புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசூர் வம்சம் (நாவல்)
Page 2 of 17 •
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
First topic message reminder :
பாயிரம்
அரசூர் பற்றி எழுது.
முன்னோர்கள் சொன்னார்கள்.
அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.
அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.
அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.
அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.
குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.
எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.
வாசலில் செருப்புச் சத்தம்.
திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.
முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.
எழுது.
பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.
என்ன எழுதட்டும் ?
இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.
பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.
எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.
ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.
முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.
அரசூரும் இருக்கிறது.
ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.
இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.
எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.
நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.
பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.
கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.
வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.
மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.
இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?
இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.
பாயிரம்
அரசூர் பற்றி எழுது.
முன்னோர்கள் சொன்னார்கள்.
அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.
அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.
அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.
அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.
குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.
எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.
வாசலில் செருப்புச் சத்தம்.
திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.
முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.
எழுது.
பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.
என்ன எழுதட்டும் ?
இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.
பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.
எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.
ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.
முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.
அரசூரும் இருக்கிறது.
ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.
இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.
எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.
நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.
பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.
கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.
வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.
மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.
இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?
இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.
பெரியவாளை தூஷிக்காதேடி கடங்காரி. அதான் உனக்கு இத்தனை வருஷமா வம்ச விருத்தியாகம துணியை இடுக்கிண்டு தூரம் குளிச்சுண்டு கிடக்கே. எங்கப்பாவாவது மூத்ரம் ஒழிச்சார். போன ஆராட்டு சமயத்துலே பூதக்குளத்துலே இருந்து உன் தமக்கை ஆத்துக்காரர் வந்தாரே. நாள் முழுக்க மனைப் பலகையைப் போட்டுண்டு கொட்டக் கொட்ட முழிச்சுப் பாத்துண்டு, வாசலும் மித்தமும் அடிச்சுத் தூர்க்க வந்த கல்யாணிக் குட்டியைக் கையைப் பிடிச்சு இழுத்தது ஊரோட நாறினதே. ஓர்மை இருக்கோன்னோ.
சிநேகாம்பா அழுகையை நிறுத்தி சரியான நேரத்தில் சரியான விஷயம் நினைவுக்கு வந்த சந்தோஷத்தோடு இன்னும் கொஞ்சம் கீசு கீசு என்று இரைகிறாள்.
நீ ஏன் சொல்ல மாட்டே. நேத்ரம் பழுதாகி பிஷாரடி வைத்தியன் கிட்டே தைலம் புரட்டிப் போக வந்தார் எங்க அத்திம்பேர். என் குரலும் கல்யாணிக்குட்டி கொரலும் ஒரே மாதிரி இருக்கறதாலே.
மன்னி காமாட்சி பேச ஆரம்பித்து அபத்தம் பற்றிப் போனதாக மனதில் பட சட்டென்று நிறுத்திக் கொள்கிறாள்.
ஓஹோ அப்படிப் போறதா குட்டிச் சாத்தான் குசும்பு. அந்த மனுஷ்யன் உன் கையைத் தான் இழுக்கற வழக்கமா ? பகல்லே கை. அப்புறம் ராத்திரியிலே மத்ததா ?
சிநேகாம்பாள் இப்போது சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள். தன்னோடு போகத்தின் போது கூட அவள் இப்படிச் சந்தோஷித்ததில்லை என்று வாசலில் நிற்கிற கிட்டாவய்யனுக்குத் தோன்றியது. ஆலப்பாட்டில் இருந்து மடிசஞ்சியில் நாலணாவைக் கட்டிக் கொண்டு வந்து பறிகொடுத்துவிட்டு நிற்கிற அவளுடைய அப்பா விஷயம் கூட மறந்து போயிருக்கும்.
ஆமாண்டி என் பொன்னு ஆலப்பாட்டு மடத்துக்காரி. குட்டி சாத்தன் ஏவலும் மத்தியானத்துலே மல்லாத்திக் கிடத்தி வம்ச விருத்தி பண்றதையும் தவிர உங்க புருஷாளுக்கு வேறே உருப்படியா ஏதாவது காரியம் உண்டோ.
மன்னி சுருக்கென்று குத்துகிறாள்.
ஆலப்பாட்டு மடம் என்ற ஆலப்பாட்டுக் குடும்ப வீடு ஜோசியத்துக்குப் பேர்போனது. அந்தப் பெருமைக்காகவே கிட்டாவய்யனுக்கு அங்கே பெண் எடுத்தார்கள்.
சோழி உருட்டிப் போட்டுக் கணக்குக் கூட்டிப் பார்க்கிற விஷயம் ஜோசியம். அது பெண்டுகள் சச்சரவின்போது துர்தேவதைகளோடு ஈஷிக் கொண்டு இழைகிற பில்லி சூனியமாகி விடும்.
மற்றப்படி ஆலப்பாட்டு வீட்டில் மத்தியானத்தில் பெண்டாட்டியோடு சுகித்தது என்பது பிராயம் தள்ளிப்போய்க் கல்யாணம் கழிந்து வந்த ஒரு முப்பாட்டன் செய்து சிரிப்புக்கிடமான காரியம். எத்தனையோ வருஷம் முந்தின சமாச்சாரம். சிநேகாம்பாளே ஒரு சுமுகமான நேரத்தில் வேடிக்கை விநோதம் பேசிக் கொண்டிருந்தபோது காமாட்சி மன்னியிடம் சொன்னது. அதுவும் இந்தச் சந்தர்ப்பத்தில் அஸ்திரமாகப் பிரயோகமாகிறது.
ஆமா. அவா வம்ச விருத்தி பண்ணா. நீ பக்கத்திலே விசிறிண்டு நின்னே. நாலணாவை மடிசஞ்சியிலேருந்து கட்டவள் நீதானேடா.
சிநேகாம்பாள் விஷயத்துக்கு வந்துவிட்டாள். இப்போது நிறுத்தாவிட்டால் மத்தியானம் வரை இவர்கள் குளிக்காமல் கொள்ளாமல் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். நடுவே சிநேகாம்பாளின் குழந்தைகள் எழுந்து வந்தாலும் அததுகளைக் கவனித்து சவரட்சணை செய்தபடி சம்வாதம் பாட்டுக்கு முன்னால் போகும்.
ஏய் சிநேகாம்பா நிறுத்திக்கோ. சொல்லிட்டேன். இப்பவே நிறுத்திக்கோ.
கிட்டாவய்யன் கீழே இருந்து இரைகிறான்.
மன்னியை நேரடியாகக் கோபிக்க முடியாது. அவன் இரைவது அவளுக்கும் சேர்த்துத்தான்.
அந்தக் கிழவனோட மூத்திரத் துணியை நினச்சாலே குமட்டிண்டு வருது. அதுலே கையை வேறே விட்டுக் காசை எடுக்கப் பிராந்தா என்ன இங்கே ஆருக்கும் ?
காமாட்சி மன்னி முணுமுணுத்துக் கொண்டே குளிக்கக் கிளம்புகிறாள்.
சிநேகாம்பா அழுகையை நிறுத்தி சரியான நேரத்தில் சரியான விஷயம் நினைவுக்கு வந்த சந்தோஷத்தோடு இன்னும் கொஞ்சம் கீசு கீசு என்று இரைகிறாள்.
நீ ஏன் சொல்ல மாட்டே. நேத்ரம் பழுதாகி பிஷாரடி வைத்தியன் கிட்டே தைலம் புரட்டிப் போக வந்தார் எங்க அத்திம்பேர். என் குரலும் கல்யாணிக்குட்டி கொரலும் ஒரே மாதிரி இருக்கறதாலே.
மன்னி காமாட்சி பேச ஆரம்பித்து அபத்தம் பற்றிப் போனதாக மனதில் பட சட்டென்று நிறுத்திக் கொள்கிறாள்.
ஓஹோ அப்படிப் போறதா குட்டிச் சாத்தான் குசும்பு. அந்த மனுஷ்யன் உன் கையைத் தான் இழுக்கற வழக்கமா ? பகல்லே கை. அப்புறம் ராத்திரியிலே மத்ததா ?
சிநேகாம்பாள் இப்போது சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள். தன்னோடு போகத்தின் போது கூட அவள் இப்படிச் சந்தோஷித்ததில்லை என்று வாசலில் நிற்கிற கிட்டாவய்யனுக்குத் தோன்றியது. ஆலப்பாட்டில் இருந்து மடிசஞ்சியில் நாலணாவைக் கட்டிக் கொண்டு வந்து பறிகொடுத்துவிட்டு நிற்கிற அவளுடைய அப்பா விஷயம் கூட மறந்து போயிருக்கும்.
ஆமாண்டி என் பொன்னு ஆலப்பாட்டு மடத்துக்காரி. குட்டி சாத்தன் ஏவலும் மத்தியானத்துலே மல்லாத்திக் கிடத்தி வம்ச விருத்தி பண்றதையும் தவிர உங்க புருஷாளுக்கு வேறே உருப்படியா ஏதாவது காரியம் உண்டோ.
மன்னி சுருக்கென்று குத்துகிறாள்.
ஆலப்பாட்டு மடம் என்ற ஆலப்பாட்டுக் குடும்ப வீடு ஜோசியத்துக்குப் பேர்போனது. அந்தப் பெருமைக்காகவே கிட்டாவய்யனுக்கு அங்கே பெண் எடுத்தார்கள்.
சோழி உருட்டிப் போட்டுக் கணக்குக் கூட்டிப் பார்க்கிற விஷயம் ஜோசியம். அது பெண்டுகள் சச்சரவின்போது துர்தேவதைகளோடு ஈஷிக் கொண்டு இழைகிற பில்லி சூனியமாகி விடும்.
மற்றப்படி ஆலப்பாட்டு வீட்டில் மத்தியானத்தில் பெண்டாட்டியோடு சுகித்தது என்பது பிராயம் தள்ளிப்போய்க் கல்யாணம் கழிந்து வந்த ஒரு முப்பாட்டன் செய்து சிரிப்புக்கிடமான காரியம். எத்தனையோ வருஷம் முந்தின சமாச்சாரம். சிநேகாம்பாளே ஒரு சுமுகமான நேரத்தில் வேடிக்கை விநோதம் பேசிக் கொண்டிருந்தபோது காமாட்சி மன்னியிடம் சொன்னது. அதுவும் இந்தச் சந்தர்ப்பத்தில் அஸ்திரமாகப் பிரயோகமாகிறது.
ஆமா. அவா வம்ச விருத்தி பண்ணா. நீ பக்கத்திலே விசிறிண்டு நின்னே. நாலணாவை மடிசஞ்சியிலேருந்து கட்டவள் நீதானேடா.
சிநேகாம்பாள் விஷயத்துக்கு வந்துவிட்டாள். இப்போது நிறுத்தாவிட்டால் மத்தியானம் வரை இவர்கள் குளிக்காமல் கொள்ளாமல் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். நடுவே சிநேகாம்பாளின் குழந்தைகள் எழுந்து வந்தாலும் அததுகளைக் கவனித்து சவரட்சணை செய்தபடி சம்வாதம் பாட்டுக்கு முன்னால் போகும்.
ஏய் சிநேகாம்பா நிறுத்திக்கோ. சொல்லிட்டேன். இப்பவே நிறுத்திக்கோ.
கிட்டாவய்யன் கீழே இருந்து இரைகிறான்.
மன்னியை நேரடியாகக் கோபிக்க முடியாது. அவன் இரைவது அவளுக்கும் சேர்த்துத்தான்.
அந்தக் கிழவனோட மூத்திரத் துணியை நினச்சாலே குமட்டிண்டு வருது. அதுலே கையை வேறே விட்டுக் காசை எடுக்கப் பிராந்தா என்ன இங்கே ஆருக்கும் ?
காமாட்சி மன்னி முணுமுணுத்துக் கொண்டே குளிக்கக் கிளம்புகிறாள்.
கிட்டாவய்யனுக்கும் தன் மாமனார் பற்றி அப்படி ஒன்றும் பெரிய அபிப்ராயம் இல்லை. ஆனாலும் நாலணா போனது நிஜமாகவே இருக்கக் கூடும். காமாட்சி மன்னி எடுத்திருக்க மாட்டாள்தான். இந்த எழவெடுத்த பகளமும் கூப்பாடும் மனுஷனை நிலைகுலைய வைக்கிறது. பார்க்க வேண்டிய காரியம் எதையும் முழு கவனத்தோடு செய்ய முடிவதில்லை.
பெண்டுகள் இல்லாமல் போயிருந்தால் கிரஹம் தான் எத்தனை நிசப்தமாக இருக்கும்.
சத்தமும் நிசப்தமும் பெண்கள் மாத்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. வீட்டு மனுஷ்யர்கள், குழந்தைகள், ஸ்திரிகள் என்று கூடி இருந்து ஜீவிக்கிறதில் உண்டாகிற கலகமும், பிணக்கும் சந்தோஷமும் மற்றதும் இதெல்லாம்.
கிட்டாவய்யன் தலையை ஆட்டிக் கொண்டான்.
போகட்டும். அவனுக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது. பொழுது சாய ஆதிச்சநல்லூரில் இருக்க வேண்டும் அவன்.
சோமா, இருப்புச் சட்டியொண்ணையும் காணலை. பின்கட்டில் போய்ப்பார்
சத்தமாக வீட்டுக்குள் பார்த்துக் குரல் எறிந்தபடி வெங்கலப் பானைகளை ஒவ்வொன்றாகக் காளை வண்டியில் ஏற்றினான் கிட்டாவய்யன்.
இருப்புச் சட்டியெல்லாம் ராமேந்திரன் எடுத்துப் போயாச்சு அண்ணா. பூந்தி தேய்க்கும் ஜாரிணிக் கரண்டியும் கூட அவன் நேற்று உச்சைக்கே கொண்டு போனானே.
சோமநாதன் ஆள்காட்டி விரலில் எச்சில் படாமல் சக்கரைப் புகையிலையைக் கடைவாயில் திணித்தபடி உள்ளே இருந்து ஓடி வந்தான்.
ஆதிச்சநல்லூரில் கிருஷ்ணனுண்ணி நாயரின் புடமுறி நாளைக்கு. ராஜாங்க சேவகனாக இருந்த ராஜசேகரக் கைமளின் இரண்டாமத்துப் பெண்ணை, ஒன்பது கஜச் சேலை கொடுத்து வெற்றிலை பாக்கு மாற்றிக் கல்யாணம் செய்து கொள்கிறான் கிருஷ்ணனுண்ணி.
கைமளிடம் பெரிசாகக் கிருஷ்ணன் நாயர் எதுவும் கேட்கவில்லை. அவருடைய மகள் சீதேவியே அவனுக்கு எதேஷ்டம். நல்ல வலுவும் தரக்கேடில்லாத தேக வனப்பும் மிக்கவள். பரம்பில் கூடமாட வேலை பார்க்கவும், தொழுத்தில் பசுக்களைப் பராமரித்துப் பால் கறக்கவும், ஒரு மெழுக்குப் புரட்டியும், சோறும் ஆக்கிப் போடவும், சாயந்திரம் நிலவிளக்கேற்றி வைத்து நாமஜபம் செய்யவும் பழக்கமான பெண்குட்டி.
கைமளிடம் கிருஷ்ணன் நாயர் ஒரே ஒரு கோரிக்கை மாத்திரம் வைத்தான். அது கல்யாணச் சமையல் பற்றியதாக இருந்தது.
அம்பலப்புழை அய்யர் குடும்பத்திலிருந்து தேஹண்டத்துக்கு வரணும். எரிசேரியும், அவியலும், பிரதமனும் மற்றதும் எல்லாம் அய்யனும் கூட்டரும் ஆக்கியாலே தனியான ருசியும் ஸ்வாதுமாயிருக்கும்.
கிட்டாவய்யன் கிளம்பிக் கொண்டிருக்கிறான். கைமள் குடும்பக் கல்யாணம். அப்புறம் புனலூரில் ஒரு திரண்டுகுளி. கருநாகப்பள்ளியில் சாமவேத பூஷணமான ருத்தாத்திரி ஓய்க்கனின் சஷ்டி அப்த பூர்த்தி. அது கழிந்து கொல்லத்தில் கருணாகர மேனோனின் நூதன கிரஹப் பிரவேசம்.
எல்லாம் கிட்டாவய்யனோ அவன் சகோதரர்மாரோ வந்து நடத்திக் கொடுக்கவேண்டும். எரிசேரியும், புளிசேரியும், மிளகூட்டானும், சாம்பாரும், பூந்தி லட்டும், ஜாங்கிரியும், பருப்பு வடையும் அவர்கள் செய்தாலே சாப்பிடக் கழியும்.
பசியோடு காத்திருக்கிறார்கள் எல்லோரும்.
பெண்டுகள் இல்லாமல் போயிருந்தால் கிரஹம் தான் எத்தனை நிசப்தமாக இருக்கும்.
சத்தமும் நிசப்தமும் பெண்கள் மாத்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. வீட்டு மனுஷ்யர்கள், குழந்தைகள், ஸ்திரிகள் என்று கூடி இருந்து ஜீவிக்கிறதில் உண்டாகிற கலகமும், பிணக்கும் சந்தோஷமும் மற்றதும் இதெல்லாம்.
கிட்டாவய்யன் தலையை ஆட்டிக் கொண்டான்.
போகட்டும். அவனுக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது. பொழுது சாய ஆதிச்சநல்லூரில் இருக்க வேண்டும் அவன்.
சோமா, இருப்புச் சட்டியொண்ணையும் காணலை. பின்கட்டில் போய்ப்பார்
சத்தமாக வீட்டுக்குள் பார்த்துக் குரல் எறிந்தபடி வெங்கலப் பானைகளை ஒவ்வொன்றாகக் காளை வண்டியில் ஏற்றினான் கிட்டாவய்யன்.
இருப்புச் சட்டியெல்லாம் ராமேந்திரன் எடுத்துப் போயாச்சு அண்ணா. பூந்தி தேய்க்கும் ஜாரிணிக் கரண்டியும் கூட அவன் நேற்று உச்சைக்கே கொண்டு போனானே.
சோமநாதன் ஆள்காட்டி விரலில் எச்சில் படாமல் சக்கரைப் புகையிலையைக் கடைவாயில் திணித்தபடி உள்ளே இருந்து ஓடி வந்தான்.
ஆதிச்சநல்லூரில் கிருஷ்ணனுண்ணி நாயரின் புடமுறி நாளைக்கு. ராஜாங்க சேவகனாக இருந்த ராஜசேகரக் கைமளின் இரண்டாமத்துப் பெண்ணை, ஒன்பது கஜச் சேலை கொடுத்து வெற்றிலை பாக்கு மாற்றிக் கல்யாணம் செய்து கொள்கிறான் கிருஷ்ணனுண்ணி.
கைமளிடம் பெரிசாகக் கிருஷ்ணன் நாயர் எதுவும் கேட்கவில்லை. அவருடைய மகள் சீதேவியே அவனுக்கு எதேஷ்டம். நல்ல வலுவும் தரக்கேடில்லாத தேக வனப்பும் மிக்கவள். பரம்பில் கூடமாட வேலை பார்க்கவும், தொழுத்தில் பசுக்களைப் பராமரித்துப் பால் கறக்கவும், ஒரு மெழுக்குப் புரட்டியும், சோறும் ஆக்கிப் போடவும், சாயந்திரம் நிலவிளக்கேற்றி வைத்து நாமஜபம் செய்யவும் பழக்கமான பெண்குட்டி.
கைமளிடம் கிருஷ்ணன் நாயர் ஒரே ஒரு கோரிக்கை மாத்திரம் வைத்தான். அது கல்யாணச் சமையல் பற்றியதாக இருந்தது.
அம்பலப்புழை அய்யர் குடும்பத்திலிருந்து தேஹண்டத்துக்கு வரணும். எரிசேரியும், அவியலும், பிரதமனும் மற்றதும் எல்லாம் அய்யனும் கூட்டரும் ஆக்கியாலே தனியான ருசியும் ஸ்வாதுமாயிருக்கும்.
கிட்டாவய்யன் கிளம்பிக் கொண்டிருக்கிறான். கைமள் குடும்பக் கல்யாணம். அப்புறம் புனலூரில் ஒரு திரண்டுகுளி. கருநாகப்பள்ளியில் சாமவேத பூஷணமான ருத்தாத்திரி ஓய்க்கனின் சஷ்டி அப்த பூர்த்தி. அது கழிந்து கொல்லத்தில் கருணாகர மேனோனின் நூதன கிரஹப் பிரவேசம்.
எல்லாம் கிட்டாவய்யனோ அவன் சகோதரர்மாரோ வந்து நடத்திக் கொடுக்கவேண்டும். எரிசேரியும், புளிசேரியும், மிளகூட்டானும், சாம்பாரும், பூந்தி லட்டும், ஜாங்கிரியும், பருப்பு வடையும் அவர்கள் செய்தாலே சாப்பிடக் கழியும்.
பசியோடு காத்திருக்கிறார்கள் எல்லோரும்.
அரசூர் வம்சம் - அத்தியாயம் ஏழு
மூணு தலைமுறையாகக் கரண்டி பிடிக்கும் குடும்பம் கிட்டாவய்யனுடையது. பாண்டிக்கார அய்யன்மார் என்று கொல்லம் பிரதேசம் முழுக்கப் பிரசித்தம். வீட்டில் தமிழ் பேசும் குடும்பம்.
மூணு சகோதரர்கள். மூணு சகோதரிகள்.
மூத்தவன் குப்புசாமி அய்யன். அடுத்தவன் துரைசாமி அய்யன். கடைசி புத்திரன் கிட்டாவய்யன். அவனுக்குப் பத்து பிராயம் ஆனபோது தகப்பனார் போய்ச் சேர்ந்து அண்ணா குப்புசாமி அய்யன் கரண்டி உத்தியோகத்துக்குத் தலையெடுத்திருந்தான்.
குப்புசாமி அய்யன் விசாலாட்சி மன்னியையும் துரைசாமி அய்யன் காமாட்சி மன்னியையும் ஆலப்புழையில் கல்யாணம் கழித்துக் கூட்டி வந்த மறுவருடம் மருமகள் ரெண்டு பேர் கையிலும் வீட்டு நிர்வாகத்தைக் கொடுத்து விட்டு கிட்டாவய்யன் அம்மாவும் போய்ச் சேர்ந்தாகி விட்டது.
எச்சுமி கிட்டாவய்யன் அக்கா. ஒரு வயசு மாத்திரம் வித்யாசம் ரெண்டு பேர்க்கும்.
அலமேலு அவன் தங்கை. அப்புறம் பகவதி.
கடைக்குட்டி பகவதி திரண்டுகுளி இந்த இடவ மாதத்தில் தான் நடந்தது. சுந்தரிப் பெண்குட்டியான அவளுக்குக் கல்யாண ஆலோசனைகள் வந்தமணியம் இருக்கின்றன. பாண்டியில் அரசூர்ப் பட்டணத்தில் புகையிலை வியாபாரம் செய்யும் அம்மா வழி உறவிலிருந்து சம்பந்தம் குதிர்ந்திருக்கிறது தற்போது. வரன் தனுஷ்கோடி கடந்து எல்லாம் போய் வியாபாரத்தில் புலி என்று பேரெடுத்த அதி சமர்த்தனாம். அரசூர் போய்ப் பார்த்துவிட்டு வந்த கிட்டாவய்யனின் பெரியப்பா பிள்ளை பரசுராமன் வாய் ஓயாமல் சொல்கிறான்.
பகவதிக்காவது வேறு தொழில் பண்ணுகிற புருஷன் வாய்க்கட்டும். கிட்டாவய்யனின் மற்ற சகோதரிகளைக் கைபிடித்தவர்களும் கரண்டி பிடிப்பவர்கள் தாம். மதுரையில் இருந்தும், நன்னிலத்தில் இருந்தும் பெண் எடுக்க வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள்.
ராமேந்திரனும் சோமநாதனும் அப்படி வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைகள்.
ராமேந்திரன் எச்சுமி வீட்டுக்காரன். சோமநாதன் அலமேலுவை பாணிக்ரஹணம் செய்தவன்.
இரண்டு சகோதரிகளுக்கும் போன தைப்பூயத்தின் போதுதான் ஒரே நாளில் ஒரே பந்தலில் கிட்டாவய்யனும் தமையனார்களும் கல்யாணம் செய்து வைத்தார்கள்.
சோமா, ராமேந்திரன் அத்திம்பேர் ஆதிச்சநல்லூர்லேருந்து ஏதாவது சொல்லிவிட்டாராமா ? அலமேலுவுக்குப் பிரசவ லேகியம் வாங்கி அனுப்பறேன்னாரே ? எச்சுமி கிட்டே விஜாரிச்சியோ ?
கிட்டாவய்யன் மாட்டை வண்டியில் பூட்டினான். இல்லை என்று தலையாட்டினான் சோமனாதன்.
ஒரு நாள் முன்னாலேயே கிளம்பிக் கைமள் வீட்டு விசேஷத்துக்காகக் காய்கறியும் இலைக்கட்டும், கொல்லத்தில் அஸ்கா சக்கரையும் அல்வா கிண்ட கோதுமையும் எல்லாம் வாங்கிச் சித்தப்படுத்தி வைக்க ராமேந்திரனைக் கிட்டாவய்யன் அனுப்பி வைத்திருக்கிறான்.
அண்ணா. எட்டு பெரிய கரண்டி, நாலு குண்டான். பந்த்ரெண்டு வெங்கலப் பானை. ரெண்டு ஈயச் செம்பு. செப்புக் கங்காளம் மூணு. முப்பத்து நாலு குவளை. எண்ணிக்கறேளா.
வேண்டாம் சோமா. நீ பாத்துட்டே இல்லியோ. திரிச்சு வரும்போதும் நீயே ஒருகைப்பாடா ஏத்தி விட்டுட்டா சரியா இருக்கும்.
சோமன் திருப்தியோடு கைத்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு குடுமியை இறுக முடிந்து கொண்டான்.
செரி. நீ வண்டியிலே ஏறி ஓட்டிண்டு வா. நான் இதோ பெரியப்பா கடையிலே புகையிலையும் முறுக்கானும் வாங்கிண்டு பின்னாலேயே வரேன். கிருஷ்ணா குருவாயூரப்பா. முல்லைக்கல் பகவதி. பழனி சுப்ரமண்யா. எல்ல்லோரும் எப்போவும் கூடவே வந்து இருந்து ரட்சிக்கணும்.
அண்ணா நான் பனைஓலை விசிறியை எடுத்துண்டு வந்துடறேன்.
சோமன் வீட்டுக்குள் ஓடினான்.
அலமேலுவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பப் போகிறான்.
கர்ப்பிணிப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு கிளம்பக்கூடாது என்று ஏதோ சாஸ்திரம் சொல்கிறது. என்ன சாஸ்திரம் என்று கிட்டாவய்யனுக்குத் தெரியாது.
சட்டுனு வா சோமா. நாழியாயிண்டே இருக்கு. என்னமோ ஏதோன்னு ராமேந்திரன் அத்திம்பேர் அங்கே கெடந்து அலமந்து நின்னுண்டு இருப்பார்.
இதோ ஆச்சு அண்ணா.
வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைகளை வேலை ஏவக் கிட்டாவய்யனுக்கு மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
கிட்டாவய்யனோடோ, அவன் தமையனார்கள் குப்புசாமி அய்யன், துரைசாமி அய்யன் கூடவோ புனலூர், பூயப்பள்ளி, சூரநாடு, வடக்கேவிள, குளத்துப்புழ என்று வருடம் முழுக்க தேகண்டம் என்னும் சமையல் உத்தியோகத்துக்காக இன்னும் நாலைந்து அரிவெய்ப்புக் காரர்கள், இனிப்புப் பதார்த்தம் பண்ணுகிறவர்கள், காய் நறுக்கி, சாதம் வட்டித்து, பப்படத்துக்கு எண்ணெய் சுடவைத்து ஒத்தாசை பண்ணுகிறவர்கள் என்று ஏழெட்டுப் பேரோடு ஓடி நடக்கிறதிலும் உக்கிராணத்தை நிர்வகிக்க ஒத்தாசை செய்வதிலும் புதுசு புதுசாகச் ஆக்கவும் பொரிக்கவும் கற்றுக் கொள்வதிலும் அவர்களுக்கும் அனுபவம் ஏறிக் கொண்டிருக்கிறது.
இன்னும் இரண்டு வருடத்தில் ராமேந்திரனும், சோமனும் தனியாகக் கிளம்பி விடலாம் அவரவர்களுக்கு ஒரு கோஷ்டி சேர்த்துக் கொண்டு.
அப்போது எச்சுமியையும், அலமேலுவையும் தனிக்குடித்தனம் வைக்க வேண்டி வரும்.
இல்லாவிட்டாலும் வீட்டில் ஆள்கூட்டம் பெருகிக் கொண்டு போகிறது. மூணு சகோதரர்களின் குடும்பங்களும் கீழ் வீட்டில். கூடவே வயசுக்கு வந்த கடைக்குட்டித் தங்கை பகவதியும்.
மேலே மச்சில் சகோதரிகளின் குடும்பங்கள்.
எல்லாப் புருஷர்களும் ராத்திரி மொட்டைமாடியில் படுத்துக் கொள்ள ஸ்திரிகளும் குழந்தைகளும் வீட்டுக்குள்.
பூனை போல ஓசைப்படாமல் இறங்கி, இருட்டில் அவரவர்களுக்கு நிர்ணயித்திருந்த இடத்தில் பெண்டாட்டியைத் தேடிச் சத்தம் போடாமல் உசுப்பிக் கரப்பானும், எறும்பும் ஓடும் உக்கிராணத்துச் சாணி மெழுகிய தரையிலோ, மிளகாயும் அரிசிச் சாக்கும் வைத்த உள்ளில் உமி மூட்டைக்கு மேலோ கிடத்தி அவசரமாகப் புணர்ந்து சுகித்து வெளியே அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தபடி காதில் பூணூலோடு சுத்தம் செய்து கொள்ள கிணற்றடிக்குப் போவதில் கிட்டாவய்யனுக்கு அலுப்புத் தட்டிக் கொண்டு வருகிறது.
சில பொழுது உசுப்பும்போது குழந்தைகள் எழுந்து உட்கார்ந்து பரக்கப் பரக்க விழித்தபடி ஓமப்பொடியோ இனிப்பு சோமாசியோ கேட்டபடி அழ ஆரம்பிக்கும்.
உக்கிராணத் தரையில் கொட்டாவியோடு வஸ்திரத்தை நெகிழ்த்திக் கொண்ட ஸ்திரியைக் கிடத்தும்போது அதிக உணர்ச்சி காரணமாக உடனே ஸ்கலிதமாகிச் சரி போய்ப் படுத்துக்கோ என்று திரும்ப நடக்க வேண்டி வரும்.
பின் கட்டில் வீட்டு விலக்கால் பிரஷ்டையான பகவதியோ, மற்ற சகோதரிகளோ மன்னிமார்களில் யாராவதோ சாக்கு விரிப்பில் தூங்கச் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடும். உக்கிராணத்தில் மூச்சு விட்டாலும் அங்கே சத்தம் கேட்கும். சதா அதையெல்லாம் நினைத்தபடி ஜாக்கிரதையாகப் போகம் அனுபவிக்க வேண்டும்.
அரிசி மூட்டை அடைத்த உள்ளில் எலி ஒரு தடவை கிட்டாவய்யனின் புட்டத்தில் விழுந்து அந்தப்பக்கம் ஓடினது.
கிணற்றடியில் தண்ணீர் சேந்தித் தேக சுத்திக்கு ஒதுங்கியபோது கிட்டாவய்யனின் தமையன் துரைசாமியோ குப்புசாமியோ கோவணத்தை உலர்த்திக் கொண்டு கண்ணில் படுவதுண்டு.
ஒரு தடவை தன் வீட்டுக்காரி சிநேகாம்பாள் பிரஷ்டையாக வெளியறையில் இருப்பது ஞாபகம் இல்லாமல்
கீழே குழந்தைகளோடு குழந்தையாகக் கிடந்த இளைய மன்னி காமாட்சியை எழுப்பிவிட்டான் கிட்டாவய்யன்.
அந்த அரை நிமிட ஆலிங்கனம் இன்னும் மனதில் இருக்கிறது கிட்டாவய்யனுக்கு. மன்னி தாய் ஸ்தானம் என்று கேட்டுக் கேட்டுப் பழகிய மனது அது. எட்டமனூரில் ஒரு தடவை தேகண்டத்துக்குப் போனபோது நிலாக் கால ராத்திரியில் துண்டு விரித்துப் படுத்திருந்தபோது திரும்பத் திரும்ப இது மனதில் வந்து இம்சைப் படுத்த, எழுந்து உட்கார்ந்து நூத்தெட்டு காயத்ரி சொன்னான் கிட்டாவய்யன்.
துரைசாமிக்கு இன்னும் புத்திரபாக்கியம் இல்லை. காமாட்சிக்கு சூல் கொள்ளாமல் உதிர்ந்து போகிறது. ஒரு விசை நெல்லிமுள்ளிக்கோ குல தெய்வ ஆராதனைக்காக தூரதேசமான ராமேஸ்வரத்துக்கோ போய்வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆலப்பாட்டில் இருந்து போனதடவை கிட்டாவய்யனின் மாமனார் வந்தபோது சோழி பரத்தி ஜோசியம் பார்த்துச் சொன்னார்.
இன்னும் இரண்டு வருடத்தில் ராமேந்திரனும், சோமனும் தனியாகக் கிளம்பி விடலாம் அவரவர்களுக்கு ஒரு கோஷ்டி சேர்த்துக் கொண்டு.
அப்போது எச்சுமியையும், அலமேலுவையும் தனிக்குடித்தனம் வைக்க வேண்டி வரும்.
இல்லாவிட்டாலும் வீட்டில் ஆள்கூட்டம் பெருகிக் கொண்டு போகிறது. மூணு சகோதரர்களின் குடும்பங்களும் கீழ் வீட்டில். கூடவே வயசுக்கு வந்த கடைக்குட்டித் தங்கை பகவதியும்.
மேலே மச்சில் சகோதரிகளின் குடும்பங்கள்.
எல்லாப் புருஷர்களும் ராத்திரி மொட்டைமாடியில் படுத்துக் கொள்ள ஸ்திரிகளும் குழந்தைகளும் வீட்டுக்குள்.
பூனை போல ஓசைப்படாமல் இறங்கி, இருட்டில் அவரவர்களுக்கு நிர்ணயித்திருந்த இடத்தில் பெண்டாட்டியைத் தேடிச் சத்தம் போடாமல் உசுப்பிக் கரப்பானும், எறும்பும் ஓடும் உக்கிராணத்துச் சாணி மெழுகிய தரையிலோ, மிளகாயும் அரிசிச் சாக்கும் வைத்த உள்ளில் உமி மூட்டைக்கு மேலோ கிடத்தி அவசரமாகப் புணர்ந்து சுகித்து வெளியே அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தபடி காதில் பூணூலோடு சுத்தம் செய்து கொள்ள கிணற்றடிக்குப் போவதில் கிட்டாவய்யனுக்கு அலுப்புத் தட்டிக் கொண்டு வருகிறது.
சில பொழுது உசுப்பும்போது குழந்தைகள் எழுந்து உட்கார்ந்து பரக்கப் பரக்க விழித்தபடி ஓமப்பொடியோ இனிப்பு சோமாசியோ கேட்டபடி அழ ஆரம்பிக்கும்.
உக்கிராணத் தரையில் கொட்டாவியோடு வஸ்திரத்தை நெகிழ்த்திக் கொண்ட ஸ்திரியைக் கிடத்தும்போது அதிக உணர்ச்சி காரணமாக உடனே ஸ்கலிதமாகிச் சரி போய்ப் படுத்துக்கோ என்று திரும்ப நடக்க வேண்டி வரும்.
பின் கட்டில் வீட்டு விலக்கால் பிரஷ்டையான பகவதியோ, மற்ற சகோதரிகளோ மன்னிமார்களில் யாராவதோ சாக்கு விரிப்பில் தூங்கச் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடும். உக்கிராணத்தில் மூச்சு விட்டாலும் அங்கே சத்தம் கேட்கும். சதா அதையெல்லாம் நினைத்தபடி ஜாக்கிரதையாகப் போகம் அனுபவிக்க வேண்டும்.
அரிசி மூட்டை அடைத்த உள்ளில் எலி ஒரு தடவை கிட்டாவய்யனின் புட்டத்தில் விழுந்து அந்தப்பக்கம் ஓடினது.
கிணற்றடியில் தண்ணீர் சேந்தித் தேக சுத்திக்கு ஒதுங்கியபோது கிட்டாவய்யனின் தமையன் துரைசாமியோ குப்புசாமியோ கோவணத்தை உலர்த்திக் கொண்டு கண்ணில் படுவதுண்டு.
ஒரு தடவை தன் வீட்டுக்காரி சிநேகாம்பாள் பிரஷ்டையாக வெளியறையில் இருப்பது ஞாபகம் இல்லாமல்
கீழே குழந்தைகளோடு குழந்தையாகக் கிடந்த இளைய மன்னி காமாட்சியை எழுப்பிவிட்டான் கிட்டாவய்யன்.
அந்த அரை நிமிட ஆலிங்கனம் இன்னும் மனதில் இருக்கிறது கிட்டாவய்யனுக்கு. மன்னி தாய் ஸ்தானம் என்று கேட்டுக் கேட்டுப் பழகிய மனது அது. எட்டமனூரில் ஒரு தடவை தேகண்டத்துக்குப் போனபோது நிலாக் கால ராத்திரியில் துண்டு விரித்துப் படுத்திருந்தபோது திரும்பத் திரும்ப இது மனதில் வந்து இம்சைப் படுத்த, எழுந்து உட்கார்ந்து நூத்தெட்டு காயத்ரி சொன்னான் கிட்டாவய்யன்.
துரைசாமிக்கு இன்னும் புத்திரபாக்கியம் இல்லை. காமாட்சிக்கு சூல் கொள்ளாமல் உதிர்ந்து போகிறது. ஒரு விசை நெல்லிமுள்ளிக்கோ குல தெய்வ ஆராதனைக்காக தூரதேசமான ராமேஸ்வரத்துக்கோ போய்வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆலப்பாட்டில் இருந்து போனதடவை கிட்டாவய்யனின் மாமனார் வந்தபோது சோழி பரத்தி ஜோசியம் பார்த்துச் சொன்னார்.
அப்போது அவருக்குத் துரைசாமி அய்யன் நாலணா தட்சணையும் தாம்பூலமும் கொடுத்தான். காசு எல்லாம் எதுக்கு என்று அவர் தாம்பூலத்தை மட்டும் மடிசஞ்சியில் முடிந்து கொண்டார்.
வீட்டுக்கு மூத்தவனான குப்புசாமி அய்யனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்து பெரியம்மையில் போய்ச் சேர்ந்து இந்த விஷுவுக்கு நாலு வருஷம் ஆகப் போகிறது. வீட்டில் வளைய வருகிற குழந்தைகள் மூணுமே கிட்டாவய்யனுடையவை. மூணுமே பெண்கள்.
குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுகள் எழுவதற்குள் கிளம்பிவிட வேண்டும். இல்லாவிட்டால் கடைக்குட்டி அழும். மூத்த இரண்டும் சித்தாடையும் நார்ப்பின்னலுமாக எங்கே போறே என்று கேட்டு நச்சரிக்கும்.
கிட்டாவய்யனுக்குக் குழந்தைகள் மேல் வாத்சல்யம் தான். மூக்கு ஒழுகிக் கொண்டிருக்கும் சின்னவளைத் தூக்கிக் கொண்டு உத்தரியத்தில் மூக்கைத் துடைத்தபடி தோப்பும் துரவுமாகச் சுற்றி வருவான் அவன் ஊரில் இருக்கும்போது.
அது மாதத்தில் ஒருதடவை நடந்தாலே அதிகம். ஆனாலும் கரண்டி பிடிக்க வெளியூர் போய்த் திரும்பும்ப் போது குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் வாங்கி வருவதற்குத் தவறுவதில்லை அவன்.
கண்டவனும் பிருஷ்டம் அலம்பிக் கொண்ட அசுத்தக் கையால் உண்டாக்கிக் கொடுக்கிறதை எல்லாம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொண்டு வந்து நீட்டினால் அதுகள் ஒட்டக் கழித்து விட்டு வாந்தியும் பேதியுமாக வீட்டில் ஒடுங்கப் போகிறதுகள்.
கிட்டாவய்யனின் வீட்டுக்காரி சிநேகாம்பாள் எத்தனை உருட்டி விழித்துத் தடுத்தாலும் குழந்தைகள் அதையெல்லாம் கையில் கொடுத்த உடனே பொதியழித்துச் சாப்பிட்டு விடும். இதுவரை அதுகள் ஆரோக்கியத்துக்கு எந்த குறைச்சலும் வராமல்தான் சுற்றி வருகின்றன.
சீனி மிட்டாய் எழவு வேண்டாம். அவள் கோவிக்கிறாளே என்று ஒருதடவை குழந்தைகள் விளையாட மரப்பாச்சி வாங்கி வந்தான் கிட்டாவய்யன்.
மாசம் ஒருதடவை தொட்டுத் தடவினால் இதுகளும் சுரணை மரத்துப் போன வெறும் பாச்சியாகி விடப்போகிறது பார்த்துக் கொண்டேயிருங்கள்.
சிநேகாம்பாள் அக்கம்பக்கம் யாரும் இல்லையா என்று பார்த்தபடி தன் மார்க்கூட்டைக் காட்டிச் சொல்வது இது.
இந்தத் தடவை ஆதிச்சநல்லூரிலோ கொல்லத்திலோ தட்டானிடம் சொல்லி வைத்து ஒரு ஜதை தங்க வளையலோடு திரும்பினால் அவள் சந்தோஷப்படலாம்.
ஸ்வர்ணமும் சுகம் கொடுக்கக் கூடியதுதான். சம்போகத்தில் வருவது போல் ரெண்டு பேருக்கு மாத்திரம் இல்லாமல் வேறு மாதிரி.
கிளம்பலாமா அண்ணா ?
சோமன் உள்ளே இருந்து அவசரமாகப் பனைஓலை விசிறியோடு ஓடி வந்தான். அலமேலு அவன் உதட்டைக் கடித்து அனுப்பியிருக்கிறாள். நாக்கால் மேல் சுண்டை நீவியபடி வருகிறான்.
கிட்டாவய்யனும் உள்ளே போய் இன்னொரு பனைஓலை விசிறியோடு திரும்பலாமா என்று யோசித்தான். சிநேகாம்பாளுக்குக் கொஞ்சம் முன்னால் நீண்ட பல்வரிசை.
குழந்தைகளும் நித்திரை கலைந்து எழுந்திருக்கும்.
எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்.
விசாலாட்சி மன்னி குளித்துத் தலையில் நுனிமுடிச்சோடு நிர்மால்ய தரிசனத்துக்காக திருவம்பலத்துக்குக் கிளம்பிக் குறுக்கே புகுந்து போனாள். அவள் உதட்டில் சின்னதாக ஒரு சிரிப்பு. போகிற காரியம் ஜெயிக்கட்டும் என்று அந்தச் சிரிப்பு சொன்னது.
நல்ல சகுனம் அண்ணா.
சோமன் காளைவண்டியைக் கிளப்பினான்.
வீட்டுக்கு மூத்தவனான குப்புசாமி அய்யனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்து பெரியம்மையில் போய்ச் சேர்ந்து இந்த விஷுவுக்கு நாலு வருஷம் ஆகப் போகிறது. வீட்டில் வளைய வருகிற குழந்தைகள் மூணுமே கிட்டாவய்யனுடையவை. மூணுமே பெண்கள்.
குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுகள் எழுவதற்குள் கிளம்பிவிட வேண்டும். இல்லாவிட்டால் கடைக்குட்டி அழும். மூத்த இரண்டும் சித்தாடையும் நார்ப்பின்னலுமாக எங்கே போறே என்று கேட்டு நச்சரிக்கும்.
கிட்டாவய்யனுக்குக் குழந்தைகள் மேல் வாத்சல்யம் தான். மூக்கு ஒழுகிக் கொண்டிருக்கும் சின்னவளைத் தூக்கிக் கொண்டு உத்தரியத்தில் மூக்கைத் துடைத்தபடி தோப்பும் துரவுமாகச் சுற்றி வருவான் அவன் ஊரில் இருக்கும்போது.
அது மாதத்தில் ஒருதடவை நடந்தாலே அதிகம். ஆனாலும் கரண்டி பிடிக்க வெளியூர் போய்த் திரும்பும்ப் போது குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் வாங்கி வருவதற்குத் தவறுவதில்லை அவன்.
கண்டவனும் பிருஷ்டம் அலம்பிக் கொண்ட அசுத்தக் கையால் உண்டாக்கிக் கொடுக்கிறதை எல்லாம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொண்டு வந்து நீட்டினால் அதுகள் ஒட்டக் கழித்து விட்டு வாந்தியும் பேதியுமாக வீட்டில் ஒடுங்கப் போகிறதுகள்.
கிட்டாவய்யனின் வீட்டுக்காரி சிநேகாம்பாள் எத்தனை உருட்டி விழித்துத் தடுத்தாலும் குழந்தைகள் அதையெல்லாம் கையில் கொடுத்த உடனே பொதியழித்துச் சாப்பிட்டு விடும். இதுவரை அதுகள் ஆரோக்கியத்துக்கு எந்த குறைச்சலும் வராமல்தான் சுற்றி வருகின்றன.
சீனி மிட்டாய் எழவு வேண்டாம். அவள் கோவிக்கிறாளே என்று ஒருதடவை குழந்தைகள் விளையாட மரப்பாச்சி வாங்கி வந்தான் கிட்டாவய்யன்.
மாசம் ஒருதடவை தொட்டுத் தடவினால் இதுகளும் சுரணை மரத்துப் போன வெறும் பாச்சியாகி விடப்போகிறது பார்த்துக் கொண்டேயிருங்கள்.
சிநேகாம்பாள் அக்கம்பக்கம் யாரும் இல்லையா என்று பார்த்தபடி தன் மார்க்கூட்டைக் காட்டிச் சொல்வது இது.
இந்தத் தடவை ஆதிச்சநல்லூரிலோ கொல்லத்திலோ தட்டானிடம் சொல்லி வைத்து ஒரு ஜதை தங்க வளையலோடு திரும்பினால் அவள் சந்தோஷப்படலாம்.
ஸ்வர்ணமும் சுகம் கொடுக்கக் கூடியதுதான். சம்போகத்தில் வருவது போல் ரெண்டு பேருக்கு மாத்திரம் இல்லாமல் வேறு மாதிரி.
கிளம்பலாமா அண்ணா ?
சோமன் உள்ளே இருந்து அவசரமாகப் பனைஓலை விசிறியோடு ஓடி வந்தான். அலமேலு அவன் உதட்டைக் கடித்து அனுப்பியிருக்கிறாள். நாக்கால் மேல் சுண்டை நீவியபடி வருகிறான்.
கிட்டாவய்யனும் உள்ளே போய் இன்னொரு பனைஓலை விசிறியோடு திரும்பலாமா என்று யோசித்தான். சிநேகாம்பாளுக்குக் கொஞ்சம் முன்னால் நீண்ட பல்வரிசை.
குழந்தைகளும் நித்திரை கலைந்து எழுந்திருக்கும்.
எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்.
விசாலாட்சி மன்னி குளித்துத் தலையில் நுனிமுடிச்சோடு நிர்மால்ய தரிசனத்துக்காக திருவம்பலத்துக்குக் கிளம்பிக் குறுக்கே புகுந்து போனாள். அவள் உதட்டில் சின்னதாக ஒரு சிரிப்பு. போகிற காரியம் ஜெயிக்கட்டும் என்று அந்தச் சிரிப்பு சொன்னது.
நல்ல சகுனம் அண்ணா.
சோமன் காளைவண்டியைக் கிளப்பினான்.
அரசூர் வம்சம் - அத்தியாயம் எட்டு
பகல் நேரம் அரிவாள் மனையில் வெட்டுப்படும் காய்கறிகளும், குடத்திலிருந்து இருப்புச் சட்டியில் வார்த்துச் சுட வைக்கப்படும் தேங்காய் எண்ணெயும், பாகாய் உருகிக் கொண்டிருக்கும் வெல்ல உருண்டையும், வடைக்கு அரைபடும் உளுந்துமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
கிட்டாவய்யன் காலையிலிருந்து நாலு தடவை குடத்தில் நீர் சேந்தித் தலையில் கவிழ்த்துக் கொண்டு விட்டான். ஆனாலும் வியர்வை வெள்ளமாகப் பிரவகித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வியர்வை தலையை முழுக்க நனைத்துக் கண்ணை மறைக்கிறது. உதட்டில் எச்சிலில் கரைந்து நாக்கில் கரிக்கிறது. மூத்திரம் சரியாக இறங்காமல் நோவோடு பிரிகிறது. உடம்பு வலுவெல்லாம் வியர்வையாக வெளியே போய்க் கொண்டிருக்கிறதாக பிரமை.
போகட்டும். போனது எல்லாம் பணமாகத் திரும்பி வரப் போகிறது. கைமள் வீட்டு விசேஷம் முடியும்போது கை நிறையக் கிடைக்கும். எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்த பிறகும் கணிசமாகக் கீசையில் முடங்கும்.
அப்புறமும் இருக்கிறது புனலூரும், கொல்லமும், கருநாகப் பள்ளியும், வடக்கேவிளயும்.
பணம் வேண்டி இருக்கிறது.
தட்டானிடம் வளையல் வாங்க. சீனி மிட்டாய் வாங்க.
மரப்பாச்சி ?
வேண்டாம். தொட்டுத் தடவிப் புல்லரிக்க வைத்துச் சுகித்து புத்திர பாக்கியம் வேண்டும். பின்கட்டில் பிரஷ்டை காதில் ஓசைப்படாமல். பிருஷ்டத்தில் எலி
ஏறி இறங்கி ஓடிப் போகாமல்.
பணம் வேண்டி இருக்கிறது.
கடைசித் தங்கை பகவதியைக் கரையேற்ற. நாளைக்கு மூத்த பெண் திரண்டு குளித்தால் அவளுக்கு வழி பண்ண.
திரும்பிப் பார்ப்பதற்குள் சின்னவளும் அப்புறம் கடைக்குட்டியும் கல்யாணத்துக்குத் தயாராக நிற்பார்கள்.
எல்லாம் ஓய்ந்தால் கட்டையைச் சாய்க்கச் சின்னதாக மங்களூர் ஓடு வேய்ந்து ஒரு வீடு. கையகலமாவது நெல் பாட்டம். நாலு பாக்கு மரமும் தென்னையுமாக பரம்பு. வாய்க்க வேண்டும்.
அதற்கு எல்லாம் முன்னால் ஒரு புத்ரன்.
காலையில் குளித்து சந்தியாவந்தனம் செய்து அம்பலத்தில் தொழுது விட்டு வந்து அடுப்புப் பற்ற வைத்தபோது இதுதான் பிரார்த்தனையாக இருந்தது.
இன்னொரு குடம் நீர் சேந்தித் தலையில் கவிழ்த்துக் கொண்டான் கிட்டாவய்யன்.
குடுமியை அவிழ்த்து அலசியபோது பிரிந்து வந்த இழை வெள்ளியாக மினுமினுத்தது.
வயதாகிக் கொண்டிருக்கிறதா ?
முப்பத்தைந்து எல்லாம் வயதானதில் சேர்த்தியா என்ன ?
குளத்துப்புழை பாலகன் கடாட்சம் இருந்தால் கிட்டாவய்யனுக்கும் புத்திரபாக்கியம் அடுத்த வருடமே வாய்க்கும். எள்ளும் தண்ணீரும் இரைத்துக் கரையேற்ற சந்ததி தழைக்கும்.
என்ன அண்ணா நொடிக்கு ஒருதடவை குளி ? அரி வைப்புக்கு நாழியாகலியா ?
சோமநாதன் நெருங்க வந்து காதில் கிசுகிசுத்தான்.
வா போகலாம்.
அரையில் நனைந்து ஒட்டிய வேட்டியோடு கிளம்பினான் கிட்டாவய்யன்.
ஈர வஸ்திரத்தோடு அரிசி வடிக்கக் கூடாது. அதுவும் சுப காரியம் நடக்கப் போகிற வீட்டில். நீங்கள் தானே எப்பவும் சொல்றது.
வியர்ப்புத் தாங்கலை சோமா. அதான் இப்படி. ஒரு தோர்த்து கொண்டு வா.
சோமன் உள்ளே போய்த் தோர்த்தும் பிரி போல் முறுக்கிய முண்டும் கொண்டு வந்து கொடுத்தான்.
தலையைத் துவட்டிக் கொண்டு கிட்டாவய்யன் வீட்டை ஒட்டி வெளியே பரம்பில் தாவளம் அடித்து இறக்கி ஏற்படுத்தி இருந்த உக்கிராணத்துக்குள் நுழைந்தான்.
என்ன சோமா ஆரையும் காணலே ?
காலியாகக் கிடந்த உக்கிராணத்தில் கண் ஓட்டிக் கொண்டே கேட்டான் கிட்டாவய்யன்.
ஓரமாக உட்கார்ந்து பரங்கிக்காய் நறுக்கிக் கொண்டிருந்த வயசன் தவிர்த்து எல்லோரும் எங்கே போனார்கள் ?
வாசலில் பெருங்கூச்சல் கேட்கிறது. தடார் தடார் என்று தரையதிர யாரோ ஓடும் சத்தம். அப்புறம் கட்டைக் குரலில் பாட்டு. கூட்டமாகப் பாடுகிறார்கள்.
கிட்டாவய்யன் வெளியே வந்து பார்த்தபோது அரையில் தார்பாய்ச்சிக் கட்டிய வேஷ்டியும் மேலே முறுக்கி வளைத்து முடிச்சுப் போட்ட உத்தரீயமுமாகப் பத்துப் பதினைந்து பேர் இரும்பு உலக்கைகளைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.
சேர்ந்து பாடுகிறார்கள். சேர்ந்து ஓடுகிறார்கள். பாடிக் கொண்டே ஓடுகிறார்கள்.
தீர் சே போல்
ஜோர் சே போல்
சுபே தக் ராத்
விஸ்வ நாத்.
பாட்டுக்கு நடுவே சொல்லி வைத்தது போல் சேர்ந்து நிறுத்தி இரும்பு உலக்கைகளால் அவரவர்கள் மாரிலும் தொடையிலும் ஓங்கி அறைந்து கொள்கிறார்கள். மாரெல்லாம் காய்த்துத் தழும்பேறிப் போயிருக்கிறது. உலக்கைகள் கருத்து நீண்டு பயங்கொள்ள வைக்கின்றன.
யார் இதெல்லாம் ?
கிட்டாவய்யன் சோமநாதனைப் பார்வையால் விசாரித்தான்.
வடக்கே இருந்து வரும் பைராகிகள். கோஷ்டியாக ராமேசுவரம் தீர்த்த யாத்திரை போய்ப் பரசுராம பூமியையும் தரிசித்துக் கொண்டு திரும்பிப் போக வந்தவர்கள்.
சோமநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பைராகிகளில் ஒருத்தன் கிட்டாவய்யன் பக்கத்தில் வந்து உருட்டி விழித்துச் சிரித்தான். சடை விழுந்த தலைமுடியைச் சுற்றிச் சின்னச் சின்னதாகக் குளவிகள் பறந்தபடி இருந்தன அவனுக்கு.
குள்ளக் கிட்டாவய்யன் பக்கத்தில் அவன் ஆறடிக்கு மேல் வளர்ந்த பிரம்மாண்டமான சொரூபனாக நிற்கிறான். இந்தக் கையில் உலக்கையையும் அந்தக் கையில் கிட்டாவய்யனையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடத் தயாரானவன் போல் அவன் கை பரபரக்கிறது.
அவன் பாடிக் கொண்டே ஓடுவான். உலக்கையால் மாரில் அரைந்து கொள்வான். கிட்டாவய்யனைக் குப்புறப் புரட்டித் தொடையில் மோதிக் கொள்வான். ஒரு மரப்பாச்சி போல் அவனைத் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடுவான். தரையில் போட்டு ஓங்கி உயிர்த்தலத்தில் மிதித்து பீஜங்களை நசுக்கிக் கூழாக்குவான். கிட்டாவய்யனுக்குப் பிராணன் போகிற போது எள்ளும் தண்ணீரும் இறைக்கப் பிள்ளை பிறக்க வழி இருக்காது இனி ஒருபோதும்.
அரையில் இரண்டு கையையும் இறுகப் பொத்தியபடி கிட்டாவய்யன் நடுங்கிப் போய் நின்றான்.
பைராகி உலக்கையால் தன் வயிற்றில் மாறி மாறி அடித்துக் கொண்டு கரமுர என்று இந்துஸ்தானியில் ஏதோ சொன்னான்.
அவனுக்குப் பசிக்கிறது. அவன் கூட்டம் முழுவதற்கும் போஜனம் செய்ய வேண்டி இருக்கிறது.
சோமநாதன் கிட்டாவய்யன் காதில் மொழி மாற்றிச் சொன்னான்.
துவாரகைக்கும் வடமதுரைக்கும் போய் வந்த நம்பூத்திரிகளுக்குச் சமைத்துப் போட இரண்டு முறை வடநாடு போயிருக்கும் காரணத்தால் அவனுக்கு அந்த ஊர்ப் பாஷை பிடிபட்டிருக்கிறது.
கிட்டாவய்யன் சமையல்காரன் என்று பைராகி எப்படித் தெரிந்து கொண்டான் ? தொழில் பார்க்க வந்த இடத்தில் இவனுக்கும் இவனுடைய கோஷ்டிக்கும் என்ன கொடுக்க முடியும் கிட்டாவய்யனால் ?
ஒவ்வொருத்தனும் இருக்கிற ஆகிருதியைப் பார்த்தால் நாலு ஆள் சாப்பிடுகிறதை ஒருத்தனே லகுவில் சாப்பிட்டுப் போதாதற்கு அந்த உலக்கையையும் விழுங்கி சுக்குக் கஷாயம் ஒரு சொம்பு முழுக்க எடுத்துக் குடித்துத் தீர்த்து ஏம்பக்கம் விடுவான் போல் தெரிகிறது.
உலக்கையைக் காலுக்கு நடுவே லிங்கம் போல் ஊன்றிக் கொண்டு பைராகி இரண்டு கையையும் விரித்துத் திரும்பவும் ஏதோ சொன்னான். கூட வந்தவர்கள் சுற்றிச் சுற்றி வந்து முதுகிலும் மாரிலும் உலக்கைகளால் அறைந்து கொண்டு விஸ்வநாத் விஸ்வநாத் என்று திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தார்கள். எல்லோர் தலையிலிருந்தும் புறப்பட்ட குளவிகள் ஒன்றை ஒன்று மோதித் தரையில் விழுந்து இறக்கை உரித்து ஊர்ந்தன. காற்று அஸ்தமித்துப் போயிருந்த அந்தப் பகல் பொழுதில் அந்த இறக்கைகள் தீனமாக ஒலி செய்தது கிட்டாவய்யனுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்டது.
இவர்கள் சாதம் சாப்பிடுவார்களா ? வட்டித்து எடுக்கிற வரை பொறுப்பார்களா ? என்றால் கைமளிடம் சொல்லி முதலில் இவர்களுக்காகத் தனியே இலை போடச் சொல்லலாம்.
பரத கண்டத்தில் இருக்கப் பட்ட சகல புண்ணிய ஸ்தலமும் ஓடி நடந்து தரிசனம் செய்து, நகர்கிற நதியில், சங்கமிக்கும் சமுத்திரத்தில் எல்லாம் தேக, மனசு, ஆத்மாவில் ஒட்டிப் பிடித்த அழுக்கை எல்லாம் கரைத்து நீக்கிப் பரிசுத்தப்பட்டுக் கொண்டு அடுத்த ஜன்மமும் நரக வாதனையும் கூடாதே போகும் வண்ணம் கர்ம பலனான வாதனை எல்லாவற்றையும் சுயமாகவே சதா வழங்கி அனுபவித்துக் கொண்டு, சிக்குப் பிடித்த சடைமுடியும் அதில் ஊர்ந்து நெளியும் குளவியும் பாம்பும் கூட வரச் சொர்க்கம் புகத் தயாரான இந்தப் பைராகிகளின் ஆசீர்வாதத்தோடு கிருஷ்ணனுண்ணி நாயர் புடவை எடுத்துக் கைமளின் மகளுக்குப் புடமுறியாகக் கொடுத்துக் கல்யாணம் கழிப்பது எல்லோருக்கும் உவப்பான காரியமாகவே இருக்கும்.
சாதம் வட்டித்துப் பிடிதுணியால் பற்றிக் கீழே ஆவி பறக்க இறக்கும் வரை இவர்கள் இந்த முற்றத்தில் காத்திருப்பார்களோ ?
அண்ணா இவர்கள் அயல் மனுஷர்கள் சமைத்த பதார்த்தம் எதுவும் சாப்பிடுவதில்லை. அரிசியோ கோதுமை மாவோ கொடுத்தால் கட்டி எடுத்துப் போய் ஊர் எல்லையில் அவர்களே பாகம் செய்து பசி நிவர்த்தி செய்து கொள்வார்கள்.
சோமநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கிட்டாவய்யன் அவசரமாக வீட்டுப் பின்வசத்துத் தாவளத்துக்குள் நுழைந்தான்.
அந்த வயசன் இன்னும் கருமமே கண்ணாக உள்ளே வாழைக்காய் நறுக்கிக் கொண்டிருந்தான். குத்திருமலால் அவன் திரேகம் குலுங்கிக் கொண்டிருந்தது.
ஒரு வாய் சூடுவெள்ளம் குடித்து மாமரச் சுவட்டில் குந்தி இருந்து ஸ்ரம பரிகாரம் செய்துவிட்டு வாருமே ஓய்.
கிட்டாவய்யன் சொல்லியபடியே வயசன் பக்கமாக நடந்தான். உள்ளூரில் சேர்த்துக் கொள்ளப்பட்ட எடுபிடிக் காரன். விசேஷத்தின் போது மூணு வேளை சாப்பாடும், வெற்றிலை பாக்கும், நாலைந்து சல்லிக் காசும் கொடுத்து இந்த மாதிரி உதிரிகளை அனுப்பி வைக்கிற வழக்கம்.
வயசனுக்குப் பக்கத்தில் தான் கோதுமை மாவும் அரிசி மாவும் உப்பும் வெல்லமும் கோணிச் சாக்கு மூட்டைகளிலும் ஓலைக் கடகங்களிலும் வைத்திருக்கிறது.
முத்தச்சா, மாறிக்கோ.
நாழியால் அளந்து பெரிய துணி சஞ்சியில் கோதுமை மாவைக் கவிழ்க்கும்போது வயசனை உற்றுப் பார்த்தான் கிட்டாவய்யன்.
சட்டென்று பொறி தட்டியது.
ஓய் நீர் சாவக்காட்டு அயல் வேதக்காரன் இல்லியோ.
வயசன் நடுங்கிக் கொண்டு எழுந்து நின்றான். அவன் இருமல் இன்னும் அதிகமாக இருந்தது.
நானும் பிராமணன் தான் அண்ணா. தயவு செய்யுங்கோ. செத்தக் கூட மாட இங்கே பணி எடுக்கறேன். பசி தாளலை. போஜனம் மாத்ரம் போதும்.
அவன் பூணூலை இழுத்துக் காட்டி இரண்டு கைகளுக்கு நடுவில் அதைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, வயதில் தன்னை விட எவ்வளவோ சின்னவனான கிட்டாவய்யனைத் தெண்டனிட்டு நமஸ்கரித்தான்.
கிழவனைக் கிட்டாவய்யனுக்குத் தெரியும். அவனுடைய தமையனார்களுக்கு சாவக்காட்டு கிறிஸ்தியானி பிராமணன்மார் எல்லோரையும் பற்றித் தெரியும்.
எப்போதோ கப்பலில் வந்து இறங்கி புதுசாக வந்த நிஜ வேதம் இது என்று காட்டி, சாவக்காட்டில் ஸ்மார்த்தப் பிராமணர்கள் அர்க்கியம் கொடுக்கும்போது இரைத்த தண்ணீர்த்துளிகளை அந்தரத்தில் நிறுத்தினானாம் ஒரு வெள்ளைத் தோல்காரன். தோமையன் என்று அவனுக்குப் பேர்.
கிட்டாவய்யன் சோமநாதனைப் பார்வையால் விசாரித்தான்.
வடக்கே இருந்து வரும் பைராகிகள். கோஷ்டியாக ராமேசுவரம் தீர்த்த யாத்திரை போய்ப் பரசுராம பூமியையும் தரிசித்துக் கொண்டு திரும்பிப் போக வந்தவர்கள்.
சோமநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பைராகிகளில் ஒருத்தன் கிட்டாவய்யன் பக்கத்தில் வந்து உருட்டி விழித்துச் சிரித்தான். சடை விழுந்த தலைமுடியைச் சுற்றிச் சின்னச் சின்னதாகக் குளவிகள் பறந்தபடி இருந்தன அவனுக்கு.
குள்ளக் கிட்டாவய்யன் பக்கத்தில் அவன் ஆறடிக்கு மேல் வளர்ந்த பிரம்மாண்டமான சொரூபனாக நிற்கிறான். இந்தக் கையில் உலக்கையையும் அந்தக் கையில் கிட்டாவய்யனையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடத் தயாரானவன் போல் அவன் கை பரபரக்கிறது.
அவன் பாடிக் கொண்டே ஓடுவான். உலக்கையால் மாரில் அரைந்து கொள்வான். கிட்டாவய்யனைக் குப்புறப் புரட்டித் தொடையில் மோதிக் கொள்வான். ஒரு மரப்பாச்சி போல் அவனைத் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடுவான். தரையில் போட்டு ஓங்கி உயிர்த்தலத்தில் மிதித்து பீஜங்களை நசுக்கிக் கூழாக்குவான். கிட்டாவய்யனுக்குப் பிராணன் போகிற போது எள்ளும் தண்ணீரும் இறைக்கப் பிள்ளை பிறக்க வழி இருக்காது இனி ஒருபோதும்.
அரையில் இரண்டு கையையும் இறுகப் பொத்தியபடி கிட்டாவய்யன் நடுங்கிப் போய் நின்றான்.
பைராகி உலக்கையால் தன் வயிற்றில் மாறி மாறி அடித்துக் கொண்டு கரமுர என்று இந்துஸ்தானியில் ஏதோ சொன்னான்.
அவனுக்குப் பசிக்கிறது. அவன் கூட்டம் முழுவதற்கும் போஜனம் செய்ய வேண்டி இருக்கிறது.
சோமநாதன் கிட்டாவய்யன் காதில் மொழி மாற்றிச் சொன்னான்.
துவாரகைக்கும் வடமதுரைக்கும் போய் வந்த நம்பூத்திரிகளுக்குச் சமைத்துப் போட இரண்டு முறை வடநாடு போயிருக்கும் காரணத்தால் அவனுக்கு அந்த ஊர்ப் பாஷை பிடிபட்டிருக்கிறது.
கிட்டாவய்யன் சமையல்காரன் என்று பைராகி எப்படித் தெரிந்து கொண்டான் ? தொழில் பார்க்க வந்த இடத்தில் இவனுக்கும் இவனுடைய கோஷ்டிக்கும் என்ன கொடுக்க முடியும் கிட்டாவய்யனால் ?
ஒவ்வொருத்தனும் இருக்கிற ஆகிருதியைப் பார்த்தால் நாலு ஆள் சாப்பிடுகிறதை ஒருத்தனே லகுவில் சாப்பிட்டுப் போதாதற்கு அந்த உலக்கையையும் விழுங்கி சுக்குக் கஷாயம் ஒரு சொம்பு முழுக்க எடுத்துக் குடித்துத் தீர்த்து ஏம்பக்கம் விடுவான் போல் தெரிகிறது.
உலக்கையைக் காலுக்கு நடுவே லிங்கம் போல் ஊன்றிக் கொண்டு பைராகி இரண்டு கையையும் விரித்துத் திரும்பவும் ஏதோ சொன்னான். கூட வந்தவர்கள் சுற்றிச் சுற்றி வந்து முதுகிலும் மாரிலும் உலக்கைகளால் அறைந்து கொண்டு விஸ்வநாத் விஸ்வநாத் என்று திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தார்கள். எல்லோர் தலையிலிருந்தும் புறப்பட்ட குளவிகள் ஒன்றை ஒன்று மோதித் தரையில் விழுந்து இறக்கை உரித்து ஊர்ந்தன. காற்று அஸ்தமித்துப் போயிருந்த அந்தப் பகல் பொழுதில் அந்த இறக்கைகள் தீனமாக ஒலி செய்தது கிட்டாவய்யனுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்டது.
இவர்கள் சாதம் சாப்பிடுவார்களா ? வட்டித்து எடுக்கிற வரை பொறுப்பார்களா ? என்றால் கைமளிடம் சொல்லி முதலில் இவர்களுக்காகத் தனியே இலை போடச் சொல்லலாம்.
பரத கண்டத்தில் இருக்கப் பட்ட சகல புண்ணிய ஸ்தலமும் ஓடி நடந்து தரிசனம் செய்து, நகர்கிற நதியில், சங்கமிக்கும் சமுத்திரத்தில் எல்லாம் தேக, மனசு, ஆத்மாவில் ஒட்டிப் பிடித்த அழுக்கை எல்லாம் கரைத்து நீக்கிப் பரிசுத்தப்பட்டுக் கொண்டு அடுத்த ஜன்மமும் நரக வாதனையும் கூடாதே போகும் வண்ணம் கர்ம பலனான வாதனை எல்லாவற்றையும் சுயமாகவே சதா வழங்கி அனுபவித்துக் கொண்டு, சிக்குப் பிடித்த சடைமுடியும் அதில் ஊர்ந்து நெளியும் குளவியும் பாம்பும் கூட வரச் சொர்க்கம் புகத் தயாரான இந்தப் பைராகிகளின் ஆசீர்வாதத்தோடு கிருஷ்ணனுண்ணி நாயர் புடவை எடுத்துக் கைமளின் மகளுக்குப் புடமுறியாகக் கொடுத்துக் கல்யாணம் கழிப்பது எல்லோருக்கும் உவப்பான காரியமாகவே இருக்கும்.
சாதம் வட்டித்துப் பிடிதுணியால் பற்றிக் கீழே ஆவி பறக்க இறக்கும் வரை இவர்கள் இந்த முற்றத்தில் காத்திருப்பார்களோ ?
அண்ணா இவர்கள் அயல் மனுஷர்கள் சமைத்த பதார்த்தம் எதுவும் சாப்பிடுவதில்லை. அரிசியோ கோதுமை மாவோ கொடுத்தால் கட்டி எடுத்துப் போய் ஊர் எல்லையில் அவர்களே பாகம் செய்து பசி நிவர்த்தி செய்து கொள்வார்கள்.
சோமநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கிட்டாவய்யன் அவசரமாக வீட்டுப் பின்வசத்துத் தாவளத்துக்குள் நுழைந்தான்.
அந்த வயசன் இன்னும் கருமமே கண்ணாக உள்ளே வாழைக்காய் நறுக்கிக் கொண்டிருந்தான். குத்திருமலால் அவன் திரேகம் குலுங்கிக் கொண்டிருந்தது.
ஒரு வாய் சூடுவெள்ளம் குடித்து மாமரச் சுவட்டில் குந்தி இருந்து ஸ்ரம பரிகாரம் செய்துவிட்டு வாருமே ஓய்.
கிட்டாவய்யன் சொல்லியபடியே வயசன் பக்கமாக நடந்தான். உள்ளூரில் சேர்த்துக் கொள்ளப்பட்ட எடுபிடிக் காரன். விசேஷத்தின் போது மூணு வேளை சாப்பாடும், வெற்றிலை பாக்கும், நாலைந்து சல்லிக் காசும் கொடுத்து இந்த மாதிரி உதிரிகளை அனுப்பி வைக்கிற வழக்கம்.
வயசனுக்குப் பக்கத்தில் தான் கோதுமை மாவும் அரிசி மாவும் உப்பும் வெல்லமும் கோணிச் சாக்கு மூட்டைகளிலும் ஓலைக் கடகங்களிலும் வைத்திருக்கிறது.
முத்தச்சா, மாறிக்கோ.
நாழியால் அளந்து பெரிய துணி சஞ்சியில் கோதுமை மாவைக் கவிழ்க்கும்போது வயசனை உற்றுப் பார்த்தான் கிட்டாவய்யன்.
சட்டென்று பொறி தட்டியது.
ஓய் நீர் சாவக்காட்டு அயல் வேதக்காரன் இல்லியோ.
வயசன் நடுங்கிக் கொண்டு எழுந்து நின்றான். அவன் இருமல் இன்னும் அதிகமாக இருந்தது.
நானும் பிராமணன் தான் அண்ணா. தயவு செய்யுங்கோ. செத்தக் கூட மாட இங்கே பணி எடுக்கறேன். பசி தாளலை. போஜனம் மாத்ரம் போதும்.
அவன் பூணூலை இழுத்துக் காட்டி இரண்டு கைகளுக்கு நடுவில் அதைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, வயதில் தன்னை விட எவ்வளவோ சின்னவனான கிட்டாவய்யனைத் தெண்டனிட்டு நமஸ்கரித்தான்.
கிழவனைக் கிட்டாவய்யனுக்குத் தெரியும். அவனுடைய தமையனார்களுக்கு சாவக்காட்டு கிறிஸ்தியானி பிராமணன்மார் எல்லோரையும் பற்றித் தெரியும்.
எப்போதோ கப்பலில் வந்து இறங்கி புதுசாக வந்த நிஜ வேதம் இது என்று காட்டி, சாவக்காட்டில் ஸ்மார்த்தப் பிராமணர்கள் அர்க்கியம் கொடுக்கும்போது இரைத்த தண்ணீர்த்துளிகளை அந்தரத்தில் நிறுத்தினானாம் ஒரு வெள்ளைத் தோல்காரன். தோமையன் என்று அவனுக்குப் பேர்.
நீரே எமக்கு ஞான சூரியன். வேதவித்து. பிரம்மத்தை உணர்த்த வந்த குரு.
அந்தப் பிராமணர்கள் நீள அங்கி அணிந்த தோமையன் கூடப் போனாலும் பூணூலைக் கழட்டவில்லை.
ஆனாலும் என்ன ? மற்ற பிராமணர்கள் சாவக்காட்டோடு சம்பந்தப் படுவதை முறித்துப் போட்டார்கள். அது எத்தனையோ தலைமுறைக்கு முந்திய விஷயம்.
மார்க்கம் பிரிச்சா என்ன ? சகோத்ரம் இல்லியா ? மாம்ச பட்சணம் செய்யறதில்லே. பூணூலை இன்னும் போட்டுண்டு தான் இருக்கோம். ஜோதி ஸ்வரூபமா பிரம்மத்தைத் தான் நாங்களும் மனசிலே தியானிக்கறோம். எங்கள்லேயும் ஸ்வகார்யமா பாட்டத்திலே நெல்லு விளைக்கவும், வியாபாரிகள் கிட்டே கணக்கு எழுதவும், சங்கீத சிட்சைக்கும், துபாஷி உத்தியோகத்துக்கும் போய் மத்த ஊர் பிராமணாள் போல் நல்ல ஸ்திதியிலே இருக்கப்பட்டவாளும் உண்டு. என்னைப் போல் பஞ்சத்துலே அடிபட்டு ஜீவிதம் முழுக்க வெறும் சாதத்துக்காக நாடெல்லாம் அலஞ்சு திரியற பாவப்பட்ட ஜீவன்களும் உண்டு. பத்மனாபஸ்வாமி க்ஷேத்ரத்திலே ஊட்டுப்புரையிலே ஒரு வேளையாவது சாப்பிடலாம்னு போய் நின்னேன். அப்ப ஸ்தோத்ரம் செய்தது சத்யமா அந்த பகவானைத் தான். சாவக்காட்டுக் காரன்னு யாரோ சொல்லத் துரத்தித் துரத்தி அடிச்சுக் காலை முடமாக்கிப் போட்டா. அப்புறம் உங்க பிதாவோட கூடத் தேகண்டத்துக்கு எடுபிடியா வந்து.
கிழவன் இருமலுக்கு இடையே பழைய கதை சொல்லியபடி குந்தி உட்கார்ந்தான். அவனுடைய பஞ்சடைந்த கண்கள் கிட்டாவய்யனைத் தொடர்ந்து யாசித்தபடி இருந்தன.
ஆமா. பின்னே இல்லியோ. ஊரை ஏமாத்தறவனாச்சே நீயும் உன் கூட்டரும். எங்க பிதாவோட சிநேகிதன் சிவராம அம்மான் அடிச்சுப் பொறத்தாக்கி நீ உசிரைக் கையில் பிடிச்சுண்டு ஓடினது திருநெல்லியிலே தானே ? முப்பது கொல்லம் முந்தின சமாச்சாரம். கேட்டிருக்கேன். உமக்கு ஓர்மை இருக்கில்லியோ ?
ஸ்வாமி, உங்க பிதா ஒரு மகான். சிவராம அய்யரும் கூடத்தான். எனக்குத் தான் அப்போ நேரம் சரி இல்லே. அப்ப மட்டும் என்ன. எப்பவுமே தான். சாவக்காட்டுலே பிறந்தது என்னோட தப்பா அண்ணா ?
கிழவன் கெஞ்சுகிற குரலில் தொடர்ந்த போது திரும்பவும் இருமல்.
இந்தக் களி எல்லாம் என்னோடு வேணாம். கேட்டியா. கெட்ட கேட்டுக்கு ரோகம் வேறே.
கிழவன் வாயை இறுகப் பொத்தி இருமலை அடக்கிக் கொண்டு எழுந்து நின்றான்.
அய்யோ. அது வரட்டு இருமல் அண்ணா. எனக்குப் பசி ஒண்ணுதான் நோக்காடு. உங்களுக்கு தாசனா ஊழியம் பண்றேன். நித்யப்படி ஒரு வேளை ஒரே ஒரு வேளை வெறும் சாதம் கூடப் போதும். பிண்டம் போடற மாதிரி எறிஞ்சாலும் பிடிச்சு எடுத்து நாவார மனசார வாழ்த்திண்டு பூணலைப் பிடிச்சுண்டு சாப்பிடுவேன்.
அயல் வேதக்காரனுக்கு என்ன எழவுக்குப் பூணல் ? இன்னும் என்ன ஒனக்கு பிராமண வேஷம் கள்ளப் பட்டி மோனே ?
கிட்டாவய்யன் எக்கிக் கிழவனின் பூணூலைப் பிடித்து இழுத்தான். நைந்திருந்த அது கிழவனின் நெஞ்சுக் கூட்டுக்குக் குறுக்கே மாலையாகப் படர்ந்து நழுவித் தரையில் அறுந்து விழுந்தது.
தீர் சே போல்
ஜோர் சே போல்
பின்னால் பெருஞ்சத்தம். பைராகிகள் தாவளத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
அந்தப் பிராமணர்கள் நீள அங்கி அணிந்த தோமையன் கூடப் போனாலும் பூணூலைக் கழட்டவில்லை.
ஆனாலும் என்ன ? மற்ற பிராமணர்கள் சாவக்காட்டோடு சம்பந்தப் படுவதை முறித்துப் போட்டார்கள். அது எத்தனையோ தலைமுறைக்கு முந்திய விஷயம்.
மார்க்கம் பிரிச்சா என்ன ? சகோத்ரம் இல்லியா ? மாம்ச பட்சணம் செய்யறதில்லே. பூணூலை இன்னும் போட்டுண்டு தான் இருக்கோம். ஜோதி ஸ்வரூபமா பிரம்மத்தைத் தான் நாங்களும் மனசிலே தியானிக்கறோம். எங்கள்லேயும் ஸ்வகார்யமா பாட்டத்திலே நெல்லு விளைக்கவும், வியாபாரிகள் கிட்டே கணக்கு எழுதவும், சங்கீத சிட்சைக்கும், துபாஷி உத்தியோகத்துக்கும் போய் மத்த ஊர் பிராமணாள் போல் நல்ல ஸ்திதியிலே இருக்கப்பட்டவாளும் உண்டு. என்னைப் போல் பஞ்சத்துலே அடிபட்டு ஜீவிதம் முழுக்க வெறும் சாதத்துக்காக நாடெல்லாம் அலஞ்சு திரியற பாவப்பட்ட ஜீவன்களும் உண்டு. பத்மனாபஸ்வாமி க்ஷேத்ரத்திலே ஊட்டுப்புரையிலே ஒரு வேளையாவது சாப்பிடலாம்னு போய் நின்னேன். அப்ப ஸ்தோத்ரம் செய்தது சத்யமா அந்த பகவானைத் தான். சாவக்காட்டுக் காரன்னு யாரோ சொல்லத் துரத்தித் துரத்தி அடிச்சுக் காலை முடமாக்கிப் போட்டா. அப்புறம் உங்க பிதாவோட கூடத் தேகண்டத்துக்கு எடுபிடியா வந்து.
கிழவன் இருமலுக்கு இடையே பழைய கதை சொல்லியபடி குந்தி உட்கார்ந்தான். அவனுடைய பஞ்சடைந்த கண்கள் கிட்டாவய்யனைத் தொடர்ந்து யாசித்தபடி இருந்தன.
ஆமா. பின்னே இல்லியோ. ஊரை ஏமாத்தறவனாச்சே நீயும் உன் கூட்டரும். எங்க பிதாவோட சிநேகிதன் சிவராம அம்மான் அடிச்சுப் பொறத்தாக்கி நீ உசிரைக் கையில் பிடிச்சுண்டு ஓடினது திருநெல்லியிலே தானே ? முப்பது கொல்லம் முந்தின சமாச்சாரம். கேட்டிருக்கேன். உமக்கு ஓர்மை இருக்கில்லியோ ?
ஸ்வாமி, உங்க பிதா ஒரு மகான். சிவராம அய்யரும் கூடத்தான். எனக்குத் தான் அப்போ நேரம் சரி இல்லே. அப்ப மட்டும் என்ன. எப்பவுமே தான். சாவக்காட்டுலே பிறந்தது என்னோட தப்பா அண்ணா ?
கிழவன் கெஞ்சுகிற குரலில் தொடர்ந்த போது திரும்பவும் இருமல்.
இந்தக் களி எல்லாம் என்னோடு வேணாம். கேட்டியா. கெட்ட கேட்டுக்கு ரோகம் வேறே.
கிழவன் வாயை இறுகப் பொத்தி இருமலை அடக்கிக் கொண்டு எழுந்து நின்றான்.
அய்யோ. அது வரட்டு இருமல் அண்ணா. எனக்குப் பசி ஒண்ணுதான் நோக்காடு. உங்களுக்கு தாசனா ஊழியம் பண்றேன். நித்யப்படி ஒரு வேளை ஒரே ஒரு வேளை வெறும் சாதம் கூடப் போதும். பிண்டம் போடற மாதிரி எறிஞ்சாலும் பிடிச்சு எடுத்து நாவார மனசார வாழ்த்திண்டு பூணலைப் பிடிச்சுண்டு சாப்பிடுவேன்.
அயல் வேதக்காரனுக்கு என்ன எழவுக்குப் பூணல் ? இன்னும் என்ன ஒனக்கு பிராமண வேஷம் கள்ளப் பட்டி மோனே ?
கிட்டாவய்யன் எக்கிக் கிழவனின் பூணூலைப் பிடித்து இழுத்தான். நைந்திருந்த அது கிழவனின் நெஞ்சுக் கூட்டுக்குக் குறுக்கே மாலையாகப் படர்ந்து நழுவித் தரையில் அறுந்து விழுந்தது.
தீர் சே போல்
ஜோர் சே போல்
பின்னால் பெருஞ்சத்தம். பைராகிகள் தாவளத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
எடோ கிளவா. நான் சவட்டிப் புறத்தாக்கறதுக்குள்ளே ஓடிப் போ. கண்ட மிலேச்சனும் வந்து தேகண்டத்துக்குக் கரண்டி பிடிக்கற இடம் இல்லே இது. பிராமணன், பிராமணன் மாத்திரம் செய்ய விதிக்கப்பட்ட விஷயம். சுபகாரியத்துக்கு இறங்கி வரும் பிருக்கள் சபித்துப் போடுவா.
அண்ணா. பசி உசிர் போறது. சொல்றேனே. நானும் பிராமணன் தான். வேதம் வேறேயானா என்ன ?
என்னவா ? அந்தத் தோமையன் கூடக் குரிசைப் பிடிச்சுப் போன சாவக்காட்டுப் பிராமணன் எல்லோரும் அத்தோடு செத்துப் போய் வம்சம் நசிச்சாச்சு. நீ கிறிஸ்தியானி.
சரி. கிறிஸ்தியானிப் பிராமணன். அநாதை. பசியோட யாசிக்கறேன். கடாட்சம் பண்ணுங்கோ. புண்ணியமாப் போகும்.
திரும்பத் திரும்பச் சொல்றே என்ன தைர்யம் உனக்கு ? நீ பிராமணனா ? பாதரட்சையாலே அடிப்பேன் கேட்டியா. இறங்கிப் போடா புழுத்து ரோகம் பிடிச்ச கிளவா.
கிட்டாவய்யன் பிடித்துப் பலமாகத் தள்ளியதில் மிளகு விழுது பாதி அரைத்து வைத்திருந்த கருங்கல் அம்மியில் தலை மோத விழுந்தான் வயசன். அவன் நெற்றிக்கு மேல் சிவப்புக் கீற்றாக ரத்தச் சுவடு.
பைராகிகள் தரையில் கிடந்த கிழவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். அந்தப் பூஞ்சை திரேகத்தைக் கடந்து முன்னால் வராமல், சொல்லி வைத்தாற்போல் வந்த வழியே திரும்பி வெறுங்கையோடு நடந்து போனார்கள்.
இருங்கோ. அரிசி மாவு. கோதுமை. வெல்லம். எல்லாம் இந்தோ.
தீர் சே போல். ஜோர் சே போல்.
கிட்டாவய்யன் வார்த்தைகளையும், பைராகிகளின் கோஷத்தையும் மீறிக்கொண்டு வயசனின் தீனமான குரல் தட்டுத் தடுமாறி எழுந்தது.
கிட்டாவய்யன் அவன் வயிற்றில் ஓங்கி உதைத்து வெளியே சவட்டிக் கொண்டு போய்ப் புறத்தாக்கினான்.
பைராகிகள் புழுதியைக் கிளப்பியபடி உலக்கைகளால் நெஞ்சில் அறைந்து கொண்டு கூப்பிடு தொலைவில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அந்தத் திசையில் இருந்து பறந்து வந்து கிட்டாவய்யன் தொடையில் ஊர்ந்த குளவி ஒன்று சாவதானமாக அவன் கால் வழியே கெளபீனத்தில் புகுந்து உறுப்பு நுனியில் உக்ரமாகக் கொட்டியது.
தூரத்தில் இருந்து பைராகி திரும்பிப் பார்த்து சத்தமாகச் சொன்னான்.
உன் பரம்பரையே கிறிஸ்தியானியாகப் போறது.
சோமா, என்ன சொல்றான் பைராகி ?
அரைக்கட்டில் வலி உயிர்போக உயிர்த் தலத்தைப் பொத்திப் பிடித்தபடி கேட்டான் கிட்டாவய்யன்.
சபித்துப் போட்டானோ ?
எனக்குச் சரியாக் கேட்கலை அண்ணா.
சோமநாதன் தள்ளாடி நடந்து போகிற வயசனைப் பார்த்தபடியே சொன்னான். அவனுக்கு எல்லாம் கேட்டுத்தான் இருந்தது.
அண்ணா. பசி உசிர் போறது. சொல்றேனே. நானும் பிராமணன் தான். வேதம் வேறேயானா என்ன ?
என்னவா ? அந்தத் தோமையன் கூடக் குரிசைப் பிடிச்சுப் போன சாவக்காட்டுப் பிராமணன் எல்லோரும் அத்தோடு செத்துப் போய் வம்சம் நசிச்சாச்சு. நீ கிறிஸ்தியானி.
சரி. கிறிஸ்தியானிப் பிராமணன். அநாதை. பசியோட யாசிக்கறேன். கடாட்சம் பண்ணுங்கோ. புண்ணியமாப் போகும்.
திரும்பத் திரும்பச் சொல்றே என்ன தைர்யம் உனக்கு ? நீ பிராமணனா ? பாதரட்சையாலே அடிப்பேன் கேட்டியா. இறங்கிப் போடா புழுத்து ரோகம் பிடிச்ச கிளவா.
கிட்டாவய்யன் பிடித்துப் பலமாகத் தள்ளியதில் மிளகு விழுது பாதி அரைத்து வைத்திருந்த கருங்கல் அம்மியில் தலை மோத விழுந்தான் வயசன். அவன் நெற்றிக்கு மேல் சிவப்புக் கீற்றாக ரத்தச் சுவடு.
பைராகிகள் தரையில் கிடந்த கிழவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். அந்தப் பூஞ்சை திரேகத்தைக் கடந்து முன்னால் வராமல், சொல்லி வைத்தாற்போல் வந்த வழியே திரும்பி வெறுங்கையோடு நடந்து போனார்கள்.
இருங்கோ. அரிசி மாவு. கோதுமை. வெல்லம். எல்லாம் இந்தோ.
தீர் சே போல். ஜோர் சே போல்.
கிட்டாவய்யன் வார்த்தைகளையும், பைராகிகளின் கோஷத்தையும் மீறிக்கொண்டு வயசனின் தீனமான குரல் தட்டுத் தடுமாறி எழுந்தது.
கிட்டாவய்யன் அவன் வயிற்றில் ஓங்கி உதைத்து வெளியே சவட்டிக் கொண்டு போய்ப் புறத்தாக்கினான்.
பைராகிகள் புழுதியைக் கிளப்பியபடி உலக்கைகளால் நெஞ்சில் அறைந்து கொண்டு கூப்பிடு தொலைவில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
அந்தத் திசையில் இருந்து பறந்து வந்து கிட்டாவய்யன் தொடையில் ஊர்ந்த குளவி ஒன்று சாவதானமாக அவன் கால் வழியே கெளபீனத்தில் புகுந்து உறுப்பு நுனியில் உக்ரமாகக் கொட்டியது.
தூரத்தில் இருந்து பைராகி திரும்பிப் பார்த்து சத்தமாகச் சொன்னான்.
உன் பரம்பரையே கிறிஸ்தியானியாகப் போறது.
சோமா, என்ன சொல்றான் பைராகி ?
அரைக்கட்டில் வலி உயிர்போக உயிர்த் தலத்தைப் பொத்திப் பிடித்தபடி கேட்டான் கிட்டாவய்யன்.
சபித்துப் போட்டானோ ?
எனக்குச் சரியாக் கேட்கலை அண்ணா.
சோமநாதன் தள்ளாடி நடந்து போகிற வயசனைப் பார்த்தபடியே சொன்னான். அவனுக்கு எல்லாம் கேட்டுத்தான் இருந்தது.
அரசூர் வம்சம் - அத்தியாயம் ஒன்பது
ராஜா அரண்மனையின் முன் வசத்தில் இருக்கப்பட்ட விசாலமான மண்டபத்துக்கு நடந்தபோது நீள ஒழுங்கையில் காரை பெயர்ந்து அவர் காலடியில் விழுந்தது.
காரைக் கட்டியை ஓரமாகக் குனிந்து நகர்த்திக் கொண்டிருக்கும்போது காலில் பாதரட்சை இல்லாதது நினைவு வந்தது.
யாரங்கே ?
ராஜா குரல் கொடுத்தார்.
ராணிக்கு விசிறிக் கொண்டிருந்த சேடிப்பெண்ணைத் தவிர வேறு யாரும் அங்கே கூப்பிடு தூரத்தில் இருக்க முடியாதுதான்.
ஆனால், முத்தம்மா என்று அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வேலை ஏவுவது ராஜாவுக்கு விதிக்கப்பட்ட கெளரதையான செயல் இல்லை.
என்ன வேணும் ?
முத்தம்மா கழுத்து வியர்வையைப் புடவையில் துடைத்தபடி கேட்டுக் கொண்டே வந்தாள்.
ராஜா கூப்பிட்டால் கீழடங்கியதுகள் ஓடி வந்து சேவித்து வினயமாக வாய் பார்த்து இருக்கிற காரியம் இல்லைதான் இது.
ஆனால் இந்தச் சேடிப்பெண்ணைக் கோபிக்க முடியாது. வீட்டு விலக்கு நின்று கொண்டிருக்கும் ராணிக்கு சதா வரும் முன்கோபமும் சலிப்பும் இவளுக்கு வருவதில்லை. அவ்வப்போது புழங்க அனுமதிக்கிறபோது அவளுக்குத் தானே அந்தப் பொழுதுகளுக்கான ராணியாகிற சந்தோஷம் இருப்பதே காரணம்.
ராஜா அவள் காலைப் பிடித்துவிட ஒருதடவை ஊஞ்சலில் படுத்து ஓய்வெடுத்திருக்கிறாள். ராணி தூங்கிக் கொண்டிருந்த இம்மாதிரியான பகல் பொழுது அது.
என்ன வேணும்னு கேக்கறேன் இல்லே.
ராஜாவின் நரைமீசையை குதிரை லகான் போல் விளையாட்டாக இழுத்தபடி அவள் திரும்பக் கேட்டாள். இப்போதும் தன்னை ராஜா மடியில் இருத்திக் கொண்டால் இன்னொரு முறை கால் பிடித்து விடச் சொல்லி உத்தரவு போட்டு விட்டுக் கொஞ்சம் தூங்கலாம் என்ற அசதியும் எதிர்பார்ப்பும் கண்ணில் தெரிந்தது.
என் பாதரட்சை எங்கே தொலைஞ்சு போச்சு பெண்ணே ? தேடி எடுத்து வா. சமூகம் கேட்டு வந்தவர்களைச் சந்திக்கப் போகும்போது வெறுங்காலோடு போவது உசிதமில்லை என்று உனக்குத் தெரியாதா என்ன ?
அவள் ஏதோ ரண வேதனை அனுபவிப்பது போல் முணுமுணுத்தபடி உள்ளே போனாள்.
ராஜா அந்த முன் மண்டபத்தில் சுவரில் சாய்ந்து ஒரு மரப்பலகையில் அமர்ந்தார்.
சுற்றிலும் காரை பெயர்ந்த சிதறல்கள்.
கொத்தனை வரச் சொல்லிப் பத்து நாளாகிறது. மராமத்துக் காணாமல் அரண்மனையே க்ஷீணித்துப் போய்க் கொண்டிருக்கிறது.
காசு கொடுத்தால் கொத்தனும், சித்தாளும், நிமிர்ந்தாளுமாக ஒரு பட்டாளமே வரும். இந்த ஓட்டை அரண்மனையை சீர்படுத்துவதென்ன, புத்தம் புதுசாக வெள்ளைச் சுண்ணாம்பும், கோழி முட்டையும், சீமைச் சாந்தும் குழைத்துப் பிரம்மாண்டமாகத் தூண் நிறுத்தி ஒரு பெரிய பங்களாவே நிர்மாணித்து விடமுடியும்.
யாரும் எந்தப் பக்கத்திலும் ஒளிந்திருந்து பார்க்காமல் சுபாவமாக மனம் உற்சாகம் கொள்ளும் வரை ராணி நீராடித் திரும்ப நாலு பக்கத்திலும் பக்கப் பதிய மேற்கூரையோடு குளத்தையும் அமைத்து விடலாம்.
சொன்னால் கிரகித்துக் கொண்டு வேண்டியபடி எல்லாம் நிர்மாணித்துக் கொடுக்க நாடிக் கொத்தனும் அங்கமுத்துக் கொத்தனும் இருக்கிறார்கள்.
ஆனால் கொத்தனார்களுக்குப் பதிவாக வாரத்துக்கு ஒண்ணரை ரூபாயாவது கூலியாகக் கொடுக்க வேண்டும். நிமிர்ந்தாளுக்கு அதில் அரையே அரைக்கால் பாகம். சித்தாளுக்கு கால் பாகம் கூலி.
முழுக்கப் பணமாகக் கொடுக்க முடியாது போனால், பாதிக்குப் பாதி பணமும், மீதிக்கு நெல்லுமாகத் தரலாம். கும்பிடு போட்டுவிட்டு வாங்கிப் போவார்கள்.
ஆனால் இருக்கிற நெல்லைத் தின்று தீர்க்க இங்கேயே ஸ்திரமாக சொந்த பந்தம் என்று ஒரு கூட்டம் அரண்மனைக்குள் இருக்கிறது. போன சாகுபடிக்குக் குடியானவர்கள் கொண்டு வந்து அளந்து போனது இத்தனை நாள் நீடித்திருந்ததே அதிசயம் தான்.
மழையே இல்லாம வரண்டு போய்க் கிடக்குது. இந்த வருஷம் இதுவும் வராது.
போன வாரம் கிராமங்களைக் கண்டு வரப் போயிருந்த காரியஸ்தன் சொன்ன சமாச்சாரம் கவலையை அதிகப்படுத்துகிறதே ஒழிய ஆசுவாசத்தைத் தரவில்லை.
உள்ளதுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும்போது இந்த பனியன் சகோதரர்கள் வேறே.
என்னத்துக்காக வந்திருக்கிறான்கள் ?
நான் தானே நினைத்துக் கொண்டு அவர்களைக் கூப்பிட்டேன். தப்புதான். கம்பங்களி சாப்பிடும் ஆனந்தத்தில் அவர்களை மனதில் அழைத்து பங்களா பற்றி வெற்றுப் பேச்சு பேச நினைத்திருக்க வேண்டாம்.
நல்ல வாய்க்கு ருசியான சாப்பாடும், காதுக்கு இனிமையான சங்கீதமும் மனதை நிலை தடுமாறச் செய்து போடுகிறது.
அரைக்கட்டில் உப்பு சரியாக முடிந்து வைத்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார் ராஜா.
ஆறு மாசக் கர்ப்பிணி போல் ஏற்கனவே பெருத்த வயிறோடு ஒட்டி சின்னக் குவியலாக உப்பும் இடுப்போடு ஒட்டி நறநறத்துக் கொண்டிருந்தது.
அகஸ்மாத்தாகக் கண்டுபிடித்தது தான்.
போன தடவை இவன்கள் வந்தபோது கம்பங்கூழில் உப்புப் போட மறந்து போனான் இழவெடுத்த சமையல்காரன்.
அந்தப் புழுத்த நாயை நாலு தலைமுறைக்குத் திட்டித் தீர்த்து, உப்புக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தார் ராஜா.
- Sponsored content
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 17
|
|