புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10 
251 Posts - 52%
heezulia
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10 
18 Posts - 4%
prajai
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Barushree
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:10 pm

First topic message reminder :



இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு.

அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார்.
-ஆசிரியர்


ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஒன்றல்ல என்ற உண்மைகூட நம்மில் பலர் புரியாமல் விவாதம் செய்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டவர்களைப் போலக் கடந்த இரண்டு நூற்றாண்டு காலத்தில் வேலைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இலங்கைக்குப் போய் அங்கே குடியேறியவர்கள் அல்ல ஈழத் தமிழர்கள்.

அவர்கள் அந்தத் தீவின் பூர்வ குடியினர். மண்ணின் மைந்தர்கள். இந்நிலையில் இலங்கைத் தமிழர் என்பவர் அந்நாட்டையே பூர்வீகமாக கொண்டவர் என்ற உண்மையை எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா - இல்லையா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில் அவர் இல்லாத ஈழமும், ஈழமக்களும் இனி பெறப்போவது என்ன என்பதைவிட, அவர்கள் எதையெல்லாம் இழந்தார்கள் என்று அறிவது அவசியம்.

விடுதலைப்புலிகளாகட்டும் இன்னபிற அமைப்புகளாகட்டும் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் அறிய வேண்டியது அவசியமாகிறது.

அதேபோன்று இந்தியாவின் பார்வை மற்றும் பங்களிப்பு, தமிழகத் தலைவர்களின் பார்வை மற்றும் பங்களிப்பு, உலக நாடுகளின் பார்வை மற்றும் அதன் பங்களிப்பு குறித்தும், இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அளித்த உதவிகள் குறித்தும் அலசவேண்டியதும் அவசியமாகிறது.

இன்று, இலங்கை வரலாற்று ஏடுகளைப் புரட்டுபவர்கள் யாராக இருந்தாலும், உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுவார்களேயானால், அவர்கள், இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலங்கை வரலாற்றை ஒதுக்கிவிட்டு, புதிய உண்மைகளின் அடிப்படையில், புதிய பார்வையுடன் இலங்கை வரலாற்றை அணுகவேண்டியது அவசியமாகும்.

இதுவரை சொல்லப்பட்ட இலங்கைத் தீவின் வரலாறு, கற்பனையின் அடித்தளம் மீது கட்டப்பட்ட இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட மாய வரலாறு என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன. இன்று பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் உண்மைகள் வெளிவரத் தலைப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான புதிய உண்மைகள் கிடைக்கலாம்.

மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு இந்தியாவின் வரலாற்றைக் கூறுவது எப்படி உண்மைக்குப் புறம்பாக இருக்குமோ, அதுபோலத்தான் சிங்களவரின் இதிகாசமான மகா வம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு இலங்கை வரலாற்றை எழுதுவது என்பது!

அப்படியென்றால் உண்மையான வரலாற்றை எந்த அடிப்படையில் எழுதுவது அல்லது பார்ப்பது என்ற நியாயமான கேள்வி எழுகிறது. உண்மையான வரலாறு என்பது ஆதாரபூர்வமான உண்மைகளையும், விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுகளையும் கொண்டு முடிவுக்கு வரவேண்டிய ஒன்றாகும்.

இலங்கை இன்றிருக்கும் ரணகள சூழலில், இனவெறித் தாக்குதல்கள் அத்துமீறி நடக்கும் அந்த குட்டித்தீவின் வரலாற்றுப் பின்னணியை அறிவது, இலங்கைத் தமிழர்களுக்காக மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தும் ஜனநாயக உணர்வுகொண்ட ஒவ்வொருவரின் கடமையாகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:38 pm

காங்கேயன்துறை போன்ற இடங்களின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும் அதைப் பரிசீலிக்கக் கூட இலங்கை அரசு தயாராக இல்லை. அதே போன்று கிழக்குக் கடற்கரைத் திட்டங்களும் நிறுவப்படவில்லை. காரணம், இதுவும் தமிழர் வாழும் பகுதியில் இருப்பதே.

இதுபோன்ற புறக்கணிப்புக்கு என்ன காரணம்? இவை யாவும் தமிழர் பகுதியில் அமையப்போகும் திட்டங்கள். இவை நிறைவேற்றப்பட்டால் தமிழர் பகுதியிலுள்ளோர் வேலை வாய்ப்பினை அதிகம் பெறுவர். ஒரு தொழிலை அடுத்து அதன் உபதொழில்கள் பல தோன்றும். இதனால் தமிழரின் வாழ்க்கை வளம் பெறும். அதனாலேயே திட்டங்கள் யாவும் கிடப்பில் போடப்பட்டன. இதனால் தமிழர் பகுதியில் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்தது.

அடுத்ததாக, தேசிய மயமாக்குதல் கொள்கை உருவாக்கப்பட்டது. அதற்கான சட்டவரைவும் எழுதப்பட்டுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இது சர்வதேச நிறுவனங்களுக்குச் சாதகமாகவும் தமிழர் நிறுவனங்களுக்குப் பாதகமாகவும் அமைந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இந்திய மூலதனத்திற்கு எதிராக உருவான ஒரு தாக்குதலே இது. இதனால் இந்தியாவில் சொத்தும் இலங்கையில் தொழிலும் கொண்ட தமிழர்கள் நெருக்கடிக்கு ஆளானார்கள்.

தேசிய மயமாக்குதல் திட்டத்தினால் மலையகத் தமிழர்களும் பெருத்த பாதிப்புக்குள்ளாயினர். எப்படியெனில், மலையகத் தமிழரின் நகரப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடிபுகச் செய்தனர். நகர விரிவாக்கம் என்பதே திட்டமிட்டுச் செய்த சதி என்றுதான் சொல்ல வேண்டும்.

80,000 ஏக்கர் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டதால் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பயந்து நடுங்கினார்கள். இருப்பினும் இவர்களுக்கெனச் சில சலுகைகள் கிடைத்தன. ஏற்கெனவே தோட்டத்துறையில் இருந்த அத்துமீறல் சட்டம் நீக்கப்பட்டது. சேமலாப வைப்புத் திட்டம் (உ.ட.ட.) உருவாக்கப்படுதலும் நடைபெற்றன. (இவை நடைமுறைக்கு வந்ததற்கான சான்று எதுவும் இதுவரை தெரியவில்லை).

இந்தத் தேசியமயமாக்கும் திட்டத்தால் மலையகத்தில் இருந்த இந்திய வம்சாவளி வர்த்தகர்கள் மலையகத்தை விட்டு வெளியேறினர். தோட்ட நகர்ப்புற பகுதி வர்த்தகர்கள் வட பிராந்தியப் (யாழ்) பகுதியிலிருந்து வந்தவர்கள். மலையகத்தில் வாழும் பிரஜா உரிமை பெற்ற ஒரு சில வர்த்தகர்கள் புதிய வர்த்தகக் குழாமில் சேர்ந்து கொண்டனர்.

இந்த வர்த்தகக் குழாம் சிங்களக் கூலிகளை மலையகத் தோட்டங்களில் ஈடுபடுத்தியது. இதனால் குடியுரிமையற்ற தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். அதனால் அவர்கள் அடைந்த இன்னல்கள் கணக்கிடலங்காது.

புள்ளிவிவர ரீதியாகப் பார்த்தால் ரப்பர், தேயிலை ஏற்றுமதி 1968-இல் 1976 மில்லியன் ரூபாய் என்று இருந்த நிலைமை மாறி, 1978-இல் 13,176 மில்லியன் ரூபாயுமாக வருவாய் உயர்ந்துள்ளது. இப்படிப் பத்து மடங்கு வருவாய் உயரக் காரணமான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையோ நிச்சயமற்ற தன்மையாய் மாறியது.

நீர்ப்பாசன விவசாயத்துக்கும் எந்தத் திட்டமும் தமிழர் பகுதியில் நிறைவேற்றப்படவில்லை. 1977-இல் இருந்து அந்நிய நாடுகளின் உதவியோடு அணை கட்டவும், விவசாய நில வளர்ச்சித் துறைக்கும், விவசாயிகளின் மறுவாழ்வுக்கெனவும் பல மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.

இத்தொகையில் 0.001 சதவிகிதம் கூடத் தமிழ் பேசும் பகுதிகளுக்காகச் செலவழிக்கப்படவில்லை (கமிட்டி ஆஃப் நேஷனல் டெவலப்மெண்ட்-லங்கா கார்டியன் கொழும்பு - 1 நவம்பர் 1983-இல் வெளியிட்ட அறிக்கை).

சிங்கள வணிக வியாபாரத் தொழில் நிறுவனக் குழுக்கள் தங்களுக்குச் சாதகமாக இதை மாற்றி அமைத்துக்கொண்டு தமிழர்களையும் மற்றும் மதச் சிறுபான்மையினரையும் பொருளாதார ரீதியாக ஒடுக்க முற்பட்டன.

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக