புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_m10நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 29, 2010 11:19 pm

நமக்கு மிகவும் விருப்பமான யாரோ ஊரிலிருந்து வந்திருக்கிற பெரியப்பா, சித்தப்பா ஒருவர் நம்மோடு உட்கார்ந்து கொண்டு கதைசொல்லி நம்மோடு பேசிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்... அப்படித்தான் இருந்தது அன்றைக்கு.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் ஆய்வு மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்தெடுக்க சிரித்துக் கொண்டே, பாடம் நடத்துகிற பேராசிரியரைப் போல அவர்களுக்குப் பதில் சொல்கிறார் அவர்.. தமிழ்ச் சினிமா உலகில் குறிப்பிடத்தக்க கலைஞர் நாசர்.

'இன்றைய சினிமா மொழி மற்றும் பண்பாட்டு போக்குகள் குறித்து நாசருடன் ஓர் உரையாடல்' என்ற பொருளில் மாணவர்களின் சினிமா குறித்த தேடல்களுக்கான விடைகளோடு அவர்களோடு நான்கு மணிநேரம் எந்த விதமான நடிகர் பந்தாவும் இல்லாமல் எளிமையாகவும் இனிமையாகவும் கலந்துரையாடினார்.

ஆய்வு மாணவர்கள் என்பதால் சினிமாவின் எதிர்முகம் குறித்த கேள்விகளும் இடம் பெற்றிருந்தன என்றாலும், அவற்றையெல்லாம் ஒருவிதமான பொறுப்புணர்வோடு ஏற்றுக் கொண்டு சிரித்தபடியே அவர்களைப் பார்த்துக் கேட்கிறார்.

'அந்தச் சினிமாவை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?' மாணவர்கள் மத்தியில் சற்று அமைதி, அப்புறம் தெளிவு... இப்படித் தொடங்கிய உரையாடல் ஒருகட்டத்தில் மிகக் காரசாரமாகவும், விறுவிறுப்பாகவும் மாறியது.

தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என விரிந்த அளவில் பேச்சு சென்றது. தமிழ் சினிமாக்களில் இன்றைய இளைஞர்களின் பங்களிப்புக் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. சிரித்துக் கொண்டே பாடம் நடத்துகிற மாதிரியே பதில் சொல்லுகிறார்... அனுபவத்தின் தெறிப்பு முகத்தில் தெரிய, கேமராவுக்கு வெளியிலான அவரது வாழ்வியல் பதிவுகளும் இடம்பெறுகின்றன.

'சினிமா பற்றி மற்றவர்களுடைய புரிதலை அறிந்து கொள்வதற்காகவும், சினிமாவை உருவாக்குகின்ற ஒரு மையத்தில் இருந்து கொண்டு பார்க்கிற நான், சினிமாவை இன்னொரு கோணத்தில் இருந்து கொண்டு பார்க்கிற விரும்புகிற ரசிக்கிற உங்களுடைய கருத்துகளையும், அணுகுமுறைகளையும் அறிந்து கொள்வதற்காகவே இந்தச் சந்திப்புக்கு நான் ஒத்துக் கொண்டேன்,' என்றார்.

'எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும் நான் ஒரு சினிமாக்காரன் என்பதால் அதை முன்னிறுத்தியே பேச விரும்புகிறேன். அதற்குக் காரணமும் இருக்கிறது. இன்றைக்குச் சினிமாக் குறித்த தவறான புரிதல்கள் பல இருக்கின்றன. அதைக் குறித்த விவாதத்தை விரும்புகிறேன்' என்றும் கூறினார்.

'கோட்பாட்டு ரீதியாக சினிமா வலிமையான ஊடகம் என்றாலும் தமிழ்ச் சமூகத்தில் அத்தகைய வலிமை பயன்படுத்தப்படுகிறதா?' என்ற கேள்வியை அவரே எழுப்பி, உலகம் முழுவதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் சினிமாவைப் பற்றிய பாடம் கண்டிப்பாய் இருக்கிறது. ஏனென்றால் வாழ்வியல் வளர்ச்சிக்குச் சினிமாவின் பங்கு மிக முக்கியமானது என்பதால் அங்கு சினிமா கட்டாயப் பாடமாகவே இருக்கிறது. ஆய்வியல் மாணவர்களுக்கு இன்றைய சமூகத்தின் தேவைக்குச் சினிமாவின் பங்கு குறித்த தெளிவு மிகவும் அவசியம்' என்பதாய் அவர் விளக்கமளித்தார்.

'இந்த அமர்வு சினிமாவைக் குறித்த ஒரு புரிதலாக உங்களுக்கும் எனக்கும் அமையும். நான் ஒன்றும் சினிமாவைக் கரைத்துக் குடித்தவன் அல்லன். உங்களைப் போல நானும் ஒரு மாணவன்தான். சற்று முன்னால் அனுபவப்பட்டு விட்ட மாணவன் என்ற நிலையில்தான் உங்களோடு கலந்துரையாடுகிறேன். நான் நடித்த, நான் ரசித்த சினிமாக்களைக் குறித்து நீங்கள் ரசித்தவற்றோடு சேர்த்து ஒப்பிட்டுப் பேசுவது இன்னும் இனிமையாக இருக்கும்,' என்றார்.
பொதுவான மேடைப் பேச்சுப் போலவோ அல்லது கேமிராவிற்கு முன்னால் நிகழ்த்துகிற நடிப்பைப் போலவோ அல்லாமல் இயல்பாகவும், யதார்த்தமாகவும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த விதம் மாணவர்களை எளிதில் ஈர்த்து அவரோடு ஒட்டி உறவாட வைத்தது என்பது உண்மை.

சினிமா உலகில் தான் கடந்து வந்த பாதைகளை அதே பசுமையோடு அனுபவப் பூர்வமாக மனந்திறந்து மாணவர்களோடு மீள்நினைவு கூர்ந்தார். எங்கோ எட்டாத தூரத்தில் இருக்கிற நட்சத்திரத்தைப் போலத் தெரிகிற சினிமா நடிகர்களைப் பார்க்கிற கிராமத்து ஆய்வு மாணவர்கள் தம்முடைய அத்தனை நாள் கேள்விகளையும் இடைவிடாது தொடுத்துக் கொண்டேயிருந்தனர்.

நான்கு மணிநேரமும் சற்றும் அயர்ந்து விடாமல் நின்று கொண்டே, இடையில் கரும்பலகையில் படம் வரைந்து விளக்கம் சொல்லி சினிமாவைக் கோட்பாட்டு முறையிலேயே கற்றுக் கொடுத்தார்.
பதில்கள் அத்தனையும் அனுபவப் பிழிவு என்பதற்கு ஒரு சான்று.

ஒரு மாணவரின் கேள்வி, 'ஒரு சினிமா என்றால் பலநூறு பேர் கலந்த ஒரு கூட்டுச் செயல்பாடு என்றாலும், உங்களுக்குத்தானே பெருமையெல்லாம் வந்து சேர்கிறது? இது எப்படி?'

சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டுப் பதில் சொல்கிறார். (தனக்குத் தேநீர் கொண்டு வந்த புலத்தின் பணியாளரான ஓர் அம்மாவைக் காட்டி) 'இவர் யார் என்று தெரியுமா' என்று கேட்டார்.

'தெரியும்' என்றார் அந்த மாணவர்.

'அப்படியானால் அவர் பெயர் என்ன?' என்று கேட்டார்.

அந்த மாணவரிடத்தில் மௌனம்...

அப்புறம் தொடர்கிறார்...

'காலையில் வந்தவுடன் யாருக்கு முதலில் வணக்கம் செய்வீர்கள்?'

'பேராசிரியர்களுக்கு' என்றார் அந்த மாணவர்

'ஏன் இந்த அம்மாவுக்கு வணக்கம் செய்யவில்லை'

'நீங்கள் உட்கார்ந்து பாடம் படிப்பதற்கு போதிய சுத்தத்தையும், அழகையும் அதிகாலையில் இங்கு வந்துசெய்து தருபவர் அவர்தான் என்றாலும் நீங்கள் உங்களுக்கு முக்கியமானவர்களுக்குத்தானே வணக்கம் செய்கிறீர்கள்?' என்று அவர் முடிக்கும் முன்பாகவே கைதட்டல் உரத்து ஒலிக்கிறது.

மாணவர்கள் மட்டுமல்லாமல் புலத்தின் பேராசிரியப் பெருமக்களும் தங்களது வினாக்களை எழுப்பினர். எல்லாருடைய கேள்விகளையும் பொறுமையோடு அமைதியாகக் கேட்டு ஒருமுறை உள்ளூறச் சிந்தித்து அவர்களின் கேள்வியின் ஆழம் புரிந்து அதற்கேற்றவாறே பதில் சொன்னார் என்பதைக் கேள்வி கேட்டவர்களின் முகங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வைத்தே அடையாளம் காணலாம்.

இலக்கியம், வரலாறு, பண்பாடு என்பதாகவே விளங்கும் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு சினிமாக் குறித்த இந்தச் சந்திப்பு ஊடகங்கள் குறித்த ஒரு புதிய வாசலைத் திறந்து விட்டது எனலாம்.

புலத்தின் முதன்மையர் எஸ்.ஆரோக்கியநாதன், நாசரின் நெருங்கிய தோழராகவும் கவிஞராகவும் விளங்கும் விரிவுரையாளர் பா.இரவிக்குமார் உள்ளிட்ட பேராசிரியப் பெருமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதிக மகிழ்ச்சி மாணவர்களின் முகத்திலேதான்... மதிய உணவு வேளை கடந்த பின்னும் 'இன்னும் கேளுங்கள்' என்பதாய்த் தன்னை நோக்கி வரும் கேள்விக் கணைகளுக்காய்க் காத்துக் கொண்டிருந்தார் நாசர்.

இன்னொரு சமயம் வாய்க்காமலா போய்விடும்? என்பதாய் அவர் விடைபெறும்போதில் 'அதே சித்தப்பா ஊருக்குப் போகும்போது சின்னக் குழந்தைகள் முகத்தில் ஓர் ஏக்கமும் வருத்தமும் தோன்றுமே' அதுபோலவே ஒரு பிரிவுணர்ச்சி மாணவர்களின் முகத்தில் தென்பட்டது. முறையாக எல்லோரிடமும் விடைசொல்லிப் புறப்பட்டபோது நாசருடைய முகத்திலும் அது தென்பட்டது இயல்பாக இருந்தது.

தாங்க்ஸ் : - அருணன்
http://youthful.vikatan.com/youth/nyouth/nazar_170910.php

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 11:38 pm

நாசர் ஒரு அமைதியான அருமையான நடிகர் அறிஞர்..! நன்றி உதுமான்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 29, 2010 11:40 pm

கலை wrote:நாசர் ஒரு அமைதியான அருமையான நடிகர் அறிஞர்..! நன்றி உதுமான்..!

2010 தில் போட்டோ போடுங்க கலை அண்ணா. 2005 -ல் ரொம்ப நல்ல இருக்கீங்க.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக