புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
81 Posts - 62%
heezulia
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
6 Posts - 5%
eraeravi
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
273 Posts - 45%
heezulia
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_m10தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 10, 2010 9:11 am

அடுத்த வீட்டில்தானே தீ என்று இருந்தால்
அந்தத் தீ உன்னையும் அழிக்கும்.
ஈழத்தில்தானே படுகொலை என்று
வேடிக்கைப் பார்த்தாய் .
தமிழ்நாட்டுத் தமிழனையும்
படுகொலை செய்கிறது சிங்களப்படை .
உலகில் தமிழன் உயிர் மிக மலிவாகிப் போனது .
கேட்க நாதியற்ற இனமாகிப் போனது .
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார்
இந்திய அரசு பதில் தராது .
இனி அடுத்த படு கொலைக்கும்
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார் .
இமயம் முதல் குமரி வரை இந்தியா
இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்
தமிழ் நாட்டுத் தமிழர்கள்குழந்தைக்கு சொல்லித்தருகிறோம்.
இந்திய அரசு மட்டும் தமிழனை இந்தியனாக்கக்கருதாமல்
தமிழனாகக் கருதுகின்றது
தமிழின விரோதி வந்தால் சிகப்புக் கம்பள வரவேற்ப்புத்தந்து
கோடிகளை அள்ளிக் கொடுக்கின்றது .



கவிஞர் இரா.இரவி அவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்த கவிதை! இனிமேல் கவிதைகளை கவிஞரே இங்கு நேரடியாகப் பதிவிடலாம்! உங்களின் கவிதைகளை ரசிக்க ஈகரையின் நெஞ்சங்கள் காத்திருக்கிறது!



தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 10, 2010 9:29 am

உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு உண்மை – கவிஞர் இரா.இரவி









ஈழத்தில் தமிழை தாய் மொழியாகப் பேசியதால்
இலட்சத்திற்கும் மேலான ஈழத் தமிழர்களின்
உடல் மண்ணிற்கு உயிர் தமிழக்குப் போனது
உயிரோடு மண்ணில் போட்டுப் புதைத்தான் ராஜபட்சே
ஈழத்தில் சிங்களனாகப் பிறந்து இருந்தால்
இந்தக் கொடூரக் கொலைகள் நடந்து இருக்காது
உலகத் தழிழர்களில் பலர் வேடிக்கைப்
பார்த்ததைத் தவிர வேறு எதும் செய்யவில்லை
கிராமத்தில் ரத்த சொந்தம் ஒருவர் இருந்தால்
குடும்பத்தில் பொங்கல் கொண்டாடமாட்டார்கள்
ஈழத்தில் ரத்த சொந்தம் லட்சத்திற்கு மேல்
இறந்தால் உணர்வாளர்களுக்கு செம்மொழி மாநாடு இனிக்கவில்லை
மகாகவி இன்று இருந்து இருந்தால்
செந்தமிழ்நாடு எனும் போதினிலே
துன்பக்கண்னீர் வழியுது விழிகளிலே
என்றே பாடி இருப்பான்
தமிழினம் வீழ்ந்து தமிழ் வாழ்ந்து என்ன பயன்?
eraeravi.wordpress.com

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 10, 2010 9:31 am

துளிப்பா : கவிஞர் இரா.ரவி

ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை
ஈவு இரக்கமற்ற கொடூரக் கொலை
வாழ வழியின்றி முள்வேலி
வாடி வதங்கினர் குழந்தைகள்
இழவை கேட்க நாதியில்லை

உலக மகா கொடூர கொலைக்காரன்
உலக வலம் நாளும் வருகிறான்
உலக நாடுகள் மன்றத்தான் வேடிக்கை பார்க்கிறான்
ஒருவரும் தட்டி கேட்கவில்லை
பலகாலம் ஏமாற்றி வாழ்கிறான்

மூட நம்பிக்கைகளில் ஒன்றானது தேர்தல்
மேதினியில் பணம் படைத்தவர்களே வேட்பாளர்கள்
மடயர்கள் மலிந்து விட்டனர்
மூளைக்கு வேலை இல்லை
அட பணம் வாங்கி வாக்களிக்கிறார்கள்.

போட்டி போட்டன தொலைக்காட்சிகள்
பெண்களை அழ வைத்துப் பார்ப்பதில்
ஏட்டிக்குப் போட்டி மாமியார்கள்
ஏதிர் தாக்குதலில் மருமகள்கள்
ஈட்டிக்காரனைத் தோற்கடித்தனர் சண்டையில்

பட்டுச்சேலை ஆசையை விட்டு விடு
பாவம் பட்டுப்பூச்சிகளை வாழ விடு
பட்டு மேனியாளுக்கு தேவையில்லை பட்டு
துட்டு அதிகம் முடங்கி விடுகின்றது
கட்டு கைத்தறி சேலை தினம் கட்டு

பொன் நகை மோகம் மலிந்தது
பெண்கள் பலரது மனமும் அடிமையானது
விண்ணை எட்டியது விலை உயர்ந்தது
வஞ்சியர் இனம் கடையில் குவிந்தது
ஆண்கள் இனம் அவதிப்பட்டது

கோடிகளை உதியம் பெறுகிறான் நடிகன்
கோடம்பாக்கத்து கோமகனாய் வலம் வருகிறான்
கொடி கட்டி பொழுதுபோக்குகின்றான் ரசிகன்
கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்கிறான்
தடியால் அடி வாங்கி காயமும் படுகிறான்

தமிழர்களின் கலைகளை பறைசாற்றிடும் சிலை
பார்த்தவர்கள் வியப்பில் ஆகின்றனர் சிலை
இமி அளவும் இல்லை அதில் செயற்கை
இமைக்காமல் ரசித்து அடைந்தனர் இன்பம்
சாமி நம்பாதவரும் வியப்படைந்த நிலை

நடிகையை சேர்த்தனர் அரசியல் கட்சியில்
நல்லவர்கள் விலகி விட்டனர் அரசியலில்
கோடிகள் குவிக்க வாய்ப்பு வழங்கினார்கள்
கட்சியில் மேல்சபை பதவியும் தருவார்கள்
கேடிகள் பல்கிப் பெருகி விட்டார்கள்

ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மான்
பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மான்
இன்பக் காட்சி தமிழ் இலக்கியத்தில் காண்
இணை பிரியாத ஜோடிகளின் காதல்
எண்ணிலடங்காத இனிய உணர்வு தான்.

www.kavimalar.com

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 10, 2010 9:32 am

துளிப்பா : கவிஞர் இரா.ரவி



ஆளுக்கொரு வாகனம் என்ற நிலை மாற்றிடு
குடும்பத்திற்கொரு வாகனம் என்ற நிலையாக்கிடு
நாளுக்கு நாள் வாகன மாசு பெருகுவதைத் தடு
வான மண்டலத்தில் ஓசோன் ஊட்டை மூடு
தோள் கொடுப்போம்,வெப்பமயமாதலை உடன் தடு

கண்ணே மணியே மானே தேனே
கண்டபடி புகழ்வான் மயங்காதே பெண்ணே
கண் சிமிட்டி அழைப்பான் உன்னை
கன்னியே சபலப்பட்டு விடாதே நீ
கண்ணி வைத்து பிடித்திடப் பார்ப்பானே.

ஆற்று நீரில் நடக்குது அரசியல்
தேற்றுவார் இன்றி சோகத்தில் விவசாயிகள்
ஓற்றை போகத்திற்கு தண்ணீர் விவசாயிகள்
ஓற்றை போகத்திற்கு தண்ணீர் திண்டாட்டங்கள்
மூன்று போகம் கண்ட நிலங்கள்
நாற்று நடும் நிலங்கள் வறட்சியில்

ஜான் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை என்று
ஆண் என்ற ஆணவம் வளர்த்தனர் அன்று
பெண் என்றால் மட்டம் என்பது மடத்தனம்
நான் ஆண் என்ற அகந்தை வந்தது இன்று
ஏன்? இந்த வேறுபாடு சமமாக மதித்திடு நன்று.

ஓடி ஓடி உழைத்துத் தேய்ந்த போதும்
தேடித் தேடி நாளும் அலைந்திட்ட போதும்
நாடி உள்ள குடும்பத்தில் என்றும் பஞ்சம்
வாடி வதங்குகின்றான் உழைப்பாளி நாளும்
விடியல் விளையோதோ? ஏன்ற ஏக்கம்

கோடிஸ்வரன் மேலும் கோடிஸ்வரன் ஆகிறான்
ஏழை மேலும் ஏழை ஆகின்றான்
கேடி எல்லாம் அரசியல்வாதி ஆகின்றான்
நாட்டு நடப்பு நெஞ்சு பொறுக்கவில்லை
பாடிப் பயனில்லை புரட்சி வேண்டும் என்கிறேன்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 10, 2010 9:34 am

மாற்றம் வேண்டும் – கவிஞர்.இரா.ரவி




தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Kavi-20_1








ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும்
இன்னல்கள் யாவும் தீர்ந்திட வேண்டும்
பன்னாட்டு நிறுவனங்கள் விரட்டப்பட வேண்டும்
பாட்டாளியின் கரங்கள் உயர்த்தப்பட வேண்டும்
அரசியலில் ஊழல் அகற்றப்பட வேண்டும்
அரசியலில் நேர்மை விதைக்கப்பட வேண்டும்
உழவனின் உழைப்பு போற்றப்பட வேண்டும்
உழவுத் தொழில் மதிக்கப்பட வேண்டும்
ஏற்றத் தாழ்வுகள் தகர்க்கப்பட வேண்டும்
ஏங்கும் சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
பண்பாட்டுச் சீரழிவு தடுக்கப்பட வேண்டும்
பண்பில் சிறந்தோராக மாற்றப்பட வேண்டும்
சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்திட வேண்டும்
சந்தோச வாழ்க்கை பரவலாக்கப்பட வேண்டும்
சாதிமத சண்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்
சகோதர உணர்வுகள் மலர்ந்திட வேண்டும்
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும்
இல்லாதோர் இல்லை என்றாக்கிட வேண்டும்
மூடநம்பிக்கைகள் முற்றாக தடை செய்திட வேண்டும்
மூளையை பகுத்தறிவிற்கு பயன்படுத்திட வேண்டும்
ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியல் வேண்டும்
இனவெறி பிடித்த சிங்களர்கள் திருந்திட வேண்டும்
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக தடுக்கப்பட வேண்டும்
ஏழைகள் மேலும் ஏழைகளாவது நிறுத்தப்பட வேண்டும்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 10, 2010 9:39 am

*கவிஞர் இரா. இரவி
* தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Ravi


வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!

இமயம் செல்லலாம்
இரு கால்களும் இன்றி
தன்னம்பிக்கை இருந்தால்

முடியாதது முடியும்,
நடக்காதது நடக்கும்
தன்னம்பிக்கை இருந்தால்…

தாழ்வு மனப்பான்மையை தகர்த்து
தன்னம்பிக்கையை நிறுத்து
வெற்றி பெற

வெற்றியை
வெறியோடு சாதிக்க
துணை தன்னம்பிக்கை!

வயது தடையல்ல!

எந்த வயதிலும்
புரியலாம் சாதனை.

உடல் ஊனம்
அகற்றிடும்
தன்னம்பிக்கை.

உள்ளத்து ஊனம்
தகர்த்திடும்
தன்னம்பிக்கை

குறைந்த காரணத்தால்
மலிந்தது குற்றங்கள்
தன்னம்பிக்கை

உருவம் இல்லாத உறுப்பு,
உள்ளத்தில் இருப்பதே சிறப்பு
தன்னம்பிக்கை

இழந்தவன் வீழ்வான்
இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை

தென்னைக்குத் தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞர்கள்

மனதில் தீ வேண்டும்,
திட்டமிட வேண்டும்

புரியலாம் சாதனை

கவிஞர் இரா. இரவி
மதுரை www.kavimalar.com

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 10, 2010 9:43 am







தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி Ravi








தோல்வி இல்லை கவிஞர் இரா. இரவி
விரக்தி வேண்டாம் விரட்டி விடு
கவலை வேண்டாம் களைந்து விடு
துக்கம் வேண்டாம் துரத்தி விடு
துயரம் வேண்டாம் துறந்து விடு
மகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இரு
இன்பம் வேண்டும் இன்முகமாய் இரு
புன்னகை வேண்டும் சிரித்தே இரு
தன்னம்பிக்கை வேண்டும் விழித்தே இரு
முயற்சி வேண்டும் வெற்றி பெறு
பயிற்சி வேண்டும் திறமைகள் பெறு
இலட்சியம் வேண்டும் பயணம் தொடரு
உழைப்பு வேண்டும் உறக்கம் குறைத்திரு
நெருப்பு வேண்டும் நெஞ்சில் வைத்திரு
துடிப்பு வேண்டும் நரம்பில் அணிந்திரு
முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில்
முனைப்போடு முயன்றால்
தோல்வி இல்லை உலகில்!
- கவிஞர் இரா. இரவி, மதுரை.http://tamilparks.50webs.com/tamil_padaipugal/ravi_madurai.html

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 10, 2010 10:42 am

மின்தடை ஹைக்கூ - கவிஞர் இரா.இரவி

பாதித்தவர்கள்
சபிக்கிறார்கள்
மின்தடை

வெட்ட வெளிச்சமானது
கையாலாகாத தனம்
மின்தடை

அறிவித்து பாதி
அறிவிக்காமல் மீதி
மின்தடை

தாமஸ் ஆல்வாய் எடிசனை
தினமும் நினைவூட்டுகின்றனர்
மின்தடை

தடையின்றி
கொசுக்கள் ரிங்காரம்
மின்தடை

வந்தது வெறுப்பு
வாக்குப் பெற்றவர் மீது
மின்தடை

ஆளுங்கட்சியை தோற்கடிக்க
ஏதிர்க்கட்சி வேண்டாம்
மின்தடை போதும்

விவசாயம் பாதிப்பு
தொழில்கள் பாதிப்பு
மின்தடை

வல்லரசாவது இருக்கட்டும்
நல்லரசாகுங்கள்
மின்தடை

வெளிநாடுகளில் இல்லை
இந்தத் தொல்லை
மின்தடை


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 10, 2010 10:43 am

புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் - கவிஞர் இரா.இரவி

காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும்
கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும்

மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும்
மனித ஆற்றலைiயே பெருமளவு பண்படுத்திட வேண்டும்

எரிபொருள் சிக்கனம் என்றைக்கும் வேண்டும்
எண்ணெய் வளம் வருங்காலத்திற்கும் வேண்டும்

மரம் வெட்டுதல் தடை செய்திட வேண்டும்
மரம் வளர்த்தல் கடமையாக்கிட வேண்டும்

சுற்றுச்சூழல் மாசு இன்றி காத்திட வேண்டும்
சுகாதாரமான காற்றை சுவாசித்திட வேண்டும்

இயற்கையை இயற்கையாக இருக்க விட வேண்டும்
இயற்கையை இல்லாமலாக்குவதை நிறுத்திட வேண்டும்

செயற்கையை முடிந்தளவு அகற்றிட வேண்டும்
செயல்கள் மனிதனால் நடந்திட வேண்டும்

விவசாய உற்பத்தியை பெருக்கிட வேண்டும்
விசம் கக்கும் தொழில்கள் நிறுத்திட வேண்டும்

இயற்கை உரங்களை பயன்படுத்திட வேண்டும்
இரசாயண உரங்களை தவிர்த்திட வேண்டும்

உடலுக்கும் உலகிற்கும் நலம் மிதிவண்டி
உலகம் செழிக்க குறைப்போம் விசைவண்டி

மகத்தானது மனித ஆற்றல் உணர்ந்திடுவோம்
மாசுக் கட்டுப்பாட்டிற்கு உதவிகள் புரிந்திடுவோம்

வெப்பமயமாதலைத் தடுக்க எல்லோரும் உதவிடுவோம்
வெப்பமாகும் செயல்களை உடன் நிறுத்திடுவோம்

எங்கும் இயந்திரமயமாதலை ஒழித்திட வேண்டும்
எங்கும் மனிதமயமாதலை வளர்த்திட வேண்டும்

நவீனமயமாதல் உடலுக்கு உலகிற்கும் கேடு பயக்கும்
நவீனத்தில் நல்லதை எடுத்து அல்லதை விட்டுவிடுவோம்

எப்போதும் துணிப்பை ஒன்று வைத்திருப்போம்
எங்கும் பிளாஸ்டிக் பை இல்லாது ஒழித்திடுவோம்

மக்காத குப்பையாகி மாசுபடுத்துகின்றது
மண்ணில் நீரை இறங்க விடாமல் தடுக்கின்றது

பாலித்தீன் பயன்பாட்டை உடன் குறைத்திடுவோம்
பாதிப்பு இல்லா உலகம் நாம் அமைத்திடுவோம்

முயன்றால் முடியாது எதுவுமில்லை உலகில்
முயன்றிடுவோம் யாவருமே வெப்பத்தைக் குறைக்க


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 10, 2010 10:46 am

-உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி

கவிஞர் இரா.இரவி

இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி
இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி
எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி
பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி
புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி
இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி
உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி
அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி
இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி
அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி
முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி
மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி
ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி
ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி
காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி
தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக