புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை


   
   

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:37 pm

First topic message reminder :

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 14 Kadal-thamarai


முன்னுரை



டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.


நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:03 am

பேராசிரியர் வளன் அரசு கூறிய இன்னொரு செய்தி:

நெல்லையில் சித்த மருத்துவக் கல்லூரியில் ஒர் ஆண்டு விழா. அதற்கு டி.வி.ஆர்., தலைமை வகிக்க மாணவர்களும், நாங்களும் விரும்பினோம். சென்று அழைத்தோம். வழக்கம் போல மகிழ்ச்சியுடன் வருகை தந்தார். நாங்கள் விழா வைக் கல்லூரியில் இரண்டாவது மாடியில் ஏற்பாடு செய்திருந்தோம். டி.வி.ஆரை படி ஏறி இறங்க வேண்டாம் என்று அவரது உடல் நிலை கருதி டாக்டர்கள் கட்டாயப்படுத்தியது எங்களுக்குத் தெரியாது.

பின்னர் இது தெரிந்ததும் நாங்கள், "ஐயா படி ஏறக்கூடாது என்பது இப்போதுதான் தெரியும். நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களை மாடிக்கு நாங்கள் சுமந்து செல்கிறோம்,' என்று கூறினோம். அதற்கு டி.வி.ஆர்., "அதுவெல்லாம் தேவையில்லை. இது சித்த வைத்தியக் கல்லூரி தானே. ஒன்றும் வராது. வந்தாலும் பார்த்துக் கொள்வார்கள். இந்தக் கல்லூரி மாணவர்களுக்கு என்னை உயரத்தில் வைத்துப் பார்க்கிற ஆசை இருக்கும் போது நான் ஏன் அதை வேண்டாம் என்று கூற வேண்டும்,' என்று கூறி படிகள் பல ஏறி வ்து அருமையாகச் சொற்பொழிவாற்றினார்.

"தமிழ் மீதும், சித்த வைத்தியத்தின் மீதும் அவருக்கிருந்த ஆர்வம் தானே இதைச் சாதிக்க வைத்தது. இதை இன்றைக்கு நினைக்கும் போதும் தமிழ்மொழிக்கு அந்த உள்ளம் எத்தனை உயர்ந்த மதிப்புக் கொடுத்துள்ளது என்று எண்ணி எண்ணி வியப்பில் மூழ்காமல் இருக்க முடியவில்லை,' என்று நாத்தழுதழுக்கக் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:04 am

ஒரு மனிதரை எடை போடுவதில்

பத்திரிக்கைத் தொழில் டி.வி.ஆருக்குப் பாரம்பரியமல்ல. பத்திரிக்கைத் தொழிலில், எழுத்துலகில் தனித்தன்மை பெற்றிருந்த மித்திரன் ஜி.சுப்பிரமணிஐயர், வ.ரா., கல்கி, டி.எஸ்.சொக்கலிங்கம் போன்ற மிகச் சிறந்த படைப்பிலக்கிய வாதியும் அல்ல டி.வி.ஆர்., அவருக்கு பத்திரிக்கைத் தொழில் பாரம்பரியமில்லா விட்டாலும் கூட, தானே ஒரு வழிமுறையை வகுத்து அதை அங்குலம் அங்குலமாக வளர்த்துத் "தினமலர்"ப் பத்திரிக்கைக்கு ஒரு தனிப் பாரம்பரியத்தையே தமிழ்நாட்டில் அவர் உருவாக்கி இருக்கிறார்.

எழுத்தாளர்களை, எழுத்தாளராக ஒருவர் உருவாவதற்கு முன்பே, அல்லது எழுதக் தொடங்கும் ஆரம்பக் காலத்திலேயே, எடை போட்டுக் கண்டு பிடிக்கும் தனி ஆற்றல் டி.வி.ஆருக்கு இருந்தது. சுதேசமித்திரன் ஜி.சுப்பிரமணிய ஐயருக்கு இந்தப் பார்வை இருந்திருக்கிறது. குட்டி சமஸ்தானத்தின் புலவன், பின்னர் தமிழாசிரியன், பாரதியைக் கண்ட உடன் இவன் ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையாளனாக வருவான் என மதிப்பிட அவரால் முடிந்துள்ளது.

சரியான கொள்கையையும், அதைச் சரியான நேரத்தில் கொண்டு செலுத்தவும் டி.வி.ஆரால் முடியும். பல எழுத்தாளர்களைத் தனது உறுதியான கொள்கைகளுக்குத் தக்கபடி ஊக்கப்படுத்தி எழுதச் செய்வது அவரது தனித்தன்மை.

தனது குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய ஒர் இளைஞனை, உடல்நலம் சரியில்லாத நிலையில் படுத்த படுக்கையில் பார்த்தார் டி.வி.ஆர்., அவனால் எழுந்து நடமாட முடியாது. தமிழில் அவனுக்கு அ, ஆ கூடத் தெரியாது. இவன் பிற்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளனாக உருவானான். அவர், சுந்தர ராமசாமி. தனக்கே உரிய பாணியில் சுந்தர ராமசாமி கூறுகிறார்: "என் தாயார் பெயர் தங்கம்மாள். அவர் பிறந்து வளர்ந்தது தழுவிய மகாதேவர் கோவில் கிராமந்தான். எனது தாயாருக்கும் ஒரு வகையில் உறவினர் ராமசுப்பையர். ஏழு வயதில் இருந்து 10 வயது வரை என் தாயாரும் ராமசுப்பையரும் ஒன்றாக விளையாடிய குழந்தைகள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:04 am

சுந்தரராமசாமி

தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளரான சுந்தரராமசாமி மே 30, 1931ல் பிறந்தவர். தனது சுயமுயற்சியில் தமிழ் மொழியை 18 வயதுக்கு மேல் கற்றுத் தமிழ் மொழிக்குப் பெரும் சேவை செய்தவர். தனக்கெனத் தனியான இலக்கியப் பார்வை கொண்டவர், "ஒரு புளிய மரத்தின் கதை, "ஜே.ஜே.சில குறிப்புக்கள்,' என்ற புகழ்பெற்ற நாவல்களைப் படைத்தவர்.


இவரது சிறுகதைகள் ஐந்து தொகுதிகள் வெளியாகி உள்ளன. மலையாளம், இந்தி, கன்னடம், ருஷ்ய, செக் மொழிகளில் இவரது கதைகள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. '59ல் இருந்து கவிதைகள் பலவும் எழுதி வருகிறார். பாரிஸ், மலேசியா, சிங்கப்பூர் இங்கெல்லாம் இவர் அழைக்கப்பட்டு இவரது இலக்கியச் சேவைக்காகப் பாராட்டப் பெற்றவர். இவரது "நடுநிசி நாய்கள்' என்ற கவிதைத் தொகுப்பிற்கு 1987ம் ஆண்டின் "ஆசான்!' விருது கிடைத்துள்ளது.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 14 PHOTO_6h


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:04 am

"எனக்குச் சின்ன வயதாக இருக்கும் போது மிகவும் உயர்வாகவும் மதிக்கத்தக்கவராகவும் டி.வி.ஆர்., பற்றி எங்கள் அம்மா பேசுவாள். அவள் "ராமசுப்பு' என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் அவரைப் பார்த்ததில்லை. ஆனாலும் கூட எனக்கும், என் சகோதரிக்கும் எப்படியோ அம்மா சொல்வதைக் கேட்டுக் கேட்டு அவரிடம் தனி மதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது.

"நாங்கள் 1939 வரை கோட்டயத்தில் இருந்தோம். பின்னர் நாகர்கோவிலுக்கு வந்ததும் டி.வி.ஆருடன் சந்திப்பு ஏற்பட்டது. வாரத்திற்கு இரண்டு தடவை அல்லது மூன்று தடவை எங்கள் வீட்டுக்கு வருவார். அம்மா ஒர் ஆஸ்துமா நோயாளி, பக்கத்தில் உட்கார்ந்து அவளுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்வார்.


"எனது 10 வயதில் 1941ல் உடம்பு சரியில்லாமல் படுத்து விட்டேன். இளம்பிள்ளை வாதத்தில் சிக்கிக் கொண்டேன். அப்போது அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். என் அப்பா, அம்மா எல்லாருக்கும் ஆறுதல் கூறுவார். மலையில் அநேகமாக நாலரை மணி முதல் ஐந்து மணிக்குள் அவர் வருவார். அந்நேரம் எனக்கு நன்கு தெரியும். அவர் வரமாட்டாரா என்று எதிர்பார்க்கும் பழக்கமும் எனக்கு வந்துவிட்டது.

"எனக்குச் சதா படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பொழுது போவது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அப்போது ஒரு நாள் அவர் என்னிடம், "நான் நாகர்கோவில் கிளப்பின் செயலாளர். உனக்கு வேண்டிய புத்தகங்கள் அங்கிருந்து கிடைக்கச் செய்கிறேன். புத்தகங்கள் படிப்பதால் பொழுது நன்றாகப் போகும் அறிவு வளரும்,' என்று ஒரு யோசனையைக் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:04 am

"புத்தகங்கள் படிக்கும் வழக்கமே அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. பள்ளியில் நான் தமிழ் படிக்கவில்லை. இங்கிலீஷ், சமஸ்கிருதம், மலையாளம் தான் படித்தேன், தமிழ் படிப்பது எப்படி? எனது 18வது வயதில், அதாவது 1947ல் சிலேட்டு வாங்கி தமிழ் எழுத்துக்களை எழுதிப் படிக்கத் தொடங்கினேன். இந்த என் முயற்சியைக் கண்டு ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டு என்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார் டி.வி.ஆர்.,

"தமிழ் நன்றாகப் படிக்கத் தெரிந்த பின்னர் நான் படித்த இரண்டாவது புத்தகம் புதுமைப் பித்தனின் "காஞ்சனை.' உண்மையைச் சொல்லப் போனால்அந்தப் புத்தகம்தான் என்னை எழுத்தாளனாகவே ஆக்கியது.

"எனது 20வது வயதில் 1951ல் "புதுமைப் பித்தன் நினைவுமலர்!' ஒன்று வெளியிட்டேன். அதுதான் நான் வெளியிட்ட முதல் புத்தகம். அதை நான் வெளிக் கொண்டு வரப் பல உதவிகளை டி.வி.ஆர்., செய்தது இன்றைக்கும் எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது,' என்றார்.

திறமை உள்ளவர்களை ஊக்குவிக்கும் குணம் தமிழகத்தின் புகழ்பெற்ற சில பத்திரிக்கை ஆசிரிய மேதைகளிடம் இருந்துள்ளது. அந்த குணம் டி.வி.ஆர்., அவர்களிடம் இருந்ததே அவர் வெற்றியின் ரகசியமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:05 am

பி.ஸ்ரீ.ஆச்சார்யி

"பி.ஸ்ரீ.,' என்று தமிழ் எழுத்தாளர்களால் புகழ்ப்படும் பி.ஸ்ரீ.ஆச்சார்யா, நெல்லை மாவட்டம், தென் திருப்பேரையில், ஏப்., 11, 1886ல் பிறந்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து இவர், காவல்துறையில் சில காலம் பணியாற்றி உள்ளார். அதனை உதறி விட்டு பின்னர் முழுக்க முழுக்கத் தமிழ்ப் பணியில் ஈடுபட்டார்.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 14 PHOTO_06i


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:08 am

கம்ப இராமாயணத்தை மிகச் சுவையாக "சித்ர இராமாயணம்' என்னும் தலைப்பில் இவர் தொடராக எழுதியது இவரது இலக்கியத் தொண்டுகளில் மிகச் சிறந்ததாகும். தமிழ்ப் பத்திரிகை உலகின் அதுவும் இலக்கியப் பிரியர்களுக்கு "பி.ஸ்ரீ.,' என்ற பெயர் நன்கு தெரிந்திருந்த காலம் ஒன்றுண்டு. தமிழ் நூல்கள் எழுதுவதையே முழுக்க முழுக்கத் தொழிலாகக் கொண்ட இவரது, "கம்ப சித்திரம்,' சித்திர இராமாயணம்' ஆகிய தொடர்கள் பல வருஷங்கள் விகடனில் தொடராக வெளிவந்தது. இதற்காகவே வாசகர்கள் பல்லாயிரக்கணக்கில் இருந்தனர்.

ஆழ்வார்களது தெய்வீகக் கதைகளின் விமர்சனமும் புகழ்பெற்றது. இது போலவே "சிவ நேசச் செல்வர்,' "இராமானுஜர்,' "கம்பனில் ஆழ்வார்களின் சாயல்' ஆகிய நூல்கள் பி.ஸ்ரீ., யின் தனி முத்திரையுடன் திகழ்கின்றன. இவரை சாகித்திய அகடமி, பரிசளித்து கவுரவித்தது. சென்னையில் நீண்ட காலம் இருந்து பத்திரிக்கைகள் மூலம் தமிழ்த் தொண்டாற்றிய இவர், கடைசிக் காலத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான விட்லாபுரத்தில் வசித்து வந்தார். அப்போது அவர் "தினமலர்'ப் பத்திரிக்கையில் எழுதியும் வந்தார். 96வயது வரை பத்திரிக்கைகளில் எழுதிய முதுபெரும் எழுத்தாளாரான இவர், அக்டேபர் 28, 1981ல் காலமானார்.

டி.வி.ஆரின் பெருமதிப்பைப் பெற்ற பி.ஸ்ரீ.,யின் 93வது ஆண்டு விழா பாளையங் கோட்டையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது இவருக்கு "கம்பராமாயணக் கலங்கரை விளக்கம்' (23.12.1978) என்ற பட்டம் வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில், டி.வி,ஆர்., மற்றும் இலக்கியவாதிகள் விழுõவில் கலந்து கொண்டு, பி.ஸ்ரீ., யின் தமிழ்த் தொண்டுகளைப் பாராட்டிப் பேசினர்.

இந்த பாராட்டு விழா நடத்த டி.வி.ஆர்., பெரும் காரணமாக இருந்தார்.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 14 PHOTO_06j


Sponsored content

PostSponsored content



Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக