புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) Poll_c10சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) Poll_m10சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) Poll_c10 
6 Posts - 60%
heezulia
சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) Poll_c10சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) Poll_m10சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) Poll_c10சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) Poll_m10சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...)


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 10:58 pm

1. வலி சுமக்க முடியா நிலை....

என்ன சுருண்டு சுருண்டு படுக்கிறே - என்றபடி பசுபதி வந்து சேரில் அமர்ந்தான்.

உடம்பு முடியலங்க - என எழ முனைந்தாள் கீர்த்தி.

என்னவாம் மகராணிக்கு என்று நக்கலாக கேட்டான்.

ஆயாசமாய் உணர்ந்தாள் கீர்த்தி பீரியட் அதான்.

எல்லா பொம்பிளைகளுக்கும் வருவது தானே ? நீ மட்டும் என்ன ஸ்பெஷலா??

அதற்கு பின் ஒரு பதிலும் சொல்லாது திரும்ப சுருண்டு படுத்தாள்.

நான்கு நாட்களாக விடாது வலிக்கும் தலைவலியை நினைத்துப் பார்த்தாள் கீர்த்தி.

எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்த தொடர் விபத்தினால் பின் மண்டையில் அடிப்பட்டு ஸ்கான் எல்லாம் எடுத்து ஒன்றும் இல்லை என்று டாக்டர்கள் சொன்னப்பின் இதோ இத்தனை வருடத்திற்கு பின் சுத்தியால் அடிப்பட்ட இடத்தில் பொத்தல் போடுவது போல வலியை உணர்ந்தாள். முன் நெற்றியில் வலி என்றால் தைலம் தேய்க்கலாம். பின் மண்டையில் வலி என்றால் என்ன செய்வது குழப்பரேகை மனதில்...

இதையெல்லாம் சொல்லி இன்னும் பசுபதியை பயமுறுத்த எண்ணாமல் அமைதியாய் விட்டம் நோக்கினாள்.

அவளையும் அறியாது கண்ணீர் வந்துக்கொண்டிருந்தது..

என்ன அழறியா??

இல்லை தலைவலிக்காக பூசிய தைலம் கண்ணில் பட்டுருச்சு என்று பொய் சொன்னாள் கீர்த்தி

பின் ஒன்றும் பேசாது டீவி பார்க்கத் தொடங்கினான் பசுபதி.

வேலையில் இருந்து வந்த மகன் அஷோக் என்னம்மா என்று வந்து நின்றான்.

முடியலடா கண்ணா நீயே சாதம் போட்டு சாப்பிடு அப்பா சாப்பிட்டாகிவிட்டது என்று சோர்வுடன் கண்ணை மூடினாள்.

சரிம்மா நீங்க ஓய்வெடுங்க நான் பார்த்துக்கிறேன் என்றபடி அறையை விட்டகன்றான்.

அழுகை முட்டிக்கொண்டு வந்தது... எல்லா பெண்களுக்கும் உண்டாவது தானாமே??

அப்போது டிவியில் தொட்டாற்சிணுங்கி படத்திலிருந்து காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது..

துன்பத்தில் தவிக்கும் ரேவதிக்கு ஆதரவாய் இருக்கும் தோழனாய் கார்த்திக்....

இப்படி ஒரு தோழமை துன்பம் பகிர எனக்கு கிடைக்குமா என்ற ஆயாசத்தில் உறங்க முயற்சித்தாள். பின் மண்டையின் வலி அவளை உறங்கவிடாது செய்தது. அமைதியாய் சஷ்டிகவசம் முணுமுணுக்க தொடங்கியபோது அவளையும் அறியாது கண்ணயற்ந்தாள்.

வெள்ளை உடை உடுத்திய தேவதூதன் போலொருவன் கையில் மந்திரக்கோலால் கீர்த்தியை தட்டி எழுப்பினான்...

ஆச்சர்யத்துடன் கண்விழித்தாள்..

நீங்க யாரு?

உன் துன்பம் பகிர ஒரு தோழன் வேண்டுமென கேட்டாயே... அதான் வந்தேன்...

தலை ரொம்ப வலிக்குதே என்று அழுகையுடன் கேட்டாள்...

இதோ இந்த மந்திரக்கோலால் உன் வலியை போக்கிவிடுகிறேன் என்று தலையை சுற்றி வட்டம் போட்டான்.

பட்டென வலி விலகியதை கண்டு அதிசயித்தாள்...

இனி அமைதியாய் உறங்கு தோழியே... என்று புகை போல் கலைந்து மறைந்தான்....

ஆழ்ந்த உறக்கத்திற்கு போனாள் கீர்த்தி...

எப்போதும்போல் அலாரம் 4.00 மணிக்கு அதிகாலை அடித்தது. கண்விழித்தபோது தலைவலி இத்தனைநாள் இருந்தது சுத்தமாக வலியே இல்லாமல் இருப்பதை உணர்ந்தாள். அட என்று நினைத்தாள்.

பின் பரபரவென்று வேலைகளை ஆரம்பித்தாள்...

குளித்து பூஜை முடித்து டிபன் சாப்பாடு தயாரித்து வேகமாய் டப்பாக்களில் அடைத்து கிளம்பினாள் பசுபதியுடன்....

கார் ஸ்டார்ட் செய்து பழைய பாட்டு கேசட்டில் ஒலிக்க வண்டியை கிளப்பினான் பசுபதி.

அமைதியாய் உட்கார்ந்து கண்மூடினாள் கீர்த்தி.. என்றும் போல் அன்று வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் தூங்கமுடியவில்லை கீர்த்தியால்.

யோசனைகளுடன் கீர்த்தியும் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த பசுபதியும் ஒன்றும் பேசாமல் இருந்தனர்.

திடீரென்று கீர்த்தியின் கண்களுக்கு பின்னால் அரக்கத்தனமாக வரும் வெள்ளைக் கார் தங்கள் வண்டியை இடிக்க வருவதை நொடியில் கண்ட கீர்த்தி அலறினாள். என்னங்க வண்டி வேகமா ஒன்னாம் ட்ராக்குக்கு தள்ளுங்க பின்னால வண்டி வேகம் வேகம் என்று கத்தவும் சுதாரித்த பசுபதி வேகமாய் மூன்றாவது ட்ராக்கில் இருந்த காரை முதல் ட்ராக்கில் திருப்பினான். அவர்களை நோக்கி வேகமாக வந்த வண்டி கட்டுக்கடங்காமல் ஓரமாய் போய் எகிறி நாலு முறை பல்டி அடித்து அதே வேகத்துடன் திரும்ப இவர்களை நோக்கி வர ஆரம்பித்தது. பசுபதிக்கும் கீர்த்திக்கும் மரண பயம் முகத்தில் அப்பியது. அதே நேரம் வண்டியை ஓரம் கட்டி நிறுத்த முயன்று தோற்றான் பசுபதி..

இரண்டு அடியில் அந்த வெள்ளை வண்டி ஓட்டம் நிறுத்தி உறுமியது... உடனே கதவை திறந்து இருவரும் இறங்கி அந்த காரினில் இருப்பவரை காப்பாற்ற ஓடினர். அந்த காரை ஓட்டி வந்தது ஒரு பெண் முகமெல்லாம் அடி பயத்தில் அதிர்ச்சியில் மயக்கத்திற்கு போனாள்.

உடனே பசுபதி ஆம்புலன்சுக்கும் போலிசுக்கும் தன் மொபைலில் இருந்து கால் செய்தான். ஐந்தே நிமிடத்தில் வண்டிகள் எல்லாம் நின்று போலிசும் ஆம்புலன்சும் வந்ததும்.

இருவருக்கும் நன்றி கூறிய போலிஸ் உடனே அப்பெண்ணை எடுத்துக்கொண்டு விரைந்தது.

இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து இருவரும் மீளமுடியாது காரில் வந்து அமர்ந்தனர்.

பசுபதியின் எண்ண ஓட்டம் அறிய முடியவில்லை....

கீர்த்தியின் தலையில் பின் மண்டையில் காலை முதல் விலகி இருந்த வலி திரும்ப விண் விண் என்று தொடங்கியது...நெஞ்சில் சுருக் சுருக் என்ற வலி ஆரம்பித்தது.

ஒருவேளை கீர்த்தி உறங்கி இருந்திருந்தால் என்றும்போல்.... என்று பசுபதியின் மனம் யோசிக்கத் தொடங்கியது...

மயிரிழையில் உயிர் தப்பினதை இன்னமும் அவனால் நம்பமுடியவில்லை...

ராத்திரி அவளை தன் கேள்விகளால் அழவைத்ததை யோசித்தான்...

தன் செயலுக்கு வருந்தினான்......

இன்று கீர்த்தி சமயோஜிதமாக செயல்பட்டதை நினைத்து வியந்தான்....

இது எதுவும் அறியாத கீர்த்தி வேகமாய் சஷ்டிகவசம் முணுமுணுத்து எல்லா இறைவனுக்கும் நன்றி சொல்ல ஆரம்பித்தாள் உயிர் தப்பியதை எண்ணி.....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 4:30 pm

2.தவமிருந்து கிடைத்த வரமே.....

ஸ்வேதா என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே வந்தாள் தோழி கற்பகம்...

வா கற்பகம் எப்படி இருக்கே ராத்திரி உன் முன்னாடி அப்படி நடந்ததுக்கு முதல்ல மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று சொன்னாள் ஸ்வேதா..

மண்டு மன்னிப்பு ஏண்டி கேட்கிறே? என்னால என் தோழியை புரிஞ்சுக்க முடியாதா? மேலும் உன் தப்பு என்னத்தான் இதில்?

அப்டியில்ல கற்பகம் அவர் உன் முன்னாடி என்னை சத்தம்போட்டு பின் அறிவுரை சொன்னப்ப உன் முகம் போன போக்கை பார்த்தேன் சட்டுனு நீ கிளம்பறேன்னு சொல்லி கிளம்பினே. அதான்...

பின்ன நீ ஆனாலும் உன் புருஷனுக்கு ரொம்ப தான் இடம் கொடுக்கிறே இது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை என்று வெறுப்பை உமிழ்ந்தாள் கற்பகம்..

என்ன சொல்றே கற்பகம்?

பின்ன என்ன ஸ்வேதா? நீங்க ரெண்டு பேரும் காதலிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? அவருக்கு உன் மேல் இருக்கும் உரிமையை இப்படி எல்லார் முன்னாடி பிள்ளைகள் முன்னாடி உன்னை அடக்கி அதட்டி அறிவுரை சொல்லி அவரென்ன க்ளாஸ் டீச்சர்னு நினைப்பா?

இரு இரு நிறுத்து கற்பகம் என்ன நீ விட்டா என் புருஷன் மேலே குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கிட்டே போறே என்று பதட்டப்பட்டாள் ஸ்வேதா....

ஆமாண்டி நீ கொடுக்கும் இடம் தான்.. என்ன தான் நீ ஆபிசுல தப்பு செஞ்சிருந்தே ஆனாலும் அதை பிள்ளைகள் முன்னாடி சொல்லி உன்னை கண்டிக்கனுமா? தெரியாம தான் கேட்கிறேன் இன்னும் உன்னை சமமா நடத்தனும்னு கூட உன் புருஷனுக்கு தெரியலையே...

(சோர்வான முகத்துடன் ஹர்பன்ஸ் சிங் உள் நுழையும்போது அவன் கையில் இருக்கும் மல்லிப்பூவையும் அல்வாவையும் மறைக்க சிரமப்படும்போது ஸ்வேதாவின் குரலில் தன்னைப் பற்றி சொல்வதைக் கேட்டு ஒதுங்கி நின்றான்.. ஒட்டுக்கேட்கும் புத்தி இல்லைத் தான்.. ஆனால் சட்டுனு தன் பேச்சு இரு தோழிகளுக்கிடையில் வரும் காரணம்? )

ஏன் என் புருஷன் என்னை கொடுமை செஞ்சார்னு உன்னிடம் ஏதாவது சொன்னேனா?
இல்ல அவர் என்னை இழிசொல் பேசுறார்னு உன்னிடம் பஞ்சாயத்து வெச்சேனா?

அடிப்பாவி நான் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினால்... மேலும் பேசவிடாமல் இடைமறித்தாள் ஸ்வேதா.

நிறுத்து கற்பகம்... நட்பு என்பது எப்படி இருக்கனும் தெரியுமா? குடும்பத்தில் சலசலப்பு இருந்தால் அதை தீர்க்க முயலனுமே தவிர நீ ப்ரச்சனையை பெரிசு பண்ணிருவே போலிருக்கே?

குழப்பத்துடன் கற்பகம் ஸ்வேதாவை ஏறிட்டு நோக்கினாள்.. இப்ப என்னத்தான் சொல்லவரே நீ?

இப்டி கேட்டியே இதை முன்னாடியே கேட்டிருந்தா இவ்ளோ லைன் வேஸ்டாகாம இருந்திருக்கும்ல?? என் புருஷன் கோவக்காரர் தான்.. ஒத்துக்கிறேன் எல்லார் முன்னாடியும் கத்துபவர் தான்.... அறிவுரை சொல்பவர் தான்..

அதை தாண்டி சொல்றேன் புருஷன் கொஞ்சுறது மட்டும் அந்தரங்கமா வைக்க கூடாதுடி... திட்றதும் சண்டை கோபதாபங்களும் இருவருக்கும் இடையில் அந்தரங்கமா தான் இருக்கணும். புருஷனுக்கு பொண்டாட்டிக்கும் இடையில் பிள்ளைகள் கூட மூணாம் நபர் தாண்டி, இப்படி இவர் பிள்ளைகள் முன்னாடி கத்தினதால் பிள்ளைகள் இவரை மதிக்கும்னா நினைக்கிறே என்று எதிர்க் கேள்வி கேட்டாள் கற்பகம்...

ஸ்வேதா சின்ன புன்னகையுடன் கற்பகத்தை ஏறிட்டு நோக்கினாள்... முதல்ல தண்ணி குடி.... நிதானமா நான் சொல்வதை கவனி...

அவர் கத்துறதையும் எனக்கு அறிவுரை சொன்னதையும் மட்டுமே ஒரே கண்ணோட்டத்தோட நீ பார்க்கிறே..... இன்னொரு கோணமும் இருக்கு சொல்றேன் ஆச்சர்யப்படாதே... நானும் அவரும் ஒரே ஆபிசுல தானே வேலை செய்கிறோம்? ஆபிசில் பொண்டாட்டி என்ற எண்ணத்தோட என்னை அவர் அண்டியதில்லை...

இப்படி எல்லார் முன்னாடி கத்துற மனுஷன் தனியா அறையில் குழந்தை போல் என் மடியில் தலை வைத்து தூங்க ஆசைப்படுவது தெரியுமா உனக்கு? நான் ஒரு நாள் ரொம்ப தூரம் வண்டி பஞ்சர் ஆகி தள்ளிக்கிட்டு நடந்து வந்ததை பார்த்து நான் தூங்கிட்டேன்னு நினைச்சு என் கால்களை மடியில் எடுத்து வெச்சுக்கிட்டு நைட்டெல்லாம் மெல்ல நீவி விட்டு பிடிச்சுவிட்டது தெரியுமா உனக்கு? எனக்கு என்ன பிடிக்கும்னு நான் சொல்லாமலயே எனக்கு வாங்கி கொடுத்து வாரத்தில் ஒரு நாள் லீவுல என்னை வேலை செய்ய விடாமல் உட்காரவைத்து மஹாராணி போல அவரே சமைச்சு பிள்ளைகள் நைட் தூங்கினதும் ஆசையுடன் எனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டது தெரியுமா உனக்கு? எனக்கு சின்ன தலைவலி வந்தாலும் துடிச்சு போகும் குழந்தை மனசு அவருக்கு தெரியுமா உனக்கு?

மேலும் பேசமுடியாது மூச்சு வாங்கினது ஸ்வேதாவுக்கு...

வியப்பாய் பார்த்தாள் கற்பகம்...

அருகே படித்துக்கொண்டிருந்த மகள் ஷ்ரவணி நமுட்டு சிரிப்புடன் கற்பகம் அம்மாவிடம் டோஸ் வாங்குவதை ரசித்துப்பார்த்துவிட்டு சொன்னாள்... " ஆண்ட்டி எங்கம்மா கிட்ட தப்பி தவறி நாங்களே எங்க அப்பாவை பற்றி ஒன்னும் சொல்லமாட்டோம் ஏன்னா எங்கம்மா ஃபுல் சப்போர்ட்டாக்கும் எங்கப்பாவுக்கு "
இத்தனைக் காலம் ஃப்ரெண்டா இருக்கும் உங்களுக்கு இது தெரியாம போனது பரிதாபமே.... அதுமட்டும் இல்லாம இது குடும்பம்.... பிள்ளைகள் முன்னாடி அப்பா அம்மாவை திட்டினால் அம்மாவை நாங்கள் மதிக்காம போயிருவோமா இல்ல அப்பாவை தான் மதிக்காம போயிருவோமா? தவறு செய்தால் அப்பா கண்டிப்பது உண்டு... அந்த தவறு திரும்ப நாங்களும் செய்யாமல் இருக்க இது ஒரு பாடமா எடுத்துக்குவோம்.. ஆண்ட்டி நீங்க சொன்னீங்களே திட்டிப்பதும் சண்டை போட்டுக்கவும் ரூம்ல தனியா செய்யனும்னு... ஒரே ரூம்ல குடித்தனம் நடத்தும் ஏழைக்குடும்பம் என்ன செய்யும் திட்டுவதற்கு என்று வேறு ரூம் தேட முடியுமா என்ன??

ஆண்ட்டி சின்னப் பொண்ணு நான் புத்தி சொல்றேன்னு நினைக்காதீங்க.... வீட்டுக்கு வீடு வாசப்படி புரிஞ்சுக்கோங்க... நாசுக்கா நீங்க நேத்து இங்கிதம் தெரிஞ்சு கிளம்புனீங்கன்னு நினைச்சேன்.. ஆனால் இன்னைக்கு வந்து இப்படி அம்மாவுக்கு நீங்க புத்தி சொல்லவரீங்க. எங்க குடும்பத்துல எங்களுக்கு அம்மா அப்பா ரெண்டு தூண் போல.... நாங்க இந்த தூணைப் பற்றி தான் நடக்க பழகுகிறோம்... நல்ல பழக்கவழக்கங்களையும் சொல்லிக் கொடுத்த அம்மா அப்பா எங்க முன்னாடி கொஞ்சிக்கிறதில்லைன்னா அவங்களுக்கு இடையில் அன்பு இல்லன்னு ஆயிருமா?? எங்களுக்கும் தெரியும் அப்பா அம்மாவுக்கு ஆசையா ஊட்டி விடுவதில் இருந்து அம்மாவுக்கு கால் பிடிச்சு விடறதுல இருந்து எல்லாமே எங்களுக்கும் தெரியும்...

ஸ்வேதா அன்புடன் மகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கற்பகம் இருவரையும் பரிதாபமாகப் பார்த்தாள்...

ஸ்வேதா அன்புடன் கற்பகத்தின் தோளை மெல்ல அழுத்தி சொன்னாள் " இதனால் நம் நட்புக்கு எந்த குறைவும் வராது கற்பகம்.. எப்பவும் போல் நீ என் இனியத் தோழி தான் "

( இதையெல்லாம் ஹர்பன்ஸ் சிங் கேட்டதும் அவன் கண்ணில் ஒரு சொட்டு நீர் வந்து கன்னத்தை நனைத்து மனைவியையும் மகளையும் நினைத்து பெருமைக் கொண்டது)

அப்போது தான் உள்ளே நுழைவது போல் ஹாய் கற்பு ஹௌ ஆர் யூ என்றபடி முகத்தில் மலர்ச்சியைத் தேக்கிக்கொண்டு கேட்டான்...

கற்பகம் ஆ வென்று வாயைப் பிளந்தாள்.. நேற்று நடந்த கோபத்தின் சுவடே முகத்தில் தெரியாமல் கை நிறைய மல்லிகைப்பூவும் ஸ்வீட்டும் வாழ்க்கை இன்பமயமாக்கும் அற்புத சாதனங்களாக அவளுக்கு தோன்றியது... வெட்கத்துடன் ஸ்வேதாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் கற்பகம்.

ஸ்வேதா கனிவுடன் ஹர்பன்ஸ் சிங்கை நோக்கினாள்....

ஷ்ரவணி வேகமாய் தன் ரூமுக்கு ஓடினாள்...

ஹர்பன்ஸ் சிங்கும் ஸ்வேதாவும் தங்கள் அறைக்குள் நுழைந்தனர்..

ஹர்பன்ஸ் சிங் அதுவரை காத்திருந்ததே பெரிய அவஸ்தை என்பது போல் வெகமாய் அவளைத் தள்ளிக் கட்டிக்கொண்டான்.

என்னாச்சு ஐயாவுக்கு என்று அவன் மூக்கை நிமிண்டினாள் ஸ்வேதா...

மல்லிப்பூவை அவளுக்கு வைத்துவிட்டு அல்வாவின் தித்திப்பை இருவரும் சுவைத்தனர்.

மிகவும் சந்தோஷ மூடில் ஹர்பன்ஸ் சிங் தன் பாஷையில் பாடத் தொடங்கினான்..


தில் தேதியா ஜான் துமே தேங்கே
தஹா நஹி கரேங்கே சனம்...

ரபு கீ கஸம்....

இன்சாப் கருலோ
முஜே மாஃப் கருலோ...

கண்மூடி ரசித்தாள் பாட்டையும் அவன் அன்பையும் அல்வாவின் தித்திப்பையும் மல்லிகைப்பூவின் மணத்தையும்....

அவளும் பாடினாள்...


தவமிருந்து கிடைத்த வரமே
இனி வாழ்க்கையில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் தாமரை
உன்னைக் கண்டால் மலர்கிறேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல்
உன்னை மடியினில் ஏந்துகிறேன்.....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 6:45 pm

முதல் சிறுகதை அருமை பெண்கள் படும் துன்பங்களில் பங்கெடுக்க முடியாவிட்டாலும் அவர்களை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது மனைவியின் விவேகம் சில நேரம் எமக்கு பாதுகாப்பாகவும் அமையும் என்று சொல்கிறது அழகான கரு அருமையாய் வடித்தீர் நண்றி அக்கா அன்பு மலர்

மற்ற சிறுகதை படித்த பின் பருகிறேன் கொஞ்சம் வேலை அதிகம்



நேசமுடன் ஹாசிம்
சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 7:21 pm

ஹாசிம் wrote:முதல் சிறுகதை அருமை பெண்கள் படும் துன்பங்களில் பங்கெடுக்க முடியாவிட்டாலும் அவர்களை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது மனைவியின் விவேகம் சில நேரம் எமக்கு பாதுகாப்பாகவும் அமையும் என்று சொல்கிறது அழகான கரு அருமையாய் வடித்தீர் நண்றி அக்கா அன்பு மலர்

மற்ற சிறுகதை படித்த பின் பருகிறேன் கொஞ்சம் வேலை அதிகம்

முதல் பின்னூட்டம் அன்பு தம்பியிடமிருந்து.....

அன்பு நன்றிகள் ஹாசிம்..... கண்டிப்பாக இரண்டாவது கதையும் உங்களுக்கு பிடிக்கும்.....

பெண்கள் அரக்க பரக்க ஆபிசிலும் வேலை செய்துவிட்டு வீட்டிலும் உழைப்பதை பார்க்கிறேன்... கூட இருந்து உதவவில்லை என்றாலும் மனைவியின் மனம் புரிந்து இதமாய் நாலு வார்த்தைகள் பேசினால் அதற்கே பெண்கள் நன்றியோடு இன்னும் பாடுபடுவாங்க.....

மீண்டுமொருமுறை அன்புநன்றிகள் ஹாசிம்.... சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 14, 2010 7:33 pm

இரண்டு கதையுமே மிகவும் அருமை
ஆனா அக்கா பலவீடுகளில் பெண்களுக்கு பெண்களே எதிரியாக இருக்கிறார்கள் எது எப்படியோ பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்.
தொடருங்கள் உங்கள் முயற்சியை ALL THE BEST



ஈகரை தமிழ் களஞ்சியம் சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 7:35 pm

balakarthik wrote:இரண்டு கதையுமே மிகவும் அருமை
ஆனா அக்கா பலவீடுகளில் பெண்களுக்கு பெண்களே எதிரியாக இருக்கிறார்கள் எது எப்படியோ பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்.
தொடருங்கள் உங்கள் முயற்சியை ALL THE BEST

அப்டீன்ற பாலா? அன்பு நன்றிகள் பாலா படித்து கருத்திட்டமைக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 7:55 pm

இரண்டாவது சிறுகதையும் அழகான கரு அக்கா உண்மையில் பெண்குணங்கள் இதுதான் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புரிசன் என்று இதற்காகத்தான் சொன்னது போல் அமைந்து விட்டது
தொடருங்கள் உங்கள் பொன்னான கதைகளை



நேசமுடன் ஹாசிம்
சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 9:40 pm

ஹாசிம் wrote:இரண்டாவது சிறுகதையும் அழகான கரு அக்கா உண்மையில் பெண்குணங்கள் இதுதான் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புரிசன் என்று இதற்காகத்தான் சொன்னது போல் அமைந்து விட்டது
தொடருங்கள் உங்கள் பொன்னான கதைகளை

அன்பு நன்றிகள் ஹாசிம்....வாழ்க்கை இனிமையாக கழியவும் நிம்மதியாக போகவும் கணவன் மனைவி இருவருமே கொஞ்சம் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை ருசிக்கும் எண்பது வயதிலும் அன்பும் பெருகும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 3:26 pm

3.ஓடி விளையாடு பாப்பா.....

என்னடா இது முகத்தில் காயம்?? பதட்டத்துடன் ஆர்யாவின் கன்னம் தடவிக்கேட்டாள் தாய் ப்ரதீபா...

ஒன்னும் இல்லம்மா விழுந்துட்டேன் கீழே என்று காயம் மறைக்கப் பார்த்தான் ஆர்யா...

பொய் சொல்லாதே பிச்சுருவேன் சொல்லு யார் தள்ளிவிட்டா இல்லன்னா யார் அடிச்சா??

அது உமர் தாம்மா கன்னத்துல குத்திட்டான்.. லேசா தாம்மா...

அவன் கிட்ட பேசாதே பேசாதேன்னு பலமுறை சொல்கிறேன்.. கேட்பதில்லை நீ என்று கத்தினாள்....

அவன் உன்னை விட வயசுல சின்னவன்... நீ தான் அவன் பின்னாடியே ஓடுறே... உமர் உமர்
என்று.. அவன் உன்னை சட்டையே செய்வதில்லை...

ஆர்யா ஒன்றும் பதில் பேசாது போய் சேரில் உட்கார்ந்து அவன் புத்தகம் திறந்து படிப்பது போல் தலை குனிந்தான்..

ஏழு வயசு பையனுக்கு எத்தனை பிடிவாதம் என்று கோபமாக பார்த்தாள் ப்ரதிபா....

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக கண்டும் காணாது இருந்த ராகேஷ் பேப்பர் படிப்பது போல தலையை பேப்பர்க்குள்ளே நுழைத்துக்கொண்டான் ஆர்யாவின் தந்தை....

பரிதாபமாய் அம்மாவின் திட்டில் இருந்து தப்பிக்க அப்பாவின் துணையை நாடினான்....

என்னங்க உங்களைத் தானே.. எத்தனை முறை சொல்கிறேன் இவன் பாருங்க சொல்பேச்சு கேட்பதில்லை.. இந்த வயசுலயே எத்தனை பிடிவாதம்... அந்த பையன் உமர் இவனை மதிப்பது கூட இல்லை இவனை விட வயசுல சின்னப்பையன்.. ஆனால் இவன் தான் அவன் பின்னாடியே ஓடுகிறான்... பலமுறை சொல்லிட்டேன் அந்த பாகீஸ்தானி பையன் கிட்ட பேச்சு வெச்சுக்காதேன்னு கேட்பதில்லை.. இனி பேசட்டும் அப்ப இருக்கு இவனுக்கு கதை என்று உறுமினாள்...

உடனே ராகேஷ் எழுந்து வேகமாய் வந்து பளாரென்று அறைந்தான் ப்ரதீபாவை...

அதிர்ச்சியுடன் ப்ரதீபா ஆர்யா இருவரும் ராகேஷை பார்த்தார்கள்....

கன்னம் வீங்கினதை அதிர்ச்சியுடனும் பயத்துடனும் பார்த்த ஆர்யா ப்ரதீபாவின் பின் ஒளிந்தான்.....

ராகேஷ் ச்சே அவசரப்பட்டுட்டோமே என்று போய் சோபாவில் உட்கார்ந்தான்....

ப்ரதீபா இத்தனை நேரம் நீ பிள்ளையை திட்டினதே எனக்கு பிடிக்கலை.. ஆனாலும் நான் அமைதியாக இருந்தேன். ஏன் தெரியுமா? நீ பிள்ளையை கண்டிக்கும்போது நான் உள்ளே நுழைந்தால் அவனுக்கு பயம் விட்டுருமேன்னு..

நம் வீட்டுப் பிள்ளை ஏன் அந்த பாகீஸ்தானி பையனுடன் பழகக்கூடாது காரணம் சொல்ல முடியுமா உன்னால்???

ஏண்டி அறிவுகெட்டவளே.... நம்மை விட உழைப்பிலும் அறிவிலும் மானத்திலும் எதிலும் குறைந்தவர் இல்லடி உமரின் பெற்றோர்... நீ இத்தனை பேசுறியே உமர் பெற்றோருக்கு
இருக்கும் மனிதாபிமானம் உனக்கு இருக்கா?? சொல்லு இருக்கான்னு கேட்கிறேன்....

நம்ம பிள்ளை மாடியில் இருந்து உருண்டு விழுந்து ரத்தம் கிடைக்காமல் ஹாஸ்பிடலில் தவித்தபோது ஓடி வந்து உதவினது இதோ இப்ப நீ பேசக்கூடாதுன்னு விரட்டும் உமரின் அம்மாவும் அப்பாவும் தான் அப்ப நம்ம பிள்ளைக்கு ரத்தம் கொடுத்து உதவினர்....

அப்ப உனக்கு உமரின் அம்மாவும் அப்பாவும் பாகீஸ்தானின்னு தெரியலையா?? நீ இத்தனை சுயநலக்காரியா இருப்பேன்னு நான் நினைக்கலை....

இல்லங்க நான் சொல்ல வந்தது என்னன்னா எப்பவும் அடிச்சிக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டே இருக்கான் அந்த உமர் பையன். இதை பார்த்து நம்ம பையனும் கெட்டு போக கூடாதுன்னு தான் என்று சொல்லுமுன் கோபமாய் போய் அவளை இழுத்துக்கொண்டு வந்து பால்கனி வாசலில் எட்டி பார்க்க சொன்னான்..

அங்கே எல்லா நாட்டு பிள்ளைகளும் பங்களாதேஷ், இந்தியர், இலங்கை, பாகீஸ்தான், பிலிப்பைன் எல்லோரும் ஒன்றாய் சந்தோஷமாய் விளையாடிக்கொண்டு இருப்பதை காண்பித்தான்.

பார்த்தியா ப்ரதீபா..... பிள்ளைகளுக்குள் என்றும் வேற்றுமை என்பதே இருப்பதில்லை.....பிள்ளைகளை
வேற்றுமை இல்லாது வளர்க்க பெற்றோர் தான் சொல்லித்தரனும். தீவிரவாதம் சொல்லி வளர்க்கும் பாகீஸ்தானி மக்களுக்கும் நமக்கும் என்னடி வித்யாசம்?? நாம் மனிதாபிமானம்னா என்னன்னு சொல்லி வளர்க்கனும் பிள்ளைகளை.. வேற்றுமை பாராட்டாது இருக்கனும்னு சொல்லி வளர்க்கனும்.. இவன் ஹிந்து இவன் முஸ்லிம் இவன் க்ரிஸ்துன்னு பிரிச்சு பழக சொல்லித் தராம அவர்களிடம் இருக்கும் நல்லவைகளை கற்க சொல்லிக் கொடுக்கனும்...

நம்மிடம் இருக்கும் அன்பை அவர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு இந்தியர்கள் எப்படி அவர்களின் அன்பு எப்படின்னு புரியும்படி நாம் பிள்ளைகளுக்கு சொல்லித்தரனும்.. இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இவன் பாகீஸ்தானி இவன் பங்களாதேஷ் என்று பேதம் பார்த்து வளர்வது???

இனி வரும் சந்ததியாவது தீவிரவாதம் தொலைத்து அன்பை மலரச்செய்யட்டும்....

வீட்டிலயே அடைத்து வைத்து பிள்ளைகளை கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாட வைத்து மூளையை மழுங்கடித்து கார்ட்டூன் பார்க்கவைத்து மூளையை உபயோகிக்க செய்யாது இன்னும் எத்தனை காலத்துக்குடி??

பிள்ளைகளை திடம்மா மனத்திண்ணமா தைரியமா வெளியே எல்லோருடன் பழக விடனும்.... நல்லா எல்லோருடனும் சேர்ந்து விளையாட விட்டு அவர்களுடனும் நம்ம பிள்ளைகளும் தன்னிடம் இருக்கும் நல்லதை கற்க சந்தர்ப்பம் கொடுத்து தானும் மற்ற பிள்ளைகளிடமிருந்து நல்லவைகளை கற்கனும்...

அப்போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது....

ராகேஷ் போய் திறந்தபோது வெளியே உமர் நின்றுக்கொண்டிருந்தான் அகண்ட கண்களில் மகிழ்ச்சியும் புன்னகையுடன்...

அங்கிள் ஆர்யாவை என்னுடன் விளையாட விட முடியுமா?? என்று ஹிந்தியில் கேட்டபோது

ப்ரதீபா சிரிப்புடன் ஆர்யாவை கூப்பிட்டு முகம் துடைத்துவிட்டு குடிக்க தண்ணீர்கொடுத்து உமரிடம் சிரித்து உள்ளே வந்து உட்காரச்சொல்லி அவனுக்கும் சாப்பிட பிஸ்கெட் கொடுத்து சண்டை போடாம விளையாடுங்க சரியா என்று ஆங்கிலத்தில் சொல்லி அனுப்பினாள்..

அப்போது உமர், " சாரி ஆண்ட்டி நான் ஆர்யாவின் கன்னத்தில் குத்திட்டேன்.... சாரி ஆர்யா இனி அப்படி செய்யமாட்டேன் " என்று பணிவுடன் சொன்னான்...

ப்ரதீபா தன் அடி வாங்கிய கன்னத்தை தடவிக்கொண்டு பரவாயில்லப்பா என்று சொல்லி ஆர்யாவை அனுப்பினாள்...

ஆர்யா சந்தோஷத்தோடு உமருடன் ஓடினான் க்ரிக்கெட் பேட் எடுத்துக்கொண்டு.....

ராகேஷ் கதவை சாத்திவிட்டு ப்ரதீபாவின் கன்னம் தடவிக்கொடுத்து கோபமா டியர் என்று கேட்டான்...

இல்லங்க... அடி தான் கொஞ்சம் வேகம்.. வலிக்குது என்று கன்னம் தடவினாள்....

நம் பிள்ளையை நீங்கள் சொன்னது போலவே தான் இனி வளர்ப்பேன் என்று அவன் கையை பிடித்தாள்...

ராகேஷ் ப்ரதீபாவின் கன்னம் தடவிக்கொடுத்து வெரி சாரி அடி பலமா என்று கேட்டான்....

இல்லப்பா என்றாள்.. இனி இப்படி நடந்துக்கமாட்டேன்பா... என்று தலைகுனிந்தாள் ப்ரதீபா..

நல்லதொரு எதிர்கால சந்ததியை உருவாக்கும் மகிழ்வுடன் பெற்றோர் மகிழ்வுடன் பால்கனியில் நின்று எட்டிப்பார்த்தனர்...




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 12:08 am

4.உன்னால் முடியும் தம்பி....

என்னம்மா இன்னைக்கும் அதே இட்லி தானா என்று முகம் சுளித்தான் ராம்....

ஏன் டா இட்லி உடம்புக்கு நல்ல உணவு தானே?? அது மேல் ஏன் இத்தனை வெறுப்பு உனக்கு??

போங்கம்மா போரடிக்குது இட்லி சாப்பிட்டு சாப்பிட்டு..முறுகலா தோசை சுட்டு மிளகா சட்னி செஞ்சு கொடுத்தீங்கன்னா இந்தா இந்தான்னு ஒரு பத்து வெட்டி இருப்பேன்லா....

கண்ணா இப்ப உன்னுடைய உடம்பு வெயிட் எவ்ளவுப்பா??

ஏம்மா கேட்கிறீங்க?

சும்மா சொல்லேன் அம்மாக்கு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு...

150 கிலோவை நெருங்கிக்கொண்டு இருக்கேன்மா....

இப்படி உடம்பு கனம் கூடிக்கொண்டே வந்தால் உனக்கு அது அன் ஈசியா இருப்பதில்லையா ராம் என்று மகனின் தலையில் எண்ணை வைத்தப்படியே கேட்டார்...

ஐயோ அம்மா என் தலையில் ஏன் எண்ணை வெச்சீங்க.. ஐயோ இன்னைக்கு மீட்டிங் இருக்கும்மா என்று அலறினான்...

கண்ணா தலையில் முடி இருந்தால் தான் அழகு... அழகை கூட்ட நீ எண்ணை வைப்பதை நிறுத்தினால் முடி கொட்டிவிடுமே.. முடி கொட்டிவிட்டால் அப்புறம் மீட்டிங் போக அழகு கூட்ட முடிக்கு எங்கே போவியாம் என்று மூக்கை திருகினாள் தர்ஷிணி.....

டிவியில் ரித்திக் ரோஷனின் படம் க்ருஷ் ஓடிக்கொண்டிருந்தது...

அதைப்பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டான் ராம்....

" அம்மா எனக்கு ரித்திக் ரொம்ம்ப பிடிக்கும்மா.. எனக்கும் ரித்திக் போலவே உடம்பு ஆகனும் என்ன செய்யலாம்மா?? "

கண்ணா ஒருத்தரை பிடிக்கும் என்றால் அவரை போலவே நம் உடைநடை பாவங்களை கூட மாற்றிக்கொள்ள முயற்சிப்போம் இல்லையா??

ஆமாம் என்றபடியே தலையில் இருந்த எண்ணையை துடைக்க முயன்றான் வேகவேகமாய்.

எனக்கு ரேவதின்னா ரொம்ப பிடிக்கும்... நான் காலேஜ் படிக்கும்போது ரேவதி போலவே என்னை காட்டிக்கொள்ள ரொம்ப விரும்புவேன்... என்னை பார்ப்பவரும் ரேவதி போலவே இருக்கேன்னு சொல்லும்போது ஒரே சந்தோஷமா இருக்கும்....

இப்ப எதுக்கும்மா இதெல்லாம் சொல்றீங்க? எனக்கு ரித்திக் மாதிரி உடம்பு வேணும் எனக்கு ஃபேட் பர்ன் டாப்லெட்ஸ் வாங்கி தாங்க என்றான் ராம்...

நான் வாங்கி தருவதில் ப்ரச்சனை இல்லப்பா.... ஆனால் அதற்கு முன் கூகுள் சர்ச் ல போய் இந்த உடம்பு குறைக்கும் டாப்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தேடி படிச்சுப் பாரு புரியும்...

ஐயோ அப்ப எப்படி தான் உடம்பை குறைப்பதாம் என்று அலுத்துக்கொண்டே கேட்டான்..

இப்ப கேட்டியே அது கேள்வி... எந்த ஒரு செயலும் முழு முயற்சியுடன் உடல் உழைத்து ஈடுபாட்டுடன் நேர்மையாக செயல்பட்டால் கண்டிப்பாக அதனுடைய ரிசல்ட் பாசிட்டிவா இருக்கும்...

அப்டின்னா என்று தலை சொறிந்தான் ராம்...

ரித்திக் எப்படி இது போன்ற உடலமைப்பு பெற்றான்னு தெரியுமா ராம் உனக்கு??

அவங்கப்பா ராகேஷ் ரோஷன் சினிமா ஃபீல்டில் பெரிய ஆள். தன் பிள்ளைகள் நல்லா படிச்சு முன்னுக்கு வரனும்னு நினைச்சார். அதனால் சினிமா வாசமே பிள்ளைகளுக்கு படக்கூடாதுன்னு தவிர்த்தார்...ஆனால் ரித்திக் அப்பாவுக்கு தெரியாமலேயே தன் திறமைகளை நடனத்திறமையை உடலை எந்த ஒரு ஜிம்மின் உதவி இல்லாமல் வீட்டிலேயே கடுமையான உடற்பயிற்சி செய்து உடம்பை சீராக்கி திறமைகளையும் கற்று அப்பாவிடம் அதற்கு பின் வந்து நின்று கேட்டான் அப்பா நீங்க ஒரு படம் எடுங்க அதில் என்னை ஹீரோவா போடுங்க. அந்த படம் ஹிட்டானால் தொடர்ந்து நடிக்க அனுமதி கொடுங்க. இல்லன்னா உங்க விருப்பப்படி நான் செய்கிறேன் என்றான். அவனை நம்பி அவங்கப்பாவும் கஹோ நா ப்யார் ஹை படம் எடுத்தார் சூப்பர் ஹிட்டாச்சு.. இதிலிருந்து என்ன தெரியுது உனக்கு ராம் என்று அவன் தலை கலைத்தபடி கேட்டாள் தர்ஷிணி.....

ம்ம்ம்ம் கடுமையான உழைப்பிருந்தால் மட்டுமே நாம் நினைத்ததை அடையமுடியும்னு தெரியுது என்றான் ராம்....

கடுமையான உழைப்பு மட்டுமில்ல ராம்... நம்பிக்கை விடா முயற்சி நேர்மை ஈடுபாடு.. இதனுடன் முழு முயற்சியுடன் உழைத்தால் உன் உடம்பும் குறைந்து நல்ல வலுவுடன் நீ ஆசைப்பட்டபடி ரித்திக் போலவே உடலமைப்பு பெறலாம்...

என்னால பசி பொறுக்க முடியாதும்மா என்று அலறினான்... சாப்பிடாம இருக்க என்னால முடியாது....

உன்னை பட்டினி இருக்க சொல்லலை கண்ணா.... சாப்பிடு ஆனால் சமைத்த உணவை கொஞ்சம் நாட்கள் நிறுத்திவிட்டு பச்சை காய்கற்களும் பழங்களும் மட்டும் சாப்பிடு.. நிறைய சுடு நீர் குடிச்சிட்டு அதிகாலை தூக்கம் கொஞ்சம் தியாகம் செஞ்சுட்டு ஓடு.. ஓடி ஓடி உடம்பை ஃப்ளெக்சிபிள் ஆக்கு.. பின் உடற்பயிற்சி தொடங்கு... உன்னால் முடியும் கண்டிப்பா.. நத்திங் இஸ் இம்பாசிபிள் கண்ணா....

அதுமட்டுமில்லை கண்ணா.... நீ இந்த காலத்துப் பெண்களின் மனநிலை அறிவாயா? மாப்பிள்ளை
குண்டுன்னு வேண்டாம் அப்டி சொன்னால் உன் மனம் வேதனைப்படும்.... ஆனால் பெண்கள் ஸ்மார்ட்
ஹாண்ட்சமா பார்க்க லட்சணமா நல்ல குணமுள்ளவனா இருக்கனும்னு தான் ஆசைப்படுறாங்க.

இதைக்கேட்டதும் மிரண்டுப்போய் பார்த்தான் ராம்.....

அம்மா நாளை முதல் தொடங்குகிறேன் என்றான்...

இன்று முதல் அதுவும் இப்பவே எனத் தொடங்கும் செயல் தான் வெற்றி பெறும்.. நாளை என்று ஒத்திப்போடுபவன் சோம்பேறி என்றாள் குறுஞ்சிரிப்புடன் தர்ஷிணி....

இப்பவே ஓடுகிறேன் அம்மா..

இரு கண்ணா குடிக்க ஒரு சொம்பு முழுக்க வெது வெது தண்ணீர் தருகிறேன்.. குடிச்சிட்டு ஓடு....

தானும் அழகாய் உடல் குறைந்து அழகாய் எல்லோரும் பார்க்கும்படி உடலமைப்பு பெறும் வைராக்கியத்துடன் ஓடத் தொடங்கினான் ராம்....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுகதைகள் (4.உன்னால் முடியும் தம்பி...) 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக