புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10 
77 Posts - 36%
i6appar
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10 
2 Posts - 1%
prajai
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 12 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "


   
   

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 24, 2011 11:07 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------


*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 28, 2013 11:25 am

முதலும் .இறுதியும் நம்வசம் நிச்சயம் இல்லை .
ஆனால் அறிதலும் புரிதலும் நிச்சயம் நம் வசம் உண்டு

அருமை, எளிதில் எல்லோருக்கும் புரியும் படி மகிழ்ச்சி , நன்றி ஐயா தொடருங்கள்




அன்புடன்
சின்னவன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 28, 2013 11:27 am

sugumaran wrote:நன்றி திரு ராஜா, உங்களை மாதிரி ஆர்வமுள்ள நல்ல இதயங்களுக்காகத்தான்
நான் இன்னும் எழுத இருக்கிறேன் .
"எழுதுவதால் வரும் பாவம் படிப்பவரால் தான் போகும் /"
எப்படி புது மொழி ?
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
ஹாஹாஹா ... அப்புறம் படிப்பவர்கள் அந்த பாவத்தை எப்படி போக்குவது ? சிரி

(சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் ஐயா)

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 28, 2013 12:04 pm

அவரும் எழுதிம்ற்றவருக்கு தெரிவித்துத்தான் போக்கவேண்டும்

இது நகைச் சுவைக்கு மட்டும் அல்ல
எழுதும் பொது எப்படியும் நான் எனும் அந்தக்கரணமான அகங்காரம் என்னும் "நான் "
இருந்தேத் தேறும் .
தத்துவ நிக்கிரகம் தான் தன்னை அறிதல் அதுவாக ஆதல் .
எனவே எழுதும் பாவம் படிப்பதால் தான் போகும் .
படிப்பவர்கள் அதை பிறருக்கு சொல்லுவதால் தான் போகும்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 28, 2013 12:06 pm

அன்புள்ள சின்னவருக்கு ,
சின்னவர் என்று சொல்லும் போதே தெரிகிறது நீங்கள் பெரியவர் என்று .
படித்ததற்கு நன்றி .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 28, 2013 1:04 pm

பெரும்பாலும் படிக்கும் இன்பத்திற்காகவே படிக்கிறோம் .
ஆனால் அதை உணர்வதோ படிப்பதில் இருக்கும்
படிப்பினைகளை உணர்வதோ மிகக் குறைவு .!
படிப்பினைகளை அவ்வப்போது தனது வாழ்வில்
பொருத்திப் பார்த்துக் கொண்டே இருப்பவன்
மட்டும் தான் மேலே மேலே போகிறான் .!

சூப்பருங்க


கோபம் பொறாமை , கருமித்தனம் ,சுயநலம் போன்றவற்றின் பலனை ஏறக்குறைய
நாம் உடனே உணர்ந்து விடலாம் .நாம் கோபமாக பேசினால் ,பதிலுக்கு என்ன கிடைக்கும்
சாதாரணமாக கோபமே,கோபம் கலந்த பேச்சே திருப்பிக் கிடைக்கும் .
நாம் பெறும் அனுபவங்கள் அறிவாக மனதில் சேமிக்கப்பட்டு முளையின் மூலமாக
அவை செயல் படுகிறது .

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினையே மிஞ்சும் உங்கள் கருத்து அருமை அய்யா ...

படைப்பைப் படைத்தவர் உயரியவராகத்தானே இருக்கமுடியும்

படைப்பே படைத்தவனின் உயர்வை பறைசாற்றும் .

நம்மை அறிந்தால் ,இறைவனையும் அறிந்தவனாக ஆவோம் .



உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ... அருமை சூப்பருங்க


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 28, 2013 5:27 pm

நன்றி பூவன் ,
இப்போது தான் படிக்கிறீர்களா ?
ஆழமாகவே படிப்பது புரிகிறது .
பூவன் என்று பெயர் கொண்டு பூஉலகை ஆளும் அன்பின்
பொருளையே முகவரியில் கொண்ட உங்களுக்கு எனது நன்றி .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 28, 2013 5:31 pm

sugumaran wrote:நன்றி பூவன் ,
இப்போது தான் படிக்கிறீர்களா ?
ஆழமாகவே படிப்பது புரிகிறது .
பூவன் என்று பெயர் கொண்டு பூஉலகை ஆளும் அன்பின்
பொருளையே முகவரியில் கொண்ட உங்களுக்கு எனது நன்றி .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

ஆமாம் அய்யா இன்று தான் படித்தேன் நன்றாக உள்ளது தொடருங்கள் சூப்பருங்க

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 28, 2013 11:48 pm

எனக்குப் புரிந்தது இதுவே -39
-அண்ணாமலை சுகுமாரன்

முந்தய பதிவில் பிறப்பறுத்தல் தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை பார்த்தோம் .
மேலும் சிலபெரியவர்களின் சிபாரிசுகளையும் இந்த விளக்கத்திற்கு சான்றாகப்பார்த்துவிட்டு மேலேத் தொடருவோம் .

உலகில் பிறந்தவர் அனைவரும் இறந்தேப்போகிறார்கள் .
இறந்தவர்கள் மீண்டும் பிறந்துகொண்டே இருக்கிறார்கள் .
பிறப்பு இறப்பு என்பது ஒரு தீராத சுழற்சி
இதில் கருமக்க்ணக்குகள்வேறு கூடியும் குறைவதற்கும் ஏற்ப
பிறப்பில் வேறுபாடுகள் ,ஏற்ற இறக்கங்கள் விளைகின்றன .

"புனரபி ஜனனம்
புனரபி மரணம் " என்கிறார் ஆதி சங்கரர் தனது பஜகோவிந்தத்தில் .
அப்போது இந்த சுழற்சிதீராது என்பது உறுதி ஆகிறது

அப்படி என்றால் இந்தச் சுழற்சியில் இருந்து எப்படி விடுபடுவது ?
வினைபயன் என்றால் அது முழுவதும் எப்போது கழிவது ?
எப்படி மீண்டும் பிறவாதிருப்பது ?
இதில் நமது பங்களிப்பு என்பது இல்லவே இல்லையா ?


இல்லாமலா இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் தமிழ் இனம் இதைஇபற்றி பேசிவருகிறது .
இதுவே வாழ்வின் லட்சியம் என்று கூறிவருகிறது ?


( ஆதாரம் கிடைத்த ஆண்டுகள்தான் இந்த இரண்டாயிரம் .
நம்மைப் பொருத்தவரை ஆதாரம் இல்லை என்றால் அதுவே இல்லை என்றுதானே வாதிடுகிறோம் .இப்போதைக்கு இதை விடுவோம் .பின்பு விரிவாகப்பார்ப்போம் )

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும் குறள் -362

என்கிறார் திருவள்ளுவர் ,
இன்னும் சற்று விசனமாக பட்டினத்தார் ,

"மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் சலித்து விட்டானே -நாதா
இருபையூர் வாழ சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமல் கா "- என்கிறார் .

விணையின் பயனாய் வடிவெடுத்த நான்
பிறந்து பிறந்து கால் சலித்தேன் என்று பதறுகிறார் .


"அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பெண்டிர் எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
இன்னம் எத்தனை எத்தனை சென்மமோ
என்செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே " என்று
புலம்புகிறார் பட்டினத்தார் .

இது சற்று அதிகமோ ? இவ்வாறு சிந்தித்தால்
இதனால் இவ்வுலக கருமங்கள் சிதைவுருமோ என்று எண்ணம் சற்றும்
வரக்கூடாது .
உள்ளத்தை உள்ளபடி அறிந்துகொண்டால்
நாம் ஆற்றும் கருமங்கள் செம்மையுறுமேத்
தவிர சிதைவுறாது .
இத்தனையும் கூறுவது யாரையும் அனைத்தையும் துறந்து
துறவி ஆகச் சொல்வதற்காக அல்ல .
மாறாக செய்யும் செயலில்தெளிவும் ,
மாறாத உறுதியும் வேண்டும் என்பதற்காகவே
இத்தனையும் புரிந்து கொள்ள முயல்கிறோம் .

முன்னமே நாம் பேசி இருக்கிறோம்
அன்புதான் ஆன்மாவை பிணைக்கும் கயிறு என்று .

எனவே இதனை அறியும் அறிவு எந்தக் காரணம் கொண்டும்
நம் உறவுகளையும் ,சுற்றத்தையும் ,
பிள்ளைகளையும் ,உலகத்து மக்களையும்
பிணைக்கும் அன்பை வளர்க்குமேத்தவிர
கடமையை குறைக்காது .முன்பே சுதர்மம் என்றால் என்ன என்ன பேசி இருக்கிறோம் .

ஆயினும் அதில் பொதிந்த அறிவை ,வாழ்வின்
மூலம் பெறும்அனுபவ ,அறிவை புரிந்து கொள்ளவேண்டும் .

நாம் பிறப்பறுக்க வேண்டும் என்றால் மனிதராகப்பிறந்துதான் ஆகவேண்டும்
கருமங்கள் ஆற்றித்தான் ஆகவேண்டும்

"எண்ணற்ற பிறவிதனில் மனிடப்பிரவிதான்
யாதினும் அரிது அரிது காண,
இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ
ஏது வருமோ ? அறிகிலேன் "

எனும் தாயுமானவரின் வரிகள் இன்னமும்
நமக்கு கிடைத்திருக்கும் இப்பிறவியை
சீரிய வழியில் செலுத்தவேண்டுமே ?
என்ற கவலையும் தருகிறது .

அதற்க்கு எந்தவழியில் வாழ்க்கையை பயணிப்பது என்பது ?
என்பது புரியவேண்டும் .
நமக்கு என்ன தேவை என்ற தெளிவு வேண்டும் .
இது வரை கடந்து போன பதிவுகளில் ,
உடலின் தத்துவங்கள் .
மனம் என்பது என்ன போன்றவற்றை பார்த்தோம் .

இனி கொஞ்சம் எந்த வழிப்போவது ?
எங்கே போவது என்பதைக்குறித்து சேர்ந்தே சிந்திப்போம் .

இதுவரை எழுதியதின் பயன் குறித்தும் ,இதில் எழும் சந்தேகங்கள்
ஏதும் இருப்பின் அவ்வப்போது தெரிவித்தால்
,இப்போது சற்று ஓய்வாகவே இருப்பதால்
கூடவே அதையும் செய்துகொண்டே செல்லலாம் .


"இக்காயம் நீங்கி இனியொரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போகும் வழி நாடுமின் "
திருமந்திரம் -2106
என்று கூறி அடுத்தப்பதிவுவரை விடைபெறுகிறேன்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 03, 2013 7:05 pm

இடையில் ஏற்பட்ட வராமை , உங்கள் பதிவில் நிறைய ஆர்வத்தையே மேலும் ஏற்படுத்தி உள்ளது. உங்களுக்கு உண்டான ஆச்சர்ய படத்தக்க நிகழ்வுகளை எப்போதும் போல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

ரமணியன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Mar 06, 2013 12:28 am

மிக்க நன்றி திரு பாலசுப்ரமணியன் ,
நீங்கள் எல்லாம் படிக்கிறீர்கள் என்பது எழுத ஆர்வம் ஊட்டுகிறது .
கடந்த ஆண்டு நிகழ்ந்த அனுபவங்கள் வாழ்க்கையில் மறக்க இயலாதவை .
பின்னர் பகிர்ந்து கொள்கிறேன் .
கடந்த ஞாயிறு அன்று திருவாரூர் சென்றிருந்தேன் .திருவாரூர் கமலாலயத்தில் குளித்து ,
சித்தர் கமலமுனி ,தியாகராஜர் தரிசனம் .
பிறகு வழுவூர் அட்டவீர ஸ்தலத்தில் அற்ப்புதமான ,
இறை அனுபவம் ,பின்னர் காரைக்கால் சீமான் சுவாமிகள் குருபூஜை (123வருடம் )
பொறையார்பாப்பைய சுவாமிகள் ஜீவா சமாதி என்று சுத்திவிட்டு இப்போதுதான் திரும்பினேன் எனவே இரண்டு நாட்களாக இணையத்திற்கு வர இயலவில்லை .
தங்கள் பகிர்வுக்கு மீண்டும் நன்றி .
தொடரின் அடுத்தபகுதி நாளை தொடருகிறேன்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

Sponsored content

PostSponsored content



Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக