புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடி இதயங்கள் ( 1 )


   
   

Page 1 of 2 1, 2  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 13, 2010 1:30 am

அத்தியாயம் ஒன்று: காதலின் நிறம் கறுப்பு

கருமையாகி விட்ட நீல வானம் உலகத்தின் அநீதிகளை எண்ணி எண்ணி அழுதது, ஓ ஓ என்று கதறிக் கதறி அழும்போது பக்கவாத்தியமாய் இடியும் கோபத்துடன் மின்னலும் தோன்றித் தோன்றி மறைந்தன. வீதிகளில் நடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சோடிப் போயிருந்தது. பகலில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் கடைகள், வாகனங்களின் நடமாட்டம் அப்பகுதி ஒரு நகரம் என்பதை உறுதிப்படுத்தியது..

உயர வளர்ந்து எம்மூரில் பார்த்ததெல்லாம் பனை மரத்தையும் தென்னை மரத்தையும் தான், இங்குதான் அவற்றை எல்லாம் விட பல மடங்கு உயரமான கட்டடங்களைப் பார்க்கின்றான் குணாளன். இங்கு வந்து ஒரு சில மாதங்களே ஆகியிருக்கும், இங்கு வருவதற்கு அவன் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கையில் இருந்த காசு எல்லாம் இழந்து நிறுவனப் பிரதிநிதி ஒருவனால் ஏமாற்றப் பட்டு....அவை எல்லாம் சாதாரணமாகவே இந்த உலகத்தில் நடப்பதென்பதை இப்போழுதுதான் தெரிந்து கொண்டான்.

பின்னர் நண்பன் ஒருவனின் உதவியுடன் உல்லாசப்பயணி போன்று ஒருமாத அவகாசத்தில் இங்கு ஷார்ஜா வந்து சேர்ந்துள்ளான். இன்னும் ஐந்து நாட்களே இங்கு இருக்கலாம், முந்தய நாட்களில் நாட்கள் அவன் அலையாத இடமே கிடையாது, உனது படிப்பிற்கு வேலை இலகுவாகக் கிடைத்துவிடும் என்று அவனைச் சார்ந்தோர் கூறியதால்தான் இருந்த பணம் எல்லாம் செலவழித்து, ஒரே ஒரு வீட்டை அடைமானம் வைத்து மேலும் பணம் போதாமல் இருக்கவே வட்டிக்கு வேண்டி இங்குவந்துள்ளான். நாளை கடைசி நேர்முகத் தேர்வு, ஊரில் படித்த கணினித் தொழில்நுட்ப வேலைக்கு இங்கு நல்லதொரு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின் கடைசி நாள்.

ஷார்ஜா பெரிய தபால் நிலையம் அருகே இருந்த அவன் நண்பன் குடியிருக்கும் வாடகை வீடொன்றில் குணாளன் தங்கியிருந்தான்.

“குணா.... மச்சான்...ஒருக்கா..அல்-மதீனா சுப்பெர்மார்கேட்டுக்குப் போய் வாரீயா..? மீனும் கோழியும் வேண்டவேனும்..சமைக்க ஒன்றுமில்ல..”
“சரிடா மச்சி...நாளைக்கு கடைசி நாளடா...எனக்குப் பயமா இருக்கு..வேண்டின கடன் எல்லாம் சேர்த்து சுமார் பத்து லட்சம் ரூபா ஆகுது...என்ன செய்யப் போகிறேனோ தெரியலடா...உனக்கும் இப்ப நான் பாரமா...”
“சும்மா இர்டா..எனக்கு ஒன்றும் நீ பாரமில்லை...உங்கட அப்பா எங்கட குடும்பத்துக்கு அந்தக் காலத்தில செய்த உதவிய நாங்க ஒருபோதும் மறக்கமாட்டோம் தெரிஞ்சுதா...ஒரு காலத்தில எப்படி இருந்த குடும்பம் உங்கட..இப்ப....எல்லாத்துக்கும் ஒரு காலம் கட்டாயம் உண்டு..நீ கவலைப் படாதே..இன்னும் ஒரு மாதம் டூரிஸ்ட் விசாவ நீட்டலாம்..நான் உனக்கு உதவுறன்..ஆனா..என்னட்ட அதுக்கு பணம் இல்ல..எப்படியும் ஆயிரம் த்ராம்ஸ் தேவை...என்ட முதலாளிட்டத்தான் கேக்கவேண்டும் இன்றைக்கு வெள்ளிகிழமை...ஞாயிறு வேலைக்கு போகும்போது கேக்குறன்....கவலைப்படாதே...” ஒரு பெருமூச்சுடன் பேசி முடித்தான் அவன் நண்பன் நீலன்.
“நீலா...உன்னை நண்பனா அடஞ்சதுக்கு நான் கொடுத்தது வச்சிருக்கோணும்”

அந்தப் புழுதி மண்ணில் சங்கமித்த மழைத்துளிகளால் ஏற்பட்ட மண்ணின் வாசனையை முகர்ந்து கொண்டே அல்-மதீனா சந்தைக்கடைக்கு சென்றான். அங்கு அப்போதுதான் கவனித்தான் ஏதோ ஒரு தெரிந்த முகம், ஒரு பெண்..மிகவும் விலை உயர்ந்த உடைகளுடன் ஆடம்பரமாக உடுத்து, அழகு சாதனப் பொருள் உள்ள இடத்துக்கு அருகாமையில், அவன் அந்தப் பெண்ணையே நோக்குவதைக் கண்ணுற்றதாலோ என்னவோ அவள் அவனை நோக்கி வந்தாள்.
“என்ன யாரென்று யோசிக்கிறமாதிரி தெரியுது? என்னைத் தெரியவில்லையா...? கெஸ்...குணா...நீங்க இங்க ஷர்ஜாக்கு வந்த விடயம் முந்தாநாள்தான் எங்களுக்குத் தெரியும்...”
“நீங்க...முகம் பார்த்தமாதிரி இருக்கு, ஆனால்...ஞாபகமில்லை...”
“அட..போச்சுடா..நான்...அமுதினி....என் பெயராவது ஞாபகம் இருக்கா...?”
“ஐயோ....அமுதாவா...நீங்க அமுதாவா...? ஆளே வித்தியாசமா..கடைசியா உங்களை வேறு நிலையில சந்திச்சது இப்ப இப்படி....அதுதான்....உங்கட சொந்தப் பெயர் மல்லிகாதானே?”
“ம்ம்ம்...சத்தமாப் பேசாதீங்க...நான் அங்க இருந்தது...இங்குள்ள ஒருவருக்கும் தெரியாது.....”
“உண்மைய சொன்னா...நீங்க எல்லோரும் இறந்திட்டீங்க என்றுதான் ஊரில கதை...கடவுள் புண்ணியம்...எப்படியோ காப்பாத்திட்டார்....இந்தச் செய்திய சொன்னா நீலன் சந்தோசப்படுவான்...”
“இல்லை குணா...நீலனுக்குத் தெரியும் நான் இங்க இருக்கிறது...அதுமட்டுமல்ல எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டுது..தாயகத்தில இருந்தா பிரச்சனை என்று வேறு எங்காவது போகவேணும் என்று தீர்மானிச்ச போது எனக்குக் கை கொடுத்தார் ரமணன்..அவர் இங்க பெரிய கம்பியூட்டர் நிறுவனம் வச்சிருக்கார்...நீங்க எப்ப வந்தீங்க..”
அவன் தனது கதையை சுருக்கமாகச் சொன்னதும்,
“நீங்க இந்த வேலை கிடைக்காட்டி கவலைப் படவேண்டாம்..அவரிட்ட சொல்லி உங்களுக்கு வேலை ஒழுங்கு படுத்துறன்”
“தேங்க்ஸ் அமு..இல்லை இல்லை..மல்லிகா. உங்களுக்கு வானதி எங்க என்று தெரியுமா...?”
“குணா...இன்னும் அவள நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்களா...? அப்ப ஒரு குட் நியூஸ்...”
“என் நிலைமை இப்ப சரியில்ல...ஆனாலும் அவள என்னால மறக்கமுடியாது...என்ன குட் நியூஸ்?”
“வானதி வேறு யாருமில்ல..அவரின்ட தங்கச்சிதான்...அவளும் எங்களோடதான் இருக்காள்.” என்று சொல்லி குணாளனைப் பார்த்து மெல்லிதாக புன்னகை புரிந்தாள்.
மல்லிகா சிறு வயதில் இருந்தே நீலனுக்குத் தெரிந்த...நீலனின் பாடசாலைக்காலத்துக் காதலி, ஆனால் பின்னர் நாட்டின் மேல் கொண்ட பற்றினால் மல்லிகா போராடச் சென்றுவிட்டாள். மல்லிகாவுக்குத் தெரிந்த ஒரு அழகு முல்லைதான் வானதி. வானதி மல்லிகாபோல் போராட்டம் என்று செல்லவில்லை. குணாளன் வானதியைக் கண்டது மல்லிகா வீட்டில்தான், பின்னர் வானதி வீட்டை மோப்பம் பிடித்து பாடசாலைக் காதல் வைபவத்தில் கலந்துகொண்டான். திடீரென எழுந்த இடம்பெயர்வால் திசை மாற்றம் அடைந்த அவனது ஒரு பக்கக் காதல், காதலை வானதியிடம் கேட்காமலேயே முற்றுப் பெற்றது. இப்போது மீண்டுமந்த வானதி என்றதும் மனதில் ஒரு சில பட்டாம்பூச்சிகள் இறக்கை கட்டத் தொடங்கின.

“என்ன மச்சான்...இவ்வளவு நேரம்...நான் வெங்காயம் எல்லாம் நறுக்கிவிட்டு உன்ன பாத்துக் கொண்டிருக்கிறன்..”
“நீலா....நான் மல்லிகாவைப் பார்த்தன்...அதுதான்...”
“ஸ்டாப்...மேல பேசாத....” முகம் சிவக்க கோபத்துடன் சீறினான்.
“என்னடா..இது...அவளுக்கு பெரிய கஷ்டம் ஏற்பட்டு..இப்ப நல்லா இருக்காள்...அதப் போய் சந்தோசம் கொள்ளாம...நீ உண்மையிலேயே அவளை காதலிச்சு இருந்தா...அவள் செத்திட்டாள் என்ற நியூஸ் வந்த பின்னர் உண்மை எது என்று அலசிப் பார்த்திருப்பாய்...அவளும் உன்னைத் தேடி இருப்பாள் கிடைக்கேல..இப்ப வானதியின் அண்ணாவ..”
“அத நான் ஒத்துக்கொள்ள மாட்டன்...அவளுக்கு என் மேல காதல் இருந்தது உண்மையென்றால்....நானும் இஞ்சதான் அஞ்சு வருஷமா டிரைவர் வேல பார்த்துக்கொண்டிருக்கன்.அவளுக்கு தெரியும்....என்னாலயும் அவள கூப்பிட முடியும்...என்னட்ட ஒரு வார்த்தை கேட்டாளா...? இல்லடா...அவளுக்கு காசும் பகட்டு வாழ்க்கையும்தான் முக்கியமாப் போச்சுது...ஏதோ விடுதலைக்காக சில காலம் பாடுபட்டாள் என்பதால்....ம்ம்....வேண்டாம் அந்தக் கதை...”
“அவளுக்கு இப்பதான் தெரியும் நீ இங்க இருப்பது...”
“பொய்...நல்லா பொய் சொல்லுறாள்...முதல்ல படிக்கிற காலத்தில...என்னை காதலிச்ச மாதிரி நடிச்சிட்டு, பிறகு அங்க தேவையில்லாம போய்ச் சேர்ந்திட்டு...காதல் இருந்தா...என்ன அப்பயே விட்டு போயிருக்க மாட்டாளே..!”
“நீலன்...நீ எதையும் சொல்லு...ஆனா போராட்டத்தை மட்டும் கொச்சை படுத்தாதே...பிறகு....”
“என்னடா...பிறகு...நீயும் என்ன விட்டுப் போய்விடுவீயாக்கும்....ஓகோ....அந்தச் சிறுக்கி சொல்லியிருப்பாள்...வாங்கோ...குணா...உங்களுக்கு வேலை நாங்க தாறோம் என்று....அதுவும் உன்ட வானதியப் பற்றியும் சொல்லியிருப்பாளே..”
“அப்ப....வானதி இருக்கிறது தெரிஞ்சு கொண்டுதான் இத்தனை நாளும் நீ எனக்குச் சொல்லவில்ல...அதுவும்...அவங்களிட்ட சுலபமாக வேலை கிடைக்கும்...அதையும் சொல்லேல...நீயும்...”
“என்ன...வா...வா...சொல்லு..நீயும் ஒரு நண்பன் என்று சொல்லத்தானே ட்ரை பண்ணற....இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல்தான் ‘உன்னைப்போல நண்பன் கிடைக்க...என்று பிதற்றினாய்...” தொண்டை கிழியக் கத்திய நீலனின் கைகள் அருகிலிருந்த சிகரட் பெட்டியைத் தொட்டது.
“டேய்...நீலன்...கூல்...சரி இப்ப அந்தக் கதை வேண்டாம்...ஓகேயா..? இந்த சிகரட் குடிக்கிறத முதலில நிப்பாட்டு...”
“கதைய மாத்தாத....நீ வானதி என்று அவளிட்ட போனாய்...உனக்கும் இந்தக் கதிதான் தெரிஞ்சுகொள்...இந்தக் காலத்தில காதல் என்று ஒன்றுமில்ல...உனக்கு ஒண்டு தெரியுமா...காதலுக்கு நிறம் என்ன என்று ஆராவது கேட்டா...நான் சொல்றபதில்...கறுப்பு..”

(தொடரும்....)



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 10:10 am

அருமையான தொடக்கம் பாரதி.....

காதல் எத்தனை உண்மையாய் இருந்தாலும் காலத்தின் கட்டாயம் விதிவசம் இழந்துவிடுகிறது...

உண்மைக்காதல் கண்டிப்பாய் மனதை புரிந்துக்கொண்டு ஆதரவு தரும்.... தவறாய் நினைக்காது....

நீலனின் மனம் கோபத்தில் இருக்கிறது... மல்லிகாவின் நிலை அப்போது இருந்தது எப்படின்னு நீலன் அறிய வாய்ப்பில்லை....

வானதியும் குணாவும் காதலில் சேர என் வாழ்த்துக்கள்...

தொடக்கமே மிக அருமை....

அன்பு பாராட்டுக்கள் பாரதி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணாடி இதயங்கள் ( 1 ) 47
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 13, 2010 5:10 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான தொடக்கம் பாரதி.....

காதல் எத்தனை உண்மையாய் இருந்தாலும் காலத்தின் கட்டாயம் விதிவசம் இழந்துவிடுகிறது...

உண்மைக்காதல் கண்டிப்பாய் மனதை புரிந்துக்கொண்டு ஆதரவு தரும்.... தவறாய் நினைக்காது....

நீலனின் மனம் கோபத்தில் இருக்கிறது... மல்லிகாவின் நிலை அப்போது இருந்தது எப்படின்னு நீலன் அறிய வாய்ப்பில்லை....

வானதியும் குணாவும் காதலில் சேர என் வாழ்த்துக்கள்...

தொடக்கமே மிக அருமை....

அன்பு பாராட்டுக்கள் பாரதி....

உங்கள் பின்னூட்டலிற்கு நன்றிகள் அக்கா...உங்கள் பாரட்டுதலால் கதையை மேலும் தொடர ஒரு "பூஸ்ட்" கிடைத்துள்ளது! கண்ணாடி இதயங்கள் ( 1 ) 678642

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 9:06 pm

நன்றாக உள்ளது நன்றிகள்... தொடருங்கள் .... நண்பரே





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu May 13, 2010 11:29 pm

கதை மிகவும் அருமையாக உள்ளது. மீதி கதையையும் படிக்க ஆசையாக உள்ளது.



கண்ணாடி இதயங்கள் ( 1 ) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu May 13, 2010 11:35 pm

அருமை பிரியன் கண்ணாடி இதயங்கள் ( 1 ) 677196 கண்ணாடி இதயங்கள் ( 1 ) 677196

கதை படிக்க படிக்க வேண்டும் என்றே சொல்கிறது... எப்போ அடுத்த பாகம்??



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண்ணாடி இதயங்கள் ( 1 ) Ila
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Fri May 14, 2010 11:44 pm

எஸ்.எம். மபாஸ் wrote:நன்றாக உள்ளது நன்றிகள்... தொடருங்கள் .... நண்பரே
நன்றி சகோதரா....உங்கள் ஆதரவில் கதை தொடரும்...

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Fri May 14, 2010 11:46 pm

ஹனி wrote:கதை மிகவும் அருமையாக உள்ளது. மீதி கதையையும் படிக்க ஆசையாக உள்ளது.
நன்றி சகோதரி..மிக விரைவிலேயே மீதிக்கதையைத் தருகிறேன்.

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Fri May 14, 2010 11:48 pm

இளமாறன் wrote:அருமை பிரியன் கண்ணாடி இதயங்கள் ( 1 ) 677196 கண்ணாடி இதயங்கள் ( 1 ) 677196

கதை படிக்க படிக்க வேண்டும் என்றே சொல்கிறது... எப்போ அடுத்த பாகம்??

நன்றி சகோதரா...விரைவிலேயே எழுதுகின்றேன்...

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat May 15, 2010 2:01 am

அருமை கண்ணாடி இதயங்கள் ( 1 ) 677196 கண்ணாடி இதயங்கள் ( 1 ) 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக