புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
61 Posts - 48%
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
3 Posts - 2%
prajai
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
285 Posts - 42%
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
278 Posts - 41%
Dr.S.Soundarapandian
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
5 Posts - 1%
prajai
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகுடபதி - அமரர் கல்கி


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:24 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
மகுடபதி - அமரர் கல்கி




முதல் அத்தியாயம் - திறந்த வீடு

அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது.

கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் 'ஜே ஜே' என்ற ஜனக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன.

வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை.

பெரிய வீதிகளில் ஜன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது?

இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை - வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வருஷம், 1931; மாதம், ஜனவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?

1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார்.

மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள்.

அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது.

ஆனால், 1929-ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆகவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:44 am

பதின்மூன்றாம் அத்தியாயம் - மகுடபதி எங்கே?

காணாமற்போன கடிதம் வீடெங்கும் தேடிப்பார்த்தும் அது அகப்படவில்லை. மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வந்ததாகச் சொன்ன மருதக் கவுண்டனைக் கடிதத்தைப் பற்றிக் கேட்டதற்கு அவன், "நான் கண்டதே இல்லை" என்று சத்தியம் செய்துவிட்டான்.

அய்யாசாமி முதலியார் அத்துடன் அந்தச் சனியனை மறந்து விட்டு, சைவ சித்தாந்தப் பத்திரிகைக்குத் தாம் எழுதி வந்த பதினோராந் திருமுறை ஆராய்ச்சியில் இறங்கியிருப்பார். அதற்குப் பங்கஜம் இடங்கொடுக்க வில்லை. அவள் நாவல் எழுதுவதைக் கூட விட்டுவிட்டாள். ஏற்கெனவே செந்திருவின் பேரில் அவளுக்கிருந்த வாஞ்சையோடு, இப்போது அவளைப் பற்றிய மர்மத்தை அறியும் ஆவலும் சேர்ந்து கொண்டது. அப்பாவை நச்சுப்பண்ணத் தொடங்கினாள்.

"கேளுங்கள், அப்பா! நாங்கள் ஸெகண்ட் பாரத்திலே வாசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் என்னைக் காட்டிலும் செந்திரு அதிகமாக ஐந்து மார்க் வாங்கி விட்டாள். அதற்காக அவள் அழுஅழு என்று அழுதாள். மறுநாள் வேண்டுமென்று கணக்கைத் தப்பாகப் போட்டுக் குறைச்சலா மார்க் வாங்கினாள். அவள் வீட்டில் ஏதாவது பணியாரம் பண்ணினால் நான் வந்து சாப்பிட்டாலொழிய அவள் சாப்பிடமாட்டாள். நான் புதுத்துணி உடுத்தாமற் போனால் அவளும் உடுத்த மாட்டாள். கோயிலுக்குப் போய் சுவாமி கும்பிடும்போது, எனக்காகத்தான் முதலில் பிரார்த்தனை செய்வாள். இப்படியெல்லாம் பிராண சிநேகிதியாய் இருந்தவளுக்கு இப்போது ஒரு கஷ்டம் வந்திருக்கும்போது, அதைத் தெரிந்து கொண்டு ஏதாவது பரிகாரம் செய்யாமல் நான் எதற்காக உயிரோடிருப்பது?" என்று இப்படியெல்லாம் தொண தொண வென்று பேசி முதலியாரின் பிராணனை வாங்கினாள். செல்லப் பெண்ணாகிய பங்கஜத்தின் மனம் உண்மையாகவே கவலையில் ஆழ்ந்திருக்கிறது என்பதை முதலியார் கண்டபோது, ஏதாவது செய்துதானாக வேண்டுமென்று தீர்மானித்தார். இன்னது செய்வது என்பதுதான் தெரியவில்லை. எனவே, அவருடைய நண்பரான போலீஸ் டிபுடி சூபரிண்டெண்டெண்ட் ராவ்பகதூர் சங்கநாதம் பிள்ளையிடம் யோசனை கேட்பதென்று தீர்மானித்தார்.

ராவ்பகதூர் சங்கநாதம் பிள்ளை போலீஸ் இலாகாவிலும் பொதுஜனங்களிடமும் ரொம்பப் பெயர் வாங்கினவர். இலாகவில் அவரைத் திரிசங்குப்பிள்ளை என்று சொல்வதுண்டு. ஜனங்கள் சாதாரணமாக லஞ்சநாதம் என்று அவரை அழைப்பார்கள்.

அவருக்கு ராவ்பகதூர் பட்டம் எப்படி வந்ததென்றால், கொல்லிமலைப் பக்கத்தில் ஒரு பிரசித்திபெற்ற கொள்ளைக்காரனைப் பிடிக்கப்போய் உயிருடன் திரும்பி வந்த வீரத்துக்காகத்தான். அதாவது, அவருடன் போன போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் ஒருவன், கொள்ளைக்காரனுடன் நேருக்கு நேர் நின்று துப்பாக்கியால் சுட்டபோது, கொள்ளைக்காரன் காயம்பட்டுவிழ, ஹெட்காஸ்டபிள் சுடப்பட்டு இறந்தான். அவன் மனைவிக்கு மாதம் ஒன்பது ரூபாய் பென்ஷன் கிடைத்தது. சங்கநாதம்பிளை சற்று தூரத்தில் மரத்தின் மறைவில் நின்று தப்பித்துக் கொண்டு திரும்பியபடியால், கொள்ளைக்காரனைப் பிடித்ததற்காக பிரமோஷனும் ராவ் பகதூர் பட்டமும் கிடைத்தன!

அவருக்குத் திரிசங்குப்பிள்ளை என்று ஏன் பெயர் வந்ததென்றால், இவர் ஏககாலத்தில் இகத்தையும் பரத்தையும் தேடிக்கொள்ள முயன்றதனால்தான்.

சங்கநாதம்பிள்ளை, சைவத்தொண்டர் மகாநாடுகளில் சொற்பொழிவு நிகழ்ந்த ஆரம்பித்தாரானால், சபையில் சிறிது நேரத்துக்கெல்லாம் சாதாரணமாக சபைத்தலைவரையும் மகாநாட்டுக் காரியதரிசியையுந் தவிர யாரும் இருக்கமாட்டார்கள். வேடிக்கையாகச் சொல்வதுண்டு: "காங்கிரஸ் கூட்டங்களைக் கலைப்பதற்குச் சங்கநாதம் பிள்ளையை அனுப்பினால் போதும்; குண்டாந்தடிக்குப் பயப்படாத ஜனங்கள் கூட அவருடைய சொற்பொழிவுக்குப் பயந்து ஓடிப்போவார்கள் என்று."

அப்படிப்பட்ட சங்கநாதம்பிள்ளையின் பிரசங்கத்தைக் கடைசி வரையில் இருந்து ஆர்வத்துடன் கேட்டுப் பாராட்டுகிறவர் நமது அய்யாசாமி முதலியார். அவர் போகிறவரையில் பங்கஜமும் சபையிலிருந்து எழுந்து போக முடியாதாகையால், ஸ்திரீகள் பகுதியில் அவளும் சிவனே யென்று தன்னுடைய நாவலின் அடுத்த அத்தியாயத்தைப் பற்றிச் சிந்தனை செய்துகொண்டு உட்கார்ந்திருப்பாள்.

இப்படியாக, அப்பா, பெண் இருவருக்கும் நன்றிக் கடன் பட்டவரான ராவ்பகதூர் சங்கநாதம் பிள்ளை, அவர்களுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். முதலில், அவர்கள் செந்திருவைப் பற்றியும், மர்மமாக மறைந்த கடிதத்தைப் பற்றியும் சொன்னதையெல்லாம் அவர் காதில் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. பேரூரில் தாம் நிகழ்த்திய சொற்பொழிவைக் குறித்து அவர்களுடைய அபிப்பிராயத்தை அறிவதிலேயே ஆவலாயிருந்தார். "பாருங்கள், மாமா, நான் எழுதுகிற நாவலிலே போலீஸ் இலாகாவே கொஞ்சமும் உபயோகமில்லை என்று எழுதி வெளுத்து வாங்கி விடுகிறேன்" என்று பங்கஜம் சொன்னதனால்கூடப் பலன் ஏற்படவில்லை. "நான் வாங்குகிற பெயரெல்லாம் வாங்கியாச்சு, அம்மா! இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறது பென்ஷன் வாங்க, இனிமேல் எனக்கு என்ன?" என்றார்.

கடைசியில் பங்கஜம், "மாமா! நீங்கள் மட்டும் செந்திருவை எனக்குக் கண்டுபிடித்துக் கொடுக்காமல் போனீர்களோ, இனிமேல் உங்களுடைய பிரசங்கத்தைக் கேட்கவே வரவேட்டேன்" என்று சொன்னதுந்தான், ராவ்பகதூருக்கு 'ஓகோ? விஷயம் 'ஸீரியஸ்' போலிருக்கிறது என்ற உணர்ச்சி வந்தது. பிறகு, பங்கஜத்தை எல்லா விவரமும் சொல்லச் செய்து கவனமாகக் கேட்ட பிறகு, "சிங்கமேட்டுக் கவுண்டர் காரியங்கள் அவ்வளவு சரியாயில்லை யென்று எனக்குக் கூடக் கேள்வி; விசாரிக்க வேண்டிய விஷயந்தான்" என்று ஒப்புக்கொண்டார்.

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, மருதக் கவுண்டர் உள்ளே வந்து "டாக்டர் புஜங்கராவ்" என்று அச்சடித்த சீட்டைக் கொடுத்தான்.

"இது யார் டாக்டர் புஜங்கராவ்? எனக்குத் தெரியாதே?" என்றார் அய்யாசாமி முதலியார்.

"டாக்டர் புஜங்கராவ், ரொம்ப நல்ல மனுஷர். காரியமில்லாமல் வந்திருக்கமாட்டார்" என்றார் ராவ்பகதூர்.

டாக்டர் புஜங்கராவ் உள்ளே வந்ததும், சங்கநாதம் பிள்ளையைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

அப்போது பிள்ளை "என்ன, டாக்டர்? ஏது இவ்வளவு சாவகாசம்? சத்தியாக்கிரகமெல்லாம் ஒரு மாதிரி தீர்ந்து போய் விட்டதாக்கும்?" என்றார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:44 am

"சத்தியாக்கிரகம் ஒரு மாதிரி தீர்ந்துபோனது போலத்தான். ஆனால் எனக்கு இன்னும் பல நாளைக்கு ஜோலி வைத்திருக்கிறீர்கள். மண்டை உடைந்தவனும், முழங்கால் சில்லுப் பேர்ந்தவனும், எலும்பு ஒடிந்தவனுமாகப் பதினைந்து பேருக்குச் சிகிச்சை செய்து வருகிறேன்" என்றார் டாக்டர்.

டாக்டர் புஜங்கராவ் பின்னர் அய்யாசாமி முதலியாரிடம் தனியாகக் கொஞ்சம் பேசவேண்டுமென்று தெரிவிக்க, இருவரும் எழுந்து அடுத்த அறைக்குப் போனார்கள். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் அவர்கள் திரும்பி வந்தார்கள். "பிள்ளைவாள்! என்ன ஆச்சரியத்தைச் சொல்ல? நாம் பேசிக் கொண்டிருந்த விஷயமாகத்தான் டாக்டரும் வந்திருக்கிறார்" என்றார் முதலியார்.

பிறகு, டாக்டர் புஜங்கராவ், அன்றிரவு மகுடபதி தன்னிடம் வந்தது முதல் நடந்தது எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார். அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, நடுவில் சங்கநாதம் பிள்ளை விரலால் சமிக்ஞை செய்துவிட்டு எழுந்து வெளியில் போய், எச்சில் துப்பிவிட்டுத் திரும்பி வந்தார். கதவுக்குப் பக்கத்தில் மருதக் கவுண்டன் நின்று உற்றுக் கேட்டுக் கொண்டிருந்ததைக் கடைக்கண்ணால் கவனித்துவிட்டுத்தான் திரும்பினார். உள்ளே வந்ததும் ஒரு சீட்டில், இங்கிலீஷில் "இந்தக் கடிதம் கொண்டு வருகிறவனைப் பிடித்து நான் வரும் வரையில் லாக்-அப்பில் வைத்திருக்கவும்" என்று எழுதி கவரில் போட்டு மூடினார். "முதலியார்வாள்! உங்கள் வேலைக்காரனை இதைக் கொண்டு போய்ப் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துவிட்டு வரச் சொல்லுங்கள்" என்றார்.

அவ்விதமே முதலியார் மருதக் கவுண்டனை அழைத்துக் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்.

பின்னர், டாக்டர் புஜங்கராவ் பாக்கிக் கதையையும் சொன்னார். அன்றிரவு சம்பவங்களைத் தாம் மறந்து விட்டுத் தம் காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், ஆனால் ஸப்-ஜெயிலிலிருந்து தன்னை வந்து பார்க்க வேணுமென்று அடிக்கடி மகுடபதி சொல்லி அனுப்பியதாகவும், அதன்மேல் போய்ப் பார்த்ததாகவும், அப்போது மகுடபதி, "டாக்டர்! அன்று இரவு நான் சொன்னதில் உங்களுக்கு நம்பிக்கை பிறக்காவிட்டால், தயவுசெய்து மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் வீட்டுக்குப் போய்ச் செந்திருவின் கடிதம் வந்ததா என்று விசாரியுங்கள்" என்று வற்புறுத்திச் சொன்னதாகவும், அதன்மேல் முதலியாரைத் தேடி வந்ததாகவும் கூறினார்.

கடிதம் வந்தது உண்மை என்றும், அது காணாமல் போன விந்தையைப் பற்றியும் முதலியார் டாக்டருக்குச் சொன்னார். எல்லோரும் சேர்ந்து ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் என்று ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். மகுடபதியைத் தாமே நேரில் பார்த்துவிட்டு அவனை விடுதலை செய்ய முயற்சிப்பதாகச் சங்கநாதம் பிள்ளை வாக்களித்துவிட்டுப் போனார்.

அன்று அஸ்தமித்த பிறகு ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் நாயுடு எதிர்பாராத விதமாக டாக்டர் புஜங்கராவிடம் வந்தார்.

"என்ன பிரதர்! பெரிய எழவாப் போச்சு! இந்த மாதிரி டிபார்ட்மெண்டிலே வேலை பார்க்கிறதை விட நானும் உங்களைப்போல ஏன் மெடிகல் காலேஜிலே சேரவில்லை என்று 'ரிபெண்ட்' பண்ணவேண்டியதாயிருக்கு" என்றார்.

"என்ன, நாயுடுகாரு? என்ன வந்துவிட்டது இப்போது?" என்று டாக்டர் கேட்டார்.

"அதை ஏன் கேட்கிறீர்கள்? அன்றைக்கு ராத்திரி வந்து கில்லாடித்தனம் பண்ணினானல்லவா? மகுடபதி என்ற பையன்? அவனாலே மெத்தத் தொந்தரவு, பிரதர்! ஒரு வேளை உங்களைப் பார்க்க வந்திருப்பானோ என்று பார்க்க வந்தேன்."

"இது என்ன கூத்து? அவன் தான் ஸப்-ஜெயிலில் இருந்தானே? நான் கூட முந்தாநாள் பார்த்தேனே?"

"ஆமாம், டாக்டர்! நேற்றுக் காலை வரையில் இருந்தான். நேற்று மத்தியானந்தான் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் கூப்பிட்டு, 'ஜாமீன் கேஸ் ஒன்றும் போடவேண்டாம். இந்தத் தடவை ஜெயிலுக்கே யாரையும் அனுப்பக்கூடாது. ஆகவே எல்லாரையும் துரத்தி விடுங்கள்' என்றார். இந்தப் பையனையும் வெளியில் அனுப்பி விட்டேன். இப்போது என்னடாவென்றால்..."

டாக்டர் புஜங்கராவ் மிக்க அதிசயத்துடன், "ஆமாம், இப்போது ஏன் அவனைத் தேடுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"திடீரென்று நம்ம டிபுடி துரைவாளுக்கு ஏதோ தோன்றிவிட்டது. 'அந்த மகுடபதியை எங்கிருந்தாலும் கொண்டு வா!' என்கிறார். நான் எங்கே போய்த் தேடுறது. பிரதர்! இன்னொன்று கேளுங்கள். யாரோ ஒரு மருதக் கவுண்டன் என்பவனிடம் 'இவனைப் பிடித்து லாக்-அப்பில் போடு' என்று கடிதம் கொடுத்து அனுப்பினாராம். அவன் எப்படியோ விஷயம் தெரிந்து கொண்டு இன்னொருத்தனிடம் கடிதத்தை அனுப்பி விட்டுக் கம்பி நீட்டி விட்டான். லாக்-அப்பில் இருந்த ஆள் வேறே ஆளாயிருக்கவே, துரைக்கு என் பேரில் கோபம். நான் என்ன செய்யட்டும், பிரதர்! இப்படியெல்லாம் அல்லாடுகிறதைவிடப் போலீஸ் உத்தியோகத்தை விட்டுவிடலாமென்று தோன்றுகிறது, பிரதர்! உங்களுடைய ஒபீனியன் என்ன?" என்றார் சங்கடஹரிராவ் நாயுடு.

இந்தக் கேள்வி டாக்டர் புஜங்கராவின் காதில் விழவேயில்லை. மகுடபதி எங்கே போயிருப்பான் என்று அவருடைய மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:46 am

பதினான்காம் அத்தியாயம் - சித்தப் பிரமை

செந்திருவைக் காண வேண்டுமென்று பங்கஜம் துடிதுடித்தான்.

அவளுடைய ஆவலுக்கு இப்போது புதிய ஒரு காரணம் சேர்ந்து கொண்டது. அந்தக் காரணம் மகுடபதி தான்!

அந்த நிமிஷத்தில் பங்கஜம் செந்திருவைப் பார்த்திருந்தால், அவளுடைய கஷ்டங்களைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தைகூடக் கேட்டிருக்கமாட்டாள். "அடி-பொல்லாத திருடி! உனக்குக் கதை பிடிக்காது. காதல் பிடிக்காது. கல்யாணம் பிடிக்காது என்று சொல்லிக் கொண்டிருந்தாயே? கன்னிப் பெண்ணாகவே இருந்து, பள்ளிக்கூட மிஸ்ட்ரஸ் வேலைக்குப் போவதாகச் சொன்னாயே? கடைசியில், இப்படிச் செய்தாய், பார்த்தாயா? சாதுவைப் போல் இருப்பவர்களை நம்பவே கூடாது; பொல்லாத கள்ளி!" என்று அவள் கன்னத்தை இடித்திருப்பாள். இன்னும் அவளுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, "அடிபெண்ணே! செந்திரு! அவன் எப்படியடி இருப்பான்? முதன் முதலில் நீங்கள் எங்கே பார்த்துக் கொண்டீர்கள்? யார் முதலில் பேசியது? நீயா? அவனா? நீ என்ன சொன்னாய்? அவன் என்ன பதில் சொன்னான்? எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையில் மூன்று குட்டுக் குட்டுவேன்!" என்று உண்மையாகவே தலையில் குட்டிக் காட்டியிருப்பாள்.

இப்படியாகச் செந்திருவிடம் பேசவேண்டும், கேட்க வேண்டும் என்றெல்லாம் பங்கஜத்துக்கு ஆவல் பொங்கிற்று. மேலே நாவல் எழுதுவதற்குக்கூட அவளுக்கு ஓடவில்லை. நாவலாவது, மண்ணாங்கட்டியாவது? தன்னுடைய சிநேகிதி, இணைபிரியாத பள்ளிக்கூடத் தோழி - கதை, காதல் என்று பேசினால், பிடிக்காமல் முகத்தைச் சிணுக்கியவள் - அவள் அல்லவா இப்போது பெரிய கதாநாயகி ஆகிவிட்டாள்? செந்திருவுக்கு ஒரு காதலன் - அவளுக்காக அவன் தன் உயிரைக்கூடத் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறான்! என்ன அதிசயம்? செந்திருவை மட்டுமில்லை - மகுடபதியைப் பார்க்க வேண்டுமென்று கூடப் பங்கஜம் ரொம்பவும் ஆவல் கொண்டாள். அவன் எப்படி இருப்பான்? சிறு பிள்ளையாய், லட்சணமாய் இருப்பானா? மீசையும் கீசையுமாய்ப் பயங்கரமா யிருப்பானா? கிராப்புத் தலையா? குடுமியா? உச்சிக் குடுமியா? காந்திக் கட்சியைச் சேர்ந்தவன் என்றால், ஒருவேளை தாடி கூட வளர்த்துக் கொண்டிருப்பானோ? சீச்சீ! ஒரு நாளும் இராது. செந்திருவைப் போன்ற அழகியின் காதலுக்கு உகந்தவனாகத்தான் அவன் இருப்பான். எல்லாம் கொஞ்ச நேரத்தில் தெரிந்து போகிறது. அப்பாவும் போலீஸ் மாமாவுந்தான் செந்திருவைக் கையோடு கூட்டிக் கொண்டு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்களே? ஆனால் ஏன் இன்னும் அவர்கள் வரவில்லை?

இவ்விதமெல்லாம் பங்கஜம் இரவு பத்து மணி சுமாருக்குத் தன்னுடைய அறையில் தனிமையாக உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் மற்ற எல்லாரும் இரவுச் சாப்பாடு முடிந்து படுத்துக் கொண்டு விட்டார்கள். பங்கஜம் மட்டும், நாவல் எழுதப் போவதாகச் சொல்லிவிட்டுத் தன்னுடைய அறைக்கு வந்தாள். அவள் மேஜையின் மேல் மூடியிட்ட விளக்கும், விரித்த காகிதமும், பேனாவும் இருந்தன. ஆனால், காகிதத்தின் தலைப்பில்.

நாற்பத்தேழாம் அத்தியாயம்

மாய மனிதன்

என்று போட்டிருந்ததைத் தவிர, அதன் கீழே ஒரு வரிகூட எழுதப்படவில்லை.

கடிகாரத்தின் மணி பத்து டாண், டாண் என்று அடித்த போது, வாசலில் வண்டிச் சத்தம் கேட்டது. பங்கஜம் அவசரமாக விரைந்து வாசற் பக்கம் சென்றாள். சாலையில் நின்ற மோட்டாரிலிருந்து அவளுடைய தகப்பனார் இறங்கி வருவதைக் கண்டாள். வேறு ஒருவரும் வண்டியிலிருந்து இறங்கவில்லை. காரிலிருந்தபடியே போலீஸ் மாமா "குட் நைட்" என்றார். வண்டி போய் விட்டது.

அய்யாசாமி முதலியார் பங்களா வாசலுக்கு வந்ததும், பங்கஜம் அவர் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, "என்ன சேதி, அப்பா! செந்திருவைப் பார்த்தீர்களா? எங்கே பார்த்தீர்கள்? எப்படி இருக்கிறாள்? சௌக்கியமா யிருக்கிறாளா? ஏன் அவளை அழைத்து வரவில்லை? அவர்கள் விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்களா? என்ன பேசாமல் இருக்கிறீர்களே? ஒன்றும் சொல்லவே மாட்டேன் என்கிறீர்களே?" என்று சரமாரியாய் கேள்விகளைப் பொழிந்தாள்.

"நீ இடங் கொடுத்தால்தானே அம்மா, நான் பேசலாம்? எல்லாம் சாவகாசமாய்ச் சொல்கிறேன். உன்னுடைய அறைக்குப் போகலாம் வா!" என்றார் அய்யாசாமி முதலியார்.

"இதை மாத்திரம் சொல்லி விடுங்கள். அப்புறம் அனுஷ்டானம் செய்து சாப்பிட்டுவிட்டு எல்லாம் விவரமாய்ச் சொல்லலாம். செந்திருவைப் பார்த்தீர்களா?" என்று பங்கஜம் பரபரப்புடன் கேட்டாள்.

"சௌக்கியந்தான் - ஒரு மாதிரியாக. அனுஷ்டானம் சாப்பாடு எல்லாம் ஆகிவிட்டன. அம்மாவை எழுப்ப வேண்டாம். உன் அறைக்குப் போகலாம், வா! எல்லாம் விவரமாய்ச் சொல்கிறேன்" என்றார் முதலியார்.

இருவரும் பங்கஜத்தின் அறைக்குப் போனார்கள். முதலியார் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டார். அவர் அருகில் ஒரு சின்ன நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு பங்கஜம் உட்காந்தாள்.

"என்ன, அப்பா, ஒரு மாதிரியா 'சௌக்கியம்' என்கிறீர்களோ? ரொம்பக் கவலையாயிருக்கிறதே!" என்றாள்.

"நாம் கவலைப்பட்டு அவளுக்கு ஒன்றும் செய்வதற்கில்லை, அம்மா! எல்லாம் தலையில் எழுதின எழுத்துப்படிதானே நடக்கும்! பாவம், மருதாசலக் கவுண்டர் எவ்வளவோ உத்தமமான மனுஷர், அவர் குடும்பம் ஏன் இப்படி துரதிஷ்டமாகப் போக வேண்டும்!"

"என்ன, அப்பா, அவளுக்கு? சொல்ல மாட்டேன் என்கிறீர்களே? அந்தக் கடுதாசி அவள் எங்கிருந்து எழுதினாளாம்?"



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:47 am

"அந்தக் கடுதாசைப் பற்றி நாம் காபரா அடைந்ததெல்லாம் வீண்..."

"அப்படியா?"

"ஆமாம், இன்று காலையில் நாங்கள் இங்கிருந்து கிளம்பியதிலிருந்து நடந்ததை எல்லாம் சொல்லி விடுகிறேன், கேள். நானும், ராவ்பகதூரும் நேரே சிங்கமேட்டுக்குப் போனோம். செந்திருவின் சித்தப்பா ஊரில்தான் இருந்தார். அவரோடு கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டரும் இருந்தார். கள்ளிப்பட்டிக் கவுண்டர் ரொம்பப் பொல்லாதவர் என்று எல்லோரும் செல்வதுண்டு. ஆனால், ஒரு பொல்லாத்தனத்தையும் நாங்கள் காணவில்லை. பேரூருக்குக்கூட வந்திருந்து என்னுடைய உபந்நியாசத்தை அவர் கேட்டாராம்."

"செந்திரு இப்போது சிங்கமேட்டிலேதான் இருக்கிறாளா, அப்பா? நானாவது போய்ப் பார்க்கலாமா?"

"இதற்குள் அவசரப்படுகிறாயே? எங்களை ரொம்பவும் மரியாதையுடன் வரவேற்று உபசாரம் செய்தார்கள். செந்திருவின் விஷயத்தை எப்படிக் கேட்பது என்று நாங்கள் தயங்கிக் கொண்டிருக்கையில், கள்ளிப்பட்டிக் கவுண்டரே அந்தப் பேச்சை எடுத்து விட்டார். 'நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இந்தக் கடிதம் விஷயமாகத் தான் வந்திருக்கிறீர்கள்!' என்று ஒரு கடிதத்தை எடுத்துப் போட்டார். அது செந்திருவின் கடிதந்தான். குழந்தை! உன்னுடைய ஞாபக சக்தி சில விஷயங்களில் அபாரமாயிருக்கிறது. கிட்டத்தட்ட நீ எழுதிக் காட்டினபடியே இருந்தது" என்று சொல்லி, முதலியார் பங்கஜத்தைப் பெருமையுடன் பார்த்தார்.

"இருக்கட்டும், அப்பா! செந்திருவைப் பார்த்தீர்களா, இல்லையா?"

"அதுதானே, சொல்லப் போகிறேன்? கேட்டுக் கொண்டே வா. கள்ளிப்பட்டிக் கவுண்டர் பிறகு என்ன சொன்னார் தெரியுமா? எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. 'இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறது ஒரு மாதிரி உண்மை தான். அந்தப் பெண்ணை ஜெயிலில்தான் வைத்திருக்கிறது. நீங்கள் விடுதலை செய்து கொண்டு போவதாயிருந்தால் ரொம்ப சந்தோஷம். நாங்கள் குறுகே நிற்கவில்லை. அதனால் ஏதாவது விபரீதம், உயிர்ச்சேதம் நேர்ந்தால் மட்டும் எங்களைப் பொறுப்பாக்காதீர்கள்! அந்தப் பெண்ணை விடுதலை செய்துகொண்டு போக நீங்கள் இரண்டு பேர் போதாது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் ஏழெட்டுப் பலசாலிகளான மனிதர்களாவது வேண்டும். அப்புறம் உங்கள் இஷ்டம்' என்று கள்ளிப்பட்டிக் கவுண்டர் சொன்னார். அவர் சொன்னதின் அர்த்தம் எங்களுக்குத் தெரிந்ததும், ரொம்பவும் துக்கம் உண்டாயிற்று."

பங்கஜம் வியப்புடனும் பயத்துடனும் "என்ன, அப்பா அவர் சொன்னதின் அர்த்தம்? எனக்குப் புரியவில்லையே?" என்றாள்.

"நீ வீணாக வருத்தப்படாதே, பங்கஜம்! விதிக்கு யார் என்ன செய்யலாம்? உன் சிநேகிதிக்குச் சித்தப் பிரமை; அதுவும் ரொம்பக் கடுமையான பிரமை!..."

"இல்லவே இல்லை; இருக்கவே இருக்காது" என்று கத்தினாள் பங்கஜம்.

"இல்லாமலிருந்தால் நல்லதுதான்; ஆனால், இருக்கிறதை இல்லையென்று எப்படிச் சொல்லமுடியும்?"

"அவர்கள் சொன்னதுதானே? நீங்கள் நேரில் பார்க்கவில்லையே?"

"இப்படிக் கேட்பாய் என்று எனக்குத் தெரியும். ஆகையினால்தான், கள்ளிப்பட்டிக் கவுண்டர் 'நேரில் காட்டிவிடுகிறேன்' என்று சொன்னபோது நான் சரி என்றேன். ராவ்பகதூர் பிள்ளைக்குக் கூட அவ்வளவு இஷ்டமில்லை. 'இவர்கள் சொல்கிறது போதாதா? நாம் திரும்பிவிடலாம்' என்றார், நான் தான் போய்ப் பார்த்து விடலாம் என்று வற்புறுத்தினேன். மருதாசலக் கவுண்டருக்கும் எனக்கும் இருந்த சிநேகிதத்தைச் சொல்லி, அந்தப் பெண்ணை கண்ணாலேயாவது பார்த்துவிட்டு வரலாம் என்றேன். பார்க்காமல் போனால், நீ என்னை இலேசில் விடமாட்டாய் என்றும் சொல்லி வைத்தேன். மத்தியானம் சாப்பிட்ட பிறகு எல்லோருமாகக் கிளம்பினோம்..."

"எங்கே கிளம்பினீர்கள்? அப்படியானால், செந்திரு சிங்கமேட்டில் இல்லையா?"

"பத்து நாளைக்கு முன்பு வரையில் சிங்கமேட்டில் தான் இருந்தாளாம். ஒரு நாளைக்குத் திடீரென்று கிளம்பி ஒருவருக்கும் தெரியாமல் கோயமுத்தூருக்கு ஓடி வந்திருக்கிறாள். ஓடி வந்த இடத்தில் உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாள். அந்தச் சமயம் மட்டும் நாம் ஊரில் இருந்திருந்தால் இவ்வளவு தடபுடல் ஏற்பட்டிராது..."

"என்ன, அப்பா, சொல்கிறீர்கள்? சித்தப் பிரமையோடேயா இந்த ஊருக்கு வந்தாள்?"

"ஆமாம், குழந்தை, ஆமாம்! அந்தச் சமயம் அவ்வளவு அதிகம் இல்லையாம். வீட்டில் சாதாரணமாய் நடமாட விட்டிருந்தார்களாம். ஒருவரும் கவனிக்காத சமயம் பார்த்து வீட்டை விட்டுக் கிளம்பி விட்டாளாம். பெரியண்ணன் என்கிற அவர்களுடைய வீட்டு வேலைக்காரன் அவளைத் தேடிக் கொண்டு கிளம்பி வந்து, ரயில்வே ஸ்டேஷனில் அவள் ரயில் ஏறுகிற சமயத்தில் கண்டுபிடித்தானாம். இரண்டு பேருமாக இந்த ஊருக்கு வந்தார்களாம். இங்கே சிங்கமேட்டுக் கவுண்டர் வீட்டிற்கு மெதுவாகத் தாஜா பண்ணி அவளை அழைத்துக் கொண்டு போனானாம் அந்தப் பெரியண்ணன். வீட்டின் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, அந்த வீட்டிலேயே அவள் இராத்திரி இருக்க வேண்டுமென்று சொன்னதுந்தான், கத்தியை எடுத்து அவனைக் குத்திவிட்டாளாம்...!"



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:48 am

பதினைந்தாம் அத்தியாயம் - மனித நிழல்

செந்திரு பெரியண்ணனைக் குத்தினாள் என்று அய்யாசாமி முதலியார் சொன்னதும், பங்கஜம் நெருப்பை மிதித்தவள் போல் துள்ளி எழுந்து, "ஐயையோ! என்ன அப்பா சொல்லுகிறீர்கள்?" என்றாள்.

"ஆமாம், அம்மா! நடந்ததைத்தான் சொல்கிறேன்."

"செந்திருவா கத்தியை எடுத்து ஒருவனைக் குத்தினாள்? சொல்கிறவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி எங்கே போச்சு என்பார்களே?..."

அய்யாசாமி முதலியார் புன்னகையுடன், "எங்கள் மதி எங்கேயும் போகவில்லை. சரியாகத்தான் இருக்கிறது. உன் தோழியின் மதிக்குத்தான் கேடு வந்துவிட்டது. எல்லாம் துரதிர்ஷ்டந்தான்" என்றார்.

"என்னதான் சித்தப் பிரமை என்றாலும், கத்தியால் குத்தத் தோன்றுமா அப்பா! அதிலும் செந்திரு, பாவம், ஒரு எறும்பு ஈயைக்கூட ஒன்றும் செய்யமாட்டாளே? ஜட்கா வண்டிக்காரன் குதிரையை அடித்தால், அதைப் பொறுக்காமல் கண்ணைப் பொத்திக் கொள்வாளே? அவள் கத்தியை எடுத்து ஒருவனைக் குத்தினாள் என்றால், எப்படி நம்புகிறது, அப்பா?"

"நம்புவது கஷ்டந்தான், குழந்தை! யார் இல்லை என்றார்கள்? உன் சிநேகிதிக்கு இப்படி வரவேண்டாந்தான். ஒரு வேளை அவள் அப்பா உயிரோடிருந்து, மயிலாப்பூரில் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு சந்தோஷமாக யிருந்திருந்தால், இப்படியெல்லாம் வந்திராது. தலையில் எழுதிய எழுத்தை யாராலாவது அழித்து விடமுடியுமா? - ஆனால், உனக்கு ஒன்று சொல்கிறேன். பங்கஜம்! குத்து வெட்டு எல்லாம் நமக்குத்தான் பயங்கரமே தவிர, இந்த ஜில்லாவில் ரொம்ப சகஜம். நமது சென்னை ராஜதானியிலே வருகிற கொலைக் கேஸுகளிலே பாதி கோயமுத்தூர் ஜில்லாவில் தான். இந்தக் கொங்கு நாட்டின் காற்றிலேயே ஏதோ கேடு இருக்க வேண்டும். உன் சிநேகிதியைத்தான் எடுத்துக் கொள்ளேன். அவள் இப்படி மாறிப்போவாளென்று யார் கண்டார்கள்? அப்பா! என்ன பயங்கரமான கூச்சல்! 'குத்து' 'வெட்டு' 'கொலை' 'இரத்தம்' 'பலி' என்றெல்லாம் அவள் போட்ட பயங்கரமான கூச்சலைக் கேட்டிருந்தால், நீ நடுங்கிப் போயிருப்பாய்" என்றார் முதலியார்.

"ஐயோ! அப்படியா? நீங்களே பார்த்தீர்களா அப்பா?"

"அதுதான் சொன்னேனே. நீ இப்படிக் கேட்பாயென்று தெரிந்துதான் நேரே போய்ப் பார்த்துவிட்டு வந்து விடுவோம் என்று ராவ்பகதூரிடம் சொன்னேன். எல்லோருமாக மத்தியானம் கிளம்பினோம்."

"எங்கே கிளம்பினீர்கள்? அப்படியானால் செந்திரு இப்போது சிங்கமேட்டில் இல்லையா?" என்று பங்கஜம் கேட்டாள்.

"நீலகிரியில் கூனூருக்கு மேலே கொஞ்ச தூரத்தில் தேவகிரி எஸ்டேட் இருக்கிறது. அது கள்ளிப்பட்டிக் கவுண்டர் எஸ்டேட். அங்கே கவுண்டருடைய பங்களாவில்தான் இப்போது செந்திரு இருக்கிறாள். குளிர்ச்சியான இடத்தில் இருந்தால் சித்தப்பிரமைக்கு அனுகூலம் என்று டாக்டர் சொன்னதின் மேல் அங்கே அழைத்துப் போய் வைத்திருக்கிறார்களாம். இன்றைக்கு மத்தியானம் இரண்டு கவுண்டர்களும் போய்ப் பார்த்துவிட்டு வர எண்ணியிருந்தார்களாம். ஆகவே, எல்லாருமாகக் கள்ளிப்பட்டிக் கவுண்டர் காரிலேயே கிளம்பினோம்; ஹட்ஸன் கார் மலையிலே என்ன ஜோராக ஏறிற்று தெரியுமா?..."

"காரில் போன பெருமை இருக்கட்டும், அப்பா! செந்திருவின் கதியை நினைத்தால் எனக்கு என்னமோ செய்கிறது. ரொம்ப வேதனையாயிருக்கிறது. அவளை நீங்கள் பார்த்தீர்களா? உங்களை அவள் அடையாளம் கண்டு கொள்ளவில்லையா?" என்றாள் பங்கஜம்.

"அடையாளமாவது, கண்டு கொள்ளவாவது! கார் பங்களாவின் மேட்டில் ஏறும்போதே பயங்கரமான கூச்சல் சத்தம் கேட்டது. பங்களா வாசலில் கார் நின்றதும் 'யாரடா தடிப்பசங்கள் காரிலே வந்து இறங்குகிறது?' என்று ஒரு கோரமான குரல் கேட்டது. உன் தோழியின் குரல் எவ்வளவு கோரமாய்ப் போய் விட்டது தெரியுமா? பிறகு, கொண்டுவா, 'நரபலி' 'கழுத்தை முறித்து, இரத்தத்தைக் குடிக்கிறேன்!' 'குத்து; வெட்டு!' என்று கூச்சல் கிளம்பிற்று. அதையெல்லாம், விவரமாக உனக்குச் சொல்லக்கூடாது. சொன்னால் ராத்திரியில் உளறியடித்துக் கொள்வாய். கார்க்கோடக் கவுண்டர் எங்களைப் பார்த்து, 'என்ன சொல்கிறீர்கள்? அழைத்துக் கொண்டு போகிறீர்களா?' என்று கேட்டார்.

நாங்கள் என்னத்தைச் சொல்கிறது? ராவ்பகதூரும் நானும் ஒருவரையொருவர் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டோ ம். பங்களா வாசலிலிருந்தபடி காரிலிருந்து கீழே இறங்காமலேயே நாங்கள் திரும்பிப் போகத் தயாராயிருந்தோம். ஆனால், கார்க்கோடக் கவுண்டர் விடவில்லை. உள்ளே வந்து பார்க்கவேண்டும் என்றார். பங்களாவுக்குள் போனோம். பாவம், அங்கே ஒரு அறையில் செந்திருவைப் பூட்டி வைத்திருக்கிறது. புத்தி கொஞ்சம் தெளியும் போது வெளியே விடுகிறார்களாம். நாங்கள் போனபோது பைத்தியம் ரொம்பக் கடுமை. ஜன்னலண்டையில் கவுண்டர் எங்களை அழைத்துப் போனபோது அங்கிருந்த சமையற்காரி வந்து குறுக்கிட்டு, 'அந்தப் பெண் துணையை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு உட்கார்ந்திருக்கிறது' என்றாள். அந்தக் கண்றாவியை என்னால் பார்க்கமுடியாது என்று சொல்லிவிட்டேன். ராவ்பகதூரின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கவுண்டர் ஜன்னலண்டை போனார். உள்ளேயிருந்து ஒரு தண்ணீர்க் குவளை ஜன்னல் கம்பிகளின் மேல் வந்து படீரென்று விழுந்தது. ராவ்பகதூர் ஒரேயடியாக மிரண்டுவிட்டார். அப்புறம் என்னத்தைச் சொல்கிறது? பேசாமல் திரும்பி வந்தோம்" என்று கதையை ஒரு விதமாக முடித்தார், அய்யாசாமி முதலியார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:48 am

பங்கஜம் சற்று மௌனமாயிருந்தாள்.

"படுத்துக்கொள்ளலாமா, குழந்தை! நான் போகட்டுமா?" என்றார் முதலியார்.

"ஆமாம் அப்பா! அவ்வளவு பைத்தியம் முற்றியிருந்தால், கடுதாசி அவ்வளவு நன்றாக எப்படி எழுதினாள்?" என்று பங்கஜம் கேட்டாள்.

"நான் தான் சொன்னேனே, அம்மா! கோயமுத்தூருக்கு ஓடி வந்த போது, அவளுக்கு உடம்பு அவ்வளவு மோசமாயில்லை என்று."

"சரிதான்; ஆனால், கடிதம் நம் வீட்டுக்கு எப்படி வந்ததாம்? யாரிடம் அனுப்பினாளாம்?"

"சரியாய்ப் போச்சு! அதை இன்னும் உனக்குச் சொல்லவில்லையா? இந்த ஊரில் அனுமந்தராயன் தெரு வீட்டு மச்சில் செந்திருவும் பெரியண்ணனும் தனியாயிருந்தபோது இவள் கடிதம் எழுதி வைத்துக் கொண்டு ஜன்னல் வழியாய்த் தெருவீதியைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். இந்த மகுடபதி என்கிற பையன் தெருவோடு போயிருக்கிறான். செந்திரு கடிதத்தை வீதியில் போட்டிருக்கிறாள். இந்த மகுடபதி என்கிற பையன் சுத்தக் காலாடியாம். ஏற்கெனவே, சிங்கமேட்டுக் கவுண்டர் மேல் அவனுக்கு விரோதமாம். கடிதத்தை அவன் நம் வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க் கன்னாபின்னாவென்று ஏதோ சொல்லி வைத்தானாம். சிங்கமேட்டுக் கவுண்டர் பெயரைச் சிரிப்பாய் சிரிக்க அடிப்பதற்கு இதுதான் சமயம் என்று நினைத்தான் போல் இருக்கிறது. அவன் மேல் கள்ளிப்பட்டிக் கவுண்டருக்கு என்ன 'காண்டு' தெரியுமோ? 'அந்தப் பயல் மட்டும் மறுபடி என்கையில் சிக்கட்டும், முதுகுத் தோலை உரித்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்' என்றார். கள்ளிப்பட்டிக் கவுண்டர் என்றால் என்னவென்று நினைத்தாய், குழந்தாய்! இந்த ஜில்லாவிலேயே அவர் வைத்ததுதான் சட்டம். பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லாங்கூடப் பயப்படுவார்கள். ஜில்லாபோர்ட் பிரஸிடெண்ட் அன்று பேரூருக்கு வந்த போது தடபுடல் பட்டதே, அந்த பிரஸிடெண்ட்டுக்கு கள்ளிப்பட்டிக் கவுண்டர் என்ற பெயரைக் கேட்டால் தொடை வெடவெட வென்று நடுங்குமாம்! அப்படிப்பட்டவர் கிட்டப்போய் இந்த மகுடபதி என்கிற வெறும் பையன் விரோதித்துக் கொண்டிருக்கிறான். 'காங்கிரஸ் பெயரையும், காந்தி பெயரையும் கெடுக்கத்தான் வந்திருக்கிறான்' என்கிறார் கள்ளிப்பட்டிக் கவுண்டர்."

இவ்விதம் சொல்லிவிட்டு அய்யாசாமி முதலியார் கொட்டாவி விட்டார்.

மகுடபதியைப் பற்றிப் பங்கஜம் கட்டியிருந்த ஆகாசக் கோட்டையெல்லாம் பொலபொலவென்று இடிந்து விழுந்தது.

"என்னமோ கேட்கக் கேட்க விசனமாயிருக்கிறது. அப்பா! ஆனால் இன்னும் ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிபடவில்லை. எனக்குச் செந்திரு எழுதிய கடிதத்தை மருதக் கவுண்டன் ஏன் திருடினான்? அந்தக் கடிதம் உங்கள் அழகான கள்ளிப்பட்டிக் கவுண்டரிடம் எப்படிப் போயிற்று?" என்று பங்கஜம் கேட்டாள்.

"அது ஒரு விஷயம் பாக்கியிருக்கிறதா? சரி, கேட்டுக் கொள். செந்திரு உனக்குக் கடிதம் எழுதி வீதியில் போட்டாள் என்று பெரியண்ணன் கவுண்டர்களிடம் ஒளித்திருக்கிறான். சித்த ஸ்வாதீனமில்லாத சமயத்தில் அவள் என்ன எழுதியிருக்கிறாளோ, என்னமோ - இந்த வெட்கக்கேடு வெளியில் நாலு பேருக்குத் தெரிவானேன் என்று அவர்களுக்கு எண்ணம். அதற்காகத்தான் நீயாவது நானாவது கடிதத்தைப் பிரித்துப் படிக்காவிட்டால் எடுத்துக் கொண்டு விடும்படி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த முட்டாள் நமக்கு விஷயம் தெரிந்த பிறகு எடுத்துப் போயிருக்கிறான். அதற்காக அவனுக்கு அங்கே நல்ல பூசை கிடைத்ததாம். கவுண்டர்களே நம்முடைய வீட்டுக்கு வந்து இதையெல்லாம் சொல்ல வேண்டுமென்றிருந்தார்களாம். அதற்குள்ளே நாங்கள் போய்..." என்று முதலியார் சொன்னபோது, அவருடைய தலை ஆடிற்று.

"சரி, அப்பா, உங்களுக்குத் தூக்கம் கண்ணைச் சுற்றுகிறது. நீங்கள் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். நானும் விளக்கை அணைத்துவிட்டுப் போய்ப் படுத்துக் கொள்கிறேன்" என்றாள் பங்கஜம்.

"சரி, அதிக நேரம் கண் விழிக்காதே. நாவல் எழுதினதெல்லாம் போதும். உன் சிநேகிதியின் கதையே தான் பெரிய நாவலாய் இருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே அய்யாசாமி முதலியார் எழுந்து போனார்.

பங்கஜமும் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்திருந்து விளக்கை அணைப்பதற்காகப் போனாள். அப்போது அவள் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டது. ஒரு நிமிஷம் அவள் மார்பு அடித்துக் கொள்வது நின்றுவிட்டது. ஏனெனில், விளக்கை அணைப்பதற்காக அவள் எழுந்து போனபோது, ஜன்னலுக்கு எதிர்ப் பக்கத்துச் சுவரில் ஒரு மனிதனுடைய நிழலை அவள் பார்த்தாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:49 am

பதினாறாம் அத்தியாயம் - நள்ளிரவு நாடகம்

பங்கஜம் பளிச்சென்று விளக்கை அணைத்தாள். சத்தமில்லாமல் ஜன்னலண்டை போய் வெளியில் பார்த்தாள்.

ஏறக்குறைய பாதி வட்டமாயிருந்த சந்திரன் மேற்கே அஸ்தமித்துக் கொண்டிருந்தது. அதனுடைய மங்கிய ஒளி அப்போது பெய்து கொண்டிருந்த பனியினால் இன்னும் மங்கலாகக் காட்டிற்று. அந்த மங்கிய நிலவில், ஒரு உருவம் பங்கஜத்தின் அறைப்பக்கத்திலிருந்து எதிர்ப்புறமாகப் போய்க் கொண்டிருந்ததை அவள் பார்த்தாள். பார்த்ததும், பங்கஜம் "யாரடா அது?" என்று கூச்சல் போட எண்ணினாள். ஆனால், அவளுடைய நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. வாயிலிருந்து சத்தம் கிளம்பவில்லை. அவளுடைய தேகமெல்லாம் அந்த மார்கழி மாதக் கடுங்குளிரில் சொட்ட வியர்த்தது. ஒரு நிமிஷ நேரம் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றாள்.

பங்களாவுக்கெதிரில், கார் வந்து நிற்பதற்கான முன் முகப்பு இருந்தது. அந்த முகப்புக்கு வாசல் காம்பவுண்ட் சுவருக்கு மத்தியில் மரமல்லிகை மரங்களும் குரோட்டன்ஸ் செடிகளும் அடர்த்தியாகப் படர்ந்த ஒரு கொடி வீடும் இருந்தன. அங்கிருந்து மலர்களின் நறுமணம் கம்மென்று வந்து கொண்டிருந்தது.

ஜன்னல் பக்கத்திலிருந்து போன உருவம் அந்தக் கொடி வீட்டுக்கருகில் சென்றது. அங்கே சற்றுத் தயங்கி நின்றது. பிறகு அந்தக் கொடி வீட்டுக்குள் நுழைந்தது.

பங்கஜம் சற்று நேரம் ஜன்னலண்டையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். கொடி வீட்டுக்குள் நுழைந்த உருவம் வெளியே வரவில்லை. இதற்குள் அவளுக்குப் பயம் தெளிந்துவிட்டது. அச்சமயம், தான் என்ன செய்யவேண்டுமென்று யோசித்தாள். அப்பாவிடம் போய்ச் சொல்லலாமா? அதுதான் நியாயமாகச் செய்ய வேண்டியது. ஆனால்...? பங்கஜத்தின் மனதிற்குள் ஒரு விசித்திரமான சந்தேகம் உதித்தது. அவளுடைய அறையின் ஜன்னலோரத்திலிருந்து கிளம்பிச் சென்று கொடி வீட்டுக்குள் நுழைந்த உருவம் பார்ப்பதற்கு ஒரு இளைஞனுடைய உருவமாயிருந்தது. அது யாராயிருக்கும்? ஒரு வேளை...? என்ன பைத்தியக்காரத்தனம்? ஒரு நாளும் இருக்காது!... ஆனால் ஏன் இருக்கக்கூடாது?...இல்லை, இல்லை. கார்க்கோடக் கவுண்டர் தான் அப்பா திரும்பி வந்து என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதற்கு ஆளை அனுப்பியிருக்க வேண்டும்... ஒரு வேளை சாதாரணத் திருடனோ, என்னமோ? சே! திருடனாயிருக்க முடியாது. திருடன் அவ்வளவு துணிச்சலாய் வீட்டில் விளக்கு எரியும் போது வந்து ஜன்னலண்டை உட்கார்ந்திருப்பானா?

எப்படியிருந்தாலும், தானே அந்த மர்மத்தைக் கண்டு பிடித்து விடுவது என்று பங்கஜம் தீர்மானித்துக் கொண்டாள். அப்பாவைக் கூப்பிட வேண்டியதில்லை. தன்னுடைய சந்தேகம் ஒருவேளை உண்மையாயிருந்தால் அப்பாவைக் கூப்பிட்டால் காரியம் கெட்டுப் போய்விடும். அப்படியென்ன மோசம் வந்துவிடப் போகிறது? திருடனாய்த்தான் இருக்கட்டுமே? ஒருவனால் என்ன செய்யமுடியும்? எல்லாவற்றுக்கும் முன் ஜாக்கிரதையாயிருந்தால் போகிறது. அப்படி மிஞ்சி வந்தால், முன் அறையில் தானே அப்பா படுத்திருகிறார்? கூச்சல் போட்டால் உடனே வந்து விடுகிறார்.

இப்படியெல்லாம் சிந்தித்து, இந்நிலைமையில் சாதாரணப் பெண் எவளும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்யத் துணிந்தாள் பங்கஜம். அவள் படித்திருந்த நூற்றுக்கணக்கான நாவல்களில் வரும் கதாநாயகிகளின் தைரியம், துணிச்சல் எல்லாம் அவளிடம் அந்த நிமிஷத்தில் வந்து குடிகொண்டன. ஓசைப்படாமல் நடந்து போய் ஒரு அலமாரியைத் திறந்தாள். அதற்குள்ளிருந்து இரண்டு பொருள்களை எடுத்துக் கொண்டு வந்து ஜன்னலண்டை நின்று, நிலவு வெளிச்சத்தில் பார்த்தாள். அவற்றுள் ஒன்று, டார்ச் லைட்; இன்னொன்று, கைத்துப்பாக்கி!

கைத்துப்பாக்கி, அவளுடைய தகப்பனார் கடப்பா ஜில்லாவில் உத்தியோகம் பார்த்த காலத்தில் அபாயத்துக்காக வைத்துக் கொண்டிருந்தது. இப்போது அது துருப்பிடித்துக் கிடந்தது. அதில் ரவையும் கிடையாது. ஒரு விளையாட்டுப் பொருளாக அதைப் பங்கஜம் தன் அலமாரியில் எடுத்து வைத்திருந்தாள். சில சமயம் அவளுடைய தோழிகள், தம்பிமார்கள், வேலைக்காரர்கள் முதலியோரை விளையாட்டுக்காகச் "சுட்டு விடுவேன்" என்று அவள் இந்தத் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்துவதுண்டு. திருடனை அதனால் ஒன்றும் செய்யமுடியாதென்று அவளுக்குத் தெரியும். ஆனாலும், அவள் இப்போது கொண்டிருந்த நோக்கத்துக்கு அதுவே போதுமாயிருந்தது.

பிறகு பங்கஜம் ஓசைப்படாமல், அந்த அறையிலிருந்து வெளி வராந்தாப் பக்கமுள்ள கதவைத் திறந்தாள். வெளியில் எல்லாம் நிசப்தமாய் இருந்தது. அடிமேல் அடிவைத்து நடந்து தாழ்வாரத்திலிருந்து 'போர்டிகோவில்' இறங்கி, அங்கிருந்து கொடி வீட்டின் அருகில் வந்தாள். அப்போது அக்கொடி வீட்டுக்குள்ளிருந்து மிக மெலிந்த விம்முகிற குரலில் யாரோ பேசும் சத்தம் வந்து கொண்டிருந்தது. பங்கஜம் உற்றுக் கேட்டாள். 'பைத்தியம்' 'பைத்தியம்' 'செந்திருவுக்குச் சித்தப் பிரமை' என்று ஒரு குரல் தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அந்தக் குரலில் எவ்வளவோ ஏக்கமும், ஏமாற்றமும், வேதனையும் கலந்திருந்தன.

சற்றுத் திகைத்து நின்ற பிறகு, பங்கஜம் கொடி வீட்டின் அருகில் நெருங்கிச் சென்று ஒரு கையில் கைத்துப்பாக்கியை நீட்டியபடி, இன்னொரு கையில் டார்ச் லைட்டை அமுக்கினாள். பளீரென்று வெளிச்சம் அடித்தது. கொடி வீட்டுக்குள்ளே உட்காருவதற்காகப் போட்டிருந்த சிமெண்ட் விசிப்பலகையில் ஒரு வாலிபன் உட்கார்ந்திருந்தான். திடீரென்று வெளிச்சம் அடித்ததும் அவன் திடுக்கிட்டுக் குனிந்த தலையை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரில் டார்ச் லைட்டின் ஒளிபட்டு மின்னியது. எதிரே கைத்துப்பாக்கியுடனும் டார்ச் லைட்டுடனும் நின்று கொண்டிருந்த பங்கஜத்தைப் பார்த்ததும், அவனுக்கு ஒரே திகைப்பாய்ப் போயிருக்க வேண்டும். ஒரு வினாடியில் அவனுடைய கண்களில் கண்ணீர் வறண்டு விட்டது. பங்கஜத்தை வியப்புடன் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஐந்து நிமிஷம் வரையில் இவ்விதம் இருவரும் ஒருவரையொருவர் மௌனமாக உற்றுப் பார்த்தபடி இருந்தார்கள். பங்கஜத்துக்கும் பேச நா எழவில்லை. அவளுடைய சந்தேகம் ஒரு விஷயத்தில் உண்மையாயிற்று. இந்த வாலிபன் அன்று அவர்கள் வீட்டுக்குப் புதிதாக வந்த தவிசுப் பிள்ளைதான்! அன்று சாயங்காலம் பங்கஜம் தன் அறைக்குள் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த போது, வாசலில் யாரோ வந்து 'ஸார்!' என்று கூப்பிடும் சப்தம் கேட்டது. கதையின் சுவாரஸ்யத்தில் ஆழ்ந்திருந்தபடியால் பங்கஜம் போய் யார் என்று கேட்கவில்லை. அவளுடைய தாயார் உள்ளேயிருந்து வந்து வாசல் கதவைத் திறந்தாள். அம்மாவுக்கு வந்திருந்தவனுக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது பங்கஜத்தின் காதில் விழுந்தது.

"யாரப்பா நீ?"

"ஐயாவை ஒரு காரியமாய்ப் பார்க்க வந்தேன். இருக்கிறார்களா?"

"தவிசுப்பிள்ளையா? இதற்கு முன் யார் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாய்?"

"வந்து நான்..."

"கோடிவீட்டு ஆச்சி அனுப்பினார்களா? அவங்ககிட்டத்தான் நான் தவிசுப்பிள்ளை வேண்டுமென்று சொல்லி வைத்திருந்தேன்."

இவ்வளவுதான் பங்கஜத்துக்குக் கேட்டது. அப்போது அவளுக்குச் சிரிப்பாய் வந்தது. அவளுடைய தாயாருக்குக் கொஞ்சம் காது மந்தம். "யாரோ ஒருவன் எதற்காகவோ அப்பாவிடம் வந்திருக்கிறான்; அவனைப் பிடித்து அம்மா தவிசுப்பிள்ளையா என்று கேட்டாள்" என்பதாக எண்ணிப் பங்கஜம் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

ஆனால், சாயங்காலம் பங்கஜம் சமையல் அறைக்குள் போனபோது, ஒரு வாலிபன் நாகரிகமும் அழகும் வாய்ந்த தோற்றம் உள்ளவன் - சமையல் வேலையில் அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து வியப்படைந்தாள். அம்மாவிடம் ஜாடையினால் "இவன் யார்?" என்று கேட்டாள். "தவிசுப்பிள்ளை வேண்டுமென்று கோடிவீட்டு ஆச்சியிடம் சொல்லியிருந்தேன். அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள்" என்று தாயார் சொன்னாள். "சாயங்காலம் வந்தவன் இவந்தானா? அம்மா தப்புச் செய்கிறாள் என்று நாம் நினைத்ததல்லவோ தப்புப் போலிருக்கிறாது?" என்று எண்ணிக் கொண்டாள். பிறகு, சாப்பிடும் சமயத்தில் பங்கஜம் புதிய சமையற்காரனைக் கொஞ்சம் கவனிக்கத் தொடங்கினாள். "இவ்வளவு நாகரிகமான சமையற்காரனும் இருக்கிறானா? முகத்தில் என்ன களை? எவ்வளவு சுத்தமாயிருக்கிறான்?" என்று எண்ணிக் கொண்டாள். ஆனால், அந்தத் தவிசுப்பிள்ளை தன்னைக் கடைக்கண்ணால் அடிக்கடி பார்ப்பதைக் கவனித்தபோது, பங்கஜத்துக்கு அசாத்தியக் கோபம் வந்தது. "அம்மாவிடம் சொல்லிப் பிரயோசனமில்லை; அப்பா வந்ததும், இந்தத் தவிசுப்பிள்ளை வேண்டாம் என்று போகச் சொல்லிவிட வேண்டும்" என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால், அப்பா இராத்திரி பத்து மணிக்கு வந்த பிறகு அவர் கூறிய ஆச்சரியமான விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்ததில், புதிய தவிசுப் பிள்ளையைப் பற்றி அவள் அடியோடு மறந்துவிட்டாள்.

இப்போது, கொடி வீட்டுக்குள் உட்கார்ந்து விம்மிக் கொண்டிருந்தவனை டார்ச்லைட்டின் வெளிச்சத்தில் பார்த்ததும், புதிய தவிசுப் பிள்ளைதான் என்று உடனே தெரிந்து போய்விட்டது. ஆனால், உண்மையில் இவன் யார்? கார்க்கோடக் கவுண்டரின் ஆளா? உளவு அறிந்து போவதற்காக வந்தவனா? அல்லது... ஒருவேளை... அப்படியும் இருக்க முடியுமா?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:49 am

ஐந்து நிமிஷ நேரம் இவ்விதம் சிந்தனையில் ஆழ்ந்து நின்ற பிறகு பங்கஜத்துக்கு ஏதாவது பேசினாலொழிய நெஞ்சு வெடித்துவிடும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

"யார் நீ? நிஜத்தைச் சொல்லிவிடு! இல்லாவிட்டால்..." என்று பங்கஜம் மேலே சொல்லத் தயங்கித் தொண்டையைக் கனைத்தாள்.

அந்த வாலிபனும் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "இல்லாவிட்டால்...?" என்றான்.

"இந்தத் துப்பாக்கியின் குண்டுக்கு இந்த நிமிஷமே இரையாவாய்!" என்று பங்கஜம் நாவல் பாஷையில் சொன்னாள்.

அந்த வாலிபன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் எவ்வளவோ சோகமும் வெறுப்பும் கலந்திருந்தன.

"அப்படியே செய்துவிடு அம்மா! எனக்குப் பெரிய உபகாரமாயிருக்கும்" என்றான்.

பங்கஜத்துக்கு என்னமோ செய்தது. ஆனாலும் அவள் சமாளித்துக் கொண்டு, "இந்தப் பாசாங்கெல்லாம் வேண்டாம் யார் நீ? உன் பெயர் என்ன? நிஜத்தைச் சொல்லிவிடு!" என்றாள்.

"நிஜம் சொல்ல வேண்டுமா? நிஜம்! நிஜம்! இந்த உலகத்தில் நிஜத்துக்கு மதிப்பு இருக்கிறதா? நிஜம் சொன்னால் கேட்கிறவர்களும் உண்டா? அம்மா! நிஜத்தைச் சொல்கிறேன். அதற்குப் பதிலாக எனக்கு ஒரு உபகாரம் செய்வாயா?" என்று வெறிபிடித்தவன் போல் பேசினான்.

"உபகாரமா? என்ன உபகாரம்?" என்று பங்கஜம் கேட்டாள்.

"உன் கையிலிருக்கிற துப்பாக்கியால் என்னைச் சுட்டுக் கொன்றுவிடு; இல்லாவிட்டால், அந்தத் துப்பாக்கியை என் கையிலாவது கொடு. நானாவது சுட்டுக் கொண்டு சாகிறேன்" என்றான் வாலிபன்.

"இந்தா!" என்று பங்கஜம் தன் கையிலிருந்த துப்பாக்கியைக் கொடுத்தாள்.

அதை வாங்கி விசையை இழுத்துப் பார்த்துவிட்டு, வாலிபன் வெறுப்புடன் கீழே போட்டான்.

பங்கஜம் சிரித்தாள்.

வாலிபன் அவளைக் கோபமாய்ப் பார்த்து "உனக்குச் சிரிப்பும் வருகிறதா?" என்று கேட்டான்.

"சிரித்தால் என்ன?"

"உன் சிநேகிதிக்கு இப்படிப்பட்ட விபத்து வந்திருக்கும் போதா சிரிப்பது?... உன் மனது என்ன கல்லா?"

"என் சிநேகிதிக்கு என்ன விபத்து வந்துவிட்டது?"

"வேறென்ன விபத்து வரவேண்டும்? உன் தகப்பனார் தான் சொன்னாரே, பைத்தியம் பிடித்து விட்டதென்று?"

"செந்திருவுக்கா பைத்தியம்? ஒரு நாளுமில்லை. அவளுக்குப் பைத்தியம் என்று சொல்லுகிறவர்களுக்குத் தான் பைத்தியம்!" என்றாள் பங்கஜம்.

"என்ன? என்ன? பைத்தியம் இல்லையா? அதெப்படிச் சொல்கிறாய்? பகவானே! இதுமட்டும் நிஜமாயிருந்தால்?... உனக்கு எப்படி தெரியும்? எதனால் அவ்வளவு நிச்சயமாய்ச் சொல்கிறாய்?"

"முதலில், நீ யார் என்று சொல்? சொன்னால்..."

"சொன்னால்..."

"செந்திருவுக்குப் பைத்தியம் ஏன் இல்லை என்று நான் தெரிவிக்கிறேன்."

"என் பெயர் மகுடபதி!"

"நினைத்தேன், நினைத்தேன். நீதானா என் சிநேகிதியைப் பைத்தியமாக அடித்த புண்ணியவான்?" என்றாள் பங்கஜம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:50 am

பதினேழாம் அத்தியாயம் - மோட்டார் விபத்து

மகுடபதிக்கும் பங்கஜத்துக்கும் மேலே நடந்த சம்பாஷணையைச் சொல்வதற்கு முன்னால் காலப்போக்கில் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று மகுடபதியை லாக்-அப்பில் அடைத்ததிலிருந்து அவனுக்கு நேர்ந்தவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

போலீஸ் லாக்-அப்பிலிருந்து மகுடபதியை ஸப்-ஜெயிலுக்குக் கொண்டுபோய் ஒரு தனி அறையில் அடைத்தார்கள். ஏற்கெனவே இரண்டு முறை - ஒருவாரமும், பத்து நாளும் - அவன் ஸப்-ஜெயிலில் இருந்திருக்கிறான். ஆனால் இந்தத் தடவை அவன் ஸப்-ஜெயிலிலிருந்த மூன்று நாட்களும் அவனுக்கு மூன்று யுகங்களாகத் தோன்றின. அவன் உள்ளம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிற்று. தேசத்தில் மகத்தான இயக்கம் ஆரம்பாகி நடந்து கொண்டிருந்தது; அந்த ஜில்லாவில் அவனுடைய முக்கியமான காங்கிரஸ் சகாக்களெல்லாம் சிறைக்குப் போய்விட்டனர்; அனேக தொண்டர்கள் அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தார்கள். இப்படிப்பட்ட இயக்கத்தில், தான் பங்கு எடுத்துக் கொள்ளமுடியவில்லை. ஏதோ ஒரு பொய்க் கேஸில் அகப்பட்டு ஸப்-ஜெயிலில் கிடக்க வேண்டியதாயிருக்கிறது. தன் மேல் என்ன கேஸ் போடப் போகிறார்கள் என்ற விவரம் இன்னும் அவனுக்குத் தெரிந்தபாடில்லை. போலீஸ் அதிகாரிகள் - முக்கியமாக ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் - என்ன சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறாரோ, தெரியாது. அவர் மட்டுந்தான் சூழ்ச்சி செய்கிறாரோ, அல்லது கார்க்கோடக் கவுண்டரும் சேர்ந்து இரண்டு பேருமாய்ச் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களோ? ஏதாவது கள்ளுக்கடையைக் கொளுத்தியதாக ஒரு பொய்க் கேஸைத் தன் பேரில் அவர்கள் போட்டு வைத்தால் என்ன செய்வது? அதற்கு வேண்டிய பொய்ச் சாட்சிகளைத் தயாரித்துத் தண்டனையடைந்தால், காங்கிரஸ் இயக்கத்துக்கே அதனால் மாசு ஏற்பட்டுவிடுமல்லவா? அத்தகைய கேஸ் நேர்ந்தால் எதிர் வழக்காடுவதா? அல்லது சும்மா இருந்து விடுவதா? யோசனை கேட்பதற்குக் கூட முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லை; எல்லாரும் முன்னாலேயே சிறைக்குப் போய்விட்டார்கள்; இன்னும் வெளியில் இருக்கும் இரண்டொருவரைச் சந்தித்துப் பேசுவதற்கும் வசதி கிடையாது.

"ஐயோ! அன்றைக்கு நாம் கோயமுத்தூருக்கு என்னத்திற்காக வந்தோம்? நம்மூரிலேயே ஏதாவது மறியல் நடத்திப் பேசாமல் சிறை புகுந்திருக்கக்கூடாதா?" என்று எண்ணி மகுடபதி பெருமூச்சு விட்டான். அன்று தான் கோயமுத்தூருக்கு வந்ததனால் என்னென்ன விபரீதங்கள் ஏற்பட்டு விட்டன? தனக்கு மட்டுமா கஷ்டம்? செந்திருவுக்கும் பெரியண்ணனுக்கும் அல்லவா தன்னால் பெரும் விபத்துக்கள் நேர்ந்து விட்டன?

செந்திருவைப் பற்றி நினைக்கும் போதே அவனுடைய நெஞ்சு சொல்லமுடியாத வேதனை அடைந்தது. அவளுடைய கதி என்ன ஆயிற்றோ? எங்கே இருக்கிறாளோ? பலவந்தமாய்க் கார்க்கோடக் கவுண்டருக்குக் கல்யானம் செய்து வைத்திருப்பார்களோ? ஒருவேளை, அவள் உயிரை விட்டிருப்பாளோ? பாவிகள் ரொம்பவும் அவளை இம்சை செய்திருப்பார்களோ? "ஐயோ! நம்மை நம்பிய அந்த அபலைப் பெண்ணுக்கு நம்மால் அனுகூலமில்லாவிட்டாலும் ஆபத்தல்லவா அதிகமாகிவிட்டது?" என்று எண்ணிய போது, மகுடபதியின் இருதயம் துடித்தது. ஆம்; அன்றிரவு, தான் அந்த வீட்டில் ஒளிந்திருந்து திடீரென்று வெளியே வந்ததனால், செந்திருவின் மேல் அந்தக் கவுண்டர்களுக்கு இல்லாத பொல்லாத சந்தேகங்கள் உண்டாகியிருக்குமல்லவா?

செந்திருவுக்கு மட்டும் ஏதாவது தீங்கு நேர்ந்திருந்தால், அதற்குக் காரணமாயிருந்தவர்கள் மேல் பழிக்குப் பழி வாங்கியே தீருவதென்று மகுடபதி சங்கல்பம் செய்து கொண்டான்.

கார்க்கோடக் கவுண்டர் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றும் போதெல்லாம், அவனுடைய இரத்தம் கொதித்தது; நரம்புகள் எல்லாம் புடைத்து எழுந்தன. "அஹிம்சையாவது, ஒன்றாவது? வெறும் பைத்தியக்காரத்தனம்! இப்படிப்பட்ட பாதகர்களை எந்த விதத்திலாவது யமலோகத்துக்கு அனுப்பினால் அதுவே பெரிய புண்ணியச் செயலாகும்" என்று அடிக்கடி எண்ணமிட்டான்.

பெரியண்ணன் மீது கார்க்கோடக் கவுண்டரின் கத்தி பாய்ந்த காட்சி அடிக்கடி அவன் மனக்கண்முன் வந்து கார்க்கோடக் கவுண்டரின் மேல் அவனுக்கிருந்த கோபத்தீயை இன்னும் தூண்டிவிட்டு ஜ்வலிக்கச் செய்தது. பெரியண்ணனுடைய கதி என்னவாயிருக்கும்? தானே எழுந்து போயிருப்பானோ? அல்லது கவுண்டர்கள் வந்து தான் அப்புறப்படுத்தியிருப்பார்களோ? இன்னமும் பிழைத்திருக்கிறானோ? அல்லது இந்தப் பாதக உலகை விட்டுப் போய்விட்டானோ?

மூன்று தினங்கள் வரையில் இவ்விதம் அவன் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இன்னும் சில தினங்கள் இப்படியே தன்னைத் தனி அறையில் போட்டிருந்தால் ஒரு வேளை பைத்தியம் பிடித்துவிடுமோ என்று கூட அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. ஐயோ! அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் செந்திருவின் கதி என்ன? இந்த வண்ணம் தோன்றும்போது, விரிந்து மலர்ந்த கண்களில் நீர்த்துளிகளுடன் கூடிய செந்திருவின் சோகம் ததும்பும் முகம் அவன் மனக்கண்முன் வரும். அப்போது அவனுடைய நெஞ்சு வெந்து போவது போலிருக்கும். இந்தத் துயர நினைவை மறப்பதற்காக மகுடபதி காங்கிரஸ் இயக்கத்தையும், காந்தி மகானையும், தேசியப் போரின் மற்ற அம்சங்களையும் பற்றிச் சிந்திக்க முயன்றான்.

மூன்றாம் நாள் பிற்பகலில் மகுடபதி இத்தகைய சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று சில போலீஸ் சேவகர்கள் வந்து அவனை அடைத்திருந்த கொட்டடிக்கு முன்னால் நின்றார்கள். கதவு திறக்கப்பட்டது. அவர்களுடைய உத்தரவுப்படி மகுடபதி வெளியேறினான். வாசலில் போலீஸ் வண்டி காத்துக் கொண்டிருந்தது. அதற்குள் ஏற்கனவே நாலைந்து தொண்டர்கள் இருந்தார்கள். மகுடபதியும் அதற்குள் ஏற்றப்பட்டான். போலீஸ் சேவகர்களும் ஏறி உட்கார்ந்ததும், வண்டி புறப்பட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:51 am

எல்லாரையும், கோர்ட்டுக்குத்தான் அழைத்துப் போகிறார்கள் என்று மகுடபதி நினைத்தான். வண்டியில் ஏற்கெனவே இருந்த தொண்டர்களில் ஒருவரையும் மகுடபதிக்குத் தெரியாது. அவர்கள் எல்லாம் "மகாத்மா காந்திக்கு ஜே!" "வந்தே மாதரம்!" என்று உரத்த குரலில் கோஷமிட்டார்கள். மகுடபதிக்கு இந்தக் கோஷத்தில் கலந்து கொள்வதற்கு வேண்டிய உற்சாகம் இல்லை. ஆகையால் மௌனமாயிருந்தான். தொண்டர்களின் கோஷத்தினால் கலவரப்பட்டு வீதியில் போய்க் கொண்டிருந்த ஜனங்கள் போலீஸ் வண்டியை நோக்கினார்கள். அவர்களில் யாராவது தனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா, இருந்தால் சமிக்ஞையினால் செய்தி தெரிவிக்கலாம் என்று மகுடபதி ஆவலுடன் வண்டிக் கம்பிகளின் வழியாகப் பார்த்துக் கொண்டே போனான். ஒருவரும் அவனுக்குத் தெரிந்தவர்களாக எதிர்ப்படவில்லை. எதிர்ப்பட்டிருந்தாலும், இரும்பு வலைக் கூண்டு போல் அமைந்திருந்த போலீஸ் வண்டிக்குள்ளிருந்து அவனால் ஒன்றும் பேசியிருக்க முடியாது. வண்டி வேறு மிகவும் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது.

கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தியதும், தன் பேரில் பொய்க் கேஸ் என்று கூச்சலிட்டு, அன்றிரவு நடந்த சம்பவங்களையும் சொல்லலாமா என்று மகுடபதி யோசித்தான். அவனால் தெளிவாகச் சிந்தனை செய்ய முடியாவிட்டாலும், அதனால் பயன் விளையாது என்று தோன்றியது. முதலில், மற்ற தொண்டர்கள் தன்னை ஜெயிலுக்குப் பயந்தவன் என்று நினைத்துக் கொள்வார்கள். மற்றபடி, மாஜிஸ்ரேட்டும்தான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார். கேஸுக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்று சொல்லி, தான் பேசுவதற்கே இடங்கொடுக்க மாட்டார். கார்க்கோடக் கவுண்டர் மாஜிஸ்ரேட்டையும் தன்னுடைய கைக்குள் போட்டுக் கொண்டிருக்கக் கூடுமல்லவா? ஏதாவது ஜாமீன் கேஸ் என்று தன்னை ஒரு வருஷம் சிறைக்குள் தள்ளிவிட்டால், செந்திருவின் நிலைமை என்ன? இப்படிக் கோர்ட்டில் என்ன சொல்வது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் மகுடபதி தவித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் போலீஸ் மோட்டார் கோயமுத்தூர் நகரின் எல்லையைத் தாண்டிக் கொண்டிருப்பதை மகுடபதி கவனித்தான்.

"இதென்ன? நம்மைக் கோர்ட்டுக்குக் கொண்டு போகவில்லையா? எங்கே கொண்டு போகிறார்கள்?" என்று மகுடபதி மற்ற தொண்டர்களைப் பார்த்துக் கேட்டான். அவர்களில் ஒருவன், "இது தெரியாதா, உனக்கு? நம் பேரில் கேஸ் நடக்காதாம். இப்போது கோயமுத்தூருக்கு வெளியே எங்கேயாவது தூரத்தில் கொண்டு போய் விட்டுவிடும்படி ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவாம்."

இந்தச் செய்தியைக் கேட்டதும், மகுடபதிக்குப் புத்துயிர் வந்தது போலிருந்தது. இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் தனக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற எண்ணம் அவனுக்குக் குதூகலமே உண்டாக்கிற்று. போலீஸ் வண்டி அதிக வேகமாகச் சென்றதுபோல், அவன் எண்ணங்களும் விரைந்து சென்றன. விடுதலை கிடைத்ததும் செந்திருவைத் தேடும் முயற்சியில் தான் ஈடுபட வேண்டும். அதை எப்படி ஆரம்பிப்பது? ஏன்? முதலில் மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் வீட்டுக்குத் தான் போகவேண்டும். முதலியார் எப்படிப்பட்டவராயிருந்த போதிலும், அவருடைய பெண் செந்திருவின் தோழி - தனக்கு ஒத்தாசை செய்யலாமல்லவா?

அதி வேகமாய்ப் போய்க் கொண்டிருந்த மோட்டார் வண்டி சட்டென்று சாலையில் நின்றது. மூன்று தொண்டர்கள் இறக்கிவிடப்பட்டார்கள். அவர்கள் "வந்தே மாதரம்" என்று கோஷித்தார்கள். வண்டியிலிருந்தவர்கள் எதிரொலி செய்தார்கள். மறுபடியும் வண்டி கிளம்பித் துரிதமாய்ச் சென்றது. கால் மணி நேரம் போன பிறகு, மீண்டும் நின்றது. இரண்டு தொண்டர்கள் இறக்கி விடப்பட்டார்கள். பிறகு வண்டியில் மகுடபதி ஒருவன் தான் இருந்தான்.

மகுடபதி பொறுமையிழந்து வண்டியிலிருந்து குதித்து விடலாமா என்ற நிலைமைக்கு வந்தபோது, வண்டியின் வேகம் குறைந்தது. "இறங்கப்பா!" என்றான் ஒரு போலீஸ் சேவகன். வண்டி சரியாக நிற்பதற்குள்ளாகவே மகுடபதி இறங்கினான். இதனால் தள்ளாடிக் கீழே விழப் போனவன் மெதுவாகச் சமாளித்துக் கொண்டான்.

அவன் இறங்கியதும் போலீஸ் வண்டி அந்தச் சாலையை ஒரு பிரதட்சணம் செய்து திரும்பி, வந்த வழியே விர்ரென்று புறப்பட்டு, அடுத்த நிமிஷம் அமோகமாய்க் கிளம்பிய சாலைப் புழுதியில் மறைந்துவிட்டது.

அஸ்தமன சமயம். சூரியன் மேற்குத் திசையில் காணப்பட்ட மலைத் தொடர்களுக்குப் பின்னால் மறைந்துவிட்டது. சாலை நிர்மானுஷ்யமாயிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் ஊரோ, வீடோ காணப்படவில்லை.

அந்த இடம் கோயமுத்தூரிலிருந்து சுமார் முப்பது மைல் இருக்கலாம். அவ்வளவு தூரம் எப்படி நடந்து போய்ச் சேர்வது? சாலையில் ஏதாவது பஸ் வந்தால் ஏறிக் கொள்ளலாம். இத்தனை நேரங் கழித்து பஸ் வருமா?

இம்மாதிரி யோசனை செய்து கொண்டு மகுடபதி சாலையோடு வந்து கொண்டிருந்தான். ஓரிடத்தில் சாலையில் முச்சந்தியும் கைகாட்டி மரமும் காணப்பட்டன. கோயமுத்தூர் சாலையில் அவன் திரும்பியதும், எதிரே ஒரு மோட்டார் வண்டி வருவதைக் கண்டான். "எவ்வளவு வேகமாய் வருகிறது" என்று நினைத்துக் கொண்டே சாலையில் ஒதுக்குப்புறமாக நகர்ந்தான். வண்டி கொஞ்சம் மெதுவாவது போல் தோன்றியது. "இதென்ன? நாம் இவ்வளவு ஒதுங்கியும் வண்டியும் இப்படி விடுகிறானே?" என்று நினைத்துக் கொண்டே இன்னும் ஒதுங்கினான். ஆனால், வண்டியும் ஒதுங்கி அவன் பக்கமே வந்தது. அடுத்த வினாடி வண்டி அவன் மேல் மோதிற்று. மகுடபதி நினைவிழந்து கீழே விழுந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக