புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
289 Posts - 45%
heezulia
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
20 Posts - 3%
prajai
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சினிமா பாடல் வரிகள் I_vote_lcapசினிமா பாடல் வரிகள் I_voting_barசினிமா பாடல் வரிகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா பாடல் வரிகள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 5:15 pm

படம் - சிகரம்
பாடியவர் -K.J.Jesuthas
வரிகள் -
இசை - S.P. Balasubramaniam


அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்


அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது


ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 5:16 pm

படம் - மன்னாதி மன்னன்
பாடல் - கண்ணதாசன்
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் டி..எம். செளந்தரராஜன்

அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடைமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 5:17 pm

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா+ ஜானகி
பாடல்: வைரமுத்து

அடி ஆத்தாடி...
அடி ஆத்தாடி... இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி.. ஒரு அலை வந்து
மனசில அடிக்குது அதுதானா..!


உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..!

அடி ஆத்தாடி... இளமனசொன்று
இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி..

மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..!

இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..!
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..!

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ..!
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
இசை கேட்டாயோ...!

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்..!
உண்மை சொல்லு பெண்ணே -என்னை
என்ன செய்ய உத்தேசம்..!

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..!
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன..!

கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே..!
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே..!
சொல் பொன்மானே...!

அடி ஆத்தாடி...
இளமனசொன்று இறக்கை கட்டிப்பறக்குது
சரிதானா..!
அடி அம்மாடி..
ஒரு அலை வந்து மனசில அடிக்குது
அது தானா..!

உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 5:18 pm

படம்: கடலோரக்கவிதைகள்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்


அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி...
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே

விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே....
அடி ஆத்தாடி....

சொந்தம் என்ன சொந்தம் என்று
சொல்லவில்லை அப்போது

பக்கம் வந்து பார்த்துச் சொல்ல
இறக்கை இல்லை இப்போது
காதல் வந்து சேர்ந்த போது..
வார்த்தை வந்து சேரவில்லை
வார்த்தை வந்து சேர்ந்த போது
வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பூசைக்காகப் போன பூவு
பூக்கடைக்கு வாராது...
கற்றுத் தந்த கண்ணே
உன்னைக் குற்றம் சொல்லக் கூடாது...
மனம் தாங்காது..... ஓஓஒ...

அடி அம்மாடி...
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே!
அடி ஆத்தாடி நீ போகும் பாதை
எங்கே பொன்மானே!

கண்ணே! இது ஊமைக்காதல்
காத்திருந்து நொந்தேனே!
தண்டனைக்குப் பின்னே நீயும்
சாட்சி சொல்ல வந்தாயே!
காத்திருந்து ஆனதென்ன
கண்ணீர் வற்றிப் போனதென்ன
தேர் முறிஞ்சு போனபின்னே...
தெய்வம் வந்து லாபமென்ன
என்ன சொல்லி என்ன பெண்ணே!
என்னைச்சுற்றி வேதாந்தம்
பாறாங்கல்லில் முட்டிக்கொண்டு
முட்டைக்கென்ன வேதாந்தம்
இனி பூகம்பம்... ஓஓஓ...


அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே
அடி அம்மாடி...
நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே..

விழி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது

அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே....
அடி ஆத்தாடி....

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 5:19 pm

படம் - பாமா விஜயம்

ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?
சமத்தா இருந்தாக் கொடுப்பேளாம்,

அசடா இருந்தா மறுப்பேளாம்,

ஏண்டி, புதுசாக் கேக்குறே என்னப் பாத்து

அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?

அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா பட்டுப் பொடவைய வாங்கிக்கறா

அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்குறாண்டி - பட்டு

உங்களுக்குத்தான் வாழ்க்கைப்பட்டு

என்னத்தைக் கண்டா பட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல

பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளுங்கிழமையும் போட்டுக்க ஒரு

நகை நட்டுண்டா நேக்கு
எட்டுக்கல்லு பேசரிபோட்டா

எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியிலிருந்தா ஆப்பையிலே வரும்

தெரியாதோடி நோக்கு
எப்போ இருந்தது இப்போ வரதுக்கு

எதுக்கெடுத்தாலும் சாக்கு
ஹுக்கும்

ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
பேசினா என்ன வெப்பேளோ ஒரு குட்டு
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு

என்னத்த செய்வேள் - ஹாங்

சொன்னதச் செய்வேன்
வேறென்ன செய்வேள் -

அடக்கி வப்பேன்
அதுக்கும் மேலே -

ஆங் பல்ல உடப்பேன்

அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 5:19 pm

பாடல்: கண்ணதாசன்
படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியது: T.M.சௌந்தரராஜன் குழுவினர்.

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 5:20 pm

படம் - பலே பாண்டியா
பாடியவர் - ரி.எம்.சௌந்தரராஜன்+P.B.சிறீநீவாஸ்+பி.சுசீலா+ஜமுனா ராணி
வரிகள் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.விஷ்வநாதன்+ரி.ஆர்.ராமமூர்த்தி


அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ!
என்னுயிரும் நீயல்லவோ..!

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ..

உள்ளமெலாமிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையென்னை காயாதே
கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையில் ஏங்காய் வெண்ணிலா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 5:20 pm

படம் : பட்டணத்தில் பூதம்
குரல் : T.M.S., சுசீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை :M.S.V.
நடிகர்கள் : ஜெய்சங்கர்+கே.ஆர்.விஜயா


அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை

இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
இல்லாமல் வேலன் ஏதடி...

ஆ......ஆ......ஆஆஆஆ

அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
சேதி சொல்லடி... என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 5:20 pm

படம்: எதிர் நீச்சல்
பாடியவர்கள்: பி.சுசீலா + TMS
இசை: வி.குமார்
நடிகர்கள்: சௌகார்ஜானகி+ஸ்ரீகாந்த்


சுசீலா:
ஏன்னா, நீங்க சமர்த்தா?
நீங்க அசடா?
சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம்
அசடா இருந்தா பறிப்பேளாம்

TMS:
ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து?

சுசீலா:
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா?
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையா வாங்கிக்கறா
பட்டு பொடவையா வாங்கிக்கறா

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

TMS :
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்கறாண்டி.. பட்டு
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?
பட்டு புடவைக்கு ஏதடி?
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?

சுசீலா:
உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு?
உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக்
கண்டா பட்டு?

TMS:
பட்டு கிட்டு பேரைச் சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரைச் சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு

சுசீலா:
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
எட்டுக் கல்லு பேசரி போட்ட
எடுப்பா இருக்கும் மூக்கு
எட்டுக் கல்லு பேசரி போட்ட
எடுப்பா இருக்கும் மூக்கு

TMS:
சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு?
சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு?

சுசீலா:
எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு உம் உம்
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

TMS:
ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு

சுசீலா:
பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு?

TMS :
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு

சுசீலா:
என்னத்தை செய்வேள்?

TMS:
சொன்னத்தை செய்வேன்

சுசீலா:
வேறென்ன செய்வேள்?

TMS:
அடக்கி வெப்பேன்

சுசீலா:
அதுக்கும் மேலே?

TMS:
ம்ம்ம் பல்லை உடைப்பேன்

சுசீலா:
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

TMS:
பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 5:21 pm

படம் - மகாநதி

அன்பான தாயை விட்டு
எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னைச் சுற்றும்
எண்ணங்கள் எந்நாளும்
ஐயா உன்கால்கள் பட்ட
பூமித்தாயின் மடி
எங்கேயும் ஏதும் இல்லை
ஈடு சொல்லும் படி

காவேரி அலைகள் வந்து
கரையில் உன்னைத் தேடிடும்
காணாமல் வருத்தப் பட்டுத்
தலை குனிந்து ஓடிடும்
ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும்
வேரு விட்ட இடம்
இதை விட்டால் உன்னை வாழ வைப்பது
வேறு எந்த இடம்

தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம்
பறந்து போகுதடி
தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை
மறந்து போகுதடி
இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு
கோலமிட்டதடி
இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும்
காலம் விட்ட வழி

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக