புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
44 Posts - 61%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
2 Posts - 3%
viyasan
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
236 Posts - 43%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
21 Posts - 4%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 15 of 32 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 23 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 08, 2012 2:07 pm

ரேவதி wrote:குடும்பமலரில் இதையெல்லாம் நான் படிக்க தவரவே மாட்டேன்
நன்றி அண்ணா

இது அங்கு படிக்கத் தவறியவர்களுக்கானது ரேவதி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 08, 2012 2:07 pm

அதிக செல்லம்... அதிர்ச்சியான எதிர்காலம்...

எனது உறவினருக்கு ஒரே மகன். அவர்களுக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தது. அதற்கெல்லாம் வாரிசு மகன் தான் என்பதால் அதிக செல்லம் கொடுத்து வளர்த்தனர். அந்த பையன் எதைக் கேட்டாலும் மறுப்பின்றி வாங்கி கொடுத்து விடுவார்கள்.

அந்த பையன் வாலிப வயதை அடைந்தபோது அவனுடைய அப்பா திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். இவன் கண்டிப்புடன் வளர்க்கப்படாததால் ஏகப்பட்ட கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தான். அதற்காக பணம் தேவைப்பட்டபோது நீட்டிய பேப்பர்களில் எல்லாம் கையெழுத்துப்போட்டிருக்கிறான். அதன் விளைவு ஒரே வருடத்தில் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விட்டது. செல்வச்செழிப்பில் வளர்ந்த அவன் இன்று பைத்தியம் பிடித்தவன் போல் திரிகிறான். அவன் தாயோ வீடுகளில் பாத்திரம் தேய்த்து காலத்தை ஓட்டுகிறார்.

பெற்றோர் அன்றே மகனுக்கு ஒழுக்கத்தையும், கண்டிப்பையும் புகட்டியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது அல்லவா?

- ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 08, 2012 2:08 pm

பார்த்தது டி.வி. தொடர்!
கேள்விக்குறியானது வாழ்க்கைத் தொடர்!


மதுரையில் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை மின்சாரம் இருக்காது. திருமணமான எனது தோழி எங்கள் பகுதியில் தான் வசிக்கிறாள். அவள் டி.வி. யில் வரும் தொடர்கள் ஒன்றுவிடாமல் பார்ப்பாள். ஒரு தொடரை பார்க்கமுடியாமல் போனாலும் பைத்தியம் பிடித்தது போலாகி விடுவாள். 2 மணி நேரம் மின்தடை இருக்கும் நேரத்தில் பார்க்க முடியாத சீரியல்களை அப்போது மின்சாரம் இருக்கும் பகுதியான கீழவாசலில் உள்ள அவளின் அக்கா வீட்டிற்கு சென்று பார்ப்பாள்.

தொடர்ந்து இரவு நேரத்தில் தன் மனைவி அவள் அக்கா வீட்டுக்கு டி.வி. பார்க்க சென்று விடுவதை தோழியின் கணவன் விரும்பவில்லை. கண்டித்து பார்த்தார். இவள் கேட்கவில்லை. சீரியல் மோகத்தில் தொடர்ந்து அக்கா வீட்டுக்குப்போய் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். ஒரு கட்டத்தில் கணவர் கோபத்தில் அவளிடம், "சீரியல் பார்க்கப் போவதாக பொய் சொல்லி உன் அக்காள் கணவருடன் தொடர்பு வைத்துள்ளாயா? என கேட்டுவிட்டார். இதனால் சண்டை வந்து கோபித்துக் கொண்ட தோழி கிராமத்தில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள். தற்போது 2 வயது குழந்தையுடன் தனியாக இருக்கிறாள். இப்போது வாழ்க்கையே சீரியலாகி விட்ட சோகத்தில் தோழி டி.வி. சீரியல் எதையும் பார்ப்பதில்லை.

டி.வி. தொடர் பைத்தியமான எனது தோழிக்கு நேர்ந்ததுபோல் மற்றவர்களுக்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காக இதை எழுதுகிறேன்.

ஜெ.பவுன்தாய், மதுரை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 08, 2012 2:08 pm

தமிழுக்கு வந்த சோதனை

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தமிழ்ப்பற்றை வளர்க்கும் விதமாக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் கல்லூரி மாணவி ஒருவரிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை 2 வரிகள் பாடச்சொன்னார். அதற்கு அந்த மாணவி நீராருங் கடலுடுத்த என்று பாடுவதற்கு பதிலாக `ஜாகே ஜகாங்கே அச்சா' என்று பாடினார். இதைப்போல் இன்னொரு மாணவியிடம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதியவர் யார்? என்று கேட்க அதற்கு அந்த மாணவி தெரியவில்லை என்று கூறினார்.

தமிழ்ப்பற்றை வளர்ப்போம், செந்தமிழை போற்றுவோம் என்று தமிழின் பெருமையை நாம் மார்தட்டி பேசினால் மட்டும் போதுமா? தமிழ் மொழியின் அடிப்படை அறிவை வளர்த்து கொள்ள வேண்டாமா? அதுவும் கல்லூரிப்பருவம் வரை வந்த இந்த மாணவிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து தெரியவில்லை என்பது எத்தனை பெரிய அதிர்ச்சி!

- வி.வசந்தி, திருச்சி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 08, 2012 2:09 pm

பேச்சு... பேச்சு... நட்பு போச்சு...

எங்கள் வீட்டுக்கு குடும்ப நண்பர் ஒருவர் அவ்வப்போது வருவார். அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பதால் நேரம், காலம் பார்க்காமல் பேசிக்கொண்டு இருப்பார். இதனால் பல நேரங்களில் எரிச்சலாக இருக்கும்.

சமயத்தில் குழந்தைகள் படிக்கும் நேரத்திலும் வந்து விடுவார். பிள்ளைகளிடமும் அவர் சகஜமாகபேசுவதால் அவர்கள் படிக்கும் நேரம் பாதிக்கப்பட்டது. ஒருநாள் குழந்தைகள் பரீட்சைக்கு மும்முரமாக படித்துக் கொண்டிருந்த நேரத்தில் நண்பர் வந்து விட்டார். பரீட்சை நேரத்தில் அவரைப்பார்த்ததும் கணவரிடம் காதோடு காதாக `கழுத்தறுப்பு கேஸ்' வந்திட்டுது என்றேன்.

இதை அந்த நண்பர் கேட்டாரோ இல்லையோ, என் 5 வயது மகள் ஒருத்தி கேட்டிருக்கிறாள். அடுத்தமுறை நண்பர் வீட்டுக்குள் நுழைந்தபோது அவள் எங்களிடம் உரத்த குரலில், "அப்பா, அம்மா `கழுத்தறுப்பு' அங்கிள் வந்துட்டார்'' என்றாள். அப்போது அந்த நண்பரின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!

இதில் இரண்டு விஷயங்கள். ஒன்று: பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு யாரையும் கிண்டல் வார்த்தைகளை பிரயோகிக்கக்கூடாது. இரண்டு: நண்பர்கள் நேரம் காலம் பார்க்காமல் வந்து வீட்டில் உள்ளவர்களை சங்கடப்படுத்தக் கூடாது.

ஆர்.பிரபா, நெல்லை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 08, 2012 3:17 pm

இதில் இரண்டு விஷயங்கள். ஒன்று: பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு யாரையும் கிண்டல் வார்த்தைகளை பிரயோகிக்கக்கூடாது. இரண்டு: நண்பர்கள் நேரம் காலம் பார்க்காமல் வந்து வீட்டில் உள்ளவர்களை சங்கடப்படுத்தக் கூடாது.


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 08, 2012 7:44 pm

அருமையான பகிர்வுகள் சிவா அண்ணா! மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 08, 2012 8:36 pm

சிவா wrote:பார்த்தது டி.வி. தொடர்!
கேள்விக்குறியானது வாழ்க்கைத் தொடர்!


மதுரையில் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை மின்சாரம் இருக்காது. திருமணமான எனது தோழி எங்கள் பகுதியில் தான் வசிக்கிறாள். அவள் டி.வி. யில் வரும் தொடர்கள் ஒன்றுவிடாமல் பார்ப்பாள். ஒரு தொடரை பார்க்கமுடியாமல் போனாலும் பைத்தியம் பிடித்தது போலாகி விடுவாள். 2 மணி நேரம் மின்தடை இருக்கும் நேரத்தில் பார்க்க முடியாத சீரியல்களை அப்போது மின்சாரம் இருக்கும் பகுதியான கீழவாசலில் உள்ள அவளின் அக்கா வீட்டிற்கு சென்று பார்ப்பாள்.

தொடர்ந்து இரவு நேரத்தில் தன் மனைவி அவள் அக்கா வீட்டுக்கு டி.வி. பார்க்க சென்று விடுவதை தோழியின் கணவன் விரும்பவில்லை. கண்டித்து பார்த்தார். இவள் கேட்கவில்லை. சீரியல் மோகத்தில் தொடர்ந்து அக்கா வீட்டுக்குப்போய் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். ஒரு கட்டத்தில் கணவர் கோபத்தில் அவளிடம், "சீரியல் பார்க்கப் போவதாக பொய் சொல்லி உன் அக்காள் கணவருடன் தொடர்பு வைத்துள்ளாயா? என கேட்டுவிட்டார். இதனால் சண்டை வந்து கோபித்துக் கொண்ட தோழி கிராமத்தில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள். தற்போது 2 வயது குழந்தையுடன் தனியாக இருக்கிறாள். இப்போது வாழ்க்கையே சீரியலாகி விட்ட சோகத்தில் தோழி டி.வி. சீரியல் எதையும் பார்ப்பதில்லை.

டி.வி. தொடர் பைத்தியமான எனது தோழிக்கு நேர்ந்ததுபோல் மற்றவர்களுக்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காக இதை எழுதுகிறேன்.

ஜெ.பவுன்தாய், மதுரை.

இலவச தொலைக்காட்சி கிடைக்கவில்லையா?

எப்படி விடுபட்டது?

பாவம்.

வாழ்க்கையை தொலைத்து விட்டாயே சகோதாி.

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 502589



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 154550நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 154550நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 154550நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 154550நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2012 4:35 pm

சங்கடத்தில் பெண்! சாதுர்ய பாட்டி!!

என் வயது 70. முதுமை கருதி பஸ் பயணத்தை தவிர்ப்பேன். தவிர்க்கமுடியாமல் பயணம் செய்தே ஆக வேண்டும் என்றால், வீட்டுக்கு அருகே உள்ள டெப்போவுக்கு சென்று காலியாக இருக்கும் பஸ்சில் ஏறி அமர்ந்து விடுவேன். இரண்டு ஸ்டாப் போவதற்குள் பஸ்சில் கூட்டம் நிரம்பி விடும்.

அன்றும் அப்படித்தான்.நிரம்பி வழிந்த கூட்டத்துடன் பஸ் போய்க்கொண்டிருந்த நேரத்தில் ஒரு இளம்பெண் கையில் புத்தகங்களுடன் ஏறி என்னருகில் நின்றாள்.

திருப்பங்களில் பஸ் குலுங்கி குலுங்கி திரும்ப, அருகில் நின்ற ஆண்கள் வேண்டுமென்றே அந்த இளம்பெண் மீது சாய்ந்தார்கள். அவளோ நெருக்கடிக்குள் ஏதும் செய்ய முடியாமல் தவித்தபடி நின்று கொண்டிருந்தாள். இதைக் கவனித்த நான், உடனே எழுந்துகொண்டு என் இருக்கையில் அவளை அமரச் சொன்னேன். அந்தப்பெண் `பாட்டி நீங்கள் வயதானவர்கள், நீங்கள்தானே உட்கார்ந்து வரவேண்டும்` என்று சங்கடப்பட்டாள். அதற்கு நான், "பரவாயில்லைம்மா, என்னால் நிற்க முடியும். வயசுப் பெண்களை பாதுகாப்பது வயதானவர்களின் கடமை தானே! என்னை யாரும் இடிக்கமாட்டார்கள் இல்லையா?'' என்றபடி அவளை அமரச் செய்தேன்.

வேதாத்மா, லாஸ்பேட்டை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2012 4:35 pm

நேர்த்திக்கடனும் பெற்றோர் கடனும்!

என் தோழியின் அம்மாவுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஓடிய நிலையில்தான் என் தோழி பிறந்திருக்கிறாள். அவள் தாய், தனக்கு குழந்தை பாக்கியம் தந்தால் பிறக்கும் முதல் குழந்தையை கன்னியாஸ்திரியாக்கி இறைசேவை செய்ய அனுப்புகிறேன் என்று இறைவனிடம் பொருத்தனை செய்திருக்கிறார். அதன்பிறகே என் தோழியும், அடுத்தடுத்து இரு குழந்தைகளும் பிறந்திருக்கிறார்கள்.

தோழியின் தாயாரின் வேண்டுதல்படி என் தோழி கன்னியாஸ்திரியாக வேண்டும். ஒன்பதாவது படிக்கும்போது நாங்கள் ஒரு குருப்பாக அமர்ந்து படிப்போம். எல்லோரும் மும்முரமாக படித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவள் புத்தகத்தை மூடிவிட்டு எங்கேயோ பார்த்துக் கொண்டிருப்பாள். நாங்கள் காரணம் கேட்டபோது

முதலில் மவுனம் காத்த அவள், ஒருகட்டத்தில் அம்மாவின் நேர்த்திக்கடன் பற்றி கூறிவிட்டு, `கன்னியாஸ்திரியாகப் போவதற்கு எதுக்குப் படிப்பு?' என்று கசப்பாக புன்னகைப்பாள். அவளுக்கு கல்யாணம் பண்ணி கணவன், குழந்தை என்று வாழ ஆசை. எல்லோருக்கும் தோன்றும் இயல்பான ஆசைதான்.

கன்னியாஸ்திரி ஆவதற்கான தனிப்படிப்பிற்காக செல்ல அவள் அம்மா வற்புறுத்தியபோது அவள் அம்மாவிடம் கல்யாண ஆசையை சொல்லியிருக்கிறாள். தாயாரோ, இறைவனுக்கு பண்ணின பொருத்தனையை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் காட்ட, இவளும் விடாப்பிடியாக மறுக்க, கடைசியில் தோழியின் போராட்டமே வென்றது. இன்று திருமணம் செய்து கொண்டு ஒரு நல்ல மனைவியாக, தாயாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

- எஸ்.மோகனா செல்வகணேசன், சோழிங்கநல்லூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 15 of 32 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 23 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக