புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
89 Posts - 38%
heezulia
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 1%
prajai
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
340 Posts - 48%
heezulia
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
24 Posts - 3%
prajai
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.பாக்யராஜ் கேள்வி பதில்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:47 pm

எதுவும் நம் கையில் இல்லை, எல்லாம் நம் கையில் எது சரி?

ரெண்டுமே சரிதான். எப்படின்னா...

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வாழ்ந்த ராய் சி.கல்வன்ங்கறவரை, 1942ம் வருஷம் முதன் முதலில் இடி தாக்கியது. இதனால் அவர் தன் கால் கட்டை விரலை இழந்தார். ரெண்டாவது தடவையா 1969ம் வருஷம் இடி தாக்கினப்போ, இவரோட புருவமுடியெல்லாம் கருகிடுச்சு. இதே வருஷம் மூணாவது முறையா இடி தலையை தாக்கினப்ப, தலைமுடிகள் பற்றி எரிந்து போனதாம். இப்படி இதே வருஷத்துல திரும்ப திரும்ப ரெண்டு தடவை இடி தாக்கி, சிறு சிறு காயங்களோட தப்பிச்சிட்டாரு. பிறகு 6வது முறையா 1970ம் வருஷம் ஜூன் மாதம் தாக்கிய இடியால இவருக்கு கணுக்காலில் பலத்தக் காயம் ஏற்பட்டுச்சு. அதுலயும் தப்பிச்சுட்டாரு. ஏழாவது தடவையா 1977ம் வருஷம் ஜூன் மாதம் 25ம் தேதி இடி தாக்கினப்போ, மார்பிலும் வயிற்றிலும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரு.இந்த இடி தாக்கி இவருக்கு என்ன நேர்ந்ததோ தெரியல... 1982ம் வருஷம் இவர் தற்கொலை செஞ்சுகிட்டாராம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:49 pm

சிறு குற்றங்களுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் அச்சமயத்தில் கர்ப்பமாக இருந்தால், அவளை சிறையில் வைக்க கூடாதுன்னு இத்தாலி நாட்டுல ஒரு சட்டம் உள்ளது. சட்டத்திலுள்ள இந்த ஓட்டையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கிட்டு, ஒரு பெண் எப்படியெல்லாம் விளையாண்டிருக்கிறாள்ங்கிறதை இப்பொழுது பார்ப்போம்.

அதாவது எலிஸா ஸ்பின் னெலிங்கற இத்தாலி நாட்டுப் பெண் ஒரு தடவை கோழிக் குஞ்சுகளை திருடிட்டா. இந்த குற்றத்திற்காக அவளுக்கு பத்து மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறைக்கு அழைத்துச் செல்ல முதன் முறையாக அதிகாரிகளக் வந்தப்போ, அவள் கர்பிணின்னு தெரிய வந்துச்சு. அடுத்த தடவையும் அதே கதை தான். ஒவ்வொரு தடவையும் அவளை கைது செய்ய வந்தப்போ, அவள் கர்பிணியாகவே இருந்தாளாம். இந்த மாதிரி பதினான்கு முறை போலீஸார் கைது செய்ய வந்து, ஏமாற்றத்துடன் திரும்பியிருக்காங்க. அதாவது... பன்னிரெண்டு ஆண்டுகள்ல பதினாலு தடவை, அவள் கர்பிணியாகி சாதனை படைத்திருக்கிறாளாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:52 pm

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் நிஜம் தானே?

எல்லாத்துக்கும் பொருந்தாது எப்படின்னா...

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு யூதர், சிறந்த விஞ்ஞானியா இருந்தாலும், ஹிட்லரோட நாஜிக் கொள்கைப்படி அவரை ஜெர்மனியை விட்டு வெளியேறும்படி சொல்லிட்டாரு ஹிட்லர்.

அமெரிக்காவுல அடைக்கலம் தேடி ஐன்ஸ்டீன் போனாரு. அங்க வாழ்க்கை நடத்த ஒரு வேலையைத் தேடிக்கொள்ள ஒரு பல்கலைக் கழக கமிட்டி முன்னால இண்டர்வியூக்கு போயிருந்தாரு.

நீங்க என்ன ஊதியம் எதிர்பார்க்கிறீர்கள்?னு கமிட்டியில கேட்டாங்க.

ஐன்ஸ்டீன் கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, அன்றைய விலைவாசிக்கு அமெரிக்காவுல குடும்பம் நடத்த, எப்படியும் 600 டாலர் தேவைப்படும்னு கணக்குப் போட்டு தயக்கத்தோட

600 டாலர் ன்னாரு.

கமிட்டியினர்,அது கேட்டு சிரிச்சாங்க.

ஐன்ஸ்டீன் ஒரு வேளை தான் அதிகமா கேட்டுட்டோமோன்னு நினைச்சு வருத்தப்பட்டாரு. உடனே ஒரு 600 டாலர் என்றாலும் சமாளித்துக் கொள்வேன்னாரு.


இப்பவும், கமிட்டியினர் சிரிச்சாங்க,பிறகு அந்த கமிட்டியோட தலைவர், மிஸ்டர் ஐன்ஸ்டீன்! உங்களோட ஆற்றல் என்ன என்பது எங்களுக்கு தெரியும். உங்களுக்கு ஐயாயிரம் டாலராவது நாங்கள் சம்பளமாத் தராவிட்டால்,ஒரு பெரிய அறிவாளியை ஏமாற்றி விட்டோம்னு எங்களுக்கு ஒரு அவப்பெயர் வந்துவிடும். அதை நாங்கள் விரும்பவில்லை ன்னாங்க.

இதைக் கேட்டு ஐன்ஸ்டீன் புளகாங்கிதம் அடைந்தாராம். தனது தகுதியை சரியாக உணர்ந்த அந்த கமிட்டியினரின் பெருந்தன்மையையும், பண்பாட்டையும் எண்ணி பெருமைப்பட்டாராம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:52 pm

பின்னாளில், ரிலேட்டிவிட்டி தியரியை உலகுக்கு சொல்லி, விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என்று புகழ் பெற்ற பிறகு, இஸ்ரேல் நாட்டினர் அவரை யூதர் என்பதால் இஸ்ரேல் நாட்டின் தலைமைப் பதவி ஏற்கும்படி அழைப்பு விடுத்தும், அதை ஐன்ஸ்டீன் ஏற்க மறுத்து, அமெரிக்காவிலேயே தங்கிட்டாரு.

இதுதான் நவீன செஞ்சோற்றுக் கடன் தீர்த்த சம்பவம்.

ஆசியாவிலேயே பெரிய ஸ்டூடியோ விஜயா வாகினி. அதோட நிறுவனர் நாகிரெட்டியார். அவரோட பூர்வீகம் ஆந்திரா. அவரை ஆந்திராவுக்கு இடம் மாத்த எத்தனையோ சலுகைகளை ஆந்திர அரசு கொடுக்க முன்வந்தும், என்னைவாழ வைத்தது தமிழ்நாடுன்னு கடைசி வரைக்கும் வர மறுத்துட்டாரு.

அதனால, விசுவாச எண்ணம் படைத்தவர்களுக்கு நீங்க சொன்னது பொருந்தாது

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:53 pm

ஒரு சோறு பதம் எப்படி?

ஒரு தடவை காந்தியடிகளின் அரசியல் குருவான கோகலே, காந்திகிட்ட ஒரு கேள்வி கேட்டாரு.

நீங்கள் உங்கள் தாய் தந்தையுடன் ஒரு காட்டு வழியே வரும் போது எதிர்பாராமல் ஒரு சிங்கம் வந்துவிடுகிறது. இந்த நிலையில் நீங்கள் உங்கள் தாயை காப்பாற்ற நினைப்பீர்களா? அல்லது... தந்தையைக் காப்பாற்ற நினைப்பீர்களா?ன்னு கேட்டாரு.

உடனே காந்தியடிகள், சிறிதும் தயங்காம, சிங்கத்தின் முன்னே நான் போய் விடுவேன். அதனால் சிங்கத்தின் கவனம் என் மீது வந்துவிடும். என் தாய்தந்தை இருவருமே காப்பாற்றப் பட்டு விடுவார்கள்னு பதில் சொன்னாராம்.

தன்னை துன்பத்தில் ஈடுபடுத்திக் கொண்டு, மற்றவர்களை சுகப்படுத்தும் எண்ணமே அவரை மகாத்மாவாக ஆக்கியிருக்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:54 pm

கெட்ட நேரத்தை யோசித்தால் தவிர்க்க முடியாதா?

ஒரு தடவை இங்கிலாந்து நாட்டின் எட்டாம் எட்வர்ட் மன்னர் தன்னோட பேரக் குழந்தைகளோட உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தப்போ, ஒரு பேரன் ஏதோ பேச வாயெடுத்தான்.

அதைப் பார்த்த எட்வர்ட் மன்னர். இதோ பார் சாப்பிடும் போது எதையும் பேசக் கூடாது. ராஜகுடும்பத்துக்கு அது அநாகரீகமான விஷயம்னு சொன்னார்.

எல்லாரும் சாப்பிட்டு முடித்தனர். அந்த பேரனைப் பார்த்து எட்வர்ட், அப்பொழுது என்னமோ சொல்ல வந்தாயே, என்ன அது? சொல் ன்னாரு.

பேரன் அதைச் சொல்லி இனி பிரயோஜனம் இல்லைன்னான்.

மன்னர் பரவாயில்லை சொல்லுன்னாரு.

பேரன் சிரிச்சுகிட்டே, நீங்க சாப்பிட்ட தட்டுல ஒரு பூச்சி செத்துக் கிடந்துச்சு அதைத் தான் சொல்ல வந்தேன். நீங்க என்னையும் அடக்கிட்டு, பூச்சியையும் சேர்த்து சாப்பிட்டுட்டீங்கன்னான்.

அதாவது, கெட்ட நேரங்கறது யோசிக்கவே விடாதுங்கறது ஒரு சிலருக்கு நடந்திருக்கு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:54 pm

கடி ஜோக் கேட்டு நாள் ஆயிற்று?

