புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
48 Posts - 43%
heezulia
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
414 Posts - 49%
heezulia
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
28 Posts - 3%
prajai
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.பாக்யராஜ் கேள்வி பதில்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:47 pm

First topic message reminder :

எதுவும் நம் கையில் இல்லை, எல்லாம் நம் கையில் எது சரி?

ரெண்டுமே சரிதான். எப்படின்னா...

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வாழ்ந்த ராய் சி.கல்வன்ங்கறவரை, 1942ம் வருஷம் முதன் முதலில் இடி தாக்கியது. இதனால் அவர் தன் கால் கட்டை விரலை இழந்தார். ரெண்டாவது தடவையா 1969ம் வருஷம் இடி தாக்கினப்போ, இவரோட புருவமுடியெல்லாம் கருகிடுச்சு. இதே வருஷம் மூணாவது முறையா இடி தலையை தாக்கினப்ப, தலைமுடிகள் பற்றி எரிந்து போனதாம். இப்படி இதே வருஷத்துல திரும்ப திரும்ப ரெண்டு தடவை இடி தாக்கி, சிறு சிறு காயங்களோட தப்பிச்சிட்டாரு. பிறகு 6வது முறையா 1970ம் வருஷம் ஜூன் மாதம் தாக்கிய இடியால இவருக்கு கணுக்காலில் பலத்தக் காயம் ஏற்பட்டுச்சு. அதுலயும் தப்பிச்சுட்டாரு. ஏழாவது தடவையா 1977ம் வருஷம் ஜூன் மாதம் 25ம் தேதி இடி தாக்கினப்போ, மார்பிலும் வயிற்றிலும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரு.இந்த இடி தாக்கி இவருக்கு என்ன நேர்ந்ததோ தெரியல... 1982ம் வருஷம் இவர் தற்கொலை செஞ்சுகிட்டாராம்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:33 am

ஜோதிடருக்கு வியர்த்துச்சு.

தொடர்ந்து மன்னர், இந்தக் கூடாரத்தில் முன்பக்க வாசல் பின்பக்க வாசல் இரண்டு மட்டுமே உள்ளது. நாளைக் காலை நான் எந்த வாசல் வழியாக வெளியேறுவேன் என்று உங்கள் ஜோதிடத்தில் கணித்து எழுதி சீல் வைத்து விடுங்கள். நான் நாளைக் காலை வெளியே வந்த பின் நீங்கள் எழுதி வைத்ததை பார்ப்பேன். சரியாக இருந்தால், பெரிய பரிசு தருகிறேன். தவறாக இருந்தால், தண்டனை உறுதின்னுட்டாரு.

ஜோதிடர் பயந்துட்டே, தலையாட்டிட்டு ரொம்ப நேரம் யோசனை செய்து தன்னோட கணிப்பை எழுதி சீலை வச்சு குடுத்துட்டுப் போனாரு.

மறுநாள் காலை மன்னர் எழுந்து, சிறிது நேரம் யோசித்தார். முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தவிர்த்துவிட்டு, தன்னோட வாளாலே கூடாரத்தின் தடுப்புப் பகுதியை கிழித்து வெளியேறினாரு.

பிறகு... ஜோதிடரின் கணிப்பு அடங்கி மடலை பிரித்துப் பார்த்தார். அதிர்ச்சி.

அதுல, மன்னரே! நீர் முன்பக்க வாசல், பின்பக்க வாசல் இரண்டையும் தவிர்த்து, குறுக்கு வழியாக வெளியேறுவீர்ன்னு இருந்தது.

மன்னருக்கு ஆச்சர்யம்.

ஜோதிடரை பாராட்டி பரிசு கொடுத்திட்டு, எப்படி இவ்வளவு சரியாக கணித்தீர்?னு கேட்க,

ஜோதிடர், மன்னா! சோதிப்பது என்று நீங்கள் தீர்மானித்த பின், நேர்வழியை விட்டு என்னை மடக்குவதற்கு குறுக்கு வழியை நேர்ந்தெடுப்பீர்கள்னு எதிராளியான உங்க மனோதத்துவ ரீதியாக முடிவு செய்தேன்னு சொன்னாரம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:34 am

ஆண்+ பெண்= குழந்தை பெறுவதில் இருவருக்கும் சம பங்கு எனும்போது பெண்ணுக்கு விசேஷ உரிமை ஏன் என்கிறார் என் கணவர்?


விதை மண்ணில் விழுந்தாலும், அதனுடைய வளர்ச்சி மண்ணின் வளத்தைப் பொறுத்துத்தான் அமைகிறது. விதை ஆண் என்றால், மண் வளம் பெண். அதாவது தாய். அதனால்தான், குழந்தைகளின் வளர்ச்சியில் தாயின் பங்கு அதிகமாக உள்ளதுன்னு ஒரு புத்தகத்துல படிச்ச ஞாபகம். அனுபவத்தோட சொன்னது. அழகா ஏத்துக்கற மாதிரி இருக்கே!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:35 am

"நக்கல்' ஒண்ணு!



ஒரு கடையோட அட்டையில் எழுதி இருந்த வாசகம்.

நீ கடன் கேட்டாய். நான் தரவில்லை.
பைத்தியமாகிறாய்.
நான் கடன் தருகிறேன்.
நீ திருப்பித் தரவில்லை.
நான் பைத்தியமாகிறேன்.
அது எனக்கு விருப்பமில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:36 am


சில பெரிய வீட்டுப் பிள்ளைகள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை?




ஐயர் வீட்டு நாய்ங்கறதுக்காக அர்ச்சனை மந்திரம் படிச்சிருக்கும்னு நாம எதிர்பார்த்தா தப்பு நம்மளோடதுதான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:44 am

மாணவர்கள் மத்தியில் சுலபமாய் பதியும் பாடம் இலக்கணமா இலக்கியமா?


ரெண்டுமே இல்லங்க.. வேற ஒண்ணு.. அதாவது...

ஒரு வகுப்புல அறிவியல் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தினாரு.மேசை மேல ஒரு டம்ளர்ல திரவத்தை ஊத்தி வச்சிட்டு, தன் பாக்கெட்டுல இருந்து ஒரு ரூபா நாணயத்தை எடுத்து மாணவர்கள் கிட்ட காட்டி இந்த ஒரு ரூபாய் நாணயம் இந்த திரவத்துல கரையுமா? கரையாதா?ன்னு கேட்டாரு.

மாணவர்கள் எல்லாம் குழப்பத்தோட பதில் சொல்லாம இருந்தாங்க. அதுல சரியா படிக்காத ஒரு பையன் மட்டும் எனக்கு தெரியும்னு சொல்ல..

அறிவியல் ஆசிரியர் ஆச்சரியத்தோட சொல்லு.. சொல்லு...ன்னு ஆர்வமா கேட்டாரு.

பையன், நிச்சயமா கரையாது சார்ன்னு சொன்னான்.

எப்படி இவ்வளவு கரெக்டா சொன்னே?ன்னு ஆச்சரியமா ஆசிரியர் கேட்க,

பையன் பத்து பைசாவை தொலைச்சிட்டதாலே என்னா தேடு தேடுவீங்க.நீங்களா சார் ஒரு ரூபாயை கரைய விடுவீங்க. அதான் கரையாதுன்னு சொன்னேன்னு சொல்ல,

ஆசிரியர் திகைச்சுப் போயிட்டாராம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:44 am

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து எப்படி?

பணக்காரன் ஒருத்தன் புதுசா ஒரு வீட்டுக்குக் குடி போனான். அந்த வீட்டுக்கும் பக்கத்துல தோல் பதனிடும் ஒரு தொழிற்சாலை இருந்துச்சு. அந்த தோல்களின் நாற்றத்தை தாங்க முடியாத பணக்காரன், தொழிற்சாலை முதலாளிகிட்ட வந்து என்னால இந்த நாற்றத்தை தாங்க முடியலை. அதனால தயவு செய்து இந்த இடத்தை காலி பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு நியாயமான ஒரு தொகையைக் குறிப்பிட்டு, அதைத் தான் கொடுத்து விடுவதாக சொன்னார்.

ஆனால் தொழிற்சாலை முதலாளியோ பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒரு பெரும் தொகையை கேட்க பணக்காரர் அதற்கு மறுக்க., இப்படியே இரண்டு மாதம் பேச்சு வார்த்தை வளர்ந்து கொண்டே போனது.

இடையில் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாம ஒரு மாதம் அமைதியா இருந்தது.

கொஞ்ச நாள் கழிச்சு தொழிற்சாலை முதலாளி பணக்காரர் கொடுக்கிற தொகையை வாங்கிட்டு போயிடலாம். அந்த தொகையில் தனக்கு நியாயமான லாபம் இருப்பதை உணர்ந்து அவரிடம் போய்க் கேட்டான்.

அதற்கு அந்த பணக்காரன் இந்த இரண்டு மாதத்தில் இந்த நாற்றமெல்லாம் எனக்குப் பழகி விட்டது. அதனால் பரவாயில்லை... நீங்கள் இங்கேயே இருந்து கொள்ளலாம்னு சொல்ல,

அவனுக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:45 am

ஒரு சராசரி மனிதனின் பலஹீனம்?

ஒரு நாட்டின் மன்னனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அறிவாளிகள் கூட சில சமயம் ஏமாந்து போய்விடுகிறார்களே, எதனால்?ங்கிறதுதான் அந்த சந்தேகம்.

இந்த சந்தேகத்தை தீர்ப்பவர்களுக்கு தன்னோட நாட்டுல பாதியை பரிசளிப்பதா மன்னன் அறிவிச்சான்.

அவனுடைய சந்தேகத்தை தீர்க்க யாரும் முன்வரவில்லை. ரொம்ப நாள் கழிச்சு, ஒரு நாள் வாலிபன் ஒருத்தன், மன்னர்கிட்ட வந்து தனியா பேச விரும்பினான்.

அரசனும் அவனை தனிமையில சந்திச்சாரு..

அப்போ வாலிபன் அரசே... நான் உங்கள் அண்டை நாட்டு மன்னனின் அந்தரங்கச் செயலாளன். இது வரை நீங்கள் அவரை வெல்ல பல முறை முயன்றும், முடியாமல் போயிற்று. நாளை எங்கள் மன்னர் மாறுவேடத்தில் உங்கள் நாட்டு பக்கம் உள்ள காட்டில் மத்தியில் இருக்கும் ஆலயத்திற்கு பூஜை செய்ய வருகிறார். நீங்களும் மாறுவேடமிட்டு, ஒரு நான்கைந்து மெய்க்காவலர்களுடன் வந்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கைது செய்யலாம். நான் இப்படி துரோகியாக மாறியதற்கு காரணமே, எங்கள் மன்னர் என் உடன் பிறந்த சகோதரனை செய்யாத குற்றத்திற்காக அநியாயமாக மரண தண்டனை கொடுத்து விட்டார். இதனால் என் குடும்பம் சிதறிப் போய் விட்டது. அதற்கு பழி வாங்கவே இப்படி செய்கிறேன்னு சொல்ல,

மறு நாள் அரசன் அந்த வாலிபனுடன் மாறுவேடத்தில் சில மெய்க்காப்பாளர்களோட காட்டுக்குள்ள போனான்.

காட்டில் மத்திய பகுதிக்கு போன பிறகு எதிர்பாராம மெய்க்காவலர்களை விட்டு மன்னரும் வாலிபனும் மட்டுமே வழி மாறி வந்துட்டாங்க.

அப்ப திடீர்னு நாலஞ்சு பேர் ஆயுதங்களோட மன்னரை சூழ்ந்துட்டாங்க.

வாலிபனை பார்த்து மன்னன் இது என்ன துரோகம்? னு கத்த..

வாலிபன் சிரிச்சுக்கிட்டே மன்னரே... நான் உங்கள் குடிமகன்.. மாபெரும் மேதைகளும் கூட இப்படித்தான் ஆசையிலும் அவசரத்திலும் எதிர்பாராமல் ஏமாந்து போனார்கள்னு சொல்ல..

மன்னருக்கு தான் அறிவிச்ச போட்டி ஞாபகத்துக்கு வந்தது. வாலிபனுக்கு போட்டியில் அறிவித்த படி பாதி நாட்டை பரிசளிச்சாராம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:46 am

ஒரு நல்ல காட்சியமைப்பின் யுக்தி என்ன?



எதிர்பார்ப்பை உண்டாக்கி எதிர்பாராத விதமா முடிக்கணும். இப்படிச் சொன்னா மொட்டையா இருக்கும். சீனாவே சொல்றேன்.

ரொம்ப ரொம்ப கோபக்கார வாத்தியாரு, பசங்க தப்பு செஞ்ச எடுத்துருவாரு. ஒரு நாள் காலையில பக்கத்து பக்கத்துல உட்கார்ந்திருந்த ரெண்டு பசங்களை எழச் சொல்லி, நேத்து மத்தியானம் முழுக்க ரெண்டு பேருமே லீவு என்னாச்சு?ன்னு கேட்க,

ஒருத்தன் திடீர்னு வயித்தால போச்சு சார்ன்னு சொன்னான்,.

அடுத்தவன் எங்க தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை. சைக்கிள்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு வந்தேன் னு சொன்னான்.

உட்காருங்க ன்னுட்டாரு,

அப்ப ஒரு பெரியவர் இருமிகிட்டே வகுப்பு வாசல்ல நின்னு வாத்தியார்கிட்ட இருமல் மருந்துக்காக நேத்து வீட்டு அலமாரியில 20 ரூபா வச்சுட்டு ஊருக்கு போயிருந்தேன். இப்ப காலையில வந்து பார்த்தா பணத்தை காணோம். நேத்து மத்தியானம் என் பேரன் ஸ்கூலுக்கு வந்திருந்தானா? இல்ல.. லீவா?ன்னு கேட்டாரு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:46 am

தாத்தா ஆஸ்பத்திரின்வுனு ரீல் விட்டவன் திரு திருன்னு முழிச்சான். வாத்தியார் பின்னி எடுக்கப் போறாருங்கற பயத்துல ட்ராயர் லேசா நனைய ஆரம்பிச்சது.

அப்ப வாத்தியார் உங்க பேரன் காலையில லேட்டா வந்தான். என்ன?ன்னு கேட்டதுக்கு தாத்தாவுக்கு இருமல் மருந்து வாங்கி வச்சுட்டு வர்றதுக்கு லேட்டாயிடுச்சுன்னான். எதுக்கும் வீட்டுல போய் தேடிப் பாருங்கன் னாரு.

அப்ப சரின்னு தாத்தா புறப்பட்டாரு.

வாத்தியார் ட்ராயர் நனைஞ்சவன் பக்கத்துல வந்து.. உங்க தாத்தா வீடு போய்ச் சேர்றதுக்குள்ள நீ முன்னால போய் இருமல் மருந்தை வாங்கி வச்சுட்டு வந்துடுன்னு தன்னோட பாக்கெட்டுல இருந்து சைக்கிள் சாவியும், 20 ரூபாய் நோட்டும் எடுத்து நீட்டினாரு.

மேல சொன்ன விஷயம் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன்,

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:47 am

உங்கள் படங்களில் நோகாமல் நோம்பு கும்பிடுவது? என்று வருகிறதே... என்ன அது?


மேல் நாட்டுல நடந்த ஒரு சம்பவம்.

ஒரு பெண் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் சர்ஜன்கிட்ட போய், டாக்டர்... வயதாகி விட்டதால் எனது முகம் முழுக்க சுருக்கம் விழுந்து விட்டது. ஆபரேஷன் மூலம் வசிகரிக்கும் முகமாக மாற்ற முடியமா?ன்னு கேட்டாங்க

அந்தப் பெண்ணோட முகத்தைச் சுற்றி வர உற்றுப் பார்த்த டாக்டர் தாராளமாக மாற்ற முடியும். ஆனா கொஞ்சம் கால அவகாசமும், 5000 டாலர் பணமும் செலவழிக்க வேண்டும் ன்னாரு.

அதுக்கு அந்தம்மா ஐயையோன்னு பதறிப் போய் மிக மிக மலிவான முறையில் சீக்கிரமா சுருக்கத்தை மறைய வைக்க முடியாதா? ன்னு கேட்டு நோகாமயே நோம்பு கும்பிட பார்த்தாங்க.

டாக்டர் கடுப்பாகி ஏன் முடியாது? ரொம்ப ரொம்ப சல்லியான செலவில் முகத்தை மறைக்கும் அளவுக்கு ஒரு ஸ்கிரீனை சாயங்காலமே தைச்சு கொடுத்துர்றேன். அதை மாட்டிகிட்டா, சாகிற வரைக்கும் சுருக்கம் யாருக்கும் தெரியவே தெரியாது ன்னு சொன்னாரு.

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக