புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
34 Posts - 43%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
32 Posts - 40%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
2 Posts - 3%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
400 Posts - 49%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
27 Posts - 3%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 10 of 17 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:03 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் முப்பது



குரிச்சி போட்டு உட்கார்ந்திருக்கிறான் துரை. கால் மேல் கால் போட்டுக் கொண்டு தொப்பியை எடுத்து மடியில் வைத்தபடி இருக்கிறான் அவன். வாயில் புகைக் குழாய். நல்ல கருப்பாகவும் பழுப்பாகவும் அதிலிருந்து புகை அவ்வப்போது எழுந்து மூக்கில் குத்துகிறது. வயோதிகன். அந்திம காலத்தில் ஊரை விட்டு இங்கே விரட்டியிருக்கிறார்கள். அந்த எரிச்சலோ என்னமோ, எதிர்ப்பட்ட எல்லோரையும் இடுப்புக்குக் கீழ் ரோமமாகப் பார்க்கிறான். அவனுக்குப் பின்னால் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு கருங்காலிக் கட்டை போல ஆறு சிப்பாய்கள் நிற்கிறார்கள். வாசலிலே இவர்கள் எல்லோரும் வந்த குதிரைகள் கட்டி வைத்தபடிக்குச் சாணம் போட்டபடி கொள்ளுத் தின்று கொண்டிருக்கின்றன.

துரைக்கு முன்னால் அவன் குடித்துப் போட்ட இளநீர் நாலைந்து தரையில் உருண்டு கிடக்கிறது. ஒரு குலை பனை நுங்கு. நல்ல செம்பனையாகப் பார்த்துப் பறித்து வரச் சொன்னது. ஒரு ஓரத்தில் அது பாட்டுக்குக் கிடக்கிறது. முகர்ந்து பார்த்து முகத்தைச் சுளித்து அசுத்த வஸ்துவெல்லாம் ஒண்ணும் வேணாம் என்று சொல்லிவிட்டான்.

துரைக்கு முன்னால் பெரிய நாற்காலியில் ராஜா. அது கொஞ்சம் கால் ஆடிக் கொண்டிருக்கிறது. தச்சனை நாலு தடவை முகவாய்க்கட்டையைப் பிடித்துக் காரியஸ்தன் அழைத்தும் வராமல் செட்டிமார் நாட்டில் வீடு கட்ட இழைப்புளியும் ரம்பமுமாகப் போய்விட்டான். ஏற்கனவே பார்த்த வேலைக்குக் காசு இன்னும் கிட்டாத கோபம் அவனுக்கு.

நாற்காலி அசெளகரியம் மாத்திரம் இல்லை ராஜாவுக்கு. இந்தக் வெள்ளைப்பாண்டுக் கிழவன் வரப் போகிறான் என்பதால் குப்பாயம், குஞ்சம் வைத்த சரிகைக் குல்லா, துருக்கி தேச சுல்தான் மாதிரி கால்சட்டை, இடுப்பில் கச்சை, அதில் செருகின வாள், நெற்றியில் சந்தனம், குங்குமம் என்று சித்திரக்காரன் வரைய வசதியாக உட்காருவது போல் வாரிப் போட்டுக் கொண்டு உத்தியோக உடுப்பில் ராஜா உட்கார வேண்டிப் போனது.

அப்புறம் தஞ்சாவூர் சாயபு அத்தர். அது போதாதென்று ராணி சொன்னபடி, ஜவ்வாதைக் குழைத்துக் கம்புக்கூட்டில் எல்லாம் தடவி விட்டிருக்கிறார்கள். அது வேறே உலர்ந்து போய் அரிப்பெடுக்கிறது. எல்லா வாடையும் சேர்ந்து தலை வேதனை. ராத்திரி சரியாக நித்திரை போகாத அயர்ச்சி வேறு.

தண்ணீரில் நனைத்த வெட்டிவேர்த் தட்டிகள் கூடம் முழுக்கத் தொங்க விட்டிருக்கிறது. பங்கா இழுக்கிறவர்கள் தூங்கிவிடாமல் சுறுசுறுப்பாக மேலும் கீழுமாக இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைக்கே காரியஸ்தன் நினைவு படுத்தி அவர்களுக்குச் சம்பளம் மிச்சமில்லாமல் கொடுத்து மேலே ராட்டினத்தையும் எண்ணெய் போட்டு வைத்தாகி விட்டது. என்ன இழுத்தாலும் காற்று என்னமோ வருவேனா என்று அடம் பிடிக்கிறது.

வெள்ளைக்காரன் தொப்பி தரையில் விழுகிறது. இது எத்தனையாவது தடவையாக என்று கணக்கு மறந்து போனது ராஜாவுக்கு.

சலிக்காமல் அதை எடுத்துப் பயபக்தியோடு நீட்டுகிறான் பக்கத்தில் நிற்கும் துபாஷ். அவன் முறுக்காக இருக்கிறான். ஆற்காட்டுத் துருக்கனாகவோ இல்லை முதலியாகவோ இருக்க வேண்டும் என்று ராஜா தீர்மானித்திருக்கிறார்.

அவன் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தால் நொடியில் சொல்லிவிடுவார் அவர். ஆனால் துரை பேசினால் தான் அவன் பேசுவான். அவர் சொல்வதை மொழிபெயர்த்துச் சொல்வது தவிரச் சாப்பிடவும் கொட்டாவி விடவும் தான் வாய் என்று ஆகிப் போயிருக்கிறது போல.

இன்னொரு இளநீரைக் குடித்துப் போட்டு விட்டு சேப்பங்கிழங்கை வேகவைத்துத் தின்பதுபோல் ஏதோ சொன்னார் துரை.

ரொம்ப வெப்பமாக இருக்கிறது என்று மொழிபெயர்த்தான் துபாஷ்.

வெய்யில் ஏறினால் இன்னும் சகிக்க முடியாது போய்விடும் என்றார் ராஜா.

அப்படியாவது துரை மத்தியானத்துக்குள் கச்சேரியை முடித்துக் கிளம்பி விட மாட்டானா என்று நப்பாசை அவருக்கு.

அவன் தலையை ஆட்டியபடி வாயிலிருந்து புகைக் குழாயை எடுத்துப் பின்னால் துப்பாக்கி உயர்த்திப் பிடித்தபடி நின்ற சிப்பாயிடம் கொடுத்தான். ஓரமாகப் போய்ப் புகைக் குழாயிலிருந்து சாம்பலை ராஜாவின் அரண்மனைக் கூடத்து மூலையில் எக்கித் தள்ளிவிட்டு வந்தான் அந்தச் சிப்பாய்.

இதுக்கெல்லாம் சேர்த்து இவனுக்குச் சம்பளம் கொடுப்பார்கள். ராஜாவுக்குக் கொடுக்க மட்டும் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொள்வார்கள். ராஜாவும் புகையிலைக் குழலில் அடைத்துக் கொடுத்தால் சரிக்கு மானியம் கொடுப்பார்களோ என்னமோ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:04 pm

இந்த மனுஷன் புகை ஊதுகிறவன் என்று தெரிந்திருந்தால் பக்கத்து வீட்டு அய்யனிடம் சொல்லி வாங்கி வைத்திருக்கலாம் என்று தோன்றியது ராஜாவுக்கு.

குட்டிச் சாத்தான் வேலை போல் இவர் நினைக்கும்போதே பக்கத்து வீட்டுப் பக்கம் கையைக் காட்டி ஏதோ சொன்னான் துரை. அந்த வீடு எப்படி எரிந்து போனது என்று துபாஷி அதிகாரமாக ராஜாவைப் பார்த்தபடி கேட்டான்.

ராஜா காரியஸ்தனைப் பார்த்தார். அவன் முகத்தில் விநோதமாக ஒரு நிம்மதி தெரிந்தது. கணக்குப் புத்தகத்தைப் பார்த்து அவனைக் கழுவேற்ற வரவில்லை காருண்யம் மிக்க துரை. விசாரணைக்கு வந்திருக்கிறான். அதெல்லாம் ராஜா தீர்மானிக்க வேண்டிய விஷயம். அவனுக்கு ஒண்ணுமில்லை.

ராஜா தான் பதில் சொல்ல வேண்டும். அவர் காரியஸ்தனிடம் இருந்த கோபத்தை துபாஷி மேல் வைத்து விரோதமாகப் பார்த்தார்.

என்னமோ எரிஞ்சு போச்சு. எனக்கு என்ன தெரியும் ? ஊருக்கு நானு ராஜாவா இந்த மனுஷ்யரா ?

துபாஷி உள்ளபடிக்கே பயந்து போனான். தொந்தியும் தொப்பையும் மேலே மறைக்கிற சரிகைக் குப்பாயமுமாக உட்கார்ந்திருப்பவன் தன்னைப் போல் துரைத்தனத்திடம் சம்பளம் வாங்கி ஜீவிக்கிற உத்தியோகஸ்தன் இல்லை. நூறு இருநூறு பட்டி தொட்டி, கிராமம், இந்த மாதிரிப்பட்ட சின்னப் பட்டணம் எல்லாம் மரியாதை செய்கிற ஜமீந்தார். ராஜா என்று ஊரில் சொல்வார்கள். நாளைக்கே இந்தத் துரையோ அல்லது ராஜதானியில் இருக்கப்பட்ட எல்லாத் துரைகளும் துரைசானிகளும் ஊரெல்லாம் ரொம்ப புழுக்கமாக இருக்கிறபடியால் இங்கே இருக்க வேண்டாம் என்று தீர்மானித்துக் கப்பலில் கிளம்பிப் போனால் அப்புறம் துபாஷியும் சிப்பாயும் எல்லாம் இந்த மாதிரி ஜமீந்தார்களைத் தான் அண்டிப் பிழைப்பு நடத்தியாக வேண்டும்.

ராஜா நல்ல நித்திரையில் இருந்தபோது அந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக அவன் பணிவோடு துரைத்தனத்துப் பாஷையில் அறிவித்து அப்படிச் சொன்னதையும் உடனடியாக ராஜாவிடம் சொல்லிப் போட்டான்.

இப்போது பயப்பட வேண்டிய நேரமாய்ப் போனது ராஜாவுக்கு. இவனிடம் அவ்வளவு கெத்தாக, காரியஸ்தன் மேல் இருந்த கோபத்தை எல்லாம் ஏற்றி வார்த்தை விட்டிருக்க வேண்டாம். அவன் ராஜா சொல்வதை எல்லாம் என்ன மாதிரி பாஷை மாற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறானோ.

இந்தா வைத்துக்கொள் என்று ராஜாவுக்குத் தாத்தன் காலத்தில் கொடுத்த சன்னத்தையும் பிடுங்கிக் கொண்டு விரட்டச் சொல்லி துரை உத்தரவு போட்டாலோ அல்லது அப்படிப் போடத்தக்க வண்ணம், வேண்டியவர்களிடம் சொன்னாலோ ராஜா நிலைமை கவலைக்கிடமாகி விடலாம்.

துரை சடாரென்று எழுந்தான். சிப்பாய்கள் துப்பாக்கியை தோளுக்கு இன்னும் மேலே உயர்த்திப் பிடித்து என்ன இழவிற்காகவோ தரையில் தோல் செருப்புக் காலால் ஓங்கி அறைந்தார்கள். அவர்களை வாந்திபேதி கொண்டு போக.

வா. போய்ப் பார்க்கலாம்.

தொப்பியைத் தலையில் பொருத்திக்கொண்டு துரை கிளம்பினான். பின்னாலேயே பரிவாரம் எல்லாம் போக, ராஜாவும் மெல்ல நடந்தார்.

பின்னாலே யாரோ ஓடி வரும் சத்தம். ராணியின் சேடிப்பெண்.

இவளைக் கொஞ்சிக் கொண்டிருக்க இப்போது நேரம் இல்லை. வெள்ளைக்காரன் போயொழியட்டும். அப்புறம் மதிய நேரம் தூக்கம் முடிந்து நாலு நெய்த் தேன்குழல் சாப்பிட்டு விட்டு சுத்த ஜலம் குடித்துவிட்டு அதெல்லாம் வைத்துக் கொள்ளலாம்.

துரை என்ன கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லச் சொன்னாங்க மகாராணியம்மா.

அவள் ராஜாவின் காதில் ரகசியமாகச் சேதி சொல்ல வந்தவள். ராணி வீட்டுக்கு விலக்காக உள்ளே இருக்கிற படியால் நேரடியாகப் பேச முடியாது. இல்லாமல் இருந்தாலும் துரை பார்க்க அவள் வெளியே வந்து நிற்கவோ உட்காரவோ மாட்டாள்.

பின்னால் துடைத்துப் போட்டுவிட்டுக் குளிக்காமல் கொள்ளாமல் திரிகிற இவர்களைப் பார்த்தாலே சகித்துக் கொள்ள முடியாமல் குமட்டல் ஏற்படுவதாக அவள் சொல்லியிருக்கிறாள்.

குளிர் தேசமாச்சா ? ஜலத்தைத் தொட்டாலே கை விரைத்துப் போகும். அப்போ வேறே என்ன செய்வார்கள் ?

குமட்டினாலும், காசு கொடுக்கிற துரைத்தனம் என்பதால் அதை எல்லாம் சகித்துக் கொள்ள வேணுமென்று ராஜா அவளுக்குச் சொல்லிச் சமாதானப்படுத்தியது நேற்று முன்னிரவில் தான். அப்படிச் சகித்துக் கொள்ளாவிட்டால் சொப்பனத்தில் கண்டது போல் பரங்கி தேசத்தில் போய்க் கையேந்திக்கொண்டிருக்க வேண்டி வரும்.

அங்கே போறதுக்கு யாரு உனக்குக் கப்பல் கூலி கொடுப்பாங்க ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:05 pm

புஸ்தி மீசைக் கிழவன் வகையறாக்கள் கூடவே நடக்க ஆரம்பித்திருந்தார்கள் இடக்கலாக வார்த்தை சொன்னாலும், சதையும் உடம்புமாக இல்லாம போனாலும், நம்ம சாதி சனங்கள் என்று பத்திருவது பேர் கூட வருகிற தெம்பு ராஜா நடையில் தெரிந்தது.

இடிந்து விழுந்திருந்த சுவரோடு நின்ற அந்த வீட்டை இப்போதுதான் பக்கத்தில் வைத்துப் பார்த்தார் ராஜா. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் துரை மூக்கை உறிஞ்சியபடிக்கு.

ராஜா அவனோடு நடந்தபோது இங்கே தான் எங்கேயோ அந்தப் பழுக்காத்தட்டுக்களைச் சுழல விட்டுப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்ற நினைவு வந்தது.

எல்லாம் எரிஞ்சு அடங்கியாச்சு.

துரை சொன்னது மொழிபெயர்க்காமலேயே புரிந்தது அவருக்கு.

கருவாளித்து நின்ற சுவர்ப் பக்கம் நின்றார் ஒரு வினாடி துரை. துபாஷியிடம் என்னமோ சொன்னார். அவன் அதை மொழிபெயர்ப்பான் என்று ராஜா எதிர்பார்க்க, துபாஷியோ பணிவாகத் தலையாட்டிக் கொண்டான்.

அவன் பக்கத்தில் இருந்த சிப்பாயிடம் சொல்ல, அவனும் துரிதமாக வெளியே ஓடினான்.

புகார் வந்திருக்கிறது. புகையிலை வியாபாரி சுப்பிரமணிய அய்யர் சென்னை ராஜதானிப் பிரபுவான பெரிய துரைக்குக் கடுதாசி அனுப்பியிருக்கிறார். உயிரும் உடமையும் ஆயிரக் கணக்கில் சொத்தும் நாசமானதாக. அதை விசாரிக்கத் தான் இந்தத் துரை வந்திருக்கிறார்.

துபாஷி மெதுவாகச் சொல்ல ராஜா பயத்தோடு பக்கத்தில் நின்ற புஸ்தி மீசைக் கிழவனைப் பார்த்தார்.

வீடு முழுக்க மிதந்து கொண்டு சாம்பல் வாசனையை அனுபவித்தபடி நீ ஏதொண்ணுக்கும் பயப்படாதே என்று முன்னோர்கள் ராஜாவைச் சமாதானப்படுத்தினார்கள். இந்த அமாவாசைக்காவது சாராயம் ஊத்திடு எங்களுக்கு. எல்லாம் சரியாயிடும் என்றார்கள் அவர்கள்.

எனக்கும் என்று பாப்பாத்தியம்மாள் குரலும் கேட்டது.

ராஜா சரியென்று தலையை ஆட்ட வெள்ளைக்காரன் குழப்பத்தோடு பார்த்தான்.

சுப்பிரமணிய அய்யர் தளர்ந்து போய் நடந்து வந்தார். கூடவே ஆணும் பெண்ணுமாக ஒரு கூட்டம்.

மற்ற எல்லோரும் வாசலில் நிற்க, அவரும் கூடவே அவர் மகனும் உள்ளே நுழைந்ததை ராஜா கவனித்தார். மரியாதைக்குக்கூடத் தானும் ராணியும் துக்கம் விசாரிக்க அவர்கள் வீட்டுக்குப் போகாதது நினைவு வந்தது அவருக்கு.

வீடு எரிந்துபோன இந்த மனுஷன் எங்கே தங்கியிருக்கிறானோ ? குடக்கூலிக்கு வீடு எடுத்திருப்பானாக இருக்கும்.

எதானாலும் அரசூர் என்ன சென்னைப் பட்டணமா சளேர் என்று விரிந்து பரந்து கிடக்க ? நாலு தெருவில் எந்தத் தெருவில் ஜாகை என்று தேடிவந்து சொல்லும்படி காரியஸ்தனை ஏவினால் நொடியில் தகவல் வந்திருக்கும்.

சுப்பிரமணிய அய்யர் எல்லோருக்கும் மெளனமாக நமஸ்காரம் சொன்னார்.முகத்தில் வெள்ளைப் பஞ்சை ஒட்ட வைத்ததுபோல் தாடி மண்டிக் கிடந்தது. ஊரெல்லாம் புகையிலை விற்றுக் காசு சேர்த்து இரண்டு அடுக்கு வீடு கட்டினவராகத் தெரியவில்லை அவர். ராஜாவுக்கு ஏனோ பிரேதம் சுமந்து போகிற பிராமணர்கள் நினைவு வந்தார்கள்.

துரை அய்யரிடம் ஆறுதல் வார்த்தை சொல்லி, அதைத் துபாஷி மொழிபெயர்க்கும் முன் தடுத்து நிறுத்தினான். அவருக்குப் புரிந்திருக்கும் என்றான் வெற்றுப் புகைக்குழாயைக் கடித்தபடி.

அவன் சொன்னதாக இப்படிப் புஸ்தி மீசையான் பாப்பாத்தியம்மாளிடம் விவரித்தது பின்னாலிருந்து கேட்டது ராஜாவுக்கு. ஆகக்கூடி இவனுக்கும் துரைத்தன பாஷை அர்த்தமாகிக் கொண்டிருக்கிறதா ? போகட்டும்.

இவன் அந்தப் பெண்பிள்ளையிடம் சில்மிஷம் செய்யாமலிருக்க வேண்டுமே என்று நினைத்தார் ராஜா. இருக்கிற தொந்தரவு போதாதென்று அப்புறம் அது வேறு அக்கப்போராகி விடும். அதுக்கும் சேர்த்து யந்திரம் செய்ய ஜோசியக்கார அய்யர் இருக்கப்பட்ட ஆஸ்தி எல்லாம் கேட்டு வாங்கிவிடுவார்.

எல்லாவற்றிலிருந்தும் பிய்த்துக் கொண்டு பரங்கி தேசத்துக்குப் பறந்து போய் இறக்கிவிட ஏதாவது யந்திரம் அமைத்துத் தரமுடியுமா என்று ஜோசியரை விசாரிக்க வேணும்.

எதுக்கு ? அங்கே போய்த் தனியாப் பிச்சை எடுக்கவா ?

துரை கேட்டதுபோல் இருந்தது. இந்த மனுஷருக்கு எவ்வளவு நஷ்டம் என்று உங்களுக்குத் தெரியுமா என்று அவன் கேட்டதை மொழிபெயர்த்தான் துபாஷி.

நிறைய என்று கேள்விப்பட்டேன். எனக்கு அதிலே மிகுந்த வருத்தம் உண்டாச்சுது.

ராஜா உள்ளபடிக்கே வருத்தத்தோடு அய்யரைப் பார்த்துச் சொன்னார். அவர் சும்மா இருக்க, சடாரென்று கூட வந்த அய்யரின் பிள்ளை உரக்கக் கத்தினான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:05 pm

தீ வச்சதே இந்த மனுஷன் தான்.

ராஜாவுக்கு முதுகுத் தண்டு சிலிர்த்துப் போனது.

நானா ? நானா தீ வைச்சேன் உங்க வீட்டுக்கு ? என்ன சாமி சொல்றீங்க ? உங்களுக்குப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கு. நெசம்தான். அதுனாலே பக்கத்திலே யாரு வந்தாலும் பழியைப் போட்டுடுவீங்களா ?

ராஜா குரல் தழதழத்தது. இப்போது வீரத்தைக் காட்டிப் பேச வேண்டும். என்னமோ மனம் அதற்கு இடங்கொடுக்கவில்லை.

அய்யர் வீடு எரிந்து போனதற்கும் அவர் வீட்டில் இருந்ததாகச் சொல்லப்படும் புத்தி சுவாதீனமில்லாத மகன் உயிரோடு சாம்பலாகப் போனதற்கும் தானும் ஏதோவொரு விதத்தில் காரணம் என்று அவருக்குத் தெரியும்.

ராணி என்ன செய்தாள் என்று முன்னோர்களும் சரியாகச் சொல்லவில்லை. அவர்கள் கூடவே வரும் பாப்பாத்தியம்மாளையும் சொல்லவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனாலும் என்னமோ ராஜா முதுகுக்குப் பின் நடந்துதான் போயிருக்கிறது.

சும்மா தத்துப்பித்துன்னு உளறாதேடா சங்கரா என்றார் அய்யர். இது நமக்குத் தொழில்லே விரோதம் கொண்டாடறவா யாரோ செஞ்ச சதிவேலை. அதான் விசாரிக்கச் சொல்லி இவாளோட எஜமானுக்கு மனுப் போட்டேன்.

ராஜாவுக்கு ஆசுவாசமாக இருந்தது. ஐயருடைய விரல் தன்னைக் குற்றம் சாட்டி நீளவில்லை என்பது பெரிய உபகாரமாகப் பட்டது.

சாமி எங்கிட்டே சொல்ல்லியிருந்தீங்கன்னா நொடியிலே களவாணி, மொள்ளமாரிப் பயலுக எங்கே இருந்தாலும் பிடிச்சுவரச் சொல்லி நிறுத்தியிருப்பேனே ?

அவர் கேட்டபோது, கிழித்தீர் நீர். தீ வைக்க ஆளை ஏவி விட்டுட்டு இந்தப் பக்கம் இப்படி ஒரு பாசாங்கா என்று சங்கரன் திரும்ப இரைந்தான்.

இந்த வாலிபனை உடனே வெளியே கொண்டுவிட்டு வாருங்கள் என்றான் துரை. அவனால் இரைச்சலில் காலம் தள்ள முடியாது. உடம்பு தளர்ந்து கொண்டு வருகிறது என்பதுபோல் முகத்தை தீனமாக வைத்துக் கொண்டு புகையிலைக் குழாயை நிரப்பித்தரச் சிப்பாயிடம் நீட்டினான்.

வரலட்சுமி முகம் வரைந்த சுவர் பக்கம் சிப்பாய் திரும்பி நின்று புகையிலையைக் குத்திக் குத்தி அந்தக் குழாயில் அடைத்தபடி இருந்தான். மற்ற சிப்பாய்கள் சங்கரனை மெல்லத் தாங்கிப் பிடித்து வெளியே அழைத்துப் போகும்போது அவர்கள் ராஜாவைப் பார்த்த பார்வை சரியில்லை. இந்த ஆள்தான் எல்லாம் செய்திருப்பான் என்று அய்யமார்ப்பிள்ளையிடம் அவர்கள் பார்வையிலேயே சொன்னது போல் இருந்தது.

குடிபடைகளைக் காத்து சம்ரட்சிக்க வேண்டியது உம்ம கடமை. ஆதலினால், இந்த மனுஷ்யர் இழந்ததற்கு துரைத்தனம் நஷ்ட ஈடு ஏதும் தர முடியாது. நீர் தான் ஏதாவது சகாயம் செய்து தர வேண்டும் இவருக்கு.

துரை அறிவித்தபோது ராஜா அதிர்ந்து போனார். என்ன வகையில் இந்த அய்யனைச் சகாயிப்பது என்று அவருக்குப் புரியவில்லை. நாற்றப் புகையிலை விற்று இவன் சேர்த்து வைத்திருந்த அல்லது இன்னமும் வைத்திருக்கும் பணம் ஜமீந்தார் நாலு தலைமுறைக்குக் குருவி போல் சேர்த்தும் சம்பாதிக்க முடியாத அளவு இருக்கும் என்றான் பக்கத்தில் நின்ற முப்பாட்டன் ஒருத்தன்.

வாசலில் புகையிலைக்கடை அய்யனின் மகன் இரைந்து கொண்டிருந்தான். அதை மீறிப் பழுக்காத்தட்டு சங்கீதம் அச்சு அசலாக அங்கே இருந்து மிதந்து வந்தது. ஆண் குரலிலும் பெண்குரலிலுமாக இருந்தது அது.

வாசலில் ஒரு பிராமணக் கிழவி தூணில் தலை சாய்த்து உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தாள்.

ஜோசியர் அய்யங்கார் சச்சதுரமாக ஒரு பெரிய தகட்டைத் தலையில் சுமந்தபடி அரண்மனைக்குள் நுழைந்து கொண்டிருந்தது ராஜா கண்ணில் பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:07 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் முப்பத்தொன்று



பாம்பும் சாரையும். அப்புறம் இன்னொரு பாம்பு. கூட இன்னும் ரெண்டு நீளமாக. ஒரு மலைப்பாம்பு. அதைக் குறுக்கே வெட்டிக் கொண்டு இன்னொரு சின்னப் பாம்பு. அப்புறம் ரெண்டு. எண்ணி மாளவில்லை. அத்தனை தெருக்கள். அகலமான வீதிகள். குதிரைச் சாணமும் மாட்டுச் சாணமும், பலாப்பழமும், வறுத்த தானியமும், மல்லிகைப் பூவும், வியர்வையும், ஒச்ச நெடியும், மனுஷ மூத்திரமுமாக மணக்கிற தெருக்கள். குறுக்குச் சந்துகள். அதிலெல்லாம் புகுந்து புறப்படுகிற மனுஷர்கள். குதிரை வண்டிகள். துரைகள் பவிஷாக ஏறிப் போகும் ரெட்டைக் குதிரை சாரட்டுகள். துரைசானிகள் குடை பிடித்து நடக்கிற வீதிகள். துரைகளுக்கும் துரைசானிகளுக்கும் சேவகம் செய்து குடும்பம் நடத்திக் குழந்தை குட்டி பெற்று அவர்களை அடுத்த தலைமுறை துரைமாருக்குத் தெண்டனிட்டு ஊழியம் செய்யப் பெருமையோடு அனுப்புகிற ஜனங்கள் ஜீவிக்கிற கருப்புப் பட்டணம். ராத்திரியோ, பகலோ தமிழும் தெலுங்குமாக சதா சத்தமாக ஒலிக்கிற ஜாகைகள், முச்சந்தி, சாப்பாட்டுக் கடைகள். அப்புறம் இந்தச் சமுத்திரக் கரை.

சங்கரனுக்கு ஒண்ணொண்ணும் ஆச்சரியமாக இருந்தது. கப்பல் ஏறிப் போய் வந்த யாழ்ப்பாணமும், அரசூரிலிருந்து அவ்வளவொண்ணும் அதிக தூரம் என்று இல்லாத மதுரைப் பட்டணமும் எல்லாம் சின்னஞ்சிறு கிராமம், குக்கிராமம் இந்தச் சென்னப் பட்டணத்தோடு பக்கத்தில் வைத்துப் பார்த்தால்.

ஓவென்று இரைச்சலிட்டு அலையடித்துக் கொண்டிருக்கிற கடல் அதை ஒட்டி விரிந்த இந்த பிரம்மாண்டமான மணல் வெளியால் இன்னும் பெரிதாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு நாள் சாவகாசமாகப் பகவதிக் குட்டியைக் கூட்டி வந்து காட்ட வேண்டும். காயலையும் வள்ளத்தையும் தவிர வேறெதுவும் பெரியதாகப் பார்த்திருக்கப் போவதில்லை அந்தப் பதினாறு மட்டும் திகைந்த சிறு பெண்.

இந்தக் கடற்கரையில் கால் மணலில் புதையப் புதைய அவளோடு கூட நடக்க வேண்டும். கால் வலித்துக் களைத்துப் போகும்போது உட்கார்ந்து அவளைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும். அலைக்கு மேலே அவள் குரல் எழும்பி வரும். தண்ணீர் முகத்தில் தெறிக்கும். உடுப்பை சுவாதீனமாக நனைத்துச் சிரித்துக் கொண்டே திரும்பி ஓடும். போயிடாதே. இதோ நொடியிலே வந்துடறேன் என்று அது இரைகிறது எட்டு ஊருக்குக் கேட்கும். பகவதிக் குட்டி அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். கொட்டகுடித் தாசி போல் அபிநயம் பிடிப்பியாடி பொண்ணே ?

என்ன அய்யர்சாமி சமுத்திரக்கரையை வளைச்சுப்போட்டுக் கல்லுக் கட்டடம் உசரமா எலுப்பி இந்தாண்ட ஒண்ணுலே மூக்குத் தூள் அன்னாண்ட அடுத்ததிலே புகையிலைன்னு வித்துச் சாரட்டுலே ஓடற சொப்பனமா ?

கருத்த ராவுத்தன் கடகடவென்று சிரித்தான்.

சுப்பிரமணிய அய்யரின் தொழில் முறை சகபாடி பெங்களூர்க்காரன் பிச்சை ராவுத்தரின் மகன் அவன்.

கருத்தா, என்னை அய்யர் சாமின்னு கூப்பிட வேணாம்னு எம்புட்டுத் தடவை சொல்லியிருக்கேன். கேக்கவே மாட்டேன்கிறியே. சங்கரான்னு கூப்புடு. சங்கடமா இருந்தா சங்கரய்யரேன்னு கூப்பிடு.

ஜாக்கிரதையாக இடைவெளி விட்டு சமுத்திரக் கரையில் கூட உட்கார்ந்திருந்த ராவுத்தனைப் பார்த்துச் சொன்னான் சங்கரன்.

சாமியைச் சாமின்னு கூப்பிடாம அரே தோஸ்த்னு கூப்பிடச் சொல்றீஹளா அய்யர் சாமிகளே ?

கருத்தான் இன்னும் பலமாகச் சிரித்தான். அவன் எதைப் பேசினாலும் முன்பாரம் பின்பாரமாக மனதை விட்டுச் சிரிக்கிறது பழக்கமாகியிருந்தது சங்கரனுக்கு இந்த மூன்று நாளில்.

சுப்பிரமணிய அய்யர் தான் சங்கரனைப் பட்டணத்துக்கு அனுப்பி வைத்தது.

இப்படி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மோட்டு வளையைப் பாத்துண்டு கிடப்பே. போனவன் போய்ச் சேர்ந்தாச்சு. இருக்கப்பட்டவா ஏந்திந்து அவாவாளுக்கு விதிக்கப்பட்டதைப் பார்க்கப் போகணுமா இல்லியா ? கடைக்கும் போக மாட்டேங்கிறே. ஆத்துலேயும் சகஜமா இருக்க மாட்டேங்கிறே. பழையாத்து வாசல்லே போய்ப் பிரமை பிடிச்ச மாதிரி நிக்கறேன்னு ஐயணை இதுவரைக்கும் நாலு தடவை கூட்டிண்டு வந்து விட்டுட்டான். இதொண்ணு சரிப்படாது. நீ கொஞ்ச நாள் பட்டணக்கரைக்குப் போய்ச் சமுத்திரக் காத்து வாங்கிண்டு வா.

நான் எதுக்கு இப்பப் பட்டணத்துக்குப் போகணும் ? சங்கரன் கேட்டான்.

பிச்சை ராவுத்தன் பிள்ளை கருத்தான். அங்கே எதோ எஸ்பி. என்னமோ வாயிலே நுழையாத பேரு இருக்கப்பட்ட இடம். வெள்ளக்காரன் அப்படி வச்சுத் தொலச்சுட்டான். அங்கே நாசீகா சூரணம் கடை திறந்திருக்கானாம் கருத்தான் ராவுத்தன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:08 pm

அது எஸ்பி இல்லே எஸ்பிளனேட்.

சுப்பம்மா அத்தை ஸ்பஷ்டமாகச் சொன்னாள்.

பரதேவதைகள்ளாம் வந்துட்டா பாரு உன்னை ஆசீர்வாதம் பண்ண.

சுப்பிரமணிய அய்யர் புளகாங்கிதம் அடைந்து தலைக்கு மேலே இரண்டு கரத்தையும் கூப்பி நமஸ்கரித்தார்.

வீட்டுக்கு உள்ளே முனகல் சத்தம். கல்யாணி அம்மாள் தான். படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். மதுரையில் தாணுப்பிள்ளை ஜாகையிலிருந்து அவளைப் படுத்தபடிக்கே மாட்டு வண்டியில் கொண்டு வந்து இங்கே கிடத்தியது.

நினைத்து நினைத்து அழுகிறாள்.

சாமா, வந்து பால் குடிடா. மாருலே பால் கட்டிண்டு இருக்கு. சாமா, நீயும் உன் பொண்டாட்டியுமா பெரியவா எல்லாரையும் நமஸ்காரம் பண்ணுங்கோ. ஊஞ்சல்லே உக்காருடா. பால் பழம் கொடுங்கோ சுப்பம்மா அத்தை தம்பதிகளுக்கு. சாந்தி முகூர்த்தத்துக்கு இலவம்பஞ்சு தலகாணி பஞ்சடைக்கக் கொடுத்தாச்சா ?

அவ்வப்போது நினைவு திரும்ப வரும்போது உரக்கச் சத்தம் போடுகிறாள். மயங்கித் தரையில் சாய்கிறாள். அப்படிச் சாய்வதற்குள் சொல்ல வேண்டியதைப் சொல்ல வேண்டியே ஆக நிர்ப்பந்தம் ஏதோ இருப்பதுபோல் அவசர அவசரமாக அவள் பேச்சு இருக்கிறது.

சுப்பம்மாளை வீட்டோடு இருந்து அவளுக்கு சிஷ்ருசை செய்யும்படி சுப்பிரமணிய அய்யர் காலில் விழுந்து கும்பிடாத குறையாகக் கேட்டுக் கொண்டபோது அவளால் முடியாது என்று சொல்ல முடியவில்லை.

அவளுக்கும் சாமா இப்படி அகாலமாகப் போய்ச் சேர்ந்ததில் துக்கம்தான். அந்தத் துர்மரணப் பெண்டு சுசீந்திரம் கோயிலில் வைத்து அழுது தொழுது கூப்பிட்டது எல்லாம் மனதில் அப்படியே உளியால் வடித்தெடுத்த மாதிரிப் பதிந்து கிடக்கிறது. அவள் என்ன செய்ய முடியும் ? கூடவே வரும் மூத்த குடிப் பெண்டுகள் தான் என்ன செய்ய முடியும் ?

அவர்கள் நடந்து போனதைச் சாங்கோபாங்கமாக விஸ்தாரமாக எடுத்துச் சொல்ல முடியும். நல்லதாக நாலு வார்த்தை மங்களகரமாகப் பேச முடியும். பேசினார்கள். சங்கரன் பட்டணம் போய்க் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வந்தால் அவனுடைய தேக ஆரோக்கியம் விருத்தியாகும் என்றும், வியாபாரம் செழிப்பாக வளரும் என்றும். அகத்தில் திரும்ப சுபிட்சம் ஏற்படும் என்றும்.

மூத்த குடிப் பெண்டுகள் சங்கரன் கல்யாணம் நிச்சயித்தபடிக்கு நடக்க வேண்டும் என்றும் சொல்லிப் போனார்கள்.

சுப்பிரமணிய அய்யரின் அத்தான் சுந்தர கனபாடிகள் அதை சாமாவின் வருஷாப்திகத்துக்கு அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்றபோது, நீ உன் தெவச மந்திரத்தையும் விஷ்ணு இலையிலே எள்ளுருண்டையையும் பாகற்காய்ப் பிட்லையையும் பாத்துண்டு போடா கொழந்தே மாட்டுக்கண்ணு சுந்தரம் என்று சுப்பம்மாள் சத்தம் போட்டாள். அது மூத்த குடிப் பெண்டுகள் அவள் வாயில் வந்து சொன்னதா அவளே சொன்னதா என்று சுப்பிரமணிய அய்யருக்குத் தெரியவில்லை.

அந்தத் துர்மரணப் பெண்டு தன்னை அதற்கப்புறம் தொடரவில்லை என்பதில் சுப்பம்மாளுக்கு நிம்மதி. ஜோசியர் அண்ணாசாமி அய்யங்காரின் யந்திரத்தையும் கட்டிச் சுமந்து கொண்டு வளையவர வேண்டியதில்லை இப்போதெல்லாம்.

மாமி, தேவதைகளைப் பட்டினி போட்டுடாதீங்கோ என்று அவர் கேட்டுக் கொண்டபடி தினசரி பால் அபிஷேகமும் நைவேத்தியமும் மாத்திரம் செய்து கொண்டிருந்தாள் அந்த் யந்திரத்துக்கு. ராத்திரி வேளைகளில் சில நேரம் யந்திரம் வைத்த சம்புடத்தில் இருந்து தேவதைகள் மொணமொணவென்று சண்டை போட்டுக் கொள்வது கேட்கும். அப்புறம் சமாதானமாகி இழைவதும், ஒன்றாகச் சேர்ந்து பாடுவதும் கூடக் கேட்பதுண்டு. அந்தச் சத்தத்திலேயே சுப்பம்மாள் அயர்ந்து நித்திரை போய்விடுவாள்.

தேவதைகள் ராத்திரி சண்டை பிடிச்சுக்கறது பாவமா இருக்கு. இத்தணூண்டு எடத்துலே அதுவும் புழுக்கமான ராத்திரியிலே ஒத்தரோட ஒருத்தர் தேகம் இடிச்சுக்கறமாதிரி ஒண்டிண்டு இருக்கறது கஷ்டமான விஷயமில்லியா ?

அவள் ஜோசியரைக் கேட்டாள்.

லோக க்ஷேமத்துக்காக ஜமீந்தான் பங்களாத் தோட்டத்துலே பெரிசா யந்திரம் ஒண்ணு ஸ்தாபிச்சிருக்கேன். அதிலேயே இந்தத் தேவதைகளையும் ஏத்திடறேன். கொஞ்சம் சிக்கலான க்ஷேத்ர கணிதம் எல்லாம் போட வேண்டியிருக்கு அதைச் செய்யறதுக்கு. நேரமே கெடைக்க மாட்டேங்கறது. யாருக்காவது எருமைமாட்டை தேடச் சோழி உருட்டவும், ருது ஜாதகம் கணிக்கவுமே சரியா இருக்கு. கொஞ்சம் பொறுத்துக்குங்கோ மாமி.

ஜோசியர் கேட்டுக் கொண்டதை அவள் அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டிருந்தாலும் அவர் இன்னும் எருமை மாடு பிடிக்கத்தான் சோழி உருட்டிக் கொண்டிருக்கிறார்.

சோழி உருட்டி அவரும் சங்கரனுக்கு ஸ்தல மாற்றம் அவசியமானதென்று சொன்னபோது சுப்பிரமணிய அய்யர் அவனைச் சென்னைப் பட்டணத்துக்கு அனுப்பிவைக்கத் தீர்மானித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:09 pm

பிச்சை ராவுத்தன் வேறு நீளமான பழுப்புக் காகிதத்தில் கருப்பு மசியால் மடித்து மடித்து லிகிதம் எழுதி அனுப்பியிருந்தான் அவருக்கு.

சாமிநாதன் அகாலமாகப் போனதற்கு வருத்தம் சொல்லி அவன் நல்ல கதிக்குப் போய்ச் சேர துவா செய்து கொள்வதாக எழுதியிருந்தான். துவா என்றால் என்ன என்று சுப்பிரமணிய அய்யருக்குப் புரியாவிட்டாலும் அடுத்து எழுதியிருந்தது ஸ்பஷ்டமாகப் புரிந்தது.

என் மூத்த மகன் கருத்தானுக்குப் பட்டணத்தில் தனிக்கடை வைத்துக் கொடுத்திருக்கிறேன். அவனுக்கு வியாபார நெளிவு சுளிவு புரிந்தாலும் கணக்கு வழக்கில் சாமர்த்தியம் போதாது. பட்டணத்திலே நிறைய அய்யமாரும், முதலிகளும் மாசம் நாலு ரூபாய் துரைத்தனத்துப் பணம் சம்பளம் வாங்கிக் கொண்டு கணக்கெழுதுகிற உத்தியோகத்துக்குக் கிடைப்பார்கள். உங்கள் புத்திரன் ஒரு பத்து நாள் பட்டணத்துக்கு வந்தால், மூக்குத்தூள் வியாபாரத்தைத் தெற்கில் விஸ்தரிப்பது பற்றித் பேசித் தீர்மானித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். அப்படியே மதராஸிலே கருத்தானுக்குக் கணக்கனைப் பிடித்துப்போடவும் தக்கவர்களைப் பரீட்சித்து உத்யோகத்தில் ஏற்றலாம். இங்கே பீவியின் தங்கைக்கு வைசூரி கண்டிருப்பதால் நான் இப்போது பிரயாணம் வைக்கமுடியாத ஸ்திதியில் இருக்கிறேன். தேவரீர் மன்னிக்க வேணும்.

சங்கரனிடம் அந்த லிகிதத்தையும் கூடவே ஐநூறு ரூபாய் பணமும், பினாங்கு சோமசுந்தரம் செட்டி வகையறாக்கள் அவர்களுடைய சென்னைப்பட்டணம் தம்புச்செட்டித் தெரு லேவாதேவிக் கடை மேல் எழுதிய தரிசன உண்டியல்களாக ஆயிரம் ரூபாயும் கொடுத்து அனுப்பியிருந்தார் சுப்பிரமணிய அய்யர்.

நொங்கம்பாக்கத்துலே ராமநாதனோட, அதாண்டா உன்னோட ஒண்ணு விட்ட சித்தப்பன் கச்சேரி ராமநாதய்யனோட பிள்ளை வைத்தியநாதன் இருக்கான். கோட்டையிலே உத்தியோகம். பிரக்யாதியோட கொடி கட்டிப் பறக்கறான். அவாத்துலே தங்கி இருந்துக்கோ. ராமநாதனும் அவன் பிள்ளைக்குச் சேதி சொல்லி விட்டிருக்கான் நீ வருவேன்னு.

ஆக, சங்கரன் கிளம்பத் தீர்மானிக்கும் முன்னமேயே சதுரம் வரைந்து மஞ்சாடி எடுத்து வைத்தாகி விட்டது. அவன் தாயக்கட்டையை உருட்ட வேண்டியது தான் பாக்கி.

வந்ததிலிருந்து அதுதான் செய்து கொண்டிருக்கிறான்.

கருத்தா, அந்தத் தெலுங்கு பிராமணன் எப்போ வரேன்னு சொன்னான் ?

யாரு ? சீனிவாச ராவோ பகலோ அந்த மனுஷனா ?

ஆமாமா, அவனே தான். நேத்துக்கு நாம பாத்ததிலே அவன் தான் தீட்சண்யமா இருந்தான்.

ஆனாலும் ஆறு ரூபா மாசாமாசம் கேக்கறானே அய்யர்சாமி ? தெலுங்கனுக்குக் கொடுத்து, தொரைக்கு வரி கட்டி, கடைக்குக் குடக்கூலி கொடுத்து அப்புறம் கண்டுமுதலா என்ன மிஞ்சும் ?

அட, ஆறு ரூபா அவன் கேட்டா நீ கொடுக்கவா போறே கருத்தா ? நாளைக்கு வரட்டும், நான் பேசி முடிக்கறேன். நீ சும்மா வாய் பாத்துண்டு இரு அது போதும்.

அய்யர்சாமியே அப்படியே மாசாமாசம் தெலுங்கனுக்குச் சம்பளத்தையும் கொடுத்துட்டா உபகாரமா இருக்கும்.

கருத்த ராவுத்தன் வலக்கையை நெற்றிக்குக் கொண்டு போய் சலாம் வைத்தபடி கண் அடித்தான்.

நீ ஆனாலும் புத்திசாலித் துருக்கண்டா கருத்தா.

அப்ப, சாது நாயக்கனாப் பாத்து ஆள் அமர்த்திக்கட்டா ?

கருத்தான் கடகடவென்று சிரித்தான் எப்பவும் போல்.

அந்த ராவ் எங்கேயோ பக்கத்துலே கிராமத்திலே இருக்கறதாச் சொன்னானே. நித்தியப்படிக்கு அங்கேயிருந்து விடிகாலையிலே கிளம்பி வந்து ராத்திரி கடையை எடுத்து வைக்கறது மட்டும் இருக்க முடியுமான்னு விஜாரிக்கணும்.

அய்யர்சாமி. அவன் பக்கத்துலே கிண்டி கிராமத்துலே தான் இருக்கான். அங்கேயிருந்து ரெண்டு ஜட்கா வண்டி மாறினா எசுபிளனேடு தான்.

கிண்டியோ, பிருஷ்டமோ போ. வண்டியிலே வரானோ. கால் நடையா வரானோ. வந்தாச் சரி. அதுவும் நீ கொடுக்கப் போற மூணே முக்கால் துட்டுக்கு.

முக்கால் அவன் இல்லே. நாந்தான்.

கருத்த ராவுத்தன் தன் இடுப்புக்குக் கீழே காட்டிக் கொண்டு கடல் இரைச்சலை விட அதிகமாகச் சத்தம் போட்டுச் சிரித்தான்.

அது பாட்டுக்கு தேமேன்னு இருக்கு. ஏண்டா அதைப் போய் நறுக்கணும் ?

அதை எங்க வாப்பா கிட்டே இல்லே கேக்கணும் அய்யர் சாமி ?

சங்கரன் அவனோடு கூடச் சேர்ந்து சிரித்தான். மனம் லேசாகப் போயிருந்தது அவனுக்கு.

கருத்தா, நாளைக்காவது தம்புச் செட்டி தெருவிலே செட்டிமார் கடைக்குப் போய் தரிசன உண்டியலை மாத்தணும்டா. இல்லேன்னா நீ மூக்குத்தூள் தரமாட்டே.

நல்லா மாத்தலாம் அய்யர் சாமி. நீங்க மாத்தினாலும் மாத்தாட்டாலும் ராவுத்தன் பொடியும் முக்காலும் முழுசும் எல்லாம் சாமிக்குத்தான்.

முக்கால் எல்லாம் எனக்கு வேணாண்டா கருப்பா. உன் வீட்டுலே அதுக்கு ஆள் இருக்கு இல்லியோ ?

சாமியை இந்த விஷயத்துலே நான் முந்திக்கிட்டாச்சு. இருட்டிக்கிட்டு வரது. போகலாம் சாமி. வூட்டுலே பேகம் முழுவாம நிக்கறா. போற வழியிலே சேட்டு கடையிலே அல்வா வாங்கிட்டுப் போகணும்.

பகவதிக்குட்டிக்கும் அல்வா வாங்கிப் போய் ஊட்ட வேண்டும். அவள் வாயில் முத்தம் ஈந்து எச்சிலோடு திரும்ப எடுத்துச் சுவைக்க வேண்டும்.

நான் கொடுத்தால் வேணாமோ என்றாள் கொட்டகுடித் தாசி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:15 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் முப்பத்திரெண்டு

நொங்கம்பாக்கத்தில் வைத்தியநாதனின் வீடு நூதனமாக எழுப்பிக் குடி போயிருந்ததால் வெகு நேர்த்தியாகவும் சகல செளகரியம் கூடியும் இருந்தது.

வைத்தியநாதன் சங்கரனுக்கு அண்ணா உறவாக வேண்டும். அவன் தகப்பனார் கச்சேரி ராமநாதய்யர் ஒன்று விட்ட சித்தப்பா என்பதால் இவன் ஒன்று விட்ட அண்ணா. சங்கரனுக்கு அண்ணா என்று கூப்பிட்டால் சாமாதான் சதா ஞாபகத்துக்கு வருகிறான். தவிரவும் இவன் பெரியண்ணா, மாமா மாதிரி நாற்பத்துச் சில்லரை வயசும் தொந்தியும் தொப்பையும் முக்கால் வழுக்கைத் தலையுமாக இருந்தான்.

தெருவில் எல்லோருக்கும் அவன் மேல் நிறைய மரியாதை இருந்தது. அவன் வெளியே போகும்போதும் வரும்போதுமெல்லாம் அக்கம்பக்கத்திலே இருக்கப் பட்டவர்களும், எதிர்ப்பட்டவர்களும் அவனை சார் என்று மரியாதையாக விளித்தது சங்கரனுக்கு விநோதமாகப் பட்டது. அந்த இங்கிலீஷ் வார்த்தைக்கு ஜயா என்றோ எஜமான் என்றோ அர்த்தம் என்று ஊகித்திருந்தான் அவன். கோட்டையில் வேலை பார்க்கிற ராஜாங்க உத்தியோகஸ்தன் என்பதால் வைத்தியநாதனுக்கும் அப்படியே எல்லோரும் கூப்பிடுவது பழகிப் போயிருந்ததோடு பிடித்தும் இருந்தது.

வைத்தியநாதய்யன் கோட்டையில் குமஸ்தன் வேலை பார்க்கிறதாகச் சொன்னான். துறைமுகத்தில் வந்து சேரும், புறப்படும் கப்பல் போக்கு வரத்து பற்றிய கணக்கு எல்லாம் அவன் தான் எழுதியாக வேண்டுமாம். அதுவும் துரைத்தனத்து மொழியில். இவன் கணக்கு எழுதாமல் எந்தவொரு பரங்கித் துரையோ, துரைசானியோ சென்னைப்பட்டணத்துக்குள் காலெடுத்து வைக்க முடியாது. அதே பிரகாரம், கப்பலேறி ஊரைப் பார்க்கவும் புறப்பட முடியாது என்று வைத்தியநாதய்யன் சொன்னபோது சங்கரனுக்கும் அவன்மேல் சொல்ல முடியாத அளவு மரியாதை வந்து சேர்ந்தது.

வைத்தி சார், இங்கிலீஷிலே வார்த்தையும் கணக்கும் எழுத ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்குமே ?

சங்கரன் அவனைக் கேட்டான்.

கச்சேரி ராமநாதய்யர் கோர்ட்டுக் கச்சேரியில் சிரஸ்ததார் என்ற உத்தியோகத்தில் பல வருஷம் இங்கே சென்னப்பட்டணத்திலேயே இருந்ததால் அதெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே சிரமமில்லாமல் படிக்கத் தனக்கு வாய்த்தது என்றான் வைத்தி.

கச்சேரி ராமநாதய்யர் அவனைச் சீமைக்கு அனுப்பி பி.ஏ பரீட்சை கொடுத்துவிட்டு வரவும் ஏற்பாடு செய்திருந்தாராம். உள்ளூர் வைதீகர்கள் அப்படி அனுப்பினால் அடுத்த க்ஷணமே ஜாதிப் பிரஷ்டம் செய்வதாகப் பயமுறுத்தவே அதைக் கைவிட்டுக் கோட்டையில் குமஸ்தனாகப் போக வேண்டிப் போனதாக வருத்தப்பட்டான் வைத்தி.

வைதீகர்கள் இந்தப் பெரிய பட்டணத்திலும் இருக்கிறார்கள் என்பதே சங்கரனுக்கு சுவாரசியமான விஷயமாக இருந்தது. கருப்புப் பட்டணத்திலும், மற்ற இடத்திலும் சகல ஜாதியினரும் நிரம்பி வழிந்து மூச்சுக் காற்று முகத்தில் பட, வியர்வை தோளில் ஈஷ, பிருஷ்டம் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு ஊர்ந்து போகும் ஸ்தலத்தில் அவர்கள் தர்ப்பைக் கட்டையோடு இறங்கினால், ஒவ்வொரு பத்தடி போனதற்கும் திரும்பி வந்து குளித்துத் தீட்டுப் போக்கவே நாள் முழுக்க நேரம் சரியாக இருக்கும். அப்படியும் மிஞ்சிய நேரத்தில் எள்ளை இறைத்துத் தர்ப்பணமும், அப்தபூர்த்தி ஹோமமும் செய்து நாலு காசு சம்பாதிக்கவும், அதற்கும் எஞ்சி நேரம் கிடைத்து கச்சேரி ராமநாதய்யர் சீமந்த புத்திரனை ஜாதிப்பிரஷ்ட விஷயமாக மிரட்டிவிட்டுப் போகவும் அவர்களுக்கு எப்படி ஒழிந்தது என்று சங்கரனுக்குப் புரியவில்லை.

என்ன, எங்கப்பா கொஞ்சம் முந்திக் கோமணத்தை அவுக்காம இருந்தா நான் பத்து இருபது வருஷம் காலம் தாழ்த்தி உன்னை மாதிரிப் பிறந்திருப்பேன். லண்டனுக்குப் போய் பி.ஏ பரீட்சை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாம, இங்கேயே அதைக் கொடுக்கவும், அதுக்காகப் படித்து முஸ்தீபு செய்யவும் கலாசாலை எல்லாம் எழுப்பி வைச்சுருக்கா இப்போ. நான் உன் வயசிலே இருந்த போது அதொண்ணும் கிடையாது. ஆனாலும் பாரு, பகவான் மாதிரி இந்த வெள்ளக்காரா நம்ம பரத கண்டத்து மேலே காருண்யம் வச்சு எவ்வளவு கடாட்சம் பண்றான்னு நினைச்சுப் பார்த்தியோ. இவா மாத்திரம் இல்லாட்ட நீயும் நானும் இங்கே இப்படி ஒரு பெரிய கிரஹத்துலே காத்தாட உக்காந்துண்டு விச்ராந்தியாப் பேசிண்டு இருக்க முடியுமோ ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:22 pm

எந்தத் துரையும் வந்தாலும் வராவிட்டாலும் சங்கரன் அவன் பாட்டுக்கு அரசூரில் புகையிலை விற்று நாலு சல்லி வாங்கிக் கல்லாவில் போட்டுக் கொண்டிருப்பான். ஆனால் வைத்தியநாதய்யன் கோட்டையில் உத்தியோகம் பார்த்து இப்படி நொங்கம்பாக்கத்தில் ரெண்டு கட்டு வீடும் தோட்டமும், கிணறுமாக எழுப்பி சவுகரியமாக ஜீவித்துக் கொண்டிருக்க முடியாது என்பது வாஸ்தவம்தான். அவன் பின்னே என்ன செய்து கொண்டிருப்பான் ? தர்ப்பைக் கட்டோடு ஜாதிப் பிரஷ்டம் பண்ணி வைக்க அலைந்திருப்பானோ ? முன்சீப்புக் கச்சேரியில் தலைப்பாகை கட்டிக் கொண்டு உத்தியோகம் பார்த்திருப்பானோ ? இல்லை கருத்த ராவுத்தன் கடைக்கு எதிர்க்கடை போட்டு கிண்டி அய்யனைக் காரியஸ்தனாக வைத்து இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்துக் கணக்கு எழுதச் சொல்லி மூக்குத்தூள் விற்றுக்கொண்டிருப்பானோ ?

என்னத்தைப் புகையிலை விற்று. அது வண்டியில் ஏறுகிறதா, அனுப்பிய இடத்துக்கு எந்த சேதமும் வராமல், வழியில் திருட்டு, விபத்து எதுவும் இல்லாமல் போய்ச் சேர்கிறதா, விற்ற பணம் கிரமமாக வசூலாகிறதா என்று பார்த்துப் பார்த்துக் கணக்கெழுதி, தாக்கல் வரக் காத்திருந்து நாளைக் கடத்திக் கொண்டிருக்கிறது ? இரண்டு தலைமுறையாக விற்றதெல்லாம் தன நஷ்டம், தானிய நஷ்டம், ஜீவன் நஷ்டம் என்று போய்க் கொண்டிருக்கிறது. இது போல், இதைவிட இன்னும் பெரிசாக எழுப்பிய வீடு தீயில் வெந்து போய்விட்டது. அந்த நாற்றம் பிடித்த வஸ்துவைக் கட்டியழாமல் இப்படி துரைக்குத் தெண்டனிட்டு விழுந்து கோட்டையில் உத்தியோகம் பார்த்து நாலு காசு சம்பாதிப்பது எவ்வளவோ மேல் இல்லையோ. பகவதிக்குட்டி கேளடி. நம்ம குழந்தைகளை எப்பாடு பட்டேனும் இங்கிலீஷ் படிக்க வச்சுடணும். கதவடைச்சுட்டு வந்து படு. நான் வண்டி வண்டியா சேட்டு கடை அல்வா வாங்கிண்டு வந்து தரேன். துரை கடை வச்சு அப்படி ஏதேனும் உன்னதமான சரக்கு விற்றாலும், என்ன காசு செலவானாலும் வாங்கி வரேன். நாவிகேஷன் ரிக்கார்ட் போர்ட் செயிஞ்ச் சார்ஜ் கிளார்க் தெரியுமாடி உனக்கு ? படுத்துண்டு எல்லாம் சொல்றேன். வேண்டாமா ஏண்டி வேணாம்கிறே ? நல்ல நேரம்டி இப்போ.

கொட்டகுடித் தாசி சங்கரன் கோவணத்தை உருவிவிட்டு இங்கிலீசில் தஸ்ஸு புஸ்ஸு என்று துரைசானி போல் போலி செய்து கொண்டு சிரித்தாள்.

இவள் வேறு எங்கே போனாலும் கூடவே வந்துவிடுகிறாள். சாமிநாதனோடு போகம் கொண்டாடிய அந்த ஸ்திரி போல்.

சங்கரா என்னடா பேசிண்டு இருக்கும்போதே பிரமை பிடிச்சது மாதிரி உத்தரத்தையே வெறிச்சிண்டு உக்காந்துட்டே.

இல்லே வைத்தி சார். கலாசாலை, துறைமுகம், கோட்டை அது இதுன்னு நிறையச் சொல்றேள். அங்கெல்லாம் மழைக்கு ஒதுங்கக் கூட எனக்கு யோக்கியதை இல்லைன்னு தெரியும். பக்கத்திலே வச்சாவது பாக்க சந்தர்ப்பம் கிடைக்குமான்னு யோஜிச்சேன்.

சங்கரன் சமாளித்தான்.

நீ இங்கே இருக்கிற நாளுக்குள் ஒரு தினம் உன்னைக் கோட்டைக்கும் அப்படியே துறைமுகத்துக்கும் கூட்டிக் கொண்டு போய் விநோதம் எல்லாம் காட்டறேன்.

வைத்தி உள்ளபடிக்கே பிரியமாகச் சொன்னபடி, வா போஜனம் பண்ணலாம் என்று எழுந்தான்.

இல்லே சார், நான் இன்னும் குளிக்கவே இல்லை. நீங்க போஜனம் முடிச்சு உத்தியோகத்துக்கு இறங்குங்கோ. மெள்ளக் கிளம்பிப் போய்க்கறேன் நான்.

அசடே, இன்னிக்கு ஞாயித்துக் கிழமை. வேலைக்குப் போகவேண்டாம். போன வாரம் எப்படி நீ வந்தபோது மாம்பலம் பக்கம் நின்னு கூட்டிண்டு வந்தேன்னு நினைக்கறே ?. ஞாயித்துக் கிழமைங்கறதாலே தானே. வார நாளா இருந்தா நான் வந்திருக்க முடியுமா என்ன ? எவனாவது வேலைக்காரனை அனுப்பியிருப்பேன். அவன் உன்னை விட்டுட்டு வேறே யாரையாவது எட்டு முழ வேஷ்டியும், கிராமத்துக் களையும், கட்டுக் குடுமியுமா இங்கே படியேத்த வச்சிருப்பான். இவளும் அசடு மாதிரி விழுந்து விழுந்து உபச்சாரம் பண்ணிண்டு இருப்பா.

வைத்தி சிரித்தான். அவன் பெண்டாட்டி கோமதி கையில் தருப்பைப் புல்லை வைத்துக் கொண்டு வீடு முழுக்க இரைத்துக் கொண்டு போனவள் அவன் மேல் ஒன்றை வீசிப் போட்டபடி சொன்னாள் -

என் கொழுந்தனார் ஒண்ணும் அசடு இல்லே. நானும்தான். இப்ப இங்கே முழு அசடு நீங்க மட்டும்தான்னா.

ஏண்டி கழுதே. என்னப்பாத்து அசடுன்னு சொல்லவா உங்கப்பன் மிராசுதார் கோபாலன் உன்னை என் கழுத்துலே கட்டி வச்சான் ?

சும்மாவா கட்டி வச்சார் எங்கப்பா ? முன்னூறு சவரன் நகை, வெள்ளிப்பாத்திரம், பட்டு வஸ்திரம்.

அவள் பால் பாத்திரத்தைத் திறந்து அதில் ஒரு இழை தருப்பையை மிதக்கப் போட்டாள்.

வரதட்சணை அட்டவணையை அடுக்கறபோது. என் காதுலே வைரக்கடுக்கனையும் சேர்த்துக்கோ. அந்த காசியாத்திரை கொழும்புக் குடையையும்.

வைத்திக்கு உள்ளபடியே பெருமைதான் இப்படித் தனலட்சுமியாகப் பெண்டாட்டி வந்து சேர்ந்ததில். அவனுடைய ரெட்டை நாடி சரீரத்துக்கும் இவளுடைய சோனி உடம்புக்கும் பொருத்தமில்லை தான். ஒரு சாண் வைத்தியைவிடக் கூட இவள் உயரம் என்று சங்கரனுக்குப் பட்டது. சேர்ந்து நின்றால் கண்டுபிடித்து விடுவான். கண்டுபிடித்து என்ன ஆகப்போகிறதாம் ? மூணு பிள்ளை வைத்திக்கு வரிசையாகப் பெற்றுப்போட கோமதி மன்னிக்கு உயரம் ஒன்றும் தடையாக இல்லைதான். அதுகளுக்கும் காது குத்தி, வைரக்கடுக்கன் மாட்டி அழகு பார்த்திருந்தார் கோமதியின் தகப்பனார்.

வைரக்கடுக்கன் போட்டுக்க மட்டுமில்லே காது. விஷய ஞானத்தைக் கிரகிச்சுக்கறதுக்கும்தான்னு இவர்கிட்டே சொல்லுங்க கொழுந்தனாரே.

கோமதிக்கு சிநேகிதமான சுபாவம். வந்த நாள் முதல் சங்கரனை வைத்தியின் கூடப் பிறந்த சகோதரன் போல் நினைத்து எல்லா வசதியும் செய்து தந்து பிரியமாக இருக்கிறாள். சாமிநாதன் இருந்து, சித்தப் பிரமை தெளிந்து கல்யாணம் செய்து அகத்தில் மன்னி வந்தால் இப்படித்தான் இருப்பாளோ.

எரிந்து கரிபிடித்த வீட்டில், கூரை சரிந்த கூடத்தில் ஊஞ்சலில் சாமிநாதன் உட்கார்ந்திருக்க, தரையில் மழையில் நனைந்தபடி பாடிக் கொண்டிருந்த ஸ்திரி. அவள் தான் மன்னியா ? அவள் பாடினதும், வாசல் திண்ணையில் சாய்ந்து கொண்டு இன்ஸ்பெக்டர் துரை கேட்டு உறைந்து போய் நிற்க சுப்பம்மா அத்தை பாடியதும், சாமிநாதன் நக்னமாக மாடியறையில் நின்றபடிக்குச் சுழல விடும் பழுக்காத்தட்டிலிருந்து ஒலித்ததும் ஒரே சங்கீதம் தானா ?

உன் கொழுந்தன் திரும்ப நிஷ்டையிலே உக்காந்துட்டான்.

வைத்தியநாதன் சங்கரனைப் பிடித்து உலுக்கினான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:26 pm

அவருக்கு என் தங்கையை முடிச்சு வச்சுடுங்கோ. எல்லாம் சரியாயிடும். நாள் முழுக்க பத்துப்பேரை ஏவிண்டு புகையிலையும், மூக்குப்பொடியும் வித்துண்டு நூதன கிரஹப் பிரவேசம் செஞ்சு, ஆயுசும் சந்ததியுமா அவரும் பட்டணத்துலே சவுக்கியமா இருக்கலாம். ஆனாலும் இன்னிக்கு அவருக்கும் கூடக் காலம்பற கொலைப் பட்டினின்னு விதிச்சதை யாராலும் மாத்த முடியாது.

மன்னி, நீங்க அன்னபூரணி. சாப்பிடுடா கொழந்தேன்னு ரெண்டு பிடி அன்னம் வச்சா சரின்னு வழிச்சுப் போட்டுண்டு வேலையைப் பார்க்கக் கிளம்புவேன். இல்லியோ, கிணத்து ஜலம் ஜில்லுனு இருக்கோன்னோ, குளிச்சுச் சந்தியாவந்தனம் பண்ணிட்டு பஞ்ச பாத்திரத்திலே அதை ஏந்திக் குடிச்சுட்டுப் புறப்படுவேன். அண்ணா தான் பாவம்.

ஆமாண்டி. ஞாயித்துக்கிழமை காலம்பற இட்லிக்கு ஊறப்போட்டு சுடச்சுட இஞ்சித் துவையலோட பண்ணித்தருவியே எப்பவும். வெங்காய சாம்பார் வேறே மொறுமொறுன்னு உரப்பா. அதொண்ணும் கிடையாதா இன்னிக்கு ?

வைத்தி ஏக்கத்துடன் கேட்டான்.

எப்படிக் கிடைக்கும் ? இன்னிக்கு சூரிய கிரகணம்னு நினைவு வரலியா ? பத்தரை மணிக்குக் கிரகணம் விலகினதும்தான் உலையேத்தணும். உங்க நட்சத்திரத்துலே வேறே பிடிக்கறதா ? சாஸ்திரிகள் வந்து நெத்திப்பட்டம் கட்டி விடுவார். சீக்கிரம் குளிச்சுட்டு வாங்கோ.

ஒரு வாய்க் காப்பியாவது கண்ணிலே காட்டேண்டி அன்னபூரணி.

வைத்தி கையெடுத்துக் கும்பிடுவது போல் நடித்துப் பிரார்த்தித்தான்.

சங்கரனுக்கு இங்கே வந்தது முதல் பழக்கமாகி இருந்தது அந்தப் பானம். அரசூரில் இருந்து கிளம்பி, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, மாயவரம் மார்க்கமாகக் குதிரை வண்டியும், மாட்டு வண்டியும் மாறி மாறி வந்ததில் முதலில் தஞ்சாவூரில் காப்பி என்ற பானம் குடிக்கக் கிடைத்தது. புதிதாக ஏற்படுத்திய சோற்றுக் கடையொன்றில் இரண்டு பிராமணர்கள் அடுப்பில் பாலைக் கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சி, கருப்புத் திராவகமாக எதையோ ஊற்றி அஸ்காவைப் போட்டு வீசி வீசி ஆற்றிக் கலந்து நீட்டியதை வாங்கி ருஜிக்க ஊரே திரண்டிருந்த மாதிரித் தெரிந்தது சங்கரனுக்கு.

கண்டதையும் வழியில் சாப்பிட்டாலோ, குடித்தாலோ வாந்திபேதியும், வயிற்றுக் கடுப்பும் உண்டாக வழியுண்டு என்று அவன் யாழ்ப்பாணத்துக்கும், அங்கே இருந்து மலைப்பிரதேசத் தோட்டங்களுக்கும் புகையிலை விற்கப் போனபோது அனுபவத்தில் தெரிந்திருந்ததால், சென்னைப்பட்டணம் போய்ச் சேரும் வரைக்கும் வெளியிலே போஜனம் செய்யாமல் ஜாக்கிரதையாக இருந்தான்.

சுப்பம்மாள் வாழை இலையில் கட்டிக் கொடுத்த சித்திரான்னமும், தோசையும் கிளம்பின தினம் முழுக்கச் சாப்பிடத் தக்கதாக இருந்தது. அடுத்த இரண்டு நாள் அதிரசமும், தேங்குழலும், பூவன் பழமுமாகப் போனது. அப்புறம் ஒரு நாள் பூந்தி லாடு, சேவு, தேங்காய் பர்பி, சுவியன் என்று தீபாவளி பட்சணம் போல் நாள் முழுக்கச் சாப்பிட்டுக் கழிந்தது.

எல்லாம் சுப்பம்மாளும், வேத பாடசாலை ராமலட்சுமிப் பாட்டியும், அப்பாவின் அத்தான் சுந்தரகனபாடி மாமாவாத்துக்காரியும் சேர்ந்து இவன் பிரயாணத்துக்கென்று சித்தமாக்கி, ஓலைக் கொட்டான்களிலும், தகரப் பெட்டிகளிலும் அடைத்துக் கொடுத்தது. ஜலம் மட்டும் மானாமதுரை மண் கூஜாவில் அங்கங்கே இடம் பார்த்து சுத்தமானதாக இருக்கும் என்று தீர்மானம் செய்து வாங்கி நிறைத்துக் கொண்டான்.

சாப்பிட்டுத் தீர்ந்த ஓலைக் கொட்டான்களை அங்கங்கே வீசிக் கழித்தாலும், வைத்தியனாதன் அகத்தில் தரச்சொல்லிக் கொடுத்து விட்ட தகரப் பெட்டி நிறைய பட்சணங்களைத் தனியே எடுத்து வைத்து அங்கங்கே ஏற்றி இறக்க சிரத்தை எடுக்க வேண்டிப் போனது. அசதியோடு, ஐந்து நாள் பயணத்தில் கடைசி நாளில் ஏகத்துக்கு இனிப்புப் பட்சணம் சாப்பிட்டது மதராஸில் வந்து சேரும்போது மலபந்தமாகி வயிறு ஊதிப் போயிருந்தது சங்கரனுக்கு.

தாம்பரத்திலிருந்து வந்த மூடுவண்டிகளிலிருந்து இறங்கிய கூட்டத்தில் எப்படித்தான் சங்கரனைக் கண்டு பிடித்தானோ வைத்தியநாதன்.

செயிஞ்ஜார்ஜ் போர்ட் நேவிகேஷன் ரிக்கார்ட் கிளார்க் என்று அவன் விலாசத்தைச் சொன்னால் உடனே நொங்கம்பாக்கத்தில் அவன் கிரகத்துக்கு யாரும் வழிசொல்வார்கள் என்று கச்சேரி ராமநாதய்யர் சொல்லி, ஒரு காகிதத்திலும் நீள எழுதிக் கொடுத்திருந்ததை வழியெல்லாம் உருப்போட்டிருக்க சிரமமே பட்டிருக்க வேண்டாம் சங்கரன். ஆயிரம் பேர் கூடிய சபையில் வைத்தும், புகையிலை வாடையும், புளியஞ்சாத, பட்சண வாடையும் அடிக்கும் சங்கரனைக் கண்டுபிடிக்க முடியாத புத்திசாலியாக இல்லாத பட்சத்தில் அவனுக்குத் துரைத்தனம் நேவிகேஷன் ரிக்கார்ட் கிளார்க் உத்தியோகம் கொடுத்திருப்பார்களா என்ன என்று சங்கரனுக்குத் தோன்றியது அப்போது.

வைத்தியநாதன் கொண்டு வந்திருந்த ஒரு பெரிய குதிரை வண்டியில் அவனோடும், மடியில் பணம், செட்டிமார் லேவாதேவிக்கடை தரிசன உண்டியல், பட்சண மூட்டை, வயிற்றில் வாயு என்ற சங்கதிகளுமாக நொங்கம்பாக்கம் போய்ச் சேர்ந்த க்ஷணமே வைத்தியநாதனை விடப் புத்திசாலி அவன் பெண்டாட்டி கோமதி என்று புரிந்து போனது சங்கரனுக்கு.

கொதிக்கக் கொதிக்கப் பித்தளைப் பாத்திரத்தில் கொண்டு வந்து வைத்து அவள் கொழுந்தனாரே சாப்பிடுங்கோ என்றதை மறுபேச்சில்லாமல், பல் படாமல் நாக்கில் அன்னாந்து விட்டுக் கொண்டதும் நாக்கு பொள்ளிப் போனாலும் ருசியாகத் தான் இருந்தது. சரியாயிட்டேன் என்று வயிறு வேறு சந்தோஷமாகக் கலகலக்க ஆரம்பித்தது.

பகவதிக் குட்டியோடு படுத்தாலும் இப்படி ஒரு சுகம் கிடைக்காதோ ?

காப்பிச் சுவையை இன்னும் நாக்கில் அனுபவித்தபடி, தோட்டத்துக்கு எப்படிப் போகணும் என்று வைத்தியநாதனை அவன் விசாரித்தது இன்றைக்கு ஒரு வாரம் முன்னால், போன ஞாயிற்றுக்கிழமை. கிட்டத்தட்ட இதே நேரம்தான்.

மன்னி, எனக்கு ஒரு குவளை காப்பி கொடுங்கோ. ராகுவும் கேதுவும் சூரியனை முழுங்கிட்டு என்னையும் முழுங்க வந்தாலும் பரவாயில்லே. இந்தத் தேவபானத்தைக் குடிச்சா எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்.

சங்கரன் கன்னத்தில் போட்டுக் கொண்டு வெகு விநயமாகச் சொல்ல, வைத்தியநாதன் இவன் அரசூர்ப் போக்கிரி, உன் தங்கையை இவனுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்தால் காப்பி சாப்பிட்டே சீதனத்தை ஒழித்துவிடுவான் என்றான் சங்கரனின் குடுமியைப் பிடித்து இழுத்துக் கொண்டே.

Sponsored content

PostSponsored content



Page 10 of 17 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக