புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10 
6 Posts - 86%
cordiac
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10 
251 Posts - 52%
heezulia
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10 
2 Posts - 0%
cordiac
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:10 pm

First topic message reminder :



இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு.

அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார்.
-ஆசிரியர்


ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஒன்றல்ல என்ற உண்மைகூட நம்மில் பலர் புரியாமல் விவாதம் செய்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டவர்களைப் போலக் கடந்த இரண்டு நூற்றாண்டு காலத்தில் வேலைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இலங்கைக்குப் போய் அங்கே குடியேறியவர்கள் அல்ல ஈழத் தமிழர்கள்.

அவர்கள் அந்தத் தீவின் பூர்வ குடியினர். மண்ணின் மைந்தர்கள். இந்நிலையில் இலங்கைத் தமிழர் என்பவர் அந்நாட்டையே பூர்வீகமாக கொண்டவர் என்ற உண்மையை எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா - இல்லையா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில் அவர் இல்லாத ஈழமும், ஈழமக்களும் இனி பெறப்போவது என்ன என்பதைவிட, அவர்கள் எதையெல்லாம் இழந்தார்கள் என்று அறிவது அவசியம்.

விடுதலைப்புலிகளாகட்டும் இன்னபிற அமைப்புகளாகட்டும் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் அறிய வேண்டியது அவசியமாகிறது.

அதேபோன்று இந்தியாவின் பார்வை மற்றும் பங்களிப்பு, தமிழகத் தலைவர்களின் பார்வை மற்றும் பங்களிப்பு, உலக நாடுகளின் பார்வை மற்றும் அதன் பங்களிப்பு குறித்தும், இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அளித்த உதவிகள் குறித்தும் அலசவேண்டியதும் அவசியமாகிறது.

இன்று, இலங்கை வரலாற்று ஏடுகளைப் புரட்டுபவர்கள் யாராக இருந்தாலும், உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுவார்களேயானால், அவர்கள், இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலங்கை வரலாற்றை ஒதுக்கிவிட்டு, புதிய உண்மைகளின் அடிப்படையில், புதிய பார்வையுடன் இலங்கை வரலாற்றை அணுகவேண்டியது அவசியமாகும்.

இதுவரை சொல்லப்பட்ட இலங்கைத் தீவின் வரலாறு, கற்பனையின் அடித்தளம் மீது கட்டப்பட்ட இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட மாய வரலாறு என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன. இன்று பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் உண்மைகள் வெளிவரத் தலைப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான புதிய உண்மைகள் கிடைக்கலாம்.

மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு இந்தியாவின் வரலாற்றைக் கூறுவது எப்படி உண்மைக்குப் புறம்பாக இருக்குமோ, அதுபோலத்தான் சிங்களவரின் இதிகாசமான மகா வம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு இலங்கை வரலாற்றை எழுதுவது என்பது!

அப்படியென்றால் உண்மையான வரலாற்றை எந்த அடிப்படையில் எழுதுவது அல்லது பார்ப்பது என்ற நியாயமான கேள்வி எழுகிறது. உண்மையான வரலாறு என்பது ஆதாரபூர்வமான உண்மைகளையும், விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுகளையும் கொண்டு முடிவுக்கு வரவேண்டிய ஒன்றாகும்.

இலங்கை இன்றிருக்கும் ரணகள சூழலில், இனவெறித் தாக்குதல்கள் அத்துமீறி நடக்கும் அந்த குட்டித்தீவின் வரலாற்றுப் பின்னணியை அறிவது, இலங்கைத் தமிழர்களுக்காக மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தும் ஜனநாயக உணர்வுகொண்ட ஒவ்வொருவரின் கடமையாகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:18 pm

6. ஐரோப்பியர் வருகையும் அவர்களது ஆட்சியும்

சிக்கலான கால கட்டங்களிலெல்லாம் சிங்களவர்கள் அந்நியரிடமே தஞ்சம் புகுந்தனர். இதற்கு சரியான எடுத்துக்காட்டுதான் ஐரோப்பியர் வருகை.

17-வது நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஐரோப்பா தொழிலில் செழித்திருக்கவில்லை. அங்கு இயந்திரமயமான புரட்சி ஏற்பட்டது வெகுகாலத்திற்குப் பின்னர்தான்.

ஆதலால் பொருள்களை உற்பத்தி செய்வதிலும் ஏற்றுமதி செய்வதிலும் அக்காலத்தில் முன்னணியில் இருந்த ஆசிய நாடுகளுக்கு வியாபார நிமித்தம் செல்ல ஆரம்பித்தார்கள். ஐரோப்பிய வியாபாரிகள் தங்களது பொருள்களைக் கொடுத்து ஆசியப் பொருள்களை வாங்கினார்கள்.

இவர்களில் முன்னணியில் நின்று வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தியவர்கள் போர்த்துக்கீசியர்களே. இதனால் இவர்களிடம் பெருத்த செல்வம் சேர்ந்தது.

இவர்களது செல்வப் பெருக்கைக் கண்ட பொறாமையின் விளைவே ஆங்கிலேய, ஒல்லாந்த (டச்சு) கம்பெனிகள் ஆசிய நாடுகளை நோக்கித் தங்களது வியாபாரப் பயணத்தைத் தொடர்ந்தன என்கிறார் ஜவாஹர்லால் நேரு தனது "உலக சரித்திரம்' எனும் நூலில். வியாபாரத்தில் தனக்கென இடம் பிடித்துக் கொண்டதும் ஆங்காங்குள்ள அரசுகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு முதலில் அவர்களின் நண்பர்களாகவும், நாளடைவில் அந்தந்தப் பகுதிகளின் சிற்றரசுகளைப் பிடித்துக் கொண்டு ஆட்சியும் புரியலாயினர். சிற்றரசுகள் பணிந்தால் மட்டும் போதுமானது அல்ல; பெரும்பாலான சிற்றரசுகளின் மீது ஆதிக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

இந்தியாவில் போர்த்துக்கீசியரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் தங்களது வியாபாரங்களைப் பெருக்கிக் கொண்டு பின் உள்நாட்டுச் சிற்றரசுகளை மோதவிட்டு நாட்டையும் பிடித்தனர் என்பதே நம் கடந்த கால வரலாறு.

போர்த்துக்கீசியர் 1505-இல் கும்பலாக வியாபாரம் செய்யும் நோக்கில் இலங்கை வருகிறார்கள். போர்த்துக்கீசியர்கள் அடியெடுத்து வைத்தபோது இலங்கையில் மூன்று தனித்தனி நாடுகள், தனித்தனி மன்னர்களின் கீழ் அரசாட்சி நடந்தன.

நல்லூரைத் தலைமையகமாகக் கொண்ட தமிழர் ஆட்சி
கண்டியைத் தலைமையகமாகக் கொண்ட கண்டி மன்னனின் ஆட்சி
கோட்டையைத் தலைமையகமாகக் கொண்ட கோட்டை மன்னனின் ஆட்சி
என்பதே அந்த மூன்று அரசுகளாகும்.

இதில் கண்டியும், கோட்டையும் சிங்களவர் வாழ்ந்த பகுதியாகும். இந்த மூன்று அரசுகளில் போர்த்துக்கீசியரை அன்புடன் வரவேற்றும், மரியாதை வழங்கியதும் கோட்டை அரசுதான்.

இருபாலரும் தங்களது அன்பையும் நேயத்தையும் வெளிப்படையாகவே காட்டிக் கொண்டார்கள். கோட்டை மன்னனுக்கு வாரிசு என்று யாரும் இல்லாததைக் கண்ட போர்த்துக்கீசியர் தங்களின் பிடியை மேலும் வலுப்படுத்திக் கொண்டனர். கோட்டை அரசுக்கு வாரிசாகப் பலர் போட்டியிட்டதால், யார் சரியான வாரிசு என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பைப் போர்த்துக்கீசியரிடமே கோட்டை மன்னன் அளித்தான்.

இதன் மூலம் 1597-இல் கோட்டை மன்னனின் ஆட்சிப் பகுதிகள் யாவும் போர்த்துக்கீசியர் வசமாயின.

போர்த்துக்கீசியர் 1505-இல் இலங்கையில் அடியெடுத்து வைத்த போதிலும் தமிழர் பகுதியை ஆளும் வாய்ப்பு அவர்களுக்கு 1619-இல் தான் கிடைத்தது. அந்த ஆண்டில் சங்கிலி மன்னன் போர்த்துக்கீசியரால் சிறைபிடிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள கோவாவில் தூக்கிலிடப்பட்டான்.

ஆளும் தலைமை ஒன்றாக இருந்த போதிலும் தமிழர் பகுதி நிர்வாகம் 1658 வரை தனியாகவே இருந்தது. இருப்பினும் குடா நாட்டுக்குத் தெற்கேயுள்ள வன்னிப்பகுதிகள் போர்த்துக்கீசியரின் மேலாணையை ஏற்றுக்கொள்ளவில்லை. கண்டி அரசுக்கும் திறை செலுத்தவில்லை. எந்தவொரு அரசின் பாதுகாப்பையும் நாடாது தன்னாட்சியை அமல்படுத்தி நடத்தி வந்தன. கிழக்குக் கரையோரத்தில் உள்ள கொட்டியாற்றுப்பற்று வன்னிமை, பழுகாம வன்னிமை, பாணமை வன்னிமை ஆகிய மூன்றும் கண்டி அரசின் மேலாணையையும், பாதுகாப்பையும் நாடியிருந்தன. ஆனாலும் அவை தன்னாட்சியுள்ள தமிழ்ப் பகுதிகளாகவே இருந்தன. பல்வேறு ஆட்சிகளின் கீழ் ஆளப்பட்டிருந்த போதிலும் தமிழ் ஈழ நிலப் பகுதிகளின் தமிழ்த் தன்மை மாறாதிருந்தது என்று கூறுகிறார்கள். (தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்~ நூலில் ஜே.ஆர். சின்னதம்பி மற்றும் க. சச்சிதானந்தன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:18 pm

போர்த்துக்கீசியருக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைக் கண்டு ஒல்லாந்தருக்கும், இங்கு வியாபாரம் செய்யவும் ஆட்சிபுரியவுமான ஆசை எழுந்தது.

ஒல்லாந்தர்கள் இலங்கையை நோக்கித் தங்களது பயணத்தை மேற்கொண்டனர். 1638-இல் மட்டக்களப்புத் துறையைக் கைப்பற்றி தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அங்குதான் முதன்முதலில் கோட்டையொன்றை அவர்கள் அமைத்தனர். கொழும்பைத் தாக்கி 1656-இல் வெற்றி பெற்றனர். அது போலவே யாழ்ப்பாணத்தையும் 1658-இல் தாக்கி வெற்றி கண்டனர்.

கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்களோ, போர்த்துக்கீசியரை வீழ்த்த வேண்டும் அல்லது அவர்களது பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஒல்லாந்தர்கள் பக்கம் சாய்ந்தால் அவர்கள் உதவமாட்டார்களா என்ற கருத்தில், போர்த்துக்கீசியர்மீது ஒல்லாந்தர் தொடுத்த போருக்கு கோட்டை அரசு உறுதுணையாக இருந்தது. இதனால் போர்த்துக்கீசியர் தங்களது ஆட்சியை இழக்க வேண்டியதாயிற்று.

ஒல்லாந்தர்கள் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆறு மாவட்டங்களாப் பிரித்து ஆட்சி செய்தனர். புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை தமிழர் பகுதி எனப் பிரிக்கப்பட்டது. இந்த ஆட்சி 1795 வரை தொடர்ந்தது. தமிழர்கள் வாழ்ந்த பகுதி யாழ்ப்பாணம் மாவட்டம் என அப்போது அழைக்கப்பட்டது.

போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் இலங்கையின் மீது கவனம் செலுத்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மட்டும் சும்மா இருப்பார்களா? அவர்களும் இலங்கையை நோக்கி தங்களது கப்பல்களைத் திருப்பினர்.

கி.பி. 1660-இல் ராபர்ட் நாக்ஸ் (தர்க்ஷங்ழ்ற் ஓய்ர்ஷ்)எனும் ஆங்கிலேயர் திருகோணமலைத் துறைமுகத்தில் வந்து இறங்கியதும் கண்டி அரசால் கைது செய்யப்பட்டார். 1679-இல் கண்டி அரசனின் சிறையிலிருந்து தப்பினார். தான் தப்பிய விதத்தைப் பின்னாளில் ஒரு நூலாக எழுதினார். இதில் தமிழ், தமிழர்களின் நாகரிகம் பற்றி உயர்வான கருத்துத் தெரிவித்திருக்கிறார். அப்பொழுது இலங்கையின் வரைபடம் ஒன்றை, தான் எழுதிய நூலில் சேர்த்திருக்கிறார். கயிலாய வன்னியனின் ஆட்சிப் பகுதியையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அருவியாற்றின் கீழிருந்து தொடங்கும் எல்லை, கயிலாய வன்னியனின் ஆட்சிப் பகுதியையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அருவியாற்றின் கீழிருந்து தொடங்கும் எல்லை, வடக்கில் வன்னியப் பகுதியையும், கிழக்கில் கொட்டியாறு பழுகாமம், பாணமை வன்னிமைகளை அடங்கியிருக்கிறது. (தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள் பக்.17).

1782-இல் வந்த ஆங்கிலேயர் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு 1795-இல் தமிழர் வாழ்ந்த பிரதேசமான திருகோணமலையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயர் ஆட்சியமைக்க அடித்தளமிட்டவர்கள் யார்? சிங்களவர்கள்தான்!

முன்பு போர்த்துக்கீசியரிடமிருந்து தப்பிக்க ஒல்லாந்தர்களிடம் எப்படிப் போனார்களோ, அதுபோலவே இப்போது ஒல்லாந்தப் பிடியிலிருந்து விடுபட ஆங்கிலேயருக்கு ஒத்துழைப்புக் கொடுத்தனர். முடிவு 1815-இல் இலங்கைத் தீவு ஆங்கிலேயர் வசமாயிற்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:19 pm

7. பண்டாரவன்னியனின் கொரில்லாப் போர்!

அடங்காப்பற்று என்னும் வன்னிப் பகுதி கருநாவற்பற்று, கருக்கட்டுமூலை, முள்ளியவளை, மேல்பற்று என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி அதிகாரத்தில் செயல்பட்டன. 1790-இல் நல்லமாப்பாணான் என்ற வன்னியன் தலைவனாக விளங்கினான். இவன் பேரில் குற்றம் சுமத்தி நீக்கினர்.

பின்னர் வன்னியரசுகளின் கடைசி சிற்றரசனாக "குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன்' விளங்கினான். வன்னிப் பகுதியின் சுதந்திரத்திற்காக இறுதி வரை போராடி உயிர் துறந்தவன் என்ற பெயர் இவனுக்கு உண்டு.

(1)* ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதியில் அவர்களோடு மோதி பதவியிறக்கம் பெற்று ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கத்தில் மீண்டும் மன்னனாகி, பின் அவர்களுடன் மோதினவன் என்ற பெயரும் பண்டாரவன்னியனுக்கு உண்டு.

ஒல்லாந்தருக்கும்-ஆங்கிலேயருக்கும் வரிகட்ட மறுத்த காரணத்தினால் பல யுத்த களங்களைக் கண்டான். அடுத்து சாயவேர் தர மறுத்த குற்றம்-அக்காலத்தில் வன்னிப் பகுதியில் கிடைக்கும் சாயவேர்கள் ஒல்லாந்தரால் ஏற்றுமதி செய்யப்பட்டு, நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து அங்கு சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது.

ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயரிடம் வன்னிப்பகுதி நிர்வாகம் மாற்றம் பெற்றதும் ஒல்லாந்தரான கேப்டன் வான்டெரிபேக் ஆங்கிலேயப் படையில் சேர்ந்து கொண்டான். 1803-இல் கண்டி மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும் பெரும் யுத்தம் ஏற்பட்டது. இந்தப் போரைப் பயன்படுத்திக் கொண்டு பண்டாரவன்னியன் ஆங்கிலேயர் வசமிருந்த ஆனையிறவுக் கோட்டை, இயக்கச்சி பைல் கோட்டை, வெற்றிலைக்கேணி பெஸ்சூட்டர் (ஆங்ள்ஸ்ரீட்ன்ற்ங்ழ்) கோட்டை ஆகியவற்றை மூன்று தனித் தனி படைப் பிரிவுகளை அனுப்பி தாக்கினான்.

*(2) முள்ளிவளையிலிருந்து சுண்டிக்குளம் வழியாகச் சென்ற ஒரு படைப்பிரிவு பெஸ்சூட்டக் கோட்டையைக் கைப்பற்றியது. கண்டா என்னும் ஊரின் வழியாக இயக்கச்சிக்குச் சென்ற படைப்பிரிவு குமாரசிங்க முதலியார் தலைமையில் "பைல்' கோட்டையைத் தாக்கி கைப்பற்றினர். இங்கிருந்த வீரர்களில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணத்துக்கு தப்பி ஓடினர்.

தாங்கள் கைப்பற்றிய கோட்டைகளைத் தகர்த்துவிடுமாறு பண்டாரவன்னியன் உத்தரவிட்டிருந்தமையால், படைப் பிரிவினர் அக்கோட்டைகளின் ஒரு பகுதிகளைத் தகர்த்து விட்டனர்.

அதே போன்று ஆனையிறவுக் கோட்டையை தகர்க்கும் முயற்சியில் அதன் நான்கு கொத்தளங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் பெரும் திரளாக வந்த ஆங்கிலேயப் படைப்பிரிவினரிடமிருந்து தப்பிக்க வன்னியன் படைகள் பின்வாங்கி கற்சிலை மடுவுக்கு திரும்பினர்.

அதே ஆண்டில் கேப்டன் வான்டெரிபேக் முல்லைத்தீவில் கட்டிய கோட்டையை பண்டாரவன்னியன் தகர்த்தான். இந்த முயற்சியில் கண்டி மன்னன் படைப்பிரிவும், நுவரகலாவியா திசாவையின் படைப்பிரிவும் சேர்ந்து கொண்டன. இந்தப் போரில் வான்டெரிபேக் தோல்வியுற்று யாழ்ப்பாணம் நோக்கி, படகில் தப்பினான். ஆனாலும் திரிகோணமலையில் இருந்து வந்த ஆங்கிலேயப் படை 19-வது கர்னல் எட்வர்ட் மெட்ஜின் தலைமையில் முல்லைத் தீவைக் காத்து, கைப்பற்றிக் கொண்டது.

பின்னாளில் பண்டாரவன்னியனுக்கு உதவி புரிந்த குற்றத்தை குமாரசேகர முதலியார் மீது பழி சுமத்தி அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களைக் காப்பாற்ற தனது காதலி குருவிச்சிநாச்சி தலைமையில் குழு அனுப்பி வைத்தும் பண்டாரவன்னியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:20 pm

குமாரசேகர முதலியாரையும் அவரது நண்பர் குழாத்தையும் காப்பாற்ற முடியாமல் போன பண்டாரவன்னியன் பெரும் வருத்தமுற்று, இதற்குப் பழிக்குப் பழி வாங்க ஆனையிறவுக்கோட்டை, இயக்கச்சிக்கோட்டை முதலியவற்றை கடுமையாகத் தாக்கினான். 1803 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஜான் ஜ்வல் தலைமையிலும், மன்னாரிலிருந்து கேப்டன் வான்டெரிபேக் தலைமையிலும் வன்னிப் பகுதியை நோக்கி விரைந்தன. கற்சிலைமடுவில் கேப்டன் வான்டெரிபேக் படைகள் காட்டுப் பகுதியில் வந்தபோது கடும் தாக்குதலுக்கு ஆளாயின. எங்கிருந்தோ கற்கள் பெருமளவில் பறந்து வந்து தாக்கின. பண்டாரவன்னியன் படைப்பிரிவு முந்தைய நாளில், அங்கிருந்த மூங்கில் மரக் காடுகளில் புகுந்து, ஒவ்வொரு மரத்தின் நுனியிலும் கருங்கற்களைக் கட்டி, அதன் நுனியை பின்புறமாகக் கயிறு மூலம் இழுத்து வேறொரு மரத்தில் கட்டியிருந்தனர். ஆங்கிலேயப் படை வரும் நேரமாகப் பார்த்து கட்டியிருந்த கயிறை அவிழ்த்துவிட மூங்கில் மரங்கள் நிமிர்ந்து கற்கள் எகிறி விழுந்தன.

(3)* இந்தச் செயலே கொரில்லாப் போரின் முதல் யுக்தியாக இன்றும் கருதப்படுகிறது. பண்டாரவன்னியன் இப்போரில் தோற்றபோதிலும். அந்தப் பகுதியில் இருந்து தப்பினான்.

உயிருடனோ, கொன்றோ பண்டாரவன்னியனைப் பிடிக்க விரும்பிய வான்டெரிபேக் அவமானமுற்றான். இருப்பினும் கற்சிலை மடுவில் நடுகல் ஒன்றை நட்டு, 1803 அக்டோபர் 31-இல் கேப்டன் வான்டெரிபேக் பண்டாரவன்னியனைத் தோற்கடித்தான் எனப் பொறித்தான்.

கண்டி மன்னன் உதவியுடன் 1811-ஆம் ஆண்டு உடையாவூரில் பண்டாரவன்னியன் ஆங்கிலேயரை மீண்டும் தாக்கினான். இந்தத் தாக்குதல் நடைபெறப் போகிறது என்பதை ஒற்றன் மூலம் அறிந்த ஆங்கிலேயர்கள், திரிகோணமலையிலிருந்தும்-யாழ்ப்பாணத்திலிருந்தும் பெரும் படையுடன் வந்து காத்திருந்தனர். இத்தாக்குதலில் பண்டாரவன்னியன் தரப்பில் பேரழிவு ஏற்பட்டதுடன் அவனுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. தளபதிகள் பண்டாரவன்னியனை பனங்காமத்துக்கு எடுத்துச் சென்று சிகிச்சையளித்தும் பலனளிக்கவில்லை; பண்டாரவன்னியன் மறைந்தான்.

* (1,3) When the English took possession of the country in 1795 it enjoyed tranquillity for some years, until in 1803, when Pandara Wanniya, said to have been one of the original Wanniyas deposed by the dutch, raised a formidables insurrection against the British Government, and being assisted by Kandians with whom we were then at war, soon overran all the Northern Districts and had the boldness to penetrate as far as Elephant’s Pass into the peninsula of Jaffna. His object was to restore the independence of the Wanni, and render himself head of all its principalaties, but though daring and active, the force under his command was unable to cope with regular troops, and was only fitted for guerilla warfore. After several unsuccessful attempts to discover his retreats, made from the different posts, he was finally surprised, his troops killed or dispersed, the country was cleared of the rebels, and tranquillity was restored.‘‘. An Historical, Political and Statistical Account of Ceylon and its Dependencies -by Charles Pridham -1849 -Vol II. Page 522.

* (2) "அடங்காபற்று(வன்னி) பாகம்-2 பண்டாரவன்னியன்'-அருணா செல்லதுரை மற்றும் "ஈவத்தவர் வரலாறு'-கலாநிதி ஆ.குணராசா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:21 pm

8. ஐக்கிய இலங்கை எனும் அரசியல் தவறு!

வன்னியில் பண்டார வன்னியன் ஆட்சி தொடர்ந்தது போல தமிழர் பகுதிகள் ஆங்கிலேயர் வசமான போதிலும் அவற்றைத் தனித்தனி நிர்வாகத்திலேயே வைத்திருக்கின்றனர். அக்காலத்தில் ஆங்கிலேயரின் மிகப் பெரிய காலனியாக சென்னை மாகாணம் இருந்தமையால், ஆரம்ப காலத்தில் இலங்கையின் மூன்று பகுதிகளையும் சென்னையோடு இணைத்தே ஆட்சி புரிந்து வந்தனர். அப்போது ஆங்கிலேயரிடம் இருந்த இலங்கையின் வரைபடம்தான் (ஆரோஸ்மித் தயாரித்தது, படங்கள் பகுதியில் காண்க) இன்றும் புழக்கத்தில் இருக்கிறது.

1797-இல் இலங்கையின் தமிழர் பகுதியில் கலகம் ஒன்று நிகழ்கிறது. இதை அடக்க அல்லது மாற்று ஏற்பாடுக்கு உத்தரவிட யாழ்ப்பாணத்திலிருந்த அதிகாரி சென்னை மாகாணத்தின் அதிகாரியை நாடவேண்டியிருந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமதம் கலகத்தை ஊக்குவிப்பதாக அமைந்தது.

எனவே, சென்னை மாகாணத்தில் ஒரு காலும் யாழ்ப்பாணத்தில் ஒரு காலுமாக வைத்துக்கொண்டு நீதி~ நிர்வாகம் செய்வதன் சாதக பாதகங்களை உத்தேசித்து, இலங்கையின் பகுதிகளை~இலங்கை மண்ணிலிருந்தே நிர்வகிப்பது என முடிவெடுக்கப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில் இலங்கை, இங்கிலாந்தின் காலனி நாடுகளில் ஒன்று என்ற அந்தஸ்தினைப் பெறுகிறது. முதல் ஆளுநராக 1798-இல் ஃப்ரெடரிக் நார்த் என்பவர் நியமிக்கப்படுகிறார்.

ஃபிரெடரிக் நார்த் ஆளுநராக வரும் வரையிலும், வந்த பின்னும் சில ஆண்டுகள் வரை யாழ்ப்பாணம், கோட்டை, கண்டி ராஜ்ஜியங்கள் தனித்தனியாகவே ஆளப்பட்டு வந்தன. இப்படித் தனித்தனியான நீதி நிர்வாகத்தை ஒன்றாக்கினால் செலவு குறையும் என்ற கருத்துப் பரவலாக எழுகிறது. வெவ்வேறான கலாசாரங்களைக் கொண்ட இலங்கையர்களை, செலவைப் பாராது, தனித்தனியாக ஆட்சி புரிவதே நல்லது என்ற எதிர்க் கருத்து ஒன்றும் அதே நேரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

இதைத் தீர்மானிக்க, ஆணையம் ஒன்று (1931-இல்) அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்துக்கு கோல்புரூக் தலைவராக அமைகிறார். இவர் தெரிவித்த கருத்துகள்:

1. மூன்று வெவ்வேறு ஆட்சிக்குப்பட்ட பகுதிகளின் நில வருமானத்தைப் பாதிக்காத வகையில் சில சீர்திருத்தங்கள் காண்பது.

2. இந்தச் சீர்திருத்தங்கள் வெவ்வேறு கலாசாரங்களைக் கடைப்பிடிக்கும் மக்களின் தனித் தன்மையைப் பாதிக்காத அளவில் அமைய வேண்டும்.

-என்று குறிப்பிட்ட கோல்புரூக், ஆங்கிலேய அரசுக்கு ஓர் எச்சரிக்கையையும் வைக்கிறார். சிங்களவர்~ தமிழர் இருவரிடையே நிறைய வித்தியாசமிருக்கிறது; இருவரது கலாசாரமும் வெவ்வேறானவை. காலம் காலமாகப் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களை, புதிய சட்ட திட்டங்களின் மூலம் சீர்திருத்துவது என்பது ஒழுக்கமற்ற செயலாகவே இருக்கும். இதன் மூலம் உருவாகும் பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்றும் அவர் அடித்துக் கூறுகிறார். இலங்கை வரைபடம் ஒன்றையும் அத்துடன் இணைக்கிறார் (பட உதவி: தமிழ் ஈழ நாட்டு எல்லைகள்-காந்தளகம்).

கோல்புரூக்கின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது அவரால் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாகச் சிக்கனத்திற்கான விஷயங்களை மட்டும் லண்டனில் உள்ள அரசுச் செயலாளர் எடுத்துக் கொள்கின்றார். நிர்வாகம் ஒருமைப்படுத்தப்பட்டு இருந்த போதிலும் 1833 வரை மேற்கே சிலாபத்தில் இருந்து தென் கிழக்கே வளவை கங்கை வரையுள்ள இலங்கைத் தீவின் வடக்கு, வடமேற்கு, கிழக்கு கரையோரப் பகுதிகள் தமிழரின் வாழ்விடங்களாக அப்போதே ஆங்கிலேயரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழ் தேசிய இனத்தையும், சிங்கள தேசிய இனத்தையும் ஓராட்சியின் கீழ் நீதி-நிர்வாகம் செய்வதில் அவ்வப்போது தோன்றும் சில சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை; ஓய்ந்தபாடில்லை. ஆங்கிலேயருக்குத் தீராத தலைவலியாக இந்தச் சிக்கல்கள் அமைந்தது கண்டு 1882-இல் மேலும் ஓர் ஆணைக்குழு அமைக்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:21 pm

இலங்கையின் வடமேற்குப் பகுதியின் ஆட்சியரான ஜே.எப். டிக்சன் இந்தக் கமிட்டியில் ஓர் உறுப்பினர். இவர் தனது கருத்துகளை ஆணையரிடம் கொடுக்காது, அப்போதைய இலங்கை ஆளுநரான சர். ஜேம்ஸ் ராபர்ட் லாங்டனிடம் 6-ஆம் தேதி செப்டம்பர் 1833-இல் சிறப்பு மனுவாகத் தருகிறார்.

1831-இல் கோல்புரூக் ஆணைக்குழு என்ன கருத்தைச் சொன்னதோ, அதே கருத்தைத்தான் ஜே.எப். டிக்சனும் தெரிவிக்கிறார். மனுவில் டிக்சன் கூறியிருப்பதாவது:

"மூன்று வெவ்வேறான ஆட்சிப் பகுதியிலுள்ள மக்களின் தனித்தன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இப்படி ஆட்சிபுரிய ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் தனித்தனி ஆட்சிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஆட்சிக்குழுக்கள் தனித்தனியாக மூன்று ஆட்சி ஆணையர்களை நியமிக்கலாம்' என்கிறார்.

"மனுவை அதற்கென ஆராயும் ஆணையத்திடம் தராது தனியாய் தருவதின் நோக்கம் என்னவெனில், ஆணையத்திடம், மூன்று ஆட்சிப் பகுதிகளில் உள்ள மக்களின் நலன்களைப் பேணுவதில் அலட்சியப்படுத்தும் போக்குக் காணப்படுகிறது' என்றும் அதில் டிக்சன் தெரிவிக்கிறார். டிக்சன் மேலும் ஒரு தகவலைத் தீர்க்கமாகக் குறிப்பிடுவதாவது:

"அரசு அமைப்பை மாற்றி ஒற்றை ஆட்சி அரசு ஒன்றை அமைப்பது தற்காலத்திற்கும் ஏன் எதிர்காலத்திற்கும் கூட உகந்ததாக இருக்காது. ஏனெனில் மூன்று மக்களும் மதத்தால், கலாசாரத்தால் மிகப்பெரிய வேறுபாட்டைக் கொண்டுள்ளனர். இந்த வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளாது ஒற்றை ஆட்சி அரசு அமைத்தால் ஆட்சியாளரின் (ஆங்கிலேயரின்) குணாம்சத்தில் மக்கள் அவநம்பிக்கை கொள்வது நிச்சயம்'~ என்றும் துல்லியமாகத் தெரிவிக்கிறார்.

மனுவைப் படித்துப் பார்த்த ஆளுநர் சர் ஜேம்ஸ் ராபர்ட் லாங்டன், "இந்த மனுவில் குறிப்பிடும் விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை' என்னும் குறிப்புடன் இங்கிலாந்தில் உள்ள காலனியாதிக்கச் செயலாளருக்கு அனுப்பி விடுகிறார்.

ஆளுநர் "கவனத்தில்' கொள்ளப்பட வேண்டிய விஷயம் என்று குறிப்பிட்டார். "கவனம்' காகிதத்தோடு நின்று போனது. டிக்சனின் கருத்துக்கு நேர் எதிரிடையாக தனது சொந்த எண்ணத்தை செயல்படுத்த ஆளுநர் தீவிரமாக முனைந்தார்.

மூன்று வெவ்வேறான ஆட்சிப் பகுதிகளை அரசின் ஒப்புதலோடு ஒன்றாக்கி உருவாக்கினார். இலங்கை முழுதும் ஒரே ஆட்சியின் கீழ் ஏற்கெனவே வந்து விட்டபோதிலும் அதுநாள் வரை தனித்தனியான நீதி நிர்வாகம் நடந்து வந்தது. அதை அவர் ஒழித்தார். இந்தச் செயல் மூலம் போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் செய்ய முடியாத செயலைச் செய்தவர் என்ற பெருமையினையும் பெற்றார்.

ஆனால் அப்போது இலங்கையில் வசித்த நடுநிலையான ஆங்கிலப் பத்திரிகையாளர்களில், குறிப்பாக ஈ.ஜே. யங் இந்த அணுகுமுறையை "மிகப் பெரிய அரசியல் தவறு' என்று வர்ணித்தார்.

ஆக, நூற்றாண்டு கணக்கில் மூன்று பகுதிகளாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்ட இலங்கை -ஆங்கிலேயர் ஆட்சியில் நேர்மையாக இருந்த ஒரு சில ஆங்கிலேயராலேயே ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், வலிந்து திணிக்கப்பட்ட ஒரு செயலாக, நிர்பந்தமாக ஒரே இலங்கை என்ற "ஐக்கிய இலங்கை' உருவாக்கப்பட்டது. ஒரு டி.வி. பேட்டியில் ஜெயவர்த்தனே ""250 ஆண்டுகளாக இலங்கை ஐக்கியப்பட்டிருந்தது'' எனக் கூறியது உண்மை வரலாற்றைத் திரித்துக் கூறும் எவ்வளவு பெரிய பொய் என்பது மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறியலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:22 pm

9. ஐரோப்பியர் ஏற்படுத்திய விளைவுகள்

போர்த்துக்கீசியரின் வருகையால் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவுகள் இலங்கையில் தலையெடுத்தது. அடுத்து அவர்களின் மொழியும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் திணிக்கப்பட்டன. இவர்களின் 150 ஆண்டு ஆட்சிக் காலத்தில்தான் நிலங்களைப் பதிவு செய்யும் முறை அமலாகிறது.

ஒல்லாந்தர்கள் காலத்திலே இலங்கையில் வாழ்வோருக்கு முற்றிலும் புதியதானதொரு நீதித்துறை மாற்றங்கள் சட்டமாகின்றன. மதச் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டார்கள்.

ஒல்லாந்தர்கள் ஆட்சியைப் பிடிக்கும் முன்னர் வரை இந்து மதத்தவருக்கோ, முஸ்லிம் மதத்தினருக்கோ தனியாகச் சட்டங்கள் எதுவுமில்லை. ஒல்லாந்தர் காலத்தில்தான் இந்துச் சட்டம் என்றும், முஸ்லிம் சட்டமென்றும் புதிய சட்டங்கள் அவர்களது சமூகப் பழக்க வழக்கங்களையொட்டி வரையறுக்கப்படுகின்றன. புதிதாகச் சிங்களப் பகுதிகளில் இஸ்லாமும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

ஆங்கிலேயர் காலத்தில் பைபிள் சிங்களத்திலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. கிறிஸ்தவம் வேகமாக வேரூன்றி வருவது கண்டு கொதித்த ஆறுமுகநாவலர் இந்துமதத்தைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் சைவசமய நூல்களை வெளியிட முனைந்தார். ""கிறிஸ்தவ மதமும் இந்துமதமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் சேவையில் ஈடுபட மதகுருமாரான அநகாரீக தர்மபாலா புத்த மதத்தை வளர்க்க இயக்கம் நடத்தினார். அதற்கெனச் "சிங்கள பெüத்தயா' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தினார். முஸ்லிம்களின் கடைகளைப் பகிஷ்கரிக்கும்படி தனது பத்திரிகைகளிலும், வெளியீடுகளிலும் அவர் எழுதினார்.

தர்மபாலாவின் தந்தை டொன் கறோலிஸ் தளவாடக் கடை ஒன்று வைத்திருந்தார். இவருக்குத் தர்மபாலாவைத் தவிர்த்து இரு மகன்கள் உண்டு. சிங்கள வர்த்தகர்களின் பண உதவியால் இயங்கி வந்த புத்த மறுமலர்ச்சி இயக்கம் அவர்களின் வியாபார வேலைகளுக்கு ஆதரவு வழங்கியது. இவர்களை தேசபக்தர்கள் என்றும் நியாயமான வழியில் பணம் சம்பாதிப்போர் என்றும் புகழ்ந்தது. அதே தர்மபாலா இந்தியா போன்ற இடங்களில் இருந்து வந்து இலங்கையில் வியாபாரம் செய்தவர்களை அநியாயமாகப் பணம் சம்பாதிப்போர் என்று சாடினார்.

சிங்கள நாவலின் தந்தை எனக் கூறப்படும் பியதாசசிரிசேன தனது "சிங்கள ஜாதிய' என்ற பத்திரிகையில் மேலைக் கலாசாரத்திற்கு எதிராக எழுதிய அதே வேளையில், சிங்களவர் அல்லாதோரையும் தாக்கியும் எழுதினார்.

இலங்கையின் வரலாற்றிலேயே இரு இலங்கைச் சமூகங்களிடையே ஏற்பட்ட முதலாவது கலவரம் 1915-ஆம் ஆண்டின் சிங்கள-முஸ்லிம் கலவரமாகும். சிங்களவர்கள் அல்லாதவர்கள் என்ற காரணத்தினால் முஸ்லிம்களின் கடைகள் தாக்கப்பட்டன. அவர்களின் சொத்துக்களும் பறிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரங்களின் பின்னால் சிங்கள வியாபாரிகள் பலர் இருந்தனர்.

இந்த கலவரத்தின்போது சிங்களத் தலைவர்களாக மலர்ந்து கொண்டிருந்த எஃப்.ஆர்.சேனாநாயக்க, டி.எஸ்.சேனா நாயக்க போன்றோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை அரசியல் கைதிகளாக்கியது அரசு. அரசுக்கெதிராகச் சதி செய்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில் 1915-ஆம் ஆண்டின் கலவரங்கள் சிங்களவர்களின் உள்நாட்டு இனவாதத்தின் ஒரு பயங்கரமான வெளிப்பாடு ஆகும். இதுவே சிங்கள இனவாதத்தின் முதலாவது (ஆங்கில ஆட்சியில்) வெளிப்பாடும் ஆகும்.

கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி குறிப்பிடத்தக்க தமிழர் தலைவரான பொன்னம்பலம் இராமநாதன் பிரிட்டிஷ் அரசிடம் வாதிட்டு வெற்றியும் பெற்றார். அவர் லண்டனிலிருந்து திரும்பியபோது சிங்களவர்கள் சாரட்டு வண்டி ஒன்றில் பொன்னம்பலம் இராமநாதனை அமரவைத்து, வடம்பிடித்து இழுத்து வந்து ஆனந்தக் கூத்தாடினார்கள்'' என்று சமுத்திரன் எழுதிய "இலங்கைத் தேசிய இனப்பிரச்னை' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொனமூர் கமிஷன் சிபாரிசு செய்த ஷரத்துக்களின்படி பார்த்தால் "டொனமூர் மீன்ஸ் டமிள்ஸ் நோ மோர்' என்று கூறியதுடன் மேற்கண்ட நிகழ்ச்சிக்காக பொன்னம்பலம் இராமநாதன் பின்னாளில் வருத்தமும் பட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:22 pm

போர்த்துகீசிய, ஒல்லாந்துச் சட்டங்கள் இப்பொழுதும் நடைமுறையில் உள்ளன. இவர்களின் கலாசாரத் தாக்கத்தைவிட ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் நிகழ்ந்த தாக்கங்களே அதிகம். இலங்கையில் இன்று கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் (7சதவிகிதம்) இருப்பதற்கு காரணம் ஆங்கிலேயரே. தமிழர்-ஆங்கிலேயர், சிங்களர்-ஆங்கிலேயர் கலப்புத் திருமணங்கள் வெகுவாக ஊக்கப்படுத்தப்பட்டன. பிரபல தத்துவ ஞானியான ஆனந்த குமாரசாமியின் தாயார் ஓர் ஆங்கில மாது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பிடித்ததும் சர்ச்சுகளும், ஆங்கிலப் பள்ளிகளும் மளமளவென்று எழுந்தன. நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்து அலுவலர் பிரிவு என ஒரு புதிய வர்க்கத்தையே ஏற்படுத்தினர்.

ஆங்கிலமொழித் திணிப்பு என்றளவோடு நின்றுவிடாது, அதைப் படித்தால் வேலை, அதற்கேற்ற ஊதியம் என்றும் கவர்ச்சியூட்டினர். இதனால் பெரும்பாலோர் ஆங்கிலம் கற்கவும், புதிய வேலைகள் பெறவும் ஆர்வம் காட்டினர். இதிலும் குறிப்பாகத் தமிழர்களுக்கு ஆங்கிலமொழி சிங்களவரைக் காட்டிலும் சிறப்பாக வந்தது. அதனால் அலுவலகங்களில் தமிழர்களே அதிக இடம் பிடித்தனர்.

ஆங்கிலேயர் செய்த மிகப் பெரிய செயல் இலங்கையின் பொருளாதார அமைப்பையே மாற்றியது. இங்கிலாந்தில் எந்தப் பொருளுக்கு கிராக்கியுண்டோ, எந்தப் பொருளைப் பயிர் செய்ய வாய்ப்பு அதிகமில்லையோ-அந்தப் பொருளை உற்பத்தி செய்யும் வகையில் இந்தப் பொருளாதாரக் கொள்கை அமைந்தது. இதன் மூலம் விவசாயப் பொருளாதாரம் அழிந்து தோட்டப் பயிர் பொருளாதாரம் இலங்கையில் உருவாயிற்று.

இலங்கையின் அன்றாட மக்களின் உணவுக்கு மூலாதாரமான அரிசி, பருப்பு முதலியவைகளை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யுமளவு நெல் உற்பத்தி குறைந்தது. பணப்பயிர்களான தேயிலை, காபி, ரப்பர் முதலியவற்றை விளைவிக்கும் வகையில் இவர்களது செயல் இருந்தது. இதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆங்கிலேயர் புதிதாகச் சில நிலச்சட்டங்களை வகுத்தனர். அதில் ஒன்று மன்னர் நிலச்சட்டம் (1840). இதன் மூலம் விவசாய நிலங்கள், காடு வளர்ச்சி என்ற பெயரில் பிடுங்கப்பட்டது.

இப்படிப் பிடுங்கப்பட்ட நிலங்களில் தோட்டப் பணப் பயிர்களான தேயிலை, ரப்பர், காபி, தென்னை முதலியவற்றைப் பயிர் செய்தார்கள். இச்சட்டத்தின் மூலம் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த சிங்களவர்களும், தமிழர்களுமாவர். இவர்கள் காட்டையும், மலையையும் சார்ந்து வாழ்ந்தவர்கள்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் இத்திட்டத்தில் பாதிப்பு எதையும் அடையவில்லை. காரணம், அந்தப் பகுதியில் மலைகளோ, காடுகளோ இல்லை. அப்பகுதி அனைத்துமே பாசன வசதி கொண்ட நிலங்கள் ஆகும்.

வியாபாரம், நிதி மூலதனம், மேல்நிலை ஆதிக்கம் யாவுமே ஆங்கிலேயர் வசமிருந்தது. இதனால் சிங்களவர்களாலும், தமிழர்களாலும் பெரிய அளவில் வியாபாரத்துறையில் ஈடுபடவோ, தொழில் துறையைத் துவங்கவோ இயலவில்லை. இதனாலும் சிங்களவர்கள் இந்தக் காடு ஆக்கிரமிப்பை எதிர்த்தனர். தங்களது எதிர்ப்பை தோட்டங்களில் வேலை செய்ய மறுப்பதன் மூலம் வெளிப்படுத்தினர். ஆங்கிலேயர்களோ இதை எப்படியும் சமாளித்தாக வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தார்கள்.

சர்.பொன்னம்பலம் இராமநாதன், இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு சட்டசபை பிரதிநிதி என்றிருந்தபோது இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரை இருமுறையும் எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர்கள் சிங்களவர்களே! "இந்தியாவில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன் காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள் எப்படித் தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்து இந்தியனே வெளியேறு என்று கூறமுடியும். தேளை, பாம்பைக் கொல்லாது துரத்தும் சிங்கள மக்கள் எப்படி மனம் வந்து இம்மலைநாட்டுத் தமிழரை வெளியேறச் சொல்ல முடியும். இது புத்த நெறிக்கோ தருமத்திற்கோ ஒத்துப் போகுமா? இவ்விதம் மலையகத் தமிழ்மக்கள் நலன் கருதி சிங்களச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது இராமநாதனுக்கு வயசு 78. (பக்கம்.1791 சட்டமன்றப்பதிவேடு மூன்று-1928)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:23 pm

10. வகுப்புக் கலவரங்கள்

தோட்டங்களில் வேலைசெய்ய சிங்களவர்கள் மறுத்ததால், ஆங்கிலேயர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எப்படி அமெரிக்காவில் வேலைசெய்ய ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்களை அடிமைகளாக அழைத்து வந்தனரோ, அதேபோல தோட்டங்களில் வேலைசெய்ய ஆங்கிலேயருக்குத் தேவையான கூலித் தொழிலாளர்கள் தமிழகத்தில் கிடைத்தனர். ஏககாலத்தில் இந்தியாவிலும் ஆங்கிலேயர் ஆட்சி நடந்ததால் சென்னை மாகாணத்தின் தென் பகுதியிலிருந்து கூலியாட்களைத் தருவிப்பது இவர்களுக்கு மிகச் சுலபமாயிருந்தது. மேலும் சிங்களவர்களை அடக்கவும் இச்செயலால் முடிந்தது. 1827-இல் மட்டும் இலங்கையில் குடியேறிய இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை 10,000. 1877-லோ 1,46,000 ஆக உயர்ந்தது. (ஆதாரம்: இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், ஈழ ஆய்வு நிறுவனம்).

இந்தியத் தமிழர்களை மலையகத் தோட்டங்களில் ஈடுபடுத்தும்போது அடைந்த இன்னல்கள் இருக்கிறதே அது சொல்லுந்தரமன்று (இதன் விவரம் தனிக் கட்டுரையாக பிற்பகுதியில் வருகிறது).

இதனால் சிங்களவர் வாழ்வு கேள்விக்குறியாயிற்று. அவர்களால் சிறு தொழில் துறையிலோ, சிறு வாணிபத்திலோ ஈடுபட முடியவில்லை. இவைகளில் முஸ்லிம்களும், செட்டியார்களும் பெருமளவில் ஈடுபட்டு வந்தனர்.

சிங்களவர்களுக்கென ஏதாவது தொழில் அல்லது வியாபாரம் வேண்டும்-அதற்கெனச் சிங்களவர்கள் மது வகைகள், கிராஃபைட், தோட்டங்கள் ஆகியவற்றில் தங்களது கவனத்தைச் செலுத்தலாயினர். இவற்றுக்கான மூலதனத்திற்காக சிங்களவர் தமிழர்களையே அண்டி இருக்க வேண்டியதாயிற்று.

கட்டாயத்தின் மூலம் மதமாற்றம், புத்த மடாலயங்களின் ஆதிக்கங்கள், புதிய வகையான பொருளாதார வளர்ச்சிகள், புதிய நிர்வாக நிறுவன உருவாக்கம் போட்டி முதலாளித்துவம், ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை மற்றும் காலனியச் சுரண்டலின் புதிய வடிவங்கள் ஆகிய அனைத்தும் பழைய சமூக வாழ்வைப் பாதித்தன. இதனால் புதிய சமூக வளர்ச்சிகளும் குழுக்களும் உருவாயின.

சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் வெறுப்புற்ற படித்த சிங்கள அறிவு ஜீவிகள் தமிழர் எதிர்ப்பு புத்த கலாசாரத்தை தோற்றுவிக்க முனைந்தனர். இதற்குத் தகுந்தாற்போல் சிங்களவர்க்கென ஒரு கல்வித் திட்டத்தை ஆங்கிலேயர் வடிவமைக்கலாயினர். இதனால் சிங்களவர்கள் மத்தியில் படித்தவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

நிலத்தை மிகப் பெரிய சொத்தாகக் கருதிய-சிங்கள சமூகத்தில் இருந்த பழைய மதக் கருத்துகள் அனைத்தும் புத்தமதக் கலாசாரக் கருத்துகள் என வடிவம் கொண்டன. புத்தக் கலாசாரத்தைப் பெரிதும் போற்றிய சிங்களவர் விழிப்புணர்வுக் காலனியாதிக்கத்தின் எதிர்ப்பாகச் செயல்பட்டதா என்றால் இல்லை; அவர்கள் தங்களின் எதிர்ப்பு எல்லையை மிகவும் சுருக்கிக் கொண்டனர். ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் விரிவாக வளரவில்லை. அதே நேரத்தில் புத்தமத மறுமலர்ச்சி குறுகிய வகுப்புவாதமாக மாறியது.

""சிங்களம்-ஆரிய மொழியே'' என்ற கோஷத்தை முன்வைத்து அதன் மூலம் சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற கருத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டத் தலைப்பட்டனர். இந்தச் சுட்டிக் காட்டுதல் மூலம் தங்களைத் திராவிட இனத்தவர்க்கு மேலான உயர்குடிப் பிறப்பார் என வாதிக்கலாயினர்.

இது ஒரு மோசமான விஷவிதைதான். எனினும் தங்களது அரசியல் வியூகம் இப்படித்தான் வகுக்கப்பட வேண்டும் என்றே அப்போதைய சிங்கள அறிவுஜீவிகள் விரும்பினார்கள். முன்பு பார்த்த புத்தமதத்தின் மூன்று நம்பிக்கைகளை ஆதாரமாக்கிய இந்த ஆரிய இனவாதத்தினால் சிங்களவர்களுக்கும் பிற மதத்தவர்களுக்குமான புதிய இன மோதல்கள் எழுந்தன. இதனால் புத்த மதச் சிங்களவர்களுக்கு முன்னர் முஸ்லிம், கிறிஸ்தவர், தமிழர் (இந்து) முதலானோர் அந்நியர்களாக, தாழ்த்தப்பட்டவர்களாகத் தரம் பிரிக்கப்பட்டனர். இந்த ஆரிய இனவாதத்தினால் விளைந்ததே 1904-1912 காலத்தில் விதைத்த இனமோதல் போக்காகும்.

19-ஆம் நூற்றாண்டின், தொடக்கத்தில் சிங்களவர்கள் திடீரென அந்நிய எதிர்ப்புக் கோஷத்தை முன் வைத்தனர். இந்தக் காலக்கட்டத்தில் தங்களுக்குத் துணையாகத் தமிழர்களையும் உடன் சேர்த்துக் கொண்டனர். இந்த அந்நிய எதிர்ப்பு கோஷமானது கிறிஸ்தவர் எதிர்ப்பாக மாறிக் கலவரத்தை ஏற்படுத்தும் அல்லது தூண்டும் அளவுக்குப் போய்விடுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 10:23 pm

இவ்விதத்தில் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்த ஆங்கிலேயருக்கு எதிரான தேசபக்த இயக்கம் என்று சொல்லப்பட்டவை அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் வகுப்புவாதமாக மாறியது. அந்த வகுப்புவாதத்தை நியாயப்படுத்த, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் புத்த மதத் தத்துவ முலாம் பூசப்பட்டது. அதற்காகவே தாங்கள் ஆரியர்கள் என்பதற்கானச் சான்றுகளைத் தேடுவதன் மூலம் தங்களுக்கென ஒரு தேசியத் தனித்தன்மையை உருவாக்க முனைந்து செயல்பட்டனர். இப்படி முனைந்து செயல்படுதலின் மூலம் அவர்கள் பின்னால் வரப்போகும் பல கலவரங்களுக்கு அடித்தளம் போட்டுக் கொண்டனர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சம் எழுதப்பட்டது. அப்போதிலிருந்து சிங்களவரின் கலாசார உயர்வு, இன ஆளுமை வடிவில் நடந்த கலவரங்கள் பல.

கி.பி. 1279-இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த தமிழ் மன்னன் விக்கிரமசிங்கன் காலத்தில் ஒரு மதக் கலவரம் எழுந்தது. இந்தக் கலவரத்தில் புத்தர்கள் இரண்டு தமிழர்களைக் கொன்றனர். இதற்காகப் பழிக்குப் பழி முடிக்கவென விக்கிரமசிங்கன் கலகக்காரர்களின் தலைவன் புஞ்சிவண்டா என்பவனையும், எதிர்ப்பட்ட பதினேழு சிங்களவர்களையும் கொன்று முடித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

1519-இல் ஆண்ட சங்கிலி மன்னன் ஆட்சிக் காலத்தில் சிங்களவர்கள் வகுப்பு மோதல் ஒன்றில் ஈடுபட்டதால் அவர்களைக் கண்டிக்கு அடித்துத் துரத்தினான்.

அடுத்துத் தென்னிந்தியாவில் வசித்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் ஈழத்து மன்னார் துறையில் 600 பேரைக் கிறிஸ்தவராக மதமாற்றம் செய்தார். இதில் வெறுப்புற்ற மன்னனுக்குப் புத்த பிட்சுகள் மேலும் தூபம் போட்டதன் விளைவாக அவன் 600 பேரையும் கொன்று விடுகிறான்.

இதைக் கேள்வியுற்ற போர்த்துக்கீசியர் அம்மன்னனுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தனர். அது மட்டுமில்லாமல், போர்த்துக்கீசியர் நல்லூர் கீரிமலைப் பகுதி தவிர, இதர பகுதிகளிலிருந்த இந்துக் கோயில்கள் அனைத்தையும் இடித்துத் தள்ளினர்.

1863-இல் தொடங்கி 1880 வரை புத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே கலகங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

புத்த பிட்சுகளும் பல கலகங்களுக்குத் தலைமை தாங்கினர் என்பது எமர்சன் டெனண்ட், ஆளுநர் பெüர்னிங் போன்றோரின் குறிப்புகளின் மூலம் தெரிய வருகிறது.

இதில் மிகெத்துவளை குணனந்தா இககனமா இரத்தினபாலா உனான்சே போன்ற புத்த பிட்சுகள் கலகத்தைத் தூண்டியவர்களாக அறியப்படுகிறது.

இந்த பிட்சுகளோடு அப்போது இருந்த மடுகல்லை, கெப்பிட்டிப்பொலை, பீலிமா தல்வா அநகாரிக தர்ம பாலா, பிரியதாசா, பத்தரமுல்லை ஸ்ரீ சுபத்தி போன்றோர்களும் மதக்கலவரத்தில் ஈடுபட்டதற்காகச் சிலருக்கு மரணதண்டனையும் வேறு சிலருக்கு ஆயுள்தண்டனையும் ஆங்கிலேய அரசால் அளிக்கப்பட்டது.

1880-க்குப் பின் ஏற்பட்ட கலவரங்கள் யாவும் மதச் சிறுபான்மையோர் மீதே நடத்தப்பட்டன. இவற்றுக்கான காரணம் என்னவெனில் சிங்களவரிடையே இருந்த வியாபார ரீதியான பகைமை, பொருளாதார ரீதியாக இருந்த தாழ்வு மனப்பான்மை ஆகியவையாகும். 1903, 1904, 1912 ஆண்டுகளில் நடந்த கலவரங்கள்கூட இவற்றையே காட்டுகின்றன.

புத்தப் பேரினவாத கலாசார உணர்வுகளுக்குத் தூபம் போட்டு வளர்க்கப்பட்ட உணர்வுதான் மண்ணின் மைந்தர் கொள்கை. இதனால் புத்தர்கள் அல்லாதவர்கள் அனைவரையும் இலங்கை மண்ணிலிருந்து விரட்டக் கூடிய நிலைக்கு அவர்கள் வந்தனர். இதில் தமிழர்களும் அடங்குவர். இந்நிலைகளுக்கு ஏற்பத்தான் 1948க்குப் பிறகு ஆட்சிமுறையில் பல புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக