புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
2 Posts - 1%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
432 Posts - 48%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
29 Posts - 3%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 11 of 17 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:27 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் முப்பத்து மூன்று



சங்கரன் தெருவில் இறங்கி நடக்கும்போது மத்தியானமாகி விட்டிருந்தது. சமுத்திரக் காற்று தயங்கித் தயங்கி அடிக்க ஆரம்பித்து வெய்யில் தணிந்திருந்தது. இந்தக் காற்றுக்கும், கழித்த போஜனத்துக்கும், இப்பவே இங்கேயே ஏதாவது ஒரு திண்ணையில் கட்டையைச் சாய்த்து தூங்க வேண்டும் போல ஒரு அசதி.

வேறே நாளாக இருந்தால் அவன் கிரமமாகக் கிளம்பி கருத்தானைப் பார்த்துப் பேசி ஆகக்கூடிய காரியம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பான். கிரகணம் நடுவில் வந்து விழுந்து தொலைத்தது. போதாக்குறைக்கு வைத்தி சார் கிளார்க் உத்தியோகம் பார்க்கக் கோட்டைக்குப் போக வேண்டாத ஞாயிற்றுக்கிழமை வேறு.

காலையிலிருந்து வைத்தி சாரோடு அதும் இதும் பேசிக் கொண்டு வெட்டி அரட்டையிலும் நாலைந்து குவளை காப்பியிலும் நேரம் போய்விட்டது. அதுவும் காப்பி என்பதானது ஒரு வினோத திரவம். குடித்தால் அக்கடா என்று சுவரில் சாய்ந்து உட்கார்ந்து ஏதாவது கதைக்கச் சொல்கிறது. பேசி ஓய்ந்தால், இன்னொரு வாய்க் காப்பி எங்கேடா என்று ஏங்க வைக்கிறது. கோமதி மன்னி வேறு காப்பிக்குக் கிரகணத் தீட்டு இல்லை என்று காமதேனுவாக அதைக் கலந்து கலந்து வந்து கொடுத்த மணியமாக இருந்தாள்.

வைத்தி கொல்லைப் பக்கம் போனபோது, அவன் பிள்ளைகள் எங்கேயோ இருந்து ஒரு உடைந்து போன கண்ணாடிச் சில்லை எடுத்து வந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

இது பாதத்திலே குத்தினா வேறே வெனையே வேண்டாம். காலையே வெள்ளைக்கார மருத்துவனும் டிரஸ்ஸருமா முழுசா நறுக்கி எடுத்துடுவான். அப்பறம் கட்டையை வச்சுண்டு நொண்ட வேண்டியதுதான்.

கோமதி பயமுறுத்தியதை லட்சியமே செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு வாசல் திண்ணையில் அகல்விளக்கைக் கொளுத்திக் கண்ணாடியில் கரிபிடித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்க வாத்தியார் சொல்லியிருக்கார்.

அதுகள் சொன்னபோது சங்கரன் பட்டணத்து வாத்திமார் எல்லாம் அரைக் கிறுக்காக இருப்பார்களோ என்று அதிசயப்பட்டான். விஜயதசமிக்கு நெல்லைப் பரப்பிக் காப்பரிசி விநியோகித்து ஹரி ஸ்ரீ, தட்சிணாமூர்த்தி ஸ்லோகம், ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மஞ்ஞாடி, எண் கணிதம், நவராத்திரிக்குக் குழந்தைகளுக்குச் சோளக்கொல்லைப் பொம்மை மாதிரி வேஷ்டியும் புடவையும் கட்டித் துருவ சரித்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் இப்படி ஊரில் விஸ்தாரமாகப் படிப்பித்துப் பிள்ளைகளை புத்தியோடு நடமாட விடும் வாத்திமார்கள் எங்கே, இந்த ஊர் மனுஷர்கள் எங்கே.

பாதிரி வாத்திகள் கண்டதையும் தான் சொல்வா. வித்தை சொல்லித்தர அவாளுக்கு அழற தட்சணை கொஞ்ச நஞ்சமில்லே. எல்லாத்தையும் வாங்கி ராபணான்னு அங்கியிலே போட்டுண்டு வாயிலே வரதைச் சொல்ல வேண்டியது. அவாளுக்கு அசூயை நம்ம ஆசார அனுஷ்டானத்தைப் பாத்து. கோணல் புத்தி வேறே. இல்லாட்ட கிரகண காலத்துலே அட்டுப் பிடிச்சாப்பலே கண்ணாடியைக் கருப்பாக்குன்னு சொல்லியிருப்பாளாயிருக்கும் அதைப் போய் பிரம்ம வாக்கா நம்பிண்டு இதுகளும் கூத்தாடிண்டு இருக்கு.

கோமதி கண்டித்தபோது சங்கரனுக்கு இன்னும் ஆச்சரியமாகப் போனது. பெரிய பாவாடை கட்டின பாதிரிகள் அறியாப் பாலகர்களுக்கு இப்படிக் கண்ணாடியைக் கருப்பாக்கு, கரிக்கட்டைக்குச் சுண்ணாம்பு பூசு என்று கண்டதையும் கற்பிக்கிறதும் அதற்குத் தகுந்தமாதிரி காசு பிடுங்குகிறதும் பட்டணத்து அநியாயம் போல என்று தோன்றியது.

அப்புறம் கிரகணம் ஏறின போது மாடிக்குப் போய்க் குழந்தைகள் அந்தக் கண்ணாடிச் சில் வழியாக ஆகாயத்தைப் பார்த்தார்கள். வைத்தியும் வயிற்றைத் தடவிக் கொண்டு வந்து சில்லை வாங்கிப் பார்த்துவிட்டு ஆஹா என்று காணாததைக் கண்டதுபோல் ஆச்சரியப்பட்டான்.

சங்கரா நீயும் பாருடா. சூரியனை எப்படி கிரகணப் பீடை பிடிச்சுருக்கு பாரு. ராகுவோ கேதுவோ தெரியலை எந்தக் கடன்காரன்னு. ஈஸ்வரானுக்ரஹத்துலே எல்லாம் சரியாகணும்.

கண்ணாடிச் சில்லைப் பயபத்திரமாகக் கொடுத்துவிட்டு வைத்தி கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:28 pm

அப்பா, அது நம்ம பூமியோட நிழல். ராகுவும் இல்லே. கேதுவும் இல்லே.

ஆமாடா. நாளைக்கு சிவனும் இல்லே விஷ்ணு பகவானும் பொய்யின்னு அந்த பாவாடைக்காரன் சொல்லித் தருவான். அதையும் வந்து சொல்லுவே. தோ பாருங்கோ, இது ரெண்டுக்கும் புரட்டாசி பொறந்ததும் பூணூல் போட்டு வச்சுடுங்கோ. இல்லியோ அந்தப் பாதிரிக் கட்டால போறவன் இழுத்துண்டு போய்ப் பாவாடை கட்டி விட்டுடுவான்.

கோமதி சிடுசிடுத்தபடி மேலே வந்து சாஸ்திரி வந்தாச்சு என்றாள்.

சங்கரன் கையில் கண்ணாடிச் சில்லைக் கொடுத்துவிட்டு வைத்தியும் பிள்ளைகளும் அவள் கூடக் கீழே போனார்கள்.

அவன் அந்தச் சில் வழியாகப் பார்த்தபோது ஓரத்தில் மட்டும் நெருப்பு வளையமாகப் பிரகாசித்துக் கொண்டு உள்ளே அட்டைக் கருப்பாக ஆகாயத்தில் ஒரு சூரியன். செளக்கியமாடா என்றது அது சாமிநாதன் குரலில்.

சங்கரா, இன்னிக்கு நீ கிரஹஸ்தனாகப் போறேடா. போகம் லபிக்கப் போறது.

நடுங்கிப் போய்த் தொப்பென்று கண்ணாடிச் சில்லைக் கீழே போட்டான் சங்கரன். அது ஏழெட்டுச் சின்னக் கீற்றுகளாக நொறுங்கிப் போனதை அப்படியே விட்டு விட்டு அவன் மாடிப்படி இறங்கி ஓட்டமும் நடையுமாகப் போக, கூடத்தில் கிரகணப் பீடைக்குப் பரிகாரம் செய்ய வந்த பட்டணத்து வைதீகன் குவளையில் பல் படாமல் காப்பி குடித்துக் கொண்டிருந்தான்.

இதார் ? உம்ம ஜ்யேஷ்டனா ?

அவன் வைத்தியை விசாரிக்க, நெற்றியைச் சுற்றிப் பெரிய ஓலை நறுக்கைக் கட்டிக் கொண்டிருந்த வைத்தி, ஒன்று விட்ட தம்பி என்றான்.

கோட்டையிலே உத்தியோகம் ஆகி வந்திருக்கேளா ?

மூக்குத் தூள் விற்க வந்ததாக இந்த மனுஷரிடம் சொன்னால் இளக்காரமாகப் போகும். சங்கரன் சொந்த வேலை விஷயமாகப் பிரயாணம் வைத்ததாகச் சொன்னான்.

என்ன நட்சத்திரம் ?

அவன் நட்சத்திரத்துக்குப் பீடை இல்லை என்றான். மற்றப்படி மூணு பட்டம் கட்டினதுக்கு முக்கால் ரூபாய் தட்சிணை வாங்கிக் கொண்டு காலில் வெந்நீர் விசிறின அவசரமாகக் கிளம்பினான் வைதீகன்.

மைலாப்பூர் பிரதேசத்துலே கோவில் பக்கமா என்னோட ஜாகை. என்ன நல்லது கெட்டதுன்னாலும் வந்து கூப்பிடுங்கோ. வேம்பு சாஸ்திரிகளாம் எதுன்னு விஜாரிச்சா பச்சைக் குழந்தை கூடச் சொல்லும்.

நொங்கம்பாக்கத்துக்கு வைத்தி சார் பிரபல மனுஷ்யன் போல் மயிலாப்பூருக்கு வேம்பு சார் பிரபலஸ்தனோ என்று சங்கரன் வைத்தியிடம் விசாரித்தான்.

இவனா ? சிதம்பரம் பக்கம் பொணம் தூக்கிண்டு இருந்துட்டு இங்கே பட்டணக்கரைக்கு வந்த மனுஷன். தத்து சாஸ்திரி. மூத்திரச் சந்திலே ஜாகை. பக்கத்துலே இன்னும் ஏழெட்டுப் பேர். எல்லோரும் மாஜி சவண்டிக்காரன். பட்டணத்துலே இவாதான் வைதீகாள்.

பெரிய விகடத்தைச் சொன்னமாதிரி வைத்தி சிரித்தான்.

ஆனா இங்கேயும் பண்டித சிரோமணிகள் எல்லாம் இருக்கா. ஆத்துலே ஆயுட்ஷேமம், கணபதி ஹோமம், மங்கல காரியம் வந்தா அவாளைக் கூப்பிடற வழக்கம். தட்சணை எம்புட்டுத் தெரியுமோ. மருத்துவம் பார்க்க டாக்டர் தொரை கிட்டேப் போனாக் கூட அம்புட்டுக் கொட்டித்தர வேணாம்.

கோமதி மன்னி தர்ப்பையைக் காலில் படாமல் ஒதுக்கி ஓரமாகப் போட்டபடி சொன்னாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:29 pm

சங்கரனுக்குச் சாமிநாதன் நினைவு மறுபடி வந்தது. அவன் மட்டும் நல்ல படிக்கு இருந்தால் இங்கேயே ஜாகை வைத்துக் கொண்டு அவன் படித்த வேதத்தை முதலாக முடக்கி என்னமாகச் சம்பாதித்திருப்பான். அவனுக்கு அதுக்கு புத்தி போகாதுதான். ஆனாலும் எட்டுக் கிரகமும் கூடி வந்திருந்தால் படிந்து வந்திருக்க மாட்டானா என்ன ? இப்படி ரெட்டைக் கட்டு வீடும், விஸ்தாரமான தோட்டமும், பெண்டாட்டி, குழந்தை குட்டியுமாக அவனும் காசு பெருத்துத் தொந்தியும் தொப்பையுமாகக் கொழித்திருப்பான். சங்கரன் இங்கும் அரசூரூக்குமாகப் போய்வந்து புகையிலை வியாபாரத்தையும் நாசீகா சூரண வியாபாரத்தையும் விருத்தி பண்ணிக் கொள்வான். தினசரி காப்பி சாப்பிடுவான். சாமிநாதனுக்கும் அதன் ருசி பிடித்துப் போகும். அவன் சாமவேதம் சொல்லி அழைக்கிற தேவர்களுக்கும் தான்.

கொழுந்தனாரே, குளிச்சுட்டு வாங்கோ. முட்டைக் கோசு பொறியல் பண்ணி வச்சிருக்கேன். பீர்க்கங்காய்த் தொகையல். எலுமிச்சை ரசம்.

கோமதி மன்னி தலையில் வேடு கட்டியதை அவிழ்த்துத் தலையாற்றியபடி ஈரத்துணிகளோடு மாடிக்குப் போனாள்.

அரசூரில் வீட்டில் நுழையாத வெங்காயமும், முட்டைக் கோசும், முள்ளங்கியும், பீர்க்கங்காயும் பட்டணத்தில் ஸ்வாதீனமாக பிராமண கிரகங்களில் நுழைந்து விட்டிருக்கிறது. எல்லாமே ருஜியான விஷயம் தான். சாமிநாதன் இருந்து, இங்கே பரம வைதீகனாக பூணூலை இழுத்துவிட்டுக் கொண்டு நடந்தால் நித்தியப்படிக்கு சங்கரனுக்கும் அதெல்லாம் கிடைக்கும்.சாமா தான் திரும்பத் திரும்ப இன்றைக்கு ஞாபகம் வருகிறான். மந்திரம் சொல்லிய அவன் வாய் கிரகணச் சூரியனின் கறுப்புக் கிணற்றுக்குள் இருந்து போகம் போகம் என்கிறது.

கோமதி மன்னியின் தங்கையைக் கல்யாணம் செய்துகொண்டு இங்கேயே தங்கித் தொழில் விருத்தி பண்ணினால் என்ன என்று குளிக்கும்போது அல்பத்தனமாக ஒரு யோசனை.

போயும் போயும் இந்த நாற வெங்காயத்தைச் சாப்பிடுவதற்காக அந்த திவ்ய சுந்தரியான பகவதிக்குட்டியை வேணாம் போ மூதேவி என்று ஒதுக்கி விட்டு இன்னொரு கன்யகையை வரிக்கணுமா என்ன ? இந்தப் பெண்ணரசி எப்படியோ தெரியாது. ஆனால் நிச்சயம் கோமதி மன்னி மாதிரிக் காப்பி கலந்து தருவாளாயிருக்கும்.

குளித்து விட்டு இலைக்கு முன் உட்கார்ந்தபோது முகத்தில் ஒரு வார தாடி புரண்டு கொண்டிருப்பது தெரிந்தது. பச்சைத் தகரப் பெட்டியோடு தெரு நீள நடந்து போகும் நாவிதனை இன்றைக்காவது கூப்பிடலாம் என்று இருந்தது முடியாமலேயே போய்விட்டது.

ரிஷி மாதிரி இருக்கேடா சங்கரா.

இலையைச் சுற்றி நீரைத் தெளித்து பரசேஷணம் செய்து கொண்டே சொன்னான் வைத்தி.

முட்டைக் கோசும், பீர்க்கங்காய்த் துவையலும் சாப்பிடும் ரிஷி.

கோமதி மன்னி சீண்டினாலும், இலையில் பாதிக்கு கோசுக் கறியை வட்டித்தாள். பருப்பும், புது தினுசு வாடையுமாக அது அமிர்தமாக இருந்தது சங்கரனுக்கு.

ரிஷிகள் அந்தக் காலத்துலே மாம்ச போஜனம் பண்ணியிருக்காளாக்கும். அஜம், பக்ஷி, ஏன், பசு.

வைத்தி சொல்ல ஆரம்பிக்க கோமதி மன்னி அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.

போறும் சமத்து வடிஞ்சு எலையிலே வழியறது. போஜன நேரத்துலே எதுதான் பேசறதுன்னு இல்லியா ? அதுவும் குழந்தைகள் கேட்டுண்டு இருக்கான்னு ஒரு போதமே இல்லியாக்கும்.

சாப்பிட்டு விட்டுத் தலைக்கு ஒரு பஞ்சுத் தலகாணியை வைத்துக் கொண்டு வைத்தி சிரம பரிகாரம் செய்து கொள்ள, அடுக்களை ஒழித்துப் போட்டு வந்த மன்னியும் கதவோரமாக வெறுந்தரையில் படுத்து நித்திரை போனாள். குழந்தைகள் எங்கேயோ விளையாடப் போன வீடு நிசப்தமாகக் கிடக்க, வாசல் கிராதிக் கதவைச் சார்த்திக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் படி இறங்கினான் சங்கரன்.

நாலு தெரு நடந்தால் முச்சந்தி வரும். அங்கே அரை மணி காத்திருந்தால் கருப்புப் பட்டணம் போகும் வண்டி வரும். கருத்த ராவுத்தன் காத்திருப்பான். அந்தத் தெலுங்குப் பிராமணப் பையனும் தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:30 pm

முச்சந்தியில் வண்டிக்காக நாலு பேர் நின்றிருந்தார்கள். பருமனான ஒரு மனுஷ்யன் தலையில் பெரிய முண்டாசும், தொளதொளவென்று வஸ்திரமும் கையில் பிடித்த சிலுவையுமாக ஏதோ பெரிய கூட்டத்தை எதிர்கொண்டது போல உரக்கப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தான்.

பரணி ஆண்டி சொல்கிறேன். சென்னப் பட்டணத்து மகா ஜனங்களே இந்த சத்ய வார்த்தையைக் காது கொடுத்துக் கேளுங்கள். நானும் சாதாரண ஹிந்துவாக இருந்தவன் தான். இப்போது உன்னத ஹிந்துவாகி இருக்கிறேன். அதெப்படி என்று கேட்பீராகில் சொல்லுவேன், நான் பிரஜாபதியை இன்னார் என்று அடையாளம் கண்டு கொண்டேன். அவரை நமஸ்கரிக்கிறேன். நித்யமும் அனுசாந்தானம் செய்து அஷ்டோத்திரமும் சகஸ்ரநாமமும் சொல்லி அந்த மஹா மூர்த்தத்தை அர்ச்சிக்கிறேன்.

கண்கள் செருக ஆகாயத்தைப் பார்த்தான். கிரகணம் விட்டுப் போன சூரியன் அவனைக் கஷ்டப்படுத்தினதாகத் தெரியவில்லை. அப்புறம் அந்தப் பிரசங்கியின் பார்வை புதிதாக வந்து சேர்ந்து முகத்து வியர்வையைத் தோள் துண்டால் துடைத்துக் கொண்டிருந்த சங்கரன் மேல் விழுந்தது.

இதோ நிற்கிறாரே இந்தப் பிராமணோத்தமர் போல் பெங்காளத்தில் ஞான சூரியனாக இருக்கப்பட்டவர் கிருஷ்ண மோஹன் பானர்ஜியா. அந்த மகாநாமத்தை இன்னொரு தடவை சொல்கிறேன் கேளுங்கள். கேட்ட மாத்திரத்திலேயே பீடையெல்லாம் விலகி ஓடும். கிருஷ்ண மோஹன். எந்தக் கிரகணமும், ராகுவும் கேதுவும் பற்றிப் பிடித்து தொந்தரைப்படுத்த உத்தேசித்தாலும் அந்த மஹாத்மாவிடம் அது ஈடேறாது. அவர் எனக்குக் காட்டித் தந்த பிரஜாபதிதான் கிறிஸ்து மஹரிஷி. ஓம் நமோன்னமஹ வந்தே என்று ஹிந்துக்களான நாமெல்லாரும் போற்றித் துதிக்கத்தக்க தெய்வ துல்யமான அந்த புண்ணிய ஸ்வரூபனையும், அவருடைய புண்யமாதாவான சர்வேஸ்வரி மஹாமேரி அம்மனின் மங்களகரமான சித்திரத்தையும் நீங்கள் தரிசிக்க இப்போதே காட்டித் தருகிறேன்.

அந்த மனுஷ்யன் தோளில் மாட்டியிருந்த சஞ்சியிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து உயர்த்திப் பிடித்தான். அவன் நின்ற மரத்தடி நிழல் சங்கரனுக்குப் பிடித்திருந்தது. இவன் எல்லாத் தெய்வத்தையும் தரிசனப்படுத்தி அந்தாண்டை போகட்டும். அந்த தெய்வங்களின் கிருபை இவனுக்குப் பரிபூர்ணமாகக் கிட்டட்டும். ஒரு நொடிப் பொழுது அந்த விருட்ச நிழலை ஒழித்துக் கொடுத்தால் சங்கரன் இளைப்பாறிப் போவான்.

பரணி ஆண்டி ஓய்கிற வழியாக இல்லை. கருப்புப் பட்டணத்துக்கும், சமுத்திரக் கரைக்கும் போகும் ஒரு வண்டி கூட வந்து சேராத காரணத்தால் அவனுக்கு முன்னால் ஆர்வமில்லாமல் பார்த்துக்கொண்டு ஒரு கூட்டம். அதில் இப்போது பத்துப் பேராவது இருப்பார்கள்.

முச்சந்தியை ஒட்டி விரிந்த தெருவில் பூட்டிக் கிடந்த ஒரு மடத்துத் திண்ணை சங்கரனை வாவா என்றது. மஹரிஷிகளை அப்புறம் தரிசனப்படுத்திக் கொள்ளலாம். மரநிழல் தெய்வங்களுக்கே துணைபோகட்டும்.

சங்கரன் விலகி நடந்தபோது நாலு வீட்டோடு அந்தத் தெருவே முடிந்து போயிருந்தது தெரிந்தது. எல்லா வீடும் சொல்லி வைத்த மாதிரிப் பூட்டி வைத்திருந்த தெரு அது.

சஞ்சியைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டான். உத்தரியத்தை விரித்தான். ஊருக்குப் போவதற்குள் வைத்தி சார் உத்தியோகத்துக்குப் போட்டுப் போகிறது போலவோ, கருத்தான் மாட்டிக் கொண்டு திரிகிற தரத்திலோ ஒரு குப்பாயம் தைத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். கருப்புப் பட்டணத்தில் துணியை வெட்டி, ஊசியில் நூல் கோர்த்துச் சதா தைத்துக் கொண்டு திண்ணைகளில் உட்கார்ந்திருக்கிற தையல்காரர்கள் நிறைய உண்டு என்பதைக் கவனித்திருக்கிறான் அவன்.

ஏதோ சத்தம். திண்ணையில் படுத்தபடி சங்கரன் அரைக் கண்ணைத் திறந்து பார்த்தான். நூதன வாகனம் ஒன்று வந்து நின்றது.

சாமிநாதனின் சிநேகிதர்களாகிய ரெண்டு பேரும் இறங்கினார்கள். விநோதமான குப்பாயம் உடுத்தியவர்கள். இது கூட நேர்த்தியாகத் தான் இருக்கிறது. என்னத்துக்கோ தோள் பாதிக்கு மேல் தெரிகிறது. ஆனாலும் உத்தரீயத்துக்கு இது பரவாயில்லை. என்ன தரித்து என்ன ? கனவான் களைதான் காணோம். முழுக் களவாணிக் களை. அது குப்பாயத்தால் வந்ததில்லை. முகத்தில் எழுதி ஒட்டி இருக்கிறதே.

சின்னச் சாமிகளே, பழுக்காத் தட்டு வேணுமா ?

பெரியவன் கேட்டான்.

என்னத்துக்கு அதெல்லாம் ?

மூக்குத் தூளும் விக்கற பெரிய கடையாச்சுதே. இதெல்லாம் வைத்தால் நாலு பேர் வேடிக்கை பார்க்க வருவான். அதிலே ரெண்டு பேர் வியாபாரம் பண்ணிப் போவான்.

ஆனாலும் என் காலத்துச் சரக்கா இருக்க வேணமா ?

அதான் பொடியும் புகையிலையும் இருக்கே. அது உங்க காலத்து சமாச்சாரம் தானே.

வேணாம். சரிப்படாது. அங்கே மரத்தடியிலே ஒரு சாது பிரசங்கம் பண்றார். அவருக்கு வேணுமாயிருக்கும். நான் சித்த தூங்கி எந்திருக்கறேனே ? கருத்தான் காத்துண்டிருப்பான். போகணும்.

பழுக்காத்தட்டு இருக்கட்டும், இந்தப் படங்களைப் பாருங்க. மஹா உல்லாசமான விஷயம் எல்லாம்.

குட்டையன் வெங்காயம் சாப்பிட்ட நெடியடிக்கப் பக்கத்தில் இருந்து வார்த்தை சொல்லியபடிக்கு ஒரு புத்தகத்தை நீட்டினான். அதில் பக்கத்துக்குப் பக்கம் பலவிதத்தில் போகத்தில் ஈடுபட்ட வெள்ளைக்காரிகள். நடுவே கட்டுக் குடுமியோடு சங்கரன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:32 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் முப்பத்து நான்கு

என்ன அய்யர்சாமி, காலையிலே வருவீஹன்னு பாத்தேன். தலையே தட்டுப்படலே.

கருத்தான் கேட்டான்.

நேரமாயிடுச்சு கருப்பா.

சங்கரன் கடைக்கு முன்னால் பொருத்தியிருந்த பலகையில் உட்கார்ந்தபடிக்குச் சொன்னான்.

எதிர்ப் பலகையில் அந்த தெலுங்குப் பிராமணன் உட்கார்ந்திருந்தான்.

இன்னிக்கு ஏதோ கிரகச்சாரமாமே. அய்யமாரு எல்லாம் சூரியனைப் பிடிச்ச ஷைத்தான் தொலஞ்சு போவட்டும்னு நூத்தொம்பது தடவை தொப்பக் குளத்துலே முளுக்குப் போடணுமாமே ?

எந்த வல்லாரவோளி சொன்னான் அப்படி ?

சங்கரன் கேட்டான்.

தமிழ் பிராமணாளுக்கு கிரஹணத்துக்கு அனுஷ்டானம் நிறையவோ ?

தெலுங்கன் கேட்டான்.

இவன் கிட்டே என்ன உபசார வார்த்தை வேண்டிக் கிடக்கு ? நில்லுன்னா நிக்கணும். உக்காருன்னா உக்காரணும். கருத்தானுக்குக் காரியஸ்தன். நாளைக்கே நாமளும் இங்கே பாகஸ்தன் ஆயிட்டா நமக்கு முன்னாடியும் இவன் மதுரைத் தாணுப்பிள்ளை மாதிரி கைகட்டி யாசிச்சு நிக்கணும்.

நீர் எப்ப வந்தீர் ஓய் ? உம்மை மதியத்துக்கு வரச் சொல்லியிருந்தோமே.

சங்கரன் அதட்டலாகக் கேட்க, தெலுங்கன் எழுந்து நின்று அவனை நமஸ்கரித்தான்.

பெரியவா மன்னிக்கணும். நான் கடை திறக்கறதுக்கு முன்னாலேயே வந்து காலையிலேருந்து இங்கே தான் காத்துண்டிருக்கேன்.

கிரகணத்துக்குக் குளிச்சீரா ஓய் ? இல்லே தெலுங்கு பேசறவா எழவுக்கு மட்டும்தான் குளிப்பாளா ?

எழவுக்கு மட்டுமென்ன ஸ்வாமி ? எல்லாத்துக்கும் தான் ஸ்நானம். ராத்திரி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் குளிச்சுட்டு அக்னி ஹோத்ரம் பண்ணிட்டுத்தான் ஆகாரம். நாலு தலைமுறையா அப்படித்தான்.

அய்யர் சாமி, இந்த மனுசர் நான் ரமலானுக்கு நோம்பு இருக்கறது போல, பல்லுல பச்சத்தண்ணி படாம உக்காந்திருக்கார் நாள்முச்சூடும். வண்டியிலே வச்சுத் தள்ளிட்டு வாளப்பளம் வித்துட்டுப் போனான். நாலு வாங்கித் துண்ணு அய்யரேன்னேன். வாணாம்னுட்டாரு.

சங்கரனுக்குத் தன் மேலேயே கோபமாக வந்தது. சாப்பிட்ட கையோடு கிளம்பியிருந்தால் இரண்டு மணியைப் போல் வந்திருக்கலாம். முச்சந்திக்கு வந்து நின்று சிரம பரிகாரம் செய்து கொண்டு கிளம்ப நினைத்தது தப்பாகி விட்டது.

போகட்டும். இப்ப வந்த வேலையைப் பார்த்து இந்தத் தெலுங்குப் பிராமணனை அனுப்பி வைக்க வேண்டும். இன்னிக்கு ராத்திரிக்குள் இவன் பட்டினியால் செத்துப் போனால் சங்கரனைத்தான் பிரம்மஹத்தி பிடிக்கும். சாமிநாதனைப் பிடித்தவள் போல் அது பெண்பிள்ளையாக இருந்தால் அவளோடும் கிரீடை பண்ணலாம்.

மனம் முழுக்க போகத்திலேயே முழுகிக் கிடக்கிறது. அந்த நூதன வண்டிக் களவாணிகள் புஸ்தகத்தை விரித்துக் கொக்கோகச் சித்திரமென்று விஸ்தாரமாகக் காட்டிப் போனது நிசமா சொப்பனமா என்று தெரியவில்லை. அந்தப் புஸ்தகம் வெகு சுத்தமாக ஞாபகம் இருந்தது. ஒவ்வொரு படமும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. கிரீடை செய்யும் வெள்ளைக்காரிகள். நடுவிலே அவன்.

பெரிய இரைச்சலோடு கருப்புப் பட்டிணம் போகிற நாலு வண்டிகள் வந்து களேபரமாக யாரோ வண்டிக் கூலி விஷயமாகச் சண்டை போட்டுச் சத்தம் கூட்டி எழுப்பி விட்டிருக்காவிட்டால் அவன் வேட்டியை நனைத்துக் கொண்டு திரும்பிப் போயிருப்பான்.

இதென்ன மனசு குறக்களி காட்டுகிறதா ? சதா சம்போகம் சம்போகம் என்று அடித்துக் கொண்டு. அந்தக் கொட்டகுடித் தாசி வேறே இறங்கிப் போகமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டு வஜ்ரப்பசை போட்டு ஒட்டினதுபோல் மனசில் அப்பிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். பகவதிக்குட்டியோடு பாய் போட்டுப் படுத்தால் தான் இதெல்லாம் சமனப்படும் போல.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:33 pm

உமக்குக் கல்யாணம் ஆச்சுதா ?

தெலுங்கனைப் பார்த்துக் கேட்டான் சங்கரன்.

இன்னும் இல்லை. அடுத்த வருஷம் செய்யணும் என்று என் தாயார் முரண்டு பிடிக்கிறாள்.

நாலு தம்பிடி பொடி கொடும் சாயபு.

வந்து நின்ற ஆள் வஸ்தாது போல இருந்தான். பீங்கான் ஜாடியில் இருந்து நேர்த்தியாகப் பொடியைக் கரண்டியால் எடுத்து அதை வாழைமட்டையில் அடைத்துக் கொண்டிருந்த கருத்தானைப் பார்த்தபடிக்கு, கல்யாணம் என்று சொல்லி ஒரு மாசம் ரெண்டு மாசம் வராமல் தெலுங்கு பிரதேசத்துக்குச் சவாரி விட்டுடுவீரா என்று தெலுங்கனைக் கேட்டான் சங்கரன்.

உத்தியோகம் இங்கே நிச்சயம் என்ற திருப்தி முகத்தில் தெரிய, அதெல்லாம் இல்லே சார், எல்லாம் இங்கேயே தான். என்ன ரெண்டு மூணு நாள் லீவு எடுக்க வேண்டி வரும் என்றான் தெலுங்கன்.

லீவு என்றால் என்ன என்று தெரியவில்லை சங்கரனுக்கு. தெலுங்கனுக்கு இங்கிலீஷ் அத்துப்படி ஆயிருந்ததில் அவனுக்குக் காரணமில்லாமல் அசூயை வந்தாலும் அவன் தன்னை சார் என்று விளித்ததில் ஏகப் பெருமை.

அஸ்ஸலாம் அலைகும்.

ஜவ்வாதும், அரகஜாவுமாக மூக்கைத் துளைத்தது. கருத்தானை விட ரெண்டு மடங்கு பெரிய ஆகிருதியோடு சரிகைக் குல்லாய் வைத்துக் கொண்டு ஒரு துருக்கன் கருத்தானுக்கு சலாம் சொன்னான்.

இரண்டு பக்கத்துப் பலகையையும் பார்த்துவிட்டு, அவன் தெலுங்கு பிராமணன் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். அவன் கொஞ்சம் தள்ளி உட்கார, துருக்கனும் அதே விதம் தள்ளிப் போனபடி சிரித்தான்.

ஏன் அய்யரே ஓடறே. உன்னோட வியர்வை என்னைக் கஷ்டப்படுத்தாது.

தெலுங்கன் இந்த மாதிரித் தருணங்களில் மெளனமாக இருப்பதே நல்லது என்பதுபோல் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு பொடி வாங்க அடுத்து வந்த ஒரு சிப்பாய் இடுப்பில் செருகி இருந்த நாட்டுத் துப்பாக்கியைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.

சிப்பாய் கடன் சொல்லிப் பொடி வாங்கிப்போக, அவன் போன பிறகு சைத்தான் கா பச்சா என்றான் கருத்தான்.

கொடுக்க மாட்டேன்னு சொல்ல வேண்டியதுதானே பாய் ? கொட்டையையா நெறிச்சுடுவான் ?

வந்த துருக்கன் பலமாகச் சத்தம் போட்டுக் கேட்டான். தெருத் திரும்பிக் கொண்டிருந்த சிப்பாய்க்கு அது கேட்டிருக்கலாம் என்று சங்கரனுக்குச் சந்தேகமாக இருந்தது.

சுலைமான், வாயை மூடிட்டு இருக்க மாட்டியா ?

கருத்தான் அவனைக் கடிந்து கொண்டான்.

இல்லே மாப்பிள்ளே. இவனுஹள ஒரு மட்டத்துலே வைக்கணும். பயந்தா கொருமா பண்ணித் தின்னுடுவான் நம்மளை.

அந்தச் சனியன் பிடிச்சவனை விடு. இவுஹ தான் அய்யர்சாமி. நம்ம வாப்பா தோஸ்த் இல்லே அரசூர் பெரிய அய்யர்சாமி அவரோட மகன்.

துருக்கன் ஏழடி நாலடியாகக் குனிந்து சங்கரனுக்கு சலாம் சொன்னான்.

நம்ம பாகஸ்தரா ? வாரே வா தோஸ்த். சுலைமானுக்கு ரொம்ப சந்தோசம் உன்னைப் பாத்ததுலே.

கருத்தான் சங்கரனிடம் ஏற்கனவே சுலைமானைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். இந்த வியாபார அபிவிருத்தியில் மூன்றாவது பாகஸ்தன். கருத்தானின் குப்பி அதாவது அத்தை மகன். அவனும் அவன் அப்பனும் ஊரில் ஏகப்பட்ட தொழில், வியாபாரம் என்று பார்க்கிறார்கள். கப்பலில் வந்து இறங்கும் வெள்ளைக்காரர்களைக் கரைக்குக் கூட்டி வந்து அவர்கள் செளகரியத்தைக் கவனித்துக் கொள்வதிலிருந்து, மூக்குப்பொடி, தோல் செருப்பு, இடுப்பு வார், உலர்ந்த திராட்சைப் பழம் விற்பது என்று ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லை.

அடுத்த வாரம் சரக்கு வரது. சுலைமான் காக்கா கிட்டப் பணம் கொடுத்து விட்டுடலாம் என்று சொல்லியிருந்தான் கருத்தான்.

சங்கரன் கையில் பிடித்திருந்த சஞ்சியிலிருந்து செட்டியார் கடை தரிசன உண்டியலை எடுத்தான்.

மன்னிக்கணும். இந்தக் கருத்தான் கடன்காரன் தம்புச்செட்டி தெருவிலே உண்டியலை மாத்தி ரொக்கமாக்க இன்னிக்குப் போகலாம் நாளைக்குப் போகலாம்னு சொல்லிண்டே இருக்கான். பிருஷ்டம் வணங்க மாட்டேங்கறது அதுக்கு. எப்படியும் நாளைக்கு மாத்தி சரக்கு பிடிக்கப் பணம் கொடுத்துடறேன்.

சங்கரன் சொல்லி முடிப்பதற்குள் தெலுங்கன் குறுக்கே புகுந்தான்.

அதெதுக்கு சார் ? நீங்க இவாளுக்கு இண்டார்சு பண்ணிக் கொடுத்திட்டாப் போறது. தரிசன உண்டிதானே ? இவாளே மாத்திக்கலாம். இல்லே இவா சரக்கு வாங்கற எடத்துலே அவா பேர்லே இன்னொரு இண்டார்சு பண்ணினாத் தீர்ந்தது விஷயம். பேரேட்டிலே உண்டியலுக்கு ஒண்ணும், காசு வசூல், வரவு செலவுக்கு ஒண்ணுமாக் கணக்கு எழுதி அப்புறம் வரவு செலவு நிலுவை எடுத்தாப் போதும். நீங்க சப்ளை பண்ணப் போறவா கிட்டேயும் உண்டியலாவே வாங்கிண்டா ராஜாங்கத்துக் கட்ட வேண்டிய வரியும் மிச்சமாகுமே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:34 pm

அவன் கண்ணுக்கு முன் தான் அற்பப் பதராகக் குறுகிப் போனதாக சங்கரனுக்குத் தோன்றியது. கிணறு வெட்ட வெட்ட பூதமும் புதையலும் வருகிறது போல, தெலுங்கனிடம் கோணிச்சாக்கில், துணிப்பையில், மடிசஞ்சியில், சருவப் பானையில், குண்டானில், குவளையில் எல்லாம் பிடித்து வைத்தாலும் தீராத விஷய ஞானம் இருக்கிறது. துரைத்தன பாஷை சரிக்குப் பேச வராவிட்டாலும் அர்த்தமாகிறது. மட்டுமில்லை. சரியான நேரத்தில் சரியான பிரயோகத்தை வாக்கில் கொண்டு வந்து நிறுத்துகிற சரஸ்வதி கடாட்சம் வேறே இவனுக்குப் பூரணமாக இருக்கிறது. தவிர, துரைகள் திட்டம் செய்து வைத்தது போல கணக்கு எழுதக் கூடியவன்.

சுலைமானும் கருத்தானும் அந்த வத்தல்காச்சித் தெலுங்கனைப் புது மரியாதையோடு பார்த்தார்கள்.

சாமி, நாளைக்குக் காலையிலே வந்துடுங்க. நாள் எல்லாம் நல்லாத் தானே இருக்கு ?

கருத்தான் தெலுங்கனுக்கு மாசாமாசம் ஐந்து ரூபாய் கொடுக்க சம்மதித்துவிட்டான்.

சம்பளம் தவிர வெள்ளிக்கிழமை பகலுக்கு மேல் கருத்தான் தொழுகைக்குப் போகிறபோது வாரம் அரை நாள் கடை அடைப்பு. அமாவாசைக்கு முழு அடைப்பு. ரம்ஜான், தீபாவளிக்குக் கடைக்கு வர வேண்டாம்.

தெலுங்கன் அந்த இரண்டு துருக்கர்களுக்கும், தமிழ்ப் பிராமணனுக்கும் தனித்தனியாக நமஸ்காரம் சொல்லி, கையில் ஐந்து ரூபாய் முன் பணமாக வாங்கிக் கொண்டு கிளம்பிப் போனான்.

கம்பேனி காரியஸ்தன்னா கெளரதையான உடுப்பு வேணும். நாளைக்கு எல்லாம் எடுத்து வச்சுட்டு, புதன்கிழமை வரேன். நாள் நல்லா இருக்கு அன்னிக்குத்தான்.

அவன் சொன்னதற்கு யாருமே மறுப்புச் சொல்லவில்லை.

நெறைய விஷயம் தெரிஞ்சவனா இருக்கான். ஒரு விதத்துலே நல்லது.

சுலைமான் சொன்னான்.

வேறே எதாவது விதத்துலே நல்லது இல்லியா ?

சங்கரன் கேட்டான்.

அது நாம நடந்துக்கறதைப் பொறுத்த விஷயம் தோஸ்த்.

சங்கரனுக்கு என்ன என்று சொல்ல முடியாத நிம்மதி.

கருத்தா, இருட்டிண்டு வரதே. கடையை எடுத்து வச்சுட்டு வா. சமுத்திரக் கரையிலே காலாற நடந்துட்டு வரலாம்.

அவன் கூப்பிட்டபோது சுலைமான் வேண்டாம் என்று கையைக் காட்டினான்.

கருத்தான் போவட்டும். பீவி வாயும் வயறுமா நிக்கிறா அவனுக்கு. நீ வா. கப்பலுக்குப் போகலாம். மத்தியானம்தான் வந்து நங்கூரம் போட்டுச்சு.

நானா ? கப்பலுக்கா ?

ஏன் அய்யரே, கப்பல்லே ஏறினா தீட்டுப் பட்டுப் போயிடுவியா ? கடல்லே சவாரி போனாத்தானே உங்க ஆளுகளுக்குத் தீட்டு ? நீ அதும் போயிட்டு வந்ததாச் சொன்னானே கருத்தான் ?

தீட்டுக்கு இல்லே. நான் கப்பல்லே வந்து என்ன பண்ணப் போறேன் ?

நாலு மனுஷாளைப் பார்க்கலாம் சாமிகளே.

கருத்தான் கடைக்குள் இருந்து சுண்ணாம்புக் கட்டியால் என்னமோ குறித்திருந்த பலகைகளை எடுத்து வந்து வாசலில் வைத்தபடி சொன்னான்.

சங்கரனுக்குக் கப்பலில் ஏறி உள்ளே போய் யந்திரங்களை, பிரயாணமாக வந்தவர்களை, அவர்களுக்கு வாய்த்த வசதிகள், செளகரியம் எல்லாம் பார்க்க இஷ்டம் தான். ஆனால் இருட்டிக் கொண்டு வருகிறதே.

ஏன் கவலைப்படறே தோஸ்த். பக்கத்துலே தான் வூடு. வண்டியை ஒரு விரட்டு விரட்டினா பத்து நிமிசத்துலே ஆர்பர். அப்புறம் கட்டு மரத்துலே இன்னொரு பத்து நிமிசம் கடல்லே போனா கப்பல். ஏறிப்பாத்துட்டு ராத்திரி ஒம்பது மணியைப் போல வந்துடலாம். நொங்கம்பாக்கத்துக்கு உன்ன வண்டியிலேயே கொண்டு விட்டுடறேன். ஆளு அம்பு ஆனை குருதை அல்லாம் இருக்கு நம்ம கிட்டே படச்சவன் கிருபையிலே.

ஒரு கவலையும் இல்லை. கப்பலில் ஒண்ணுக்குப் போக எல்லாம் சவுகரியம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆபத்துக்குப் பாவம் இல்லை. சுலலமான் வீட்டிலேயே காதில் பூணூலை மாட்டிக் கொண்டு தோட்டத்துக்குப் போய் அற்ப சங்கையை தீர்த்துக் கொண்டு, ஜலம் வாங்கிக் கைகால் கழுவிக் கொண்டால் ஆச்சு. துருக்க வீட்டில் நுழைந்தால் ஜாதிப் பிரஷ்டம் பண்ணுவதாக பட்டணத்து வைதீகன் எவனாவது சொன்னால் ?

அவனுக்கு ஒரு கவலையும் இல்லை. பட்டணத்து வைதீகன் எல்லாம் மயிலாப்பூரில் மூத்திரச் சந்தில் கிரஹணத்தை விரட்ட மந்திரம் சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருக்கட்டும். அரசூர் வைதீகர்களுக்கு சங்கரன் பட்டணத்தில் எக்கேடு கெட்டு யாரோடு சுற்றித் திரிந்தாலும் ஒரு கவலையும் இல்லை. அவன் திரும்பிப் போய், ஆவணி அவிட்டத்துக்குப் பூணூல் மாற்றிக் கொண்டு தட்சணை கொடுத்து அபிவாதயே சொல்லி நமஸ்காரம் பண்ணினால் போதும்.

கிளம்பலாம் என்றான் சங்கரன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:38 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் முப்பத்தைந்து


கட்டுமரம் அலையில் மிதந்தும் அதோடு தாழ்ந்தும் உயர்ந்தும் அனுசரித்துப் போவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு சமுத்திரப் பரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமைல் இப்படியே சமாதானமாகப் போனால் கப்பல் வந்துவிடும்.

கப்பல் பாட்டுக்கு அங்கே வெள்ளைக்காரத் திமிரோடு, கருப்பு நாயே என்னடா துறைமுகம் வச்சு முடியைப் பிடுங்குறே எம்புட்டு நேரமா நிக்கறேன். எவனாவது வந்து மரியாதை செஞ்சு கும்பிட்டு விழுந்தீங்களாடா என்று நீள உயர நிமிர்ந்து நின்று விசாரித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் வந்தாலும், இறங்கிக் காலில் கரை மணல் ஒட்ட நடந்தாலும், வியர்வை மின்னும் நாலு கருப்புத் தோளில் பல்லக்கு ஏறிக் கெத்தாக நகர்ந்தாலும், மனுஷ நெரிசல் அடர்த்தியாகக் கவிந்த பாதையில் குதிரைக்கும், எதிர்ப்படுகிற கருப்பனுக்குமாகச் சவுக்கைச் சுழற்றி வீசி சாரட்டில் ஓடினாலும் வெள்ளைத் தோலுக்குள்ளும் வெளியிலும் பிதுங்கி வழிகிற திமிர் அது.

வாராண்டா வாராண்டா வெள்ளக்காரன்

வந்தாண்டா வந்தாண்டா தாயோளி

பக்கத்துக் கட்டுமரத்தைச் செலுத்துகிறவன் பாடுகிறான். சுலைமான் அவன் அம்மாளையும் அக்காவையும் தீர்க்கமாக வைகிறான். பாடினவனும் மற்றவர்களும் ஏகத்துக்குச் சிரிக்கிறார்கள். சங்கரனுக்கும் சிரிப்பு முட்டிக் கொண்டு வருகிறது. பளிச்சென்று முகத்தில் அறைகிறதுபோல் தண்ணீரை வீசிப் போகிறது வந்த அலையொன்று. சுலைமான் திரும்ப வைகிறான். தமிழில் இருக்கப்பட்ட வசவு எல்லாம் போதாதென்று இந்துஸ்தானியிலும் திட்டுகிறான். அதில் நாலைந்து கேட்க ஏக ரசமாக இருக்கிறது சங்கரனுக்கு. வைத்தி சாரோ அந்தத் தெலுங்கு பிராமணனோ இங்கிலீசில் தஸ்ஸு புஸ்ஸு என்றால் இந்துஸ்தானியில் மனதுக்குள்ளாவது திட்டிக் கொள்ளலாம்.

ஊரில் கொட்டகுடித் தாசிக்கு இந்துஸ்தானி குருட்டுப் பாடமாகத் தெரியும். அவளுக்கு வெண்பாவும், தரவு கொச்சகக் கலிப்பாவும், விருத்தமும் கூட இயற்றத் தெரியும். கூளப்ப நாயக்கன் காதல் பாட்டுக்கு அபிநயம் பிடிக்கத் தெரியும். புகையிலை போடமாட்டாள். போட்டால் பல் கருத்துப் போய் தொழில் நசித்து விடும் என்ற பயமாம். சங்கரன் கடையில் அவளுக்கு வாங்க ஒன்றும் இல்லை. வாங்காட்டப் போறது. சுவர் கே பச்சே அப்படான்னா என்ன ?

அய்யரே, ஒரு சிமிட்டா பொடி மூக்குலே தள்றியா ?

சுலைமான் தந்தத்தால் ஆன சம்புடத்தைக் காற்றுக்கு அணைவாகக் கைக்குள் வைத்துத் திறந்தபடி கேட்டான்.

பெண்பிள்ளைகள் இதைப் போடுவாங்களோடா சுலைமான் ?

அய்யரே, உனக்கு என்ன எப்பப் பாத்தாலும் அங்கேயே போவுது புத்தி ?

சுலைமான் அவன் பிருஷ்டத்தில் ஓங்கித் தட்டினான்.

மூணு மணி நேரத்துக்குள் கருத்தானைவிட நெருக்கமான சிநேகிதனாகி இருந்தான் சுலைமான். பணம் புரளும் சீமான் என்பதாலோ என்னமோ அவனையறியாமலேயே அதட்டலும், கிண்டல், கேலியுமாகப் பழகக் கை வந்திருந்தது. கருத்தான் ஒரு எல்லைக்கு மேல் போக மாட்டான். அவனுடைய அய்யர் சாமி அழைப்பு சங்கரனுக்குப் பாதுகாப்பாக இருந்தது. சுலைமானுக்கு அவன் வெறும் அய்யர்தான். சீக்கிரமே டேய் சங்கரா என்றும் கூப்பிடக் கூடும். சங்கரனை விடப் பத்து மடங்கு காசும் பணமும் கப்பலில் வரும் வருமானமும் அவனுக்கு ஆகிருதியைக் கூட்டிக் காட்டுகிறது.

அவன் வாப்பா தஸ்தகீர் ராவுத்தருக்கும் தான்.

விசாலமான வீட்டு வாசலிலே குரிச்சி போட்டு உட்கார்ந்து வெற்றிலைக்குள் புகையிலையோ வேறு எதோ கலந்து சுருட்டிக் கிராம்பு வைத்து அடைத்த பொட்டலத்தைச் சதா மென்று படிக்கத்தில் துப்பிக்கொண்டு இருந்த அவர் பார்வையில் சங்கரன் பட்ட கொஞ்ச நேரத்திலும் பணத்தைப் பற்றித்தான் பேசினார்.

மதுரைப் பட்டணத்திலே, திருச்சிராப்பள்ளியிலே, தஞ்சாவூரிலே, புதுக்கோட்டையிலே எல்லாம் பாக்குச் சீவல் விற்கவும், வாசனை விடயம் விற்கவும், மூக்குத்தூள் போல் சீக்கிரமே பிரக்யாதி ஏறிக் கொண்டிருக்கிற இலைச் சுருட்டு விற்கவும் யாரெல்லாம் கிளம்பி இருக்கிறார்கள். அவர்களின் பணம் வந்த விதம், அவர்களுக்கு எங்கெல்லாம் வைப்பாட்டிமார், எப்படிச் செலவாகிறது பணம் அந்த விஷயமாக, எவ்வளவு அண்டஞ் சேர்கிறது என்று பட்டியல் ஒப்பித்தபடி, பக்கத்தில் நிரம்பி வழிகிற படிக்கத்தில் துப்பியபடி இருந்தார் அவர்.

வீட்டுக் கூரை மேலும், மேல்தளத்திலும், வாசல் முகப்பிலும் சுவாதீனமாகப் பறந்து கொண்டிருந்த புறாக்கள் மேலே எச்சம் இடாமல் தோளை அப்படியும் இப்படியும் நகர்த்திக்கொண்டு அவன் மரியாதைக்கு இதைக் கேட்டுக் கொண்டிருந்க, மாடிக்குப் போன சுலைமான் கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி சங்கரய்யரே சங்கரய்யரே என்று உரக்க விளித்தான்.

செருப்பாலடி படுவா. பெயரைச் சொல்றான் துருக்கன். எல்லாம் பணம் பண்ற வேலை என்று நினைத்தபடி சங்கரன் படியேறிப் போனாலும் அடுத்த நிமிடம் மனம் மாறிப் போனது.

தோஸ்த், இங்கேயே அடைப்பைத் தொறந்து வுடு.

கடன்காரன் மாடியிலேயே கழிப்பறை வைத்திருக்கிறான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:39 pm

என்னடா சுலைமான், வீட்டுக்குள்ளேயே இப்படி.

அடக்க மாட்டாமல் சிரித்தான் சங்கரன்.

அட என்னாபா நீ, கக்சுக்குள்ளே போய்க் குடித்தனம் நடத்தப் போறமா இல்லே பிரியாணி சாப்பிடப் போறோமா. அது பாட்டுக்கு அது ஒரு ஓரமா. இது பாட்டுக்கு இது நடுவுலே.

அவன் காட்டிய மகா விசாலமான மண்டபத்தில் கம்பளம் விரித்து வெல்வெட் உறை மாட்டிய திண்டும் தலகாணியுமாகக் கிடந்தது. நீக்கமற நிறைந்த அத்தர் வாடை.

அற்ப சங்கைக்கு வீட்டுக்குள்ளேயே அமைத்திருந்த இடமும் வெள்ளைப் பளிங்கினால் பாதம் அமைத்த மாதிரி நேர்த்தியாக, உள்ளே சுகந்த பரிமள மணம் சதா வீசுமாறு இருந்தது.

காசு கூடிப் போனால் மூத்திரம் கூட வாசனையடிக்கும் போல என்று நினைத்தபடியே சங்கரன் போன காரியம் முடிந்து வரும்போது கவனித்தான் அந்த அறைக்குள்ளேயே ஸ்நானம் கூட முடிக்க வசதி இருக்கிறதென்று.

அய்யரே கிளம்பலாமா. நாலஞ்சு கொடம் வச்சிருப்பே போலேருக்கே..

திண்டில் சாய்ந்து ஒரு துணிச் சஞ்சிக்குள் ஏதோ அடைத்துக்கொண்டிருந்த சுலைமான் சத்தமாகச் சொன்னது கீழ் வீட்டில் முட்டாக்குப் போட்டபடி நடமாடிக் கொண்டிருந்த பெண்பிள்ளைகள் காதிலும் விழுந்திருக்கும்.

அவனோடு கூடப் படியிறங்கிக் கீழே வந்தபோது, தஸ்தகீர் ராவுத்தர் தோளுக்கொன்றாகப் புறா உட்கார்ந்திருக்க, முகம்மதிய சுல்தான் போல் நீள ஹூக்காவுக்குள் தண்ணீர் களக் களக் என்று புரளப் புகைவிட்டுக் கொண்டிருந்தார்.

அரே முன்னா, கப்பல்லே வந்திருக்கிற ஒரு ஆத்மி விடாம விவரம் கேட்டு வச்சுக்க. காலையிலே ஏற்பாடு எல்லாம் செஞ்சுட்டு நான் போகணும். பணமுடை யாருக்குன்னு விசாரிக்க விட்டுடாதே. இந்த அய்யர் பச்சாவுக்கு இங்கிலீஷ் தெரிஞ்சா உபயோகமா இருக்கும். பரவாயில்லே. ஆள் கட்டுக் குடுமியும் ஜிமிக்கியுமா நல்லாத்தான் இருக்கான். வெள்ளைக்காரனுக்கு இப்படிப் பார்ப்பாரப் பிள்ளை, பாம்புப் பிடாரன், இந்திரஜால மந்திரவாதின்னு பாத்தாத்தான் கடல்லே இருந்து நிலத்துலே கால் வைப்பான்.

ராவுத்தர் தன்னை புகையிலை வியாபாரி, இப்போ புது வியாபாரத்தில் கொடி நாட்டிப் பிரக்யாதி பெற வந்த, வியாபார நெளிவு சுளிவு தெரிந்த அரசூர்ச் சங்கரய்யராகப் பார்க்காமல் குடுமியும் கடுக்கனுமாக வெள்ளைக்காரன் கண்ணில் பட்டு சந்தோஷப்படுத்த வேண்டி ஜன்மம் எடுத்த விநோதப் பிறவியாகப் பார்த்ததில் சங்கரனுக்குக் குறைச்சல் தான்.

நாளைக்கு அவனும் நிறையச் சேர்த்து வைத்தி சார் போல், அதைவிடப் பெரிதாக தஸ்தகீர் ராவுத்தர் போல் சமுத்திரக் கரையிலிருந்து வந்து காற்று சாயந்திரங்களில் பேசிவிட்டுப் போகும் அரண்மனை மாதிரி வீடு கட்டுவான். வீட்டுக்குள்ளேயே மாடியில் ஒரு கழிப்பறை ஏற்பாடு செய்ய வேண்டும். சுப்பிரமணிய அய்யரும், சுந்தர கனபாடி மாமாவும் கச்சேரி ராமநாதய்யரும் அவருடைய அவசர அவிழ்ப்பில் தெறித்த சுக்லத்திலிருந்து வழுக்கையும் தொந்தியும் தொப்பையுமாக வடிவெடுத்து வந்த வைத்தி சாரும் எல்லாம் அஸ்துக் கொட்டுவார்கள். சுப்பம்மா அத்தை வாயில் இருந்து மூத்த குடிப் பெண்டுகள் வேறே ஆயிரத்தெட்டு நொட்டச் சொல் சொல்லிப் பாட்டாகப் பாடி முட்டுக்கட்டை போடுவார்கள். ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் யந்திரம் ஸ்தாபித்துக் கொடுத்தால் சரியாகிவிடும் எல்லாம். அற்ப சங்கை செய்தபடிக்கே கீழே குளிக்கிற ராணியைப் பார்க்கலாம். அவள் இங்கே எங்கே வந்தாள் ?

கள்ளுக் குடித்தமாதிரித் தாறுமாறாக ஓடிய இரட்டைக் குதிரைகளின் காலுக்கு நடுவே மிதிபடாமல் தாவிக் குதித்து ஓடிய பட்டணத்து ஜனங்கள் அசிங்கமாகத் திட்ட சுலைமான் சந்தோஷமாகச் சிரித்தபடியே வண்டியை ஓட்டம் ஓட்டமாக விரட்டி வந்து துறைமுகத்தை அடைந்தபோது, இவனுக்கு எதற்கு வண்டிக்காரன் என்று தோன்றியது சங்கரனுக்கு. வண்டிக்காரன் அழுக்கு முண்டாசும், கடைவாயில் அடக்கிய புகையிலையுமாக, வண்டிக்குப் பின்னால் கால் வைத்து ஏறும் இடத்தில் காலடி மண்ணுக்கும் தோல் செருப்புக்கும் நடுவிலே திருப்தியாக உட்கார்ந்திருந்தான்.

ஹராம் கோட். வண்டியைப் பாத்துக்கோ பத்திரமா. குருதைக்குப் புல்லுப் போடு. தூங்கிடாதே கஸ்மாலம்.

அவன் கட்டுமரத்தில் ஏறும்போது வண்டிக்காரனுக்குப் பிறப்பித்த உத்தரவை ரொம்ப ரசித்து மனதில் சொல்லிச் சொல்லிப் பார்த்துக் கொண்டான் சங்கரன். பட்டணத்தில் ஒரு வருஷம் ஜாகை அமைத்து இருந்தால் அவனுக்கும் இதெல்லாம் நாக்கில் வெள்ளமாக வரும்.

அஹோய் அஹோய்.

கப்பலின் மேல்தளத்தில் நின்றிருந்த வெள்ளைக்காரன் நீளக் குழலைப் பிடித்து அதன் மூலம் பார்த்தபடி கூவியது கட்டுமரத்தில் கேட்டது.

லண்டன்லேயும் இப்படி சமுத்திரக் கரை இருக்காடா சுலைமான் ?

சங்கரன் அப்பாவியாகக் கேட்டான்.

அங்கே ஏது சமுத்திரம். பக்கத்துலே டோவருக்குப் போகணும்பாரு வாப்பா. அவருக்குப் பூகோளம் எல்லாம் அத்துப்படி. அது கிடக்கட்டும். இவன் இங்கிலீசுக்காரன் இல்லே. அமெரிக்காக் கண்டத்து வெளுப்பான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:40 pm

அப்படான்னா ?

அது ஒரு புது தேசம்பா. நூறு வருசச் சொச்சமா இருக்காம். இங்கிலீசுக்காரன் தான்.நம்ம ஆளு லங்கைக்குப் போறான் பாரு அப்படித் தனியாப் போய்ட்டவனுங்க.

தான் இங்கிலீஷ் காரர்களைப் பக்கத்தில் வைத்துப் பார்க்கப் போவதில்லை என்பதில் சங்கரனுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் என்ன ? கப்பலில் வந்த துரை துரைதான். மூத்திரக் கொல்லையிலே பிறந்து வந்தவனாக இருந்தாலும்.

இன்னும் நாலைந்து வெள்ளை மூஞ்சிகள் கப்பல் மேல்தளத்தில் இப்போது பிரத்யட்சமாயின. குண்டோதரன் போல் ஒருத்தன். கொக்கு மாதிரி மெலிந்து உயர்ந்த இன்னொருத்தன். அப்புறம் ஒரு தாடிக்காரன். நீளப் பாவாடையும், தலையில் பெரிய தொப்பியுமாக சில வெள்ளைக்காரப் பெண்கள்.

வெள்ளைக்காரி வாசனை புடிச்சிருக்கியா தோஸ்த் ?

சுலைமான் சங்கரன் தோளில் கைவைத்து விசாரித்தான்.

உள்ளூர் ஸ்திரி வாடையே தெரியாதுடா நேக்கு. புகையிலை வாடையும் இப்ப நீ மூக்குலே போட்டுத் தும்மினியே அந்த மூக்குத் தூள் வாடையும் தான் தெரியும்.

கப்பல்லே வா. அப்பாலே எல்லாம் அத்துப்படியாயிடும்.

சொன்னபடிக்கு துணி சஞ்சியில் இருந்து ஏதோ குப்பியை எடுத்து சங்கரனின் மேல் விசிறித் தெளித்தான் சுலைமான்.

ஐயயோ, என்னடா இது எனக்கும் துருக்க வாசனை பூசிட்டே இப்படி.

சங்கரன் சங்கடப் பட்டுக் கொண்டாலும் அந்த வாசனை பிடித்துத்தான் இருந்தது. பகவதிக் குட்டிக்கும் இது பிடிக்கலாம்.

கப்பல் மேலே இருந்து நீளக் குழல் பிடித்த வெள்ளைக்காரன் ஏதோ கத்தினான். பதிலுக்குக் கையை வாய்க்குப் பக்கம் வைத்துக் குவித்து சுலைமானும் கத்தினான். வெள்ளைக்காரன் கையை அசைத்தான் வாவா என்று கூப்பிடுகிறது மாதிரி சைகையோடு.

சீமைச் சாராயம் கிடைக்குமான்னு கேக்கறான் தாயோளி. இவனுக வந்ததுமே இதைத்தான் தேடுவாங்கன்னு சஞ்சியிலே கொணாந்திருக்கேன்.

சுலைமான் சொல்லிக் கொண்டிருந்தபோதே பெரிய அலை ஒன்று கட்டுமரத்தை மூழ்கடிப்பதுபோல் மேலே உப்புத் தண்ணீரை வீசி எறிந்து போனது. உடுப்பெல்லாம் தொப்பமாக நனைந்து போனது சங்கரனுக்கு.

கண்டுக்காதே. ரெண்டு ஜதை உடுப்பு எடுத்தாந்திருக்கேன். உனக்கு வேணும்னா சொல்லு.

சுலைமான் கவலைப் படாமல் சிரித்தான்.

அவன் விழுத்துப் போட்ட இடுப்புத் துணியையும் அங்கியையும் தரிப்பதைவிட ஈரமான உடுப்போடேயே சங்கரன் நாள் முழுக்க இருக்கத் தயார். அரசூர்ப் பிராமணன் அந்நிய ஜாதி மனுஷ்யன் வஸ்திரத்தை உடுக்கிற அளவுக்கு இன்னும் போய்விடவில்லையாக்கும்.

ஏணியைப் பிடித்துக் கப்பலில் ஜாக்கிரதையாக ஏறுவதற்குள் சங்கரனுக்கு உயிர் போய்த் திரும்ப வந்தது. கீழே அலையடித்துக் கிடந்த கருநீல சமுத்திரத்தைப் பார்க்கப் பயம் கொண்டு, முன்னால் ஏணியில் ஏறிக் கொண்டிருந்த சுலைமானின் பிருஷ்டத்திலேயே பார்வையைப் பதித்தபடி அவன் பாதம் எடுத்து வைத்து மேலே போனான்.

கப்பலில் அவன் காலடி எடுத்து வைத்ததும் கலகலவென்று சிரித்துக் கொண்டு ஏழெட்டு வெள்ளைக்காரிகள் ஓடி வந்தார்கள்.

கொஞ்சம் தேவதைகள் எல்லோரும். சோகை பிடித்த வெளுப்பு முகத்தில் அப்பினாலும், மதர்த்து நின்ற மார்பும் சிறுத்த இடுப்புமாக சரீரத்தை சட்டம் போட்டுக் காட்டுகிற நீளப் பாவாடை அணிந்து நிற்கிற சுந்தரிகள். ஊருணித் தண்ணீர் போல் செம்மண் நிறத்தில் தலைமுடியும் எதையோ குழைத்துப் பூசி சிவந்து போன கன்னமுமாக நிற்கிறவர்கள்.

ஒருத்தி அவன் கையைக் குலுக்கி எதோ கேட்டாள்.

பாம்பு கொணாந்திருக்கியான்னு கேக்கறா.

சுலைமான் சொன்னான்.

நான் அரசூர்ச் சங்கரன். புகையிலை வியாபாரி. பாம்பாட்டி சங்கரன் இல்லே.

சங்கரன் வினயமாகச் சொல்ல, ஒருத்தி அவன் குடுமியைப் பிடித்து இழுத்துச் செல்லமாகக் குட்ட, இன்னொருத்தி ஏதோ சொல்ல மற்றவர்கள் நெருக்கமாக நின்று சிரித்தார்கள்.

கொஞ்சம் வியர்வை நெடி கலந்து அடித்தாலும் வெள்ளைக்காரி வாசனை போதையேற்றுகிறதாகத்தான் இருந்தது சங்கரனுக்கு.

Sponsored content

PostSponsored content



Page 11 of 17 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக