புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
81 Posts - 65%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
5 Posts - 4%
eraeravi
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
1 Post - 1%
viyasan
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
273 Posts - 45%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
224 Posts - 37%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
18 Posts - 3%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை


   
   

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:37 pm

First topic message reminder :

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 Kadal-thamarai


முன்னுரை



டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.


நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:26 am

அதற்கு அவர், "உங்களுக்கு வேறு வேலையும் சோலியும் இல்லையா' என்று கூறி என்னை உதறித் தள்ளிவிட்டார். நான் இதைப் பல நண்பர்களிடம் கூறி, மிகவும் வற்புறுத்தி, அவர்களைச் சம்மதிக்க வைத்தேன். என்னைத் தலைவராகவும், ஏனைய பிரமுகர்களை அங்கத்தினர்களாகவும் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து, நாகர்கோவில் நகரில் நடுநாயகமாக உள்ள எஸ்.எல்.பி., உயர்நிலைப்பள்ளியின் மாடியில் ஒரு பாராட்டு விழா நடத்தினோம். அதற்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர் வந்திருந்தனர். அந்த அரங்கம் மிகப் பெரியது என்பது பார்த்தவர்களுக்குத் தெரியும்.

அந்த விழாவிற்குத் தலைமை வகிக்க அப்போது திருவனந்தபுரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சத்தியநேசனை அழைத்தபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். இதுதான் கவிமணிக்கு நாஞ்சில் நாடு செலுத்திய முதல் பாராட்டு விழா என்பதைப் பணிவுடன் கூறிக் கொள்கிறேன். இதன் பிறகு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நாகர்கோவில் நகரத்தில் சரஸ்வதி டாக்கீஸில் கவிமணிக்குப் பாராட்டு விழா நடத்தினார். அதற்கு பி.டி.ராஜன் மற்றும் பல பெரியவர்கள் வந்திருந்தனர். கவிமணியின் முக்கிய பக்தர் கலைவாணர். எப்போது சென்னையிலிருந்து, நாகர்கோவிலுக்கு வந்தாலும் கவிமணியைப் பார்க்காமல் போகமாட்டார்.

தமிழகத்திற்குத் தமிழக மக்களுக்கு, மொழிக்காகச் சிறப்பான சேவை செய்தவர்களைத் தானே முன்னின்று பாராட்டி உற்சாகமூட்டுவது என்பது டி.வி.ஆரின் பழக்கங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. இதில் ஜாதி, மதம், அரசியல் என்று எந்த பாகுபாடும் அவரிடம் குறுக்கிட்டதில்லை. கவிமணியைப் போலவே ஜீவானந்தத்திடமும் அவர் மிகவும் அன்பு வைத்திருந்தார். அவர்கள் பள்ளித் தோழர்கள் என்பதை முன்பே பார்த்தோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:26 am

ஜீவானந்தம் தீவிரமான கம்யூனிஸ்ட். இவரோ நிலத்திற்குச் சொந்தக்காரர்; தொழில் அதிபர். ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி என்பதால், அவர் ஜீவாவிடமிருந்து விலகி இருந்திருக்க வேண்டும். ஆனால், கட்சி, அரசியல் வேறு; மக்கள் நலப்பணிகளில் ஒருவர் தீவிரமாக ஈடுபடுகிறாரா, அப்படியானால் அவர் என்னுடைய உயிர் நண்பர் என்பது டி.விஆரின் கொள்கையாக இருந்திருக்கிறது.

ஜீவானந்தம் மாஸ்கோ சென்று திரும்பியபோது, அவருக்கு மாபெரும் வரவேற்பு நாகர்கோவிலில் தரப்பட்டது. "விழாவிற்குத் தலைமை தாங்கி அன்று டி.வி.ஆர்., பேசிய அருமையான சொற்பொழிவை டேப் எடுத்து வைக்காமல் போய் விட்டேனே' என்று கவலைப்பட்டார் பட்டேல் சுந்தரம் பிள்ளை.

இதை ஒரு உதாரணத்திற்குக் கூறினோம். ஜீவா மட்டுமல்ல, தமிழுக்காக, தமிழருக்காக சேவை செய்தவர்கள் மேல் அவர் கொண்டிருந்த அன்பு, பாசம் அளவிட முடியாததாகவே இருந்தது என்பதை எப்போதும் பார்க்க முடிந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:27 am

நீதிபதி ஆர்.சங்கர நாராயண ஐயர்

கேரளப் புண்ணியத் தலங்களில் ஒன்றான வைக்கத்தில் 1894 பிப்ரவரியில் பிறந்த சங்கர நாராயண ஐயர் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். திருவனந்தபுரத்தில் 1920ல் வழக்கறிஞராக பணி தொடங்கித் தனது தனிப்பட்ட ஆற்றலால் உயர்நீதிமன்ற நீதிபதியானவர்.


1914ல் சென்னையில் நடைபெற்ற தேசியக் காங்கிரஸ் மாநாட்டிற்குக் கல்லூரி மாணவராக இருக்கும் போதே சென்று வந்தவர். பின்னர் நாகர்கோவில் ஜில்லா உதவி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பல பொது நலப் பணிகளில் அவர் பங்கு அதிகம். அடுத்துக் கொல்லம் மாவட்ட நீதிபதியானார். படிப்படியாக நீதித்துறையிலும், பொதுப் பணிகளிலும் புகழ்பெற்ற சங்கர நாராயண ஐயர், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றார். நூறு வயதை அடைந்த அவர் சமீபத்தில் காலமானார்.


தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 PHOTO_05b


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:28 am

நீதிபதி சங்கர நாராயண ஐயர் கூறுகிறார்

நீதித்துறையிலும் பொதுத்துறையிலும், தனது நீண்ட கால அனுபவங்களை நினைவு கூர்ந்து ஜஸ்டிஸ் ஆர்.சங்கர நாராயண ஐயர், "எ ஜட்ஜ் லுக்ஸ் பேக்' என்ற ஒரு சிறந்த நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அந்நூலில், என்றென்றும் தம் நன்றிக்கு உரியவர்கள் என்று இருவரைப் பாராட்டி உள்ளார். அந்த இரு முக்கிய நபர்கள் திருவிதாங்கூர் திவான் சர்.சி.பி. இராமசாமி ஐயர், "தினமலர்' நிறுவன ஆசிரியர் டி.வி.இராமசுப்பையர் இருவருமாகும். மேலும் அவர் கூறுகையில்:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:28 am

சர்.பி.சி.ராமசாமி ஐயர்

சர்.சி.பி.ராமசாமி ஐயர், வந்தவாசியில் நவ., 12, 1877ல் பிறந்து, சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஆங்கிலத்தில் முதல் வகுப்பிலும், கணிதத்தில் தங்க மெடல் வாங்கியும், சமஸ்கிருதத்தில் டபுள் கிராஜுவேட் பட்டமும் வாங்கியவர். பின் சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று, 1903 - 1916ல் சென்னை ஐகோர்ட் வக்கீலாக இருந்தவர்.


1916 - 1918ல் "நியு இண்டியா' பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர். 1917 - 1918ல் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக இருந்தவர். 1919ல் சென்னை ஐகோர்ட் ஜட்ஜாக இருந்தவர். 1931ல் லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர். 1932 - 36ல் திருவிதாங்கூர் மகாராஜாவின் சட்ட ஆலோசகராக இருந்தவர். முதன்முதலில் இந்தியாவில் அரிஜன ஆலயப் பிரவேசத்தை 1936ல் மகாராஜா மூலம் அறிவித்து, அனைத்துக் கோயில்களையும் அரிஜனங்களுக்கு திறந்து விட்டவர்.

திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தை 1938ல் ஸ்தாபித்தார். 1936 - 47ல் நாஞ்சில் நாட்டிற்கு பேச்சிப் பாறை அணை மற்றும் நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தந்தவர். நிலத் தீர்வையை ரத்து செய்தவர்.


தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 PHOTO_05c


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:29 am

அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான திவானாக சர்.சி.பி.ராமசாமி ஐயர் இருந்தார். அவர் நாஞ்சில் நாட்டு விவசாயிகளுடைய நிலங்களுக்கான தீர்வையை ஒழுங்கு செய்து, மிகக் குறைவான நிலவரியைக் கட்ட ஏற்பாடு செய்தார். விவசாயிகளுடைய பிரச்னையில் மிகுந்த அனுதாபம் காட்டி இந்த செயலை செய்ததற்காக, அவருக்கு நாகர்கோவிலில் ஒரு சிலை எழுப்ப அப்பகுதி மக்கள் விரும்பினர்.

"டி.வி.ஆர்., இந்தக் கருத்தை என்னிடம் கூறி, சர்.சி.பி., யிடம் அனுமதி கேட்கச் சொன்னார்கள். நான் மாவட்ட நீதிபதி என்பதோடு, என் மீது சர்.சி.பி., யும் தனி அன்பு வைத்திருந்தபடியால், நாஞ்சில் நாட்டு மக்களின் இந்த எண்ணத்தை சர்.சி.பியிடம் வெளியிட்டேன்.

அதற்குச் சர்.சி.பி.ராமசாமி ஐயர் கூறினார்: "எனக்குச் சிலை வைப்பது அவசியமில்லை. ஏதாவது செய்துதான் ஆகவேண்டுமென்று விரும்பினால், ஒரு ஆஸ்பத்திரி கட்டலாம் அல்லது நல்ல நூலகத்துடன் கூடிய பூங்கா ஒன்று அமைக்கலாம். அதுதான் எனக்குச் சரி என்று படுகிறது' என்று கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:29 am

நாகர்கோவிலில் பூங்கா

சர்.சி.பி.,யின் விருப்பப்படியே ஒரு பூங்கா அமைத்த பெருமை டி.வி.ஆருக்குத் தான் உண்டு. நாகர்கோவில் நகரில் இன்றும் மிகச் சிறப்பாகத் திகழும் இந்த பூங்கா பற்றி மேலும் தகவல்கள் சேகரித்தோம்.

இங்குப் பலவித மரங்கள், செடிகள், அருமையான பாதைகள், அவைகளுக்குச் சிமெண்ட் சாலைகள், நடுவில் சிறப்பான வாசக சாலை எல்லாமாக எட்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது, இந்த பூங்கா. இது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்த சர்.சி.பி.,யின் அறுபதாம் ஆண்டு மணிவிழா நினைவாக உருவாக்கப்பட்டது. இந்தப் பூங்கா அமைப்புக் குழுவின் செயலாளர் டி.வி.ஆர்., தான். இது, பொதுப் பணித்துறை இலாகா இன்ஜினியர் ஆபீஸ் மற்றும் அவர் தங்கும் பங்களாவாக இருந்தது. அது வெள்ளையர்கள் ஆதிக்கமிக்க காலம். வெள்ளைக்கார இன்ஜினியர்களே இந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தனர். பூங்காவாக்க இது தீர்மானிக்கப்பட்டதும், இந்த இடம் கமிட்டி வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், இதைச் சுற்றி அலங்கார சுற்றுச் சுவர் மற்றும் பாதை அமைக்க, வெறும் காடாக இருந்த இடத்தில் சிமெண்ட் பாதைகள் அமைக்கவும், பழைய இன்ஜினியர் தங்கியிருந்த பங்களாவை மாற்றி நூலகம் அமைக்கவும், மின்விளக்குகள் அமைக்கவும் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று திட்டமிடப்பட்டது.

இந்தப் பணிகளுக்கான காண்டிராக்ட் அன்றைய பிரபல தேச பக்தரும், தாய்த் தமிழகத்துடன் குமரி மாவட்ட இணைப்புப் போராட்டத்தின் முக்கிய தளபதியாக இருந்தவரும், சிறந்த எழுத்தாளருமான பி.எஸ்.மணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:29 am

பி.எஸ்.மணி

நாகர்கோவிலில் பிப்.,7, 1916ல் பிறந்தவர். சிறந்த தேசபக்தர். எழுத்தாளர், நாடு சுதந்தரம் அடைந்ததைக் கொண்டாட, சுசீந்திரம் தேர் மீது தேசியக் கொடியை ஏற்றியதற்காக, திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் கைது செய்யப்பட்டவர். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சிறை சென்றவர்.


1945ல் கேரள மாகாண காங்கிரஸ் கொண்டு வந்த, "காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை கேரளம்' என்ற தீர்மானத்தை எதிர்த்து முதல் குரல் எழுப்பியவர். நாஞ்சில் நாட்டைத் தமிழ் நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் கைதாகி பலமுறை சிறையில் இருந்தவர். குமரி மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர். பத்திரிக்கையாளர்.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 PHOTO_05d


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:30 am

பி.எஸ்.மணி

"இந்த பூங்கா வேலையை நீ தான் எடுத்து நடத்த வேண்டும் என்று என்னிடம் டி.வி.ஆர்., கூறினார். என் தந்தையார் பிரபலமான காண்டிராக்டர். திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் அன்று அவர் கட்டிய கட்டடங்கள், மன்னர்களால் பாராட்டப்பட்டவை. ஆகவே, இந்த காரியத்தில் நானும் உதவுவதற்காகக் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்து வந்தேன்.

" கமிட்டி, அது, இது என்று இருந்தாலும் டி.வி.ஆர்., தான் எல்லாம். அது 1942ம் ஆண்டு. நாடெங்கும் சுதந்திரப் போராட்டத்தின் உச்சக்கட்டம். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு நான் கைதாகிச் சிறைக்குச் சென்றேன். நாம் எடுத்த பணியை முடிக்காமல் சிறைக்குள் வந்து விட்டோமே என்று எனக்குக் கவலை. ஆனால், நான் சிறையில் இருந்து விடுதலை பெற்று வந்தபோது, பூங்கா வேலைகள் முழுமை அடைந்திருந்ததைக் கண்டு அதிசயித்து, டி.வி.ஆரைப் போய்ப் பார்த்தேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:30 am

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 9 PHOTO_05e


"என்னிடம் அவர் கூறினார்: "நீ சிறைக்குப் போய்விட்டதால், எடுத்த வேலை பாதியில் நின்றது. மக்கள் சுதந்திர தாகத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது, சர்.சி.பி.,க்காக ஒரு பூங்கா அமைப்பது குறித்து மக்களிடம் அவ்வளவு ஆதரவு இல்லை. நிதி கிடைப்பதிலும் சிக்கல் வந்தது. இருந்தாலும், நாம் ஒரு நன்றிக்கடமைக்காக இதைத் தொடங்கினோம். பாதியில் விடக்கூடாது என்பதால், நானே பூர்த்தி செய்துவிட்டேன்' என்றார்.



"என்னிடம் அவர் கூறினார்: "நீ சிறைக்குப் போய்விட்டதால், எடுத்த வேலை பாதியில் நின்றது. மக்கள் சுதந்திர தாகத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது, சர்.சி.பி.,க்காக ஒரு பூங்கா அமைப்பது குறித்து மக்களிடம் அவ்வளவு ஆதரவு இல்லை. நிதி கிடைப்பதிலும் சிக்கல் வந்தது. இருந்தாலும், நாம் ஒரு நன்றிக்கடமைக்காக இதைத் தொடங்கினோம். பாதியில் விடக்கூடாது என்பதால், நானே பூர்த்தி செய்துவிட்டேன்' என்றார்.

"நான் செலவு செய்தது போக மீதி எல்லாப் பணமும் டி.வி.ஆர்., தான் செலவு செய்திருந்தார். காண்டிராக்ட் பணம் வாங்குவது மிகவும் கஷ்டமாகிவிட்டது. நான் சிறைக்குப் போய் வந்தவன் என்பதால், அதிகாரிகள் காலம் கடந்தினர். அந்தப் பணத்தை எனக்கு கிடைக்கச் செய்தவரும் டி.வி.ஆர்., தான். அந்தப் பணம் என் கைக்கு வந்ததும், அவர் செலவு செய்த தொகையை எடுத்துக் கொள்ளச் சொன்னேன். "பரவாயில்லை, காண்டிராக்ட் எடுத்துப் பாதியில் போட்டுவிட்டு மணி போய்விட்டான் என்ற கெட்ட பெயர் உனக்கு வராமல் இருந்ததே. அதுவே போதும். தேசபக்தி காரணமாகப் பல மாதங்கள் சிறையில் கழித்துவிட்டாய். பணம் முக்கியம் அல்ல' என்று அவர் கூறியதை இன்று நினைத்தாலும் எனக்கு கண் கலங்குகிறது' என்றார். இதில் சம்பந்தப்பட்ட சிலரை அணுகிக் கேட்டபோது, "டி.வி.ஆர்., முயற்சி இல்லை என்றால் இந்த பூங்கா முடிந்தே இராது' என்றே கூறினர். பின்னர் இது நகரசபையில் ஒப்படைக்கப்பட்டது. இதை சர்.சி.பி.ராமசாமி பூங்கா என்று கூறுவதை விட, டி.வி.ஆர்., நினைவு பூங்கா என்றே அழைக்கலாம் என்றும் அன்றைய பிரமுகர்கள் இன்றும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

"ஒரு நல்ல காரியத்தை மக்களுக்காக யார் செய்தாலும், அதை நன்றியுடன் பாராட்டும் மனப்பான்மை வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவரை மகிழ்விக்கிறோம் என்பதல்ல முக்கியம். இதுபோல் வேறு பலரும் செய்ய முன்வருவார்கள் அல்லவா?' என்று அடிக்கடி டி.வி.ஆர்., கூறுவதுண்டு. அந்த வகையில்தான் இந்த பூங்கா அமைக்க முயற்சி மேற்கொண்டார்.

Sponsored content

PostSponsored content



Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக