புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Sathiyarajan |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தியாகி தில்லையாடி வள்ளியம்மை:
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: 1](https://2img.net/h/4.bp.blogspot.com/_orHurCodGB8/Syx26Vx0juI/AAAAAAAAElU/sjra_VMh1VI/s400/1.jpg)
தியாகி தில்லையாடி வள்ளியம்மை: காலம் :1898 - 22.2.1914
புதுவை டூப்ளே தெருவில் குடியிருந்த இளைஞர் ஆர்.முனுசாமிக்கும், மயிலாடுதுறை அருகில் உள்ள தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த மங்களம் என்ற ஜானகிக்கும் திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்குப் பிறகு, தில்லையாடியில் இருவரும் கைத்தறி நெசவுத் தொழில் செய்து வந்தனர்.ஆங்கிலேயர், இங்கிலாந்திலிருந்து உயர்தர ஆலைத் துணிகளை இந்தியாவில் இறக்குமதி செய்து பொருள் குவித்தனர்.
எனவே, கைததறி நெசவுத் தொழில் படுத்துவிட்டது. மாற்றுத் தொழிலை முனசாமி - ஜானகி இணையர் தேடிக்
கொண்டிருக்கையில், தென்னாப்பிரிக்காவிற்குக் கூலிகளை ஏற்றுமதி செய்யும் கங்காணிகள் தொடர்பு ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் அன்றைய நிலை என்ன?
வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தியதுடன், உலகப்புகழ் பெற்ற வைரச் சுரங்கங்களைத்
தோண்டுவதற்கு அம்மண்ணின் மைந்தர்களான நீக்ரோக்களின் உடல் வலிமையையும் பயன்படுத்திக் கொண்டனர்.
ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் பெறாத நீக்ரோக்கள் வெள்ளை முதலாளிகளுடன் அடிக்கடி மோதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். எனவே வெள்ளையர்கள், நீக்ரோக்களை வேலைக்கு வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
இந்தியாவிலிருந்த கங்காணிகள். 1860 ஆம் ஆண்டிலிருந்தே தென்னாப்பிரிக்காவிற்குக் கூலிகளை கப்பலில் ஏற்றி
அனுப்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் முனுசாமியையும் இணங்க வைத்துவிட்டனர். வயிற்றில் சிசுவோடிருந்த
மனைவி ஜானகியோடு ஆப்பிரிக்கா புறப்பட்டார் முனுசாமி.தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரத்தில் தங்கிய முனுசாமி சிறு கடை வைத்து உணவு பண்ட வணிகம் செய்து வந்தார்.
1898 ஆம் ஆண்டில் பெண் மகவு பிறந்தது. வள்ளியம்மை எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர் பெற்றோர்.
அங்குள்ள காலனி அரசு பெண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். உலக ஞானம் புரிகிற வயதில், தன்னைச் சுற்றி
நிகழும் சமுதாயப் போக்குகளைக் கூர்மையாகக் கவனித்து வந்தாள் அந்தப் பெண்.சூரியன் மறையாத அளவுக்குச் சாம்ராஜ்யத்தைக் கொண்டவர்களல்லவா, வெள்ளை அரசு.
தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியரை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினர் ?
இந்தியர்கள் கூலிகளாகவே அழைக்கப்பட்டனர். இவர்களை அடிக்கலாம். உதைக்கலாம். என்ன கொடுமை
செய்தாலும் எதிர்த்துக் கேட்க முடியாது.அவர்களின் எசமானை விட்டு வேறு எசமானரிடமும் செல்ல முடியாது.
பொது இடங்களிலும் அவமானப்படுத்தப்பட்டார்கள். வாக்குரிமை கிடையாது. வெள்ளையரோடு பயணம்
செய்யவும் கூடாது. இவர்கள் வாழும் பகுதிகள் அடிப்படை வசதிகள் இல்லாத சேரிகளாகவே இருந்தன. இந்நிலையில் இந்திய வம்சாவளியின்ர் தென்னாப்பிரிக்காவில் வாழ 3 பவுன் தலைவரி கட்ட வேண்டும் என்றது
வெள்ளை அரசு.
1893 இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. தாதா அப்துல்லா கம்பெனிக்காக 105 பவுன் சம்பளத்தில் ஓராண்டு பணியாற்ற வந்தார்.ஆனால் 22 ஆண்டுகள் (இடையில் 2 ஆண்டுகள் நீங்கலரக) அவர் அங்குத் தங்க நேரிட்டது.ஒரு கம்பெனி வழக்கறிஞராக வந்த அவர், இந்தியர்களின் அவல நிலையைக் கண்டார். இம்மக்களின்
அவல நிலையைக் கண்டார். இம்மக்களின் உரிமைக்காக, தனது சட்ட அறிவையும் திறமையையும் பயன்படுத்தத்
தொடங்கினார். ஆம், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி- காந்தியடிகளாகப் பண்படுத்தப்பட்டார்.11-9-1906 இல் 3 பவுன் தலைவரி கட்டவேண்டும் என்ற கறுப்புச் சட்டத்தை எதிர்த்து ஒரு மாநாட்டைக் கூட்டினார். சுமார் மூவாயிரம் பேர் கூடிய மாநாட்டில், அகிம்சைப் போராட்டத்தை அறிவித்தார்.முதல் அகிம்சைப் போராட்டம் இதுதான். அடுத்துக் குடியேற்றக் கட்டுப்பாடு மசோதாவை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தினார்.1912 அக்டோபரில் இந்த எதிர்ப்பின் விளைவாக, கறுப்புச் சட்டம் ஒரு ஆண்டிற்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என்றும், இநதியர்கள் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன் தலைவரி ரத்து செய்யப்படும் என்றும் உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால் நடந்தது என்ன ?
ஓராண்டாகியும் கறுப்புச் சட்டம் ரத்து செய்யபடவில்லை. 3 பவுன் தலைவரியும் ரத்து செய்யப்படவில்லை. மாறாக, 14-3-1913 அன்று கேப் உச்ச நீதிமன்ற நீதிபதி சியர்லே என்பவர் ஒரு அதிர்ச்சித் தீர்ப்புக் கொடுத்தார்.
அத்தீர்ப்பின்படி, கிறித்தவர் சடங்குப்படி நடந்து பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் மட்டுமே செல்லும் என்பதாகும்.இச்சட்டத்தினால் மணமான இந்துப் பெண்கள் சட்டபூர்வ மனைவி தகுதியை இழந்துவிடுவர்.கணவன், மனைவி, பிள்ளைகள் - உறவுகள் மறுக்கப்படும் நிலை.திருமணமான இந்தியப் பெண்கள் வைப்பாட்டிகளாகக் கருதப்படும் நிலை.மேலும் பதிவுப் பத்திரத்தில் தங்களுடைய விரல்களின் முத்திரைகளைப் பதிக்க வேண்டும் எனும் உத்திரவு.
இனவெறி, நிறவெறி அரசு - மதவெறி அரசாகவும் ஆனது.
தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்து வந்த பதினாறு வயதுப் பெண் வள்ளியம்மை
கொதித்தெழுந்தாள்.காந்தியடிகள் போராட்டத்தை அறிவித்து, இப்போராட்டத்தில் பெண்களையும் சேர்த்துக் கொண்டார்.அச்சமயம் வள்ளியம்மையின் தந்தை, உடல்நலக குறைவின் காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.வள்ளியம்மையுடன் அவர் தாயார் ஜானகி அம்மையாரும் போராட்டத்தில் இறங்கினார்.
29-10-1913 இல் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு மகளிர் சத்தியாகிரகப் போர்ப்படை புறப்பட்டது.
கஸ்தூரிபாய் அம்மையாருடன் 16 பெண்கள் இப்படையில் இருந்தனர். இதில் 10 பெண்கள் தமிழர்களாவார்.
நியூகாசில் நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றிய இந்தியத் தொழிலாளர்கள் மகளிர் பைடையின் வேண்டுகோளுக்கிணங்க வேலை நிறுத்தம் செய்தனர்.
போராட்டப் பெண்கள் தடையை மீறி டிரான்ஸ்வால் எல்லையைக் கடக்கும்போது வால்க்ஸ்ரஸ்ட் என்ற இடத்தில்
1913 திசம்பர் 22 ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.
மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. சிறையை மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாகக் கருதினார் வள்ளியம்மை.
நாட்டிலேயே அடிமைகளாய், நாயினும் கீழாய் நடத்தியவர்களின் சிறை எப்படி இருக்கும் ?
கொளை, கொள்ளை, திருட்டுக் குற்றவாளிகளுடன் வள்ளியம்மை சிறையில் அடைக்கப்பட்டார்.சிறை
அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதுடன், கடினமான வேலைகள் அவரிடம் கொடுத்தனர்.
தகுதியற்ற உணவு சித்திரவதை ஆகியவற்றுடன் சுகாதாரக்கேடு நிறைந்த சிறை வாழ்க்கை. வள்ளியம்மையை
கடுமையான காய்ச்சலில் ஆட்படுத்தியது. தகுந்த மருத்துவ வசதியும் இல்லை.
இந்நிலையில் உரிய அபராதத் தொகையைக் கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுபடுக எனக் கூறியும் வள்ளியம்மை
கேட்கவில்லை.
உடலநிலை மோசமளித்தது. உடனே சிறையிலிருந்து தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக 11-2-1914 இல் விடுவிக்கப்பட்டார்.
செல்லப்பிள்ளையாய், இன்று புவியில் பெண்கள் சிறு நிலையில் இருக்கவில்லை, விழித்துக் கொண்டார் -
எனும் புரட்சிக் கவிஞரின் கருத்துக்கு விளக்கமாய்த் திகழ்ந்து துள்ளித் திரிகின்ற வயதில் பெருமகிழ்வுடன்
சிறையேகிய வள்ளியம்மை, சிறையிலிருந்து வெளியேறும்போது எப்படி இருந்தார் ?
மெலிந்து, துவண்டு. கந்தல் துணிபோல, பலவீனமாக, அரை மயக்கத்திலிருந்த வள்ளியம்மையை,ஒரு சமக்காளத்தில் கிடத்தி வீட்டிற்குச் சுமந்து சென்றனர். என்னே கொடுமை...
அதன்பின் நோயிலிருந்து மீளாமலேயே 23-2-1914 அன்று பதினாறு வயது வீராங்கனை வீரமரணம்
அடைந்தார்.
நன்றி : தன்மானக் குரல் - பிப் 2005
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மூவர்ணக் கொடி தோன்றியது.
மூவண்ணத்தில் தேசிய கொடியை ஒவ்வொரு இந்தியரும் பார்க்கும் போது இப்பெண்மணியை நினைவுக் கூறுதல் மிக நன்று. என் தேசமென்று பெருமையடித்துக் கொள்ளும் என் இந்தியர்களே! ஆங்கிலேயர்கள், 'எங்கே உன் தேசியக் கொடியை காட்டு?' என்ற போது, தன் சேலையைக் கிழித்து,' இதோ எங்கள் கொடி' என்று வீர மொழி பேசினார் இவர். இது அவரது தேசப் பற்றினைக் காட்டுகிறது இல்லையா?
(அந்த சமயத்தில் அவர் தன்னுடைய சேலையில் இருந்த மூவர்த்தை கொடியாக காட்டினார்,அதுவே பிற்காலத்தில் காந்தியின் உள்ளத்தில் தோன்றிய இந்திய மூவர்ண கொடி, எனினும் அதே நிறங்களா என்பது உறுதியில்லை)
மூவண்ணத்தில் தேசிய கொடியை ஒவ்வொரு இந்தியரும் பார்க்கும் போது இப்பெண்மணியை நினைவுக் கூறுதல் மிக நன்று. என் தேசமென்று பெருமையடித்துக் கொள்ளும் என் இந்தியர்களே! ஆங்கிலேயர்கள், 'எங்கே உன் தேசியக் கொடியை காட்டு?' என்ற போது, தன் சேலையைக் கிழித்து,' இதோ எங்கள் கொடி' என்று வீர மொழி பேசினார் இவர். இது அவரது தேசப் பற்றினைக் காட்டுகிறது இல்லையா?
(அந்த சமயத்தில் அவர் தன்னுடைய சேலையில் இருந்த மூவர்த்தை கொடியாக காட்டினார்,அதுவே பிற்காலத்தில் காந்தியின் உள்ளத்தில் தோன்றிய இந்திய மூவர்ண கொடி, எனினும் அதே நிறங்களா என்பது உறுதியில்லை)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
தில்லையாடி வள்ளியம்மை நினைவகம்
* வள்ளியம்மை தேசபக்தியின் மொத்தத் திருவுருவம். இவரின் திருவுருவமே எவரின் மனத்திலும் தேசபக்த ஞானத்தீயை ஒளிரச் செய்துவிடும் என்று மகாத்மாவால் பாராட்டப்பட்ட தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஊர்தான் தில்லையாடி. வள்ளியம்மைக்கு 13.8.1971 அன்று தில்லையாடியில் நினைவகம் ஒன்று திறக்கபட்டது. அம்மையாரின் திருவுருவச் சிலை அவரைப் பற்றிய புகைப்படக்காட்சிகள் அவருடைய வீர வரலாறு போன்றவை இந்த நினைவகத்தில் இடம் பெற்றுள்ளன. மகாத்மா காந்தி அவர்கள் தில்லையாடி வந்த பொழுது மண்ணை தொட்டு வணங்கினார் என்று கூறப்படுகிறது, மேலும் அவர் அமர்ந்த இடத்தில் ஒரு நினைவுத் தூண் ஒன்றும் உள்ளது.இங்கு ஒரு நூலகமும் இருக்கிறது.அந்த புகைப்படங்களை இங்கே காணலாம்.
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: Plac_ThillaiyadiValliamai_4](https://2img.net/h/www.madurawelcome.com/nagapattinam/nag-img/plac_ThillaiyadiValliamai_4.jpg)
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: Gandhiji](https://2img.net/h/lh5.ggpht.com/__X-5tyaZaEs/SyIGujv8N1I/AAAAAAAAC9w/K3CYxLxcMqE/gandhiji.jpg)
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: Picture%20020](https://2img.net/h/lh5.ggpht.com/__X-5tyaZaEs/SFJuBKaCavI/AAAAAAAABO0/Bmy62VW71Sk/s512/Picture%20020.jpg)
(காந்தியடிகள் 01-05-1915ஆண்டு வந்து அமர்ந்த இடம்)
* ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மை அடக்கம்
செய்யப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பினார் காந்தி
* சென்னையில் பிரம்மாண்டமாய் தில்லையாடி வள்ளியம்மை பட்டுப் புடவை மாளிகை அமைந்துள்ளது. இது
ஏதோ நெசவாளியின் நினைவில் அமைந்தது என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு தியாகியின் நினைவில்
எழுந்த நிறுவனம்தான்.
* வள்ளியம்மை தேசபக்தியின் மொத்தத் திருவுருவம். இவரின் திருவுருவமே எவரின் மனத்திலும் தேசபக்த ஞானத்தீயை ஒளிரச் செய்துவிடும் என்று மகாத்மாவால் பாராட்டப்பட்ட தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஊர்தான் தில்லையாடி. வள்ளியம்மைக்கு 13.8.1971 அன்று தில்லையாடியில் நினைவகம் ஒன்று திறக்கபட்டது. அம்மையாரின் திருவுருவச் சிலை அவரைப் பற்றிய புகைப்படக்காட்சிகள் அவருடைய வீர வரலாறு போன்றவை இந்த நினைவகத்தில் இடம் பெற்றுள்ளன. மகாத்மா காந்தி அவர்கள் தில்லையாடி வந்த பொழுது மண்ணை தொட்டு வணங்கினார் என்று கூறப்படுகிறது, மேலும் அவர் அமர்ந்த இடத்தில் ஒரு நினைவுத் தூண் ஒன்றும் உள்ளது.இங்கு ஒரு நூலகமும் இருக்கிறது.அந்த புகைப்படங்களை இங்கே காணலாம்.
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: Plac_ThillaiyadiValliamai_4](https://2img.net/h/www.madurawelcome.com/nagapattinam/nag-img/plac_ThillaiyadiValliamai_4.jpg)
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: Gandhiji](https://2img.net/h/lh5.ggpht.com/__X-5tyaZaEs/SyIGujv8N1I/AAAAAAAAC9w/K3CYxLxcMqE/gandhiji.jpg)
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: Picture%20020](https://2img.net/h/lh5.ggpht.com/__X-5tyaZaEs/SFJuBKaCavI/AAAAAAAABO0/Bmy62VW71Sk/s512/Picture%20020.jpg)
(காந்தியடிகள் 01-05-1915ஆண்டு வந்து அமர்ந்த இடம்)
* ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மை அடக்கம்
செய்யப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பினார் காந்தி
* சென்னையில் பிரம்மாண்டமாய் தில்லையாடி வள்ளியம்மை பட்டுப் புடவை மாளிகை அமைந்துள்ளது. இது
ஏதோ நெசவாளியின் நினைவில் அமைந்தது என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு தியாகியின் நினைவில்
எழுந்த நிறுவனம்தான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சில சுவாரஸ்யமான குறிப்புகள்: நன்றி:குமுதம்.
* ஒருமுறை சத்தியாகிரகப் போராட்டத்தின்போது, வெறிபிடித்த வெள்ளையன் ஒருவன் காந்திஜியைச் சுட துப்பாக்கியை உயர்த்திய போது, வள்ளியம்மை திடீரென்று ஓடிவந்து காந்தியின் முன்னால் நின்று கொண்டு, இப்போது காந்தியைச் சுடு, பார்க்கலாம்!’’ என்றாள் ஆவேசமாக! அவளது நெஞ்சுரம் கண்டு அந்த வெள்ளையனே
திகைத்துப்போனான்; திரும்பிப் போனான்.
·
* 1913 _ ஜோகன்ஸ்பர்க் நகரில் பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை கூடியது. ஆவேச முழக்கத்துடன் ஆங்கில அரசின் நிறவெறித் திமிருக்கு எதிராக அணி திரண்டு கிளம்பியது. அணியின் முதல் வரிசையில் நின்ற மூன்று பெண்மணிகள் _ கஸ்தூரிபா, வள்ளியம்மை, வள்ளியம்மையின் தாயார்.
* நியூகாசில் போகும் வழியில் சார்லஸ் டவுன், டண்டி, லேடிமிஸ்த்,மாரிட்ஸ் பர்க், டர்பன் போன்ற முக்கிய இடங்களில் சத்தியாக்கிரகிகள் தங்கிச் சென்றபோது, தன் இளவயது காரணமாக ஓடியாடி, தன் உடன் வந்த
சத்தியாகிரகிகளுக்கு வள்ளியம்மைதான் இயன்றவரை தொண்டு செய்தாள்.
· * இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் காந்தி ‘‘இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய _ துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள்! அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்! என்று மனமுருகி எழுதினார்
* தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது நமக்கு மற்றொரு பெருமைதானே!
* ஒருமுறை சத்தியாகிரகப் போராட்டத்தின்போது, வெறிபிடித்த வெள்ளையன் ஒருவன் காந்திஜியைச் சுட துப்பாக்கியை உயர்த்திய போது, வள்ளியம்மை திடீரென்று ஓடிவந்து காந்தியின் முன்னால் நின்று கொண்டு, இப்போது காந்தியைச் சுடு, பார்க்கலாம்!’’ என்றாள் ஆவேசமாக! அவளது நெஞ்சுரம் கண்டு அந்த வெள்ளையனே
திகைத்துப்போனான்; திரும்பிப் போனான்.
·
* 1913 _ ஜோகன்ஸ்பர்க் நகரில் பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை கூடியது. ஆவேச முழக்கத்துடன் ஆங்கில அரசின் நிறவெறித் திமிருக்கு எதிராக அணி திரண்டு கிளம்பியது. அணியின் முதல் வரிசையில் நின்ற மூன்று பெண்மணிகள் _ கஸ்தூரிபா, வள்ளியம்மை, வள்ளியம்மையின் தாயார்.
* நியூகாசில் போகும் வழியில் சார்லஸ் டவுன், டண்டி, லேடிமிஸ்த்,மாரிட்ஸ் பர்க், டர்பன் போன்ற முக்கிய இடங்களில் சத்தியாக்கிரகிகள் தங்கிச் சென்றபோது, தன் இளவயது காரணமாக ஓடியாடி, தன் உடன் வந்த
சத்தியாகிரகிகளுக்கு வள்ளியம்மைதான் இயன்றவரை தொண்டு செய்தாள்.
· * இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் காந்தி ‘‘இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய _ துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள்! அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்! என்று மனமுருகி எழுதினார்
* தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது நமக்கு மற்றொரு பெருமைதானே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
தில்லையாடி வள்ளியம்மை அவர்களைப் பற்றிய கட்டுரைக்கு நன்றி சரா!
தில்லையாடி வள்ளியம்மை ஒரு சுதந்திரப் போராளி என்பது தெரியும், ஆனால் அவர் தனது 16வது வயதில் நாட்டிற்காக உயிர்நீத்தார் என்பது உங்களின் இக்கட்டுரையைப் படித்ததும் தான் அறிந்து கொண்டேன்!
வாழ்க பாரதம்! வாழ்க தில்லையாடி வள்ளியம்மை புகழ்!
தில்லையாடி வள்ளியம்மை ஒரு சுதந்திரப் போராளி என்பது தெரியும், ஆனால் அவர் தனது 16வது வயதில் நாட்டிற்காக உயிர்நீத்தார் என்பது உங்களின் இக்கட்டுரையைப் படித்ததும் தான் அறிந்து கொண்டேன்!
வாழ்க பாரதம்! வாழ்க தில்லையாடி வள்ளியம்மை புகழ்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:தில்லையாடி வள்ளியம்மை அவர்களைப் பற்றிய கட்டுரைக்கு நன்றி சரா!
தில்லையாடி வள்ளியம்மை ஒரு சுதந்திரப் போராளி என்பது தெரியும், ஆனால் அவர் தனது 16வது வயதில் நாட்டிற்காக உயிர்நீத்தார் என்பது உங்களின் இக்கட்டுரையைப் படித்ததும் தான் அறிந்து கொண்டேன்!
வாழ்க பாரதம்! வாழ்க தில்லையாடி வள்ளியம்மை புகழ்!
நன்றி தலைவா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மிகச்சிறந்த பெண்மணியை பற்றி பகிர்ததிக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
பிச்ச wrote:மூவர்ணக் கொடி தோன்றியது.மூவண்ணத்தில் தேசிய கொடியை ஒவ்வொரு இந்தியரும் பார்க்கும் போது இப்பெண்மணியை நினைவுக் கூறுதல் மிக நன்று. என் தேசமென்று பெருமையடித்துக் கொள்ளும் என் இந்தியர்களே! ஆங்கிலேயர்கள், 'எங்கே உன் தேசியக் கொடியை காட்டு?' என்ற போது, தன் சேலையைக் கிழித்து,' இதோ எங்கள் கொடி' என்று வீர மொழி பேசினார் இவர். இது அவரது தேசப் பற்றினைக் காட்டுகிறது இல்லையா? (அந்த சமயத்தில் அவர் தன்னுடைய சேலையில் இருந்த மூவர்த்தை கொடியாக காட்டினார்,அதுவே பிற்காலத்தில் காந்தியின் உள்ளத்தில் தோன்றிய இந்திய மூவர்ண கொடி, எனினும் அதே நிறங்களா என்பது உறுதியில்லை)
![தியாகி தில்லையாடி வள்ளியம்மை: 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|