சமீபத்துல கவிதையாகவே ஒருத்தர் கடிச்சிருக்கார். அதைப் படிங்க, இல்லை இல்லை... கடிங்க.

பசியோடிருந்த

என்னைப் பார்த்த கடவுள்

எனக்குப் பிஸ்ஸாவும்

தாகமுடன் இருந்த போது

எனக்குப் பெப்ஸியும்

கொடுத்தார்.

இருளில் நான்

நின்று கொண்டிருக்கையில்

கடவுள் வெளிச்சத்தை

தந்தார்.

எனக்குப் பிரச்சினைகள்

எதுவும் இல்லாதிருந்த

நேரத்தில் தான்

பெண்ணே...

உன்னை அவர் உண்டாக்கினார்!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:55 pm

ஒரு நக்கல் பேர்வழி பற்றி?

ஜார்ஜ் பெர்னாட்ஷா, மாமிசம் சாப்பிட மாட்டார்.மதுவும் அருந்த மாட்டார். இதைப் பத்தி கேட்டவர்கிட்ட பெர்னாட்ஷா சொன்ன பதில்,

நான் செத்த பிராணிகளை உண்பது இல்லை. என் முன்னோர்கள் என்னைப் போல பலருடைய பங்குகளைச் சேர்த்துக் குடித்து விட்டார்கள். அதனால் எனக்கு பங்கு இல்லாமல் போய் விட்டது.

தாடி வைத்துக் கொண்ட இவர்கிட்ட நீங்கள் தாடி வளர்ப்பது லாபமான்னு ஒருத்தர் கேட்டாரு.

நான் முகச்சவரம் செய்வதற்காக ஆகும் நேரத்தில் நிச்சயம் ஒரு நாடகமாவது எழுதிடுவேன்னாராம்.

ஆஸ்பத்திரிநர்ஸிங் ஹோம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?ன்னு கேட்டவருக்கு பெர்னார்ட்ஷா சொன்ன பதில்...

நோய் பாதி தீருவதற்கு முன்பே நடுத் தெருவுக்கு துரத்தி விட்டால் அது ஆஸ்பத்திரி. சாகும் வரை வெளியே அனுப்பாமல் இருந்தால் அது நர்ஸிங் ஹோம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:55 pm

இரத்தத்துலயே ஊற வைக்க வேண்டிய விஷயம் எது?

ஒருத்தர் தன்னோட ரெண்டு குழந்தைகளையும் கூட்டிக்கிட்டு விளையாட்டு அரங்கத்துக்கு போனாரு. டிக்கெட் கவுன்டருல போய் டிக்கெட் விலை என்ன?ன்னு கேட்டாரு.

பெரியவர்களுக்கு ஐந்து ரூபாய். குழந்தைகளுக்கு ஆறு வயதுக்கு கீழ் டிக்கெட் இலவசம்ன்னு கவுண்டரில் இருக்கிறவரு சொன்னாரு.

உடனே இவர் பெரிய பையனுக்கு ஏழு வயது ஆகிறது. எனக்கும் அவனுக்கும் மட்டும் இரண்டு டிக்கெட் குடுங்கன்னு சொன்னாரு.

டிக்கெட் குடுக்கிறவரு. ஏற இறங்க பார்த்துட்டு. பையன பார்த்தா ஏழு வயசு மாதிரி தெரியலை. அவனுக்கு ஆறு வயசு தான் ஆகு துன்னு சொல்லியிருந்தால் நானும் விட்டிருப்பேன். உங்களுக்கு ஐந்து ரூபாய் மிச்சமாயிருக்குமேன்னு சொல்ல.

அதுக்கு அப்பாக்காரர், நீங்க சொல்ற மாதிரி அவனுக்கு ஆறு வயசுன்னு சொல்லியிருந்தா, எனக்கு அஞ்சு ரூபாய் தான் மிச்சமாகியிருக்கும்... ஆனா அதோட அஞ்சு ரூபாய்க்காக நம்ம அப்பா பொய் சொல்றாரேன்னு என் மகன் என்னை அற்பத்தனமா நினைப்பான். இந்த அஞ்சு ரூபாயை மறுபடியும் சம்பாதிக்கலாம். ஆனா என் மகன் மனசுல இந்தக் கனவு வந்துட்டா, அதை கடைசி வரை எடுக்க முடியாதுன்னு நேர்மையா சொல்லிட்டுப் போனாரு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:57 pm

தங்களை பாதித்த தந்தை பெரியாரின் நல்ல வாசகம் ஒன்று?



தந்தை பெரியார் ஒரு தடவை கூட்டத்துல பேசுறப்போ, சொன்னது; ""நான் மூட்டை தூக்கி பிழைக்க வேண்டிய ஒரு நிலைமை எனக்கு வந்தால், மூட்டை தூக்க முடியவில்லையேய என்று அழுவேனே தவிர, மூட்டைத் துதூக்குகிறேனே என்று அந்தத் தொழிலைத் தாழ்வாக நினைத்து அழ மாட்டேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக