புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
60 Posts - 40%
heezulia
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
311 Posts - 50%
heezulia
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
21 Posts - 3%
prajai
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_m10இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை போர் குற்றங்களும் இந்தியஅரசும்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 13, 2010 2:40 pm

கிரவுண்ட் றிப்போர்ட்என்ற இணையத் தளத்தில் விசுப்ரமணியம் என்ற
பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின்தமிழாக்கம்
*
http://www.groundreport.com/World/DELHI-MORE-ALARMED-THAN-COLOMBO-OVE...
*

*”கிரவுண்ட் றிப்போர்ட்”என்ற இணையத் தளத்தில் விசுப்ரமணியம் என்ற
பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின்தமிழாக்கம்*
*மு*ள்ளிவாய்க்கால் படுகொலையில் புதுடில்லியின் தென்தொகுதியின் (South Block) ஈடுபாடு தொடர்பான விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. இங்கு தென்தொகுதி என்பது வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றையே குறிக்கிறது.
தற்போது காத்திரமான போர்க் குற்ற ஆதாரங்கள் வெளிவருவதானது புதுடில்லிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கு எதிரான அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முனைப்புகளை தடுத்து நிறுத்திய சோனியாவின் அதிகாரம் பெற்ற புதுடில்லி முகவரது செயற்பாடுகளை இந்த ஆதாரங்கள் சீர்குலைத்துவிட்டன. போரின் இறுதிக் கட்டத்தில் நாராயணன், மேனன் போன்ற சோனியாவின் உயர்மட்ட முகவர்களது அறிவுறுத்தல்களுக்கு அமையவே இலங்கை செயற்பட்டிருந்தது.
எனினும் தற்போது “றோ” தன்னிடம் உள்ள போர்க்குற்ற ஆதாரங்களைக் காட்டி இலங்கையை மிரட்டுவதுதான் கோத்தபாய புதுடில்லி மீது சீற்றம் கொள்வதற்கான காரணம். தமிழினப் படுகொலை இடம்பெற்றதைக் காட்டும் வானிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் (ஆதாரங்கள்) “றோ” வசம் இருக்கின்றன.
போரின் இறுதி நாள்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் செறிந்திருந்தனர். அதேவேளையில், மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை “றோ” இலங்கைப் படைகளுக்குச் சரியாக இனங்காட்டியிருந்தது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் போரற்ற பகுதி என்று இராணுவம் அறிவித்த இடங்களில் மக்கள் செறிந்திருந்த பகுதிக்குள் இறுதி வலிந்த தாக்குதலை மேற்கொள்ளும் திட்டத்தை முன்னெடுக் குமாறு எம்.கே.நாராயணனும் சிவ் சங்கர் மேனனும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு அறிவுறுத்தியிருந்தனர். பொன்சேகா தரும் தகவலின்படி, பொதுமக்கள் இழப்புக்களைக் குறைக்கும் வகையில் ஓகஸ்ட் மாதம் அளவிலேயே இறுதி வலிந்த தாக்குதலை நடத்துவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையினை இல்லாது செய்யவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் செயற்பட்ட சோனியாவின் அதிகாரம்பெற்ற முகவர்களான நாராயணனும் மேனனும், காலம் கடத்துமிடத்து அமெரிக்கா விடுதலைப் புலிகளின் தலைமையினையும் பொதுமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு வழிசெய்துவிடும் என்று அஞ்சினர். இதன் விளைவுதான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலை. தமிழ் ஆயுதக்குழுக்களை முற்றாக இல்லாதுசெய்வதற்கான கொழும்பினதும் புதுடில்லியினதும் கூட்டிணைந்த முயற்சிதான் இது. இதன்போது ஏற்பட்ட பெரும்எண்ணிக்கையான பொதுமக்கள் இழப்பை ஏற்றுக் கொள்ளக்கூடிய “தவிர்க்கமுடியாத” இழப்புகள் என இரு அரசுகளும் வகைப்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் நடைபெற்ற படுகொலைக்கான தனிப்பொறுப்பினை கோத்தபாய மேல் மட்டும் சுமத்த முடியாது. சோனியாவின் அதிகாரம் பெற்ற முகவர்களின் மறைமுகமான கையாளாகவே கோத்தபாய அப்போது செயற்பட்டிருக்கிறார்.
போரின் இறுதி நாள்களில் இடம்பெற்ற படுகொலையினை உறுதிப்படுத்தும் வீடியோ ஆதாரங்கள் (வானில் இருந்து செய்மதிகள் மூலம் எடுக்கப்பட்டவை) தன்னிடமிருப்பதாகக் கூறிய புதுடில்லி, போரில் அளவுக்கதிகமான பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டதற்கு இலங்கைதான் முழுப்பொறுப்பு என குற்றம் சுமத்தியது. அதைத் தொடர்ந்தே இனப்படுகொலை தொடர்பான விவரங்கள் வேகமாக வெளிவந்தன.
புதுடில்லியின் இந்தக் குற்றச்சாட்டினையடுத்து கொழும்பு வேகமாகவும் துணிவுடனும் செயற்பட்டது. இறுதியில், போர்க் குற்றங்கள் தொடர்பாக”முழுமையாக மௌனம் காக்கவேண்டும்”என்ற கொழும்பினது கோரிக்கைக்கு வளைந்து கொடுக்கவேண்டிய நிலைக்குப் புதுடில்லி தள்ளப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் இலங்கைக்கு வெற்றியினைப் பெற்றுக்கொடுத்த சிறிலங்காப் படைப்பிரிவும் இந்தியாவின் இரகசியப் படைப்பிரிவும் இணைந்து முன்னெடுத்த வலிந்த தாக்குதல் தொடர்பான மிகவும் முக்கியமான வான்வழிப் புலனாய்வுத் தகவல்களைப் பெறுமாறு புதுடில்லியின் தென்தொகுதி அதிகாரிகளே “றோ”வினைக் கோரியிருந்தனர்.
இதனால் போர் உக்கிரமாக நடைபெற்ற போது ஏற்பட்ட உண்மையான இழப்புக்களை உறுப்படுத்தும் வான்வழியே எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை எடுக்கும் அருமையான வாய்ப்பு “றோ”வுக்குக் கிடைத்தது.
தமிழ் ஆயுதக் குழுக்களின் மறைவுக்குப் பின்னானதொரு சூழலில் கொழும்பு மீது காத்திரமான அழுத்தினைப் பிரயோகித்து அதனை அடிபணிய வைப்பதற்கான ஓர் ஆயுதமாகவே புதுடில்லியும் “றோ”வும் போர்க்குற்ற ஆதாரங்களைப் பார்த்தன. ஆனால், கொழும்பு இதுபோன்ற அழுத்தங்களுக்கு அடிபணியாது நேரெதிர் மாறான நிலைப்பாட்டினை எடுத்துச் செயற்பட்டது.
புதுடில்லியின் இந்தக் குற்றச்சாட்டினால் கோபமடைந்த கோத்தபாய, கொழும்பு போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொள்ள நேர்ந்தால் அதற்கு புதுடில்லியின் தென்தொகுதியும் உடந்தையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்தான் பாதுகாத்த சோனியாவின் அதிகாரம் பெற்ற ஆள்களுடனான தொடர்பாடல் பதிவுகளைக் கையிலெடுத்தார். இது டில்லியின் வாயை முழுமையாக அடைத்தது.
இதனால் குழப்பமடைந்த புதுடில்லி துரிதமாகவும் நிதானமாகவும் செயற்பட்டது. மே 2009இல் ஐ.நாவினது மனித உரிமைச் சபையில் இலங்கை மீது குற்றஞ்சாட்டிக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. இவ்வாறு, போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக சில மேற்கு நாடுகள் மேற்கொண்ட முயற்சியை முறியடித்ததன் மூலம் கொழும்பினைச் சாந்தப்படுத்தியது. நீண்டபல ஆண்டுகளுக்கு இந்தியாவினைத் தனது சொற்படி ஒழுகவைக்கக்கூடிய இந்தப் பிடியினை கொழும்பு தற்போதும் அழுத்தமாகக் கொண்டிருக்கிறது.
தனது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையினையும் தமிழர்களை மேலும் மேலும் அந்நியப்படுத்தும் வகையிலான அரசியல் செயற்பாடுகளையும் இலங்கை தொடர்ந்தும் மூர்க்கமுடன் முன்னெடுக்கின்ற போதும் இதுவிடயம் தொடர்பில் புதுடில்லி மௌனம் காக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதே உண்மை நிலை. இந்தியா மௌனம் காப்பது தொடர்பில் தமிழ்நாடு கோபாவேசத்துடன் செயற்படுகின்ற போதும் புதுடில்லியால் எதுவுமே செய்யமுடியவில்லை; முடியாது என்பதுதான் யதார்த்தம். இப்போது, ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இருக்கிறது இந்தியா. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டிற்குத் தமிழ்நாட்டு அரசும் தனது ஆதரவினையும் வழங்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதற்கான அனைத்துவித முனைப்புக்களிலும் ஈடுபடுவதற்கு புதுடில்லி ஒருபோதும் தயங்கவில்லை. இதன் அடிப்படையிலேயே “ஸ்பெக்டராம்” (அலைக்கற்றைகளை ஒதுக்கும் முறைமை) ஊழல் விவகாரத்தின் மூலம் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரைக் கெடுப்பதற்கு புதுடில்லி திரைமறைவு முயற்சிகளை எடுத்திருந்தது.
இலங்கை அரசானது தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலையினை முழு வேகத்துடன் முன்னெடுத்தபோதும், வடக்கு கிழக்கினைத் தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தி மேலும் பல தமிழர்களை இடம்பெயர வைக்கின்றபோதும், கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியிலும் நாட்டினது வடக்குகிழக்குப் பகுதிகளில் இன ரீதியிலான குடிப்பரம்பலை மாற்றும் முனைப்புக்களை மஹிந்த அரசு மேற்கொண்டு வருகின்ற போதும் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காத்து வருகிறது. இதற்கெல்லாம் இலங்கை அரசு தன்னிடம் வைத்திருக்கும் இந்தியா தொடர்பான பலமான பிடிதான் காரணம்.
இலங்கை மேற்கொண்ட, மேற்கொள்ளும் இனக்கொலையில் புதுடில்லியும் பங்கெடுத்திருக்கிறது. இடம்பெற்ற போர்க் குற்றங்கள் சுதந்திரமாக விசாரிக்கப்படவேண்டும் என அனைத்துலக சமூகம் வலியுறுத்திவரும் நிலையில் இதுபோன்றதொரு பாரதூரமான குற்றச்செயலுக்கு டில்லியும் துணைபோயிருப்பது அனைத்துலக அளவில் இந்தியாவின் ஒழுக்கத்தினை மேம்படுத்துவதற்கு ஒருபோதும் உதவாது. எல்லாவற்றுக்கும் மேலாகப் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் ஒரு நாட்டுக்கு முண்டு கொடுத்து நிற்பதும் குறிப்பிட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை வெளிப்படுத்த மறுப்பதும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தினைப் பெறும் இந்தியாவின் முயற்சியினைப் பாழாக்கிவிடும்.
இது குற்றவியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஒப்பானது. தற்போதும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளின் செயற்பாட்டுக்கும் இந்தியாவின் இதுபோன்ற நடவடிக்கைக்கும் வித்தியாசம் ஏதும் கிடையாது. இவ்வாறாக இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் புதுடில்லி வேண்டுமென்றே மௌனம் சாதிப்பதானது, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் யாரோ அவர்கள் மீது இந்தியா வெளிப்படையாகக் குற்றம் சுமத்தவேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறும் அளவிற்கு நிலைமைகளைக் கொண்டு சென்றுள்ளது.
மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான போரைத் தான் முன்னெடுக்கப் போவதாக அண்மையில் இலங்கை வெளிப்படையாகவே அறிவித்திருப்பதானது தொடர்புடைய நாடுகளில் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழர்கள் அதிகம் வாழும் புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசு தனது புலனாய்வாளர்களை நிறுத்தியிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் வாழும் இந்தத் தமிழர்கள் தங்களது உறவுகளைப் பார்ப்பதற்காக இலங்கைக்குப் பயணம் செய்யும்போது திரட்டப்பட்ட புலனாய்வுத் தகவல்களுக்கு ஏற்ப அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுத்து வருகிறது. இலங்கைக்குப் பயணம் செய்யும் தமிழர்கள் பலர் காணாமற்போயிருக்கின்றனர்; கட்டாயக் கைதுக்கும் உட்பட்டிருக்கிறார்கள். அரசின் முழுமையான ஆதரவுடன் செயற்படும் வெள்ளைவான் கும்பல்களே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்களை வெளிப்படுத்தும் முனைப்புக்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பான சட்டச் செயற்பாடுகளிலும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் இலங்கை அரசிற்கு எதிரான போர்க் குற்றப் பரப்புரைகள் அனைத்துலகின் ஆதரவினை இப்போது பெற்று வருகிறது. இனக்கொலையினை முன்னெடுத்த தரப்புகள் எவையோ அவற்றுக்கெதிரான சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கக்கூடிய அனைத்துலக அளவிலான கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதன் ஊடாகக் குற்றவாளிகள் யாரோ அவர்களைக் கைதுசெய்வதற்கான வாய்ப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாகவே நம்பப்படுகிறது.

*
http://www.groundreport.com/World/DELHI-MORE-ALARMED-THAN-COLOMBO-OVE...
*

போர் குற்றங்கள் பற்றிய மென் புத்தகம்


தரவிறக்குங்கள்

இந்த புத்தகத்தினை அனைத்து தமிழ் மக்களுக்கும் சென்றடைய செயுங்கள்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 13, 2010 2:49 pm

நன்றி ...

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 13, 2010 3:03 pm

http://www.uktamilnews.com/index.php/2009/09/23/we-heped-the-sri-lankan-government-to-kill-the-tamils-now-we-want-to-help-their-relatives/

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 13, 2010 3:12 pm

இந்த தகவல்கள் நிறைய மக்களை சென்றடைய வேண்டும் சகோதரா

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 13, 2010 3:18 pm

maniajith007 wrote:இந்த தகவல்கள் நிறைய மக்களை சென்றடைய வேண்டும் சகோதரா


http://genocidesrilanka.blogspot.com/2010/12/india-more-alarmed-than-srilanka-over.html

என்னால் தனி பதிவு இட முடியாது இல்லை என்றால் முன்பே பதிந்து இருப்பேன் ... ....நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக