புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_lcapதேவபயம் - கிலோ என்ன விலை? I_voting_barதேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
தேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_lcapதேவபயம் - கிலோ என்ன விலை? I_voting_barதேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
தேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_lcapதேவபயம் - கிலோ என்ன விலை? I_voting_barதேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
தேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_lcapதேவபயம் - கிலோ என்ன விலை? I_voting_barதேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_lcapதேவபயம் - கிலோ என்ன விலை? I_voting_barதேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
தேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_lcapதேவபயம் - கிலோ என்ன விலை? I_voting_barதேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
தேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_lcapதேவபயம் - கிலோ என்ன விலை? I_voting_barதேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
தேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_lcapதேவபயம் - கிலோ என்ன விலை? I_voting_barதேவபயம் - கிலோ என்ன விலை? I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவபயம் - கிலோ என்ன விலை?


   
   
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Tue Oct 26, 2010 12:23 pm

எழுதியவர் : சகோ.விஜய் (சிங்கப்பூர்)

எது அல்ல தேவன் விரும்பும் தேவபயம்:
1.தண்டணை பயம்:
”தேவன் என்னைக் காயப்படுத்தி விடுவார்” என்ற பயம் தேவன் விரும்பும் பயமல்ல. ”தேவனை நான் காயப்படுத்தி விடுவேனோ” என்ற பயமே தேவன் விரும்பும் பயமாகும். ”தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது எப்படி?” என்று யோசேப்பைப் பதறி ஓடச்செய்தது இந்த பயமே (ஆதி39:1-12). தேவனை ஒரு நீதிபதியாக கண்டு நடுங்குவது உலகத்தாருக்கு வர வேண்டிய பயம். ஆனால் மகாப்பரிசுத்தத் தகப்பனுடைய பிரசன்னத்தின் மகிமையைக் கண்டதால் ஏற்படும் பரிசுத்த நடுக்கமே நாம் கொள்ள வேண்டிய நடுக்கம். ஏசாயா 6:1-5 இல் தீர்க்கன் கொண்டது இவ்வித நடுக்கமே!

2.குருட்டு பயம்:
இன்னொருவகைத் தவறான தேவபயமும் உண்டு. கால்தவறித் தெரியாமல் வேதபுத்தகத்தை மிதித்ததற்க்கே தோப்புக்கரணம், குட்டிக்கரணமெல்லாம் அடிக்கும் அளவுக்கு ரியாக்‌ஷன் கொடுக்கும் கிறிஸ்தவர்களைப் பார்த்திருக்கிறேன். பார்வைக்கு பெரிய பக்திமான் போல தோன்றும். ஆனால் தங்கள் அனுதின வாழ்வில் ஆண்டவரின் கட்டளைகளைக் காலில் போட்டு மிதி மிதியென்று மிதிப்பார்கள்.

பரிசுத்த ஆலயத்துக்குள் பாதரட்சையோடு செல்வதா? என்று புரட்சி செய்வார்கள் ஆனால் பரிசுத்த ஆலயத்தின் பிரசங்கப்பீடத்திலிருந்து ஆண்டவருடைய வார்த்தை வரும்போது குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார்கள். ஆண்டவரைக் கனப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு மணிக்கணக்கில் நெடுமுழங்காலில் நின்று இரு கைகளையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து தனக்காக மட்டுமே சுயநலமாக ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். பவ்யமாகத் திருவிருந்தை வாங்குவார்கள், பக்கத்தில் முழந்தாளிட்டிருக்கும் சகோதரனோடு மாதக்கணக்கில் பகை வைத்திருப்பார்கள். பாஸ்டருக்குப் பயப்படுவார்கள் பரமனுக்கு பயப்படமாட்டார்கள். சபைக் கட்டிடங்களை கொளுத்தும் கூட்டத்தோடு ஆக்ரோஷமாய் மோதுவார்கள் சபையையே பட்சிக்கும் ஓநாய்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்டவர் இட்ட பெயர் ”கொசு இல்லாதபடி வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்கள்” என்பதாகும். பிரியமானவர்களே! இதற்குப் பெயர் தேவபயமல்ல, மாய்மாலம். இவர்களைக் ”குருடர்” என்று ஆண்டவர் அழைக்கிறார். உலகத்துக்கு வெளிச்சமான நாம் குருடராய் இருக்கலாமா?

இதை உன் அதிபதிக்குச் செலுத்து:
ஒருநாள் எனது தனிஜெபநேரத்தில், ஜெபநிலையிலிருந்தேன் ஆனால் என் மனம் எங்கேயோ அலைந்து கொண்டிருந்தது. நேரமும் ஓடிக் கொண்டிருந்தது, வாய் வழக்கமான துதிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. சிந்தனைகள் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தன. திடீரென்று இந்த வசனம் எனக்கு நினைவுபடுத்தப்பட்டது.

”இதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார் (மல்கியா 1:8).

அடுத்த வினாடியே என் சப்தநாடியும் ஒடுங்கி சுயநினைவுக்குத் திரும்பினேன். வெட்கமாகவும் துக்கமாகவும் இருந்தது. உடனே மனந்திரும்பினேன். அன்றிலிருந்து தேவனுடைய பிரசன்னத்தை மதிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

சற்று சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் இயக்குநர். உங்களைத் தனது அறைக்கு பேசும்படி அழைக்கிறார். அவர் உங்களிடம் 100 கோடி ரூபாய் ப்ராஜக்ட் குறித்து சீரியஸாக பேசிக் கொண்டிருக்கையில். நீங்களோ அவர் அங்கு இருப்பதையே சட்டை செய்யாமல் ”மொட்டை மாடியில துணி காயப்போட்டிருந்தேனே, மழைவேற வர்ர மாதிரி இருக்கே!” என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதை அவர் கண்டுபிடித்தாரானால் அந்த சூழ்நிலை எப்படி இருக்கும் என்பதை உணர முடிகிறதா? முதலாளியை விட்டுத்தள்ளுங்கள், நண்பர்களிடமே இப்படி நடந்துகொண்டால் எரிச்சல் அடையமாட்டார்களா? பின்பு நம்மைச் சந்திப்பதையே தவிர்த்து விடுவார்களல்லவா?

உயரதிகாரியோடு பேசும்பொழுது செல்போனை அணைத்துவிட்டுத்தான் அவர் அறைக்குள்ளேயே போகிறோம். உன்னதமானவரோடு பேசும்பொழுதோ SMS வந்தால் கூட ஜெபத்தை நிறுத்திவிட்டு செல்போனை ஆராயத்துவங்கி விடுகிறோம்.

கடந்தவார ஆலய ஆராதனையில் பாடிய எல்லாப் பாடல்களையும் உணர்ந்துதான் பாடினீர்களா? உங்கள் கரகோஷம் விண்ணைப் பிளந்தது, இருதயம் எங்கே இருந்தது?? எதற்காக ஆலயம் போனீர்கள்? நானும் ஆலயத்துக்குச் சென்று வந்துவிட்டேன் என்ற சுயதிருப்திக்காகவா?

நான் இதுவரை நூற்றுக்கணக்கான ஆராதனைகளில் பங்கு கொண்டிருக்கிறேன், பல ஆராதனைகளை நடத்தியும் இருக்கிறேன். இதுவரை ஆராதனை நடத்தும் யாரும் கரங்களை தட்டவும், அசைக்கவும், ஆடவும் உற்சாகப்படுத்துகிறார்களே தவிர ஜனங்களுடைய சிந்தையை தேவனை நோக்கித் ஒருமுகப்படுத்தவும், பாடல்களை உணர்ந்து பாடும்படி வலியுறுத்தவும் பெரும்பாலும் தவறி விடுகிறார்கள். வெளிப்புறமாக எல்லாம் நன்றாக இருந்தால் போதும்!, இசை சிறப்பாக இருந்தால் போதும்! வெற்றுப் பரவசம் கிடைத்தால் போதும். இதையெல்லாம் யாருக்காகச் செய்கிறோம்?

“உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.” (ஆமோஸ் 5:23) ஆம், இருதயத்திலிருந்து பொங்கிவராத ஆராதனை என்ன ஆராதனை? சர்வ வல்லவரின் மகிமையைக் கண்டு அவரை ஆவியில் தாழப் பணிந்து கொள்ளாமல் வெற்றுப்பரவசத்துக்காகவும், சுயதிருப்திக்காகவும் செய்யும் ஆராதனை ஆவியானவருக்கு அருவெறுப்பு.

யாராகிலும் ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிற போது கற்பனைக் குதிரையேறி பவனி சென்றுவிட்டு அவர் என்ன ஜெபித்தார் என்றே தெரியாமல் அவர் ஆமேன் சொல்லும்போது நாமும் சத்தமாக ஆமேன் போட்டு முடிக்கிறோமே, ஆமேன் என்பது ஜெபத்தை முடிக்கப் போடும் கோஷமா என்ன? ஆமேன் என்றால் ”அப்படியே ஆகட்டும்” என்று பொருள். ”அது அப்படியே ஆகட்டும்” என்று சொன்னாயே ”எது எப்படியே ஆகட்டும்?” என்று ஆண்டவர் நம்மிடம் திருப்பிக் கேட்டால் என்ன பதில் சொல்வது? சகல மாட்சிமையும் கனமும் பொருந்திய கர்த்தாதி கர்த்தருடைய பிரசன்னத்தில் நாம் இப்படியா நடந்துகொள்வது!

தேவபயம் கற்றுக் கொள்வோம்:
யூதர்கள் தங்கள் பிள்ளைகளை அவர்கள் பிறந்ததிலிருந்தே தாய்ப்பாலோடு தேவபயத்தையும் ஊட்டி ஊட்டி வளர்ப்பார்கள். ஒரு யூதனுக்கு அவன் வளரும்போதே தேவபயமும் உடன் வளரும். அப்படிப்பட்டவர்களுக்கு கிறிஸ்துவின் மூலம் கிருபை அறிமுகப்படுத்தப்பட்டபோது அது அவர்களுக்கு தேனாக இனித்தது. கிருபையின் அருமையை அறிந்து கொண்டார்கள். நாமோ தேவபயத்தைக் கற்றுக் கொள்ளாமல் கிருபையை நேரடியாகக் கற்றுக்கொள்ளுகிறபடியால் நமக்கு கிருபையின் அருமை தெரிவதில்லை போலும்.

தேவசமூகத்துக்கு மட்டற்ற மரியாதை கொடுத்து, ஜெபத்திலும் ஆராதனையிலும் இருக்கும்போது முழு கவனத்தையும் அவர் மீது வைத்து அவரை ஆராதிப்பதும் அவர் சத்தம் கேட்பதுமே ஆவிக்குரிய வளர்ச்சியின் முதற்படி. இங்கே ஓட்டை இருப்பதால்தான் இன்னும் நாம் L.K.G யிலேயே சீட்டைத் தேய்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவரை இன்னும் அறிய அறிய அவர்மீது அன்பும், பரிசுத்த பயமும் நம்மில் பெருகட்டும் கிறிஸ்து தேவனிடத்தில் பயபக்தியாயிருந்தார் அதன் நிமித்தமே அவருடைய ஜெபம் கேட்கப்பட்டது என்று எபிரேயர் 5:7 சொல்லுகிறது. கர்த்தருக்குப் பயப்படுதலே அவருக்கு உகந்த வாசனையாகும்(ஏசா11:3) மற்றதெல்லாம் வெறும் துர்நாற்றமே!

பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம் (II கொரிந்தியர் 7:1)

[b]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக