புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
9 Posts - 82%
heezulia
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
1 Post - 9%
mruthun
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆண்டனியால்  முடியும்  Poll_c10ஆண்டனியால்  முடியும்  Poll_m10ஆண்டனியால்  முடியும்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டனியால் முடியும்


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Oct 07, 2010 5:46 pm

"மனசு வலிக்குது சார்" என்கிறார் ஆண்டனி ராஜ். நான் அவரைப் பார்க்கிறேன்

அவருக்கு வலது கை இல்லை. கை இருந்த இடத்தில் ஒரு துண்டு போர்த்தியிருக்கிறது. இல்லாத கை அவருக்கு வலியைத் தந்துகொண்டே இருக்கிறது. ஆண்டனி பேசிக்கொண்டே இருக்கிறார்.

"நல்லதா ஒரு சினிமா எடுக்கணும். நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இது மட்டும்தான் சார் என்னோட ஆசை. ஓர் இடத்தில் இருக்காம துறுதுறுன்னு பயங்கர சேட்டை பண்ணுவேன். என்னைச் சமாளிக்க முடியாம பாண்டிச்சேரியில் ஒரு ஹாஸ்டலில் சேர்த்துவிட்டுட்டாங்க. ப்ளஸ் டூ வரைக்கும் அங்கதான் படிச்சேன். நாடகம், கவிதைன்னு ஆர்வம். அதுக்குப் பிறகு, சென்னை வந்து லயோலாவில் தமிழ் படிச்சேன்.

கல்லூரி முடிச்சு வெளியில் வந்ததும் சினிமாவுக்குள் நுழையப் பெரிய போராட்டம். கையில ஒரு பைக் இருந்துச்சு. அதை வெச்சுக்கிட்டு தினமும் ரவுண்ட் அடிக்கிறது. எப்படியாச்சும், யார்கிட்டேயாவது சேர்ந்துட முடியாதான்னு இருக்கும். படம் எடுத்து ரிலீஸ் பண்ண முடியாத எத்தனையோ இயக்குநர்களின் கதைகளில் வேலை பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமா சினிமா பிடிபட ஆரம்பிச்சுது. ஜான் மகேந்திரன் சார் அறிமுகம் கிடைச்சு, அவருடன் வேலை பண்ணேன். அவர் மூலமா லக்ஷ்மிகாந்தன் சார் அறிமுகம் ஏற்பட்டு, அவரோட 'டாக்ஸி' படத்தில் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன்.

இதுக்கு இடையில் 'இருள்'னு ஒரு குறும்படம் பண்ணேன். மக்கள் டி.வியில் அப்போதான் குறும்படப் போட்டி ஆரம்பிச்சிருந்தாங்க. அதில் 'இருள்' இரண்டாவது பரிசு வாங்கியது. வசதி குறைவான குடும்பப் பின்னணி என்னோடது. ஆனால், எதுக்காகவும் எப்பவும் நான் கவலைப்பட்டது இல்லை... கலங்கி நின்னது இல்லை. நினைச்சதை செஞ்சு பார்த்துடணும்னு குறியா இருந்தேன். அந்தச் சமயத்தில்தான் என்னோட மிக நெருங்கிய நண்பன் தமிழ்ச்செல்வன் ஒரு பெரிய விபத்தில் சிக்கினான்" கொஞ்சம் நிறுத்தித் தொடர்கிறார்...

"தமிழ்ச்செல்வன் எனக்கு ரொம்ப நெருக்கம். படுத்த படுக்கையாக் கிடந்த அவனைப் பார்க்கப் போனேன். ஆனால், என்னை அவனுக்கு அடையாளம் தெரியலை. அவன் நினைவுகள் மாறிப்போயிருந்துச்சு. விபத்து என்பது எவ்வளவு கொடூரமானதுன்னு அந்தக் கணத்தில் நான் உணர்ந்தேன். சம்பந்தமே இல்லாம சாலையில் போயிட்டு இருக்கிற ஒருத்தரை ஒரு வாகனம் அடிச்சுத் தள்ளிட்டுப் போயிடுது. ஆனா, அடிபட்டவனுக்கு ஒரு குடும்பம், வாழ்க்கை, பொறுப்புகள், எதிர்காலம்... எவ்வளவு இருக்கு? விபத்தை வேடிக்கை பார்க்குற மக்கள் 'பாவம்'னு சொல்லிட்டுப் போயிடுவாங்க. அந்தப் 'பாவம்' எந்தவிதத்துலயும் உதவப் போறது இல்லை. உடனடியா விபத்தைப்பற்றி ஒரு குறும்படம் எடுக்க முயற்சி பண்ணேன்.

பேப்பர்ல வந்த செய்திகள், உலகத்தில் என்னென்ன வகையான விபத்துக்கள் நடக்குது... எல்லாத்தையும் சேகரிச்சேன். விபத்து தொடர்பான விதவிதமான வீடியோக்களைச் சேகரிச்சுப் பார்த்தேன். அந்தச் சமயத்தில் பாண்டிச்சேரியில் இருந்து என் நண்பன் ஒருவன் வந்திருந்தான். அவனைப் பார்த்துட்டு சும்மா அவன்கூட பாண்டிச்சேரிக்குப் போயிட்டு வருவோம்னு கிளம்பினேன். விபத்துபற்றிய சில படங்களை ரெஃபரன்ஸுக்காக வாங்கிட்டு பஸ்ல திரும்பிட்டு இருந்தேன். பாண்டிச்சேரியில் இருந்து பஸ் வெளியே வந்துச்சு. ஈ.சி.ஆர். ரோடு. வேகமா ஓட்டிட்டு இருந்தார் டிரைவர். நான் டிரைவர் ஸீட்டுக்குப் பின் பக்கமா நாலாவது வரிசையில் ஜன்னல் ஓரமா உட்கார்ந்து இருந்தேன். திடீர்னு எதிர்ல ஒரு பஸ் தாறுமாறா பயங்கர வேகமா வருது. எங்க பஸ் டிரைவர் பஸ்ஸை ஒடிச்சுத் திருப்பினார். நேருக்கு நேரா மோதியிருக்க வேண்டிய அந்த பஸ், நான் உட்கார்ந்திருந்த ஜன்னல் ஓரமா படார்னு மோதி அந்தப் பக்கத்தையே நொறுக்கிடுச்சு.

என்னோட வலது கை ஜன்னலுக்கு வெளியே தோள்பட்டையில் இருந்து தனியா தொங்கிட்டு இருக்கு. எனக்குச் சில நிமிடங்களுக்கு எந்த வலியும் தெரியலை. சொதசொதன்னு ரத்தம் கொட்டுது. ஆனா, மயக்கம் இல்லை. எனக்கு முன்னாலயும் பின்னாலயும் உட்கார்ந்திருந்த எல்லோருக்குமே என்னை மாதிரி கொடூரமான அடி. ஒரே சத்தம். எனக்கும் உயிரை எடுக்குற கொடூர வலி. 'ஐயோ, அம்மா'ன்னு கத்துறேன். அந்த இடத்தில் யாரும் இல்லை. எங்களை மோதின வண்டி நிக்காமப் போயிடுச்சு. டிரைவரும் கண்டக்டரும் அந்த வண்டியைப் பிடிக்கக் கிளம்பிப்போயிட்டாங்க. என் கை தோள் பட்டையில் இருந்து தொங்கிட்டு இருக்கு. ஆஸ்பிட்டல் அழைச்சுட்டுப் போக ஒரு வண்டி வந்து நிக்குது. தொங்கிட்டு இருந்த கையை எடுத்து மடியில் வெச்சுக்கிட்டு உட்கார்ந்தேன். பாண்டிச்சேரி பி.ஐ.எம்.சி. அரசு மருத்துவமனை. இரவு 11 மணிக்கு அடிபட்ட நாங்க எல்லோரும் போனபோது பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை. பயிற்சி டாக்டர்கள்தான் இருந்தாங்க. அப்போதைக்கு எங்க வலியைக் குறைக்க மருந்து கொடுத்துட்டு, 'காலையில் பெரிய டாக்டர் வருவார்'னு சொல்லிட்டாங்க. தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழியத் தொங்கிட்டு இருந்த கையைப் பார்த்தேன். வாழ்க்கை முழுக்க இனிமே எனக்கு வலது கை கிடையாதுன்னு அப்பவே எனக்குப் புரிஞ்சுபோச்சு. வலது கையை எடுத்துட்டாங்க. பிறகு பார்த்த டாக்டர்கள் 'உடனே ஆபரேஷன் பண்ணியிருந்தா கையை ஒட்ட வெச்சிருக்கலாமே'ன்னு சொன்னாங்க. யாரைக் குற்றம் சொல்றது? எல்லாம் முடிஞ்சுபோச்சு.

ரெண்டு மாசம். அந்தப் புது வாழ்க்கையை எதிர்கொள்றது பெரிய சவாலா இருந்துச்சு. 26 வயசுல புதுசா பொறந்தது மாதிரி ஒவ்வொண்ணாக் கத்துக்கிட்டேன். சினிமாவில் கையெழுத்து அழகா இருக்குற அசிஸ்டென்ட்டை ஸ்க்ரிப்ட் காப்பி பண்ணச் சொல்லுவாங்க. என் கையெழுத்து குண்டு குண்டா அழகா இருக்கும். அது போச்சு. நோட்டும் பென்சிலும் வாங்கி வெச்சுக்கிட்டு இடது கையால் எழுதப் பழகினேன். ஒரு கையால் துணி போட்டுக்க, ஒரு கையால் தலைவாரிக்க... எல்லாத்துக்கும் பழகினேன். மறுபடியும் பழைய ஸ்க்ரிப்ட்டை எடுத்து விபத்துபற்றிய அந்தக் குறும்படத்தை நண்பர்களின் பொருள் உதவியோடு பண்ணி முடிச்சேன்" என்று டி.வி.டியைக் கையில் தருகிறார். 'அதிகாலை' என்று தலைப்பிடப்பட்ட அந்தக் குறும்படம் இரண்டு விபத்துக்களைப்பற்றி விவரிக்கிறது.

"குடிச்சுட்டு வண்டி ஓட்டுறது, வேகமா ஓட்டுறது... இது எல்லாத்தையும் தாண்டி, மன உளைச்சலோடு வண்டி ஓட்டுறதுதான் உலகம் முழுக்கப் பெரும்பாலான விபத்துக்களுக்கான காரணம். ஒரு தனி மனிதனுக்கு ஏன் மன உளைச்சல் வருது? அலுவலக உயர் அதிகாரிகள், பொருளாதாரப் பிரச்னை... இப்படி சமூகத்தால்தான் தனி மனிதனுக்குப் பிரச்னைகள். அதனால் விபத்து என்பது ஓட்டுறவருக்கும் மோதுறவருக்கும் இடையில் நடக்குற ஒரு சம்பவம் மட்டுமே இல்லை. அதில் நாம் எல்லோருமே சம்பந்தப்பட்டு இருக்கோம். இதை அழுத்திச் சொல்லணும்னு ஆசைப்பட்டுதான் இந்தக் குறும்படத்தை எடுத்தேன். எனக்கு ஒரு சினிமா இயக்குநர் ஆகணும். அதுதான் ஆசையும் லட்சியமும். என் எதிர்கால வாழ்க்கைப் போராட்டம் முழுக்க அதை நோக்கித்தான் இருக்கும்" கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் அமர்ந்தபடி பெரும் கனவுகளுடன் பேசுகிறார் ஆண்டனிராஜ். அதை அடையும் வல்லமை ஆண்டனிக்கு உண்டு!

நன்றி: ஆனந்த விகடன்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 14, 2010 2:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 14, 2010 2:52 pm

நன்றி நன்றி நன்றி உங்களால் நிச்சயம் முடியும் ஆண்டனி , வாழ்த்துக்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 14, 2010 3:00 pm

மனதை நிறைத்தது. தன்னம்பிக்கை இருந்தால் போதும் என்பதற்கு ஆண்டனி ஓர் அழகிய உதாரணம். பாராட்டுக்கள்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக