புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
1 Post - 1%
bala_t
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
1 Post - 1%
prajai
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
293 Posts - 42%
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
6 Posts - 1%
prajai
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
4 Posts - 1%
manikavi
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகுடபதி - அமரர் கல்கி


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:24 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
மகுடபதி - அமரர் கல்கி




முதல் அத்தியாயம் - திறந்த வீடு

அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது.

கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் 'ஜே ஜே' என்ற ஜனக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன.

வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை.

பெரிய வீதிகளில் ஜன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது?

இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை - வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வருஷம், 1931; மாதம், ஜனவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?

1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார்.

மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள்.

அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது.

ஆனால், 1929-ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆகவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:57 am

இவ்வாறு இரண்டு கவுண்டர்களும் நெடு நேரம் பேசிக் கொண்டதிலிருந்து, பெரியண்ணன் தெரிந்து கொள்ள விரும்பிய முக்கிய விஷயங்கள் அவனுக்குத் தெரியவந்தன.

செந்திருவைக் கூனூருக்குப் பக்கத்தில் தேவகிரியில் வைத்திருக்கிறார்கள். அவள் கவுண்டருடன் கல்யாணத்தைத் தடுப்பதற்காகப் பைத்தியம் கொண்டவள் போல் நடிக்கிறாள். அவள் விஷயத்தில் தான் அன்று கடிதம் கொண்டு போன பெண்ணின் தகப்பனார் சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் - மகுடபதி இவர்களுடைய வலையிலிருந்து தப்பித்துக் கொண்டு போய்விட்டான் - செந்திருவைச் சீக்கிரத்தில் தேவகிரியிலிருந்து வேறு பந்தோபஸ்தான இடத்தில் கொண்டு போய் வைத்து விடும் உத்தேசம் கவுண்டர்களுக்கு இருக்கிறது - ஆகிய இந்த விவரங்களையெல்லாம் பெரியண்ணன் திரும்பத் திரும்ப ஆயிரம் தரம் சிந்தனை செய்தான். செந்திருவைக் கார்க்கோடக் கவுண்டரிடமிருந்து காப்பாற்ற வேண்டுமானால் அவன் இனிமேல் அங்கே படுத்திருக்கக் கூடாது. உடனே தப்பித்து வெளிக் கிளம்ப வேண்டியதுதான். அதற்கு என்ன வழி என்று யோசிக்கலானான்.

மறுநாள் சாயங்காலம் அந்த வழி அவனுக்குத் தென்பட்டது. அந்த வழியை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்து உதவியது, கள்ளிப்பட்டிக் கவுண்டரின் கள்ளுக்கடைதான்! அன்று காலையில் கவுண்டர்கள் காரில் கிளம்பிப் போய்விட்டார்கள். மருதக் கவுண்டன் மட்டுந்தான் ஆபீஸ் பங்களாவுக்குக் காவலாயிருந்தான். சாயங்காலம் அவன் கள்ளுக்கடைக்குப் போய் நன்றாய்ப் போட்டுவிட்டுக் கையில் ஒரு புட்டியிலும் கள் வாங்கிக் கொண்டு வந்தான். தள்ளாடிக் கொண்டே பெரியண்ணன் அருகில் நின்று, "ஏன் பாட்டா! நீ கள்ளுக் குடிக்கக் கூடாதென்று ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்தாயாமே, அது நெசமா? இந்தா! இதோ உனக்கு ஒரு புட்டி வாங்கியாந்திருக்கிறேன். சாப்பிடாமற் போனாயோ விடமாட்டேன், வாயிலே விட்டு விடுவேன்!" என்றான். பெரியண்ணனுக்கு ரௌத்திரகாரமான கோபம் வந்தது. எழுந்திருந்து அந்தக் கள்ளுப் புட்டியைப் பிடுங்கி மருதக் கவுண்டன் தலையிலேயே போட்டு உடைக்க வேண்டுமென்று தோன்றிற்று. இன்னும் ஒரு தடவை மருதக் கவுண்டன் கள்ளுப் புட்டியை அவன் வாய்க்கு அருகில் கொண்டு வந்திருந்தால் அவ்விதமே செய்திருப்பான். ஆனால், மருதக் கவுண்டன் அவ்வளவுக்கு வைத்துக் கொள்ளவில்லை. "வேணுமா, வேண்டாமா, சொல்லிப்பிடு! வேண்டாமே? இவ்வளவு தானே? வேண்டாத போனால் போ! அப்புறம் 'சுவத்துக் கீரையை வழிச்சுப் போடடி சொரணைகெட்ட வெள்ளாட்டி' என்னாதே? மாட்டாயே? சரி; ரொம்ப சரி!" என்று சொல்லிக் கொண்டே புட்டியைத் தன் வாயிலேயே கவிழ்த்துக் கொண்டு அவ்வளவையும் குடித்துத் தீர்த்தான். சற்று நேரத்திற்கெல்லாம் அவன் தலை சுற்றியது. ஏதோ உளறிக் கொண்டே இரண்டு ஆட்டம் ஆடி விட்டுக் கீழே விழுந்து பிணம் போலானான்.

இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதென்று பெரியண்ணன் மெதுவாக அங்கிருந்து கிளம்பி வெளியில் வந்தான். அவன் அந்தக் கட்டிடத்தில் இருப்பதே ஒருவருக்கும் தெரியாது. ஆகையால், அவன் போவதை யாரும் தடை செய்யவில்லை. இராஜாங்கமாகக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்து கோயமுத்தூர்ச் சாலையை அடைந்து அங்கு ஒரு போக்கு வண்டியில் ஏறிக் கொண்டான். வண்டியில் போகும் போதே, என்ன செய்ய வேண்டுமென்பதை ஒருவாறு தீர்மானித்துக் கொண்டான். முதலில், கோயமுத்தூரில் அந்தப் பெண்ணின் தகப்பனார் வீட்டுக்குப் போய் அவரிடம் எல்லா விஷயங்களையும் சொல்லவேண்டும். அவருடைய உதவியைக் கொண்டு செந்திருவைக் கவுண்டர்களிடமிருந்து விடுதலை செய்ய வேண்டும். பிறகு, மகுடபதியைத் தேட வேண்டும்.

இவ்விதச் சிந்தனையுடன் பெரியண்ணன், கோயமுத்தூரை அடைந்தபோது இரவு வெகு நேரமாகிவிட்டது. ஆனாலும், இரவுக்கிரவே காரியத்தை முடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினால் அவன் தட்டுத் தடுமாறி வழி கண்டுபிடித்துக் கொண்டு அய்யாசாமி முதலியாரின் பங்களாவை அடைந்தான். வாசல் கேட்டுத் திறந்திருக்கவே உள்ளேயும் நுழைந்தான். அப்போதுதான் கொடி வீட்டில் பேச்சுக் குரல் கேட்டது. மகுடபதியின் குரல் மாதிரியும் இருந்தது. மரத்தின் மறைவில் நின்று, சற்று நேரம் கேட்டான். நிலைமை ஒருவாறு புரிந்தது. பங்கஜம் உள்ளே பணம் எடுக்கப் போனபோது சட்டென்று கேட்டுக்கு வெளியே வந்து நின்று, மகுடபதிக்காகக் காத்திருந்தான்.

மேற்கூறிய விவரங்களையெல்லாம் கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு மகுடபதி கேட்டான். தன்னுடைய கதையையும் பெரியண்ணனுக்குச் சொன்னான். கோயமுத்தூரில் தங்குவதற்குப் பத்திரமான இடம் ரயில் ஸ்டேஷன் தான் என்று தீர்மானித்து, அவர்கள் நேரே ஒரு வண்டி பிடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள்.

மறுநாள் காலையில் புறப்படும் ரயிலில் கூனூருக்குப் போய் எப்படியாவது செந்திருவைக் கண்டுபிடித்து விடுதலை செய்வது என்று அவர்கள் பேசி முடிவு செய்தார்கள்.

"தம்பி! கூனூர் நம் இருவருக்கும் புதிதாயிற்றே. அங்கே நமக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லையே! எங்கே தங்குவோம்? எப்படிக் கவுண்டர் பங்களாவைக் கண்டுபிடிப்போம்? யார் நமக்கு உதவி செய்வார்கள்?" என்று பெரியண்ணன் விசாரத்துடன் கேட்டான்.

"பாட்டா! நீ கவலைப்படாதே கூனூரில் சுவாமியார் ஒருவர் இருக்கிறார். சச்சிதானந்த மடம் என்று ஒரு மடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரை எனக்கு நன்றாய்த் தெரியும். பல தடவை அவரை நான் மத உபந்நியாசத்துக்காக அழைத்து வந்திருக்கிறேன். அவரைப் போய்ப் பிடிப்போம். அநியாயம், அக்கிராமம் என்றால் அவருக்கு ஆகாது. இந்த விஷயத்தில் நமக்குக் கட்டாயம் உதவி செய்வார்" என்றான் மகுடபதி.

அதே சமயத்தில், மேற்படி சுவாமியார் மண்டையில் கல் விழுந்த காயத்துக்குக் கட்டுப் போட்டுக்கொண்டு வலியினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:58 am

இருபத்திரண்டாம் அத்தியாயம் - சுவாமி மகானந்தர்

மகுடபதியும் பெரியண்ணனும் மறுநாள் மத்தியானம் கூனூரில் உள்ள சச்சிதானந்த மடத்தை எவ்வித இடையூறுமில்லாமல் போய் அடைந்தார்கள். மடத்தின் தலைவர் சுவாமி மகானந்தர், தலையில் கட்டுடன் படுத்திருப்பதைக் கண்டதும் மகுடபதி திடுக்கிட்டான். அவரிடம் மகுடபதிக்கு விசேஷ பக்தி உண்டு. சுவாமியாருக்கும் மகுடபதியிடம் அதிகப் பிரேமை அவனை அரசியல் தொண்டை விட்டு விட்டுத் தம்முடன் சேர்ந்து பாரமார்த்திகத் தொண்டு செய்ய வரும்படி சுவாமியார் சில சமயம் அழைத்ததுண்டு. மகுடபதி அதற்கு இணங்காமலிருந்ததற்கு முக்கிய காரணம் அவனுடைய இருதய அந்தரங்கத்தில் குடிகொண்டிருந்த செந்திருவின் நினைவுதான் என்று சொல்லலாம். அரசியல் கிளர்ச்சியில் அவனுக்கிருந்த ஆர்வமும் ஒரு காரணந்தான். சமீபத்தில் ஒரு வருஷ காலமாக அவன் கூனூர் மடத்துக்கு வரவேயில்லை. தான் அரசியலில் ஈடுபட்டவனாதலால், மடத்துக்குத் தன் மூலமாய்ப் போலீஸ் தொந்தரவு ஏற்படக்கூடாதென்று அவன் கருதியிருந்தான்.

இப்போது மண்டையில் கட்டுடன் சுவாமியாரைப் பார்த்ததும் அவன் பரபரப்புடன், "சுவாமி! தங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? தங்களிடம் ஒரு உதவி கேட்கலாமென்று எண்ணியல்லவா வந்தேன்?" என்றான்.

"வீணாக ஒருவர் மேல் சந்தேகப்பட்டதால் வந்த விபத்து இது; ஆண்டவனுடைய தண்டனை!" என்றார் சுவாமியார்.

"தாங்களாவது ஒருவர் மேல் வீணாகச் சந்தேகப்படவாவது? ஆண்டவன் தண்டனையாவது? ஒன்றையும் நம்பமுடியவில்லை!" என்றான் மகுடபதி.

"கார்க்கோடக் கவுண்டரைப் பற்றிக் கேட்டிருக்கிறாயோ, இல்லையோ?" என்று சுவாமியார் சொன்னதும், மகுடபதிக்கு எவ்வளவு வியப்பாயிருந்திருக்குமென்று சொல்லவே வேண்டியதில்லை.

"ஆமாம்; அவருக்கு என்ன? சுவாமி! ஒருவேளை..." என்று மகுடபதி திடுக்கிட்டுக் கேட்டான்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் என்னை அடித்துப் போட்டார் என்று பயப்படுகிறாயா? மனுஷன் செய்யக் கூடியவன் தான். ஆனால் அதற்கு முன்னாலேயே சுவாமி என்னைத் தண்டித்துவிட்டார்."

"என்ன சுவாமி! திருப்பித் திருப்பித் தண்டனை என்கிறீர்களே?"

"சொல்கிறேன். இந்த ஊருக்குக் கொஞ்ச தூரத்தில் கார்க்கோடக் கவுண்டருக்கு ஒரு எஸ்டேட் இருக்கிறது. தேவகிரி என்று பெயர். அங்கே ஒரு பங்களாவும் இருக்கிறது. அந்த பங்களாவைப் பற்றி என்னவெல்லாமோ கெட்ட பெயர் உண்டு. கவுண்டருடைய விரோதிகளை அங்கே கொண்டுவந்து தீர்த்து விடுகிறார் என்று வதந்தி. ஆறு மாதத்துக்கு முன்பு யாரோ ஒரு பணக்காரப் பையனை அங்கே கொண்டு வந்து ஜெயிலிலே வைக்கிறாப்போல் வைத்திருந்து பதினாயிரம் ரூபாய்க்கு நோட்டு எழுதி வைத்துக் கொண்டு தான் விட்டாராம். இன்னும் அங்கே அனாதைப் பெண்களைக் கொண்டு வந்து சிறைப்படுத்தி வைத்து அட்டூழியங்கள் செய்வது பற்றியும் கர்ணகடூரமான விவரங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்... இருக்கட்டும், தம்பி! உன்னைப் பார்த்தால் ஒரு மாதம் பட்டினி கிடந்தவன் மாதிரி இருக்கிறது. ஏன் இப்படி? முதலில் கொஞ்சம் பிரசாதம் எடுத்துக் கொண்டு இளைப்பாருங்கள். அப்புறம்..."

மகுடபதிக்கு உண்மையில் பசியாகத்தானிருந்தது. சச்சிதானந்த மடத்தில் பிரசாதங்கள் பிரம்மானந்தமாயிருக்குமென்றும் அவனுக்குத் தெரியும். ஏனெனில் மகானந்த சுவாமியார் பட்டினி போட்டு உடலை வருத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவரல்ல; நன்றாகச் சாப்பிட்டு, தேகாப்பியாசம் செய்து, திடசரீரம் பெற்றிருந்தால்தான் எந்த விதமான தொண்டும் சரியாகச் செய்யலாம் என்ற கொள்கையுடையவர். ஆகவே, சாதாரண நிலைமையில் "ஆமாம், முதலில் பிரசாதத்தைக் கவனிக்கலாம். இன்றைக்கு என்ன பிரசாதம்? சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் ஏதாவது உண்டா?" என்று மகுடபதி கேட்டிருப்பான். ஆனால் இப்போது, சுவாமியார் சொல்ல ஆரம்பித்திருந்த விவரம் அவனுக்கு அசாத்தியமான ஆவலை உண்டாக்கியிருந்தது. அதுவும் பெண்களைப் பற்றிய அட்டூழியங்கள் என்று சுவாமியார் குறிப்பிட்டவுடன், மகுடபதியின் உடம்பில் உள்ள இரத்தம் கொதிக்க ஆரம்பித்துத் தேகமெல்லாம் தகதகவென்று எரிந்தது. இந்த நினைவில் அவனுடைய மனம் பிரசாதத்தில் செல்ல முடியாதல்லவா?

"சுவாமி! பிரசாதமெல்லாம் இருக்கட்டும். எங்களுக்குப் பசியேயில்லை. ஆரம்பித்த விஷயத்தைச் சொல்லுங்கள்" என்றான்.

அதன்மேல் சுவாமியார் சொன்னதாவது:



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:59 am

"தேவகிரியை அடுத்துள்ள கிராமத்தில் தினம் சாயங்கால வேளையில் வயதானவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தி வருகிறேன். ஒரு மாதமாக நடக்கிறது. அந்தக் கிராமத்துக்குக் குறுக்கு வழி, தேவகிரி பங்களாவின் ஓரமாகப் போகிறது. தினமும் அந்த வழியாக ஒரு மாதமாய் நான் போய்க் கொண்டு வருகிறேன். பங்களாவுக்குச் சமீபமாய் நான் போகும் போதெல்லாம் அதைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கும் விஷயங்கள் என் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. ஏழெட்டுத் தினங்களுக்கு முன்னால் ஒரு நாள் அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் பரிதாபமான அழுகுரலைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனேன். ஆனாலும் நமக்கேன் இந்தத் தொல்லை என்று எண்ணியவனாய் மடத்துக்குத் திரும்பி வந்துவிட்டேன். ஆனால் அன்று இராத்திரியெல்லாம், அந்தப் பெண்ணின் தீனமான அழுகுரல் என் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது; மனதை வேதனை செய்து கொண்டே இருந்தது. இம்மாதிரி விவகாரங்களில் தலையிட்டால் நான் இங்கே எடுத்துக்கொண்டிருக்கும் தொண்டுகள் எல்லாம் தடைப்பட்டு விடுமென்பதை நினைத்தும், 'பரதர்மோ பயாநக!' என்ற பகவத்கீதை வாக்கியத்தை நினைத்தும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, என் வேலைகளில் கவனம் செலுத்தினேன். மறுநாள் அந்தப் பக்கம் போனபோது, என்னையறியாமலே, அழுகுரல் இன்றைக்கும் கேட்கிறதா என்று செவிகள் கூர்மையாகக் கவனித்தன. ஒன்றும் கேட்கவில்லை. மனம் சற்று நிம்மதியடைந்தது.

இரண்டு நாளைக்குப் பிறகு, பங்களாவின் முன் தோட்டத்தில் ஒரு பெண் உலாவிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். மறுபடியும் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. இவள் இங்கே இஷ்டப்பட்டு வந்திருக்கிறாளா, பலாத்காரமாகக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்களோ, என்ன நோக்கத்துடன் சிறைப்படுத்தியிருக்கிறார்கள், முதல் நாள் ஏன் இவள் அழுதாள் என்றெல்லாம் மனதிற்குள் கேள்விகள் எழுந்து கொண்டேயிருந்தான். இதையெல்லாம் யாரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது? கார்க்கோடக் கவுண்டர் அங்கே இல்லை. இருந்தாலும் அவரை எனக்கு முன்பின் தெரியாது. ரொம்பப் பொல்லாத மனுஷன் அக்கிரமக்காரன் என்று கேள்விப்பட்டிருந்ததுதான்! மற்றபடி, பங்களாத் தோட்டக்காரன் ஒருவன் காணப்பட்டான். அவனைப் பார்க்கவே பயங்கரமாயிருந்தது. யமகிங்கரனைப் போல் இருந்தான். அவனிடம் எப்படி என்ன கேட்பது? கேட்டால், நிச்சயமாக அவன் சண்டைக்கு வருவானே தவிர, சரியான பதில் சொல்லப்போவதில்லை...

இப்படியே இன்னும் இரண்டு நாள் போயிற்று. முந்தாநாள் நான் அந்தப் பக்கமாகப் போன போது பங்களாவுக்குள்ளிருந்து வந்த அலறுங் குரல் மயிர்க்கூச்செறியச் செய்தது. "ஐயோ! பாவி! சண்டாளா! பழிவாங்குகிறேன், பார்!" என்று இப்படியென்னவெல்லாமோ பயங்கரக் கூக்குரல் அழுகையுடன் கலந்து கலந்து வந்தது. இதற்குப் பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. பங்களாத் தோட்டத்தின் வாசல் கேட்டுக்கு அருகில் சென்று தோட்டக்காரனைச் சமிக்ஞை செய்து கூப்பிட்டேன். நான் எதிர்பார்த்தது போலவே அவன் கண்ணில் தீப்பொறி பறக்க வந்தான். 'என்ன?' என்று வள்ளென்று விழுந்தான். 'ஏனப்பா இப்படிக் கோபிக்கறே? யாரோ ஒரு பெண் அலறுதே, என்ன சமாசாரமென்று கேட்கத்தான் வந்தேன். வைத்தியர் கியித்தியர் வேணுமானால் அனுப்புகிறேன்' என்றேன். தோட்டக்காரனும், சற்று சாந்தமடைந்து, 'இதெல்லாம் உங்களுக்கு என்னாத்துக்கு, சாமி! உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க சாமி! அப்படி ஏதாவது கேட்க வேண்டுமானா நாளைக்கிக் கவுண்டர் வராரு. அவரை வந்து கேட்டுக்குங்க!' என்றான். அவனிடம் மேலே பேசுவதில் பயனில்லை என்று என் வழியே போய்விட்டேன். மறுபடியும் அன்றிரவெல்லாம் என் மனம் அமைதி இல்லாமல் தவித்தது.

அடுத்த நாள் பிற்பகலில் நான் மடத்திலிருந்து கிராமத்துக்குக் கிளம்பிக் கொஞ்ச தூரம் போனதும் ஒரு பெரிய மோட்டார் எதிரே வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அதில் நாலைந்து பேர் - பெரிய மனுஷர்கள் - இருப்பது தெரிந்தது. என்னருகில் வந்து மெதுவாக நின்றபோது பெரும் வியப்பு உண்டாயிற்று. வண்டி ஓட்டியின் ஸ்தானத்தில் இருந்தவர் என்னைப் பார்த்து, 'சுவாமி! சௌக்கியமா?' என்று கேட்டார். அவர்தான் கார்க்கோடக் கவுண்டர் என்று என் மனதுக்குத் தெரிந்துவிட்டது. எந்தவிதமான் கொலை பாதகத்துக்கும் அஞ்சாத மனுஷன் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. மனதில் தோன்றிய வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல் 'சௌக்கியந்தான்' என்றேன். 'பங்களாவில் இருக்கும் குழந்தையைப் பற்றி விசாரித்தீர்களாம்' என்றார் கவுண்டர். அப்போது அவருடைய முகத்தில் விஷம் கக்கிய புன்னகை தாண்டவமாடியது.

ஏதோ சண்டைக்குத்தான் ஆரம்பிக்கிறார் என்ற எண்ணத்துடன், நானும் குரலைக் கடுமைப் படுத்திக் கொண்டு, 'ஆமாம், விசாரித்தேன்' என்றேன். 'ரொம்ப சந்தோஷம், சாமி! தங்களைப் போன்ற பரோபகாரிகள் - மகான்கள் இருப்பதனால்தான் இந்த நீலகிரி மலையிலே மழை பெய்கிறது. இல்லாவிட்டால் பெய்யுமா? பங்களாவிலே இருக்கிற பெண் குழந்தைக்குச் சித்தப் பிரமையாயிருக்கிறது - ஆறு மாதமாய் - இப்போது ரொம்பக் கடுமை. குத்து, வெட்டு என்கிற நிலைமைக்கு வந்திருக்கிறது. இவர்கள் யார் தெரியுமோ, இல்லையோ? டிபுடி சூபரிண்டெண்டு சங்கநாதம் பிள்ளைவாள்; ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார்வாள்; இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு வந்து காட்டினேன். பட்டணம் ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்கோ, இல்லாவிட்டால் குற்றாலத்துக்கு அனுப்புங்கோ என்கிறார்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறது, சுவாமி? அல்லது ஏதாவது மந்திரம், தந்திரம் வைத்திருக்கிறீர்களா? நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா?' என்று கேட்டார். கடைசியில் கேட்டது கிருதக்காகச் சொன்ன வார்த்தை என்று தெரிந்துவிட்டது. பைத்திய சிகிச்சையில் எனக்கு அவ்வளவாக அனுபோகமில்லை; மன்னிக்கவேண்டும்' என்று சொல்லிவிட்டு நடந்தேன். மோட்டாரும் கிளம்பிச் சென்றது.

பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது என் மனம் சரியான நிலைமையில் இல்லை. நாலு பேர் முன்னிலையில் அவமானப்பட்டதனால் ஆத்திரமாயிருந்தது. அந்த மனுஷன் சொன்னது முழு நிஜம் இல்லை. ஏதோ பித்தலாட்டம் இருக்கிறது என்று தோன்றியது. அவர் சொன்னதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும் என்றும், பாவம் யாரோ ஓர் ஏழைப் பெண்ணை இங்கே கொண்டு வந்து கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு, பைத்தியம் என்று சொல்லி உலகத்தை ஏமாற்றப் போகிறார் என்றும் நினைத்தேன். இதெல்லாம் எவ்வளவு அநியாயமான எண்ணங்கள் என்பதையும், கார்க்கோடக் கவுண்டருக்கு நான் எவ்வளவு அநீதி செய்து விட்டேனென்பதையும் நினைக்கும் போது ரொம்பவும் வருத்தமாயிருக்கிறது. அவரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலொழிய என் மனம் சாந்தி அடையாது..."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:59 am

இதுவரையில் மிக்க ஆவலுடன் மௌனமாய்க் கேட்டு வந்த மகுடபதி இங்கே குறுக்கிட்டு, "ஐயோ! என்ன வார்த்தை சொல்கிறீர்கள்? கள்ளிப்பட்டிக் கவுண்டரிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதா? எதற்காக? நீங்கள் நினைத்தது தான், சுவாமி உண்மை! அந்தக் கொலை பாதகக் கள்ளுக்கடைக் கண்டிராக்டர்.." என்று உரத்த குரலில் பேசத் தொடங்கினான்

"பொறு, தம்பி! பொறு! பாக்கிக் கதையையும் கேட்டு விட்டல்லவா பேச வேண்டும்? கார்க்கோடக் கவுண்டர் எவ்வளவோ பொல்லாத மனுஷராயிருக்கலாம். எத்தனையோ கொலை பாதகங்களைச் செய்திருக்கலாம். ஆனால், இந்த விஷய்த்தில் அவர் கூறியது உண்மை என்று அரைமணி நேரத்துக்குள் தெரிந்து போயிற்று. மேற்படி பங்களாவை நான் நெருங்கிய போது, அந்தப் பெண் தோட்டத்தில் உலாவிக் கொண்டு நிற்பதைக் கண்டேன். வேலைக்காரனைக் காணவில்லை. கேட்டண்டை போய் அவளைக் கூப்பிட்டுப் பேசி, உண்மையை அறிந்து கொண்டாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. பங்களா தோட்டத்தின் ஓரமாய்க் கீழே போகும் பாதையில் போய்க் கொண்டிருந்த போது, தற்செயலாய் மேலே பார்த்தேன். வேலி ஓரத்தில் சேலைத் தலைப்புத் தெரிந்தது. எதற்காக வேலி ஓரமாய் வந்து நின்றாள் என்று நான் எண்ணி முடிவதற்குள், என் பின்னோடு வந்த பையன் 'சாமி! சாமி!' என்று கத்தினான். அதே சமயத்தில் தலையில் ஒரு கல் விழுந்தது. விழுந்த அதிர்ச்சியில் கண் இருண்டு மயக்கமாய் வந்தது. கீழே உட்கார்ந்து விட்டேன். இரத்தம் பெருகி வழிந்து துணியையெல்லாம் நனைத்தது. அப்போதே கபாலம் திறந்து மோட்சமடையாமல் இன்னும் இந்த உடலில் உயிர் இருப்பது கடவுளுடைய செயல் தான். பாவம் அந்தப் பெண்ணுக்குப் பைத்தியந்தான் என்பது நிச்சயமாயிற்று. கவுண்டரைச் சந்தேகித்ததற்குத் தண்டனை கிடைத்தது!"

மகுடபதியின் ஆகாசக் கோட்டையெல்லாம் இவ்விதம் சிதைந்து போயிற்று. தொண்டை அடைக்க, நாத் தழுதழுக்க, அவன் "சுவாமி! உங்கள் மேல் வேண்டுமென்று அந்தப் பெண் கல்லை எறிந்தாளென்றா சொல்கிறீர்கள்? என்னத்திற்காக?" என்றான்.

"பைத்தியக்காரர்களின் செயலுக்குக் காரணம் இருக்குமோ? என் பின்னோடு 'லைட்' எடுத்துக் கொண்டு வந்த பையன், மேலே அண்ணாந்து பார்த்துக் கொண்டே வந்தானாம்! கல்லைக் குறி பார்த்து என் தலைக்கு நேரே எறிவதைக் கண்ணால் கண்டதாகச் சொல்கிறான். அவன் இப்போது கிராமத்துக்குப் போயிருக்கிறான். நேற்றுக் கிராமத்துக்குப் போகாமலே மடத்துக்குத் திரும்பிவிட்டேன். தலைக் காயம் குணமாகும் வரையில் ஒரு வாரத்துக்குப் பள்ளிக்கூடம் கிடையாது என்று சொல்லிவிட்டு வரும்படி அவனை அனுப்பியிருக்கிறேன்... அதோ அவனே வந்து விட்டான் போலிருக்கிறதே?" என்றார். ஒரு சிறு பையன் மடத்து வாசற்படியண்டை வந்து கொண்டிருந்தான்.

"ஏண்டா, கிருஷ்ணா! அதற்குள்ளே எப்படித் திரும்பினாய்?" என்று சுவாமியார் சிறிது வியப்புடனே கேட்டார்.

"நான் கிராமத்துக்குப் போகவில்லை, சாமி! வழியிலேயே திரும்பிவிட்டேன்" என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணன் சாமியார் அருகில் வந்து, சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தான்.

"சாமி! எஸ்டேட் பங்களாவுக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு செடியில் வெள்ளையாய்த் தெரிந்தது. கிட்டப் போய் பார்த்தேன். இந்தக் கடிதம் கிடந்தது. வாசித்துப் பார்த்ததும் முக்கியமான விஷயம் என்று எண்ணி, கிராமத்துக்குப் போகாமலே திரும்பிவிட்டேன்" என்று சொல்லிக் கடிதத்தையும் சுவாமியார் கையில் கொடுத்தான்.

சுவாமியார் கடிதத்தைப் படித்த போது, அளவுகடந்த ஆச்சரியத்தினால் அவருடைய புருவங்கள் நெரிந்து உயர்ந்தன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:00 am

இருபத்துமூன்றாம் அத்தியாயம் - எதிர்பாராத சந்திப்பு

சுவாமியார் கடிதத்தைப் படித்துவிட்டு மகுடபதியிடம் கொடுத்தார். மகுடபதி படித்தான். கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது:

நான் ஒரு அனாதைப் பெண். இங்கே என்னைப் பலவந்தமாகக் கொண்டுவந்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். எனக்குப் பைத்தியம் இல்லை. இந்தப் பாதகர்களுடைய கொடுமைக்குப் பயந்து பைத்தியம் மாதிரி வேஷம் போட்டு நடிக்கிறேன். என்னை எப்படியாவது நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

இப்படிக்கு,
திக்கற்ற
செந்திரு.

இதைப் படித்தடும் மகுடபதியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. பெரியண்ணன் "என்ன? என்ன?" என்று வற்புறுத்திக் கேட்கவே, அவனுக்கும் வாசித்துக் காட்டினான். பெரியண்ணன் 'ஓ'வென்று அழுது விட்டான்.

சுவாமியார் இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்தார். "மகுடபதி! இதென்ன? உங்களுக்கு இந்தப் பெண்ணைத் தெரியுமா?" என்று கேட்டார்.

"ஆமாம், சுவாமி! அவளைத் தேடிக்கொண்டு தான் நாங்கள் வந்தோம்!" என்றான் மகுடபதி.

பெரியண்ணன் விம்மிக் கொண்டே, "குழந்தை இந்தக் கடிதத்தைக் கல்லில் கட்டிக்கீழே போட்டிருக்கிறது. கடுதாசி பறந்து போய்விட்டது. கல் மாத்திரம் சுவாமியின் தலையில் விழுந்திருக்கிறது" என்றான்.

"அப்படியானால், கடிதத்தில் கண்ட விஷயம் உண்மையென்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று சுவாமியார் இரண்டு பேரையும் பார்த்துக் கேட்டார்.

கொஞ்சம் கொஞ்சமா எல்லா விஷயங்களையும் மகுடபதியும் பெரியண்ணனும் சுவாமியாருக்குச் சொன்னார்கள். சுவாமியார் அளவு கடந்த ஆச்சரியத்துக்கு உள்ளானார் என்று சொல்லவேண்டியதில்லை. அதோடு அவருக்குக் கொஞ்சம் பயமும் உண்டாயிற்று. கார்க்கோடக் கவுண்டரைப் பற்றி அவர் ஏற்கெனவே பராபரியாய்க் கேள்விப்பட்டதுதான். இப்போது அவருடைய கொடுமைகளுக்கு உள்ளானவர்களிடம் நேரிலேயே விஷயங்களைக் கேட்டதும், "அவ்வளவு பொல்லாத மனுஷனுடைய விரோதத்துக்குப் பாத்திரமாகி இந்த ஊரில் மடம் எப்படி நடத்த முடியும். நம்முடைய தொண்டுக்கெல்லாம் விக்கினம் வந்து விடும்போலிருக்கே?" என்று நினைத்தார். அதோடு, காங்கிரஸ் தொண்டனான மகுடபதி இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதனால் அபாயம் அதிகமாயிற்று. சர்க்கார் அதிகாரிகள் கார்க்கோடக் கவுண்டரின் பக்கந்தான் இருப்பார்கள். நம்முடைய பேச்சை நம்பமாட்டார்கள். இவ்வளவுடன் கூட, சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு பெண்; நாமோ சந்நியாசி, பழி சுமத்த எங்கே இடுக்குக் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கும் தூர்த்தர்கள் தங்கள் காரியத்தை ஒருவேளை ஆரம்பிக்கலாம்.

இப்படியெல்லாமிருந்த போதிலும், ஒரு அனாதைப் பெண்ணைப் பாவிகளின் கொடுமையிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியந்தான் என்று சுவாமியார் முடிவு செய்தார். ஆனால் காரியம் கெட்டுப் போகாமலிருக்க வேண்டுமானால், ரொம்பவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியதும் அவசியம். அவசரப்பட்டு ஒன்று கிடக்க ஒன்றைச் செய்து மோசம் போகக் கூடாது.

வெகு நேரம் மகுடபதியுடனும், பெரியண்ணனுடனும் கலந்து யோசித்த பிறகு, சுவாமியார் சொன்னதாவது:

"இந்த விஷயத்தில் நீங்கள் ஒன்றும் பிரவேசிக்க வேண்டாம். நீங்கள் தலையிட்டால் கட்டாயம் காரியம் கெட்டுப் போகும். இன்று ராத்திரி இங்கே தங்கிவிட்டு நாளைக்குக் கோயமுத்தூருக்கோ அல்லது கிராமத்துக்கோ புறப்பட்டுப் போங்கள். உதகமண்டலத்தில் ஒரு பெரிய உத்தியோகஸ்தரை எனக்கு நல்ல பழக்கமுண்டு. நாளையதினம் எனக்கும் கொஞ்சம் உடம்பு சௌகரியமாகிவிடும். நானே நேரில் போய் அவருடன் பேசி எப்படியாவது அந்தப் பெண்ணை விடுதலை செய்யப் பார்க்கிறேன். அதற்கு இந்தக் கடிதமே எனக்குப் போதும். அவசரப்பட்டு ஏதாவது செய்தோமானால் எல்லாம் குட்டிச்சுவராகிவிடும். அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அதன் பொறுப்பு நம்முடைய தலையில் தான் விடியும். கார்க்கோடக் கவுண்டரிடத்திலிருந்து அவளை விடுதலை செய்துவிட்டால், அப்புறம் அவளாச்சு, நீயாச்சு!"

சுவாமியார் கூறியதை மறுத்துக் கூற மகுடபதிக்குத் தைரியம் உண்டாகவில்லை. அவர் கூறுவது தான் நியாயம், புத்திசாலித்தனம் என்றும் அவனுக்குப் பட்டது.

"சரி, சுவாமி! அப்படியே ஆகட்டும்" என்றான்.

"இனிமேலாவது நீங்கள் கொஞ்சம் பிரசாதம் எடுத்துக் கொண்டு சிரமபரிகாரம் செய்து கொள்ளுங்கள். ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்" என்றார் சுவாமியார்.

அவ்விதமே மகுடபதியும் பெரியண்ணனும் சுவாமியாரின் அறையிலிருந்து வெளிவந்து பிரசாதம் சாப்பிட்டார்கள். பிறகு மகுடபதி, கிருஷ்ணன் என்கிற பையனிடம் தேவகிரி எஸ்டேட் பங்களா எங்கே இருக்கிறதென்பதைப் பற்றியும், போகும் வழியைப் பற்றியும் விவரமாக விசாரித்துக் கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம், பெரியண்ணனைப் பார்த்து, "பாட்டா! என்னால் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. நான் போய்க் கொஞ்சம் ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேன், நீ படுத்துக் கொண்டிரு" என்று சொல்லிவிட்டுப் போனான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:01 am

அவன் போன சிறிது நேரத்துக்கெல்லாம் பெரியண்ணன் கிருஷ்ணனிடம் "தம்பி! எனக்கு இங்கே ஒருவரைப் பார்க்க வேண்டும். போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். சுவாமியார் கேட்டால் இரண்டு பேரும் ஊர் சுற்றிப் பார்க்கப் போயிருக்கிறோம் என்று சொல்லிவிடு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

சுவாமியார் சொன்ன யோசனை சரியானது என்று மகுடபதி ஒப்புக் கொண்ட போதிலும், செந்திருவைப் பார்க்காமல் திரும்ப அவன் மனம் ஒப்பவில்லை. உலகத்தைத் துறந்த சுவாமியாருக்கு மகுடபதியின் உள்ளம் செந்திருவைப் பார்க்க எப்படித் துடித்தது என்பது தெரிவதற்கும் நியாயமில்லை. ஆகவே, அவரிடம் சொல்லாமல் எப்படியும் தேவகிரி எஸ்டேட் பங்களாவுக்குப் போய் அவளை ஒரு தடவை கண்ணால் பார்த்துவிட்டாவது திரும்ப வேண்டும் என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். கவுண்டர்கள் நேற்றுத்தான் வந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். ஆகையால் இன்று இங்கே இருக்கமாட்டார்கள். பங்களாவுக்கு வெளித்தோட்டத்தில் அவள் வந்து உலாவுகிறாள் என்றும் தெரிகிறது. ஆகவே, அவளைப் பார்ப்பது சாத்தியந்தான். "பயப்படாதே! நான் இருக்கிறேன்" என்று இரண்டு வார்த்தை சொல்லுவதுகூடச் சாத்தியமாகலாம். ஏன் முடியாது? இந்த நோக்கத்துடன் தான் மகுடபதி இப்போது உதகமண்டலம் போகும் மலைச்சாலையில் போய்க் கொண்டிருந்தான்.

போகும் போது அவன் உள்ளத்தில் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் தோன்றின. செந்திரு உண்மையிலேயே அங்கே இருப்பாளா? நாம் பார்ப்போமா? அவளை விடுதலை செய்வதற்கு சுவாமியாரின் முயற்சியையே நம்பியிருக்க வேண்டியதுதானா? ஆகா! என்ன சமர்த்து அவள்! எப்பொழுதோ தோழியிடம் பேசின ஞாபகத்தை வைத்துக் கொண்டு பைத்தியம் போல் நடிக்கிறாளே? "எல்லாம் உன் பேரில் உள்ள அன்பினால்தானே?" என்று எண்ணிய போது மகுடபதிக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. அத்தகைய அன்புக்குப் பாத்திரமாக நாம் என்ன செய்திருக்கிறோம்? எத்தனையோ நாவல்கள் படித்திருக்கிறோமே? இம்மாதிரிச் சந்தர்ப்பத்தில் உபயோகப்படக்கூடிய யுக்தி ஒன்றும் இப்போது ஞாபகத்திற்கு வரவில்லையே? - தோட்டக்காரனிடம் ஏதாவது சொல்லிச் சிநேகம் செய்து கொண்டு பங்களாவுக்குள் போய் அவனைத் திடீரென்று ஓர் அறையில் தள்ளிப் பூட்டிவிட்டாலென்ன? செந்திருவை அழைத்துக் கொண்டு நேரே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் ரயிலேறிச் சென்னைக்குப் போய் விடலாமா - ஆகா! செந்திருவைப் போல் ஒரு வாழ்க்கைத் துணைவி மட்டுமிருந்தால், எப்படி எப்படியெல்லாம் தேசத் தொண்டும், சமூகத் தொண்டும் செய்யலாம் என்று மகுடபதி மனோ ராஜ்யம் செய்து கொண்டே நடந்தான். இதனால் வழி நடக்கும் களைப்பே அவனுக்குத் தெரியவில்லை. கிருஷ்ணன் சொன்ன அடையாளப்படி, சற்று தூரத்தில் ஒரு மேடான இடத்தில் பங்களா தெரிந்ததுந்தான் அவனுக்கு இப்போதைய நிலைமை ஞாபகம் வந்தது.

பங்களா அருகில் தயங்கித் தயங்கிப் போய் முன்புறத் தோட்டத்தில் செந்திருவைப் பார்க்கும் ஆவலுடன் கண் கொட்டாமல் பார்த்தான். ஆனால், பங்களாவிலோ, தோட்டத்திலோ மனித சஞ்சாரம் இருப்பதாகவே தெரியவில்லை. சற்று நேரம் கழித்து இன்னும் சமீபத்தில் சென்றான். இந்த பங்களாதானா, அல்லது தவறான இடத்துக்கு வந்துவிட்டோ மா என்று அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. தோட்டத்தின் முன் கேட்டுக்கு அருகில் தைரியமாய்ப் போனான். கேட்டின் கதவு திறந்து கிடந்தது. "சரி, இந்த வீடு இல்லை" என்று அவனுக்கு நிச்சயமாயிற்று ஆயினும் உள்ளே போய் யாராவது இருந்தால் அவர்களை விசாரிக்கலாம் என்று போனான். பங்களா முகப்புக்கு அவன் வந்த போது, கதவைத் திறந்து கொண்டு ஒரு மனிதன் வெளியே வந்தான். அவனைப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. முரட்டு மனிதனாகக் காணப்பட்டான். ஒரு வேளை இந்தப் பங்களா தானோ, இவன் தான் அந்த முரட்டுத் தோட்டக்காரனோ என்று தோன்றியது. படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது.

"யார் ஐயா நீ?" என்று அந்த மனிதன் கேட்டதற்கு மகுடபதி சரியான பதில் சொல்லாமல், "இது யார் பங்களா அப்பா? வீட்டில் ஒருவரும் இல்லையோ?" என்றான்.

"ஒருவரும் இல்லாமல் என்ன? உனக்கு யார் வேணும்?" என்று எரிந்து விழுந்தான் அம்மனிதன்.

"வீட்டு எஜமானைப் பார்க்கணும்" என்றான் மகுடபதி, தடுமாற்றத்துடன்.

"உள்ளே இருக்கார், போ!"

இந்த பங்களா இல்லையென்று மகுடபதிக்கு உறுதியாயிற்று இருந்தாலும் இவ்வளவு தூரம் விசாரித்துவிட்டு உள்ளே போகாமல் திரும்பக் கூடாது என்று நினைத்துக் கொண்டே வாசற்படியில் நுழைந்து நடையில் போனான். நடையில் வலது புறத்தில் ஒரு வாசற்படி இருந்தது. அதன் அருகில் அவன் போனதும் வெளி வாசற் கதவு திடீரென்று சாத்திய சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அதே சமயத்தில் அறைக்குள்ளேயிருந்து "வாடா, அப்பா, வா!" என்று ஒரு தெரிந்த குரல் - பயங்கரமான குரல் கேட்டது. மகுடபதி திகிலுடன் அறைக்குள் நோக்கினான். அங்கே, கையில் சுழல் துப்பாக்கியுடன் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர் நின்று கொண்டிருந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:01 am

இருபத்தி நான்காம் அத்தியாயம் - "அண்ணா வந்தார்!"

அன்று காலையில் செந்திரு அளவில்லாத துயரத்தில் ஆழ்ந்தவளாய் உள்ளமும் உடலும் குன்றி உட்கார்ந்திருந்தாள். "இந்த உலகில் ஏன் பிறந்தேன் நான்" என்பதாக அவள் கேட்டிருந்த ஒரு பாட்டின் அடி திரும்பத் திரும்ப அவளுடைய ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது. நாலு வருஷத்துக்கு முன்பு வரையில் அவளுடைய வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்தது என்பதையும், திடீரென்று எப்படித் துன்ப மயமாக மாறிவிட்டதென்பதையும் நினைத்து நினைத்துப் பொருமினாள். "கடவுள் எதற்காக எனக்கு இவ்வளவு கஷ்டத்தையும் கொடுத்தார்? நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்?" என்று அடிக்கடி எண்ணினாள். இவ்வளவு சொந்தத் துயரங்களுக்கிடையேதான் கடிதத்துடன் கட்டிப் போட்ட கல் சுவாமியாரின் தலையில் விழுந்து காயப்படுத்திய விபரீதத்தை நினைத்து நினைத்து வேதனையடைந்தாள். சுவாமியாருக்குப் பெரிய காயம் ஏற்பட்டிருக்குமோ? ஒரு வேளை சாபம் கொடுத்து விடுவாரோ? ஐயோ! தான் ஏற்கெனவே படும் கஷ்டம் எல்லாம் போதாதா? என்ன பைத்தியக்காரத்தனம்? பைத்தியம் மாதிரி நான் நடித்ததல்லவா உண்மையில் பைத்தியக்காரத்தனமாய்ப் போய்விட்டது? இனிமேல் இந்தப் பைத்திய வேஷம் வேண்டாம் என்று அவள் முடிவாகத் தீர்மானித்துக் கொண்டாள். அடுத்த தடவை சித்தப்பா வரும்போது அவரைக் கேட்டுப் பார்க்க வேண்டியது தனக்கு விடுதலை யளிக்கும்படி; அதற்கு அவர் சம்மதிக்காவிட்டால் உயிரை விட்டு விடுவதுதான் சரி. நல்ல வேளையாக இந்த மலைப் பிராந்தியத்தில் உயிரை விடுவது அவ்வளவு கஷ்டமான காரியமல்ல. கிராதி மேல் ஏறி கீழே குதித்தாலும் தீர்ந்தது. இப்படி எண்ணிய போதெல்லாம் காலஞ்சென்ற தந்தையின் நினைவும் அவளுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. "அப்பா! நீ எங்கேயாவது இருக்கிறாயா? உன் அருமை மகள் படும் கஷ்டங்களெல்லாம் உனக்குத் தெரியுமா? இந்தப் பாவிகள் செய்யும் கொடுமைகளையெல்லாம் நீ பார்த்துக் கொண்டு தானிருக்கிறாயா?" என்று அவளுடைய மனம் கதறிற்று.

ஒரு தடவை இன்னொரு எண்ணமும் அவளுக்குத் தோன்றியது: "இந்தக் கஷ்டங்கள் எல்லாம் நாமாக விலைக்கு வாங்கிக் கொண்டதுதானே? எத்தனையோ பெண்கள் வயதானவர்களைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா? கள்ளிப்பட்டிக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தால் இதே பங்களாவில் கைதியாக இருப்பதற்குப் பதிலாக எஜமானியாக இருக்கலாமல்லவா?" என்று நினைத்தாள். அவளுக்குத் தெரிந்த குடும்பங்களுக்குள்ளே வயதானவர்களை - கள்ளிப்பட்டிக் கவுண்டரைவிடக் கிழவர்களை கல்யாணம் செய்து கொண்டவர்களின் ஞாபகமெல்லாம் அவளுக்கு வந்தது. ஆனால், அதே சமயத்தில், மூன்று வருஷத்துக்கு முன் ஒரு நாள் ஓடைக் கரையில் நடந்த சம்பவமும் அவளுடைய நினைவுக்கு வந்தது. மூர்ச்சை யடைந்தது போல் தான் பாசாங்கு செய்ததும், காந்திக் குல்லா அணிந்த அந்த வாலிபன் ஜலம் கொண்டு வந்து தன் முகத்தில் தெளித்ததும், மூக்கின் அருகில் கையை வைத்து மூச்சு இருக்கிறதா என்று பார்த்ததும், தான் எழுந்து உட்கார்ந்து கலகல வென்று சிரித்ததும், நேற்றுத்தான் நடந்தது போல் அவள் மனதில் தோன்றி, தேகம் சிலிர்க்கச் செய்தது. பின்னர், அந்தக் கோயமுத்தூர் வீட்டில் அன்றிரவு தன்னைச் சித்தப்பா பிரம்பினால் அடித்தபோது, மகுடபதி கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்து தடுத்ததும், அவனைக் கவுண்டர்கள் கட்டிப் போட்டதும், சோபாவின் காலில் கட்டிப் போட்டிருந்தபோது அவ்வாலிபனுடைய முகத்தில் தோன்றிய தீரமும், தன்னை அடிக்கடி 'பயப்படாதே!' என்று சொல்கிறவன் போல் பார்த்ததும் - இவையெல்லாம் அவள் மனக்கண்ணின் முன் மீண்டும் தோன்றின. தான் மணம் செய்துகொள்வதாயிருந்தால் மகுடபதியை மணம் செய்துகொண்டு வாழ்வது, இல்லாவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்று உறுதி செய்து கொண்டாள்.

இப்படிப் பலவிதச் சிந்தனைகளில் அவள் ஆழ்ந்திருந்த சமயத்தில் வாசலில் கார் வரும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாகப் பார்த்த போது, கள்ளிப்பட்டிக் கார்தான் என்று தெரிந்து கொண்டாள். உடனே, அவள் அலமாரிக்குச் சென்று, கறிகாய் நறுக்குவதற்காக உபயோகிக்கப்பட்ட ஒரு சிறு கத்தியைத் தேடி எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, கவுண்டர்களைச் சந்திப்பதற்கு ஆயத்தமானாள். அவளுடைய அறைக்கு வெளியே காலடிச்சத்தம் கேட்ட போது, ஒரு கையை இடுப்பில் கத்திப் பிடியின் மேல் வைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

உள்ளே தங்கசாமிக் கவுண்டர் மட்டுந்தான் வந்தார். சாவதானமான குரலில் "செந்திரு! உடம்பு எப்படியிருக்கிறது?" என்று கேட்டுக் கொண்டே வந்தவர், செந்திரு ஆவேசங் கொண்டவள் போல் நிற்பதைப் பார்த்துச் சிறிது திடுக்கிட்டார்.

"எனக்கு உடம்பு ஒன்றுமில்லை" என்றாள் செந்திரு.

"ரொம்ப நல்லது; அப்படியானால் உட்கார். ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறாய்? உன்னை யார் என்ன செய்கிறார்கள்?" என்றார்.

கவுண்டர் நாற்காலியிலும், செந்திரு அவளுடைய கட்டிலிலும் உட்கார்ந்தார்கள்.

"அநாவசியமாகப் பதட்டப்பட்டுத்தானே அந்த சுவாமியாரின் மொட்டை மண்டையில் கல்லைப் போட்டாய்? பாவம்! சாகக் கிடக்கிறார்!" என்றார்.

"ஐயோ?" என்று அலறினாள் செந்திரு.

"பிழைத்தால் புனர்ஜன்மந்தான். செத்துப் போனால் உன் மேல் கேஸ் வந்தாலும் வரும். நீ பைத்தியம் என்று வேஷம் போட்டது போக, நிஜமாகவே உனக்குப் பைத்தியம் என்று ருசுச் செய்யும்படி வரலாம்" என்றார்.

செந்திரு திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள். விஷயம் அவளுக்கு நன்றாக விளங்கக் கூட இல்லை. சுவாமியார் சாகக் கிடக்கிறார் - தான் எறிந்த கல்லினால் - என்பது மட்டுந்தான் மனதில் நின்றது.

"குழந்தை! இதையெல்லாம் நீயாகவே பண்ணிக் கொண்டாய் என்பதை நினைத்தால் ரொம்ப வருத்தமாகயிருக்கிறது" என்றார் தங்கசாமிக் கவுண்டர்.

"சித்தப்பா! சத்தியமாகச் சொல்லுங்கள். இதெல்லாம் நானாகச் செய்துகொண்டதா? இந்தக் கதிக்கு என்னைக் கொண்டு வந்தது நீங்கள் இல்லையா?" என்று செந்திரு கதறினாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:02 am

"இருக்கலாம், அம்மா! என் பேரிலும் கொஞ்சம் தப்புத்தான். ஒப்புக் கொள்கிறேன். கள்ளிப்பட்டிக் கவுண்டரின் அந்தஸ்தை உத்தேசித்து உன்னை அவருக்குக் கட்டிக் கொடுக்க எண்ணினேன். அந்த மனுஷருக்கும் ஆண் குழந்தை இல்லையே, உன் வயிற்றில் ஒரு ஆண் குழந்தை பிறந்தாள் அவ்வளவு சொத்தும் வருமே என்ற ஆசைப் பட்டேன். ஆனால், உனக்கு இஷ்டமில்லை என்றால் அதைச் சொன்னால் போதாதா? சொல்லாமல் கொள்ளாமல், ஊரை விட்டு ஓடி வரலாமா? அதுவும் நான் இல்லாத சமயத்தில்! இதனால் நம்மெல்லோருக்குமே எவ்வளவு அவமானம் பார்! உன்னுடைய இஷ்டமில்லாமல் பலவந்தப்படுத்திக் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவோமா? இதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்கக் கூடிய காரியமா?... படித்த பெண்ணாகிய உனக்கு இது தெரியாமல் போய் விட்டதே!... ஆனால், உன் பேரில் தவறு இல்லை. 'கரைக்கிறவர்கள் கரைத்தால் கல்லுங்கரையும்' என்பதுபோல், யாருடைய துர்ப்போதனையையோ கேட்டு நீ இந்த மாதிரி செய்து விட்டாய்...!"

கவுண்டர் இவ்வாறு பேசி வந்தபோது முதலிலெல்லாம் செந்திருவுக்குத் தன் பேரிலே தான் ஒருவேளை பிசகோ என்று தோன்றியது. ஆனால், கடைசியில் 'துர்ப்போதனை' என்றதும், அவர் மகுடபதியைத்தான் குறிப்பிடுகிறார் என்று அறிந்து கொண்டாள். அடங்கியிருந்த கோபமெல்லாம் பொங்கியது. "நான் யாருடைய துர்ப்போதனையையும் கேட்கவில்லை. அப்படிச் சொன்னால் பாவம். நீங்கள் தான்..." என்று ஆரம்பித்தாள்.

கவுண்டர் குறுக்கிட்டு, "போனதைப் பற்றி இனிமேல் என்ன செந்திரு! இரண்டு பேரும் அதையெல்லாம் மறந்துவிடுவோம். நேற்று இரவு கனவில் அண்ணன் வந்தார். 'உன்னை நம்பி என் குழந்தையை ஒப்புவித்தேனே! எங்கேயடா என் குழந்தை?' என்று கேட்பது போலிருந்தது. தூக்கத்தில் ஓவென்று அழுதுவிட்டேன். எல்லோரும் என்ன என்று கேட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள்..." என்று சொல்லி, வேறு பக்கம் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

செந்திருவுக்கு மனம் இளகி விட்டது. அவளும் சேலைத் தலைப்பினால் முகத்தை மூடிக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

தங்கசாமிக் கவுண்டர் அவளுடைய தலை மீது தடவிக் கொடுத்து, "வேண்டாம் அம்மா! போனதெல்லாம் போகட்டும். என் அண்ணனுக்கு நான் கொடுத்த வாக்கைக் கட்டாயம் நிறைவேற்றுவேன். நீ ஊருக்கே திரும்பி வந்து விடு. கல்யாணத்தைப் பற்றி உன்னை இனிமேல் வற்புறுத்த மாட்டேன். நீ மேஜர் ஆவதற்கு இன்னும் ஒன்றரை வருஷம் தான் இருக்கிறது. அதுவரையில் பொறுத்திரு. அப்புறம் உன் இஷ்டம் போல் செய். இப்போது கிளம்பு, போகலாம்" என்றார்.

மறுபடியும் ஏதாவது சூழ்ச்சி செய்கிறார்களோ என்று ஒரு நிமிஷம் செந்திருவுக்குச் சந்தேகம் தோன்றிற்று. ஆனாலும் இந்த மலைச் சிறையில் இருப்பதைக் காட்டிலும், ஊருக்குப் போனாலும் பாதகமில்லை என்று கருதினாள். எனவே சித்தப்பாவுடன் புறப்படச் சம்மதித்தாள்.

பங்களாவின் வாசலுக்கு வந்த போது, அங்கே கள்ளிப்பட்டிக் கவுண்டரைக் கண்டதும் அவளுக்கு நெஞ்சு திடுக்கிட்டது. ஆனால், கள்ளிப்பட்டிக் கவுண்டர் அவர்களைத் தொடர்ந்து வந்த காரில் ஏறவில்லை. இது அவளுக்குத் தைரியத்தை உண்டாக்கிற்று. அவர் இல்லாமலே கார் கிளம்பிய போது அவளுக்கு உற்சாகமே உண்டாகிவிட்டது. "இவர்களுக்குள் ஏதோ சண்டை போலிருக்கிறது; ரொம்ப நல்ல காரியம். அந்தப் பாவியின் சிநேகம் இல்லாவிட்டால் சித்தப்பா நல்லவராகவே ஆகிவிடுவார்" என்று நினைத்தாள்.

கார் போன பிறகு, கள்ளிப்பட்டிக் கவுண்டர் நடையில் வாசற்படியுள்ள முன் அறையில் போய் உட்கார்ந்து கொண்டார். அங்கிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தார். அந்தப் பங்களாவுக்கு வரும் பாதை நன்றாகத் தெரிந்தது. அடிக்கடி அந்தப் பாதையைக் கவுண்டர் ஆவலுடன் உற்று நோக்கிய வண்ணமிருந்தார். வலையை விரித்து விட்டு, பட்சி எப்போது வந்து சிக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேடனுடைய முகபாவம் கவுண்டரின் முகத்தில் அப்போது தோன்றிற்று. சாப்பாடு, சிற்றுண்டி முதலியவையும் அந்த அறையிலேயே நடந்தது. மேஜை டிராயரிலிருந்து அடிக்கடி கைத்துப்பாக்கியை எடுப்பதும், அதன் விசையில் விரலை வைப்பதும், மறுபடியும் மேஜைக்குள் வைத்து மூடுவதுமாக இருந்தார். தோட்டக்காரனையும் அடிக்கடி கூப்பிட்டு, பாதையைப் பார்த்துக் கொண்டிருக்கும்படியும், யாராவது வருவது தெரிந்தால் உடனே தெரிவிக்கும்படியும் கட்டளையிட்டார். நேரம் ஆக ஆக, அவருடைய பொறுமை குறைந்து வந்தது. அறையில் அங்குமிங்கும் வேகமாக உலாவினார். கடைசியில், தூரத்தில் மகுடபதி வருவது தெரிந்ததும், அவருடைய முகத்திலும் கண்களிலும் பயங்கரமான குரோதத்தின் விகாரம் தோன்றியதுடன், உற்சாகத்தின் அறிகுறியும் காணப்பட்டது. வேலைக்காரனை மறுபடியும் கூப்பிட்டு வருகிற ஆளை உள்ளே விட்டு வெளிக் கதவை சாத்தி விடும்படிக் கட்டளையிட்டார். பிறகு கைத்துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டு மேஜைக்கு முன்புறமாக வந்து நின்றார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் சென்ற அத்தியாயத்தில் இறுதியில் கூறியபடி, மகுடபதி உள்ளே நுழைந்தான். "வா அப்பா, வா! உனக்காகத்தான் காத்திருக்கிறேன்!" என்று அவனை வரவேற்றார் கவுண்டர்.

மகுடபதி சொல்ல முடியாத ஏமாற்றத்துடனும் பயங்கரத்துடனும் கார்க்கோடக் கவுண்டரையும் அவர் கையிலிருந்த துப்பாக்கியையும் மாறி மாறிப் பார்த்தான். இதைக் கவனித்த கவுண்டர், "ஓகோ! இங்கே என்னை எதிர்பார்க்கவில்லையாக்கும். வேறு யாரையோ எதிர்பார்த்தாயாக்கும்! பாதகமில்லை வா! முன் இரண்டு தடவை என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டாய்; இந்தத் தடவை தப்பிக்க முடியாது!" என்றார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:03 am

இருபத்தைந்தாம் அத்தியாயம் - "கவுண்டா! சுடாதே!"

கார்க்கோடக் கவுண்டர் "இந்தத் தடவை தப்பிக்க முடியாது" என்று சொன்னபோது மகுடபதி அதனுடைய உண்மையைப் பூரணமாக உணர்ந்தான். ஒரு நிமிஷ நேரத்துக்குள் அவன் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன. ஆகா! கடைசியில் இதுதானா முடிவு? இந்தக் கொலைகாரன் கையினால் சாவதற்குத்தானா இவ்வளவு பிரயாசமும்! சாமியாரின் பேச்சைத் தட்டி விட்டு வந்தேனே?... பெரியண்ணன் எப்படித் தவிப்பான்?... ஐயோ! செந்திரு... அவள் கதி என்ன? அடுத்த ஜன்மத்திலாவது அவளை அடைவோமா?

"என்னடா திருட்டு முழி முழிக்கிறாய்? இங்கே எதற்காக வந்தாய்? இது உன் அப்பன் வீடா..." என்ற கவுண்டரின் கடுமையான குரலைக் கேட்ட மகுடபதி சுய நினைவை அடைந்தான். "உன் அப்பன் வீடா?" என்ற கேள்வி அவனுக்கு என்னவெல்லாமோ ஞாபகங்களை உண்டாக்கிற்று. தான் தாய் தந்தையில்லாத அனாதை என்பதும், திருவிழாக் கூட்டத்தில் கிடந்து அகப்பட்டவனென்பதும் நினைவுக்கு வந்தது. வளர்ப்புப் பெற்றோர்களில் தகப்பனார் காலமாகி விட்டார். தாயார் மட்டுந்தான் வேங்கைப்பட்டிக் கிராமத்தில் ஓர் இடிந்த வீட்டில் இருக்கிறாள். ஐயோ! தன்னை எத்தனையோ அன்பாய் வளர்த்த அந்த அம்மாள் இவ்விதம் தான் செத்ததை அறிந்தால் எவ்வளவு துக்கப்படுவாள்?

ஏற்கெனவே பலவிதத் துயரங்களினாலும் ஏமாற்றங்களினாலும் இளகியிருந்த மகுடபதியின் உள்ளம் இந்த நினைவினால் ரொம்பவும் உருகிவிட்டது. அவன் கண்களில் குபீரென்று நீர் ததும்பியது.

"அடே கோழை! அழுகிறாயா? உன் வீர தீரமெல்லாம் இவ்வளவுதானா? மீட்டிங்குகளிலே பிரமாதமய்ப் பேசினதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சுத்தானோ? கள்ளை ஒழிப்பதற்காக 'உயிரைக் கொடுப்பேன்' என்றெல்லாம் வீராப்புப் பேசினாயே? இப்போது பெண்பிள்ளை மாதிரி அழுகிறாயே?' என்றார் கவுண்டர்.

மகுடபதியின் உள்ளத்தில் அமுங்கிக் கிடந்த கோபமெல்லாம் பொங்கி எழுந்தது.

"பாவி! துரோகி...!" என்று ஆரம்பித்தான். ஆனால் ஆத்திரமிகுதியினாலே ஒன்றும் பேச முடியவில்லை.

"அவ்வளவுதானா!" என்று கவுண்டர் கூறிப் பயங்கரமாய்ச் சிரித்தார்.

"கொலைகாரா!..." என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

"அப்புறம்?"

"அப்புறம் நீ நரகத்துக்குப் போவாய். உன்னோடு பேச எனக்கு இஷ்டமில்லை. உன் எதிரில் நிற்பதே பாவம். துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஏன் நிற்கிறாய்? குண்டு இருக்கிறதா? வெறும் ஓட்டைத் துப்பாக்கியா?" என்றான் மகுடபதி.

"செத்துப் போவதற்கு அவ்வளவு அவசரமா?" என்றார் கவுண்டர்.

"அவசரந்தான். உன்னைப் போன்ற பாவிகள் உலகத்தில் இருக்கிறதை விட இறந்து போவது மேல்..."

"அப்படியானால், உயிரோடிருக்கவே உனக்கு இஷ்டமில்லையா?"

இதைக் கேட்டதும் மகுடபதிக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. ஒரு வேளைக் கார்க்கோடக் கவுண்டரின் மனது கூட இளகிவிட்டதோ? தன்னைக் கொல்வதற்கு அவருக்கு மனம் வரவில்லையோ? இல்லாவிட்டால் இத்தனை நேரம் ஏன் தயங்கிக் கொண்டு நிற்கிறார்? அவருடைய மனது உண்மையில் இளகியிருக்கும் பட்சத்தில் இந்தச் சமயத்தில் கொஞ்சம் போதனை செய்து அவருடைய மனதைத் திருப்ப முயல்வதே மேல் அல்லவா? மகாத்மா, அவருடைய அஹிம்சா தர்மம், அன்பு மதம் எல்லாம் மகுடபதியின் மனதில் தோன்றின. "பகைவனுக்கருள்வாய்" என்னும் பாரதியார் பாட்டின் வரிகளையும் நினைவு படுத்திக் கொண்டான். தன்னுடைய துவேஷம், கோபம், எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, முகத்தில் மலர்ச்சியை வருவித்துக் கொண்டு கவுண்டரைப் பார்த்துச் சொன்னான்:

"அப்படியொன்றும் நான் வாழ்வை வெறுத்து விடவில்லை. இந்த உலகத்தில் ஜீவித்திருக்கத்தான் விரும்புகிறேன். தேசத்துக்காக இன்னும் எவ்வளவோ தொண்டுகளைச் செய்ய விரும்புகிறேன். இந்தப் பாரத தேசம் சுதந்திரம் அடைந்து பார்க்க ஆசைப்படுகிறேன். இந்தியக் குடியரசின் முதலாவது பிரசிடெண்டாக பண்டித ஜவஹர்லால் நேரு வருவதைப் பார்க்க விரும்புகிறேன். நீங்களும் இந்தத் தேசத்தில் பிறந்தவர் தான்; பாரத மாதாவின் புதல்வர்தான். உங்கள் கையினால் சாவதைக் காட்டிலும், போலீஸ் துப்பாக்கியினால் சாக நேர்ந்தால் எவ்வளவோ சந்தோஷமாக உயிரை விடுவேன் ஐயா! உண்மையில், உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்? எதற்காக என்னை நீங்கள் கொன்று பாவத்துக்குள்ளாக வேண்டும்? உங்களுடைய இதயத்தில் கையை வைத்துச் சொல்லுங்கள்..."

மகுடபதியின் பேச்சினால் கவுண்டரின் மனம் எவ்வளவு தூரம் மாறியதோ, என்னமோ, தெரியாது. அவர், "இந்தப் பிரசங்கமெல்லாம் வேண்டியதில்லை. நீ உயிர் தப்ப வேண்டுமானால், அதற்கு வழியிருக்கிறது" என்றார்.

மகுடபதி மௌனமாயிருந்தான். அவன் உள்ளத்தில் மறுபடியும் சந்தேகங்கள் தோன்றின.

"இங்கே வா! இந்தக் காகிதத்தில் கையெழுத்துப் போட்டாயானால் இங்கிருந்து பிழைத்துப் போகலாம்" என்று கவுண்டர் சொல்லி, தம்முடைய சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தையும் பௌண்டன் பேனாவையும் எடுத்து மேஜை மேல் வைத்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:04 am

மகுடபதி தயக்கதுடன் மேஜையண்டை நெருங்கினான். மேஜைமேல் விரித்து வைத்திருந்த காகிதத்தைப் படிக்கத் தொடங்கினான். பக்கத்தில் கவுண்டர் கையில் பிடித்த துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்.

காகிதத்தில் சில வரிகள் படித்ததுமே மகுடபதியின் இரத்தம் கொதிக்கத் தொடங்கியது. ஆத்திர மிகுதியினால் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. பக்கத்தில் நின்ற கவுண்டரை அவனுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவும் வெறுத்தது.

அந்தக் காகிதத்தில் எழுதியிருந்தது இதுதான்:

"கள்ளிப்பட்டி மகா-ள-ள-ஸ்ரீ கார்க்கோடக் கவுண்டர் அவர்களுக்கு மகுடபதி தாழ்மையுடன் நமஸ்காரம் செய்து எழுதிக் கொண்ட விண்ணப்பம்.

நான் இத்தனை நாளும் செய்த குற்றங்களை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு தங்களுடைய மேலான மன்னிப்பைக் கோருகிறேன். காங்கிரஸ் தொண்டன் என்று நான் வேஷம் போட்டுக் கொண்டு பணம் வசூலித்துத் துன்மார்க்கமான காரியங்களுக்கு உபயோகப்படுத்தியது உண்மை. தங்களுடைய கண்டிராக்ட்டில் உள்ள கள்ளுக்கடைகளை மறியல் செய்யாமலிருப்பதற்காகத் தங்களிடம் பணம் கேட்டது நிஜம். தாங்கள் கொடுக்காதபடியினால் தங்களுடைய கள்ளுக்கடைகளில் கடுமையாக மறியல் நடத்தியதும் நிஜம். சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டர் தமையனார் பெண் செந்திரு சித்த சுவாதீனமில்லாமலிருப்பது தெரிந்ததும், அவளுடைய நகைகளை அபகரிக்கும் எண்ணத்துடன் அவளை ஊரை விட்டுக் கடத்திக் கொண்டு போனேன். பெரியண்ணன் வந்து என்னைக் கைப்பிடியாய்ப் பிடித்த போது, அவனைக் கத்தியால் குத்திவிட்டேன். இப்பேர்ப்பட்ட பாதகமான காரியங்களையெல்லாம் செய்ததன் பொருட்டு மிகவும் பச்சாதாபப் படுகிறேன். தாங்களும், மகா-ள-ள-ஸ்ரீ தங்கசாமிக் கவுண்டரும் ரொம்பவும் பெரிய மனது செய்து என்னை இந்தத் தடவை மன்னித்து விட்டுவிட்டால், இனிமேல் இப்பேர்ப்பட்ட துர்க்காரியங்களில் இறங்குவதில்லை என்று கடவுள் சாட்சியாகப் பிரமாணம் செய்கிறேன். அதோடு, இந்தக் கோயமுத்தூர் ஜில்லாவில் அடி வைப்பதில்லையென்றும் பிரமாணம் செய்கிறேன். துராக்கிரமாக இன்றைக்கு உங்களுடைய பங்களாவில் நுழைந்ததற்காகவும் என்னை மன்னித்துவிடும்படி வேண்டிக் கொள்கிறேன்."


கடிதத்தை எப்படியோ முழுவதும் மகுடபதி படித்து முடித்தான். ஆனாலும், கடிதத்தை விட்டுக் கண்களை அகற்றாமல் தீவிரமாக யோசனை செய்யத் தொடங்கினான். இந்தக் காகிதத்தில் தன்னைக் கையெழுத்திடச் செய்யும் நோக்கம் இன்னதென்பது அவனுக்கு ஸ்பஷ்டமாக விளங்கிவிட்டது. செந்திருவிடம் இதைக் காட்டித் தன்னிடம் அளவில்லாத அருவருப்பு அவளுக்கு உண்டாகும்படி செய்வர்கள். இன்னும் பலருக்குப் பகிரங்கப்படுத்திக் கோயமுத்தூர் ஜில்லாவில் தான் தலைகாட்ட முடியாதபடி செய்வார்கள். காங்கிரஸின் பெயருக்கே அழியாத மாசு தன்னால் உண்டாகிவிடும்... இந்தக் காகிதத்தில் கையெழுத்துப் போட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்வதைக் காட்டிலும் உயிரை விட்டு விடுவதே மேல். சித்திரவதை செய்தாலும் இதில் கையெழுத்துப் போடக்கூடாது. ஆனால் தான் உயிரை ஏன் விட வேண்டும்? இப்பேர்ப்பட்ட பாதகன் உலகத்தில் ஏன் ஜீவித்திருக்க வேண்டும்? தான் சாக வேண்டியிருந்தாலும் இவனைக் கொன்று விட்டு ஏன் சாகக் கூடாது? ஆம்; மகுடபதி பல்லைக் கடித்துக் கொண்டு அவ்விதம் தீர்மானித்தான். எப்படியாவது இன்றைக்கு இந்தக் கொடும் பாதகனை யமலோகத்துக்கு அனுப்பிவிட வேண்டும். பிறகு தனக்கு என்ன கதி நேர்ந்தாலும் பாதகமில்லை. ஆனால், எப்படி?...எப்படி?... இவன் கையிலுள்ள துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு சுட்டால் என்ன? ... அது சாத்தியமா? படீரென்று தட்டி விடலாமா? ஆளையே பலமாகப் பிடித்துத் தள்ளி விடலாமா?... மேஜையின் கீழ் புகுந்து அப்பால் சென்று நாற்காலியை எடுத்து எறியலாமா?...

"என்னப்பா கையெழுத்துப் போடப் போகிறாயா?" என்று கவுண்டரின் குரல் கேட்டது.

மகுடபதி நிதானமான குரலில், "கடவுள் சாட்சி போதுமா?" என்றான்.

"போதாது; நீ கடவுள் இல்லையென்று சாதித்து விடுவாய். மடத்துச் சாமியாரை இங்கே அழைத்துவரச் செய்கிறேன். அவர் சாட்சி போட வேணும்... ஆ!"

கவுண்டர் அடுத்த கணத்தில் சுவரில் போய்ப் படார் என்று மோதினார். அவர் கையிலிருந்த துப்பாக்கி இன்னொரு பக்கம் போய் விழுந்தது. அதிலிருந்து 'டுடும்' என்று ஒடு வெடி வெடித்தது. அறையில் புகை சூழ்ந்தது. மகுடபதி நாலாபுறமும் பார்த்துவிட்டு அந்தத் துப்பாக்கியை எடுத்துக் கொள்வதற்கு ஓடினான். அதற்குள் அறைக் கதவு திடீரென்று திறந்தது. யமகிங்கரன்போல் வேலைக்காரன் ஓடி வந்து மகுடபதியைக் கட்டிப் பிடித்தான். தட்டுத் தடுமாறி எழுந்திருந்த கவுண்டர், "கட்டு அவனை! மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டு!" என்றார். தோட்டக்காரன் அவ்வாறே மகுடபதியை இழுத்துச் சென்று, தான் மேலே போட்டிருந்த வேட்டியினால் மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டினான்.

கவுண்டர் துப்பாக்கியை மறுபடியும் எடுத்துக் கொண்டார். மகுடபதியை நோக்கிக் குறி பார்த்தார். "அடே! இந்த வேலை கூடத் தெரியுமா உனக்கு? காந்தியின் சீடன் என்றல்லவா பார்த்தேன்?" என்று கூறி ஹஹ்ஹஹ்ஹா என்று பேய் சிரிப்பது போல் சிரித்தார்.

"இதோ பார்! இந்த ரிவால்வரில் இன்னும் ஐந்து குண்டுகள் இருக்கின்றன. ஆனால், உன்னை அவ்வளவு சுலபமாய் விட்டுவிடுவேன் என்று நினைக்காதே! முனியா! கொண்டுவா, சவுக்கை!" என்று கர்ஜித்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக