புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Poll_c10வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Poll_m10வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Poll_c10 
3 Posts - 43%
ayyasamy ram
வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Poll_c10வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Poll_m10வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Poll_c10 
3 Posts - 43%
வேல்முருகன் காசி
வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Poll_c10வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Poll_m10வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Poll_c10வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Poll_m10வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது..


   
   
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri 11 Jun 2010 - 15:20

வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. 5a821acc320ce7706ed21a2574943681_medium
ஊரை கழுவி சுத்தப்படுத்திய மழை வெள்ளமாக பெருக்கெடுத்து வெயில் சுட்டெரித்து விடாயத்திருந்த பள்ளம் மேடுகளை விழுங்கி நீருக்கு ஏங்கி நின்ற மரங்களை வேரோடு பிடுங்கி அள்ளிக்கொண்டு அசுர வேகத்தில் ஓடிச் சென்று கடலோடு கலந்துக் கொண்டிருந்தது.

மழைக்கும் வெயிலுக்கும் மண்ணின் மீதும் மரங்களின் மீதும் ஏனிந்த கோபம், என் கண்கள் கண்ணீரை வெந்நீராய் பெருக்கியதைக் கண்ட மழை என்னிடம் கேட்டது, காய்ந்துப் போன உன் கண்களில் கூட கண்ணீர் சுரக்கிறதே என்று.

மழையின் கிண்டல் பேச்சு எனக்கொன்றும் புதிதல்ல, ஒவ்வொரு வருடமும் என்னைப் பார்த்து கேட்கின்ற கேள்வி தான். என்றாலும் இவ்வருடத்தில் மழையின் மீது என் கோபம் குறைந்திருந்தது என்பதால் மழைக்கு என் மீதான கிண்டல் கூடிவிட்டிருந்தது.
வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. 24fe0702ece06735df6dc2812673895a
எனக்கு அப்போது வயது பத்திருக்கும் அந்த வருடத்தில் நான் சாப்பிட்ட மாம்பழங்களிலேயே மிகவும் அருமையான ருசிகரமான மாம்பழக் கொட்டையை மட்டும் கவனமாக வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்திருந்தேன் அது முளைத்து அழகிய புதுமையான நிறத்தில் துளிர்களை விட்ட போது மனது மகிழ்ச்சியில் துள்ளியது, நான் வளர்ந்ததை விட மாஞ்செடி மிகவும் குதூகலமாகவே வளர்ந்து குறிப்பிட்ட சமயத்தில் பூக்கள் பூத்து பூவும் பிஞ்சுமாக நின்றிருந்த சமயம், சுழன்று சுழன்று வீசிய காற்றில் மரத்திலிருந்த பூக்களும் பிஞ்சுகளும் மரத்தைச் சுற்றி கொட்டிக்கிடந்ததை அடுத்த நாள் காலையில் பார்த்த போது மனம் வேதனை அளித்தது.

அவ்வருடம் மழை இல்லாத வருடமாக போனதும் இன்னும் எனக்கு நன்றாக நினைவிற்கு வருவதுண்டு. பெய்து கெடுக்கும் அல்லது காய்ந்து கெடுக்கும் என்பார்கள், அதைப் போன்று மழை பெய்யாமல் கெடுத்தது. அந்த சொந்த வீட்டில் நான் வைத்திருந்த மல்லிகை பந்தல் கடும் காற்றில் சாய்ந்து போனதும், பின்னர் மல்லிகை கொடியை வெட்டி விட்டு மல்லிகைக் கொடி இருந்த இடத்தில் மதிற்சுவரை கட்டியது கூட இன்றும் மனதில் பசுமையாய் நினைவில் இருப்பவை.

சொந்தவீட்டை வேறு ஒருவருக்கு விற்ற போது நான் வளர்த்த மாமரம் என்னைப் பார்த்து அழுவதை நான் மட்டுமே உணர்ந்தேன், அந்த வீட்டை விட்டு வந்த பின் அங்கு செல்வதற்கு மனமில்லாமல் போனது. அந்த மாமரம் பெய்த மழையில் வேருடன் விழுந்துவிட்டதாக கேள்விபட்டதிலிருந்து மனம் கனத்தது. கண்களில் கண்ணீர் சுடுநீறாய் கொட்டியது.
வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Chennai+Road
மழையே உனக்கு ஏன்னிந்த மரங்களின் மீதும் மேடுகளின் மீதும் இத்தனை கோபம் என்றேன் நான். மரம், செடி, ஏரி, குளம், கிணறு என்று ஒரு இடம் விடாமல் வெயில் கரித்து கொட்டுகிறதே அதன் மீது மட்டும் உனக்கு கோபம் இல்லையே அது ஏன் என்றது மழை. யார் சொன்னது வெயிலின் மீது கோபம் இல்லையென்று என்றேன் நான். மரங்களும் செடிகளும் விலங்குகளும் குடிக்க நீரில்லாமல் வாடும் நிலையை பார்த்து நான் வேதனை அடைவது உனக்கென்ன தெரியும் என்றேன் நான்.

என்னை மட்டும் தடுத்து நிறுத்தி ஏரி குளம் என்று உபயோகிக்கும் மனிதர்கள், மின்சார உற்பத்தி குறையும் போது, உங்கள் அறிவியலின் புதுமையான கண்டுபிடிப்பினால் கிடைத்த உபகரணங்கள் மூலம் வெயிலின் காட்டு மிராண்டித்தனமான வெப்பத்திலிருந்து மின் உற்பத்தி செய்ய யோசிப்பதே இல்லையே ஏன் என்று கேட்டது மழை. என் மனதினுள் மழையின் கோபம் புரிந்தாலும் தெரியாதவள் போல் ஒன்றும் பேசாமல் நின்றேன்.

பூமியின் ஒரு பங்கில் வாழும் உங்களுக்கு பூமியின் மீது இருக்கும் பாச நேசத்தை விட பூமியின் முக்கால்வாசி இடத்தை ஆக்கிரமித்திருக்கும் எனக்கு பூமியின் மீதிருக்கும் அக்கறை அதிகம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றது மழை. நான் பூமியிலே இருந்தாலும் கூட உங்கள் கைக்கு எட்டாத இடத்திலிருக்கும் சூரியனைப் போல பூமியிலிருந்து எட்டாத இடத்திற்கு போகிறேன், வெயிலின் தாக்கத்திலிருந்து மின் உற்பத்தி செய்து என்னை கொஞ்சம் ஓய்வெடுக்க விடுங்களேன் என்றது மழை.

தாகம் என்றால் தண்ணீரைத்தானே குடிக்க முடியும் என்றேன் நான், தண்ணீருக்கு பதிலாக வேறு பானங்களை குடித்து பழகுங்கள் என்றது மழை. வரும் காலங்களில் நீருக்கு பதிலாக பெட்ரோல் டீசல் இன்னும் வேறு எண்ணைகளை கூட குடித்து உயிர் வாழ நேரலாம், மழையின் கோபமும் வெயிலின் கோபமும் மனிதனை இந்த அளவிற்கு தாக்குவது எதனால்? நான் யோசித்தேன். மனிதனுக்கு அவற்றின் அருமை தெரியாமல் இருப்பதுதான் காரணமாக இருக்க முடியும் என்ற முடிவிற்குத் தான் வர முடிந்தது.

எதுவுமே இருக்கின்ற வரையில் அதன் அருமை விளங்குவது இல்லை, இல்லாமல் இருக்கும் போது அதன் அருமை உணர்ந்து யாருக்கு என்ன பிரயோஜனம்.



வெயிலும் மழையும் சேர்ந்து வரும்போது.. Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக