புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
64 Posts - 72%
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Rutu
மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Jenila
மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
2 Posts - 2%
manikavi
மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகுடபதி - அமரர் கல்கி


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:24 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
மகுடபதி - அமரர் கல்கி




முதல் அத்தியாயம் - திறந்த வீடு

அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது.

கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் 'ஜே ஜே' என்ற ஜனக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன.

வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை.

பெரிய வீதிகளில் ஜன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது?

இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை - வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வருஷம், 1931; மாதம், ஜனவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?

1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார்.

மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள்.

அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது.

ஆனால், 1929-ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆகவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:32 am

செந்திரு, "நான் உங்களை மறக்கவில்லை. நான் மறந்தாலும், உங்களால் எனக்கு ஏற்பட்ட அடையாளம் இருக்கிறது. அது எப்போதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும்" என்று சொல்லி தன் வலது காலை மறைத்துக் கொண்டிருந்த சேலையை சிறிது நகர்த்தினாள். முழங்காலுக்குக் கீழே ஒரு நீளமான நெருப்புச் சுட்ட வடு காணப்பட்டது.

"ஐயோ!" என்றான் மகுடபதி.

"நான் உங்களுடன் ஓடைக்கரையில் பேசிக் கொண்டிருந்தது எப்படியோ சித்தப்பாவுக்குத் தெரிந்து போய்விட்டது..."

"நீ அவருடைய தமையனார் பெண்தானா?"

"ஆமாம்."

"உனக்கு அப்பா இல்லையா?"

"எனக்கு அப்பாவுக்கு இல்லை, அம்மாவும் இல்லை. நான் அனாதை."

பெரியண்ணன், "அப்படிச் சொல்லாதே, அம்மா! இந்தக் கிழவன் உடம்பில் உயிர் இருக்கிற வரையில் நீ அனாதையாய்ப் போய்விட மாட்டாய்" என்றான்.

மகுடபதி நெருப்புச் சுட்ட வடுவைச் சுட்டிக் காட்டி "இது எப்படி ஏற்பட்டது, சொல்லு" என்றான். கேட்கும் போதே அவன் உடம்பு நடுங்கிற்று.

"சித்தப்பாவுக்கு யாரோ சொல்லிவிட்டார்களோ அல்லது அவரேதான் பார்த்துவிட்டாரோ தெரியாது. 'ஓடைக்கரையில் யாரோடு பேசிக் கொண்டிருந்தாய்?' என்று கேட்டார். 'தெரியாது' என்று சொன்னேன். நீங்கள் யார் என்பது எனக்கு நிஜமாகவே தெரியாதல்லவா? ஆனால், சித்தப்பா நான் சொன்னதை நம்பவில்லை. வேண்டுமென்றே பொய் சொல்லுகிறேன் என்று நினைத்தார். எவ்வளவோ அமர்க்களம் நடந்தது. கடைசியில் 'இனிமேல் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது' என்பதற்கு ஞாபகம் இருப்பதற்காக இம்மாதிரி காலில் சூடு போட்டுவிட்டார்."

"கடவுளே! இம்மாதிரி அக்கிரமங்களும் உலகத்தில் உண்டா?" என்றான் மகுடபதி.

"நீ என்னத்தைக் கண்டாய், தம்பி! இதைவிடப் பெரிய அக்கிரமங்களும் உலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. கடவுளும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்" என்றான் பெரியண்ணன்.

செந்திரு, அப்போது "கடவுளைக் குறை சொல்லாதே, பாட்டா! கடவுள்தான் இந்த இக்கட்டான வேளையில் இவரை இங்கே அனுப்பியிருக்கிறார். நீங்கள் வந்ததனால் தான் கொஞ்சம் நான் தெம்பாயிருக்கிறேன். இல்லாவிட்டால், அய்யாசாமி முதலியார் வீட்டில் ஒருவரும் இல்லையென்று பாட்டன் திரும்பி வந்ததற்கு, நான் இப்போது பதைபதைத்துப் போயிருப்பேன். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருப்பேன். பாட்டன் வருவதற்குக் கொஞ்சம் நேரம் ஆனபோதே எனக்குத் தவிப்பாய்ப் போய்விட்டது. 'ஏன் இன்னும் வரவில்லை?' என்று இந்த மச்சு ஜன்னல் வழியாக வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நீங்கள் திரும்பிப் பார்த்துக் கொண்டு வீதி ஓரமாக வந்தீர்கள். நீங்கள் தான் என்று உடனே எனக்குத் தெரிந்து போய்விட்டது. பழனியாண்டவன் தான் இந்தச் சமயத்தில் உங்களை அனுப்பியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்" என்று செந்திரு சொன்னாள்.

"பழனியாண்டவர் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டரின் ஆட்கள் ரூபத்தில் வந்து என்னை அனுப்பினார் போலிருக்கிறது" என்றான் மகுடபதி.

"கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர்" என்ற பெயரைக் கேட்டதும், அவர்கள் இருவருடைய முகத்திலும் ஏற்பட்ட மாறுதலை மகுடபதி கவனித்தேன். அது என்ன பயங்கரமா? அருவருப்பா? கோபமா? - அந்தப் பெயர் இவர்களை இப்படிப் பயமுறுத்துவானேன்? இதில் ஏதோ பெரிய விசேஷம் இருக்க வேண்டும். யாரால் தனக்கு அபாயம் ஏற்பட்டிருக்கிறதோ, அவருடைய பெயரைக் கேட்டல்லவா இவர்களும் இவ்வளவு பயங்கர மடைகிறார்கள்? விஷயம் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு மகுடபதியின் ஆவல் அளவில்லாமல் பொங்கிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:33 am

ஆறாம் அத்தியாயம் - "பூம் பூம்"

பெரியண்ணனும் செந்திருவும் மாற்றி மாற்றிச் சொன்னதிலிருந்து, மகுடபதி பின்வரும் விவரங்களைத் தெரிந்து கொண்டான்.

சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டரின் தமையனார் மருதாசலக் கவுண்டர் என்பவர், மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற வக்கீலாயிருந்தார். பிதிரார்ஜித சொத்து ஏராளமாயிருந்ததுடன், வக்கீல் தொழிலிலும் அவருக்கு வருமானம் நிறைய வந்து கொண்டிருந்தது. சென்னையில் உயர்ந்த அந்தஸ்தும், நாகரிகமும் வாய்ந்த மனிதர்களுடன் அவர் பழகிக் கொண்டிருந்தார். அவருடைய ஏகபுத்திரி செந்திரு. செந்திரு தன்னுடைய ஆறாம் வயதிலேயே தாயாரை இழந்துவிட்டாள். தாயை இழந்த குறை அவளுக்குத் தெரியாதபடி தகப்பனார் வளர்த்து வந்தார்.

முதலில் அவள் கான்வெண்ட் ஸ்கூலிலும், பிறகு அடையாறு பள்ளிக்கூடத்திலும் படித்தாள். அவளுடைய முகக்களையினாலும், புத்திசாலித்தனத்தினாலும், பள்ளிக்கூடத்தின் செல்லக் குழந்தையாயிருந்தாள். மயிலாப்பூரில் அவளுடைய தந்தையின் சிநேகிதர் வீடுகளில், அவளை அன்புடன் வரவேற்காத வீடு கிடையாது.

நாலு வருஷத்துக்கு முன்னால் செந்திருவின் தலையில் பெரிய இடி விழுந்தது. அவளுடைய தகப்பனார் மருதாசலக் கவுண்டர் டைபாயிடு சுரம் வந்து இறந்து போனார். அப்போது அவளுக்கு வயது பதின்மூன்று.

செந்திரு அனாதையான அதே சமயத்தில் பெரும் பணக்காரியாகவும் ஆனாள். அவளுடைய தாயாருடைய சொத்துக்கள் தகப்பனாருடைய சொத்துக்கள் எல்லாவற்றுக்கும் உரியவள் ஆனாள்.

அவளுடைய சித்தப்பா தங்கசாமிக் கவுண்டர், அவளைச் சிங்கமேட்டில் தங்களுடைய வீட்டுக்கு அழைத்துப் போனார். வேறெங்கும் அவளுக்குப் புகலிடம் கிடையாது.

தங்கசாமிக் கவுண்டருக்கும் அவருடைய தமையனாருக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள். மருதாசலக் கவுண்டர் முப்பத்தைந்து வயதிலேயே முதல் மனைவியை இழந்து பின் மறு விவாகம் செய்து கொள்ளவில்லை. தங்கசாமிக் கவுண்டருக்கோ வீட்டில் இரண்டு மனைவிமார் இருந்தார்கள்.

மயிலாப்பூரில் பதின்முன்று வருஷம் வளர்ந்த செந்திருவுக்குச் சிங்கமேடு வாழ்க்கை, கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஊரிலே மற்றப் பெண்களெல்லாம் வயல் காடுகளுக்காவது இஷ்டப்படி சென்று கொண்டிருந்தார்கள். பெரிய கவுண்டர் வீட்டுப் பெண்ணானபடியால், செந்திரு வீட்டை விட்டு வெளிக்கிளம்ப முடியவில்லை. அவளுடைய நடை உடை பாவனைகள் வீட்டில் மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. மற்றவர்களுடைய பழக்க வழக்கங்கள் இவளுக்குப் பிடிக்கவில்லை. இவளுடைய படிப்புக் கர்வத்தை அவர்களால் சகிக்க முடியவில்லை. அவர்களுடைய படிப்பில்லாமையை இவளால் பொறுக்க முடியவில்லை. இதனால் வரவர வீட்டில் ரகளை அதிகமாகிக் கொண்டு வந்தது.

தங்கசாமிக் கவுண்டர் மருதாசலக்கவுண்டர் போலவே சமபாகம் பெற்றவர். ஆனால், அவர் தாலுகா போர்டு ஜில்லா போர்டு எலெக்ஷனில் ஈடுபட ஆரம்பித்ததிலிருந்து வரவுக்கு மேல் செலவாகிக் கடன் முற்றிக் கொண்டு வந்தது. இப்போது அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கடன்; சொத்து முழுவதையும் விற்றாலும் அடைக்க முடியுமா என்பது சந்தேகம்.

எலெக்ஷன் விவகாரங்களில் தங்கசாமிக் கவுண்டரின் கூட்டாளி, பெயர் பெற்ற கள்ளுக்கடை கண்டிராக்டரான கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர். தங்கசாமிக் கவுண்டர் அதிகமாகக் கடன் பட்டிருந்ததும் மேற்படி கார்க்கோடக் கவுண்டரிடம்தான்.

தங்கசாமிக் கவுண்டர் கடனடைந்து மீந்து வருவதற்குக் கார்கோடக் கவுண்டர் ஒரு யோசனை சொன்னார். ஏற்கனவே கார்க்கோடக் கவுண்டருக்கு மூன்று தாரம் கல்யாணம். முதல் தாரம் இறந்தது போக இன்னும் இரண்டு மனைவிகள் வீட்டில் இருந்தார்கள். இப்போது செந்திருவை தனக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விடுவதாயிருந்தால், கடன் பூராவையும் தானே எடுத்துக் கொண்டு தீர்த்து விடுவதாகக் கார்கோடக் கவுண்டர் சொன்னார். அதற்குத் தங்கசாமிக் கவுண்டர் சம்மதித்துவிட்டார். செந்திரு மைனர் வயது நீங்கி மேஜர் ஆவதற்கு இன்னும் ஆறு மாதந்தான் இருந்தபடியாலும், மேஜர் ஆகிவிட்டால் ஏதாவது 'ரவுஸ்' பண்ணுவாள் என்று அவர்களுக்குப் பயமிருந்தபடியாலும், கல்யாணத்தை இந்த மாதமே முடித்துவிடுவதென்று தீர்மானித்திருந்தார்கள்.

கார்க்கோடக் கவுண்டர் அடிக்கடி சிங்கமேட்டிற்கு வருவதுண்டாதலால், செந்திரு அவரைப் பார்த்திருக்கிறாள். அவரைக் கண்டாலே அவளுக்குக் கதி கலங்கும். அவர் எதிரிலேயே வரமாட்டாள். கல்யாணப் பேச்சு அவளுடைய காதில் விழுந்ததும், அவள் விஷம் குடித்து உயிரை விட்டு விடத் தீர்மானித்தாள். பெரியண்ணக் கவுண்டனிடம் விஷம் சம்பாதித்துத் தரும்படி கேட்டாள். பெரியண்ணன் அவளைத் தடுத்து, கல்யாணத்தை நிறுத்தவும், செந்திரு அந்த வீட்டிலிருந்து தப்பிக்கவும் வேறு வழி யோசிக்கலாம் என்றான்.

அச்சமயத்தில் செந்திருவுக்கு அவளுடைய பள்ளிக்கூடத் தோழி பங்கஜத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. செந்திரு மயிலாப்பூரில் இருந்த போது, அடுத்த வீட்டில் ஸப்ஜட்ஜ் அய்யாசாமி முதலியாரின் குடும்பத்தார் வசித்தார்கள். முதலியாரின் பெண் பங்கஜம், செந்திரு சிங்கமேட்டுக்கு வந்த பிறகு சில காலம் அவளும் பங்கஜமும் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் திடீரென்று பங்கஜத்தின் கடிதங்கள் நின்று போயின. தான் எழுதும் கடிதங்கள் ஒரு வேளை தபால் பெட்டியில் சேர்க்கப்படுவதில்லையோ என்று செந்திரு சந்தேகித்தாள். அந்தச் சந்தேகத்தைத் தீர்த்து கொள்ள அவளுக்கு வழியில்லாமலிருந்தது. கடைசியாகப் பங்கஜத்திடமிருந்து கடிதம் வந்து இரண்டு வருஷத்துக்கு மேலாகிவிட்டது.

பெரியண்ணனும் செந்திருவும் தப்பும் வழியைப் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தபோது, பங்கஜத்தினிடமிருந்து கடிதம் வந்தது. அச்சமயம் தங்கசாமிக் கவுண்டர் ஊரில் இல்லை. ஏதோ கேஸ் சம்பந்தமாய்ச் சென்னைப் பட்டணம் போயிருந்தார். ஆகையால் கடிதம் செந்திருவின் கையில் நேரில் கிடைத்துவிட்டது. அதில் பங்கஜம், தான் எழுதிய பல கடிதங்களுக்குச் செந்திருவிடமிருந்து கடிதம் வரவில்லையென்றும், அதனால் கடிதம் எழுதுவதையே நிறுத்திவிட்டதாகவும், இப்போது அவளுடைய தகப்பனார் உத்தியோகத்திலிருந்து ரிடயர் ஆகிவிட்டபடியால், குடும்பத்துடன் கோயமுத்தூரில் வந்து குடியேறியிருப்பதாகவும், செந்திருவின் ஊருக்கு ஒரு நாள் வந்து அவளைப் பார்க்க விரும்புவதாகவும் எழுதியிருந்தாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:34 am

இதைப் பார்த்ததும், செந்திருவும் பெரியண்ணனும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். கல்யாணத்தை நிறுத்துவதற்குப் பங்கஜத்தின் மூலமாக அவளுடைய தகப்பனாரின் ஒத்தாசையைத் தேடுவது என்று தீர்மானித்தார்கள். பெரியண்ணன், முதலில் தான் மட்டும் கோயமுத்தூர் போய் வருவதாகச் சொன்னான். செந்திரு அதை மறுத்து, ஒரு நிமிஷங்கூடத் தன்னால் அந்த வீட்டில் இருக்க முடியாதென்றும், இரண்டு பேரும் கோயமுத்தூருக்குக் கிளம்பிவிடலாமென்றும் பிடிவாதம் பிடித்தாள். கோயமுத்தூரில் தங்கசாமிக் கவுண்டருக்குச் சொந்தமான இந்த வீடு இருப்பது அவர்களுக்குத் தெரியும். அது பூட்டிக் கிடக்கிறதென்றும், தங்கசாமிக் கவுண்டர் எப்போதாவது குடும்பத்துடன் கோயமுத்தூருக்கு வந்தால் அதில் தங்குவது வழக்கமென்றும், அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த வீட்டுப் பூட்டின் சாவியும் சிங்கமேட்டில் தான் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு, அன்றைய தினம் அதிகாலையில் ஒருவருக்கும் தெரியாமல் இரண்டு பேரும் கிளம்பிச் சிங்கமேட்டுக்கு இரண்டு மைல் தூரத்திலிருந்த ஸ்டேஷனில் ரயில் ஏறிக் கோயமுத்தூர் வந்து சேர்ந்தார்கள்.

ஸப் ஜட்ஜ் அய்யாசாமி முதலியாரின் பங்களா எங்கே இருக்கிறதென்று கண்டு பிடிப்பதற்காக முதலில் பெரியண்ணன் செந்திருவின் கடிதத்துடன் போனான். போகும்போது வீட்டில் செந்திரு தனியாயிருப்பது யாருக்குந் தெரியாமலிருப்பதற்காக, வெளியில் கதவைப் பூட்டிக் கொண்டு போனான். அவன் திரும்பி வந்து வெளிக் கதவைத் திறந்தபோதுதான் மகுடபதியும் அந்த வீட்டுக்குள் நுழைந்தான்.

இவ்வளவு விவரங்களையும் அவர்கள் சொல்லி முடிப்பதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது. எல்லாம் கேட்ட பிறகு மகுடபதி "பாட்டா! இவ்வளவு சொன்ன நீ ஒரு விஷயம் மட்டும் சொல்லவில்லையே! சிங்கமேட்டுக் கவுண்டர் வீட்டுக்கு நீ எப்படி வந்து சேர்ந்தாய்?" என்றான். அதன் மேல் பெரியண்ணன் அந்தக் கதையையும் சுருக்கமாகச் சொன்னான்.

ல வருஷங்களுக்கு முன் பெரியண்ணன் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவர் ஒரு நாள் அதிகமாகக் கோபித்துக் கொள்ளவே, அங்கிருந்து கிளம்பி விட்டான். இலங்கைக்குப் போய் சில காலம் அங்கே வசித்துவிட்டுத் திரும்பினான். இலங்கையில் தான் அவன் பெரிய குடிகாரன் ஆனான். இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகு, ஒரு கலகக் கேஸில் அவன் மாட்டிக் கொண்டான். கீழ்க் கோர்ட்டில் ஏழு வருஷம் தண்டனை கொடுத்தார்கள். ஹைக்கோர்ட்டில் கேஸ் உடைந்து விடுதலை ஆயிற்று. அந்தக் கேஸில் அவனுக்குச் செந்திருவின் தகப்பனார் தான் வக்கீலாயிருந்து அவனை விடுதலை செய்வித்தார். அப்போதே பட்டணத்தில் செந்திருவைப் பெரியண்ணன் பார்த்திருக்கிறான். குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சியிருக்கிறான்.

மகுடபதியைக் குத்திய வழக்கில் விடுதலையான பிறகு, பெரியண்ணன் கொஞ்ச நாள் ஊர் ஊராகச் சென்று மதுவிலக்குப் பிரசாரம் செய்து வந்தான். இது கார்க்கோடக் கவுண்டருக்குத் தெரிந்தது. அவர் அவனைச் சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டர் வீட்டில் வேலைக்கு அமர்த்தினார். அங்கே, இந்தப் பட்டணத்துக் குழந்தையைக் கண்டு யார் என்று தெரிந்து கொண்டதும், பெரியண்ணன் அங்கேயே சந்தோஷத்துடன் இருந்துவிட்டான். அவர்களுக்குள் நாளுக்கு நாள் பாசம் வளர்ந்து, கடைசியில், இம்மாதிரி சொல்லாமல் ஓடி வருவதில் முடிந்தது.

"கள்ளுக்கடைக் கண்டிராக்டில் நஷ்டம் வந்ததற்காக, ஏற்கெனவே என்னை வெட்டிப் போடலாமென்று எண்ணியிருக்கிறார் கள்ளிப்பட்டிக் கவுண்டர். இப்போது இந்த இடத்தில் என்னைப் பார்த்தால் என்ன செய்வாரோ தெரியாது. அவரே கத்தி எடுத்து என்னைக் குத்தி கொன்று விடுவார்" என்றான் மகுடபதி.

அப்போது பெரியண்ணன் முகத்தில் உண்டான விகாரத்தையும், அவனுடைய கண்களில் தோன்றிய பயங்கரத்தையும் மகுடபதியினால் அறிந்துகொள்ள முடியவில்லை.

"என்ன பாட்டா! இப்படி மிரளுகிறாயே! கத்திக்குத்து எல்லாம் உனக்குப் புதிது அல்லவே?" என்றான்.

"தம்பி, தம்பி! அப்படியெல்லாம் நீ ஒன்றும் பேசாதே. நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும். கள்ளிப்பட்டிக் கவுண்டர்கிட்ட மாத்திரம் நீ போகவே கூடாது. ஒரு போதும் போகக் கூடாது" என்றான் பெரியண்ணன். அப்போது அவன் பேச்சே ஒரு மாதிரி இருந்தது.

அச்சமயத்தில் வாசலில் "பூம் பூம்" என்று மோட்டார்க் குழலின் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷம் வாசற் கதவை யாரோ தடதடவென்று தட்டினார்கள்.

மூன்று பேரில் யாருக்குக் கதிகலக்கம் அதிகமாயிருந்ததென்று சொல்வதற்கில்லை.

"சித்தப்பாவாயிருக்குமோ?" என்று நடுங்கிய குரலில் கேட்டாள் செந்திரு.

"பட்டணத்துக்கல்லவா போகிறதாகச் சொன்னார்?"

"வந்து விட்டாரோ, என்னமோ?"

"ஒருவேளை அய்யாசாமி முதலியார் வீட்டில் திரும்பி வந்திருந்து, உன் கடிதத்தைப் பார்த்துவிட்டுக் கார் அனுப்பியிருக்கலாமல்லவா?" என்றான் மகுடபதி.

செந்திருவுக்குக் கொஞ்சம் உயிர் வந்தது. "இருந்தாலும் இருக்கலாம்" என்றாள்.

கிழவன், "நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். எதற்கும், தம்பி, நீ அந்த அறைக்குள் இரு. கதவை உட்புறம் தாளிட்டுக் கொள்" என்றான்.

பெரியண்ணன் கையும் காலும் நடுங்க மச்சுப் படிகளில் இறங்கிக் கீழே வந்து, கையில் அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு, வாசற் கதவைத் திறந்தான்.

கதவை இடித்த டிரைவர் ஒதுங்கி நின்றான். மோட்டார் வண்டியில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் கிழவன் பிசாசைப் பிரத்தியட்சமாகக் கண்டவன் போல் பயங்கரமடைந்து பேச்சு மூச்சின்றி நின்றான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:35 am

ஏழாம் அத்தியாயம் - பயங்கரச் சிரிப்பு

மோட்டார் வண்டியில் இருந்தோர் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டரும், சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டருந்தான்.

பெரியண்ணன் அவர்களைக் கண்டதும் பயப்பிராந்தி அடைந்தான். தனக்கு ஏதோ தீங்கு வந்து விடப் போகிறதோ என்பதற்காக அல்ல. செந்திருவை எண்ணித்தான் அவன் பயந்தான். அவளை இங்கே பார்த்தால் இவர்கள் என்ன செய்கிறார்களோ, என்னமோ? போதாதற்கு மகுடபதி இந்தச் சமயம் பார்த்து வந்து சேர்ந்தானே? இவர்கள் வேறு விதமாக சந்தேகிக்கலாமல்லவா? அறியாத பெண்ணின் பேச்சைக் கேட்டுப் புறப்பட்டு வந்தது பிசகாய்ப் போயிற்றே? - குழந்தைதான் சொல்லிற்று என்றால் அறுபது வயதான எனக்குக் கூடவா புத்தியில்லாமல் போகவேண்டும்? கவுண்டர் சென்னைப் பட்டணத்துக்கல்லவா போவதாகச் சொன்னார்? வருவதற்கு ஒரு வாரம் பிடிக்கும் என்றாரே? இங்கே எப்படி இருக்கிறார்? - இம்மாதிரி எண்ணங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு அவன் உள்ளத்தில் எழுந்தன. கையில் லாந்தரைப் பிடித்தபடி அசையாமலும் பேசாமலும் அவர்களைப் பார்த்தபடியே நின்றான்.

பெரியண்ணனைப் பார்த்ததில் இரண்டு கவுண்டர்களுக்குங்கூட ரொம்ப ஆச்சரியம் உண்டாயிற்று என்பது அவர்களுடைய முகபாவத்திலிருந்து நன்றாய்த் தெரிந்தது. சற்று நேரம் அவர்களும் அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தங்கசாமிக் கவுண்டர், "யார், பெரியண்ணனா? இதென்ன தமாஷ்? நீ எங்கே வந்து சேர்ந்தாய்?" என்று கேட்டுக் கொண்டே காரிலிருந்து இறங்கினார்.

அருகில் சென்று அவன் முகத்தைப் பார்த்ததும், "என்னப்பா, இது? ஏன் இப்படிப் பேயடித்தவன் மாதிரி விழித்துக் கொண்டு நிற்கிறாய்?" என்றார்.

இதற்கும் பெரியண்ணன் பேசாமல் நின்றான். கார்க்கோடக் கவுண்டரும் இறங்கி வந்து, "ஒருவேளை மகாத்மா காந்தி பக்தி முற்றிப்போய் சத்தியாக்கிரகம் பண்ணவே வந்துவிட்டான் போலிருக்கு" என்றார்.

"ஏனப்பா, அப்படியா? நீ சத்தியாக்கிரகம் பண்ணப் போறாயா, அல்லது உன்னைத்தான் கிரகம் பிடிச்சிருக்கா?"

இப்படிச் சொன்ன தங்கசாமிக் கவுண்டர் திடீரென்று ஏதோ நினைவு வந்தவர் போல், "கவுண்டர்! வீட்டிலே எல்லாரும் சுகந்தானே? உடம்பு காயலா ஒன்றுமில்லையே?" என்று கலங்கிய குரலில் கேட்டார்.

"எல்லாரும் சுகந்தானுங்க" என்று மெலிந்த குரலில் பெரியண்ணன் சொன்னான்.

"அப்படியென்றால், நீ எங்கே வந்தே?"

பதில் இல்லாமற் போகவும், இரு கவுண்டர்களும் உள்ளே நுழைந்தார்கள்.

மேல் மச்சில் வெளிச்சம் தெரிந்தது. ஆள் நடமாடும் சத்தமும், கதவு சாத்தும் சத்தமும் கேட்டது. கவுண்டர்களின் ஆச்சரியம் அதிகமாயிற்று.

"பெரியண்ணா! மச்சுமேலே யார்?"

பதில் இல்லை.

"இதென்ன உனக்குப் பிரம்மஹத்தி பிடித்துவிட்டதா? மேலே யார், சொல்கிறாயா, இல்லையா?"

பெரியண்ணன் தடுமாறிக் கொண்டு, "குழந்தை" என்றான்.

"எந்தக் குழந்தை?" என்று தங்கசாமிக் கவுண்டர் வியப்புடன் கேட்டார்.

"எனக்கு எல்லாம் தெரிந்து போய் விட்டது" என்றார் கார்க்கோடக் கவுண்டர். தங்கசாமிக் கவுண்டரின் காதோடு ஏதோ சொன்னார்.

தங்கசாமிக் கவுண்டரின் கண்ணில் தீப்பொறி பறந்தது. "என்ன? இருக்கவே இருக்காது!" என்றார்.

"பெரியண்ணா! எந்தக் குழந்தை? பட்டணத்துக் குழந்தையா?"

"ஆமானுங்க."

அவ்வளவுதான்; அதற்குமேல் தங்கசாமிக் கவுண்டர் அங்கே நிற்கவில்லை. தடதடவென்று மச்சுப்படிகளின் மேலே ஏறினார். கார்க்கோடக் கவுண்டரும் பின் தொடர்ந்து ஏறினார். பெரியண்ணன் லாந்தரைக் கீழே வைத்துக் கதவைத் தாளிட்டு விட்டுத் தள்ளாடிக் கொண்டே ஏறினான். அவன் மனது ஒரே குழம்பலாய்க் குழம்பிற்று. செந்திருவை அங்கே அழைத்து வந்ததற்கு ஏதாவது பொய்க் காரணங் கண்டு பிடிக்க அவன் விரும்பினான். ஆனால் யோசனை ஒன்றுமே ஓடவில்லை. அவன் தலை சுழன்றது.

ஒருவர் பின் ஒருவராக இரண்டு கவுண்டர்களும் வருவதைப் பார்த்ததும், செந்திரு கதிகலங்கியவளாய்ச் சமுக்காளத்திலிருந்து எழுந்து நின்றாள். சித்தப்பாவை அவள் ஒருவாறு எதிர்பார்த்தாள். அவருக்கு என்ன சமாதானம் சொல்லி, எப்படித் தப்புவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். கார்க்கோடக் கவுண்டரும் சேர்ந்தாற்போல் வருவதைக் கண்டதும், எல்லா யோசனையும் போய்விட்டது. பக்கத்து அறையில் மகுடபதி இருக்கிறான் என்பதை நினைத்ததும், அவளுடைய வயிற்றையும் நெஞ்சையும் என்னவோ செய்தது! மயிலாப்பூரில் அவளுடைய வீட்டுக் கூடத்தில் பழநியாண்டவர் படம் ஒன்று மாட்டியிருக்கும். தினம் அப்படத்திற்கு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டுவதுண்டு. குழந்தை செந்திரு அப்படத்தின் முன்னால் நமஸ்காரம் செய்து "ஸ்வாமி! பழனி ஆண்டவனே! பரீட்சையில் எனக்கு நல்ல மார்க் வரவேணும்; முதலாவதாக நான் தேறவேண்டும்" என்று வேண்டிக் கொள்வாள். இப்போது திடீரென்று அந்தப் படத்தின் ஞாபகம் வந்தது! "ஸ்வாமி! ஆண்டவனே! இந்த ஆபத்திலிருந்து நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:35 am

தங்கசாமிக் கவுண்டர் அவளை வியப்புடனும் ஆங்காரத்துடனும் உற்றுப் பார்த்தபடி அருகில் வந்தார்.

"செந்திரு, நீயா, இந்தக் காரியம் செய்தாய்? என்ன நெஞ்சு அழுத்தம் உனக்கு! பாவி!..."

கவுண்டரின் உதடுகளும் மீசையும் படபடப்பினால் துடித்தன.

"பாவி! உன் அப்பாவின் பெயரை இப்படியா நீ கெடுக்க வேணும்! மருதாசலக் கவுண்டரின் மகளா நீ? ஆஹா! அண்ணன் மட்டும் இப்போது உயிரோடிருந்தால்..."

தகப்பனாரின் பெயரைக் கேட்டதும் செந்திருவுக்கு திடீரென்று மனோதைரியம் உண்டாயிற்று. அவள் ஒரு புது மனுஷியானாள். தன்னுடைய தகப்பனாரே ஆவி ரூபத்தில் வந்து தனக்குப் பின்னால் நிற்பதாக அவளுக்குத் தோன்றிற்று. தனக்கு அபாயம் நேராமல் அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.

திடீரென்று ஆவேசம் வந்தவள் போல் அவள், "அப்பா பேச்சை ஏன் எடுக்கிறீர்கள் சித்தப்பா! அப்பா உயிரோடு இருந்தால் என் கதி இப்படியாயிருக்குமா? தலை நரைச்ச கிழவருக்கு என்னைக் கல்யாணம் கட்டிக் கொடுக்க யோசித்திருப்பாரா?" என்றாள்.

தங்கசாமிக் கவுண்டருக்கு அப்போது வந்த கோபத்தில் அவருடைய உடம்பெல்லாம் நடுங்கிற்று. திரும்பி அவர் கள்ளிப்பட்டிக் கவுண்டரைப் பார்த்தார். கள்ளிப்பட்டிக் கவுண்டரின் முகத்தில் விஷம் நிறைந்த ஒரு புன்னகை காணப்பட்டது. மற்றபடி கோபதாபம் ஒன்றுமில்லை. அவர் சிங்கமேட்டாரைப் பார்த்து, "ஏன் இவ்வளவு பதட்டப் படுகிறீர்கள்? இதை அவளாகச் செய்யவில்லை. யாருடைய துர்ப்போதனையின் பேரிலேயோ நடந்திருக்கிறது. உட்கார்ந்து சாவகாசமாக விசாரியுங்கள்" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் ஹாலின் வீதிப் பக்கத்துச் சுவரில் இருந்த ஜன்னலண்டை போய் ஜன்னல் கதவுகளைச் சாத்தினார். பிறகு, மச்சுபடிகளின் வழியாகக் கீழே இறங்கிப் போனார்.

சிங்கமேட்டுக் கவுண்டர் மேஜைக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியில் போய்த் தொப்பென்று விழுந்தார். அளவில்லாத கோபத்தினால் அவருடைய உடம்பு தளர்ந்து போயிருந்தது. தூரத்தில் நடுங்கிக் கொண்டு நின்ற பெரியண்ணனைப் பார்த்து, "கவுண்டா, இங்கே வா!" என்றார்.

பெரியண்ணன் மேஜையண்டை மெதுவாக வந்து நின்றான்.

"எதற்காக இங்கே வந்தீர்கள்? என்ன எண்ணத்துடன் வந்தீர்கள்? யாருடைய தூண்டுதலைக் கேட்டு வந்தீர்கள்? நிஜத்தை, உள்ளதை உள்ளபடி சொல்லிவிடு; இல்லாவிட்டால் இங்கிருந்து உயிரோடு திரும்பிப் போகமாட்டாய்" என்றார்.

பெரியண்ணன், மனத்திற்குள், "என் உயிரோடு போவதாயிருந்தால் பாதகமில்லையே? இந்தக் குழந்தையையும் அல்லவா மாட்டி வைத்து விட்டேன்?" என்று நினைத்துக் கொண்டான்.

அவன் செந்திருவைப் பார்த்தான். செந்திரு, "என்ன பயம் பாட்டா? உயிருக்கு மேலே ஒன்றுமில்லையே? இந்த மாதிரி உயிர் வைத்துக் கொண்டு வாழ்கிறதைவிடச் செத்துப் போவதே நல்லது. எல்லாவற்றையும் சொல்லிவிடு" என்றாள். இப்படிச் சொல்லிவிட்டு அவள் சமுக்காளத்தில் உட்கார்ந்தாள்.

இதற்குள், கள்ளிப்பட்டிக் கவுண்டர், மச்சுப்படி ஏறி மறுபடியும் மேலே வந்தார். அவருடைய ஒரு கை முதுகுப் பக்கம் போயிருந்தது. அந்தக் கையில் ஒரு கயிற்றுச் சுருளும் ஒரு கொடிப் பிரம்பும் இருந்தன. இன்னொரு கையில் டார்ச் லைட் ஒன்று இருந்தது. பெரியண்ணன் இதையெல்லாம் பார்த்து விட்டான். இதற்கு முன்னால் ஒரு போதும் அறிந்திராத ஒரு வித நோவு அவனுடைய அடி வயிற்றில் உண்டாயிற்று.

இரண்டு கவுண்டர்களையும் அவன் மாறி மாறிப் பார்த்து தட்டுத் தடுமாறலுடன் "தெரியாத்தனமாய் நடந்து போச்சுங்க? என்னை என்ன வேணுமானாலும் செய்துக்குங்க! குழந்தையை மன்னிச்சுடுங்க! உங்கள் காலிலே விழுந்து கேட்கிறேன்!" என்றான்.

செந்திருவுக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை என்று அவளுடைய முகத் தோற்றத்திலிருந்தே தெரிந்தது.

"என்ன பாட்டா! உனக்குப் பைத்தியமா? எதற்காக என்னை மன்னிக்க வேண்டும்? நான் என்ன தப்பு செய்து விட்டேன் மன்னிப்பதற்கு?" என்றாள்.

கிழவன் அவளைக் கொஞ்சம் கோபமாய்ப் பார்த்து, "செந்திரு! நீ அறியாக் குழந்தை! உனக்கு ஒன்றும் தெரியாது, சற்றே நீ பேசாமலிரு" என்றான். அப்போது அவனுடைய பார்வை சாத்தியிருந்த அறைக் கதவின் மேல் போயிற்று.

அது கள்ளிப்பட்டிக் கவுண்டரின் கூரிய பார்வையிலிருந்து தப்பவில்லை. அவர் மேஜைக்குப் பக்கத்திலிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். இன்னொரு காலி நாற்காலியின் மேல் கயிற்றுச் சுருள், பிரம்பு, டார்ச் லைட் இவை இருந்தன. மேஜையின் மேல் முழங்கையை ஊன்றியபடி மற்ற மூன்று பேரையும் அவர் கவனித்துக் கொண்டிருந்தார்.

சிங்கமேட்டுக் கவுண்டரைப் பார்த்து, அவர், "அறியாப் பெண் படபடப்பாய்ப் பேசினால் அதற்காக நீங்களும் கோபித்துக் கொள்ளலாமா? எங்கே கிளம்பி வந்தார்கள், என்னத்திற்காக, என்று கேளுங்கள்" என்றார்.

பெரியண்ணன் உடனே, "குழந்தைக்குச் சிநேகிதப் பெண் இந்த ஊருக்கு வந்திருக்கிறதாம். அவசரமாய்ப் பார்க்க வேணுமென்று கடிதம் வந்ததாம். உடனே கிளம்பித் தான் ஆகவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தது. நானும் தெரியாத்தனமாய் அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். செய்தது பிசகுதான்" என்றான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:36 am

எட்டாம் அத்தியாயம் - அந்தகாரம்

இருட்டறைக்குள் இருந்த மகுடபதிக்கு ஹாலில் நடந்த பேச்சுவார்த்தையெல்லாம் நன்றாய்க் காதில் விழுந்தன. குரலிலிருந்து, யார் யார் பேசுகிறார்கள் என்பதையும் ஊகித்துக் கொண்டான். செந்திரு கொஞ்சமும் பயப்படாமல் பேசிய தீரம் நிறைந்த மொழிகள் அவனுடைய காதில் விழுந்த போதெல்லாம், அவனுக்கு மயிக்கூச்செறிந்தது. அந்தச் சமயம் செந்திரு சாதாரணப் பெண்ணாகவே அவனுக்குத் தோன்றவில்லை. காவியங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப்படும் வீர நாரீமணியாகவே தோன்றினாள். இவளுக்காக ஓர் உயிரை அல்ல, நூறு உயிர் ஒருவனுக்கு இருந்தால் அவ்வளவையும் கொடுக்கலாம் என்று நினைத்தான். ஓடைக் கரைக் காட்சியும், அங்கே அவளுக்கு, தான் கொடுத்த வாக்குறுதியும் ஞாபகம் வந்தன. அந்த வாக்குறுதியை இத்தனை நாளும் நிறைவேற்றாமலிருந்ததை எண்ணி அப்போது வெட்கத்தினால் அவனுடைய உள்ளம் குன்றியது. அதற்கெல்லாம் இப்போது பரிகாரம் செய்து விட வேண்டுமென்றும் இந்த இரக்கமற்ற அரக்கர்களிடமிருந்து அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்றும் உறுதி கொண்டான். இப்பேர்ப்பட்ட ஆபத்தான சமயத்தில் தன்னை அந்த வீட்டில் கொண்டு வந்து சேர்த்த தெய்வச் செயலை எண்ணி அதிசயித்தான். இப்படியெல்லாம் பலவித எண்ணங்கள் அவனுடைய உள்ளத்தைக் குழப்பினவே தவிர, செந்திருவை எப்படி இவர்கள் கையிலிருந்து தப்புவிப்பது என்பதற்கு மட்டும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

இந்த நிலைமையில்தான் தங்கசாமிக் கவுண்டர் பிரம்பினால் செந்திருவை அடிக்க, அவள் வீரிட்ட குரல் மகுடபதியின் காதில் விழுந்தது. பிறகு அவனால் அந்த இருட்டறையில் சும்மா இருக்க முடியவில்லை. கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தான்.

அறைக்குள்ளிருந்து ஓடிவந்த மகுடபதியைப் பார்த்ததும், தங்கசாமிக் கவுண்டருக்கு ஏற்பட்ட பிரமிப்பையும் கோபத்தையும் சொல்லத் தரமல்ல. "இதெல்லாம் நிஜமாக நடப்பவைதானா? இந்திரஜாலக் கனவா?" என்று சந்தேகப்பட்டவர் போல், அவர் கள்ளிப்பட்டிக் கவுண்டரைப் பார்த்தார்.

"தங்கசாமி! நான் சொன்னபோது நீ நம்பவில்லை. இப்போது தெரிந்து கொண்டாயா! சிநேகிதப் பெண்ணைப் பார்க்க வந்தது என்பதெல்லாம் பொய் என்று தெரிகிறதா?..." என்றார் கார்க்கோடக் கவுண்டர்.

தங்கசாமிக் கவுண்டரின் கண்களில் தீப்பொறி பறந்தது. "பாவி, என்ன காரியம் செய்தாய்? குலத்தைக் கெடுக்கவா நீ வந்தாய்?" என்று சொல்லி அவர் மறுபடியும் செந்திருவை நோக்கிப் பிரம்பை ஓங்கினார்.

அப்போது சில நிமிஷநேரம் அந்த ஹாலில் பெருங்குழப்பம் உண்டாயிற்று.

மகுடபதி ஓடி வந்து, தங்கசாமிக் கவுண்டருடைய கைப்பிரம்பைப் பிடிக்க முயன்றான். பெரியண்ணன் குறுக்கே வந்து, மகுடபதியைப் பிடித்து இழுத்தான். "பாட்டா! நீ சும்மா இரு. ஒரு பேடி ஒரு சிறு பெண்ணைப் பிரம்பால் அடிக்கும் போது நீ பார்த்துக் கொண்டு நிற்கிறாய். என்னையும் சும்மா இருக்கச் சொல்கிறாயா?" என்று மகுடபதி சொல்லிக்கொண்டே, பெரியண்ணனிடமிருந்து திமிற முயன்றான். பெரியண்ணன் அவனை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். இரண்டு பேரும் கட்டிக் கொண்டு கீழே விழுந்தார்கள். பெரியண்ணனுடைய தலை அரிக்கன் லாந்தர் மீது படாரென்று மோதிற்று. அரிக்கன் லாந்தர் கவிழ்ந்து அவிந்தது. ஒரு நிமிஷம் அந்த ஹாலில் இருள் சூழ்ந்தது.

செந்திரு, "ஐயோ! ஐயோ!" என்று அலறினாள்.

பளிச்சென்று டார்ச் லைட்டின் வெளிச்சம் அடித்தது. கார்க்கோடக் கவுண்டரின் கையிலிருந்துதான் டார்ச் லைட் பிரகாசித்தது. வெளிச்சம் பெரியண்ணன் - மகுடபதியின் மேல் விழுந்தது. பெரியண்ணன் பிரக்ஞையற்றுக் கிடந்தான். மகுடபதி திகைப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தான்.

கார்க்கோடக் கவுண்டரின் கர்ண கடூரமான குரல், "தங்கசாமி! அந்தப் பையனை சோபா காலோடு சேர்த்துக் கட்டு" என்று சொல்லியது அவன் காதில் விழுந்தது.

பெரியண்ணன் கீழே பிரக்ஞையற்றுக் கிடப்பதைப் பார்த்து செந்திரு அலறிக் கொண்டு அவன் அருகில் வந்து முகத்தை உற்று நோக்கினாள்.

திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த மகுடபதியைக் கார்க்கோடக் கவுண்டரும் தங்கசாமிக் கவுண்டரும் பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டுவந்து சோபாவின் காலோடு சேர்த்து கட்டினார்கள். மகுடபதி அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குச் செய்த முயற்சி ஒன்றும் பலிக்கவில்லை.

செந்திரு பெரியண்ணனுடைய மூக்கினருகில் விரலை வைத்துப் பார்த்தபின், மூச்சு வருவது தெரிந்ததும், கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. முகத்தில் தெளிக்கத் தண்ணீர் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்தாள். மகுடபதி சோபாவின் காலில் கட்டுப்பட்டிருப்பதையும் அவன் பக்கத்தில் இரண்டு கவுண்டர்களும் நிற்பதையும் கண்டாள். கார்க்கோடக் கவுண்டரின் கையிலிருந்த டார்ச் லைட் கட்டுப்பட்டிருந்த மகுடபதியின் மேல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மகுடபதியின் அழகிய முகம் அப்போது மிகவும் பயங்கரத் தோற்றமடைந்திருந்தது. அளவில் அடங்காத கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் அவன் முகத்தின் நரம்புகள் எல்லாம் புடைத்திருந்தன. நெடிய பெருமூச்சு வந்து கொண்டிருந்தது. கண்கள் தணலைப் போல் சிவந்திருந்தன.

"பேடிகளா! என்னை ஏன் கட்டிப் போடுகிறீர்கள்? ஆண் பிள்ளைகளாயிருந்தால் கட்டை அவிழ்த்து விடுங்கள் - இப்படிப்பட்ட அக்கிரமங்களை ஏன் செய்கிறீர்கள்? ஆஹா! இந்தப் பாரத தேசத்தில் மகாத்மா காந்தியைப் போன்ற உத்தமரும் பிறந்தார் - உங்களைப் போன்ற பாதகர்களும் பிறந்திருக்கிறார்களே!..." என்றான் மகுடபதி.

"அடே! நிறுத்தடா, உன் அதிகப் பிரசங்கத்தை!" என்று சீறினார் கார்க்கோடக் கவுண்டர். மேலும் ஏளனம் செய்யும் குரலில் அவர் கூறினார்:

"மகாத்மா காந்தியினுடைய அந்தரங்க சிஷ்யனல்லவா நீ? அதனால் தான் மைனர்ப் பெண்ணைத் திருட்டுத்தனமாய் அழைத்துக் கொண்டு ஓடப்பார்த்தாயாக்கும்!... ஆஹா! நல்ல காந்தி சிஷ்யன், அப்பா! தங்கசாமி! எங்கே பிரம்பை எடு! இன்றைக்கு இவன் சிநேகிதர்கள் கடைத் தெருவில் சத்தியாக்கிரகம் செய்து அடிவாங்கினார்கள். இவன் மட்டும் அவர்களுக்குக் குறைந்து போகலாமா? அப்புறம் காந்தி மகாத்மா இவனைப்பற்றிக் குறைவாக எண்ணிக் கொள்ளமாட்டாரா?... சேச்சே! எங்கே அந்தப் பிரம்பை எடு!"

தங்கசாமிக் கவுண்டர் அப்போது பிரம்பை எடுத்துக் கார்க்கோடக் கவுண்டர் கையில் கொடுத்தார்.

இதுவரையில் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த செந்திரு, "சித்தப்பா! அவர்மேல் ஒரு குற்றமும் இல்லை. அவர் என்னை அழைத்து வரவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன். என் சிநேகியைப் பார்க்க நானாகத்தான் வந்தேன். பாட்டன், கடுதாசிகூடக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தான். அவரை விட்டுவிடுங்கள். அவரை விட்டுவிட்டால், இனிமேல் நீங்கள் சொன்னபடி கேட்கிறேன். அவரை ஏதாவது செய்தீர்களோ, கூச்சல் போட்டு ஊரைக் கூட்டுவேன்" என்று சொல்லிக் கொண்டு செந்திரு ஜன்னல் பக்கம் போனாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:36 am

"தங்கசாமி! அவளை இழுத்துக் கொண்டு வந்து மேஜைக் காலோட கட்டு!" என்றார் கார்க்கோடக் கவுண்டர்.

செந்திரு எவ்வளவோ திமிறியும் பயன்படவில்லை. தங்கசாமிக் கவுண்டர் அவளை இழுத்துக் கொண்டு வந்து மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டிவிட்டார்.

கார்க்கோடக் கவுண்டர் சொன்னார்: "தங்கசாமி! காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க இப்போது சமயமில்லை. இரண்டில் ஒன்று உடனே தீர்ந்துவிட வேண்டும். இந்தப் பையன் இரண்டு விஷயத்துக்குச் சம்மதிக்கிறானா என்று கேள். மைனர்ப் பெண்ணைக் கடத்தி வந்த குற்றம் செய்ததாகவும், மன்னிக்கும்படியும் எழுதிக் கொடுக்க வேண்டும். இனிமேல் கள்ளுக்கடைப் பக்கம் போவதில்லை. மதுவிலக்குப் பிரசாரம் செய்வதில்லை என்று சத்தியம் செய்யவேண்டும். மகாத்மா காந்திமேல் ஆணை வைத்துச் சத்தியம் செய்ய வேண்டும். சம்மதிக்கிறானா, கேள்!"

மகுடபதியின் காதில் இது விழுந்ததும், அவன் பொங்கிக்கொண்டு கத்தினான்: "ஒரு நாளும் மாட்டேன். உயிர்போனாலும் மாட்டேன். என்னை என்னவேணுமானாலும் செய்யுங்கள். அந்தப் பெண்ணை மட்டும் ஒன்றும் செய்ய வேண்டாம். ஏதாவது செய்தீர்களோ, நீங்கள் செய்து வரும் அக்கிரமக் காரியங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். பத்திரிகைகளில் எழுதி, உங்கள் பெயர் சிரிப்பாய்ச் சிரிக்கும்படி அடித்துவிடுவேன், ஜாக்கிரதை!" என்றான்.

கார்க்கோடக் கவுண்டர் மறுபடியும் பயங்கரமாகச் சிரித்தார்.

"ஓகோகோ! அப்படியா சேதி? - இதுதான் கடைசி வார்த்தையா, கேட்டுவிடு தங்கசாமி!" என்றார்.

இடுப்பிலிருந்து ஒரு பெரிய பேனாக் கத்தியை எடுத்தார். அதன் மடலைப் பிரித்து டார்ச் லைட்டுக்கு நேரே பிடித்தார். கத்தியின் மடல் பளபளவென்று மின்னிற்று. அதன் விளிம்பு கூராயிருக்கிறதா என்று கவுண்டர் விரலால் தடவிப் பார்த்தார்.

செந்திருவுக்கு அடிவயிற்றை என்னமோ செய்தது. அவள் என்னவெல்லாமோ பேச வேண்டுமென்று நினைத்தாள். கூச்சல் போட விரும்பினாள். ஆனால் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. வாயிலிருந்து பேச்சு வரவில்லை; சத்தம் போடக்கூட முடியவில்லை.

கார்க்கோடக் கவுண்டர் ஒருகையில் டார்ச் லைட்டுடனும், ஒரு கையில் பிரித்த கத்தியுடனும் மகுடபதியை நெருங்கினார். "அடே! என்னடா சொல்கிறாய்?" என்று கர்ஜித்துக் கொண்டு கத்தியை ஓங்கினார்.

மகுடபதிக்கு அச்சமயம், "இதெல்லாம் நிஜமல்ல - கனவு கண்டு கொண்டிருக்கிறோம்" என்ற பிரமை உண்டாயிற்று. அவன் அண்ணாந்து, ஓங்கிய கத்தியை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஓங்கிய கத்தி கீழே வரத் தொடங்கியது. அந்த வினாடியில் தடதடவென்று காலடிச் சத்தம் கேட்டது. பெரியண்ணன் குறுக்கே ஓடிவந்து விழுந்தான். (சற்று முன்னால் மூர்ச்சை தெளிந்து அவன் இந்தக் கோரமான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.) கவுண்டரின் கத்தி, பெரியண்ணன் வலது மார்பண்டை ஆழமாய்ப் பதிந்தது. அவன் "ஆ" என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தான். அவனுடைய வாய் ஏதோ முணுமுணுத்தது. கார்க்கோடக் கவுண்டர் கீழே குனிந்து அதைக் கவனித்தார். "இரகசியம் ... இரகசியம் ... இத்தனை நாளாய் ... மன்னிக்க வேணும்..." என்ற வார்த்தைகள் அவருடைய காதில் விழுந்தன. உடனே பெரியண்ணனுடைய தலை சாய்ந்தது; பேச்சு நின்றது.

கார்க்கோடக் கவுண்டர் டார்ச் லைட்டை நாலு புறமும் சுழற்றினார். செந்திரு மூர்ச்சையடைந்திருப்பதையும், அவளுடைய தலை தொங்குவதையும் கண்டார். பிரமித்து நின்ற தங்கசாமிக் கவுண்டரைப் பார்த்து, "ஏனப்பா, இப்படி நிற்கிறாய்? அவளுடைய கட்டை அவிழ்த்துத் தூக்கி கொண்டு போய்க் காரில் போடு, அவள் மூர்ச்சையானதே நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிட்டால் ரொம்ப ரகளை செய்திருப்பாள்" என்றார்.

தங்கசாமிக் கவுண்டர் மறு வார்த்தை சொல்லாமல், செந்திருவைத் தூக்கிக்கொண்டு போனார்.

அவர்கள் போனதும், கார்க்கோடக் கவுண்டர் மறுபடியும் டார்ச் லைட்டைக் கட்டுண்ட மகுடபதியின் மேலும், குத்துப்பட்டுத் தரையில் கிடந்த பெரியண்ணன் உடல் மீதும் செலுத்தினார். பயங்கரமாக ஒரு சிரிப்புச் சிரித்தார்.

"அடே! 'ஜெயிலுக்குப் போகவும் தூக்குமேடை ஏறவும் தயார்' என்று ஆயிரம் கூட்டங்களில் பேசி வந்தாயல்லவா? இப்போது ஜெயிலுக்குப் போகலாம்; அங்கிருந்து தூக்கு மேடைக்கும் போகலாம்" என்று அவர் சொன்னது கனவில் கேட்பது போல் மகுடபதியின் காதில் விழுந்தது.

அடுத்த நிமிஷம் கார்கோடக் கவுண்டர் டார்ச் லைட்டுடன் மச்சுப்படி இறங்கச் சென்றார்.

ஹாலில் அந்தகாரம் சூழ்ந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:37 am

ஒன்பதாம் அத்தியாயம் - ஏமாற்றம்

கார்க்கோடக் கவுண்டர் டார்ச்சு லைட்டுடன் போன பிறகு, சற்று நேரம் வரையில் மகுடபதி சிந்தனா சக்தியையே இழந்திருந்தான். சிறிது சிறிதாக, அவனுடைய மனம் யோசிக்கும் சக்தியைப் பெற்றது. இன்று காலையில் அவன் கிராமத்திலிருந்து கிளம்பிய போது, அன்று இரவுக்குள் தனக்கு இத்தகைய சம்பவங்கள் நேருமென்று யாராவது சொல்லியிருந்தால், இடிஇடியென்று சிரித்திருப்பான். அவ்விதம் சொன்னவனைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போகும்படி கூறியிருப்பான்.

அவனுடைய மனோ நிலைமையில் இப்போது பயங்கரம் அதிகமாயிருந்ததா, அதிசயம் அதிகமாயிருந்ததா, அல்லது கவலைதான் அதிகமா என்று சொல்வதற்கியலாமலிருந்தது. செந்திருவைப்பற்றி எண்ணியபோது உள்ளத்தில் கவலை மீறியது. ஐயோ! பாவிகள் அவளை எங்கே கொண்டு போனார்களோ? என்ன செய்யப் போகிறார்களோ? பலவந்தமாகக் கல்யாணம் நடந்து விடுமோ? அந்தத் தீரப் பெண் அதற்குச் சம்மதிப்பாளா? சம்மதியாமல் அவள் பிடிவாதம் பிடித்தால் என்னென்ன விபரீதங்கள் நேரிடுமோ? சமயத்தில் போய்க் கல்யாணத்தைத் தடுத்து அவளை மீட்டுக் கொண்டு வரும் சக்தியைக் கடவுள் தனக்கு அளிப்பாரா?

தான் இன்னும் உயிரோடிருப்பதே கடவுளுடைய செயல்தான்! தன் மேல் பாய வேண்டிய கத்தியல்லவா பெரியண்ணன் மேல் பாய்ந்தது? - ஆஹா! சத்தியாக்கிரகம், அஹிம்சை என்றெல்லாம் பேசுகிறோமே? உண்மையான அஹிம்சா தர்மி - சத்தியாக்கிரகி - பெரியண்ணன் அல்லவா? தன்னுடைய உயிரை இன்னொருவனுக்காகக் கொடுக்கத் துணிந்தானே!

ஆனால், பெரியண்ணன் நிஜமாகவே இறந்து போய் விட்டானா? தன் பக்கத்திலே இருக்கும் பெரியண்ணனுடைய உடல் உயிரற்ற சவமா? ஒரு கத்திக் குத்தில் பிராணன் போயிருக்குமோ? உடனே வைத்தியரைக் கூட்டி வந்து சிகிச்சை செய்தால், ஒருவேளை அவன் பிழைத்தாலும் பிழைக்கலாம் அல்லவா? - அடடா! பாவிகள் தன்னை இப்படிக் கட்டிப் போட்டுவிட்டுப் போய் விட்டார்களே...!

மகுடபதி, கட்டை அவிழ்த்துக் கொள்ளும் பொருட்டு இப்படியும் அப்படியுமாகத் திமிறினான். சோபாவும் அவன் கூட வந்ததே தவிரக் கட்டு அவிழவில்லை. அப்புறம், கைகளினால் முடிச்சு எங்கே இருக்கிறதென்று தேடத் தொடங்கினான். அப்போது அவனுடைய மனதில், "ஆஹா! கிழவனுடைய உயிர் மட்டும் போயிருக்கட்டும். எப்படியாவது பழிக்குப் பழி வாங்கியேயாக வேண்டும். அஹிம்சையாவது மண்ணாங் கட்டியாவது! இப்பேர்ப்பட்ட பாதகர்களை இப்பூவுலகில் இல்லாதபடி செய்வதே பெரிய புண்ணியம்" என்று எண்ணினான். கயிற்றின் முடிச்சு எங்கே இருக்கிறதென்று அவன் தேடிய போது பெரியண்ணனுடைய உடல் மேல் கைபட்டது. அவனுடைய உடம்பு ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டது அது பிரேதமா, உயிருள்ள உடலா? - இதைத் தெரிந்து கொள்ளும் ஆவலினால் நடுங்கிக் கொண்டே மறுபடியும் உடம்பு தட்டுப்பட்டது. பிரேதமானால் ஜில்லிட்டிருக்கு மென்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இந்த உடம்பு ஜில்லென்று இல்லை; சிறிது சூடு இருப்பதுபோல் தோன்றியது. கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான். மிகமிக இலேசாக மூச்சுவிடும் சப்தம் கேட்பது போலிருந்தது.

உடனே, மகுடபதியின் பரபரப்பு பன்மடங்கு அதிகமாயிற்று. எப்படியாவது ஓடிப்போய் டாக்டரை, அழைத்து வந்து பெரியண்ணனைக் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால்... கார்க்கோடக் கவுண்டர் போகும்போது சொன்ன வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வந்தன. "ஜெயிலுக்கும் போகலாம்! அங்கிருந்து தூக்கு மேடைக்கும் போகலாம்!" இந்த வார்த்தைகளின் அர்த்தம் பளிச்சென்று இப்போது அவனுக்குப் புலனாயிற்று. கார்க்கோடக் கவுண்டர் போலீஸாரை அழைத்து வருவார். தன்னைக் கைது செய்வார்கள். பெரியண்ணனைக் கொலை செய்ததாகத் தன் பேரில் கேஸ் நடக்கும்! கவுண்டர்களே சாட்சி சொல்வார்கள்! குற்றம் ருசுவாகிவிடும்! தன்னைத் தூக்கு மேடையில் ஏற்றுவார்கள்! - தன்னுடைய பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள். அவர்கள் பேச்சுத்தான் எடுபடும்!... பெரியண்ணனுடைய உயிரைக் காப்பாற்றினாலொழிய, தான் தூக்குமேடை ஏற வேண்டியதுதான்! அப்போது செந்திருவின் கதி என்ன ஆகும்?...

மகுடபதி, வெறி பிடித்தவனைப்போல் அப்படியும் இப்படியுமாகத் திமிறினான். 'பட்' என்று சப்தம் கேட்டது. சற்று நிதானித்துப் பார்த்தபோது அந்தப் பழைய சோபாவின் கால் இவன் இழுத்த இழுப்பில் முறிந்து விட்டது என்று தெரிந்தது. உடனே துள்ளிக் குதித்து எழுந்தான். கயிற்றைக் கீழே தளர்த்திக் கொண்டு வந்து, கடைசியில் கட்டிலிருந்து விடுபட்டான்.

கிழவனை மறுபடியும் தொட்டுப் பார்த்தான்; சூடு இருந்தது. தட்டுத் தடுமாறிக் கொண்டு மச்சுப் படியை அடைந்து கீழே இறங்கினான். கீழே நடையில், புகையடைந்த அரிக்கன் லாந்தர் முன் போலவே எரிந்து கொண்டிருந்தது. வாசல் கதவை இழுத்துப் பார்த்தான். திறக்கவில்லை. வாசற்புறம் கதவைப் பூட்டிக் கொண்டுதான் அவர்கள் போயிருக்க வேண்டும். ஆகையால், அந்தக் கதவைத் திறக்க முயல்வதில் உபயோகமில்லை. கையில் லாந்தரை எடுத்துக் கொண்டு கொல்லைப் புறத்தை நோக்கி விரைந்து நடந்தான். நாலு கதவுகளைத் திறந்து தாழ்ப்பாளையும் திறந்து கொண்டு வெளியே வந்தான். அது சிறு சந்து என்று தெரிந்தது. லாந்தரை உட்புறம் வைத்துவிட்டுக் கதவைச் சாத்தி வெளிப்புறம் நாதாங்கி போட்டுக் கொண்டு, தனக்குத் தெரிந்தவரான டாக்டர் புஜங்கராவின் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாய்ச் சென்றான்.

சுமார் ஒரு மைல் தூரம் நடந்து, அவன் டாக்டர் புஜங்கராவின் வீட்டை அடைந்தபோது நள்ளிரவு இருக்கும். படபடவென்று கதவைத் தட்டினான். புஜங்கராவ் தேசியப் பற்றுள்ள டாக்டர்; காங்கிரஸ் அபிமானி. அன்று சாயங்காலம் போலீஸ் தடியடியினால் காயமடைந்த தொண்டர்களுக்கெல்லாம் சிகிச்சை செய்துவிட்டு, அரைமணி நேரத்துக்கு முன்பு தான் அவர் வீட்டுக்கு வந்து படுத்தார். அதற்குள் யாரோ வந்து கதவை இடிக்கவே, தொண்டர் யாருக்காவதுதான் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டு, அவர் வந்து கதவைத் திறந்தார்.

மகுடபதியைப் பார்த்ததும், "ஓகோ! யார் மகுடபதியா? நீ எப்போது வந்தே? சாயங்காலமெல்லாம் உன்னைக் காணவில்லையே!" என்றார்.

மகுடபதி பதறிய குரலில் "டாக்டர்! டாக்டர்! உடனே வரவேணும். ஒரு உயிரைக் காப்பாற்றவேணும். அதோடு என்னையும் தூக்குமேடைக்கு போகாமல் காப்பாற்ற வேணும்" என்றான். அவனுடைய பதட்டத்தையும், முகத்தில் தோன்றிய பீதியையும் பார்த்து, குழறிய வார்த்தைகளையும் கேட்ட டாக்டருக்கு அவனுடைய மண்டையில் போலீஸ் அடி பட்டதினால் மூளை குழம்பி விட்டதோ என்ற சந்தேகம் உண்டாயிற்று.

"மகுடபதி! இப்படி உள்ளே வா! என்ன விஷயம்? யாருக்கு என்ன உடம்பு? நிதானமாய்ச் சொல்லு."

"நிதானமாய்ச் சொல்வதற்கு இது சமயமில்லை, ஸார்! நீங்கள் கிளம்புங்கள். போகும்போதே சொல்கிறேன்" என்றான் மகுடபதி.

"என்ன கேஸ் என்று தெரியாமல் எப்படியப்பா கிளம்புகிறது? தெரிந்தால்தானே அதற்குத் தகுந்த ஆயுதங்களுடன் கிளம்பலாம்?"

"கத்திக் குத்து, டாக்டர், பெரியண்ணன் தெரியுமோ, இல்லையோ பெரியண்ணன்? அவன் மார்பிலே கத்திக் குத்து, இன்னும் உயிர் இருக்கிறது? டாக்டர்! சீக்கிரம் கிளம்புங்கள்."



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:37 am

கத்திக்குத்து என்றதும் டாக்டருடைய தயக்கம் இன்னும் அதிகமாகிவிட்டது. விவரமாய்ச் சொன்னால் தான் கிளம்ப முடியும் என்றார். அதன் மேல் மகுடபதி அவசர அவசரமாக அன்று சாயங்காலம் முதல் தனக்கு நேர்ந்தவைகளை ஒரு மாதிரி சொல்லி முடித்தான்.

எல்லாவற்றையும் கேட்டு, விஷயத்தை ஒருவாறு தெரிந்துகொண்ட புஜங்கராவ், "அப்பா! மகுடபதி! இது டாக்டர் கேஸ் மட்டுமல்ல; இது போலீஸ் கேஸ். ஏற்கனவே நம் பேரில் போலீஸாருக்குக் 'காட்டம்' இருக்கிறது. இந்தமாதிரி விஷயத்தில் அவர்கள் இல்லாமல் தலையிட்டோ மானால், ஆபத்தாய் முடியலாம். முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம். அங்கிருந்து போலீஸ் அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு நீ சொல்லும் வீட்டிற்குப் போவோம்" என்றார். வேறு வழியில்லாமல் மகுடபதி ஒத்துக் கொண்டான்.

டாக்டர் புஜங்கராவ், மோட்டார் டிரைவர் போய் விட்டபடியால், காரைத் தாமே எடுத்து மகுடபதியையும் ஏற்றிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். மகுடபதி மட்டும் போய் மேற்படி கதையைச் சொல்லியிருந்தானானால், என்ன நடந்திருக்குமோ, எப்படியாகி யிருக்குமோ, தெரியாது. டாக்டரும் கூடப் போயிருந்த படியால், ஒரு போலீஸ் ஸப்-இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீஸ் கான்ஸ்டேபிள்களும் டாக்டரின் வண்டியிலேயே கிளம்பினார்கள்.

அனுமந்தராயன் சந்தில், குறிப்பிட்ட வீட்டு வாசலில் போய் வண்டி நின்றது. எல்லாரும் அவசரமாய் இறங்கினார்கள். வாசற் கதவு பூட்டியிருந்தது.

"இந்த வீட்டு மச்சிலேதான் கிழவன் குத்துண்டு கிடக்கிறான். சீக்கிரம், சீக்கிரம்!" என்றான் மகுடபதி.

"கதவு பூட்டியிருக்கிறதே!" என்றார் இன்ஸ்பெக்டர்.

"பூட்டை உடைத்தால் போகிறது!"

"பூட்டை உடைப்பதற்கு ரூல் இல்லயே தம்பி!"

"அப்படியானால் வாருங்கள்; கொல்லைப் புறமாகப் போகலாம்."

கார் மறுபடியும் கிளம்பிற்று. கொல்லைப்புறச் சந்து ரொம்பக் குறுகலா யிருந்தபடியால், வண்டியைச் சற்றுத் தூரத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கி நடந்தார்கள். மகுடபதி எல்லாருக்கும் முன்னால் விரைவாக ஓடினான். மற்றவர்கள் வருவதற்குள் வெளி நாதாங்கியைக் கழற்றிக் கதவைத் திறந்து உள்ளே போய், அவன் வைத்த இடத்திலேயே இருந்த அரிக்கன் லாந்தரைத் தூண்டிவிட்டு எடுத்துக் கொண்டான். எல்லாரும் வீட்டினுள் பிரவேசித்து வாசல் கடைக்கு வந்து மச்சு மேலும் ஏறினார்கள்.

மகுடபதி, பெரியண்ணனுக்கு உயிர் இருக்கிறதோ இல்லையோ என்ற அசாத்திய கவலையுடன், மச்சு ஏறியதும், லாந்தரைத் தூக்கிப் பிடித்தான்.

அவனுடைய இருதயம் ஒரு நிமிஷம் நின்றே போயிற்று. ஏனெனில், சோபாவுக்குப் பக்கத்தில் அவன் எதிர்பார்த்த இடத்தில் பெரியண்ணனுடைய உடலைக் காணவில்லை!

ஹாலில் சுற்று முற்றும் பார்த்தான். எங்கும் காணவில்லை. ஓடிப்போய்த் தான் ஒளிந்திருந்த அறைக்குள் பார்த்தான். அங்கும் இல்லை.

சோபாவுக்குப் பக்கத்தில் சென்று தரையில் இரத்தக் கறை இருக்கிறதா என்று குனிந்து தேடினான். அதுவும் இல்லை. சட்டென்று பெரியண்ணன் சமுக்காளத்தில் விழுந்து கிடந்தான் என்பது நினைவு வந்தது. சமுக்காளத்தையே காணோம். அவர்கள் டிபன் சாப்பிட்ட பொட்டணக் காகிதம், ஜலம் இருந்த கூஜா ஒன்றும் இல்லை. ஒரு நிமிஷம் அந்த வீடுதானா என்பதே மகுடபதிக்குச் சந்தேகமாகி விட்டது. மேஜை நாற்காலிகளும், கால் ஒடிந்த சோபாவும், அந்த வீடுதான் என்ற உறுதியை அவனுக்கு உண்டாக்கின.

இன்னொரு அடையாளமும் இருந்தது. அரிக்கன் லாந்தர் கவிழ்ந்தபோது மண்ணெண்ணெய் கொட்டிற்றல்லவா? அந்தக் கறையும், நாற்றமும் இருந்தன.

ஆனால், பெரியண்ணன் என்னவானான்? அல்லது அவனுடைய உடல் என்னவாயிற்று? மாயமாய் அல்லவா மறைந்து போயிருக்கிறது?

"என்ன தம்பி! 'ஜோக்' பண்ணினாயா?" என்று ஸப்-இன்ஸ்பெக்டர் ஏளனமும் கோபமும் கலந்த குரலில் கேட்டார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:38 am

பத்தாம் அத்தியாயம் - "உள்ளே தள்ளு!"

ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கட ஹரிராவ் நாயுடுவின் முகத்தில், அவர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய போதிருந்தே, ஒருவிதக் கேலிப் புன்னகை குடிகொண்டிருந்தது. அதன் காரணத்தை நாம் அறிய வேண்டுமானால், மகுடபதி டாக்டர் புஜங்கராவ் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் மேற்படி ஸப்-இன்ஸ்பெட்கரின் வீட்டுக்கு நாம் போக வேண்டும்.

அன்று மாலை நடந்த போலீஸ் தடியடி வைபவத்தில் சங்கட ஹரிராவ் நாயுடுவும் கலந்து கொண்டு தம்முடைய பங்கை நிறைவேற்றி வைத்துவிட்டு, இரவு பத்து மணிக்குத் தான் வீட்டுக்கு வந்தார். அவர் வந்த அரை மணி நேரத்துக்கெல்லாம் வாசலில் கார் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவர் கார்க்கோடக் கவுண்டர் தான். இரண்டு பேருக்கும் ரொம்பவும் சிநேகிதம்.

"என்ன, பிரதர்! என்ன விசேஷம் இந்த நேரத்தில்?" என்று நாயுடுகாரு கேட்டார். உடனே, எதையோ நினைத்துக் கொண்டு, "ஓகோ?" மறந்தே போய்விட்டேனே? - இந்தக் கலாட்டாவில் உங்கள் காரியம் ஒன்று பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தீர்களே? காரியம் ஆச்சா?" என்று கேட்டார்.

"ஆச்சு - ஆகவில்லை!" என்றார் கார்க்கோடாக் கவுண்டர்.

"அப்படியென்றால் என்ன?"

"பாதி ஆகிவிட்டது. நீ கொஞ்சம் மனது வைத்தால் பாக்கிப் பாதியும் ஆகிவிடும்."

"என்ன பிரதர், புதிர் போடுகிறீர்கள்?" என்று நாயுடு கேட்டார்.

பிறகு, கார்க்கோடக் கவுண்டர் சாங்கோபாங்கமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, "பையனைக் கட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன். அவனைத் தூக்குமேடைக்கு அனுப்புவது உன் பொறுப்பு" என்றார்.

சங்கட ஹரிராவ் நாயுடு சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தார். "கவுண்டரண்ணே! விஷயம் நீங்கள் சொல்லுவது போல் அவ்வளவு சுலபமில்லை. கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. பையன் நடந்த விஷயத்தை 'ஸ்டேட்மெண்ட்' கொடுத்தால், சாட்சிக்குப் பெண்ணைக் கூப்பிட வேண்டியதாகும். பெண் எங்கே என்று தேடும் போது வம்பு வந்து சேரும். மேலும் அவள் யாருக்கோ கடிதம் கொடுத்து அனுப்பியதாகச் சொல்லுகிறீர்கள். அதனால் ஏதாவது தொல்லை வந்தாலும் வரும்" என்றார்.

"என்னப்பா, திடீரென்று உனக்குத் தொடை நடுக்கம் வந்துவிட்டது? இதைவிட எத்தனையோ கஷ்டமான கேஸையெல்லாம் சமாளித்திருக்கிறாயே."

"உங்களுக்குத் தெரியாது, பிரதர்! இப்போது டிபார்ட்மெண்ட் முன்னைப்போல இல்லை. துரை ரொம்பப் பொல்லாதவனா யிருக்கான். ஏதோ இந்தக் காங்கிரஸ்காரர்கள் கலாட்டாவினாலே, நமக்கெல்லாம் டிபார்ட்மெண்டிலே கொஞ்சம் மதிப்பு இருந்து வருகிறது. இல்லாமல் போனால்..."

"உன் அழுகையை ஆரம்பித்து விட்டாயாக்கும், இப்போது என்னதான் செய்யலாம் என்கிறாய்? - நேரம் ஆகிறது."

"வாஸ்தவம். இங்கே, உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் ஒன்றும் பிடிபடாது. 'ஸ்பாட்டு'க்குப் போய்ப் பார்ப்போம். தடையங்கள் எல்லாம் எப்படியிருக்கிறதென்று பார்த்துக் கொண்டு தீர்மானிக்கலாம். அந்த லெட்டர் டெலிவரி ஆச்சா, இல்லையா என்று மட்டும் நிச்சயமாய்த் தெரிந்து போய்விட்டால் தேவலை" என்று சொல்லிக் கொண்டே சங்கடஹரிராவ் நாயுடு எழுந்திருந்தார்.

இருவரும் காரில் ஏறி, 'ஸ்பாட்டு'க்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே, இவர்களுக்குப் பெரிய அதிசயம் காத்துக் கொண்டிருந்தது. கட்டிப் போட்டிருந்த மகுடபதியைக் காணோம். அதோடு, கிழவனிடமிருந்து முனகல் சப்தம் வந்தது.

கார்க்கோடக் கவுண்டர், டார்ச் லைட்டைப் பெரியண்ணனுடைய முகத்துக்கு நேராகக் காட்டினார். அவனுடைய கண்கள் சிறிது திறந்தன. கவுண்டரின் முகத்தைப் பார்த்து அக்கண்கள் திறுதிறுவென்று விழித்தன. கொஞ்சம் ஞாபகத்தின் அறிகுறி தோன்றியது. கிழவனுடைய வாய் பேசுவதற்கு முயன்றது. மிக மெலிந்த குரலில் "இரகசியம்... சொல்லாமற் போனால்... மன்னிக்க வேணும்..." என்ற வார்த்தைகள் குழறிக் கொண்டு வந்தன. கிழவன் மறுபடியும் ஞாபகத்தை இழந்துவிட்டான்.

"கிழவனுக்கு உயிர் ரொம்பக் கெட்டி; கத்தி அதிக ஆழம் போகவில்லை. உடனே சிகிச்சை செய்தால் பிழைத்துக் கொள்வான்" என்றார் ஸப்-இன்ஸ்பெக்டர்.

கார்க்கோடக் கவுண்டர் நாயுடுவின் முகத்தைப் பார்த்தபடி திகைத்து நின்றார்.

"அண்ணே! வெறுமே திகைத்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. பையன் அனேகமாய் ஸ்டேஷனுக்குத்தான் போயிருப்பான். நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன். உடனே கிழவனை அப்புறப்படுத்திவிட வேண்டும்..."

கவுண்டரின் முகத்தில் தோன்றிய கேள்விக் குறியைப் பார்த்துவிட்டு, "ஆமாம்; யோசிப்பதில் பிரயோசனம் இல்லை. கிழவனைப் பிழைக்க வைத்து விடுவதுதான் நல்லது. எது எப்படியிருக்குமோ, என்னமோ? பையனை வேறு விதத்தில் சரிப்படுத்திக் கொள்ளலாம்" என்றார் நாயுடு.

கவுண்டர், "நீ எப்படி ஸ்டேஷனுக்குப் போவாய்? கொண்டுவிட்டுத் திரும்பட்டுமா" என்று கேட்டார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக