டில் தந்தையுடன் குடியேறியிருக்கிறான் மகன். தாய் இல்லை. வாடகை வீடு சிறியதாக இருக்க, மருமகள், மாமனாரை விரட்ட சதி திட்டம் தீட்டியிருக்கிறாள்.
வீட்டின் உரிமையாளரிடம் போய், தன் மாமனார் பற்றி மோசமாக கூறியிருக்கிறாள். அவரால் அக்கம்பக்கத்து வீட்டினருக்கு பிரச்சினை ஏற்படும். அவர் ரவுடி என்றும் கூறியிருக்கிறாள். வீட்டு உரிமையாளரும் அதை நம்பிவிட்டார். `இந்தப்
பெரியவர் என் வீட்டில் இருக்கக்கூடாது. அப்படி இருப்பாரானால் மொத்தமாக வீட்டை காலி செய்யுங்கள்' என்று கண்டிப்புடன் வீட்டு உரிமையாளர் சொல்லி விட்டார். மகனும் வேறு வீடு பார்க்கும் வரை தந்தையை வேறு எங்காவது தங்கிக் கொள்ளுமாறு கூறியிருக்கிறான். ரோஷம் தாங்காமல் பெரியவரும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். எங்கு செல்வது எனத் தோன்றாமல் கடை வாசற்படியில் வந்து இரவு தங்கியிருக்கிறார்.
நடந்ததை அவர் மூலம் தெரிந்ததும் அவரது சம்பந்தியிடம் (மருமகளின் தந்தை) இந்த விஷயத்தை கொண்டுசென்றேன். அவர் பதறியடித்து ஓடிவந்து மகளையும், மருமகனையும் திட்டினார். அதன்பிறகு மீண்டும் தன்குடும்பத்துடன் இணைந்து கொண்டார் பெரியவர். வீட்டு உரிமையாளருக்கும் உண்மை புரியவைக்கப்பட்டது. அவரும் அமைதியாகிவிட்டார்.
-ஏ.ஜே.ஜப்பார், சத்தியமங்கலம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாலி நேரமா? ஜாலி நேரமா?
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நண்பரின் இல்லத் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். மணமக்கள் இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதே பழகியவர்கள். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடாயிற்று.
பெண்ணும்- மாப்பிள்ளையும் ஆழமான காதலர்கள் என்பதை மணவறையில் அவர்கள் காட்டிய அன்யோன்யமே உணர்த்தியது. அது வாழ்த்த வந்த பலரையும் சில நேரங்களில் முகம் சுளிக்கவும் வைத்தது. மணவறையில் உட்கார்ந்ததில் இருந்து ஒரு மணி நேரம் முழுக்க, திருமணம் நடத்தி வைக்கும் குருக்கள் முறையாக மந்திரம் சொல்லிக்கொண்டு வந்தார். பெண்ணையும், மாப்பிள்ளையையும் தான் சொல்லும் மந்திரங்களை தன்கூடவே சொல்லச் சொன்னார். பெண்ணும் மாப்பிள்ளையும் குருக்கள் சொல்வதையும், செய்யும் சடங்குகளையும் முறையாக செய்யாமல் இருவரும் சிரித்து பேசியபடி ஒப்புக்காக செய்து கொண்டிருந்தனர். குருக்கள் இடைஇடையே "அக்கறையா , பக்திபூர்வமா சொல்லுங்கோ'' என்று சொன்னதையும் அவர்கள் கேட்கவில்லை. ஹோமத்தாலும், கோபத்தாலும் குருக்கள் முகம் சிவந்தது தான் மிச்சம்.
என்ன தான் பழகியிருந்தாலும் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் கூடியிருக்கும் வாழ்க்கையின் முக்கியமான மணவிழாவில், ஏதோ பெண்ணும் மாப்பிள்ளையும் பூங்காவில் தனித்து இருப்பதைப் போல நடந்து கொண்டது, வந்திருந்தோர் அனைவரையும் எரிச்சல் படுத்தியது. தாலி வைபவத்தை, ஜாலி வைபவம் ஆக்கிவிட்டார்கள்.
கே.இராமசாமி, திருச்சி.
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நண்பரின் இல்லத் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். மணமக்கள் இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதே பழகியவர்கள். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடாயிற்று.
பெண்ணும்- மாப்பிள்ளையும் ஆழமான காதலர்கள் என்பதை மணவறையில் அவர்கள் காட்டிய அன்யோன்யமே உணர்த்தியது. அது வாழ்த்த வந்த பலரையும் சில நேரங்களில் முகம் சுளிக்கவும் வைத்தது. மணவறையில் உட்கார்ந்ததில் இருந்து ஒரு மணி நேரம் முழுக்க, திருமணம் நடத்தி வைக்கும் குருக்கள் முறையாக மந்திரம் சொல்லிக்கொண்டு வந்தார். பெண்ணையும், மாப்பிள்ளையையும் தான் சொல்லும் மந்திரங்களை தன்கூடவே சொல்லச் சொன்னார். பெண்ணும் மாப்பிள்ளையும் குருக்கள் சொல்வதையும், செய்யும் சடங்குகளையும் முறையாக செய்யாமல் இருவரும் சிரித்து பேசியபடி ஒப்புக்காக செய்து கொண்டிருந்தனர். குருக்கள் இடைஇடையே "அக்கறையா , பக்திபூர்வமா சொல்லுங்கோ'' என்று சொன்னதையும் அவர்கள் கேட்கவில்லை. ஹோமத்தாலும், கோபத்தாலும் குருக்கள் முகம் சிவந்தது தான் மிச்சம்.
என்ன தான் பழகியிருந்தாலும் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் கூடியிருக்கும் வாழ்க்கையின் முக்கியமான மணவிழாவில், ஏதோ பெண்ணும் மாப்பிள்ளையும் பூங்காவில் தனித்து இருப்பதைப் போல நடந்து கொண்டது, வந்திருந்தோர் அனைவரையும் எரிச்சல் படுத்தியது. தாலி வைபவத்தை, ஜாலி வைபவம் ஆக்கிவிட்டார்கள்.
கே.இராமசாமி, திருச்சி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 32 • 1, 2, 3 ... 17 ... 32
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 32
|
|